Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 29
Post Views:
1,394
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
29
சஞ்சனாவிற்கு
அவளது
மாமன்
மகன்
தினேஷுடன்
திருமணம்
நிச்சயமாகி
இருந்தது
.
அர்ஜுன்
ஒரு
மாதம்
சென்று
தான்
வேலையில்
சேர்வதால்
,
அவன்
கடையையும்
,
கார்மெண்ட்ஸ்
கம்பெனியையும்
கணேசனோடு
பார்த்துக்
கொண்டான்
.
அதனால்
ஆதியால்
அடிக்கடி
திருச்சிக்கு
சென்று
வர
முடிந்தது
.
கல்யாண
தேதி
நெருங்கியதும்
ஆதி
நான்கு
நாட்கள்
முன்பே
திருமண
வேலைகள்
பார்க்க
…
அவன்
மாமனார்
வீட்டிற்கு
சென்றுவிட்டான்
.
ஆதி
அந்தக்
குடும்பத்திற்கு
மூத்த
மருமகனாக
,
அவன்
கடமையைச்
சரி
வர
செய்தான்
.
அதில்
ரஞ்சனாவிற்கு
மிகவும்
பெருமை
.
அன்று
அர்ஜுனின்
வீட்டில்
இருந்து
வந்த
பிறகு
,
சில
மாதங்கள்
சஞ்சனா
ஆடிக்கொண்டு
தான்
இருந்தாள்
.
எப்போதும்
அர்ஜுன்
வீட்டினரை
பற்றித்
தாறுமாறாகப்
பேசினாள்
.
ஒரு
நாள்
அவளது
அம்மா
வந்தனா
, “
அவங்க
நம்ம
வீட்ல
ஒரு
பொண்ணு
எடுத்தா
…
இன்னொரு
பொண்ணும்
இங்கையே
எடுக்கணும்னு
எந்தக்
கட்டாயமும்
இல்லை
.
அது
அவங்க
விருப்பம்
.
நீ
அவங்களைக்
குற்றம்
சொல்லியே
,
உனக்கு
வர்ற
நல்ல
வரனை
எல்லாம்
தட்டி
கழிக்கப்
போறியா
?”
என்று
கேட்க
….
“
நான்
எதுக்கு
என்
வாழ்கையை
வீணாக்கனும்
?
நான்
தினேஷை
கல்யாணம்
செஞ்சுகிறேன்
.
ஆனா
என்னோட
கல்யாணம்
,
ரஞ்சனா
கல்யாணத்தை
விடக்
கிராண்டா
நடக்கணும்
.”
சஞ்சனா
அதிகாரமாகத்
திருமணத்திற்குச்
சம்மதம்
சொன்னாள்
.
சஞ்சனா
சம்மதம்
சொன்னதும்
,
உடனடியாக
அவளது
பெற்றோர்
தினேஷ்
வீட்டில்
பேசி
திருமண
நாளை
குறித்து
விட்டனர்
.
திரும்பி
வேதாலம்
முருங்கை
மரம்
ஏறும்
முன்
திருமணத்தை
நடத்தி
விட
நினைத்தனர்
.
அர்ஜுனை
தவிர
மற்ற
அனைவரும்
சஞ்சனாவின்
திருமணத்தில்
கலந்து
கொண்டனர்
.
அர்ஜுன்
இந்தியா
வந்த
பிறகு
தான்
,
சஞ்சனாவிற்கு
அவனை
மாப்பிள்ளை
கேட்டதை
வித்யா
அவனிடம்
சொன்னார்
.
அர்ஜுன்
,
ஹப்பா
…
தப்பிச்சேன்டா
சாமி
என்று
நினைத்தவன்
,
தான்
திருமணத்திற்கு
வந்தால்
அவர்களுக்குச்
சங்கடமாக
இருக்கும்
.
அதோடு
கடையை
மற்றும்
கம்பெனியை
பார்த்துக்
கொள்வதும்
சிரமம்
என்று
கூறி
அவன்
சஞ்சனாவின்
திருமணத்திற்குச்
செல்லவில்லை
.
திருமணத்திற்குப்
பத்து
நாட்கள்
முன்பே
ரஞ்சனா
தன்
பெற்றோர்
வீட்டிற்குச்
சென்று
விட்டாள்
.
ஆதியும்
முன்பே
சென்றுவிட்டான்
.
கணேசன்
,
வித்யா
மற்றும்
ஆரு
திருமணத்திற்கு
முன்
தினம்
திருச்சிக்கு
சென்றனர்
.
