Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 35 1
Post Views:
1,408
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
35
ஆராதனா
அவள்
புகுந்த
வீட்டிற்குச்
சென்ற
போது
….
அவளுடன்
ஆதி
,
ரஞ்சனா
மற்றும்
அவளின்
பெரியம்மா
,
பெரியப்பா
சென்றனர்
.
அவர்கள்
சென்றதும்
மண்டபத்தைக்
காலி
செய்யும்
பொருட்டு
,
வந்திருந்த
பரிசு
பொருட்களை
எல்லாம்
வேனில்
அடுக்கி
கொண்டிருந்தனர்
.
மீரா
அவளும்
,
ஆராதனாவும்
தங்கியிருந்த
அறையில்
எல்லாவற்றையும்
எடுத்து
வைத்துக்
கொண்டிருந்தாள்
.
அப்போது
உள்ளே
வந்த
அர்ஜுன்
, “
மீரா
..
எல்லாம்
எடுத்துகிட்டியா
?”
என்று
கேட்க
… “
எடுத்தாச்சு
அர்ஜுன்
, “
இது
ஆருவோடது
.”
என்று
மீரா
ஒரு
பெரிய
பையை
அவனிடம்
கொடுத்தாள்
.
அர்ஜுன்
அந்தப்
பையோடு
வெளியே
செல்ல
முயல
…
மீரா
மெதுவாக
, “
அர்ஜுன்
…”
என்று
அழைத்தாள்
.
அர்ஜுன்
நின்று
திரும்பி
பார்க்க
…
மீரா
அவனை
வா
என்பது
போல்
தலை
அசைக்க
…
அர்ஜுன்
பையைக்
கதவின்
அருகே
வைத்துவிட்டு
அவளருகில்
வந்தான்
.
மீரா
வேகமாகச்
சென்று
அர்ஜுனின்
மார்பில்
சாய்ந்து
கொள்ள
…
அர்ஜுன்
அவளை
இறுக
அனைத்துக்
கொண்டான்
.
இருவரும்
சில
நொடிகள்
அப்படியே
இருந்தனர்
.
அர்ஜுன்
அவளை
நிமிர்த்தி
…
அவள்
முகம்
பார்த்தவன்
, “
தலை
கலைஞ்சு
,
கண்
மை
எல்லாம்
வழிஞ்சு
இருந்தாலும்
…
பார்க்க
அழகா
இருக்கடி
ராட்சஸி
.”
என்று
சொல்லி
,
அவள்
இதழில்
அழுத்தமாக
முத்தம்
பதித்துவிட்டு
விலகி
சென்றான்
.
அர்ஜுன்
ஆருவின்
பையோடு
வாசலுக்குச்
செல்ல
…
மீரா
அவள்
பையோடு
அவன்
பின்னே
சென்றாள்
.
இவர்கள்
வாசலுக்கு
வரும்
போது
..
வித்யா
வெளியில்
நின்று
கொண்டிருந்தார்
.
“
உங்களுக்கு
அந்த
வண்டியில
இடம்
இல்லையா
மா
?”
என்ற
அர்ஜுன்
“
வாங்க
,
நான்
உங்களைப்
பைக்ல
கொண்டு
போய்
விடுறேன்
.”
என்றான்
.
“
நான்
ஆன்டிய
வீட்ல
விட்டுட்டு
,
அப்படியே
எங்க
வீட்டுக்கு
போறேன்
.”
மீரா
சொல்ல
…
வித்யாவும்
மீராவுடன்
செல்கிறேன்
என்றார்
.
அவர்கள்
கடை
யில்
வேலை
செய்பவர்கள்
எல்லோரும்
சாப்பிட்டு
கொண்டிருந்தனர்
.
அதோடு
கணேசனுக்கும்
,
அர்ஜுனுக்கும்
இன்னும்
மண்டபத்தில்
வேலை
இருந்ததால்
அவர்கள்
அங்கேயே
இருந்தனர்
.
மீரா
இத்தனை
நாள்
கோபமாக
இருந்த
வித்யா
தன்னோடு
வருவதாகச்
சொன்னதும்
,
மகிழ்ச்சியுடன்
அவரை
அழைத்துக்
கொண்டு
தன்
காருக்கு
சென்றாள்
.
அர்ஜுன்
ஆருவின்
பையைக்
கொண்டு
வந்து
,
காரின்
பின்
சீட்டில்
வைக்க
…
வித்யா
முன்
பக்கம்
மீராவின்
அருகே
உட்கார்ந்திருந்தார்
.
மீரா
அர்ஜுனை
பார்த்து
புன்னகைத்துவிட்டு
காரை
எடுத்தாள்
.
மீரா
காரை
ஓட்டி
கொண்டிருக்க
…
வித்யா
அமைதியாக
வந்தார்
.
