Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 39 2
Post Views:
1,658
சூர்யா
அர்ஜுனுக்குப்
போன்
செய்து
… “
நாங்க
எல்லோரும்
மீராவோட
அப்பார்ட்மென்ட்க்கு
தான்
வரோம்
.
ஆனா
இங்க
இருந்து
நாங்க
வர
நேரம்
ஆகும்
.
அதனால
நீ
இன்னும்
கொஞ்ச
நேரம்
ஏர்போர்ட்ல
இருந்து
ரிலாக்ஸ்
பண்ணிட்டு
,
மெதுவா
கிளம்பு
…”
என்று
சொல்ல
…
அர்ஜுன்
மேலும்
எதோ
கேட்க
வர
… “
அர்ஜுன்
ரொம்ப
டயர்ட்டா
இருக்கு
,
எதுனாலும்
நேர்ல
பேசலாம்
ப்ளீஸ்
….”
சூர்யா
சொல்ல
…
அர்ஜுனும்
சரி
நேரில்
பேசுவோம்
என்று
போன்னை
வைத்துவிட்டான்
.
சூர்யா
எல்லோரையும்
அழைத்துக்
கொண்டு
தன்
காரில்
கிளம்பினான்
.
அவர்கள்
பெங்களூரை
விட்டு
தள்ளி
இருந்தனர்
.
பெங்களூர்க்குள்
நுழையவே
இரண்டு
மணி
நேரம்
ஆனது
.
“
என்னோட
அக்கா
வீட்ல
எல்லோரும்
தங்க
முடியாது
.
இப்ப
என்ன
செய்றது
?”
சூர்யா
யோசிப்பது
போல்
நடிக்க
…
மீரா
வேகமாக
“
என்னோட
அப்பார்ட்மென்ட்
க்கு
போகலாம்
.”
என்றாள்
.
சூர்யாவும்
சரி
என்றான்
.
மீரா
இன்னும்
அந்த
வீட்டை
காலி
செய்யவில்லை
..
வாரத்திற்கு
ஒரு
முறை
ஏஜ்ன்சி
ஆட்கள்
வந்து
,
வீட்டை
சுத்தம்
செய்துவிட்டுச்
செல்வார்கள்
.
மீரா
போகும்
வழியில்
,
தான்
வேலை
பார்த்த
பள்ளியின்
ஹாஸ்டல்
சென்று
,
வேகமாகக்
குளித்து
,
உடை
மாற்றிவிட்டு
,
அவளுக்குத்
தேவையான
பொருட்களும்
,
வீட்டு
சாவியையும்
எடுத்து
கொண்டாள்
.
மீரா
இல்லாத
போது
சூர்யா
வித்யாவிடம்
தன்
திட்டத்தைச்
சொல்ல
….
அவர்
சிரித்துக்
கொண்டே
சரி
என்றார்
.
சூர்யா
நேராக
மீராவின்
அப்பார்ட்மென்ட்
சென்றவன்
,
மீரா
இறங்கியதும்
, “
நீ
போய்
ரெஸ்ட்
எடு
மீரா
,
நாங்க
நைட்
அர்ஜுன்
வந்ததும்
வரோம்
.”
என்றான்
.
அவன்
சொன்னதைக்
கேட்டு
மீரா
முகம்
வாடிவிட்டது
.
தன்னை
மட்டும்
ஏன்
இறக்கிவிட்டான்
?
என்று
அவளுக்குப்
புரியவில்லை
.
மீரா
யோசித்துக்
கொண்டிருக்கும்
போதே
…
சூர்யா
வேகமாகக்
காரை
கிளப்பிக்
கொண்டு
சென்றுவிட்டான்
.
மீராவிற்கு
அழுகையாக
வந்தது
,
அவள்
திரும்பி
தன்
வீட்டை
நோக்கி
சென்றாள்
.
அர்ஜுன்
சூர்யா
சொன்னபடி
ஏர்போர்டிலேயே
முகம்
கழுவி
தயாராகி
அங்கேயே
உணவு
வாங்கிச்
சாப்பிட்டான்
.
அதுவே
ஒரு
மணி
நேரத்திற்க்கு
மேல்
ஆகிவிட்டது
.
பின்
அங்கிருந்து
டாக்ஸ்யில்
கிளம்பி
மீராவின்
அப்பார்ட்மென்டுக்கு
வர
….
வழியெல்லாம்
ஒரே
டிராபிக்
,
அர்ஜுன்
சீட்டில்
சாய்ந்து
நன்றாகத்
தூங்கி
கொண்டே
வந்தான்
.
