Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 34
Post Views:
1,483
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
34
அன்று
ஆரம்பித்த
அர்ஜுன்
,
சூர்யா
மற்றும்
தினேஷின்
ரகளை
ஆருவின்
கல்யாணம்
வரை
தொடர்ந்தது
.
தினேஷையும்
,
சஞ்சனாவையும்
அன்று
இரவு
ரஞ்சனா
அங்கேயே
தங்க
சொல்ல
…
அவர்களும்
தங்கினர்
.
மறுநாள்
காலையில்
எழுந்த
சஞ்சனா
வாந்தி
எடுக்க
…
விசாரித்ததில்
அவள்
கற்பமாக
இருப்பது
தெரிந்தது
.
தினேஷை
கையில்
பிடிக்க
முடியவில்லை
…
அவன்
எல்லோருக்கும்
இனிப்பு
கொடுத்து
தன்
மகிழ்ச்சியைப்
பகிர்ந்து
கொண்டான்
.
சஞ்சனா
கற்பமாக
இருப்பதால்
….
ஆருவின்
திருமணத்திற்காக
வரும்
அவள்
பெற்றோருடன்
திருச்சி
செல்வதாக
இருந்தது
.
வித்யா
அதுவரை
அவளை
இங்கேயே
தங்க
சொன்னார்
.
“
எதுக்கு
உங்களுக்குச்
சிரமம்
…
இங்க
எல்லோரும்
கல்யாண
வேலையில
பிஸியா
இருப்பீங்க
….
நான்
அவளை
எங்க
வீட்ல
வச்சு
பார்த்துகிறேன்
.”
தினேஷ்
சொன்னதிற்கு
வித்யா
ஒத்துக்கொள்ளவில்லை
.
“
நாங்க
இவ்வளவு
பேர்
இருக்கிறோம்
பார்த்துக்க
மாட்டோமே
என்ன
?
இந்த
மாதிரி
நேரத்தில
அவளால
வேலை
பார்க்க
முடியாது
.
அதுவும்
அவ
ரொம்ப
வாந்தி
எடுக்கிறா
….
பத்து
நாள்
தானே
…
இங்கேயே
ரெண்டு
பேரும்
இருங்க
.”
வித்யா
முடிவாகச்
சொல்ல
..
தினேஷால்
அதற்கு
மேல்
மறுக்க
முடியவில்லை
.
தினேஷ்
அங்கேயே
தங்கியதால்
…
அர்ஜுன்
,
சூர்யா
மற்றும்
ஆதியோடு
நெருங்கி
பழகும்
வாய்ப்புக்
கிடைத்தது
.
தினேஷ்
அவர்களோடு
திருமண
வேலைகளைப்
பகிர்ந்து
கொண்டான்
.
ரஞ்சனா
சஞ்சனாவை
அழைத்துக்
கொண்டு
டாக்டரிடம்
சென்று
வந்தாள்
.
ஆதி
சஞ்சனாவிற்காக
நிறையப்
பழங்கள்
வாங்கி
வந்து
வீட்டில்
போட்டான்
.
வித்யாவும்
எவ்வளவு
வேலை
இருந்தாலும்
,
சஞ்சனாவிற்கு
என்று
வாய்க்கு
ருசியாகச்
சமைத்து
கொடுத்தார்
.
ஆரு
முன்பு
மாதிரி
இல்லாமல்
,
இப்போது
சஞ்சனாவிடம்
நன்றாகப்
பேசினாள்
.
சஞ்சனாவும்
தாய்மை
அடைந்ததில்
இருந்து
சிறிது
மாறி
தான்
இருந்தாள்
.
அவளுடைய
சிந்தனை
முழுவதும்
இப்போது
பிறக்க
போகும்
குழந்தையின்
மீது
இருந்தது
.
அதனால்
அவளுக்குள்
சில
நல்ல
மாற்றங்கள்
ஏற்படத்
தான்
செய்தது
.
அதோடு
தினேஷ்
அவளைத்
தாங்குவதும்
,
அவளுக்காக
ஒவ்வொன்றையும்
பார்த்துப்
பார்த்து
செய்வதைப்
பார்த்ததும்
,
அவளுக்குத்
தன்
கணவனின்
மேல்
அன்பு
பெருகியது
.
அர்ஜுனும்
மீராவும்
சஞ்சனாவிடம்
இருந்து
இப்போதும்
விலகி
தான்
இருந்தனர்
.
