ஏழு மிஸ்டுகாலா.? என பதறியவன்.. ‘போன் செய்திருந்திங்களாப்பா..? இப்போதான் பார்த்தேன்.. அம்மா.. பட்டு.. தாத்தாலாம் நல்லாயிருக்கங்கதானப்பா.?” என இரவு பதினொரு மணிக்கு கேட்டான் அதிரூபன்.
‘ரூபா.. ராமசாமி..” எனும்போதே.. ‘அவருக்கென்னப்பா.? திரும்பவும் அட்டாக் வந்துடுச்சா.?” என்றான்.
‘அட்டாக் இல்ல.. இன்னைக்கு ஏழுமணிக்கு இறந்துட்டார்.. அப்பா இன்னைக்கே கிளம்பனும்னு ரொம்ப கேட்டார்.. நைட்ல அங்க போய் என்ன பண்றது.? விடியகாலம் கிளம்பிடலாம்னு சொல்லி சமாதனப்படுத்தினேன்.. காஞ்சனாவும் ஆதிம்மாவும் அங்கதான் இருக்காங்களாம்..
அபிமன்யுவும் கர்ணனும் கூட இருக்காங்கதான்.. ஆனாலும் அந்த மாதவிம்மா அவங்களுக்கெல்லாம் அசராது.. காஞ்சனாக்கு சொத்து கொடுத்ததுக்கு அன்னைக்கு காட்ட முடியாத கோபத்தை சமயம் பார்த்து வெளிப்படுத்தும்.. அன்னைக்கு உன்கிட்ட அடிவாங்குன கோபத்துல அந்த அரவிந்தன் வேற ஆதிம்மாகிட்ட வம்பு பண்றானோ என்னவே..? கொஞ்சம் கிளம்பி வரியா ரூபா.?” என்றார் கவலையாக.
‘சரிப்பா நீ பாரு.. நீ சென்னையில இருப்பன்னுதான் போன் செய்தேன்.. திடீர்ன்னு இப்படி ஆகும்னு யாருக்கு தெரியும்.? நான் பார்த்துக்கிறேன்..” என்றார்.
‘காலைல நேரமா கிளம்பிடுங்கப்பா..” என கவலையாக சொல்லி இணைப்பை துண்டித்த அதிரூபனிற்கு நிலைகொள்ளவில்லை மனம்.
அரவிந்தன் தண்ணியடித்து கலாட்டா செய்தால் என்ன செய்வது.? இவங்களை யாரு இப்பவே கிளம்பி போக சொன்னாங்க.? அந்த மாதவிம்மா இவங்களுக்கு பச்சதண்ணி கூட கொடுக்காதே.. அத்தை அவங்கப்பா துக்கத்துல இருந்தாலும், இவ எப்படி விடிய விடிய முழிச்சிட்டிருப்பா..? என்ற கவலையோடே டைரக்டரிடம் போனான்.
‘என்ன ரூபா.? படுக்கலயா.? காலைல நாலு மணிக்கு சூட் இருக்கு..”
‘சார்.. நெருங்கின ரிலேடிவ்ல ஒரு டெத் ஆகிடுச்சி.. நான் கிளம்பனும்..” என குரலிறங்கினாலும்.. போயாகவேண்டும் என்ற த்வணியில் கேட்டான்.
‘ரூபா.. ஒரே ஒரு சாட்தான் இருக்கு.. ரொம்ப நெருங்கின சொந்தமா.?” என்றார் வருத்தத்தோடு.
‘ஆமாம் சார் நெருங்கின சொந்தம்தான்.. நான் போகலன்னா பிரச்சனை செய்வாங்க.. கொஞ்சம் வில்லங்கம் பிடிச்சவங்க.. அப்பா தாத்தாவால சமாளிக்க முடியாது..” என்றான் கவலையாக.
‘ம்..” என யோசித்தவர்.. ‘காலைல நாலு மணிக்கு உன் பார்ட்டை முதல்ல முடிச்சிடலாம்.. சூட் முடிஞ்சதும் ஃபிளைட்ல கிளம்பிடு.. நான் ஏற்பாடு செய்யிறேன்..” என்றார்.