மீரா
ஏன்
ஆன்டி
இப்படி
இருக்காங்க
என்று
நினைத்துக்
கொண்டே
காரை
ஓட்டினாள்
.
கார்
பெசன்ட்
நகர்
பீச்
வழியாகச்
சென்ற
போது
,
வித்யா
மீராவிடம்
காரை
அங்கே
நிறுத்தும்படி
சொன்னார்
.
மணி
அப்போது
மூன்று
.
இந்த
நேரத்தில்
…
அதுவும்
வெயிலில்
…
எதற்கு
என்று
புரியாமல்
மீரா
காரை
நிறுத்த
…
வித்யா
இறங்கி
கடலை
நோக்கி
சென்றார்
.
மீராவும்
அவர்
பின்னே
சென்றாள்
.
அவளுக்கு
இப்போது
அவர்
தன்னிடம்
எதோ
பேச
போகிறார்
என்று
நன்றாகப்
புரிந்தது
.
இருவரும்
கடல்
அலையைப்
பார்த்தபடி
…
கரையோரமாக
நின்றனர்
.
சிறிது
நேரம்
சென்று
வித்யாவே
பேச்சை
ஆரம்பித்தார்
.
“
உனக்கு
அர்ஜுனை
எப்போது
இருந்து
தெரியும்
?”
வித்யாவின்
கேள்வியில்
திடுகிட்ட
மீரா
சமாளித்துக்
கொண்டு
, “
நான்
காலேஜ்
சேர்ந்த
ஒரு
வாரத்திலேயே
தெரியும்
.”
என்றாள்
.
“
அவனுக்கு
உன்னை
அப்பவே
தெரியுமா
?”
வித்யா
ஆச்சர்யமாகக்
கேட்க
“
இல்லை
….
அவங்களுக்கு
என்னை
நான்
ரெண்டாவது
வருஷம்
படிக்கும்
போது
தான்
தெரியும்
.”
“
அர்ஜுனா
உன்கிட்ட
வந்து
பேசினானா
…”
வித்யா
அடுத்தக்
கேள்வியைக்
கேட்க
…
மீரா
இல்லை
என்று
தலை
அசைத்தாள்
.
“
அப்ப
அவனா
உன்னைத்
தேடி
வரலை
இல்லையா
…”
வித்யா
சொல்ல
…
மீரா
அவர்
சொன்னதைக்
கேட்டு
அதிர்ந்தாள்
.
அவளது
முகத்தைப்
பார்த்த
வித்யா
, “
நான்
நேரடியாவே
விஷயத்துக்கு
வரேன்
.”
என்றவர்
,
“
எங்க
குடும்பத்துக்கு
இந்தக்
காதல்
கல்யாணம்
எல்லாம்
ஒத்து
வராது
மீரா
….
எனக்கு
தெரியும்
நீயும்
,
அர்ஜுனும்
விரும்புறது
.
கல்யாணம்
வெறும்
ரெண்டு
பேர
மட்டும்
சேர்த்து
வைக்கிறது
இல்லை
…
ரெண்டு
குடும்பம்
,
அவங்க
உறவுகள்
எல்லாம்
சேர்றது
தான்
.
நாம
ரெண்டு
பேர்
குடும்பமும்
வேற
வேற
இனத்தைச்
சேர்ந்தவங்க
.
உங்களுக்கு
ஒரு
வழக்கம்
இருக்கும்
,
எங்களுக்கு
வேற
மாதிரி
இருக்கும்
.”
“
ஆன்டி
,
என்னால
உங்களுக்கு
எந்தப்
பிரச்சனையும்
வராது
.
நான்
அர்ஜுனுக்காக
இதைக்
கூடச்
செய்ய
மாட்டேனா
…
கல்யாணத்துக்கு
அப்புறம்
நான்
உங்க
வழக்கபடியே
இருந்துக்கிறேன்
.
எனக்கு
ஒன்னும்
பிரச்சனை
இல்லை
.”
“
நீ
இப்ப
இப்படித்
தான்
மீரா
சொல்வ
…
ஆனா
எதோ
ஒரு
நாள்
அட்ஜஸ்ட்
பண்ண
முடியும்
,
வாழ்க்கை
முழுக்க
முடியுமா
?
அதோட
நீ
வசதியான
வீட்டு
பொண்ணு
,
நீ
எப்படி
எங்க
வீட்ல
வந்து
இருப்ப
?
நாங்களும்
வசதியானவங்க
தான்
,
இல்லைன்னு
சொல்லலை
….
ஆனா
உங்களவுக்கு
இல்லை
.”
“
இன்னைக்குக்
காலையில
கல்யாண
மண்டபத்தில
நடந்தது
உனக்கே
தெரியும்
.