அவர்களுக்குச்
சஞ்சனா
முன்பு
மாதிரி
எதாவது
பேசி
,
அதற்குத்
தாங்களும்
பதில்
பேசி
…
குடும்பத்தில்
தேவை
இல்லாத
பிரச்சனை
எதற்கு
என்று
நினைத்தனர்
.
ஆனால்
இருவருமே
தினேஷிடம்
நன்றாகப்
பழகினர்
.
திருமண
நாள்
நெருங்கியதும்
வீட்டில்
உறவினர்கள்
வருகை
அதிகமாகியது
.
அர்ஜுனின்
பெரியம்மாவும்
வந்து
இறங்கி
விட்டார்
.
அர்ஜுன்
அவன்
அம்மா
எடுத்தது
போக
…
அவனே
அவன்
பெரியம்மாவிற்கு
ஒரு
பட்டு
புடவை
எடுத்துக்
கொடுத்தான்
.
“
எதுக்கு
டா
இப்ப
,
உன்
கல்யாணத்துக்கு
வாங்கி
இருக்கலாம்
இல்ல
.”
காயத்ரி
சொல்ல
…”
அப்ப
இன்னும்
கிராண்டா
எடுப்போம்
பெரியம்மா
.”
என்றான்
அர்ஜுன்
.
மீரா
ஆருவின்
கல்யாணத்திற்கு
வியாழன்
அன்றே
வந்துவிட்டாள்
.
வீட்டிற்கு
ஆள்
அழைத்துக்
கையில்
மெஹந்தி
போட்டு
கொண்டனர்
.
ஆரு
,
ரஞ்சனா
,
மீரா
,
சஞ்சனா
மற்றும்
வீட்டிற்கு
வந்த
உறவினர்
என்று
எல்லோரும்
மெஹந்தி
போட்டுக்
கொண்டு
வீட்டை
ஒரு
வழியாக்கினர்
.
எல்லோரும்
மதிய
உணவிற்குப்
பிறகே
மெஹந்தி
போட்டு
கொண்டதால்
…
மாடியில்
ஆளுக்கு
ஒரு
மூலையில்
அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர்
.
சஞ்சனா
மெஹந்தி
வைத்ததும்
படுக்கச்
சென்றுவிட்டாள்
.
வித்யா
எங்கோ
வெளியில்
சென்றுவிட்டு
வந்தவர்
முகமே
வாடி
இருந்தது
.
ஆருவின்
அறைக்கு
வந்தவர்
,
எல்லோரிடமும்
எரிந்து
விழுந்தார்
.
இது
ஏன்
இங்க
இருக்கு
?
எதுவும்
இந்த
வீட்ல
வச்ச
இடத்தில
இருக்காது
என்று
எல்லோரையும்
போட்டு
படுத்தியவர்
.
இப்படி
எல்லாரும்
கைல
மெஹந்தி
வச்சிக்கிட்டு
உட்கார்ந்துட்டா
….
யாரு
வீட்டு
வேலை
பார்க்கிறது
என்று
கோபமாகக்
கேட்க
…
ரஞ்சனா
,
ஆரு
,
மீரா
மூவரும்
ஒருவரை
ஒருவர்
பார்த்துக்
கொண்டார்கள்
.
அவர்களுக்கு
அவரின்
கோபத்திற்கான
காரணம்
புரியவில்லை
.
ரஞ்சனா
என்னோட
கை
நல்லா
காய்ஞ்சுடுச்சு
என்றவள்
,
வேகமாகச்
சென்று
கையைக்
கழுவிவிட்டு
…
அனைவருக்கும்
மாலை
காபி
போட
கீழே
சென்றாள்
.
“
நீ
போய்ப்
பார்லர்ல
வச்சிட்டு
வந்திருந்தா
…
உன்னோட
முடிஞ்சிருக்கும்
.
இப்ப
பாரு
ஆளாளுக்கு
வச்சு
வீடே
எந்த
நிலைமைல
இருக்குன்னு
,
இப்ப
நீயா
வீட்டை
சுத்தம்
பண்ணுவ
…”
வித்யா
ஆரு
மேலும்
எரிந்து
விழ
….
ஆருவுக்குக்
கண்ணெல்லாம்
கலங்கி
விட்டது
.
அம்மா
ஏன்
இப்படிப்
பேசுறாங்க
?
ஏற்கனவே
எல்லோரும்
சேர்ந்து
இன்னைக்கு
வைக்கிறதா
தான
பேசி
இருந்தோம்
என்று
மனதில்
நினைத்தவளுக்கு
,
அதை
வெளியே
சொல்ல
தைரியம்
தான்
இல்லை
.