ம்.. ரூபனும் ஃபிளைட்டில் கிளம்பலாம் எனதான் முடிவெடுத்திருந்தான்.. ஆனால் ஆதிரைக்காக இப்பொழுதே கிளம்பலாம் என எண்ணினான்.. தற்போது டைரக்டர் தனக்காக இவ்வளவு சொல்லும்போது தாமும் அட்ஜஸ் செய்யவேண்டும் என வேறு வழியின்றி இருப்பிடம் சென்றான்.
படுத்தாலும் உறக்கமே வரவில்லை ரூபனிற்கு. டைரக்டர் கால் செய்யும் வரை விழித்தே இருந்தவன்.. அதன்பிறகு ரெடியாகி நடிக்க தயாரானான். ஒரு மணிநேரத்தில் முடிக்க வேண்டிய காட்சி.. இரண்டு மணிநேரம் இழுத்து ஒரு வழியாக ஆறரை மணிக்கு இவன் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிந்திருக்க.. ‘ரூபா.. உடம்பெல்லாம் ரொம்ப மண்ணாகிடுச்சி.. அவசரம்னு குளிக்காம கிளம்பிடாத.. இந்த மண் அரிக்க ஆரம்பிச்சிடும்.. எட்டு மணிக்குதான் ஃபிளைட்.. ரிலாக்சா கிளம்பு..” என அக்கறையாய் டைரக்டர் சொல்ல சரியென தலையசைத்து கிளம்பினான்.
—- —– ——
பதினொரு மணிக்கு ராமசாமி உடலை எடுக்க நேரம் குறித்திருக்க.. அவர்கள் பழக்க வழக்கப்படியான சாங்கியங்கள் துவங்க ஆரம்பித்தது.
காஞ்சனாவிடம்.. ‘எங்கப்பாக்கு எல்லாமும் நான்தான் செய்வேன்.. இந்த ஒன்றரை மாசமா படுத்த படுக்கையாத்தான் இருந்தார்.. சொத்து வாங்க ஆஸ்பத்திரிக்கு வந்தியே.. அதுக்கப்புறம் ஒரு நாள் வந்து பார்த்திருப்பியா.? இப்போ ஊர் ஜனங்க முன்னாடி பெரிய இவளாட்டம் வந்து முன்ன நிக்கிற..” என கவிதா உக்கிரமாய் ஆரம்பித்தாள்.
அதிரூபன் சொன்னது போல கேஸ் போட்டு மொத்த சொத்தையும் வாங்கிடுவார்களோ என மாதவிக்கு மாரியப்பன் கணேசன் மீது பயம்வர.. ‘இவங்க இரண்டு பேரும் லேசுபட்டவங்க இல்ல.. இன்னைக்கு அமைதியா இருந்துட்டு.. நாளபின்ன காஞ்சனாக்கு மனஉளைச்சல் கொடுத்தோம்னு சும்மாவே கேஸ் போட்டுட்டாங்கனா வம்பாகிடும்.. தேவையில்லாம பிரச்சனை வேணாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்கப்பாவை எடுத்ததும் அவங்க கிளம்பிடுவாங்க..” என மகளிற்கு எடுத்துரைத்தார் மாதவி.
‘அந்த ரூபன்தான் இல்லாத நேரத்திலதான் இவங்களை தட்டி வைக்க முடியும்.. இன்னைக்கு நடந்துக்கிறதுல இனி இந்த வீட்டுபக்கமே இவங்க வரக்கூடாது..” என மாதவிக்கு அடங்க மறுத்த கவிதா..
‘தாத்தாவின் உடல் எடுக்கப் போகிறார்கள் பேரன் பேத்தி சாங்கியம் செய்யனும்.. உன் அண்ணனை கூட்டிட்டு வா..” என கவிதா சொல்ல தற்போதுதான் அரவிந்தனை எழுப்பி அழைத்து வந்தாள் கனிகா.
