Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 39 1
Post Views:
1,790
அத்தியாயம்
39
மீராவிற்கு
அந்தப்
பள்ளியில்
வேலை
பார்ப்பது
மிகவும்
பிடித்திருந்தது
.
காலை
ஒன்பது
மணிக்கு
ஆரம்பிக்கும்
பள்ளி
,
மாலை
ஐந்து
மணி
வரை
இருக்கும்
.
மீராவிற்கு
ஒரு
நாளைக்கு
ஆறு
வகுப்புகள்
இருக்கும்
.
ஓய்வு
நேரத்தில்
பள்ளியில்
நடை
பெரும்
விழாகளுக்கு
,
மாணவிகளைத்
தயார்
செய்வது
அவள்
பொறுப்பு
.
அதனால்
அதற்குத்
திட்டமிடுதல்
,
மாணவிகளுக்குப்
பயிற்சி
கொடுப்பது
என்று
நேரம்
சென்றுவிடும்
.
மாலை
ஐந்தில்
இருந்து
ஆறு
மணி
வரை
மாணவிகள்
விளையாடும்
நேரம்
.
மீராவும்
அவர்களோடு
சேர்ந்து
விளையாடுவாள்
.
பின்பு
அவள்
அறைக்கு
வந்து
குளித்து
,
உடை
மாற்றிச்
சாப்பிட
செல்பவள்
,
சாப்பிட்டதும்
இரவு
எட்டுமணிக்கெல்லாம்
அவள்
அறையில்
சென்று
படுத்துவிடுவாள்
.
ஆனால்
தூக்கம்
தான்
வராது
.
கையில்
செல்லை
வைத்துக்
கொண்டு
,
அதில்
இருக்கும்
அர்ஜுனின்
படங்களை
எல்லாம்
ஒவ்வொன்றாகப்
பார்த்து
கொண்டிருப்பாள்
.
அர்ஜுனை
அழைக்க
எழும்
ஆவலை
…
அவனோடு
பேசினால்
,
எங்கே
உன்னை
விட்டு
இருக்க
முடியவில்லை
…
அதனால்
திருமணம்
செய்து
கொள்வோம்
என்று
சொல்லிவிடுவோமோ
என்ற
பயத்திலேயே
அடக்கினாள்
.
சிறிது
நாட்களிலேயே
அர்ஜுனை
பிரிந்து
இருப்பது
எல்லாம்
சாத்தியம்
இல்லை
என்று
அவளுக்குப்
புரிந்துவிட்டது
.
அர்ஜுனாலும்
தன்னை
விட்டு
இருக்க
முடியாது
.
அதனால்
ஆஸ்திரேலியாவில்
இருந்து
வந்ததும்
,
எப்படியும்
தன்னைத்
தேடி
வந்துவிடுவான்
என்று
நினைத்திருந்தவள்
,
அவன்
இரண்டு
மாதத்திற்கு
மேலாகியும்
வரவில்லை
என்றதும்
மனதில்
பயம்
வந்தது
.
அர்ஜுன்
தன்னை
நிஜமாகவே
வெறுத்து
விட்டானா
….
இனி
தன்னைத்
தேடி
வரமாட்டானா
என்று
மனம்
தவிக்க
ஆரம்பித்தது
.
அந்த
நேரத்தில்
தான்
பள்ளியில்
ஒவ்வொரு
வகுப்பாகச்
சுற்றுலா
அழைத்துச்
சென்றனர்
.
இவளையும்
ஒன்பதாம்
வகுப்பு
மாணவிகளுடன்
சென்று
வர
சொன்னார்கள்
.
முன்
தினம்
காலை
பள்ளியில்
இருந்து
சுற்றுலா
வந்தவர்கள்
,
ஒரு
நீர்வீழ்ச்சிக்கு
சென்றனர்
.
மாலை
ஆனதும்
…
அங்கிருந்து
கிளம்பி
அனைவரும்
சென்று
பஸ்சில்
ஏற
…
அப்போது
நாட்டு
துப்பாக்கியுடன்
வந்த
நான்கு
பேர்
,
இவர்கள்
பஸ்சில்
ஏறி
,
டிரைவரை
மிரட்டி
…
முன்னால்
சென்ற
ஜீப்பை
பின்
தொடர
சொல்ல
…
டிரைவரும்
வேறு
வழியில்லாமல்
,
அவர்கள்
சொன்னபடி
செய்ய
…
எல்லோரையும்
கடத்தி
கொண்டு
காட்டிற்குள்
சென்றனர்
.