வித்யா
எவ்வளவுக்கு
எவ்வளவு
நல்லவரோ
…
அதே
போல்
கோபம்
வந்துவிட்டால்
,
யார்
என்றும்
பாராமல்
கோபத்தைக்
காட்டிவிடுவார்
.
மீரா
ஆருவின்
அருகே
அமர்ந்து
,
மெஹந்தி
போட்ட
அவள்
கைகளில்
சக்கரை
தண்ணீர்
வைத்து
கொண்டிருந்தாள்
.
வித்யா
மீராவையும்
விடவில்லை
,
அவளையும்
பார்த்து
முறைத்து
விட்டு
தான்
சென்றார்
.
“
இன்னைக்கு
மட்டும்
கைல
தண்ணி
படாம
வச்சுக்கோ
…
அப்ப
தான்
மெஹந்தி
டார்க்கா
பிடிக்கும்
.
நைட்
கை
,
கால்ல
எண்ணெய்
தேச்சுட்டு
படு
.”
மீரா
சொல்ல
…
ஆருவும்
அவள்
சொன்னதிற்கெல்லாம்
சரி
என்று
மண்டையை
ஆட்டியவள்
, “
மீரா
,
அம்மா
ஏன்
கோபமா
இருக்காங்க
?
ஒருவேளை
அம்மாவுக்கு
எங்க
விஷயம்
தெரிஞ்சிடுச்சோ
…”
எனக்
கேட்க
…
மீரா
தெரியவில்லை
என்று
உதட்டை
சுழித்தாள்
.
மீரா
ஆருவை
ரெஸ்ட்
எடுக்கச்
சொல்லிவிட்டு
கீழே
சென்று
ரஞ்சனாவுக்கு
உதவினாள்
.
அப்போது
அங்கே
வந்த
வித்யா
ரஞ்சனாவிடம்
, “
நீ
போ
நான்
பார்த்துகிறேன்
.”
என்று
சொல்ல
… “
ஏன்
அத்தை
?
நான்
பார்த்துகிறேன்
நீங்க
போய்
ரெஸ்ட்
எடுங்க
.”
என்றாள்
ரஞ்சனா
…
“
இனி
ரெஸ்ட்
எடுத்து
என்ன
பண்ண
போறேன்
?
யாருக்கும்
பாரமா
இல்லாம
சீக்கிரமா
போய்ச்
சேர்ந்தா
போதும்
.”
வித்யா
புலம்ப
…
அதை
கேட்டு
மீராவும்
,
ரஞ்சனாவும்
திடுக்கிட்டனர்
.
“
ஏன்
அத்தை
இன்னைக்கு
ஒரு
மாதிரி
பேசுறீங்க
?
யாரு
என்ன
செஞ்சா
?”
ரஞ்சனா
கேட்க
…
வித்யா
பதில்
சொல்லாமல்
வெளியே
சென்றுவிட்டார்
.
மீராவுக்கு
அங்கே
இருப்பதா
…
இல்லை
போவதா
…
என்று
ஒன்றும்
புரியவில்லை
.
எல்லோருக்கும்
மாலை
காபி
கொடுத்ததும்
,
ரஞ்சனா
இரவுக்குச்
சமைக்க
…
மீரா
அவளுக்கு
உதவிக்
கொண்டிருந்தாள்
.
வித்யா
அவர்
அறையில்
சென்று
படுத்து
விட்டார்
.
மீராவும்
வேலை
முடிந்ததும்
ரஞ்சனாவிடம்
சொல்லிக்கொண்டு
கிளம்பிவிட்டாள்
.
இரவு
ரஞ்சனாவும்
,
பெரியம்மாவும்
சேர்ந்து
வந்திருந்த
உறவினர்களுக்குப்
பரிமாறினார்கள்
.
ரஞ்சனாவும்
சரி
,
மீராவும்
சரி
,
இன்று
வித்யா
நடந்து
கொண்டதை
பற்றி
ஆதியிடமோ
,
அர்ஜுனிடமோ
மூச்சு
விடவில்லை
.
வித்யா
மறுநாள்
சற்று
தெளிந்து
இருந்தார்
.
ஆனால்
முன்பு
மாதிரி
கலகலப்பாக
இருக்கவில்லை
,
ஏன்
சற்று
அழுத்தமாக
இருந்தார்
என்று
கூடச்
சொல்லலாம்
.