நண்பர்களோடு தண்ணியடித்து தாத்தா இறந்த துக்கம் என சொந்தங்களிடையே வம்பளத்துக் கொண்டிருந்த அரவிந்தனை கனிகா தனியறையில் அடைத்து வைத்திருந்தாள். இரவு குடித்த மதுவின் போதை தெளியாமல் இருந்த நிலையில்.. காஞ்சனா ஆதிரையை கண்டதும் ‘இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க.?” என சீறினான் அரவிந்தன்.
அதிரூபன் லட்டரில் இல்லாததை சொல்லி மிரட்டினான் என அத்தை சொன்னது நினைவு வர.. மாதவியிடம்.. ‘உங்க பேரனை அமைதியா இருக்க சொல்லுங்க.. தேவையில்லாம கேஸ் போட வச்சி உங்களுக்கு நீங்களே குழிய தோண்டிக்காதிங்க..” என எச்சரித்தான் கர்ணன்.
அரவிந்தன்.. ‘அந்த அப்பார்ட்மன்ட்ல வர வாடகை பணத்தை வச்சி உங்க பரம்பரை பஞ்சத்தையே போக்கிடுவிங்க.. உனக்கும் வேற வழியில்ல.. உங்கத்தைக்கு கூஜா தூக்கினாதான ராஜா மாதிரி வாழ முடியும்..” என படு நக்கலாய் கேட்டான் கர்ணனை.
‘யாரை பார்த்து என்னடா சொன்ன.?” என அபிமன்யுவும் கர்ணனும் அரவிந்தனை நெருங்க.. அரவிந்தனின் நண்பர் பட்டாளம் இவர்களை சூழ்ந்துகொள்ள பேச்சு வார்த்தை கைகலப்பாக மாறியது.
காலை பத்து மணியாகியிருக்க.. குழந்தைக்கு அதற்கு மேல் இவ்விடத்தில் இருக்க முடியவில்லை போலும்.. கால் மணிநேரம் முன்னே சின்னதாய் சிணுங்க ஆரம்பித்தவள் தற்போது நன்றாக அழ ஆரம்பித்தாள். ‘இல்லடா.. இல்லடா..” என சற்று தூரம் தள்ளி சென்று சமாளித்துக்கொண்டிருந்த கணேசனிற்கு இவர்கள் சண்டை தெரியவில்லை.
பரிதவித்துப்போன மாரியப்பன் கணேசனிற்கு அழைக்க.. ‘அப்பா பட்டு ரொம்ப அழறா.. நான் இங்க பக்கத்து காட்ல பூச்செடியை காட்டிட்டு இருக்கேன்..” என்றார் கணேசன். மாரியப்பன் நடப்பை சொல்ல.. அச்சோ என பதறி ராமசாமி இடத்திற்கு வந்த கணேசன்.. ‘அப்பா பட்டுக்கு தூக்கம் வந்துடுச்சி.. அப்படி மரத்தடியில உக்கார்ந்து தட்டிகொடுங்க.. தூங்கிடுவா..” என குழந்தையை மாரியப்பனிடம் கொடுத்தனுப்பி அரவிந்தனிடம் வந்தார் கணேசன்.
நம்மால் கர்ணனிற்கு அவமானமாகிவிட்டதே என காஞ்சனா வேதனையடைய.. ‘செத்தவங்க வரவா போறாங்க.. வாம்மா போலாம்..” என ஆதிரையும் அழ ஆரம்பித்தாள்.
ம்.. எத்தனை வறுமையிருந்தாலும் ஆதிரையின் அப்பா வழி சொந்தங்களுக்கிடையே எப்பொழுதும் பணப்பிரச்சனையோ சொத்து பிரச்சனையோ வந்ததில்லை.. அவரவர் சம்பாத்தியத்தியத்திற்கேற்ப திட்டமிடலோடு சத்தமின்றி வாழ்பவர்கள்..
இப்படி கூச்சல் எல்லாம் தங்களால்தான்.. நம் சுயநலத்திற்காக மாமா அபியை அழைத்து வந்திருக்க கூடாதென தற்போது பெரிதாய் வருந்தினாள் ஆதிரை.
