Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 28 2
Post Views:
1,375
ஆட்டோ
டிரைவர்
ஸ்டேஷன்
வந்துவிட்டது
என்று
சொன்னதும்
தான்
இருவரும்
விலகி
ஆட்டோவில்
இருந்து
இறங்கினர்
.
இன்னும்
ரெயிலுக்கு
நேரம்
இருந்ததால்
,
இருவரும்
அங்கிருந்த
உணவகத்தில்
சென்று
மதிய
உணவு
அருந்திவிட்டு
,
பின்
அங்கிருந்த
கடைகளைச்
சுற்றி
வந்து
,
ரெயிலுக்கு
நேரம்
ஆனதும்
சென்று
ரெயிலில்
ஏறினர்
.
அது
ஏசி
சேர்
கார்
கோச்
.
பஸ்
சீட்
போலவே
வரிசையாக
இருக்கும்
.
ரெயில்
பயணம்
முழுவதும்
இருவரும்
அருகருகே
அமர்ந்து
,
ஒருவர்
மீது
ஒருவர்
சாய்ந்து
கதை
பேசிக்கொண்டே
வந்தனர்
.
இருவருக்கும்
ஆறு
மணி
நேரம்
போனதே
தெரியவில்லை
.
சென்ட்ரல்
ரெயில்
நிலையம்
வந்ததும்
,
இருவரும்
இறங்கி
டாக்ஸி
பிடித்து
,
முதலில்
மீரா
வீட்டுக்கு
சென்று
அவளைப்
பத்திரமாக
விட்டுவிட்டு
,
பின்
அர்ஜுன்
அவன்
வீட்டிற்குச்
சென்றான்
.
இரவு
பத்து
மணிக்கு
வீட்டுக்கு
வந்த
அர்ஜுனை
பார்த்து
வித்யா
“
எங்கடா
போயிட்டு
வர
?
காலையில
இருந்து
ஆள
காணோம்
.”
என்று
கேட்க
…
“
ப்ரண்ட்ஸோட
வெளிய
போய்
இருந்தேன்
மா
.”
அர்ஜுன்
சொல்லிவிட்டு
அவன்
அறைக்குச்
சென்றான்
.
அர்ஜுனின்
குரல்
கேட்டதும்
,
அங்கே
அவர்கள்
அறையில்
இருந்த
ஐஷு
துள்ளி
கொண்டு
அர்ஜுனை
தேடி
வந்தாள்
.
ஐஷுவை
பார்த்ததும்
அர்ஜுன்
, “
செல்லம்
,
உங்க
டேங்க்
பில்
பண்ணிடீங்களா
…
நாம
நம்ம
ரூம்க்கு
போகலாமா
?”
என்று
கொஞ்ச
…
ஐஷு
சந்தோஷமாகச்
சிரித்தது
.
அர்ஜுன்
வந்ததில்
இருந்து
ஐஷு
அர்ஜுனோடு
தான்
ஒட்டிக்கொண்டு
இருக்கிறாள்
.
பின்னே
வீட்டுக்குத்
தெரியாமல்
ஐஷுவை
வெளியே
தூக்கி
சென்று
ஐஸ்கிரீம்
,
சாக்லேட்
எல்லாவற்றையும்
குழந்தைக்குச்
சுவைக்கப்
பழக்க
படுத்தி
இருந்தான்
.
அதோடு
இரவு
அவள்
எவ்வளவு
நேரம்
ஆட்டம்
போட்டாலும்
,
அவளைத்
தூங்க
வைக்காமல்
…
அவளோடு
சேர்ந்து
ஆட்டம்
போடும்
சித்தப்பாவை
ஐஷுவுக்கு
ரொம்பப்
பிடிப்பதில்
ஆச்சர்யம்
என்ன
?