அது
வீட்டு
ஆண்களுக்குத்
தெரியவில்லை
.
அவர்கள்
அனைவரும்
கல்யாண
வேலைகளில்
பிஸியாக
இருந்ததால்
,
வித்யாவை
கவனிக்கவில்லை
.
ஆனால்
வீட்டில்
இருந்த
ரஞ்சனாவுக்கும்
,
ஆருவுக்கும்
புரிந்தது
.
ரஞ்சனா
ஆதியிடம்
சொன்னால்
…
எங்கே
தன்னை
மாமியார்
பற்றிக்
குறை
சொல்வதாக
நினைத்து
விடுவானோ
என்று
சொல்ல
தயங்கினாள்
.
ஆரு
அம்மாவுக்குத்
தங்கள்
காதல்
தெரிந்துவிட்டதோ
…
அதனால்
தான்
கோபமாக
இருக்கிறார்களோ
என்று
நினைத்து
பயந்து
கொண்டிருந்தாள்
.
மீரா
எப்பவும்
போல்
வந்து
போய்க்
கொண்டிருந்தாள்
.
அவளிடமும்
வித்யா
சரியாக
முகம்
கொடுத்து
பேசவில்லை
.
அவளும்
ஏன்
இப்படி
இருக்காங்க
?
என்று
குழம்பி
போய்த்
தான்
இருந்தாள்
.
திருமணத்திற்கு
முன்
தினம்
மாலை
அனைவரும்
வரவேற்புக்கு
தயார்
ஆகினர்
.
மீரா
ஆருவுடனே
இருந்தாள்
.
பார்லரில்
இருந்து
ஆள்
வந்து
ஆருவிற்கு
அலங்காரம்
செய்தனர்
.
மீராவும்
அந்த
அறையிலேயே
தலைவாரி
,
புடவை
மாற்றிக்
கொண்டாள்
.
வரவேற்பு
நல்லபடியாக
முடிந்தது
.
அன்று
இரவு
ஆருவும்
,
மீராவும்
ஒரே
அறையில்
தங்கினர்
.
அப்போது
ஆரு
, “
ஏன்
மீரா
அம்மா
டல்லாவே
இருக்காங்க
,
என்
மேல
கோபமா
இருக்காங்களா
…
என்னால
சந்தோஷமாவே
இருக்க
முடியல
…”
என்று
சொல்லி
வருந்த
…
“
நீ
இத்தனை
வருஷம்
அவங்களோட
இருந்துட்ட
இல்லையா
,
இனி
வேற
வீட்டுக்கு
போய்டுவ
…
அதை
நினைச்சு
வந்த
வருத்தமா
இருக்கும்
.
எல்லாம்
சரி
ஆகிடும்
கவலைபடாதே
.”
என்று
ஆருவை
மீரா
தேற்ற
…
ஆருவும்
சரி
என்று
தூங்கினாள்
.
மறு
நாள்
காலை
சீக்கிரம்
எழுந்து
ஆரு
தயார்
ஆக
…
மீரா
அவளுக்கு
உதவி
கொண்டிருந்தாள்
.
மணப்பெண்
அலங்காரத்தில்
ஆரு
ஜொலிக்க
…
மீரா
அர்ஜுன்
வாங்கிக்
கொடுத்த
புடவையில்
இருந்த
வெள்ளி
ஜரிகைக்குப்
பொருத்தமாக
,
வைர
நெக்லஸ்
மற்றும்
பெரிய
வைர
காதணியும்
போட்டிருந்தாள்
.
மீரா
மிகவும்
அழகாக
இருந்தாள்
என்று
சொல்லவும்
வேண்டுமா
…
வித்யா
அவர்கள்
இருந்த
அறைக்குள்
வந்த
போது
,
ஆரு
மீராவிடம்
அவள்
வைர
நெக்லஸ்
பற்றிப்
புகழ்ந்து
கொண்டிருந்தாள்
. “
அழகா
இருக்கு
மீரா
…
எனக்கு
எங்க
அம்மா
ஒரு
சின்ன
வைர
கம்மல்
வாங்கினாங்க
,
அதுவே
அறுபது
ஆயிரம்
ஆகிடுச்சு
.
இது
பெருசா
இருக்கே
ரொம்ப
விலையா
இருக்கும்
இல்ல
…
நீ
என்னமா
பணக்காரி
….
எங்க
அப்பா
தங்கத்துல
எனக்கு
நகை
போட்டா
….
உங்க
அப்பா
உனக்கு
வைரத்துல
போடுவாரு
.”
