“சொல்லு சொல்லு … நீ என்ன சொல்ல போறான்னு எங்க நாலு பேருக்கும் தெரியும்.”
பயத்தில் எச்சில் விழுங்கியவாறே, “பிரக்னண்டா இருக்கிறதா சொன்னா மேடம். இதை உடனே என்னோட அப்பா கிட்ட சொன்னேன். முதல்ல திட்ட ஆரம்பிச்சாவரு… கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணு கிட்ட பேசி குழந்தையை அபார்ட் பண்ண சொன்னாரு. நானும் அனிதா கிட்ட எவ்வளவோ பேசிப் பார்த்தேன்
முடிவா மறுத்துட்டாள். தொடர்ந்து எங்களுக்குள்ள சண்டை வர ஆரம்பிச்சது. நான் அவளை பார்க்குறதை நிறுத்திட்டேன். அனிதா தான் அப்போ அடிக்கடி பார்க்க வர ஆரம்பிச்சா மேடம். குழந்தை இருக்குற பயத்துல நானும் அவ பார்க்க வர அப்போலாம் பேசி புரிய வச்சேன். அனிதாக்கு ஏற்கனவே தைராய்டு பிரச்சனை இருந்திருக்கு போல. அதைக் காரணம் காட்டி குழந்தையை அபார்ட் பண்ண மறுத்துட்டா மேடம். ஒரு கட்டத்துல எனக்கே வெறுப்பாகி அப்பா கிட்ட அவள எப்படியாவது முடிச்சி விடுங்கன்னு சொன்னேன்.” நீண்ட நேரம் பேசியவன் தொண்டைக்கு ஓய்வு கொடுக்க அமைதி காக்க, தொண்டையில் அடித்த ஆரதி…,
“பொண்ணுங்க உடல் சுகத்துக்கு படைக்கப்பட்ட பொம்மைங்களா? உன்னோட தேவைக்கு இருந்துட்டு அவளை முடிக்க சொல்லி இருக்க. ” மீண்டும் அடித்தவள் விட்டதை தொடர சொல்ல,
தொடங்கினான் அன்றைய நாளை நினைத்து,
“என்ன காரியம் டா பண்ணியிருக்க. உனக்கு நல்ல பணக்கார பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் நினைச்சிட்டு இருந்தேன். போயும் போயும் சாக்கடையி ல விழுந்திருக்க. இப்போ என் கைவசம் பெரிய ஆளுங்க இருக்காங்க. அவங்ககிட்ட எப்படியாவது உன்ன அறிமுகப்படுத்தி வசதியா வாழலாம்’னு நினைச்சிட்டு இருந்த என்னை இப்படி ஏமாத்திட்டியே… இதுக்காகவா நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சி உனக்கு செலவு பண்ண.. ஒழுங்கா அந்த பொண்ணு கிட்ட பேசி நான் சொன்ன மாதிரி முடிக்கிற வேலையை பாரு. “
மீண்டும் ஒரு முறை முயற்சித்து பார்க்க அனிதாவிடம் பேச,
அனிதாவோ, “இல்ல முடியாது. எனக்கு ஏற்கனவே தைராய்டு பிரச்சனை இருக்கு. குழந்தை வந்ததே பெருசு. அத கொல்ல என்னால முடியாது. அதும் கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்துச்சுனு தெரிஞ்சா எங்க அம்மா செத்துடுவாங்க. நான் பண்ண தப்புக்கு ரெண்டு பேரை கொல்ல முடியாது. உனக்கு என்ன ஆச்சு சந்திரன். முன்னாடிலா ரொம்ப பாசமா பேசின. இப்போ அப்படியே வேற மாதிரி பேசுற. பிளான் பண்ணி தான் என்னை ஏமாத்துனியா. ஏற்கனவே இரண்டு மாசம் முடிஞ்சிருச்சி. இனிமே தள்ளி போடுறது சரியா படல. கல்யாணம் பண்ணு… இல்லனா இந்த மெடிக்கல் ரிப்போர்ட் வெச்சி ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் பண்ணுவேன். ” என்று போனை வைத்து விட, கடைசி வார்த்தையில வஞ்சம் புகுந்து இருந்தது சந்திரன் மனதில்.