அர்ஜுன்
ஐஷுவோடு
அவன்
அறைக்குச்
செல்ல
…
அவன்
பின்னே
ஆதியும்
,
ரஞ்சனாவும்
உள்ளே
சென்றனர்
. “
அர்ஜுன்
பெங்களூர்ல
ரொம்பக்
குளிராமே
அப்படியா
…”
ரஞ்சனா
கேட்க
…
“
அவனைப்
போய்க்
கேட்கிற
,
அவனுக்கு
எப்படித்
தெரியும்
?”
ஆதி
சொல்ல
… “
உங்களுக்குத்
தான்
தெரியாது
,
அர்ஜுனுக்குத்
தெரியும்
.
காலையில
பெங்களூர்
போயிட்டு
,
நைட்
திரும்பி
வர்றவங்களுக்குத்
தெரியாதா
…
அங்க
குளிருதா
,
இல்லையான்னு
.”
ரஞ்சனாவும்
,
ஆதியும்
அர்ஜுனை
ஜாடை
பேச
…
ஐஷுவோடு
விளையாடினாலும்
காதை
இவர்கள்
பக்கம்
வைத்திருந்த
அர்ஜுன்
முகத்தில்
அடக்கப்பட்ட
சிரிப்பு
இருந்தது
.
மறுநாள்
காலை
உணவிற்கே
வீட்டுக்கு
வந்த
மீராவை
பார்த்ததும்
எல்லோரும்
மகிழ்ந்தனர்
. “
நீ
இங்க
இல்லாம
நல்லாவே
இல்லை
மீரா
,
நீ
இங்கயே
வேலை
பார்த்தா
என்ன
?”
வித்யா
சொல்ல
…
மீரா
புன்னகைத்தாள்
.
“
சிரிச்சே
சமாளி
.”
ஆரு
சொல்ல
…
அர்ஜுனிடம்
இருந்த
ஐஷுவை
மீரா
அழைக்க
…
அது
வர
மாட்டேன்
என்று
தலை
ஆட்டியது
.
“
பார்த்தியா
போன
வாரம்
வரை
என்னோட
செல்லம்
தான
நீ
,
இப்ப
உங்க
சித்தப்பா
வந்ததும்
கட்சி
மாறிட்டே
…”
மீரா
சொல்ல
…
அதைக்
கேட்டு
எல்லோரும்
சிரித்தனர்
.
ரொம்ப
நாட்கள்
கழித்து
அந்த
வீட்டில்
எல்லோரும்
சேர்ந்து
மகிழ்ச்சியாக
இருந்தனர்
.
மாடியில்
ரஞ்சனாவின்
அறையில்
குழந்தையோடு
மீரா
விளையாடி
கொண்டிருக்கும்
போது
உள்ளே
வந்த
அர்ஜுன்
,
ஐஸ்க்கு
ஒரு
முத்தம்
கொடுத்தவன்
,
மீராவுக்கும்
ஒரு
முத்தம்
கொடுக்க
…
மீரா
அர்ஜுனை
பார்த்து
முறைத்தாள்
.
“
பெங்களூர்
வரை
வந்தும்
,
ஒரு
முத்தம்
கூடக்
குடுக்கலை
…”
என்ற
அர்ஜுன்
தொடர்ந்து
குழந்தைக்கும்
,
மீராவிற்கும்
மாறி
…
மாறி
முத்தம்
கொடுக்க
… “
ஐஷு
இன்னும்
பேச
ஆரம்பிக்கலைன்னு
தைரியம்
.”
மீரா
சொல்ல
…
அர்ஜுன்
மீராவை
பார்த்துக்
கண்
சிமிட்டினான்
.
“
அர்ஜுன்
இன்னைக்கு
வெளிய
போவோமா
,
நான்
இன்னும்
கொஞ்ச
நேரத்தில
கிளம்பி
பெசன்ட்
நகர்
பீச்க்கு
வரேன்
,
நீங்களும்
அங்க
வந்திடுங்க
.