பெங்களூரில்
ஏர்போர்ட்
சிட்டியைவிட்டு
தள்ளி
இருப்பதால்
…
அவன்
கோரமங்களா
வந்து
சேர
,
இரண்டு
மணி
நேரம்
ஆகிவிட்டது
. “
சார்
..
நீங்க
சொன்ன
அட்ரஸ்
வந்திடுச்சு
..”
என்று
டிரைவர்
எழுப்பியதும்
தான்
அர்ஜுன்
எழுந்தான்
.
மீரா
வீட்டுக்குள்
வந்தவள்
,
நேராகச்
சென்று
சோபாவில்
உட்கார்ந்து
அழுதாள்
.
அப்போது
யாரோ
கால்லிங்
பெல்
அடித்தனர்
.
மீரா
எரிச்சலோடு
சென்று
கதவை
திறக்க
…
அங்கே
அர்ஜுன்
நின்று
கொண்டிருந்தான்
.
மீராவிற்கு
ஒரு
நிமிடம்
ஒன்றுமே
புரியவில்லை
…
அர்ஜுனை
பார்த்ததும்
அவனைத்
தாவி
சென்று
அனைத்துக்
கொண்டாள்
.
அர்ஜுன்
அவளை
அப்படியே
தள்ளி
கொண்டு
உள்ளே
வந்து
,
கதவை
சாற்றிவிட்டு
…
பார்வையால்
வீட்டை
சுற்றி
பார்த்தவன்
, “
வீட்ல
வேற
யாரும்
இல்லையா
மீரா
?”
என்று
கேட்டான்
.
மீரா
இல்லை
என்று
தலையசைக்க
…
அர்ஜுன்
மீராவின்
முகத்தை
நிமிர்த்தி
“
எல்லோரும்
எங்க
?”
என்றான்
ஆவலாக
.
“
என்னை
மட்டும்
தனியா
விட்டுட்டு
…
அவங்க
எல்லோரும்
மது
அக்கா
வீட்டுக்கு
போய்டாங்க
.”
மீரா
சொல்ல
…
அர்ஜுன்
முகம்
புன்னகையில்
விரிந்தது
.
“
அப்ப
நம்ம
ரெண்டு
பேர்
மட்டும்
தான்
இருக்கோமா
…”
என்றவன்
,
மீராவை
அப்படியே
தூக்கி
சுற்ற
….
மீராவிற்கு
அப்போது
தான்
சூர்யா
எதற்குத்
தன்னைத்
தனியே
விட்டுச்
சென்றான்
என்று
புரிந்தது
.
அவள்
சந்தோஷமாக
அர்ஜுனின்
கழுத்தை
கட்டி
கொண்டாள்
.
அர்ஜுன்
மீராவை
இறக்கிவிட்டவன்
அவளோடு
சென்று
சோபாவில்
அமர்ந்து
,
அவள்
முகத்தைத்
தன்
பக்கம்
திருப்பி
,
அவள்
கண்களைப்
பார்த்து
“
ரொம்பப்
பயந்துடியாடா
…”
என்று
கேட்டதும்
….
மீராவிற்குக்
கண்கள்
கலங்க
ஆரம்பித்தது
.
மீரா
அர்ஜுனின்
மார்பில்
முகத்தைப்
பதித்து
“
ரொம்ப
…
உங்களைத்
திரும்பி
பார்க்கவே
முடியாதோன்னு
நினைச்சேன்
.”
என்றாள்
.
அதைச்
சொல்லும்
போதே
அவள்
குரல்
நடுங்கியது
.
அர்ஜுன்
மீராவை
இறுகி
அணைத்தவன்
, “
வேண்டாம்டா
…
இனி
அதை
நினைக்காதே
,
சாரி
நானே
நியாபகபடுத்திட்டேன்
.”
என்றவன்
,
அவள்
நெற்றியில்
மென்மையாக
முத்தமிட்டான்
..
மீரா
அவன்
கன்னத்தில்
முத்தமிட்டாள்
.
அடுத்து
அர்ஜுனும்
அவள்
கன்னத்தில்
முத்தமிட
…
மீரா
அர்ஜுனின்
இதழை
பார்த்தவள்
,
முத்தமிடாமல்
விலக
,
அர்ஜுன்
“
உனக்கு
இதே
வேலையா
போச்சு
.”
என்றவன்
,
அவளை
அருகில்
இழுத்து
…
அவள்
இதழில்
அழுந்த
முத்தமிட்டான்
.
