அத்தியாயம்-11
நீண்ட தூர பயணம்,ஒரு நாள் முழுதும் ஏதும் சாப்பிடாத களைப்பு,அதோடு நேத்து ஏற்பட்ட அனுபவத்தில்,உடல் மனம் இரண்டுக்கும் ஏற்பட்ட பதைபதைப்பு,இப்படி பல காரணங்கள் சேர்ந்து, மதுவை காய்ச்சலில் தள்ளி இருந்தது..
தூக்கத்தில் இருந்தவளுக்கு, எழுந்து கொள்ள கூட முடியாத உடல் வலி..சோர்வு..
பேச்சி வந்து பார்க்கும் வரை அனத்திக் கொண்டு படுத்திருந்தாள்..
மருத்துவச்சியுடன் வீட்டிற்கு வந்தான் ராஜா..
அவளை சோதித்த மருத்துவச்சி,
“புள்ள பயந்துருக்கு.. அதான் காச்சலை கிளப்பி விட்ருச்சு.. கை, கால் எல்லாம் சிராய்ச்சு கிடக்கு.கன்னம் சிவந்து வீங்கி இருக்கு..எங்கேயாவது விழுந்து அடி பட்டுடுச்சா??”
மரகதம், ராஜாவை பார்த்தார்..
“என்ன லே பேசாம இருக்க. சொல்லு லே..நேத்து எங்கேயும் விழுந்துச்சா புள்ள..நான் வேற, நீங்க வார நேரம் தூங்கிட்டேன்..இல்லைன்னா, அப்போவே விசாரிச்சு இருப்பேன்..சொல்லுலே..”
“நேத்து காட்டுக்குள்ள கல்லு தடுக்கி விழுந்துட்டா.அதுல அடி பட்டுடுச்சு போல..”
சற்று தயங்கி மெதுவாய், நிலம் பார்த்து கூறினான்..
“என்னலே நீ பாட்டுக்கு விச்ராந்தையா சொல்லுற..போலன்னு.. இதான் உன் பொறுப்பா.. ??இப்படி தான் பார்த்துக்குவியா??, உன் கூட வந்த பிள்ளையை.. உண்மையை சொல்லு.அது விழுந்துச்சா, நீ தள்ளி விட்டியா கோவத்துல??”
“அம்மா..என்ன ம்மா.. நான் எதுக்கு அவளை தள்ளி விடனும்..??”
“அதை நீ தான் சொல்லணும்..அவ மேல கடுப்புலேயே சுத்துறவன், நீ தான்..அன்னைக்கு மாட்டு கொட்டகையில பிடிச்சு அடிக்கல..”
“பெரியம்மா,சின்னையாவை சும்மா வையாதிங்க..அந்த புள்ள தான் தடுமாறி விழுந்திருக்கு.கால் கட்டை விரல் நகம் பேர்ந்து இருக்கு பாருங்க..”
பேச்சி கூறியதும்,மருத்துவச்சியும் கவனித்து,
“ஆமா,கால் கட்டை விரல்ல கல்லு தட்டி விழுந்துடுச்சு போல..விழுந்ததுல பயந்திருக்கும்..”
[the_ad id=”6605″]
“ஏன் லே, காலையில எப்போ வந்திங்கன்னு கேட்டேன்ல, அப்போ கூட சொல்லல நீ..”
“நீங்க தம்பியையே குத்தம் சொன்னா, அதுவும் என்ன பண்ணும்..”
மருத்துவச்சியும், ராஜாவுக்கு பரிந்து கொண்டு வந்தாள்..
“இந்தாங்க மா..ரெண்டு நாளைக்கு மருந்து தரேன்..ஏலே பேச்சி, எப்போ எப்படி தரணுமுன்னு சொல்லுறேன்..சரியாய் குடு..”
“சரி சித்தி..”
மருத்துவச்சி போன பிறகும்,மரகதம் ராஜாவை முறைத்துக் கொண்டு சென்றார்..
“வெளிய கூட்டிட்டு போறேன்னு, விழுக்காட்டி கூட்டிட்டு வந்துருக்கான் பிள்ளையை..”