சஞ்சனாவின்
பெற்றோர்
அவர்களை
நல்லபடியாக
வரவேற்றனர்
.
ஆனால்
சஞ்சனா
அவர்களை
வந்து
வாங்க
என்று
கேட்கவும்
இல்லை
…
பேசவும்
இல்லை
.
அவள்
அறையிலேயே
இருந்து
கொண்டாள்
.
அதை
யாரும்
பெரிதாக
எடுத்து
கொள்ளவில்லை
.
இருந்தாலும்
ஆதிக்கு
அது
பிடிக்கவில்லை
.
அவன்
தனது
குடும்பத்தினரை
ஒரு
பெரிய
ஹோட்டலில்
சென்று
தங்க
வைத்தான்
.
அவர்களும்
விசேஷ
நேரத்தில்
மட்டும்
வந்து
கலந்து
கொண்டனர்
.
திருமணம்
நல்லபடியாக
முடிந்தது
.
சஞ்சனாவின்
பெற்றோர்
சஞ்சனாவையும்
,
தினேஷையும்
சென்னையிலேயே
இருக்கச்
சொல்லிவிட்டனர்
.
இப்போது
வேலையை
மாற்றிக்
கொண்டு
இங்கே
வரவேண்டாம்
,
சில
வருடங்கள்
சென்று
பார்த்துக்
கொள்வோம்
என்றனர்
.
“
நீங்களும்
சென்னைக்கே
வந்துடுறீங்களா
மாமா
,
நம்ம
வீட்டுப்
பக்கத்திலேயே
வீடு
பார்த்திடுவோம்
.”
ஆதி
தன்
மாமனாரிடம்
கேட்க
…
“
இப்போ
நாங்க
ஆரோக்கியமா
தான்
இருக்கோம்
.
அதோடு
திருச்சி
எங்களுக்குப்
பழகிய
ஊர்
.
அதனால்
சில
வருடங்கள்
கழித்துப்
பார்த்துகொள்வோம்
.”
என்றார்
அவர்
.
சரி
என்று
ஆதியும்
ஏற்றுக்
கொண்டான்
.
சஞ்சனாவின்
திருமணம்
முடிந்தும்
ஆதியும்
,
ரஞ்சனாவும்
அங்கயே
தங்க
….
மற்றவர்கள்
அன்றே
சென்னைக்குத்
திரும்பி
விட்டனர்
.
ஆதியும்
,
ரஞ்சனாவும்
இரு
தினங்கள்
திருச்சியில்
தங்கி
விருந்து
முடிந்து
,
சஞ்சனா
தன்
புகுந்த
வீட்டிற்குக்
கிளம்பி
சென்றதும்
,
இவர்களும்
ஊர்
திரும்பினர்
.
சஞ்சனா
திருமணம்
முடிந்து
வந்ததில்
இருந்து
வித்யா
எதையோ
யோசித்துக்
கொண்டே
இருந்தவர்
,
அன்று
இரவு
எல்லோரும்
சேர்ந்து
அமர்ந்து
உண்ணும்
போது
…”
ஆருவுக்கு
மாப்பிள்ளை
பார்க்க
ஆரம்பிக்கணும்
.
இப்பவே
நாம
லேட்
.
இவ
எதோ
கோர்ஸ்
முடிக்கணும்னு
சொன்னா
….
அதுவும்
இப்ப
முடிஞ்சிடுச்சு
.”
என்று
ஆருவின்
திருமணப்
பேச்சை
அவர்
ஆரம்பிக்க
….
வித்யா
சொன்னதைக்
கேட்ட
வீட்டினர்
எல்லோரும்
மகிழ
,
ஆருவிற்குத்
தான்
சோறு
தொண்டைக்குள்
இறங்கவில்லை
,
அவள்
சாப்பிட
முடியாமல்
,
ஆனால்
சாப்பிடுவது
போல்
நடித்துக்
கொண்டிருந்தாள்
.
அர்ஜுன்
அவளைத்
தான்
ஜாடையாகப்
பார்த்துக்
கொண்டிருந்தான்
.
“
நாம
நாளைக்கே
ஆதிக்கு
சொல்லி
வச்ச
புரோக்கர்கிட்ட
,
ஆருவுக்கும்
பதிஞ்சு
வச்சிடலாம்
.
இன்னும்
ஆறு
மாசத்துக்குள்ள
கல்யாணத்தை
முடிச்சிடனும்
.”
