வழிந்த நீரை துடைத்துக் கொண்டு ரிமோட்டை தாறுமாறாக மாற்றிக் கொண்டிருந்தாள் அக்ஷயா .
ஆம் ….தூங்கலாம் என்று கொட்டாவி விட்டபடி அறைக்குள் நுழைய எத்தணித்தவள் அண்ணன் அண்ணி சம்பாஷனையில் அப்படியே நின்று விட்டாள் .
இது காதல் …..இது தான் காதல் !
Advertisement
இனியாவது சந்தோஷமா அண்ணன் அண்ணி வாழட்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டாள் .
“……………………”
அண்ணி நான் மஞ்சு ஆன்டிக்கூட நைட் ஷோ சினிமாக்கு போறேன் . விஜய் சேதுபதி மூவி அண்ணி ….செம்மையா இருக்காம் .சோஷியல் மீடியாஸ் ரிவியூஸ் கூட பாசிட்டிவா இருக்கு .
Advertisement
அச்சு உங்க அண்ணனை கூட்டிட்டு போக சொல்றேன் என்றாள் கீர்த்தி .
Advertisement
வேணாம் அண்ணி ….நீங்க வீட்டுல தனியா இருப்பீங்க ! குழந்தையை வச்சிக்கிட்டு உங்களால் படம் பார்க்க முடியாது இல்லைனா பேமிலியா கூட போகலாம் .
அண்ணன் உங்க துணைக்கு இருக்கட்டும். நாங்க போயிட்டு வரோம் . மஞ்சு ஆன்டி கூட விஜய் சேதுபதி ஃபேனாம் . அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டி சினிமாவிற்கு கிளம்பிவிட்டாள் .
பெண்களை தனியே அனுப்ப மனமின்றி சரவணன் உடன் கிளம்பிவிட்டான் .
Advertisement
தியேட்டரில் எதனை ஐஸ்க்ரீம் கேட்ப ? ரகசியமாய் அவள் காதில் கேட்டான் .
அவள் புரியாது பார்க்க …வயிறுமுட்ட சாப்பிடற ….வெறித்தனமா சினிமால்லாம் பார்க்கிற ….ஐஸ்க்ரீமை வெளு வெளுன்னு வெளுக்குற . நான் மாச சம்பளக்க்காரன் மா ….லஞ்சம் வாங்கி பழக்கம் இல்லை . பாவம் போல் சொன்னான் .
இதை எல்லாம் என்கிட்டே சொல்றீங்க ? அவள் ங்கே ….என்று முழித்தாள் .
என் சம்பளத்தில் குடும்பம் பண்ண வேண்டியவட்ட தானே சொல்ல முடியும் ?
என்ன உளறிட்டு இருக்கீங்க ? சர்ரென்று ஏறிவிட்டது அவளுக்கு .
உளறல் இல்லை உண்மை ! சரி வா அவள் கரம் பற்றினான் .
ஹலோ வாட் ஐஸ் திஸ் ?பற்றியிருந்த அவன் கரத்தை சுட்டிக் காட்டினாள் .
அதனாலென்ன ? இன்னும் விடவில்லை அவன் .
எங்க அண்ணனுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் !
ஆல்ரெடி மச்சான் சாரோட பேசிட்டேன் அவர் அனுமதியோடு தான் உங்கிட்ட பேசுறேன் . மச்சான் சார் க்ரீன் சிக்னல் கொடுத்தாச்சு ! அவள் கரத்தை தன் கரத்தோடு வலுவாக கோர்த்து பற்றிக் கொண்டான்.
என்னங்கடா நடக்குது இங்கே …? குழம்பி போனாள்.
ரொம்ப யோசிக்காதே ….தலை வலி வரும் .வா…மூவி ஸ்டார்ட் பண்ணிட்டாங்க !
மஞ்சுளா பக்கத்தில் அச்சு அமர….அவள் பக்கத்தில் சரவணன் அமர்ந்தான்.
அச்சு …அச்சு ….ரகசியமாய் அழைத்தான் .
ச்சு…படம் பார்க்க விடாம நொய் நொய்ன்னு….அவள் முணுமுணுத்தாள்.
உன்னை பத்தி தெரிந்து தான் லவ் எல்லாம் செட்டாகாது டைரக்ட்டா மேரேஜ் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன் ! அவள் கரத்தை காதலுடன் பற்றிக் கொண்டான் .
அவளுக்குள் முதல் முறையாய் மின்சாரம் பாய்ந்தது . காதல் அணுக்கள் அதன் வேலையை ஆரம்பித்து விட்டது போலும் .
“……………………………”
மோர் குழம்பு உங்களுக்கு பிடிக்கும் தானே ? சேப்பங்கிழங்கு ரோஸ்ட் நல்லா இருக்கு . இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க ! இன்னும் கொஞ்சம் சாதம் வைத்தாள் .