சிறிது
நேரம்
சென்ற
பிறகும்
அர்ஜுனின்
முத்தம்
நிற்காமல்
தொடர
…
மீரா
அவனை
விட்டு
விலகப்
பார்க்க
…
அர்ஜுன்
அவளை
விலக
விடவில்லை
….
சிறிது
நேரம்
கழித்து
அர்ஜுனாக
விலக
…
மீராவிற்கு
மூச்சு
வாங்கியது
.
அர்ஜுன்
மீராவை
பார்த்து
சிரித்தவன்
, “
நீ
இப்ப
திருமதி
மீரா
தான
…
நான்
என்ன
வேணா
பண்ணலாமா
?”
என்று
குறும்பு
புன்னகையுடன்
கேட்க
…
மீரா
அர்ஜுனை
பார்த்துப்
பொய்யாக
முறைக்க
…“
சும்மா
சொன்னேன்
…
உன்னோட
வீட்டை
எனக்குச்
சுற்றி
காட்ட
மாட்டியா
…
மீரா
”
என்றதும்
,
மீரா
அர்ஜுனை
அழைத்துக்
கொண்டு
சென்று
வீட்டை
சுற்றிக்
காட்டினாள்
.
வீட்டை
சுற்றிப்
பார்த்ததும்
அர்ஜுன்
பால்கனியில்
நின்று
சூர்யாவை
அழைத்தான்
.
“
எங்கடா
இருக்க
…”
“
மது
வீட்டுக்கு
போலாம்னு
பார்த்தேன்
.
ஆனா
ஒரே
டிராபிக்
…
எப்படி
போயிட்டு
திரும்பி
வரப்போறோமோ
தெரியலை
…”
“
நீ
அங்க
போக
வேண்டாம்
,
திரும்பி
இங்கயே
வா
…
எனக்கு
அம்மாவை
பார்க்கணும்
.”
என்றதும்
,
சூர்யாவும்
சரி
என்று
போன்னை
வைத்தவன்
,
காரை
திருப்பிக்
கொண்டு
மீரா
அபார்ட்மென்ட்டுக்கே
சென்றான்
.
அர்ஜுன்
நான்
அவங்க
வர்றதுக்குள்ள
குளிச்சிட்டு
வந்துடுறேன்
என்று
குளிக்கச்
செல்ல
…
மீரா
அவர்கள்
வருவதற்குள்
வீட்டை
பெருக்கிவிட்டு
,
அவர்கள்
அப்பார்ட்மென்ட்டில்
இருந்த
கடையில்
சென்று
தேவையான
பொருட்களை
வாங்கிக்
கொண்டு
வந்தவள்
,
பாலை
காய்ச்சி
கொண்டிருக்கும்
போது
கால்லிங்
பெல்
அடித்தது
.
மீரா
கதவை
திறக்க
செல்ல
…
அர்ஜுனும்
குளித்து
உடை
மாற்றிக்கொண்டு
வந்தான்
.
இருவரும்
சென்று
கதவை
திறக்க
…
வெளியில்
நின்ற
வித்யா
,
அவர்கள்
இருவரையும்
சேர்ந்து
பார்த்தும்
மிகவும்
சந்தோஷபட்டார்
.
வித்யா
உள்ளே
வந்ததும்
அர்ஜுன்
தன்
அம்மாவை
அனைத்துக்
கொண்டான்
,.
அதை
மீரா
முகத்தில்
புன்னகையுடன்
பார்த்தது
கொண்டிருந்தாள்
.
அர்ஜுன்
அவனது
மற்றொரு
கையால்
மீராவை
அருகில்
இழுத்து
அவளையும்
சேர்த்து
அனைத்து
கொண்டவனின்
கண்கள்
கலங்க
…
அதைப்
பார்த்து
மற்றவர்களும்
கண்கலங்கினர்
.
சிறிது
நேரம்
சென்று
அர்ஜுன்
அவர்களை
விட்டு
விலக
…
அவனிடம்
ஐஷு
சித்தப்பா
என்று
பாய்ந்தது
.
அர்ஜுன்
தன்
மகளைக்
கொஞ்ச
…
மீரா
சமையல்
அறைக்குச்
சென்று
…
ஒரு
அடுப்பில்
பால்
காய்ச்சி
கொண்டே
…
ஒரு
பக்கம்
குக்கரில்
சாதம்
வைத்தாள்
.
அவளுக்குத்
தெரியும்
ஐஷுவுக்குப்
பசிக்கும்
என்று
.