வித்யா
பேசிக்
கொண்டே
செல்ல
..
“
சொல்லு
ஆரு
உனக்கு
எந்த
மாதிரி
மாப்பிள்ளை
வேணும்
,
வேலைக்குப்
போறவரா
,
இல்லை
பிஸ்னெஸ்
பார்க்கிறவரா
பார்ப்போமா
?”
கணேசன்
சிரித்துக்
கொண்டே
கேட்க
….
ஆரு
சொல்லத்
தயங்கினாள்
.
“
எந்த
வேலை
பார்த்தாலும்
,
அதோட
நம்ம
அரு
சொல்ற
வேலையும்
தட்டாம
செய்றவரா
இருக்கணும்
,
இல்ல
ஆரு
.”
ஆதி
அவளை
வம்பு
இழுக்க
… ”
அதைக்
கேட்டு
அர்ஜுன்
தவிர
மற்றவர்கள்
சிரித்தனர்
.
ஆருவும்
சிரித்துச்
சமாளித்தாள்
.
ஆனால்
அவளுக்கு
அழுகையாக
வந்தது
.
எல்லோரும்
சாப்பிட்டுக்
கொண்டே
…
ஆருவின்
கல்யாணத்திற்கு
என்ன
வாங்குவது
?
எந்த
மண்டபத்தில்
திருமணம்
வைப்பது
என்ற
எல்லாம்
பேச
பேச
ஆருவுக்கு
மனதில்
பயம்
வந்தது
.
அவள்
அர்ஜுனை
பார்க்க
….
அவன்
அமைதியாகச்
சாப்பிட்டான்
.
பாரு
எப்படிக்
கல்லு
மாதிரி
இருக்கான்
என்று
ஆரு
அர்ஜுனை
மனதிற்குள்
திட்டி
கொண்டிருந்தாள்
.
ஒரு
வழியாக
எல்லோரும்
சாப்பிட்டு
முடித்து
எழுந்து
கொள்ளும்
போது
….
அதுவரை
அமைதியாக
இருந்த
அர்ஜுன்
, “
முதல்ல
ஆருகிட்ட
அவளுக்கு
விருப்பமான்னு
கேளுங்க
.”
என்றான்
.
“
நாம
முதல்ல
மாப்பிள்ளை
பார்க்கணும்
,
அப்புறம்
அவகிட்ட
போட்டோ
காமிச்சி
பிடிச்சிருக்கான்னு
கேட்கணும்
.
நீ
ஏன்
இப்பவே
கேட்க
சொல்ற
?”
வித்யா
புரியாமல்
கேட்க
…
அர்ஜுன்
ஆருவை
பார்த்தான்
.
ஆரு
தலை
நிமிரவே
இல்லை
.
“
நீங்க
பார்க்கிற
மாப்பிள்ளை
அவளுக்குப்
பிடிச்சிருக்கான்னு
கேட்க
சொல்லலை
,
அவளுக்கு
வேற
யார்
மேலாவது
விருப்பம்
இருக்கான்னு
தான்
கேட்க
சொல்றேன்
.”
என்றான்
அர்ஜுன்
அழுத்தமாக
.
அவன்
சொன்னதைக்
கேட்ட
அனைவரும்
திடுக்கிட்டனர்
.
இன்னைக்கு
மாட்டிக்கப்
போறோம்
என்று
நினைத்த
ஆருவின்
முகம்
வெளிறிவிட்டது
.
“
நீ
இப்ப
என்ன
சொல்ல
வர
,
ஆரு
யாரையாவது
லவ்
பண்றாளான்னு
கேட்க
சொல்றியா
…
எனக்கு
ஆருவை
பத்தி
நல்லா
தெரியும்
.
வெளிய
போகக்
கூட
அண்ணன்களைத்
துணைக்குக்
கூப்பிடுறவளுக்கு
,
காதலிக்கத்
தைரியம்
இருக்குமா
?
அவ
அப்படி
எல்லாம்
பண்ண
மாட்டா
.”
என்ற
வித்யா
ஆருவின்
பக்கம்
திரும்பி
, “
நீ
யாரையும்
லவ்
பண்ணலை
தான
ஆரு
.”
என்று
அதட்டி
கேட்க
….
வித்யாவின்
கோபத்தைப்
பார்த்து
ஆரு
அரண்டுவிட்டாள்
.
அவள்
பயத்தில்
இல்லை
என்று
சொல்ல
….