இதை மைக்கேலிடம் தெரிவிக்க, “அறிவு கெட்டவனே எதுக்கு சண்டை போடுற. அவ மட்டும் சொன்ன மாதிரி போலீஸ் ஸ்டேஷன்க்கு போனா நமக்குத்தான் ஆபத்து. அந்த பொண்ணு கிட்ட நயமா பேசி நான் சொல்ற வீட்டுல தங்க வை. மத்ததை அப்புறம் சொல்றேன். ” என்ற மைக்கேலின் வார்த்தையில் அனிதா விடம் ” அப்பா கிட்ட பேசிட்டேன். இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா ரொம்ப அசிங்கம் னு நினைக்கிறாரு. இப்போதைக்கு உன்னை ஒரு வீட்ல தங்க வைக்க சொல்லி இருக்காரு.என்ன இருந்தாலும் அவரோட வாரிசு அனாதையா இருக்குறது அப்பாக்கு பிடிக்கலையா அனிதா. எதையும் எடுத்துட்டு கூட வர வேணாம் அப்படியே கிளம்பி வா மீதிய அப்பா பார்த்து பாரு” பேச,
அவளும் மீண்டும் சந்திரனை நம்பி தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியில் வந்தாள். மாற்று ஆடையை கூட எடுக்காமல் . இந்த முறை அடையாறு ஏரியாவில் ஒரு வீடு எடுத்து தங்க வைக்கப்பட்டாள் அனிதா. நாட்கள் சில கடக்க தினமும் வாக்கு வாதங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதற்கு மேலும் சென்றால் குழந்தையை கலைக்க முடியாது என்பதை அறிந்து தந்தை மகன் இருவரும் கடைசியாக பேசச் சென்றனர்.
பலமுறை கேட்டும் வீட்டில் உள்ளவர்கள் புகைப்படம் கூட காட்டாத சந்திரன் மீது கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைய ஆரம்பித்திருந்தது. இன்று அவனிடம் அவன் குடும்பத்தைப் பற்றி விசாரிக்க வேண்டும் என எண்ணி இருக்க, அதற்கு மாறாக ஒவ்வொரு முறையும் சந்திரன் மட்டுமே வர இந்த முறை அவனுடன் மைக்கேலும் வந்தார்
வந்தவரோ, “இங்க பாரும்மா.. என் பையன் மேல இதுல எந்த அளவுக்கு தப்பு இருக்கோ அதே அளவு தப்பு உன் மேலயும் இருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி வேலை எல்லாம் நல்ல குடும்பத்துல பிறந்த பொண்ணு பண்ணுவாளா? நீ இந்த மாதிரி இருக்கும் போது நான் எப்படி கல்யாணத்துக்கு சம்மதிப்பேன். என் சொந்த பந்தம் கேட்டா என்ன சொல்லுவேன். என் பையனுக்கு நல்ல நல்ல இடத்துல இருந்து பொண்ணு கேட்டு வராங்க. நீயும் உன் குடும்பமும் என்ன? எப்படின்னு கூட எனக்கு தெரியல. அதுவுமில்லாம என் பையனை விட நீ ரெண்டு வயசு பெரிய பொண்ணு. இது தெரிஞ்சாலே பார்க்கிறவங்க ஏதாச்சும் சொல்லுவாங்க. உன்கிட்ட நிறைய குறை இருக்கு. இருந்தாலும் என் பையனுக்காக உன்னைய என் வீட்டு மருமகளா ஏத்துக்குறேன். ஆனா நீ ஒன்னு மட்டும் பண்ணனும். இந்த குழந்தையை கலைக்கனும். எனக்கும் என்னோட பேரக் குழந்தையை கலைக்க சொல்றது வருத்தமா தான் இருக்கு. கண்ணுக்கு தெரியாத உயிரை விட இதோ முன்னாடி நிக்கிற என் பையன் பெருசு. நல்லா யோசிச்சு முடிவ சொல்லு.”