நாம
எங்கையாவது
போய்
லஞ்ச்
சாப்டிட்டு
,
அப்படியே
படத்துக்குப்
போகலாம்
.”
மீரா
சொல்ல
…
அர்ஜுன்
சரி
என்றான்
.
அர்ஜுன்
பைக்கில்
பெசன்ட்
நகர்
பீச்சில்
சென்று
இறங்கிய
போது
…
மீரா
அவள்
காரின்
வெளியே
நின்று
கொண்டிருந்தாள்
.
அர்ஜுன்
வண்டியை
நிறுத்தி
விட்டு
அவள்
அருகில்
வந்ததும்
, “
மாயாஜால்
போலாம்
அர்ஜுன்
,
மூன்னு
மணி
ஷோக்கு
புக்
பண்ணியிருக்கேன்
.
அங்கயே
போய்ச்
சாப்பிடலாம்
.”
என்றவள்
,
அர்ஜுனிடம்
கார்
சாவியைக்
கொடுக்க
…
அவன்
சரி
என்று
வாங்கிக்
கொண்டு
காரில்
ஏற
…
மீரா
பின்னால்
ஏறினாள்
.
அர்ஜுன்
இவ
ஏன்
பின்னாடி
போனா
?
என்று
நினைக்கும்
போதே
…
முன்
சீட்டில்
அமர்ந்திருந்த
சூர்யாவை
பார்த்தான்
.
சூர்யா
அர்ஜுனை
பார்த்து
“
ஹாய்
…”
என்று
சொல்ல
…
அர்ஜுன்
திரும்பி
மீராவை
பார்க்க
…
அப்போது
தான்
அவள்
அருகிள்
இருந்த
ஆருவை
பார்த்தான்
.
பார்த்ததும்
காரில்
ஏறாமல்
இறங்கிவிட்டான்
.
அவனோடு
எல்லோரும்
காரில்
இருந்து
இறங்கினர்
.
அர்ஜுன்
சூர்யாவை
பார்த்து
, “
நீ
இங்க
என்னடா
பண்ற
?
ரெண்டு
வருஷம்
ஆஸ்திரேலியால
உன்னோட
தான
குப்பை
கொட்டினேன்
.
இங்கயுமா
.”
என்று
கேட்க
…
அர்ஜுனின்
அருகில்
வந்த
சூர்யா
, “
எனக்கு
மட்டும்
உன்
கூடச்
சுத்தனும்னு
ஆசையா
…
உன்
தங்கச்சி
என்
கூடத்
தனியா
எங்கையும்
வர
மாட்டேங்கிறா
,
நான்
என்ன
பண்றது
?”
என்று
அவன்
பதிலுக்குக்
கேட்க
…
“
அது
உன்னோட
பாடு
,
நீ
வா
மீரா
.”
அர்ஜுன்
மீராவின்
கையைப்
பிடித்து
இழுக்க
… “
உன்
தங்கச்சி
மட்டும்
என்
கூட
வரலை
…..
அப்ப
என்
தங்கச்சியையும்
உன்
கூட
அனுப்ப
முடியாது
.”
மீராவின்
மற்றொரு
கையைப்
பிடித்துச்
சூர்யா
இழுக்க
…
“
இவ
உன்
தங்கச்சியா
…
எப்ப
இருந்து
?”
அர்ஜுன்
கேட்க
… “
அது
ரொம்ப
நாளாவே
தங்கச்சி
தான்
.
ஆனா
…
இன்னைக்குக்
காலையில
தான்
தத்தெடுத்தேன்
.”
என்ற
சூர்யா
மீராவிடம்
, “
அண்ணன்
சொல்றேன்
,
கண்டவனோட
போகதே
…”
என்று
அவளின்
கையை
இழுக்க
…
“
ரெண்டு
பேரும்
என்
கையை
விடுறீங்களா
…
எனக்கு
வலிக்குது
.”