சத்தமாய் திட்டிக் கொண்டே போனார்..
‘இதுக்கே இப்படினா, இன்னும் முழுசும் தெரிஞ்சா..உன் கதை அவ்ளோ தான்..’
ஒரு பெரு மூச்சு விட்ட ராஜா..மதுவை பார்த்தான்..
ஒரே நாளில், வாடிய கொடி போல இருந்தாள்..
அறையில் யாரும் இல்லை.அவள் கையை பிடித்தவன்,அதை கண்களில் வைத்துக் கொண்டு,
“மன்னிச்சுக்கோடி.சீக்கிரம் சரி ஆகி வா.. எனக்காக,இந்த மாமாவுக்காக..”
மெதுவாய் முணுமுணுத்தவன். தன் சிந்தனை போன திசையில் அதிர்ந்து, அவள் கையை விட்டு விட்டு, வேகமாய் அறையை விட்டு வெளியே வந்தான்..
அங்கிருந்து நேராக தன் வயலுக்கு சென்றான். தனிமை தேடி..அங்கு உள்ள தோப்பு வீட்டில், கட்டிலில் படுத்தவனின் நினைவு, மதுவையே சுற்றியது..
‘எனக்காக சரி ஆகி வா என நினைத்தேனே ஏன்?? அப்படி என்ன, அவளுக்கு நான் முக்கியம்.அவளுக்கு மட்டுமா, இல்லை எனக்கும் அவள் முக்கியம் தானோ..??இல்லையெனில், இது வரை எந்த ரகசியத்தையும் மறைக்காத பாண்டியிடம் கூட, அவளை பற்றி கூற வில்லை..அம்மாவிடம் ஒரு வார்த்தை, முன்னமே, தனக்கு அவளை பற்றிய விஷயம் தெரிந்த உடனேயே கூறி இருந்தால்,அவள் இந்த வீட்டுக்கு வந்திருப்பதே சந்தேகம் தான்..
அப்படியே தன் அண்ணனுக்காக அனுமதித்திருந்தாலும், இப்பொழுது இருக்கும் நல்ல அபிப்பிராயம் வந்திருக்காது இவள் மேல்..
அன்னையின் கண்டிப்பு, அவன் அறிந்தது தானே..
அப்போ எனக்கு, அவள் மீது ஏதாவது ஈர்ப்பா??எப்பொழுது தோன்றியது இது??அவள் புகைப்படம் பார்த்த பொழுதா?? இல்லை என் கண் முன்னே, என் வீட்டில் நடமாட ஆரம்பித்த பொழுதா??எப்பொழுது என தெரியவில்லை என்றாலும், அந்த ஈர்ப்பு காதலாக மாறி விட்டது என புரிந்தது..
ஏன் மாறியது என புரியவில்லை..ஆனால் மாறிவிட்டது..
அவன் மனம் ஏற்றுக் கொண்டதை, அவன் மூளை ஏற்றுக் கொள்ள மறுத்தது..
‘அவள் தப்பானவள், தள்ளி நில்.உன் நண்பனை ஏமாற்றியவள், அவள்.’
‘அவளை பார்த்து பழகியதில்,இது வரை தவறாய் ஒன்றும் தோன்றவில்லை..இவள் நட்பாய் பழகி, அவன் தவறாய் புரிந்து கொண்டிருக்கலாம்..’
‘அந்த புகைப்படங்களை பார்த்த பின்னுமா அவளை நம்புகிறாய்??வினோத் மட்டும் அல்லாது வேறு சில ஆண்களோடும், அவ்வளவு நெருக்கமாய்..’
‘அவள் படித்து வளர்ந்த சூழ்நிலையில், இது சாதாரணமாய் இருக்கலாம்..கிராமத்தில் வளர்ந்ததால், எனக்கு தவறாய் தெரிகிறதோ என்னவோ..’
‘நீயும் கல்லூரி படிப்பு, சிட்டியில் தானே படித்தாய்.??.’
[the_ad id=”6605″]
‘ஆனால், என் வேர் கிராமம் தானே??’