எல்லோருக்கும்
சாப்பிட
பிஸ்கட்
,
மிக்ஸ்ஷர்
எல்லாம்
ஒரு
தட்டில்
வைத்துக்
கொண்டு
போய்க்
கொடுத்தவள்
,
பிறகு
எல்லோருக்கும்
காபியும்
போட்டு
கொடுத்தாள்
.
ஆதிக்கும்
,
சூர்யாவுக்குத்
தங்கள்
மனைவிமார்களைச்
சமாதானப்படுத்தும்
மிக
முக்கியமான
வேலை
இருந்ததால்
…
முதலில்
ஆதி
மெதுவாக
வித்யாவிடம்
“
அம்மா
…
நாம
ப்ளைட்ல
தான
வந்தோம்
.
அதனால
அலுப்பாவே
இல்லை
…
நான்
ரஞ்சனாவோட
வெளிய
போய்ட்டு
வரட்டுமா
…”
என்று
கேட்க
…
ரஞ்சனா
அவனை
ஆச்சர்யமாகப்
பார்க்க
… “
போயிட்டு
வாங்க
,
ஐஷு
என்னோட
இருக்கட்டும்
.”
என்றார்
வித்யா
.
ரஞ்சனா
சென்று
கிளம்ப
…
அதற்குள்
ஆதி
அர்ஜுனை
தனியே
அழைத்துச்
சென்று
…
கடந்த
இரண்டு
வாரமாக
வீட்டில்
நடந்த
அனைத்தையும்
சொல்லி
…
வித்யாவுக்கு
உடம்பு
சரி
இல்லாமல்
போனதையும்
சொன்னான்
.
அதைக்
கேட்டு
அர்ஜுன்
முகம்
மாறினான்
.
அவன்
தோளில்
தட்டி
கொடுத்த
ஆதி
“
இப்ப
ஒன்னும்
பிரச்சனை
இல்லை
…
அம்மா
நல்லா
இருக்காங்க
.”
என்றவன்
,
ரஞ்சனா
தயார்
ஆனதும்
,
அவளை
அழைத்துக்
கொண்டு
வெளியே
சென்றான்
.
அடுத்து
குளித்துவிட்டு
வந்த
சூர்யா
…
மீரா
பசிக்குது
என்றதும்
,
மீரா
சூர்யாவுக்கும்
,
ஆருவுக்கும்
ஹோட்டலில்
இருந்து
வந்த
உணவுகளைப்
பரிமாற
…
அதைச்
சாப்பிட்டதும்
சூர்யா
“
நைட்
கார்
ஓட்டினது
டயர்டா
இருக்கு
….
நான்
தூங்க
போறேன்
,”
என்றவன்
,
அர்ஜுனை
பார்த்து
“
காலையில
அஞ்சு
மணிக்கெல்லாம்
கிளம்பனும்
,
நீங்களும்
சீக்கிரம்
தூங்குங்க
.”
என்று
சொல்லிவிட்டு
ஆருவையும்
அழைத்துக்
கொண்டு
அங்கிருந்த
படுக்கை
அறைக்குச்
சென்று
கதவை
பூட்டி
கொண்டான்
.
அவன்
உள்ளே
காதல்
செய்கிறானா
…
அல்லது
ஆருவின்
காலில்
விழுகிறானா
என்று
அவனுக்கு
மட்டும்
தான்
தெரியும்
.
ஐஷுவுக்கு
வித்யா
பால்
சாதம்
ஊட்ட
…
அது
சமத்தாகச்
சாப்பிட்டு
விட்டுத்
தூங்கியது
.
அர்ஜுன்
ஐஷுவை
தூக்கி
கொண்டு
மீராவின்
படுக்கை
அறைக்குச்
சென்றவன்
,
அங்கே
அவளைப்
படுக்க
வைத்துவிட்டு
, “
அம்மா
,
இங்க
வாங்களேன்
.”
என்று
வித்யாவை
அழைத்தான்
.
வித்யா
அந்த
அறைக்குள்
இப்போது
தான்
வருகிறார்
.
வித்யா
உள்ளே
வந்ததும்
,
அர்ஜுன்
அங்கே
இருந்த
சுவற்றைக்
காட்ட
…
அதைப்
பார்த்த
வித்யாவின்
முகம்
ஆச்சிர்யத்தில்
மலர்ந்தது
.
அந்தச்
சுவற்றில்
அர்ஜுன்
கிரிக்கெட்
விளையாடுவது
போல்
ஒரு
பெரிய
போட்டோ
இருந்தது
.