கணேசன் அரவிந்தன் அபிமன்யுவை விலக்கப்போக.. அரவிந்தன்.. ‘இத்தனை வருசமா பேசாம இருந்தவங்க.. இப்போ சொத்து வந்ததும் ஆதிபுள்ளைய இவங்க பைனுக்கு வளைச்சி போட பார்க்குறான்.. நீங்களும் அவங்க வசதியை பார்த்து பல்லை இளிச்சிட்டு உறவாடுறிங்க.. த்தூ.. இதெல்லாம் ஒரு பொழப்பா..?” என அபிமன்யுவை மீண்டும் வெறுப்பேற்றினான் அரவிந்தன்.
‘அரவிந்தா.. அமைதியா போய்டு.. இல்ல சோத்துக்கு பிச்சையெடுக்க வச்சிடுவான் என் மகன்..” என முகம் சிவக்க எச்சரித்தார் கணேசன்..
மாதவியும் அரவிந்தனை எச்சரித்தார்தான்.. ஆனால் யாருக்கும் அடங்காமல்.. ‘இந்த இடத்தை விட்டு இவங்க போனாத்தான் என் தாத்தா பொணத்தை எடுக்க விடுவேன்..” என சூளுரைத்து கொண்டிருந்தான் அரவிந்தன்.
அரவிந்தனின் கேசின்போது இங்குள்ள இன்பெக்டர் மகனிற்கு பரிட்சையமாகியிருப்பதால்.. ரூபனிற்கு ஆழைத்து இன்ஸ்பெக்டரை வரவழைக்க முடியுமா என கணேசன் அதிரூபனிற்கு அழைத்தார்.
‘நான் வந்துட்டேன்ப்பா..” என டாக்சியிலிருந்து இறங்கினான் அதிரூபன்.
தகுந்த நேரத்தில் மகனை கண்டதும் மகிழ்ச்சியடைந்த கணேசன்.. நடந்ததை வேகமாக விளக்கிகொண்டிருக்க.. கவனம் கணேசன் சொல்வதில் இருந்தாலும் அதிரூபனின் பார்வை கர்ணன் அபிமன்யு அரவிந்தன் வாக்குவாதம் செய்வதில் இருந்தது.
அரவிந்தன் அபிமன்யுவை அடிக்க எத்தணிக்க.. ‘ப்பா.. இருங்க.” என மின்னலாய் பாய்ந்தான் அரவிந்தனிடம். ஒற்றை கையில் அரவிந்தனை பிடித்திழுத்து மற்றொரு கையை பின்னே வளைத்து முறுக்கிக்கொள்ள அரவிந்தனால் திமிற முடியவில்லை.. யார் தன்னை பிடித்தார்கள் என்றும் புரியாமல் அரவிந்தன் திமிறிக்கொண்டிருக்க.. அரவிந்தன் பிடிபட்டதால் அவனின் நண்பர்கள் அதிரூபனின் பலம் தெரியாமல் அவனை தாக்க எத்தணிக்கவும்..
அரவிந்தனின் கையை விடுத்து.. இடுப்பில் உதைக்கவே ஒரே உதையில் சுருண்டு விழுந்தான் கீழே. பிறகு தன்னருகே வந்த அரவிந்தனின் நண்பர்களையும் கடுமையாய் தாக்கினான்.. உதை வாங்கியதில் கண்ணை கட்டியது அரவிந்தனிற்கு. நண்பர்களின் அலறலில் யாரிவன் இப்படி அடிக்கிறான் என முயன்று திரும்பி பார்க்க.. அங்கே வெறித்தனமாய் அடித்துகொண்டிருந்த அதிரூபனை பார்த்ததும் அரவிந்தனிற்கு குப்பென தெளிந்தது போதை.
‘டேய்.. ஓடிடுங்கடா..” என அரவிந்தன் கத்தவே வலிதாள முடியாமல் ஆளுக்கொரு பக்கமாய் ஓடினார்கள்.