இவர்கள்
அனைவரையும்
அவர்கள்
வந்த
பஸ்சிலேயே
இருக்கச்
சொல்லிவிட்டு
,
பஸ்ஸை
சுற்றி
பத்து
பேர்
காவல்
இருந்தனர்
.
பயந்த
பிள்ளைகளுக்குத்
தைரியம்
சொல்லி
…
அவர்கள்
சாப்பிட
கொடுத்த
ராகிக்
கூழை
குடித்து
…
எப்படியோ
இரவை
ஓட்டி
விட்டனர்
.
இப்போது
விடிந்து
இவ்வளவு
நேரமாகியும்
அவர்களை
விடாமல்
பிடித்து
வைத்திருந்தனர்
.
அவர்கள்
பேசுவதில்
இருந்து
…
அவர்கள்
கூட்டாளியை
போலீஸ்
பிடித்து
வைத்திருகிறது
என்றும்
,
அவனை
விட்டதும்
…
இவர்களையும்
விட்டுவிடுவார்கள்
என்று
புரிந்தது
.
போலீஸ்
எப்ப
அவனை
விடுறது
…
இவங்க
எப்ப
நம்மை
விடுறது
என்று
நினைத்து
மீரா
பெருமூச்சு
விட
…
அப்போது
தூரத்தில்
நிறைய
ஆட்கள்
வந்தனர்
.
அவர்களைப்
பார்த்ததும்
பஸ்சில்
இருந்த
அனைவரும்
இன்னும்
பயப்பட
….
அருகில்
வந்ததும்
பார்க்க
,
அவர்கள்
அனைவரும்
கிராமத்து
மனிதர்கள்
போல்
தோன்றியது
.
அதிலிருந்த
பெரியவர்
ஒருவர்
“
உங்க
கூட்டாளிய
விட
…
இவங்களை
நீங்க
பிடித்து
வைத்திருப்பது
என்ன
நியாயம்
?”
என்று
கேட்க
..
அதற்குக்
கடத்தல்
கும்பலில்
இருந்த
ஒருவன்
“
உங்களுக்கு
இது
தேவை
இல்லாத
விஷயம்
.
நீங்க
தலையிடாதீங்க
.”
என்றான்
.
“
நீங்க
செய்ற
காரியத்தால
…
பாதிக்கப்
படபோறது
நாங்க
தான்
.
நீங்க
காட்டுக்குள்ள
இருப்பீங்க
…
ஊருக்குள்ள
இருக்கிற
எங்களைத்
தான்
போலீஸ்
பிடிப்பாங்க
.
எங்களைத்
தான்
நீங்க
எங்கன்னு
கேட்டுக்
கொடுமை
படுத்துவாங்க
.”
என்றவர்
தொடர்ந்து
“
இந்தப்
பிள்ளைங்களோட
பெத்தவங்க
எல்லாம்
கதறி
அழுகிறதை
பார்க்க
முடியலை
…
மரியாதையா
விட்டுடுங்க
.”
என்றவர்
முன்னேறி
செல்ல
…
“
அவங்க
எங்க
ஆளை
விடட்டும்
,
நாங்களும்
இவங்களை
விட்டுடுறோம்
.
எப்படியும்
இன்னைக்கு
அவனை
விட்டுடுவாங்க
.”
என்று
கடத்தல்காரர்களில்
இருந்த
மற்றொருவன்
சொல்ல
…
“
போலீஸ்
இப்ப
அவனை
விட்டாலும்
,
அப்புறம்
எல்லோரையும்
வேட்டையாடி
கொல்லுவாங்க
,
அது
தேவையா
…
வேண்டாம்
.
அதுக்கு
நாமலே
அனுப்பிட்டா
…
உயிராவது
மிஞ்சும்
.”
