Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 33 1
Post Views:
1,445
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
33
சூர்யா
வீட்டுக்கு
கிளம்பும்
முன்
ஆருவுடன்
தனியாகப்
பேசிக்கொண்டிருந்தான்
.
ஆரு
முகம்
வாடியிருப்பதைப்
பார்த்து
“
உங்க
அம்மா
சொன்னதை
நினைச்சு
பீல்
பண்றியா
ஆரு
,
அர்ஜுன்
,
மீரா
கல்யாணம்
நல்லபடியா
நடக்கும்
.
நாங்க
இத்தனை
பேர்
இருக்கோம்
,
மீராவை
விட்டு
கொடுத்திடுவோமா
….”
என்றதும்
,
அதைக்
கேட்டு
ஆருவின்
முகம்
மலர்ந்தது
.
சூர்யாவின்
குடும்பம்
கிளம்பி
சென்றதும்
,
தினேஷும்
கிளம்புவதாகச்
சொல்ல
…
வித்யா
கொஞ்ச
நேரம்
இருங்க
,
போகலாம்
என்றார்
.
அவர்
எதற்குச்
சொல்கிறார்
என்று
புரியாமல்
தினேஷும்
,
சஞ்சனாவும்
ஒருவரை
ஒருவர்
பார்க்க
…
சிறிது
நேரத்தில்
கடையில்
இருந்து
ஒரு
பையன்
வந்து
ஒரு
கவரை
கொடுத்துவிட்டுச்
சென்றான்
.
வித்யா
அந்தக்
கவருடன்
அவருடைய
அறைக்குச்
சென்றவர்
,
அர்ஜுன்
கடையில்
இருந்து
தினேஷ்க்காகக்
கொடுத்து
விட்ட
உடையோடு
,
வீட்டில்
இருந்த
ஒரு
புதுப்
பட்டு
புடவையைத்
தட்டில்
வைத்து
,
கொண்டு
வந்து
தினேஷ்
,
சஞ்சனா
இருவரிடமும்
கொடுக்க
…
முதலில்
வாங்க
மறுத்த
இருவரும்
“
புதுசா
கல்யாணம்
ஆகி
வர்றவங்களுக்கு
,
நாங்க
செய்ற
முறை
தான்
வாங்கிகோங்க
.”
என்று
சொன்னதும்
,
இருவரும்
வாங்கிக்
கொண்டனர்
.
தினேஷும்
,
சஞ்சனாவும்
அவர்கள்
வீட்டுக்கு
வந்ததும்
“
இன்னைக்கு
அவங்க
வீட்ல
முக்கியமான
விசேஷம்
இருந்தும்
,
நான்
போன்
பண்ணி
கேட்ட
போது
உன்னோட
அத்தான்
ஒண்ணுமே
சொல்லாம
,
வாங்க
…
நாங்க
ப்ரீயா
தான்
இருக்கோம்னு
சொன்னார்
.
தெரிஞ்சிருந்தா
…
இன்னொரு
நாள்
போய்
இருக்கலாம்
.
அவங்க
வீட்ல
எல்லோரும்
நல்ல
மாதிரி
.”
தினேஷ்
சொல்ல
..
சஞ்சனா
அமைதியாக
அவள்
போட்டிருந்த
நகைகளைக்
கழட்டி
கொண்டிருந்தாள்
.
“
எனக்கு
அவங்க
வீட்டை
பத்தி
அவ்வளவா
தெரியாது
.
நான்
அந்தப்
பொண்ணு
மீராவை
பார்த்து
நிஜமா
அர்ஜுனோட
பொண்டாட்டின்னு
தான்
நினைச்சேன்
.
எனக்கு
அவங்களைப்
பார்க்கும்
போது
அப்படித்
தான்
தோனுச்சு
.”
தினேஷ்
சொல்ல
…
இப்போது
மட்டும்
சஞ்சனா
வேகமாக
“
எதாவது
உளறதீங்க
.