“நீங்க சொல்றது புரியுது சார். ஆனா என்னால இந்த குழந்தையை அபார்ட் பண்ண முடியாது. எனக்கு ஏற்கனவே உடம்பு ரீதியா பிரச்சனை இருக்கு. அப்படி இருக்க இந்த குழந்தையை அபார்ட் பண்ணிட்டா.. நாளைக்கு நீங்களே ஆசைப்பட்டாலும் என்னால ஒரு குழந்தைய பெத்து தர முடியுமான்னு தெரியல. கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி தப்பு பண்ணது எனக்கு ரொம்ப பெரிய அசிங்கம் தான். இத என் வீட்டுல சொல்ல தைரியம் இல்லாம தான் உங்க பையன் கூப்பிட்ட இடத்துக்கு வந்திருக்கேன். கல்யாணம் பண்ணிட்டு என் அம்மா முன்னாடி நின்னா கூட சமாதானம் படுத்தலாம். கல்யாணம் ஆகாம வயித்துல பிள்ளையோட இருக்கிறது தெரிஞ்சாலே செத்துடுவாங்க. என் அம்மாவுக்காக கூட இந்த குழந்தையை அபார்ட் பண்ண நான் விரும்பல. எனக்காக உங்க வீட்டு வாரிசுக்காக இது ஒன்னு மட்டும் விட்டுக் கொடுங்க சார்.” தீர்க்கமாக அவளின் முடிவில் தெளிவாக எடுத்துரைக்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த சந்திரன் தான்,
“என்னடி உனக்கு அவ்வளவு திமிரு. எங்க அப்பாவே மனசு இறங்கி வந்து கல்யாணம் பண்ணி தரேன்னு சொல்றாரு. அப்ப கூட பிடிவாதமா உன் முடிவுல நிக்கிற. என்ன விட உனக்கு இந்த குழந்தை தான் முக்கியமா? ஒழுங்கு மரியாதையா குழந்தையை அபார்ட் பண்ணு. இல்லனா குழந்தையோட சேர்த்து உன்னையும் கொன்றுவேன்.”
இந்த சந்திரன் அனிதாவிற்கு புதிது. வளைந்து வளைந்து காதல் செய்தவன் சொல்லிய வார்த்தை பெண் மனதை ஆட்டம் காண செய்ய, “என்ன சந்திரன் இது. இப்படி எல்லாம் பேசுற. நான் யோசிக்கிறது உனக்காகவும் கூட. நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆகி குழந்தை இல்லாம போனா என்ன பண்ணுவ. அப்போ மட்டும் இந்த ஊரும் உலகமும் நம்மள தப்பா பேசாதா. காதலிக்கும் போது என்னென்ன வார்த்தை எல்லாம் சொல்லி இருக்க. இன்னிக்கு நீயே என்ன கொன்னுடுவேன்னு சொல்ற. அந்த அளவுக்கு என் மேல இருந்த காதல் குறைஞ்சு போச்சா.”
“ஆமாண்டி குறைஞ்சு தான் போச்சு
எனக்காக யோசிக்காத உனக்காக நான் எதுக்கு யோசிக்கணும்.”
“முடிவா என்னதான் சொல்ற.”
“உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்’னா இந்த குழந்தையை அபார்ட் பண்ணு அவ்வளவுதான்.”
“என்னால முடியாது.”
“உன்ன கல்யாணம் பண்ணிக்க என்னால முடியாது.”
“ஏன் முடியாது இது உன் குழந்தை தான.”
“யாரு சொன்னா . எனக்கும் இந்த குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”
“நான் சொல்றேன் இது உன் குழந்தை தான்.”
“ஓ அப்படியா! நீ சொன்னா இந்த உலகம் நம்பாது.”