மீரா
வலியில்
முகம்
சுளிக்க
….
இருவரும்
வேகமாக
அவள்
கையை
விட்டனர்
.
“
சரி
வந்து
தொலை
,
ஆனா
…
இன்னைக்குத்
தான்
லாஸ்ட்
.”
என்று
சொல்லி
அர்ஜுன்
காரில்
ஏற
…
சூர்யாவும்
சென்று
ஏறினான்
.
ஆரு
மீராவிடம்
“
அர்ஜுனுக்குப்
பிடிக்கலை
போல
,
நான்
வேணா
வீட்டுக்கு
போகட்டுமா
…”
என்று
கேட்க
.
“
சும்மா
வா
ஆரு
…
உன்னோட
அண்ணன்
தான
.
அர்ஜுன்
அப்படித்
தான்
பேசுவாங்க
,
ஆனா
…
எதுவும்
நினைக்க
மாட்டாங்க
.
வா
…”
என்று
ஆருவை
தேற்றி
மீரா
காரில்
ஏற்றினாள்
.
எல்லோரும்
மாயாஜால்
சென்று
இறங்கியதும்
,
நேராக
ஒரு
ஹோட்டலுக்குச்
சாப்பிட
சென்றனர்
.
அர்ஜுன்
ஆருவின்
அருகே
சென்று
அமர
… “
பனை
மரத்துக்குக்
கீழ
உட்கார்ந்து
பாலை
குடிச்சாலும்
,
இந்த
உலகம்
கல்லுன்னு
தான்
சொல்லும்
.
நீ
உன்
தங்கச்சி
பக்கத்தில
உட்கார்ந்தாலும்
,
உங்களைப்
பார்க்கிறவங்க
தப்பா
தான்
நினைப்பாங்க
.
அதனால
நீ
போய்
மீரா
பக்கத்தில
உட்காரு
…”
என்றான்
சூர்யா
.
அர்ஜுன்
சூர்யாவை
பார்த்து
முறைத்துக்
கொண்டே
, “
வா
மீரா
…
நாம
வேற
டேபுளுக்குப்
போவோம்
.”
என்று
அழைக்க
…
அவளும்
ஆருவிடம்
“
நீங்க
ப்ரீயா
பேசிகிட்டே
சாப்பிடுங்க
.”
என்று
சொல்லிவிட்டு
எழுந்து
சென்றாள்
.
அர்ஜுனும்
,
மீராவும்
சென்றதும்
,
சூர்யா
ஆருவிடம்
“
ஹப்பா
…
உன்
கூட
வெளிய
வரணும்னு
,
நான்
என்னென்ன
வேலை
எல்லாம்
பார்க்க
வேண்டியதா
இருக்கு
.
இதுக்கு
நான்
கூப்பிடும்
போதே
…
நீ
ஒழுங்கா
வந்திருக்கலாம்
.”
என்றான்
.
சூர்யாவும்
,
ஆருவும்
மெதுவான
குரலில்
பேசிக்கொண்டே
சாப்பிட
,
அங்கே
அர்ஜுன்
டென்ஷன்னாக
இருந்தான்
.
அர்ஜூனால்
எப்போதும்
இருப்பது
போல்
இருக்க
முடியவில்லை
. “
இதெல்லாம்
உன்னால
…”
என்று
அவன்
மீராவை
பார்த்து
முறைக்க
… “
நான்
என்ன
பண்ணேன்
அர்ஜுன்
?
சூர்யா
தான்
காலையில
போன்
பண்ணி
ஆருவை
வெளிய
அழைச்சிட்டு
வர
முடியுமான்னு
கேட்டாங்க
.
பாவம்
அர்ஜுன்
அவங்களும்
நம்மள
மாதிரி
தான
,
உங்களுக்கு
ஏன்
கோபம்
வருது
?”