அது
தான்
அவங்க
புருஷன்
பொண்டாட்டி
இல்லைன்னு
இப்ப
தெரிஞ்சிடுச்சுல
,
திரும்ப
எதுக்கு
அதையே
சொல்றீங்க
.”
என்றாள்
கடுப்பாக
.
அவளுக்கு
அர்ஜுன்
,
மீரா
இருவரையும்
சேர்த்து
வைத்து
பேசுவது
சுத்தமாகப்
பிடிக்கவில்லை
.
சஞ்சனாவுக்கு
அர்ஜுன்
அவளைக்
கண்டு
கொள்ளவே
இல்லை
என்ற
ஆத்திரம்
வேறு
.
எவ்வளவு
திமிர்
அவனுக்கு
என்று
மனதில்
கருவிக்கொண்டு
இருந்தாள்
.
தினேஷ்
சஞ்சனவையே
பார்க்க
…
அவள்
முகத்தில்
கோபம்
வெளிப்படையாகத்
தெரிந்தது
. “
ஆமாம்
…
தெரியாம
தான்
கேட்கிறேன்
.
அவங்களைச்
சொன்னா
…
உனக்கு
ஏன்
கோபம்
வருது
?”
“
பின்னே
சம்பந்தம்
இல்லாதவங்களை
…
சம்பந்தபடுத்திப்
பேசினா
கோபம்
வராதா
…”
“
அர்ஜுன்
,
மீராவை
சம்பந்தபடுத்திப்
பேசினா
….
சம்பந்தம்
இல்லாத
உனக்கு
ஏன்
கோபம்
வருதுன்னு
தான்
புரியலை
?”
என்று
தினேஷ்
ஒரு
மாதிரி
கேட்க
….
“
எனக்கு
என்ன
வந்துச்சு
?
நீங்க
யாரை
பற்றியும்
பேசுங்க
,”
என்று
எழுந்து
சஞ்சனா
வெளியே
செல்ல
பார்த்தாள்
.
அவளைத்
தடுத்த
தினேஷ்
“
கொஞ்ச
நேரத்துக்கு
முன்னாடி
தான்
கோபப்பட்ட
,
இப்ப
எனக்கு
என்ன
வந்துச்சுன்னு
சொல்ற
…
கூடப்
பிறந்த
அக்காவை
பார்க்க
நான்
வலுகட்டாயமா
இழுத்துட்டு
போக
வேண்டியதா
இருக்கு
…
அவங்களும்
இங்க
வர
மாட்றாங்க
.
எனக்கு
ஒன்னும்
புரியலை
.”
என்றான்
யோசைனையாக
….
தினேஷின்
பேச்சை
கேட்டு
சுதாரித்த
சஞ்சனா
“
இல்லை
நமக்கு
எதுக்கு
அவங்க
விஷயம்
.
அது
தான்
சொன்னேன்
.
அக்கா
நாம
பால்
காய்ச்சும்
போது
வரலை
இல்லையா
,
அதனால
தான்
அவங்க
வீட்டுக்கு
போக
யோசிச்சேன்
.”
எனச்
சஞ்சனா
சமாதானமாகச்
சொல்ல
…
அவனும்
மேற்கொண்டு
எதுவும்
பேசாமல்
,
அந்த
இடத்தை
விட்டுச்
சென்றான்
.
தினேஷ்
அங்கிருந்து
சென்றதும்
,
ஹப்பா
…
என்று
நிம்மதி
பெரு
மூச்சுவிட்ட
சஞ்சனா
,
இனி
அவனிடம்
பார்த்து
பேச
வேண்டும்
என்றும்
நினைத்தாள்
.
மறுநாள்
தினேஷ்
அலுவலகம்
சென்றதும்
,
அவளே
ரஞ்சனாவை
செல்லில்
அழைத்தாள்
.
“
ஹலோ
சஞ்சு
சொல்லு
எப்படி
இருக்க
?”