என்ற
அந்தப்
பெரியவரும்
அவரோடு
வந்த
மற்றவர்களும்
சென்று
அந்தக்
கடத்தல்காரர்களிடம்
இருந்து
துப்பாக்கியை
பறிக்க
முயல
…
முதலில்
மோதிய
கடத்தல்காரர்களும்
கிராமத்து
மக்களைப்
பகைத்துக்
கொண்டால்
…
தங்களுக்குத்
தான்
கஷ்ட்டம்
என்று
அங்கிருந்து
அவர்களைத்
திட்டிக்கொண்டே
சென்றனர்
.
மீரா
மற்றும்
அவளோடு
இருந்தவர்களால்
நடந்ததை
இன்னும்
நம்ப
முடியவில்லை
.
அந்தக்
கிராமத்து
மனிதர்கள்
அவர்களிடம்
நடந்த
தவறுக்கு
மன்னிப்பு
கேட்டு
..
அவனுங்க
எல்லாம்
தீவிரவாதீங்க
இல்லைங்க
…
அரசாங்கமும்
,
அதிகாரிகளும்
பண்ற
கொடுமை
தாங்காம
அப்படி
ஆகிட்டானுங்க
.
எங்களுக்கு
நாங்க
வாழவும்
,
எங்க
புள்ள
குட்டிங்க
படிக்கவும்
வழி
காட்டினா
போதும்
,
என்றவர்கள்
,
டிரைவருக்கு
வழிகாட்ட
என்று
இரு
ஆட்களையும்
அவர்களுடன்
அனுப்பினர்
.
காட்டின்
எல்லை
பகுதிக்கு
வந்ததும்
,
அந்த
இருவரும்
பஸ்சில்
இருந்து
இறங்கி
கொண்டு
இவர்களை
வழி
அனுப்பினர்
.
பஸ்சில்
இருந்த
மாணவர்களுக்கும்
,
ஆசிரியர்களுக்கும்
மிகவும்
மகிழ்ச்சி
.
தங்களைக்
காப்பாற்ற
போலீஸ்
தான்
வரும்
என்று
நினைத்திருந்தவர்களுக்கு
…
சாதாரணக்
கிராமத்து
மனிதர்களின்
துணிச்சலும்
,
மணிநேயத்தையும்
பார்த்து
ஆச்சர்யபட்டனர்
.
காட்டில்
இருந்து
வெளியே
வந்ததும்
சற்றுத்
தூரத்தில்
போலீசும்
,
மாணவிகளின்
பெற்றோரும்
நின்று
கொண்டிருப்பது
தெரிந்தது
.
மாணவிகள்
தங்கள்
பெற்றோரை
பார்த்ததும்
உற்சாகக்
குரல்
எழுப்பினர்
.
பஸ்
நின்றதும்
மாணவிகள்
வேகமாக
இறங்கி
தங்கள்
பெற்றோரை
தேடி
ஓட
…
மீரா
அவர்களைப்
புன்னகையுடன்
பார்த்துக்
கொண்டே
நடந்து
வந்தாள்
.
அப்போது
அவளை
யாரோ
வந்து
வேகமாக
அனைத்து
,
மீரா
என்று
அழைக்க
…
மீரா
குனிந்து
பார்த்தவள்
,
தன்னை
அனைத்தவரை
பார்த்து
நம்ப
முடியாமல்
நின்றாள்
.
வித்யா
அவளைக்
கட்டிபிடித்துக்
கொண்டு
அழ
…
மீராவும்
அழுதாள்
.
வித்யா
நடுங்கும்
தன்
கைகளால்
மீராவின்
முகத்தைப்
பற்றியவர்
… “
உனக்கு
ஒன்னும்
ஆகலையில்ல
மீரா
…
உன்னை
எதுவும்
அவங்க
அடித்து
,
கொடுமை
எதுவும்
பண்ணலை
தான
.”
என்று
கேட்க
…
மீரா
அதுவரை
நம்ப
முடியாத
ஆச்சர்யத்தில்
இருந்தவள்
. “
இல்லை
ஆன்டி
,
அவங்க
எங்களைக்
கடத்திட்டு
தான்
போனாங்க
,
மத்தபடி
எங்க
நிழலையும்
அவங்க
தொடலை
…”
என்றாள்
.
“
எல்லாம்
என்னால
தான்
.
நீயும்
அர்ஜுனும்
உண்மையா
தான்
ஒருத்தரை
ஒருத்தர்
விரும்புரீங்கலான்னு
தெரிஞ்சிக்கத்
தான்
,
கோபமா
இருந்த
மாதிரி
நடிச்சேன்
.