‘அவள் வேரும் கிராமம் தான்.. அவள் அப்பா, இங்கு பிறந்து வளர்ந்தவர் தான்.. அதோடு, அவள் கலாச்சாரம் அது எனில், இங்கு எப்படி பொருந்தும்..உன்னோடு எப்படி பொருந்துவாள்.. உன் குடும்பத்தோடு எப்படி அனுசரித்து வாழ்வாள்..’
‘அவள் அப்பா தான் இங்கு பிறந்தவர்..அவள் அந்த சூழ்நிலையில் வளர்ந்தவள்..அதோடு, இவ்வளவு நாள் இங்கு தானே, எல்லோரோடும் பொருந்தி இருக்கிறாள்..அதே போல, இனியும் என்னோடும், என் குடும்பத்தோடும், பொருந்தி இருப்பாள்..’
மனமும் மூளையும், இரு வேறு பிரிவாக நின்று சண்டை போட்டது..
‘இப்பொழுது, முடிவாக என்ன சொல்கிறாய்..??’
மூளையின் கேள்விக்கு,
‘அவள் கண்களில் நான் பார்த்த காதல் நிஜம்..என் முடிவை அவளிடம் சொல்லும் தகுதியை நான் இழந்து விட்டேன்..நேற்றோடு..இனி முடிவு, காலத்தின் கையில்..’
ஒரு பெரு மூச்சுடன்,
கண்கள் மூடிப் படுத்தவன், அப்படியே உறங்கி விட்டான்..
அலைபேசி ஒலியில், கண் விழித்தவன் .சுற்றுப்புறம் உணர, சில நொடி ஆகியது..
பின் மொபைலை இயக்கி,
“சொல்லு ம்மா..”
“எங்க லே போய்ட்டே.. மதியம் போனவன்..இருட்டி போச்சு, ஆளே காணும்..மதியமும் சாப்பிட வரல..மில்லுல இல்லைன்னு, வேலு சொன்னான்..”
“தோப்பு வீட்டுல இருக்கேன் ம்மா.. இதோ வரேன்..”
வீட்டிற்கு வந்தவனை கண்டு,
“ஏன் லே,இப்படி தான் சொல்லாம கொள்ளாம போய்டுவியா??உடம்பு சரி இல்லாத பிள்ளையை வச்சுக்கிட்டு, நான் தனியா என்ன செய்வேன் அவசரத்துக்கு..”
“மதுக்கு என்ன ஆச்சு??”
சற்று பதற்றத்துடன் கேட்டான்..
“அவளுக்கு ஒண்ணுமில்லை.. இப்போ தான் கண்ணு முழிச்சுது..கஞ்சி கொடுத்தா பேச்சி.. திரும்ப மருந்து கொடுத்து தூங்க வச்சோம்..”
“ஓ..அதான் பேச்சி இருக்குல்ல,அப்புறம் என்ன??”
“ஏன் லே விவரம் புரிஞ்சவன் மாதிரி தான் பேசுறியா??அவசரமுன்னா அவ என்ன பண்ணுவா?? கார் எடுத்துட்டு டவுன்னு ஆஸ்பத்திரிக்கு போகணுமுன்னா கூட்டிட்டு போவாளா??”
“அதான் ஒண்ணும் ஆகலை தானே, அப்புறம் என்ன??”
‘ஓட்டுநர் இருக்கிறார்..அதை கூறினால், அதற்கும் திட்டு விழும்..’
“இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..கோவம் மட்டும் சுள்ளுன்னு வரும், குடும்பத்துக்கே..வா சாப்பிடலாம்..”
இரவு உணவு உண்டவன் தன் அறைக்கு போனான்..வெகு நேரம் உறக்கம் வரவில்லை..
எதிர் அறையை திறக்கும் சத்தம் கேட்டது..ஜன்னல் வழியே பார்த்தான்..பேச்சி மருந்து கொடுத்து விட்டு சென்று கொண்டிருந்தாள்..
மதுவுக்கு மருந்து கொடுப்பதற்காக, இன்று இங்கேயே தங்க சொல்லி இருந்தார் மரகதம்..