அவள்
கிண்டல்
செய்ய
…
அவள்
சொல்வதைப்
புன்னகையுடன்
கேட்ட
மீரா
, “
நீ
வேணா
இதைப்
போட்டுக்கோ
,
நான்
உன்னோட
தங்க
நெக்லஸ்
போட்டுகிறேன்
.”
என்றாள்
.
“
அதெல்லாம்
வேண்டாம்
.
அவங்கவங்களுக்கு
உரியதை
தான்
போட்டுக்கணும்
.”
வித்யா
சொல்ல
…
ஆருவும்
,
மீராவும்
அப்போது
தான்
அவரைக்
கவனித்தனர்
.
ஆருவின்
அருகே
வந்த
வித்யா
,
அவள்
கன்னத்தை
வழித்து
, “
அழகா
இருக்க
டா
ராஜாத்தி
.”
என்று
அவள்
நெற்றியில்
முத்தமிட
….
ஆரு
அவள்
அம்மாவை
கட்டிக்
கொண்டவள்
, “
நாலு
நாளா
என்னைப்
போட்டு
டென்ஷன்
பண்ணிடீங்க
,
ஏன்
மா
அப்படி
இருந்தீங்க
?”
என்று
கொஞ்சலாகக்
கேட்க
….
“
நீ
எங்களை
விட்டு
வேற
வீட்டுக்கு
போற
இல்ல
அதனால
தான்
.”
என்றார்
. “
மீராவும்
அப்படித்
தான்
சொன்னா
…”
என்று
சொல்லி
ஆரு
மீராவை
பார்த்து
சிரிக்க
…
மீராவும்
புன்னகைத்தாள்
.
வித்யா
“
சரி
சீக்கிரம்
ரெடியாகு
.”
என்று
சொல்லிவிட்டு
சென்றார்
.
ஆரு
சந்தோஷமாக
மணமேடைக்குச்
சென்றாள்
.
ஆருவை
சூர்யாவின்
அருகே
உட்கார
வைத்துவிட்டு
,
மீராவும்
,
ரஞ்சனாவும்
அவளுக்குப்
பின்னே
நின்றனர்
.
ஆதி
வந்து
ரஞ்சனாவின்
அருகே
நிற்க
,
அர்ஜுன்
வந்து
மீராவின்
அருகே
நின்றான்
.
மீரா
அர்ஜுனை
பார்த்து
புன்னகைக்க
… “
இந்தப்
புடவை
வாங்கும்
போது
இருந்ததை
விட
…
இப்ப
நீ
கட்டியதும்
தான்
ரொம்ப
அழகா
இருக்கு
மீரா
.”
அர்ஜுன்
உருகினான்
.
ரஞ்சனா
அவள்
திருமணப்
புடவை
கட்டி
இருந்தாள்
.
அதைப்
பார்த்த
ஆதி
“
நம்ம
கல்யாணத்
அன்னைக்குப்
பார்த்த
மாதிரியே
இருக்க
ரஞ்சு
…”
என்று
வழிய
….
சூர்யா
அருவிடம்
“
கைல
பேப்பர்
இல்ல
…”
என்று
சொல்ல
…
ஆரு
எதுக்கு
என்று
புரியாமல்
பார்க்க
.
“
உன்
ரெண்டு
அண்ணனுங்க
பேசுற
வசனத்தை
நோட்
பண்ணி
வச்சிகிட்டா
…
அப்புறமா
யூஸ்
பண்ணிக்கலாம்
அதுக்குத்
தான்
.
ஒருத்தருக்குக்
கல்யாணம்
ஆகி
குழந்தை
இருக்கு
,
இன்னொருத்தனுக்கு
இன்னும்
கல்யாணமே
ஆகலை
….
ஆனா
இவங்க
பண்ற
ரொமான்ஸ்
தாங்க
முடியலை
….”
சூர்யா
புலம்ப
…
அதைக்
கேட்டு
ஆதியும்
,
அர்ஜுனும்
ஒரே
நேரத்தில்
பொறாமை
என்று
சொல்ல
…
மூன்று
ஜோடியும்
சிரித்தது
.
அதை
மேடையின்
கீழே
நின்று
கொண்டிருந்த
தினேஷ்
தனது
செல்லில்
படம்
எடுத்தான்
.
ஐயர்
, “
முஹுர்த்ததுக்கு
டைம்
ஆகிடுச்சு
,
பெரியவங்களை
எல்லாம்
மேடைக்கு
வர
சொல்லுங்க
.”