“
நேத்து
தான
பார்த்தோம்
அப்புறம்
என்ன
எப்படி
இருக்க
…”
“
இல்லை
திடிர்னு
போன்
பண்ணதும்
,
என்ன
கேட்கிறதுன்னு
தெரியாம
…”
என்று
இழுத்த
ரஞ்சனா
…
சரி
சொல்லு
எதுக்குப்
போன்
பண்ண
?”
என்றாள்
.
“
என்னோட
வீட்டுக்கார்
,
ஏன்
உங்க
அக்கா
வீட்ல
இருந்து
யாரும்
நம்ம
வீட்டுக்கு
வர
மாட்றாங்கன்னு
கேட்டு
ஒரே
இம்சை
பண்றார்
.
நீயும்
வேணும்னே
என்னைப்
பழி
வாங்க
தான
அப்படிப்
பண்ற
…”
என்றாள்
சஞ்சனா
கடுப்பாக
.
“
நான்
என்ன
பண்ணேன்
சஞ்சு
,
நீயா
எதாவது
சொல்லாத
…”
“
சும்மா
சொல்லாதா
எனக்குத்
தெரியும்
,
நான்
கல்யாணத்துக்கு
வந்த
உன்னோட
மாமனார்
,
மாமியாரோட
பேசலைன்னு
தான
இப்படிப்
பண்றீங்க
.”
சஞ்சனா
குற்றம்
சாட்ட
…
“
ஆமாம்
.
நீ
பண்ணது
தப்பு
தான
,
அவங்க
என்னோட
புகுந்த
வீட்டுகாரங்க
.
நீ
அவங்களுக்குக்
குடுக்க
வேண்டிய
மரியாதையைக்
குடுத்திருக்கனுமா
…
வேண்டாமா
?
அவங்க
எல்லாம்
நல்ல
மாதிரி
…
அதனால
அவங்க
பெரிசா
எடுத்துக்கலை
.
இல்லை
…
இதே
வேறவுங்களா
இருந்தா
…
அதையே
பெரிய
பிரச்சனை
ஆக்கி
,
என்னையும்
கல்யாணத்துக்கு
இருக்க
விடாம
இழுத்திட்டு
வந்திருப்பாங்க
.”
ரஞ்சனா
எடுத்து
சொல்ல
…
சஞ்சனா
விசும்ப
ஆரம்பித்தாள்
.
“
சஞ்சு
அழாத
,
இப்ப
என்ன
ஆச்சு
அதனால
?”
“
இன்னும்
என்ன
ஆகணும்
?
என்
வீட்டுக்காரர்
சந்தேகப்
பட
மாட்டாரா
…
எல்லோரும்
சேர்ந்து
என்
வாழ்கையைக்
கெடுக்கப்
பார்க்கறீங்க
.”
எனச்
சஞ்சனா
மேலும்
அழ
…
“
பெரிய
வாரத்தை
எல்லாம்
பேசாத
சஞ்சனா
,
நாங்க
இந்த
வாரம்
கண்டிப்பா
உங்க
வீட்டுக்கு
வரோம்
.
எங்க
யாருக்கும்
உன்
வாழ்கையைக்
கெடுக்கணும்னு
எண்ணம்
இல்லை
.
சரியா
…
அழாத
வை
.”
என்று
ரஞ்சனா
போன்னை
வைத்தாள்
.
கடைசி
வரை
நான்
செஞ்சது
தப்புன்னு
இந்தச்
சஞ்சனா
வாய்ல
இருந்து
வரலியே
என்று
நினைத்தவள்
,
அன்று
இரவு
ஆதியிடமும்
அதைச்
சொல்ல
மறக்கவில்லை
…
“
நம்மால
அவ
வாழக்கை
கெட
வேண்டாம்
.
நாம
இந்த
வாரம்
அவ
வீட்டுக்கு
போய்ட்டு
வந்திடலாம்
.
ஆனா
அவகிட்ட
நம்ம
குடும்ப
விஷயம்
எதையும்
சொல்லாத
.”
ஆதி
சொல்ல
…
ரஞ்சனாவும்
சரி
என்றாள்
.