“நான் சொன்ன நம்பாது. மெடிக்கல் ரிப்போர்ட் சொன்னா நம்பும் தான. இனிமே பேசி நமக்குள்ள ஒன்னும் ஆகாது. எதுவா இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன்ல பார்த்துக்கலாம் சந்திரன். என் குழந்தைக்கு அப்பா நீ தான். இத யாரு இல்லன்னு சொல்றாங்கன்னு நானும் பார்க்கிறேன்.” என்றவள் வீட்டிலிருந்து வெளியேற,
அவளை தடுத்த மைக்கேல், “என்னம்மா நீ.. ஸ்டேஷனுக்கு போனா கல்யாணம் பண்ணி வைப்பாங்க. அதுக்கு அப்புறம் எப்படி வாழ்வ இவன் கூட. நீ எங்கயும் போக வேணாம். இங்கயே இரு . வீட்டில பேசிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்.” என்க,
அந்த நேரம் தான்.. அனிதாவின் தோழி சுபா போன் செய்து ராசாத்தி கடைக்கு வந்து விசாரித்ததை சொல்ல, பக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்த மைக்கேல்.., அனிதாவிடம் இருந்து போனை வாங்கி பேசுவது கேட்காதவாறு மறைத்து கொண்டு,
“அனிதா இப்போதைக்கு உங்க அம்மாக்கு எதுவும் தெரிய வேணாம். என் பையன ரொம்ப அசிங்கமா நினைப்பாங்க. உன் பிரண்டு கிட்ட தங்கி இருக்க இடத்தையும் சொல்லாத. உன் அம்மாகிட்ட சொல்ல வாய்ப்பு இருக்கு. கொஞ்ச நாள்ல அங்க நீயே வரதா சொல்லி சமாளி. கல்யாணம் பண்ணிக்கிட்டு மொத்தமா உங்க அம்மா கிட்ட போய் நிற்போம். என் குடும்ப மானத்த காப்பாற்றுமா என் வீட்டு மருமகளா…” நல்லவன் போல் பேச அதை நம்பிய அனிதாவும் தன் தோழியிடம்… நானே அங்கு வந்து பார்த்துக் கொள்வதாக கூறி வைத்து விட்டாள்.
அவளிடம் பேசிவிட்டு வெளியில் வந்த இருவரும் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க, “உன்னால பாருடா எவ்ளோ பெரிய பிரச்சனை. இப்போ இந்த பொண்ணோட அம்மா தேடி இங்க வந்துட்டாங்க. இந்தப் பெண்ணை சமாளிச்சு வைக்கலாம். அவங்க அம்மாவை எப்படி சமாளிச்சி வைக்கிறது. நாளைக்கு பொண்ண காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ண போறாங்க பாரு…. போய் என்ன மாதிரி ஜெயில்ல உட்கார்ந்து வாழ்க்கையை முடிச்சிக்க போ..”
“அப்பா இதான் சாக்குன்னு உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க. நான் எத்தனை பொண்ணு கூட பழகி இருக்க உங்களுக்கும் தெரியும் தான. அவங்க கிட்ட இருந்து காசு வாங்கி உங்களுக்கு கொடுக்கும் போது நல்லா இருந்துச்சா. ஏதோ இவ ஒருத்தி கிட்ட தெரியாம மாட்டிக்கிட்ட. அதுக்கு என்னமா ஓவரா பேசுறீங்க. இதை எப்படி முடிக்கலாம் னு சொல்லுங்க. அதை விட்டுட்டு தேவையில்லாம பேசாதீங்க. நான் எதுக்கு ஜெயிலுக்கு போகனும். என்னால நீங்க இல்லாம வசதியா வாழ முடியும். உங்கள விட நான் திருட்டு தொழில் நல்லாவே செய்வேன்.”
“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. இனிமே இந்த பொண்ணு கிட்ட பேசி பலனில்லை. இந்த பொண்ணு சம்பந்தமா நீ ஏதாச்சும் ஆதாரத்தை விட்டு இருக்கியா நீ நல்லா யோசிச்சு சொல்லு..”
“எப்பவுமே பண்றது தான். எந்த இடத்துலயும் என்னோட முகத்த காட்டல. அவ கடையில கூட நான் வந்துட்டு போனதுக்கு அப்புறம் தான் கேமரா வச்சாங்க. வெளியே போகும்போது போட்டோ எடுத்து இருக்க…. அது என்கிட்ட தான் இருக்கு. அவ கையால காசு வாங்குன சாட்சி கூட இல்லை. அவளோட ஃப்ரெண்ட்ஸ் யாருக்கும் என்ன தெரியாது. இது சம்பந்தமா என்னை கண்டுபிடிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். இந்த போன் நம்பர் கூட… ஒருவாட்டி ரோட்டில் அடிபட்டு இருந்த பெரியவரை காப்பாத்த போற மாதிரி திருடிட்டேன். இத வச்சி ஒன்னும்பண்ண முடியாது
இதிலிருந்து அனிதாக்கும் என் புது ப்ரண்ட்ஸ் கிட்ட மட்டும்தான் பேசியிருக்கேன். அவனுங்க கிட்ட பேசி சமாளிச்சிக்கலாம். உங்க எல்லாருக்கும் பேசுறது என்னோட நம்பர் ல இருந்து. எல்லாத்தையும் ப்ளான் பண்ணிதான் பண்ணேன். இந்த ஒரு விஷயம் மட்டும் எப்படியோ சொதப்பிடுச்சி.”