கடைசியில
அது
உன்னை
இப்படி
ஆபத்துல
கொண்டு
வந்து
விடும்னு
எதிர்
பார்க்கலை
.
கைல
கிடைச்ச
வைரத்தை
நானே
தொலைக்கப்
பார்த்தேன்
.”
வித்யா
வருத்தபட
…
அவர்
சொன்னதைக்
கேட்டு
மகிழ்ந்த
மீரா
“
பரவாயில்லை
ஆன்டி
விடுங்க
,
பீல்
பண்ணாதீங்க
.
அது
தான்
நான்
நல்லபடியா
வந்துட்டேன்
தான
.”
என்றவள்
,
வித்யாவின்
கண்களைத்
துடைத்துவிட்டாள்
.
இவர்கள்
இருவரும்
பேசுவதைச்
சற்று
தள்ளி
நின்று
பார்த்துக்
கொண்டிருந்த
மற்றவர்கள்
அருகில்
வந்தனர்
.
மீரா
ராம்நாத்தை
பார்த்ததும்
,
ஓடி
சென்று
அவரை
அனைத்து
கொண்டாள்
.
அவரருகில்
இருந்த
வருண்
மீராவை
கட்டிபிடித்து
அழ
…
மீராவும்
அழுதாள்
.
மீனாட்சியும்
கண்
கலங்கினார்
.
அவர்களுக்கு
அடுத்து
ரஞ்சனாவும்
,
ஆருவும்
மீராவிடம்
சென்று
, “
எங்களால
தான்
நீ
அர்ஜுனை
விட்டு
போனியா
?”
என்று
கேட்க
…
மீராவிற்கு
அர்ஜுன்
நியாபகம்
வந்துவிட்டது
.
அவள்
எனக்கு
அர்ஜுனை
இப்ப
பார்க்கணும்
என்று
அழ
…
ஆதியும்
,
சூர்யாவும்
அவரவர்
மனைவியைப்
பார்த்து
முறைத்தனர்
.
இவளுங்க
வாயை
திறந்தாலே
பிரச்சனைதான்
என்று
நினைத்தவர்கள்
,
அர்ஜுன்
வந்துகிட்டு
இருக்கான்
,
இன்னும்
கொஞ்ச
நேரத்தில்
வந்துவிடுவான்
என்றார்கள்
.
“
அர்ஜுன்
வர்றாங்களா
…
நிஜமாவா
…
எப்ப
வர்ராங்க
?
எங்க
வருவாங்க
?”
மீரா
கேள்வி
மேல்
கேள்விகளாகக்
கேட்க
… “
அம்மா
தாயே
…
நீ
போய்
ஆக
வேண்டிய
வேலையைப்
பாரு
.
அர்ஜுன்
வந்ததும்
,
அவன்கிட்ட
உன்
எல்லாக்
கேள்வியையும்
கேளு
….
நாங்க
நேத்து
நைட்ல
இருந்து
சாப்பிடலை
….
முதல்ல
சாப்பிடனும்
.”
சூர்யா
சொல்ல
…
மீராவும்
சரி
அர்ஜுன்
நேர்ல
வரட்டும்
பேசிக்குவோம்
என்று
அமைதியாக
இருந்தாள்
.
அவளுக்கு
அவன்
எப்போது
கிளம்பினான்
என்று
தெரியாததால்
….
அவன்
எப்போது
வருவான்
என்றும்
தெரியவில்லை
.
மதியம்
இரண்டு
மணிக்கு
அர்ஜுனின்
விமானம்
பெங்களூரில்
வந்து
தரை
இறங்கியது
,
அர்ஜுன்
விமானம்
நின்றதும்
சூர்யாவை
தான்
முதலில்
அழைத்தான்
.
சூர்யா
வேறு
எதுவும்
சொல்லாமல்
முதலில்
, “
மீரா
பத்திரமா
வந்தாச்சு
..”.
என்று
மட்டும்
சொல்ல
…
அர்ஜுன்
அப்படியே
தன்
கைகளில்
முகம்
புதைத்து
,
சிறிது
நேரம்
உட்கார்ந்துவிட்டான்
.