ஆரு
உன்னோட
வைர
நெக்லஸ்
பார்த்து
ஆசைபட்டா
…
நீ
எங்க
வீட்டுக்கு
மருமகளா
வந்து
,
இந்த
மாதிரி
வைர
நகைகள்
போடும்
போது
…
அது
ஆருவுக்கும்
,
ரஞ்சனாவுக்கும்
ஆசையைத்
தூண்டாதா
…
அதனால
வீணா
குடும்பத்துக்குள்ள
பிரச்சனை
வரும்
.
அதனால
நாங்க
எங்களுக்கு
ஏத்த
இடத்தில
சம்பந்தம்
பண்றது
தான்
நல்லது
.”
என்றார்
முடிவாக
.
“
ஆன்டி
,
இது
ரொம்பச்
சின்ன
விஷயம்
.
நான்
எங்க
அப்பாட்ட
எனக்கு
வைர
நகைகள்
வேண்டாம்னு
சொல்லிடுறேன்
.”
மீரா
சொல்ல
…
அவளையே
சிறிது
நேரம்
பார்த்த
வித்யா
, “
மீரா
உனக்கே
உங்க
அம்மாவை
பத்தி
தெரியும்
,
நீயும்
உங்க
அம்மா
மாதிரி
நாளைக்குச்
செய்ய
மாட்டேன்னு
என்ன
நிச்சயம்
?
எங்களுக்கு
இந்த
டைவர்ஸ்
எல்லாம்
பெரிய
விஷயம்
.
வேண்டாம்
விட்டுடு
.”
என்றார்
.
அவர்
சொன்னதைக்
கேட்டு
அதிர்ந்த
மீரா
,”
எங்க
அம்மா
அப்படிப்
பண்ணா
…
நானும்
அப்படித்
தான்
இருப்பேன்னு
எந்தக்
கட்டாயமும்
இல்லை
.
நான்
அர்ஜுனை
பிடிச்சு
வச்சிருக்கலை
விட்டுட
,
அர்ஜுன்
என்னோட
உயிர்
…
அவங்களுக்கும்
நான்
அப்படித்
தான்
.”
என்றாள்
உறுதியாக
.
வித்யா
மீராவிடம்
இந்த
நிமிர்வை
எதிர்பார்க்கவில்லை
,
அவர்
சொன்னால்
மீரா
கேட்டு
விலகி
விடுவாள்
என்று
நினைத்தார்
. ”
நீ
சொல்ற
…
நீ
என்
உயிர்
எல்லாம்
சினிமாவுக்குத்
தான்
ஒத்துவரும்
வாழ்க்கைக்கு
இல்லை
…
நீங்க
ரெண்டு
பேரும்
ஒருத்தரை
,
ஒருத்தர்
பார்க்காம
,
பேசாம
இருந்தா
…
இந்தக்
காதல்
எல்லாம்
காணாம
போய்டும்
.”
என்றார்
வித்யா
நக்கலாக
…
“
நானும்
,
அர்ஜுனும்
ஒருத்தரை
ஒருத்தர்
சந்திக்காம
இருக்கோம்
,
அப்பவும்
நாங்க
மாறாம
இருந்தா
…
நீ
ஒத்துப்பீங்களா
எங்க
காதல்
உண்மையானதுன்னு
.”
மீரா
சவால்
விட
…..
“
அப்ப
நீ
அர்ஜுனை
மறக்க
மாட்ட
….
மீரா
,
நீ
ரொம்ப
நல்ல
பொண்ணு
,
நான்
இல்லைன்னு
சொல்லலை
.
ஆனா
…
எங்க
குடும்பத்துக்கு
நீ
ஒத்து
வர
மாட்டேன்னு
தான்
சொல்றேன்
.
புரிஞ்சிக்கோ
,
நீயும்
எனக்கு
ஆரு
மாதிரி
தான்
.
நீ
வேற
யாரையாவது
கல்யாணம்
பண்ணிக்கிட்டு
சந்தோஷமா
இரு
.”
“
ஆன்டி
,
என்னை
அர்ஜுனை
விட்டு
விலகுன்னு
கேட்க
உங்களுக்கு
உரிமை
இருக்கு
.
ஆனா
நான்
வேற
யாரையோ
கல்யாணம்
பண்ணிக்கணும்னு
சொல்ல
உங்களுக்கு
உரிமை
இல்லை
.
அதோட
அர்ஜுனை
என்னால
மறக்க
முடியாது
.”
“
இப்ப
நீ
முடிவா
என்ன
சொல்ற
மீரா
?
அர்ஜுனை
கல்யாணம்
பண்ணிக்கிட்டு
,
எங்க
குடும்பத்தைப்
பிரிக்கப்
போற
அது
தான
….”