அந்த
வார
ஞாயிற்றுக்கிழமை
மாலை
ஏழு
மணி
போல்
…
ரஞ்சனா
,
ஆதி
,
வித்யா
மற்றும்
ஐஷு
சஞ்சனா
வீட்டிற்குச்
சென்றனர்
.
தினேஷுக்கு
எந்தச்
சந்தேகமும்
வரக்கூடாது
என்று
சஞ்சனா
அவர்களை
விழுந்து
விழுந்து
கவனித்தாள்
.
சஞ்சனாவிற்கு
இன்னும்
அவ்வளவாகச்
சமைக்கத்
தெரியாததால்
…
இரவு
உணவிற்கு
அவர்களை
அழைத்துக்
கொண்டு
தினேஷ்
ஹோட்டலுக்குச்
சென்றான்
.
தினேஷ்
அவர்களை
நன்றாக
உபசரித்தவன்
,
அதோடு
ஐஷுவை
அழைத்துக்
கொண்டு
கடைக்குச்
சென்று
,
அவளுக்குப்
பொம்மை
வாங்கிக்
கொடுத்தான்
.
அன்றைய
நாள்
நல்லபடியாகச்
சென்றது
.
சூர்யா
ஆரு
திருமணத்திற்கு
ஆறு
மாதம்
கழித்து
இருந்த
முகுர்த்த
நாளில்
தான்
மண்டபம்
கிடைத்தது
.
அதோடு
கல்யாணத்திற்கு
முன்
தினம்
நிச்சயம்
வைத்துக்
கொள்ளலாம்
என்றும்
முடிவு
செய்யப்பட்டது
.
திருமண
வேலைகள்
வேகமாக
நடந்து
கொண்டு
இருந்தது
.
ஒரு
நாள்
அர்ஜுனை
சந்தித்த
மீரா
அவனிடம்
அருவின்
திருமணம்
முடிந்ததும்
,
வித்யாவிடம்
தங்கள்
காதல்
விஷயத்தைப்
பற்றிப்
பேசலாம்
என்றாள்
.
“
ஏன்
மீரா
..
அவ்வளவு
நாள்
தள்ளி
போடணும்
?”
“
வித்யா
ஆன்டிக்கு
நம்ம
விஷயம்
தெரிஞ்சா
கண்டிப்பா
டென்ஷன்
ஆவாங்க
.
அவங்க
நிம்மதியா
ஆரு
கல்யாண
வேலைகள்
செய்யட்டும்
அர்ஜுன்
.”
மீரா
சொல்ல
…
அர்ஜுனும்
சரி
என்றான்
.
நாட்கள்
வேகமாகச்
சென்றது
.
ஆரு
திருமணத்திற்கு
இன்னும்
பதினைந்து
நாட்கள்
தான்
இருந்தது
.
அந்த
வாரம்
சென்னைக்கு
வந்த
மீராவை
அழைத்துக்
கொண்டு
அர்ஜுன்
ஷாப்பிங்
சென்றான்
.
“
ஆருவுக்கா
வாங்க
போறோம்
,
என்ன
வாங்க
போறோம்
?”
மீரா
கேள்விகளாகக்
கேட்க
…
அர்ஜுன்
எதற்கும்
பதில்
சொல்லவில்லை
….
அர்ஜுன்
அவளை
அழைத்துக்
கொண்டு
ஒரு
பெரிய
பட்டு
புடவை
கடைக்குச்
சென்று
புடவைகள்
பார்க்க
….
மீராவும்
அவனோடு
சேர்ந்து
பார்த்தாள்
.
அர்ஜுன்
மீராவின்
மீது
ஒவ்வொரு
சேலைகளாக
வைத்து
பார்த்தவன்
,
அடர்
நீல
நிறத்தில்
உடலெல்லாம்
வெள்ளி
ஜரிகைகளால்
கொடிபோல
…
வேலைப்பாடு
செய்து
இருந்த
அழகான
சேலையைத்
தேர்ந்தெடுத்தான்
.
Advertising
Advertising