அடுத்து
அர்ஜுனும்
,
மீராவும்
ஆதியின்
திருமணத்தில்
சேர்ந்து
எடுத்துக்
கொண்ட
போட்டோவும்
,
அதற்கு
அடுத்து
ஆரு
திருமணத்தில்
எடுத்துக்
கொண்ட
படம்
என்று
அந்தச்
சுவர்
முழுவதும்
புகைப்படங்களை
மீரா
மாட்டி
வைத்திருந்தாள்
.
அதைப்
பார்த்ததும்
வித்யா
,
இவ்வளவு
ஆசையா
,
பாசமா
இருக்கும்
பெண்ணைக்
கஷ்ட்டபடுத்திடோமே
என்று
கண்கலங்க
…
அவரின்
எண்ணத்தை
உணர்ந்த
அர்ஜுன்
“
வருத்தபடதீங்க
மா
…
நானும்
மீராவும்
எவ்வளவு
தடைகள்
வந்திருந்தாலும்
,
அதைத்
தாண்டி
சேர்ந்திருப்போம்
.”
“
எங்க
பிரிவு
வெறும்
உடலுக்குத்
தானே
தவிர
…
மனதுக்கு
இல்லை
.
எனக்குத்
தெரியும்
உங்களுக்கு
மீராவை
பிடிக்கும்னு
…
நீங்க
எதோ
ஒரு
காரணத்திற்காகத்
தான்
மீராவை
வேண்டாம்னு
சொல்றீங்கன்னு
தெரிஞ்சதுனால
தான்
,
மீரா
விலகுறேன்னு
சொன்னதும்
அமைதியா
இருந்தேன்
.”
“
எனக்குத்
தெரியும்
அந்த
விஷயம்
உங்களுக்குத்
தெரியும்
போது
,
நீங்க
கண்டிப்பா
எங்களைச்
சேர்த்து
வைப்பீங்கன்னு
.
எல்லாம்
நல்லபடியா
முடிஞ்சிருக்கும்
,
மீரா
மட்டும்
கடத்தபடலைனா
…
நடுவுல
மீரா
கடத்தல்
வந்து
எல்லோரையும்
ஒரு
வழி
ஆக்கிடுச்சு
.”
அர்ஜுன்
வித்யாவின்
மனதில்
இருந்த
குற்ற
உணர்வை
அவருக்கும்
தெரியாமல்
…
அவர்
மனதிலிருந்து
நீக்க
…
அர்ஜுனும்
மீராவும்
எந்த
நிலையிலும்
பிரிந்திருக்க
மாட்டார்கள்
என்ற
உண்மை
புரிந்ததும்
,
வித்யாவின்
மனதில்
இருந்த
கலக்கம்
மறைந்து
,
சந்தோஷம்
வந்தது
.
அவர்
மனதிற்குள்
சீக்கிரம்
அர்ஜுனுக்கும்
மீராவுக்கும்
திருமணம்
செய்துவிட
வேண்டும்
என்று
நினைத்தவர்
,
சாப்பிட்டுவிட்டு
ஐஷுவுடன்
சென்று
படுத்துக்
கொண்டார்
.
அர்ஜுனும்
மீராவும்
சாப்பிட்டதும்
,
பால்கனியில்
சென்று
நிற்க
…
மீரா
வானத்தில்
இருந்து
முழு
வெள்ளி
நிலவை
ஆசையாகப்
பார்த்து
கொண்டிருந்தாள்
.
அர்ஜுன்
அவன்
அருகில்
இருந்த
பெண்
நிலவை
ஆசையாகப்
பார்த்தான்
.
அர்ஜுன்
மெதுவாக
மீராவின்
பின்புறம்
சென்று
நின்று
,
அவளைத்
தன்னோடு
சேர்த்து
அணைத்தவன்
,
அவள்
தோளில்
தன்
முகத்தை
வைத்து
,
நிலவை
பார்த்துக்
கொண்டே
… “
மீரா
..
அந்த
நிலவைவிட
,
நீ
தாண்டி
அழகா
இருக்க
…”
என்றவன்
,
அவள்
கன்னத்தில்
முத்தமிட
….
மீராவின்
முகம்
தாமரையாக
மலர்ந்து
சிவந்தது
.
உண்மையான
காதலர்களைக்
கண்ட
ஆனந்தத்தில்
,
அன்று
நிலவும்
அதிகப்
பிரகாசமாகத்
தான்
இருந்தது
.
(
https://www.voiceoverherald.com/
)
Advertising
Advertising