என்றதும்
,
இருவரின்
பெற்றோரும்
மேடைக்கு
வந்தனர்
.
அப்போது
வித்யாவிடம்
இருந்த
ஐஷு
இறங்கி
நடந்து
வந்தது
.
பட்டுப்
பாவாடை
அணிந்து
,
தலையில்
இருந்த
குடுமியில்
பூ
வைத்து
,
நகை
எல்லாம்
போட்டு
…
அழகாக
இருந்தது
.
அர்ஜுன்
ஐஷுவை
தூக்கி
கொண்டவன்
, “
உங்க
சித்தியை
விட
,
நீதான்
டா
சூப்பரா
இருக்க
…”
என்று
சொல்ல
.. “
அம்மாவுக்கும்
,
பொண்ணுக்கும்
சண்டை
மூட்டி
விடப்
பார்கறீங்களா
,
அது
நடக்காது
.
என்னோட
பொண்ணு
தான்
அழகு
.”
மீரா
ஐஷுவை
வாங்கிக்
கொஞ்ச
…
அதை
ஆதியும்
,
ரஞ்சனாவும்
சிரித்தபடி
பார்த்துக்
கொண்டிருந்தனர்
.
திருமணச்
சடங்குகள்
ஆரம்பித்ததும்
,
எல்லோரும்
அதைக்
கவனிக்க
…
குறித்த
முஹுர்த்தத்தில்
சூர்யா
,
ஆராதனாவின்
கழுத்தில்
தாலி
அணிவித்துத்
தன்
மனைவியாக
உலகுக்கு
அறிவித்தான்
.
திருமணத்திற்கு
வந்த
எல்லோரும்
அட்சதை
தூவி
மணமக்களை
வாழ்த்தினர்
.
மற்ற
சடங்குகள்
எல்லாம்
முடிந்ததும்
,
மணமக்களுக்கு
விளையாடல்
ஏற்பாடு
செய்திருந்தனர்
.
சூர்யா
ஆருவுக்கு
எல்லாவற்றிலும்
விட்டு
கொடுத்து
,
அவளை
ஜெயிக்க
வைக்க
… “
டேய்
ஒன்னுத்துளையாவது
ஜெய்
டா
,
மானம்
போகுது
.”
அர்ஜுன்
அவன்
அருகில்
குனிந்து
சொன்னான்
.
“
இந்த
விளையாட்டுல
ஜெயிக்கிறதா
முக்கியம்
,
வாழ்கையில
ஜெயிக்கணும்
.
இன்னைக்குதான்
கல்யாணம்
ஆகி
இருக்கு
.
இன்னைக்கே
அவளை
மூட்
அவுட்
ஆக்கணுமா
…
அவ
சந்தோஷமா
இருக்கட்டும்
.”
சூரியா
சொல்ல
… “
தேறிட்ட
டா
…”
என
அர்ஜுன்
நண்பனை
மெச்சிக்
கொண்டான்
.
ஆராதனா
சூர்யாவுடன்
புகுந்த
வீட்டிற்குச்
செல்லும்
போது
ஒரே
அழுகை
,
வித்யாவும்
அழுதார்
.
அர்ஜுன்
சென்று
தன்
அம்மாவை
தேற்ற
…
அவர்
அவனை
மெதுவாக
விலக்கிவிட்டு
தள்ளி
சென்று
நின்றார்
.
அதை
அர்ஜுன்
உணரவில்லை
,
அவன்
ஆருவை
சமாதானம்
செய்து
கொண்டிருந்தான்
.
ஆனால்
அதை
மீரா
கவனித்தாள்
.
அவள்
மனதில்
தங்களைப்
பற்றி
வித்யாவிற்குத்
தெரிந்துவிட்டதோ
என்று
தோன்றியது
.
அதனால்
தான்
இப்படி
இருக்கிறாரோ
என்று
நினைத்தவள்
,
அதை
அன்றே
அர்ஜுனிடம்
சொல்லி
இருந்தால்
…
பின்னே
வரப்போகும்
பெரிய
துன்பத்தைத்
தவிர்த்திருக்கலாம்
.
தங்கையின்
கல்யாண
வேலையில்
இருப்பவனை
…
எதாவது
சொல்லி
குழப்ப
வேண்டாம்
.
பிறகு
பார்த்துகொள்ளலாம்
என்று
நினைத்தாள்
.
வரப்போவது
என்ன
என்று
தெரியாமல்
.
Advertising
Advertising