வித்யா
நிம்மதியாக
மூச்சு
விட்டார்
.
அர்ஜுன்
ஆருவை
பார்த்து
முறைக்க
,
அவள்
குனிந்த
தலையுடன்
அவள்
அறைக்குச்
சென்றாள்
.
அன்று
இரவு
வீட்டுத்
தோட்டத்தில்
கணேசன்
,
ஆதி
,
அர்ஜுன்
மட்டும்
தான்
இருந்தனர்
.
ரஞ்சனா
ஐஷுவை
தூங்க
வைக்கச்
சென்றுவிட
,
வித்யா
டிவி
பார்த்துக்
கொண்டிருந்தார்
.
கணேசனுக்கும்
,
ஆதிக்கும்
எதோ
சரி
இல்லை
என்று
புரிந்தது
.
ஆருவின்
முகமே
சரி
இல்லை
.
அதோடு
அர்ஜுனும்
கோபமாக
இருப்பதிலேயே
எதோ
விஷயம்
இருக்கிறது
என்று
இருவருக்கும்
புரிந்தது
.
“
ஆராதனா
யாரை
அர்ஜுன்
லவ்
பண்றா
?”
கணேசன்
நேரடியாகக்
கேட்க
, “
என்னோட
ப்ரண்ட்
சூர்யாவை
பா
…”
என்றான்
அர்ஜுன்
.
யாரோ
எவரோ
என்று
பயந்து
கொண்டிருந்த
கணேசன்
,
ஆதி
இருவரின்
முகத்திலும்
இருந்த
தவிப்பு
மறைந்து
,
சூர்யாவின்
பெயரை
கேட்டதும்
நிம்மதி
வந்தது
.
என்ன
தான்
தங்களின்
பிள்ளைகள்
காதலை
ஆதரிக்கும்
பெற்றோராக
இருந்தாலும்
,
அவர்கள்
நல்ல
துணையைத்
தேர்ந்தெடுக்க
வேண்டும்
என்ற
கவலை
எல்லாப்
பெற்றோருக்கும்
இருக்கும்
.
“
நல்லவேளை
சூர்யாவை
லவ்
பண்றா
,
தெரியாத
பையன்னா
அம்மா
ஒத்துக்கமாட்டங்க
.
ஆரு
லவ்
பண்றத
நாளைக்கு
அம்மாகிட்ட
சொல்லிடுவோமா
”
ஆதி
கேட்க
…
“
வேண்டாம்
வீணா
அம்மாவுக்கும்
,
ஆருவுக்கும்
நடுவுல
சண்டை
வரும்
.
அம்மா
கேட்கும்
போது
வேற
ஆரு
யாரையும்
லவ்
பண்ணலைன்னு
சொல்லிட்டா
…
இனிமே
சொன்னா
அம்மா
கோபப்படுவாங்க
,
இவ
அழுவா
…
அதோட
எல்லோருக்கும்
மனசு
கஷ்டம்
.”
அர்ஜுன்
சொல்ல
… “
சொல்லி
தான
ஆகணும்
”
என்றார்
கணேசன்
.
“
வேண்டாம்
,
நாம
ஆரு
சூர்யாவை
லவ்
பண்ணறதை
அம்மாகிட்ட
சொல்லாம
,
அவளோட
கல்யாணத்தை
முடிக்கணும்
.”
என்றான்
அர்ஜுன்
.
“
இதெல்லாம்
நடக்கிற
காரியமா
….
அம்மா
கண்டு
பிடிச்சிடுவாங்க
.”
ஆதி
சொல்ல
….
“
நான்
பார்த்துகிறேன்
,
அதுக்கு
ஒரு
ஆள்
இருக்கு
.”
என்றான்
அர்ஜுன்
நம்பிக்கையாக
.
கணேசன்
,
ஆதி
இருவரிடமும்
அவர்களுக்குத்
தெரிந்த
விஷயத்தை
வேறு
யாரிடமும்
சொல்ல
வேண்டாம்
,
அதே
போல்
ஆருவிடமும்
கேட்க
வேண்டாம்
என்று
சொல்லிவிட்டு
அர்ஜுன்
மாடிக்கு
சென்று
ஆருவின்
அறைக்கதவை
திறந்து
பார்க்க
…
ஆரு
கட்டிலில்
படுத்து
அழுது
கொண்டிருந்தாள்
.
அர்ஜுன்
மெதுவாக
அவள்
அறைக்கதவை
மூடிவிட்டு
அவன்
அறைக்குச்
சென்றான்
.