உன் பதி பக்தியை இப்படியா காட்டுவ ? விழி பிதுங்கி போனவன் கீர்திம்மா எய்ட்டி டூ குறையவே மாட்டேங்குது . நீ வேற சோத்தை அள்ளி அள்ளி வைக்கிற …. நான் இன்னும் வெயிட் போட்டா உனக்கு தான் கஷ்டம் பார்த்துக்கோ ! கண் சிமிட்டி அவன் சிரிக்க சிவந்து போனாள் அவன் மனையாட்டி .
அவள் வெட்கத்தை ரசித்தவன் அவளை பக்கத்தில் இழுத்து அமர்த்தி தட்டில் இருந்த மொத்த சாதத்தையும் அவளுக்கே ஊட்டிவிட்டான் .
சரியான ஆளு நீங்க …சிரித்துக் கொண்டே முறைத்தாள் .
ஆமா என் பொண்டாட்டிக்கு ஏத்த சரியான ஆளு தான் நானு !
அய்ய….பேச்சை பாரு ! அவள் முகத்தை வெட்டி திருப்பினாள் .
ஹே ….அவள் கரத்தை மென்மையாய் வருடினான் .
என்பொண்டாட்டி கையில் என்ன மேஜிக்கோ …..தேவாமிர்தமா சமைக்கிறா …அவள் கரம் பற்றி இதழ் பதித்தான் .
நிஜமா ? நம்பாத குறும்புப்பார்வை பார்த்தாள் .
எனக்கு போய் சொல்லிப் பழக்கம் இல்லை . அவன் அழகாய் கண்சிமிட்டி சிரித்தான் .
ஹலோ ….நாங்க மட்டும் மூட்டை மூட்டையா போய் சொல்றோமாக்கும் ? அவன் முதுகில் இரண்டு போட்டாள் .
நிறைய வடிவேலு கோவை சரளா காமெடி பார்ப்பியா ? அவன் கேட்ட தொனியில் கலகலவென்று சிரித்துவிட்டாள் .
இப்படி அவள் சிரித்து கொண்டிருந்தால் போதும் !அவன் மனம் சொன்னது .
“………………………….”
அந்தி பொழுது மங்கிய இரவின் ஆரம்பத்தில் தந்தையுடன் போனில் பேசிக் கொண்டிருந்த அக்ஷயாவின் எதிரில் வந்து நின்றான் சரவணன்.
சரிப்பா நான் வைச்சுடறேன் ! நாளைக்கு வந்துடுவேன் . அழைப்பை துண்டித்தாள் .
அவள் கையில் இருந்த மொபைலை பிடுங்கி தன எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தான் .
நான் நாளைக்கு ஊருக்கு போகணும் ….! சரவணன் முகம் பாராது மாடிப் படியின் கடைசியில் நின்று கொண்டு பேசினாள் .
அவன் முகம் வாடிவிட்டது . போய் தான் ஆகணுமா ? கலங்க தயாரான விழியுடன் கேட்டான் .
எனக்கு இன்னும் ஒரு செமஸ்டர் இருக்கு ….. அவள் இதழ் கடித்தாள் .
என்னை என்னவோ செய்துட்ட அச்சு நீ ! உன்னை பார்க்காம நான் …..குரல் தடுமாறி தழு தழுத்தது .
எதுக்கு இவ்வளவு இமோஷன் ? அது தான் அண்ணாகிட்ட சொல்லிடீங்க தானே …? அப்புறம் என்ன ?
அஸ்வின் தங்கை அல்லவா ? அது தான் மிகத் தெளிவாக இருக்கிறாள் .
அவ்வளவு தானா ? ஏக்கமும் எதிர்பார்ப்புமாய் கேட்டான் .
வேற ….அவள் எதையும் காட்டிக் கொள்ளவில்லை .
ஒண்ணுமில்லை என்றான் .இறுக்கமாய்.
சரி …..என்றவள் துளிர்த்த கண்ணீரை அடக்கிக் கொண்டு மாடியேறினாள் .
சட்டென்று அவள் கரம் பற்றி இழுத்தான் , எதிர்பாராத அவன் செயலில் அவன் மார்பில் மோதி நின்றாள் .
இறுக்கி அணைத்து அவள் விழி நீரை துடைத்து விட்டு கையில் மொபைலை கொடுத்து போ என்றான் .
அவனை திரும்பி பாராது கண்ணீருடன் ஓடிவிட்டாள் .
“………………………”
அக்ஷயா மனமே இல்லாமல் ஊருக்கு கிளம்பினாள் .அவள் பத்து நாட்கள் ஆனது போலவே தெரியவில்லை .அவ்வளவு சீக்கிரம் நாட்கள் உருண்டோடிவிட்டது .
கீர்த்தியும் கண்ணீருடன் அவள் கரம் பற்றினாள் .