சூர்யாவும்
நிலைமையைப்
புரிந்து
கொண்டு
அர்ஜுன்
பேச
காத்திருந்தான்
.
அர்ஜுன்
முகத்தை
அழுந்த
துடைத்து
…
நன்றாக
முச்சை
இழுத்து
விட்டு
,
தன்
மனதை
அமைதிபடுத்திக்கொண்டு
பேச
ஆரம்பித்தான்
. “
இப்ப
எங்க
இருக்கீங்க
சூர்யா
?”
“
இன்னும்
எல்லோரும்
அங்க
தான்
இருக்கோம்
.
மீரா
இப்ப
தான்
வந்தா
…
வந்து
அஞ்சு
நிமிஷம்
தான்
ஆகுது
.
இன்னும்
இங்க
பார்மாலிடீஸ்
முடியலை
.
நீ
ஏர்போர்ட்ல
இருந்து
வெளியே
வந்துட்டியா
அர்ஜுன்
.”
“
இல்லை
,
இப்ப
தான்
ப்ளைட்
இறங்கி
இருக்கு
.”
“
சரி
நீ
வெளிய
வந்துட்டு
போன்
பண்ணு
,
நாங்க
இருக்கிறது
ஒரு
பக்கம்
,
ஏர்போர்ட்
இருக்கிறது
ஒரு
பக்கம்
.
எங்க
மீட்
பண்ணலாம்னு
சொல்றேன்
.
நாங்களும்
இங்கிருந்து
கிளம்ப
நேரம்
ஆகும்
.”
சூர்யா
சொல்ல
….
அர்ஜுனும்
சரி
என்று
போன்னை
வைத்து
விட்டான்
.
அவனுக்கு
இப்போது
வேறெதுவும்
கேட்க
தெம்பும்
இல்லை
.
பிறகு
பார்த்துக்
கொள்வோம்
என்று
நினைத்தான்
.
எல்லாப்
பிள்ளைகளின்
பெற்றோரும்
அங்கு
இருந்ததால்
…
அவர்களை
எல்லாம்
சரி
பார்த்து
அவர்களுடன்
அனுப்பிவிட்டு
,
ஆசிரியர்களும்
அங்கிருந்த
அதிகாரிகளிடமும்
,
பள்ளி
நிர்வாகியிடமும்
சொல்லிவிட்டு
கிளம்பினர்
.
மீராவும்
கிளம்பினாள்
.
ராம்நாத்
வழியெல்லாம்
மீராவிடம்
நடந்ததைப்
பற்றி
விசாரித்துக்
கொண்டே
வந்தார்
.
வழியில்
இருந்த
ஓட்டலில்
சூர்யா
காரை
நிறுத்த
,
மற்றவர்களும்
நிறுத்தி
இறங்கினர்
.
அப்போது
மணி
மூன்று
…
எல்லோரும்
நல்ல
பசியில்
இருந்ததால்
,
அந்த
நேரத்திற்கு
என்ன
சாப்பாடு
இருந்ததோ
அதை
வாங்கி
வேக
வேகமாகச்
சாப்பிட்டனர்
.
மீராவுக்கு
அர்ஜுன்
வருகிறான்
என்ற
சந்தோஷத்தில்
பசிக்கவே
இல்லை
…
பெயருக்கு
ஒரு
வாய்
சாப்பிடுவதும்
,
பின்
தன்
கையில்
இருக்கும்
செல்லில்
நேரம்
பார்ப்பதுமாக
இருந்தாள்
.
அவள்
முகத்தில்
எப்போதும்
ஒரு
புன்னகை
இருந்தது
.
அதை
எல்லோரும்
பார்த்தும்
பார்க்காதது
போல்
இருந்தனர்
.
அவர்களுக்குத்
தெரியும்
,
அது
அர்ஜுன்
வரப்போகிறான்
என்பதால்
என்று
.
“
மீரா
நீ
அடிக்கடி
டைம்
பார்த்தா
மட்டும்
டைம்
வேகமா
போகுமா
என்ன
?
ஒழுங்கா
சாப்பிடு
…”
சூர்யா
சொன்னதும்
,
மீரா
சிரித்துக்
கொண்டே
சாப்பிட்டாள்
.
அர்ஜுன்
பெங்களூர்
வந்ததைச்
சூர்யா
யாரிடமும்
சொல்லவில்லை
.