வித்யா
வீம்பாகக்
கேட்க
…
அது
மீராவின்
மனதை
காயப்படுத்தியது
.
“
இல்லை
….
நான்
உங்க
குடும்பத்தைப்
பிரிக்க
மாட்டேன்
.
அதே
நேரத்தில
அர்ஜுனையும்
மறக்க
மாட்டேன்
.
நானா
அவங்களைத்
தேடியும்
வர
மாட்டேன்
.
உங்களால
முடிஞ்சா
உங்க
பையன்
மனசை
மாத்தி
வேற
பொண்ணுக்குக்
கல்யாணம்
செஞ்சு
வைங்க
…
அதை
நான்
தடுக்கவும்
மாட்டேன்
.”
“
முடியாதுன்னு
நினைக்கிறியா
?
அர்ஜுன்
என்
பேச்சை
மீற
மாட்டான்
.
என்
சம்மதம்
இல்லாம
உன்னைக்
கல்யாணமும்
செய்ய
மாட்டான்
.”
“
உங்க
சம்மதம்
இல்லாம
நானும்
அர்ஜுனை
கல்யாணம்
செஞ்சுப்பேன்னு
சொல்லலை
…..
எங்க
கல்யாணம்
உங்க
சம்மதத்தோட
தான்
நடக்கும்
.
முடிஞ்சா
…
உங்க
பையனுக்கு
வேற
பொண்ணோட
கல்யாணம்
செஞ்சு
வைங்கன்னு
தான்
சொல்றேன்
.”
என்ற
மீரா
திரும்பி
காரை
நோக்கி
நடக்க
…
வித்யாவும்
அவள்
பின்னே
சென்றார்
.
காரின்
அருகே
வந்ததும்
வித்யா
, “
நான்
ஆட்டோல
போய்கிறேன்
.”
என்று
சொல்லி
ஆட்டோவை
அழைக்க
…
மீரா
காரின்
பின்புறம்
இருந்த
ஆருவின்
பையை
எடுத்து
கொடுத்தாள்
.
வித்யா
ஆட்டோவில்
ஏறிச்
சென்றுவிட்டார்
.
மீரா
வீட்டுக்குச்
செல்லாமல்
அங்கிருக்கும்
அஷ்டலக்ஷ்மி
கோவிலுக்குச்
சென்றாள்
.
எல்லாச்
சந்நிதியிலும்
நின்று
வணங்கியவள்
,
அன்று
அர்ஜுன்
அவள்
கழுத்தில்
செயின்
போட்டு
விட்ட
இடத்திற்குச்
சென்று
அமர்ந்தாள்
.
அதுவரை
அடக்கி
வைத்திருந்த
அழுகை
வர
…
நான்
என்ன
தப்பு
செஞ்சேன்
?
என்னை
ஏன்
வேண்டாம்னு
சொல்லிட்டாங்க
என்று
நினைத்து
அழுதாள்
.
மீரா
சிறிது
நேரம்
அழுதவள்
…
பின்
கண்ணைத்
துடைத்துக்
கொண்டு
,
தன்
கழுத்தில்
இருந்த
செயின்னை
கையில்
பிடித்துக்
கொண்டு
…
அன்னைக்கு
அர்ஜுன்
இங்க
வச்சு
தான்
என்
கழுத்தில
இந்தச்
செயின்
போட்டாங்க
.
என்னைப்
பொறுத்தவரை
எனக்கும்
,
அர்ஜுனுக்கும்
அன்னைக்கே
கல்யாணம்
ஆகிடுச்சு
,
உங்க
சந்தியில
தான்
எங்க
கல்யாணம்
நடந்தது
.
இனி
நடக்கும்
கல்யாணம்
ஊருக்காகத்
தான்
.
நீங்க
தான்
எங்களைச்
சேர்த்து
வைக்கணும்
அம்மா
என்று
மனதார
வேண்டியவள்
எழுந்து
கொள்ள
…
கோவில்
அர்ச்சகர்
அவளிடம்
பூவையும்
,
குங்குமத்தையும்
கொண்டு
வந்து
கொடுத்தார்
.
மீரா
குங்குமத்தை
நெற்றியில்
இட்டு
கொண்டவள்
,
பூவையும்
தலையில்
வைத்துக்
கொண்டு
சந்நிதியில்
விழுந்து
கும்பிட்டு
, ‘
நீயே
கதி
தாயே
…
உன்னைத்
தான்
நம்பியிருக்கேன்
.’
என்று
மனதில்
சொல்லிக்கொண்டு
எழுந்தாள்
.
அவள்
நம்பும்
தெய்வம்
அவளைக்
காப்பாற்றுமா
?
Advertising
Advertising