சிறிது நேரம் யோசித்தவன், பின் மெதுவாய் தன் அறை கதவை திறந்து வெளியே பார்த்தான்.யாரும் இல்லை..மெதுவாய் எதிர் அறைக்கு சென்றான்..
மனம் திக் திக் என்றது.
‘சினிமா பட கதாநாயகர்கள் எல்லாம் எப்படி தைரியமாய் கதாநாயகியை பார்க்க அவள் வீட்டுக்கே செல்கிறார்களோ??சொந்த வீட்டில் எதிர் அறையில் இருப்பவளை பார்பதற்குள், வேர்த்து கொட்டுக்கிறது..’
அவள் அறையில் விடிவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.
மது ஆழ்ந்த துயிலில் இருந்தாள்..
அவள் அருகே சென்றவன், அவள் முகத்தை சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தான்..
தூங்கும் போது மனிதரின் குணம் முகத்தில் தெரியும் என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது..
‘இந்த முகம் நிச்சயம் தவறு செய்திருக்காது..’
எண்ணத்தின் முடிவில், இவன் கையில், அவள் கரம்..
அதில் இதழ் ஒற்றினான்..தூக்கத்திலும் அவள் உடல் சிலிர்த்தது..
” மதி,நீ தப்பானவன்னு,இன்னும் என் மூளை சொல்லுது..என் மூளை, ஆதாரத்தை மட்டும் நம்புது..ஆனா என் மனசு, உன்னை விரும்புது..நீ தப்பு செஞ்சுருக்க மாட்டேன்னு சொல்லுது..என் மனசு, என் கண்ணு முன்னாடி பார்க்குற உன் செயல்களை நம்புது..நீ குற்றம் இல்லாதவன்னு சொல்லுது..
நானும் உன்னை விரும்புறேன்..ஆனா நேத்து நான் நடந்துகிட்ட விதத்துக்கு, நீ என்னை ஏத்துக்குவியா தெரியல..??
அதுக்கு எனக்கு தகுதி இருக்கான்னும் தெரில..
அதுக்கு உன் கிட்ட நான் மன்னிப்பு கேட்டே ஆகனும்..சாரி மதி..
இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும், நானா என் காதலை உன் கிட்ட சொல்ல மாட்டேன்..
இதுக்கும் மேலேயும் நீ என்னை விரும்பினா, நீயே என் கிட்ட வந்துடு..
அதுவரை காத்திருப்பேன்..”
[the_ad id=”6605″]
மென் குரலில் கூறியவன்,மீண்டும் அழுத்தமாய் அவள் கையில் இதழ் ஒற்றிவிட்டு, அவள் கையை விடுவித்தான்.இல்லை, விடுவிக்க முயன்றான்..ஆம் முயன்றான்..அவள், இவன் கரங்களை இறுக பற்றி இருந்தாள்..
அதிர்ந்து போய் அவள் முகம் பார்த்தான்..அவள் உறக்கத்தில் தான் இருந்தாள். ஆழ்ந்த உறக்கத்திலும், இவன் கரங்களை பற்றி இருந்தாள்..
மென்னகையோடு, மெதுவாய் தன் கரத்தை விடுவித்தான் ராஜா..
பின், தன் அறைக்கு வந்து படுத்தவனுக்கு, நித்ரா தேவி அடைக்கலம் தந்தாள்..
நிம்மதியான உறக்கம் என்பார்களே, அது போன்ற உறக்கம், அவனை ஆட்கொண்டது..
இரு நாட்கள் கடந்திருந்தது..மது சற்று தெளிவாய் எழுந்து அமர,அந்த இரண்டு நாட்கள் தேவைப்பட்டது..
மூன்றாம் நாள் ஹாலுக்கு வந்தாள்..
“வா கண்ணு.எதுக்கு கீழ வந்த??பேச்சி கிட்ட சாப்பாடு கொடுத்து விட்டுருப்பேன் இல்ல..”
“எனக்கு சரி ஆகிடுச்சு அத்தை.. கொஞ்சம் சோர்வா இருக்கு..அப்படியே ரூம்குள்ள அடைஞ்சு கிடக்க, கஷ்டமா இருக்கு..அதான் இங்க வந்தேன்..இங்கயே சாப்புடுறேன் அத்தை..”