அவன்
அறைக்கு
வந்த
அர்ஜுன்
தன்
பெரியம்மாவை
செல்லில்
அழைத்தான்
.
“
டேய்
அர்ஜுன்
எப்படி
டா
இருக்க
?
உன்னை
வந்து
பார்க்க
வரணும்னு
நினைச்சேன்
முடியவே
இல்லை
,
இந்த
வாரம்
அங்க
வரேன்
.”
என்று
சொன்ன
காயத்ரி
“
ஆமாம்
,
நீ
எதுக்குப்
போன்
பண்ண
?”
என்று
கேட்க
….
“
ஹப்பா
…
இப்பவாவது
கேட்டிங்களே
…
எனக்கு
உங்க
மூலமா
ஒரு
காரியம்
நடக்கணும்
.”
அர்ஜுன்
சொல்ல
…
“
நீயும்
மீராவும்
லவ்
பண்றதை
,
நான்
உங்க
அம்மாகிட்ட
சொல்லனுமா
….”
பெரியம்மா
ஆர்வமாகக்
கேட்க
…. “
அதை
நான்
சொல்லிக்கிறேன்
,
நீங்க
ஆரு
லவ்
பண்றா
…
அதை
வந்து
சொல்லுங்க
.”
என்று
அர்ஜுன்
குண்டை
தூக்கி
போட்டான்
.
“
என்னது
ஆரு
லவ்
பண்றாளா
?
நான்
உன்னோட
விஷயம்
தெரிஞ்சாலே
,
உங்க
அம்மா
என்ன
ஆடப்போறாளோன்னு
பயந்திட்டு
இருக்கேன்
.
இதுல
ஆரு
வேற
லவ்
பண்றாளா
….
இதெல்லாம்
நடக்காது
,
நீ
அவளை
வேற
வேலை
பார்க்க
சொல்லு
.”
காயத்ரி
புலம்ப
…
“
அம்மாவுக்கு
ஆரு
லவ்
பண்றது
தெரியாம
,
நாமலே
அதை
அரேஞ்
மேரேஜ்
மாதிரி
கொண்டு
வந்துடலாம்
.”
அர்ஜுன்
ஐடியா
கொடுக்க
…
“
இது
நடக்கிற
காரியமா
டா
…”
“
எல்லாம்
நாம
நினைச்சா
நடக்கும்
,
அவ
லவ்
பண்றது
என்னோட
ப்ரண்ட்
சூர்யாவைதான்
.
அன்னைக்கு
ஆதி
கல்யாணத்தில
நீங்க
அவங்க
அப்பா
அம்மாவை
கூடப்
பார்த்தீங்களே
அவங்க
தான்
.”
அர்ஜுன்
விளக்க
…
“
அவங்களா
…
ஆமாம்
என்னோட
வீட்டுக்காரருக்குத்
தங்கச்சி
முறை
,
இருந்தாலும்
உங்க
அம்மா
ஒத்துக்கணுமே
…”
காயத்ரி
தயங்க
…
“
எல்லாம்
நீங்க
சொல்ற
விதத்துல
சொன்னா
,
அவங்க
ஒத்துப்பாங்க
.
நான்
உங்களை
ரயில்வே
ஸ்டேஷன்க்கு
கூப்பிட
வரும்
போது
….
என்ன
பேசனும்னு
சொல்லி
தரேன்
.
நீங்க
அது
மாதிரியே
பேசுங்க
,
அம்மா
ஒத்துப்பாங்க
.”
“
சரிடா
நீ
என்னவோ
சொல்ற
,
செஞ்சு
பார்க்கலாம்
.”
என்று
பெரியம்மா
அர்ஜுனின்
திட்டத்துக்கு
ஒத்துக்கொண்டார்
.
சஞ்சனா
தினேஷ்
திருமணம்
முடிந்து
ஒரு
வாரம்
கழித்து
….
அவர்களைச்
சென்னையில்
தனிக்குடித்தனம்
வைக்க
…
இருவரின்
பெற்றோரும்
தனிக்குடித்தினத்திற்குத்
தேவையான
சாமான்களுடன்
சென்னையில்
வந்து
இறங்கினர்
.
சென்னையில்
தினேஷ்
அவன்
அலுவலகத்துக்குப்
பக்கத்தில்
இருந்த
OMR
ரோட்டில்
உள்ள
அபார்ட்மென்டில்
ஒரு
வீட்டை
வாடைகைக்கு
எடுத்திருந்தான்
.