“அப்போ சரி இந்த பொண்ணு கொன்னுடலாம்.” என சர்வசாதாரணமாக கூற, அதில் திடுக்கிட்ட சந்திரன்,
“அப்பா என்னை என்ன வேலை செய்ய சொல்றீங்க. இதுவரைக்கும் நான் பண்ணாத ஒருவேளை கொலை மட்டும்தான். அதையும் பண்ண வைச்சிடாதிங்க. இவள கொன்னுட்டா அவங்க அம்மாவுக்கு என்ன பதில் சொல்றது.”
“அவ கூட பழகுனதுக்கு எந்த சாட்சியும் இல்லை அப்புறம் என்ன? அவங்க அம்மா பொண்ண காணோம்னு தேடி அலையட்டும். இனிமேலும் இவளை விட்டா வயித்துல வளர்ற குழந்தையே உன்னைய அழிச்சிடும்.” என்ற மைக்கேல் பிள்ளைக்கு ஏதேதோ தூபம் போட… அதில் முழுவதுமாக தந்தை புறம் சாய்ந்தவன் அனிதாவை கொல்லும் நாளுக்காக திட்டம் தீட்டினான்.
ஒரு வாரம் கழித்து அனிதாவிடம் வந்தவன், “அனிதா அப்பா.. அம்மா கிட்ட பேசிட்டாரு. அம்மாவும் நம்மள வீட்டுக்கு வர சொல்லிட்டாங்க. உடனே கிளம்பி இரு… நான் வந்து கூட்டிட்டு போற.” சந்திரனின் வார்த்தையில் மனம் மகிழ்ந்த அனிதா பல கனவுகளோடு தயாராகி இருக்க, வந்தவன் சிரித்த முகமாக அவளை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் புறப்பட்டான்.
வழியெங்கிலும் உன் வீடு எங்க என கேட்டுக்கொண்டு வந்த அனிதாவை ஏதேதோ சொல்லி சமாளித்தவன் சிறிது நேரத்திலே அடையாறு கூவம் ஆற்றின் அருகே அவளோடு இறங்கினான் . இறங்கியவள் குழப்பமாக பார்க்க,
“அப்பா இங்கதான் இருக்காரு அவரையும் கூட்டிகிட்டு போகலாம்.” என்றவன் வந்த ஆட்டோவை அனுப்பிவைத்தான்.
சில நிமிடங்களில் அங்கு வந்த மைக்கேல்… ” வாம்மா கல்யாண கலை முகத்துல வந்திருச்சு போல. ஆனா பாரு என் பையன் முகத்துல ஒரே கவலை தான். உன்ன மாதிரி ஒருத்தி கூட வாழ்க்கை அமைய போறதை நினைச்சு. “அனிதாவிடம் கூறிக் கொண்டே கையில் இருக்கும் செல்போனை வாங்கி, “இதை எடுத்துட்டு இவ வேலை பார்த்த இடத்துக்கு போ. அங்க சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு எங்கேயாவது போட்டுட்டு வா.” என மகனை அனுப்பி வைத்தார் மைக்கேல்.
மைக்கேல் பேச்சில் எதுவோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்தவள் அங்கிருந்து நகர பார்க்க,”எங்க மருமகளே ஓடுற… நான் உனக்கு எவ்வளவோ வாய்ப்பு கொடுத்தேன். அப்போலாம் ஓடாம இப்போ ஓடுற.”என்றவர் அனிதாவை அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஒரு வீட்டில் அடைத்தார். சந்திரன் வரும் வரை… குழந்தையை கலைக்க சொல்லி அடித்து துன்புறுத்த,
“சார் ப்ளீஸ் சார் என்னை விட்டுருங்க. எனக்கு என்னோட குழந்தை ரொம்ப முக்கியம். தைராய்டு பிரச்சனை இருக்கு… குழந்தை பிறக்க லேட் ஆகும்னு ஏற்கனவே சொல்லியிருக்காங்க. என்னால என் குழந்தையை கொல்ல முடியாது. ப்ளீஸ் விட்ருங்க. நான் இங்க இருந்து எங்கேயாவது போயிடுறேன். உங்க மகன் வாழ்க்கையில வரவே மாட்டேன்.”