அண்ணி என்ன இது ? விழி தளும்பிய நெறெருடன் அண்ணியை அணைத்துக் கொண்டாள் .
நீ என்னோட உடன் பிறக்காம போயிட்டியே அச்சு ? தழு தழுத்தாள் .
என்மேல் உனக்கு எவ்வளவு அன்பு,அக்கறை ! நான் நிறைய புணணியம் இருக்கேன் அச்சு ….நீ என் அம்மா அச்சு ….கட்டியனைத்துக் கொண்டு கதறிவிட்டாள் .
என்ன அண்ணி நீங்க வேற ….இப்படி சென்டியை பிழியறீங்க ?
இந்த உலகத்தில் அன்பு மட்டுமே பிரதானம்னு எங்க அப்பா சொல்வார் .
என் அண்ணன் உங்க மேல் கொண்ட அன்பு எனக்கு புரிந்தது ! அது தான் அவர் லவ்விற்கு சப்போர்ட்டா இருதேன் .
அச்சு அப்படியே எங்க சரவணன் அண்ணன் உன் மேல கொண்ட அன்பையும் கொஞ்சம் கண்சிடர் பண்ணும்மா ! கண்சிமிட்டி சிரித்தாள்.
போங்க அண்ணி ….குங்குமத்தில் குளித்தது அவள் முகம் .
சரவணன் வெளியில் வரவே இல்லை . அவள் கிளம்புவதை காணும் சக்தி அவனுக்கு இல்லை .
மஞ்சுளா கணத்த மனதுடன் விடை கொடுத்தார் . அடுத்த செமஸ்டருக்கு கண்டிப்பா வரணும் என்ற கண்டிஷனோடு விடை கொடுத்தார்.
அவர் இல்லையா ஆன்ட்டி ?
ரூமில் ஏதோ படிச்சுட்டு இருக்கான் .கூப்பிடறேன் .
வேண்டாம் ஆன்ட்டி அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் ! நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடுங்க ! விடைபெற்றுக் கொண்டாள்.
இல்லையா பின்ன ? அதற்கும் நொடித்துக் கொண்டவருக்கு அவ்வளவு கர்வ்மாக இருந்தது .
பத்து நாளும் ஜாலியா இருந்துச்சுமா .கோயிலுக்கு போனோம் ,பீச்சுக்கு போனோம்., சினிமாக்கு போனோம் .அண்ணி சூப்பரா சமைக்கிறாங்க ! என்னை நல்லா பாரு ! நாலு கிலோ ஏறிட்டேன்னு நினைக்கிறேன் .
நாலு செட் சுடிதார் , ஹேண்ட் பேக் எல்லாம் சீமாட்டியில் வாங்கி கொடுத்தாங்க அண்ணி .இந்த பணத்தை என் செலவுக்கு கொடுத்தார் அண்ணன் .
குட்டிபையன் பேசத் தொடங்கிட்டான்மா தை த்தைன்னு என்னை விடவே இல்லை தெரியுமா ? வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவள் இது பாரு போட்டோஸ் என்று மொபைலில் எடுத்த செல்பிக்களை தாயிடம் காட்டினாள் .
குழந்தையை பார்த்ததும் சரோஜினி மனம் சாந்தம் கொண்டது . கூடவே தன மகன் முகம் கண்டும் ! இதுவரை இல்லாத பொலிவுடன் அவ்வளவு மகிழ்ச்சியுடன் மகன் இருப்பது கண்டு அவருக்கு கண் கலங்கியது
இதுதான் சந்தர்ப்பம் என்று அச்சு அண்ணன் காதலித்த பெண் கீர்த்தி என்றும் நடந்த அனைத்தும் சொன்னாள் .
மெய்யாலுமா ? என்னை சமாதானப்படுத்த அள்ளிவிடறியா ? சந்தேகமாய் கேட்டார் .
இரு வரேன் என்று உள்ளே சென்றவள் அஸ்வின் டைரியை கொண்டு வந்து காட்டினாள் .
கீர்த்தியை மனசில் நினைச்சுகிட்டு தான் அண்ணன் கல்யாணம் வேணாமுன்னு சொன்னுச்சு தெரியுமா ? அவள் விழிகள் கலங்கியது .
சரோஜினிக்கு ஏதோ மனதை பிசைந்தது . என் பிள்ளை காதலித்தானா ? அவன் ஆசைப்பட்ட பெண்ணுக்கு அவனே கல்யாணம் செய்து வைத்தானா ? உள்ளம் நொந்து போனது அவருக்கு
குழந்தை முகமும் கீர்த்தி முகமும் அவர் கண்முன் வந்து நின்றது .
வினோ அவர் தூக்கி வளர்த்த பிள்ளை . பெரியம்மா,பெரியம்மா என்று அவர் காலை சுற்றி வளர்ந்தவன் அல்லவா ? இருக்கும் குழந்தை இறந்தவனின் அடையாளம் என்பார்கள் .