“சரி கண்ணு,உட்காரு.. சமையல் ஆனதும் கூப்புடுறேன்..”
அங்கே அமர்ந்தவள்,அன்றைய தினசரியை எடுத்து, படிக்க ஆரம்பித்தாள்..
அப்பொழுது மாடியில் இருந்து இறங்கி வந்த ராஜா,அவள் அமர்ந்திருப்பதை பார்த்து,அங்கேயே நின்று அவளை பார்த்தான்..இமைக்க மறந்து..
தினசரியில் இருந்து பார்வையை திரும்பியவள், இவனை நிமிர்ந்து பார்த்தாள்..
இவள் பார்ப்பதை உணர்ந்ததும்,வேகமாய் பார்வையை திருப்பினான் ராஜா..
‘அப்படி போடு.நான் பார்க்கிற மாதிரி,சாரும் இப்போ மறைந்திருந்து பார்க்க ஆரம்பிச்சுட்டாரா..சரித்திரம் திரும்புகிறது..’
முகத்தில் நகை படர அமர்ந்திருந்தாள்..
“சாப்பிட வா கண்ணு..”
மரகததின் அழைப்பில், அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்..இவளை மறந்தும் கூட, நிமிர்ந்து பார்க்கவில்லை ராஜா..
இருவருக்கும் பரிமாறி விட்டு,உணவு எடுக்க உள்ளே சென்றார் மரகதம்..
“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன,ஸ்வாமி..”
என மென் குரலில் பாடினாள் மது..
அதில் புரை ஏற, தலையில் தட்டிய படி நிமிர்ந்து, இவளை பார்த்தான் ராஜா..
“பாத்து ராசா, மெதுவா சாப்பிடு..”
வேகமாய் வந்த மரகதம்..அவனுக்கு தண்ணீர் கொடுத்தார்..
ஏதும் அறியாதவள் போல, தட்டை பார்த்து சாப்பிட்டாள் மது..
வேகமாய் சாப்பிட்டு விட்டு,கிளம்பினான் ராஜா..
“ம்மா, மில்லுக்கு போய்ட்டு, வயலுக்கு போறேன்..மதியம் வெளிய சாப்பிட்டுக்குறேன்..”
அன்னையிடம் கூறிவிட்டு சென்றான்..
‘என்னை பார்த்து ஓடுறியா ராசா, உன்னை விட்டா தானே..’
இதுவே, மேலும் இரு நாட்களுக்கு தொடர்ந்தது..
அவள் பார்க்காத போது பார்ப்பதும்..அவள் பார்த்தால், வேறு புறம் முகம் திருப்புவதும் என்று, கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருந்தான் ராஜா..
‘இவனை இப்படியே விட்டா, சரியா வர மாட்டான்.. அதிரடில இறங்கிட வேண்டியது, தான்..என்ன செய்யலாம்..’
தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள் மது..
அவளுக்கு வழிகாட்டி போல, அகல் வந்தாள்..
“அண்ணி,உடம்புக்கு முடியலையாமே, இப்போ எப்படி இருக்க??நிதம் அம்மா கிட்ட கேட்டுக்குவேன்..போன்ல..அங்க விஷேச வீட்டுல, ஒரே வேலை, பேச கூட நேரம் இல்லை.. இப்போ பரவால்லையா,ரொம்ப இளைச்சு போய்ட்டே..”
வழக்கம் போல, பட படவென, கேள்விகளை அடுக்கிக் கொண்டே, உள்ளே நுழைந்தாள் அகல்..
“ஏண்டி,கொஞ்சம் மூச்சு விட்டு பேசு..அந்த பிள்ளைக்கு பதில் சொல்ல நேரம் கொடுக்காம பொறியிரவ..”
“க்கும்.. எப்போ பாரு..என் கிட்டேயே வம்பு வள..”