அரவிந்தனிடம் வந்த அதிரூபன் அவனின் சட்டையை பிடித்து தூக்கி நிறுத்த.. ‘என்னைக்கும் வராதவங்க சாவுக்கு மட்டும் சாங்கியம் வந்திருக்காங்க..” என பாவமாய் நியாயம் கேட்டான்.
‘அவங்கப்பா சாவுக்கு அவங்க வந்திருக்காங்க.. வரவேணாம்னு சொல்ல நீ யாருடா.?” என முறைத்தவாறு மீண்டும் கையை ஓங்க.. ‘வேணாம்.. வேணாம்..” என மாதவி பதைப்பாய் சொல்ல..
‘இவ்வளோ நேரம் இவனை பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டிந்திங்க..?” என முறைத்தான் மாதவியை.
‘நான் தடுத்தாலும் அவன் கேக்கல..” என பயத்தோடு மாதவி சொல்ல..’அப்படிபட்ட வீரனாடா நீ..?” என கன்னத்தில் அறைந்தான் அரவிந்தனை.
அழுதழுது ஓய்ந்து தற்போதுதான் கண்ணயர்ந்த அதிரூபனின் பட்டு.. தந்தையின் குரலில் கண்விழித்து.. மாரியப்பன் மடியிலிருந்து.. ‘ப்பா..” என கீழிறங்கினாள் சந்தோசத்தோடு.
‘பட்டுமா..” என குழந்தையை தூக்கியவன்.. ‘உங்க பேரனை அப்புறம் கவனிச்சிக்கிறேன்.. இப்போ ஆக வேண்டியதை பாருங்க..” என மாதவிக்கு கட்டளையிட்டு தந்தையிடம் சென்ற அதிரூபன்.. ‘பட்டுமாவை எதுக்குப்பா கூட்டிட்டு வந்திங்க.?” என்றான்.
‘உங்கம்மாக்கு காய்ச்சல் ரூபா.. குழந்தையை அவகிட்ட விடவேணாம்னு டாக்டர் சொன்னார்.. அதான் கூட்டிட்டு வந்துட்டேன்.. உங்கம்மா இட்லி கொடுத்துவிட்டா அதையும் சாப்பிடல.. பசியோட இங்க சூழலும் பிடிக்கலபோல.. ரொம்ப அழுதுட்டா..” என்றார் கணேசன்.
‘சரிப்பா.. பட்டுவை நான் பார்த்துக்கிறேன்.. நீங்க போய் காஞ்சனாத்தை முறைப்படி என்ன செய்யனுமோ அதை செய்ய சொல்லுங்க.. அரவிந்தன் மாதவிம்மா இனி எதுவும் சொல்லமாட்டாங்க..” என்றான்.
கணேசன் செல்லவும்.. கர்ணன் அபிமன்யு தன்னைதான் பார்க்கிறார்கள் என தெரிந்து தானும் சில நொடி மூவரையும் ஆழ்ந்து பார்த்தவன் பின்னே குழந்தையிடம் பேச ஆரம்பித்தான்.
டேக்சியிலிருந்து இறங்கியதும் ஆதிரையைதான் முதலில் பார்த்தான். தன்னை கண்டதும் முதலில் அதிர்ச்சி.. தந்தையிடம் பேசும்போது இனி நான் பார்த்துப்பேன் என்ற ஆசுவாசம்.. அரவிந்தனை அடிக்கும்போது நிம்மதியோடு பார்த்தது.. பட்டுவை தூக்கியதும் இயலாமையோடு கண்ணீர் என ஆதிரையின் அனைத்தும் கவனித்து கொண்டேதான் இருந்தான்.
தற்போதும் கண்ணிமைக்காமல் கண்ணீரோடு தன்னை பார்த்து கொண்டிருப்பதையும் அறிந்துதான் இருந்தான். ஆனால் அவளறியுமாறு இன்னும் ஆதிரையை பார்க்கவில்லை. பிடிக்கவில்லை என சொல்பளிடம் என்ன பேசுவது.? பிடிக்காதவன இப்படி பார்க்க தோணுமான்னு யோசிடி என மனதில் திட்டியபடி அவனின் பட்டுவை கொஞ்சிக்கொண்டிருந்தான்.