ரஞ்சனா
வெளியில்
செல்வது
போல்
உடை
அணிந்து
கிளம்பி
கொண்டிருப்பதைப்
பார்த்து
ஆதி
, “
எங்க
போற
?”
என்று
கேட்க
…. “
என்ன
தெரியாத
மாதிரி
கேட்கறீங்க
,
இன்னைக்குச்
சஞ்சனா
வீடு
பால்
காய்ச்சுறாங்க
இல்ல
…
அதுக்குத்
தான்
ரெடி
ஆகிறேன்
.”
என்று
தலைவாரி
கொண்டே
ரஞ்சனா
சொல்ல
… “
நாம
போகப்
போறது
இல்லை
.”
என்றான்
ஆதி
.
ரஞ்சனா
திடுக்கிட்டவள்
, “
ஏன்
?”
என்று
புரியாமல்
கேட்க
…
“
கல்யாணத்துக்கு
வந்த
எங்க
அப்பா
,
அம்மாவை
அவ
வாங்கன்னு
கேட்டாளா
….
அப்புறம்
நாம
எப்படி
அவங்க
வீட்டுக்கு
போக
முடியும்
.”
என்று
ஆதி
கேட்டான்
.
“
உங்களுக்குத்
தான்
அவளைப்
பத்தி
தெரியும்
இல்ல
,
எங்க
அம்மா
அப்பாவுக்காகப்
பாருங்க
.”
“
நீ
உங்க
அப்பா
அம்மா
வீட்டுக்கு
திருச்சிக்கு
போயிட்டு
வா
,
அதே
மாதிரி
அத்தை
மாமாவும்
இங்க
வந்து
தாராளமா
எத்தனை
நாள்
வேணாலும்
தங்கட்டும்
.
ஏன்
சஞ்சனா
கூட
வரட்டும்
,
என்னோட
அம்மா
அப்பா
அவகிட்ட
ஒழுங்கா
தான்
நடந்துப்பாங்க
.
ஆனா
நாம
அவ
வீட்டுக்குப்
போறது
மட்டும்
வேண்டாம்
.”
என்றான்
ஆதி
உறுதியாக
.
ரஞ்சனாவின்
கண்ணெல்லாம்
கலங்கிவிட்டது
.
அவள்
சென்று
மெத்தையில்
சோகமாக
உட்கார
,
ஆதி
அவள்
அருகில்
சென்று
அவளைத்
தோளோடு
சேர்த்து
அணைத்தவன்
, “
நாம
கொஞ்சநாள்
அவ
வீட்டுப்
பக்கம்
போகம
இருந்தா
தான்
,
அவளுக்குத்
தான்
செஞ்சது
தப்புன்னு
புரியும்
.
இனியும்
அவ
சின்னப்
பொண்ணு
இல்லை
.
அவ
தான்
செஞ்சது
தப்புன்னு
உணர்ந்து
அவளே
உன்னைக்
கூப்பிடட்டும்
,
அப்புறம்
நாம
அவ
வீட்டுக்குப்
போகலாம்
.”
என்றான்
.
ரஞ்சனாவுக்கும்
அவன்
சொல்வது
சரி
என்று
தெரிந்தாலும்
மனது
கேட்கவில்லை
.
ஆனால்
ஆதி
இவ்வவளவு
உறுதியாகச்
சொல்லும்
போது
,
தான்
அதை
மீறுவது
நன்றாக
இருக்காது
,
தனக்கும்
இந்த
வீட்டின்
மருமகளாகச்
சில
கடமைகள்
இருக்கிறது
.
தன்
புகுந்த
வீட்டினரை
சஞ்சனா
மரியாதை
குறைவாக
நடத்தியது
தவறு
தான்
என்பதை
உணர்ந்ததால்
,
அவளே
தன்
பெற்றோரை
அழைத்து
ஐஷுக்கு
கல்யாணத்துல
அலைஞ்சது
உடம்புக்கு
சேரலை
…
அதனால்
தாங்கள்
இன்னொரு
நாள்
வருவதாகச்
சொல்லி
போன்னை
வைத்தாள்
.
ஆதி
நினைப்பது
போல்
சஞ்சனா
தன்
தவறை
உணர்வாளா
?
அர்ஜுன்
நினைப்பது
போல்
ஆருவின்
திருமணம்
நடக்குமா
?…….
Advertising
Advertising