“யாரு நானு..நீ தான், என் மாமியார் இல்லாத குறைக்கு,என் கிட்ட மல்லுக்கட்டுற..பிள்ளையை கொடுடி..வாடா கண்ணு..ஊருக்கு போய்ட்டு வந்தீங்களா தங்கம்..”
பேரனை வாங்கிக் கொஞ்சினார் மரகதம்..
“சொல்லு அண்ணி,என்னாச்சு உனக்கு..??”
“அதை என் கிட்ட கேளு,உன்ற அண்ணன்,என்னைக்கும் இல்லாத அதிசயமா,ஓடைக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி, கூட்டிட்டு போய், பிள்ளையை விழுக்காட்டி கூட்டிட்டு வந்துட்டான்.. பிள்ளை பயந்து, காய்ச்சலே வந்துடுச்சு..
இப்போ தான், தேறி உட்கார்ந்து இருக்கு..அது கிட்ட ஒரு வார்த்தை, எப்படி இருக்கன்னு கூட கேட்காம, மூஞ்சியை திருப்பிக்கிட்டு திரியுறான்.. என்னவோ போ..இந்த பிள்ளையை கண்டாலே, அவனுக்கு ஆகலை.. ஏன் இப்படி பண்ணுறான்னு தெரியல..”
“அத்தை, அப்படி எல்லாம் இல்ல..அவர் மேல எந்த தப்பும் இல்ல..நான் தான் கால் ஸ்லிப் ஆகி விழுந்துட்டேன்..அவரை ஒண்ணும் சொல்லாதீங்க..”
“ஆமாம் ம்மா.. எப்போ பாரு,அண்ணனையே குத்தம் சொல்லாத..அது தப்பு செய்யாது.. செய்யுறவங்களையும் பிடிக்காது அதுக்கு..”
அகலின் பேச்சில், ஒரு நொடி முகம் மாறியது மதுவிற்கு..
“நீ, உங்க அண்ணனை விட்டு கொடுப்பியா..??”
“ஆமாம், அப்படி தான்..அண்ணன் எங்க..??”
“அவன் எங்க வீடு தங்குறான்..முன்ன விட மோசம்..ராவுக்கு தான் வீட்டு பக்கம் தலை காட்டுறான்.. சாப்பிட கூட வாரதில்லை..அதான் இன்னைக்கு சொல்லிட்டேன்..வெளிய சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காத..வீட்டு சாப்பாடு அனுப்புறேன்னு..
[the_ad id=”6605″]
வயலுக்கு அனுப்ப சொன்னான்..ஆள் அனுப்புறேன்னு சொன்னான்..இப்போ வந்துடும் ஆள்.. நான் அதுக்கு தயார் பண்ணுறேன்..நீங்க பேசிக்கிட்டு இருங்க..”
மதுவிற்கு தலைக்குள் மின்னல் வெட்டியது,நல்ல யோசனை.
“அகல்,நாமளே வயலுக்கு போகலாம்..போய் சாப்பாடு கொடுத்துட்டு, கொஞ்ச நேரம் இருந்துட்டு வருவோம்..”
“இந்த வெயில்லையா அண்ணி..நாளைக்கு காலையில போவோம்..”
“இல்ல அகல், ஒரு வாரமா வீட்டுக்குள்ளே இருக்க போர் அடிக்குது..வா அகல்..ப்ளீஸ்..”
“எதுக்கு அண்ணி ப்ளீஸ் எல்லாம்..இதோ அம்மா கிட்ட சொல்லிட்டு, கேரியர் வாங்கிட்டு வரேன்..”
அப்பொழுது கேரியர் வாங்க ஆள் வந்து,வெளியே நின்றான்..
அவனை கண்ட அகல்,
“இந்தா, இதை கொண்டு போ..நான் பின்னாடியே வரேன்..நான் வந்து பரிமாறுறேன்..”
“சரி தாயி..”
கூறிவிட்டு, வாங்கி சென்றான்..
மரகதத்திடம், பிள்ளையை விட்டு விட்டு இருவரும்,வீட்டிற்கு என இருக்கும் காரில், ஓட்டுநர் வண்டி ஓட்ட, பின் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டே, வயலுக்கு சென்றார்கள்..