மீரா
புரியாமல்
கேட்க
…
“
எனக்கு
ஆரு
சூர்யாவை
லவ்
பண்றது
பிடிக்கமா
இல்லை
…
பிடிச்சிருக்கு
.
சூர்யாவே
என்
தங்கச்சிக்கு
கணவனா
வர்றது
சந்தோசம்
தான்
.
ஆனா
…
ஏனோ
ப்ரீயா
இருக்க
முடியலை
.
இப்ப
உனக்கு
ஒரு
அக்காவோ
,
தங்கச்சியோ
இருந்து
…
அவங்களை
அவங்க
லவர்ரோட
பார்த்தா
உனக்கு
எப்படி
இருக்கும்
?
உனக்குப்
புரியுதா
மீரா
…
அவங்க
கல்யாணம்
நிச்சயம்
ஆகிற
வரை
எனக்கு
நிம்மதியா
இருக்க
முடியாது
.”
என்றான்
அர்ஜுன்
.
“
முதல்ல
அவங்க
கல்யாணத்துக்கு
ஏற்பாடு
செய்யுங்க
அர்ஜுன்
.”
என்ற
மீரா
தொடர்ந்து
, “
எங்க
அப்பாவும்
இப்ப
உங்க
நிலையில
தான்
அர்ஜுன்
இருக்கார்
.
அவருக்கும்
நம்ம
விஷயம்
தெரியும்
,
அவரும்
இப்ப
நீங்க
நினைக்கிற
மாதிரி
தான்
நினைப்பார்
.”
என்றாள்
மெதுவாக
.
“
ஆரு
சூர்யா
கல்யாணம்
நிச்சயம்
ஆனதும்
,
நான்
கண்டிப்பா
எங்க
அம்மாகிட்ட
பேசுறேன்
மீரா
…
அம்மா
முதல்ல
மறுத்தாலும்
,
நான்
சொன்னா
புரிஞ்சிப்பாங்க
.”
என்றான்
அர்ஜுன்
உறுதியாக
.
மீராவுடன்
மனசுவிட்டு
பேசியதும்
,
அர்ஜுன்
சாதரணமாக
இருந்தான்
.
பின்
இருவரும்
உணவு
வரவழைத்து
சாப்பிட்டனர்
.
மீரா
சொன்னதைக்
கேட்காமல்
அர்ஜுன்
அவனுக்கும்
சைவ
உணவு
தான்
சொன்னான்
.
இருவரும்
சாப்பிட்டதும்
சூர்யா
ஆருவோடு
சேர்ந்து
சினிமா
பார்க்க
சென்றனர்
.
இப்போது
அர்ஜுன்
சூர்யா
ஆருவோடு
கலகலப்பாகப்
பேசினான்
.
நான்கு
பேரும்
சினிமா
பார்த்துவிட்டு
வீட்டுக்கு
திரும்பினர்
.
மறுநாள்
ஞாயிற்றுக்
கிழமை
மதியம்
போல்
…
மீரா
அர்ஜுனின்
வீட்டிற்கு
வந்து
மாலை
வரை
எல்லோருடனும்
பேசிக்கொண்டு
இருந்துவிட்டு
சென்றாள்
.
அன்று
இரவு
மீரா
பெங்களூர்
கிளம்புவதால்
,
அர்ஜுன்
அவளைத்
தன்
பைக்கில்
அழைத்துக்
கொண்டு
சென்ட்ரல்
ஸ்டேஷன்
சென்று
ரெயிலில்
ஏற்றிவிட்டவன்
,
ரெயில்
கிளம்பும்
வரை
மீராவுடன்
பேசிக்கொண்டிருந்தான்
.
ரெயில்
கிளம்பியதும்
இருவர்
மனமுமே
பிரிவை
நினைத்துத்
தவித்தது
.
இருவரும்
சேர்ந்து
இருக்கும்
காலம்
எப்போது
வருமோ
?
Advertising
Advertising