“சரி உன்ன உயிரோட விடுறேன். என்னைக்கா இருந்தாலும் இந்த குழந்தை எங்களுக்கு பிரச்சனை தான். அதை மட்டும் கொன்னுடு. அதுக்கப்புறம் நீ எங்கேயாது போய் தொல. என் பையன வச்சி நான் நிறைய ப்ளான் வச்சிருக்கேன்மா. உன்னால அது எல்லாம் இப்போ கனவா மாற போற மாதிரி இருக்கு.” மேற்கொண்டும் அவளை சித்திரவதை செய்ய சிறிது நேரத்தில் அங்கு வந்த சந்திரன், “அப்பா நீங்க சொன்ன மாதிரி செஞ்சிட்டேன். அடையார் கூவத்துல இப்போ யாரும் இல்ல. நமக்கு இதுதான் சரியான நேரம். இவள கொன்னுட்டு அங்க தூக்கி போட்டுடலாம்.” சந்திரனின் பேச்சில் அலறித் துடித்த அனிதா,
“ப்ளீஸ்! ப்ளீஸ்! சந்திரன் என்னை விட்டுடு. உனக்கு நான் என்ன பாவம் பண்ணுனேன். நீயா வந்து காதலிச்சுட்டு இப்போ என்ன சாகடிக்க பார்க்கிறியே ஞாயமா. வயித்துல உன்னோட குழந்தை வளருது. அதுக்காகவாவது என்னை உயிரோட விடு.” அனிதா சொல்லி முடிக்க அந்த நேரம் அவள் வயிற்றில் ஓங்கி அடித்தவன்,
“இந்த பிசாசு வந்தது தாண்டி எனக்கு பெரிய பிரச்சனையே. ஒழுங்கா அப்பவே கலைச்சி இருந்தா எவனையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம். இப்போ உனக்கு செத்துப் போறதை தவிர வேறு வழியே இல்லை.”என்றுவிட்டு தந்தையோடு சேர்ந்து அவளை உயிரோடு சிதைத்து….. கொண்டிருக்க, அந்த அரக்கனின் தந்தையோ … இத்தனை நாள் கெஞ்ச காரணமான கர்ப்பப்பையை அனிதா அரை உயிராக இருக்கும் பொழுதே… பிய்த்து எறிந்திருந்தான்.
அதில் அலறித் துடித்து எழுந்தவளை கல்லால் அடித்து கொன்றுவிட்டு கூவத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே ஆள் அரவம் இல்லாமல் நட்டநடு இரவாக இருக்க உடலை முழுவதுமாக எரிப்பது அவர்களின் திட்டம். பாதி எரிந்த நிலையில் ஆள்நடமாட்டம் தெரிய பயத்தில் தீயை அணைத்து விட்டு ஒரு சாக்குப்பையில் கட்டி வீசி விட்டனர். தடயங்கள் தெரியாமல் முழுவதுமாக இருவரும் அழித்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.
அங்கு, பூமியில் உள்ள மனித உயிர்கள் அனைத்தும் அழகாய் உருவெடுக்க காரணமான பைங்குழி ( கர்பப்பை ) தன் உருவத்தை சிதைத்து உருக்குலைந்து தரையில் துடிதுடிக்க மாய்த்து போயிருந்தது. அதைக்கண்ட மைக்கேல், “இந்த கருமத்த விட்டுட்டோம் பாருடா. இதுக்காகத்தானே இவ்வளவு போராட்டம் பண்ணா.. பாவம் இத அவ கிட்டயே தூக்கி வீசிட்டு வா போ.”என மனசாட்சி இல்லாமல் தன் மகனிடம் கூற,
அதை கையில் எடுத்தவன் கூவத்திற்கு சென்று பாலித்தீன் பையில் மணலை அள்ளி கொட்டி அதையும் சேர்த்து இறுக்கமாக கட்டி அனிதாவை வீசிய எதிர்திசையில் வீசி விட்டு சென்றான்.