அவன்
அர்ஜுனுக்கும்
,
மீராவுக்கும்
ஒரு
ஸ்வீட்
சர்ப்ரைஸ்
கொடுக்க
நினைத்தான்
.
சாப்பிடும்
போது
ஆதியிடம்
மட்டும்
மெதுவாகத்
தனது
திட்டத்தைச்
சொன்னான்
.
ஆதியும்
புன்னகையுடன்
சரி
என்றவன்
,
நிமிர்ந்து
ரஞ்சனாவை
பார்க்க
,
அவள்
அவனைப்
பார்த்து
முறைத்தாள்
.
அய்யய்யோ
…
அர்ஜுன்
மீராவை
சேர்த்து
வைக்கிற
ஆர்வத்துல
…
நம்ம
ஆளை
ரொம்ப
நோகடிசிட்டோமோ
…
இப்படி
நீயே
உனக்கு
ஆப்பு
வச்சிகிட்டியே
,
இப்ப
என்ன
செஞ்சு
மாரி
ஆத்தாவை
மலை
ஏத்துறது
என்று
ஆதி
மைன்ட்
வாய்ஸில்
பேசிக்கொண்டிருந்தான்
.
ஆருவும்
சூர்யாவை
பார்த்து
,
இருங்க
உங்களை
அப்புறம்
பார்த்துகிறேன்
என்று
ஜாடை
காட்ட
…
அதைப்
பார்த்த
சூர்யாவும்
உஷார்
ஆனான்
.
அர்ஜுன்
பார்மாலிடீஸ்
முடிந்து
வந்த
போது
,
விமான
நிலையத்தில்
இருந்த
டிவியில்
மாணவிகள்
பத்திரமாக
வந்த
செய்தி
தான்
ஓடிக்கொண்டிருந்தது
.
அதில்
மாணவிகளைப்
பெற்றோர்
கட்டிபிடித்துக்
கொண்டு
அழுவதைக்
காட்டினர்
.
அப்போது
வித்யாவும்
,
மீராவும்
கட்டிப்பிடித்துக்
கொண்டு
அழுவதும்
வந்தது
.
அதைப்
பார்த்ததும்
அர்ஜுனுக்கும்
கண்கள்
கலங்கியது
.
ஒரு
நாளில்
என்னவெல்லாம்
நடந்துவிட்டது
என்று
நினைத்தவன்
,
தன்னைச்
சமன்படுத்த
அங்கயே
அமர்ந்தான்
.
சிறிது
நேரம்
அந்தச்
செய்தியே
திரும்பத்
திரும்ப
வந்தது
…
அர்ஜுன்
தன்
அம்மாவையும்
,
மீராவையும்
கண்
இமைக்காமல்
பார்த்துக்
கொண்டிருந்தான்
.
அம்மாவே
மீராவை
பார்க்க
வந்திட்டாங்க
,
அப்ப
இனி
பிரச்சனை
இருக்காது
என்று
நினைத்தவன்
மனது
சந்தோஷமும்
நிம்மதியும்
அடைந்தது
.
சாப்பிட்டதும்
எங்குச்
செல்வது
என்று
எல்லோரும்
யோசிக்கும்
போது
, “
எல்லோரும்
இங்க
இருக்க
வேண்டாம்
.
மணி
இப்ப
மூன்னு
தான்
ஆகுது
.
அதனால
இப்ப
கிளம்பினா
நைட்
பத்து
மணிக்குள்ள
சென்னை
போய்டலாம்
…
யாரெல்லாம்
வர்றீங்க
.”
ராம்நாத்
கேட்க
…
யாருக்குமே
அர்ஜுனை
பார்க்காமல்
கிளம்ப
மனம்
இல்லை
.
கணேசன்
மட்டும்
தான்
வருவதாகச்
சொல்ல
…
சூர்யா
மற்றவர்களைத்
தன்
அக்கா
மது
வீட்டுக்கு
அழைத்துக்
கொண்டு
செல்வதாகச்
சொன்னான்
.
ராம்நாத்தின்
காரில்
டிரைவர்
வண்டி
ஓட்ட
…
அவரோடு
கணேசன்
,
மீனாக்ஷி
மற்றும்
வருண்
சென்றனர்
.
Advertising
Advertising