அந்த கவரை வெறித்த படி நின்றான் ராஜா..மதுவை விரும்புவதை அவன் அறிந்து கொள்ளுவதற்கு முன்பு, அவளை பற்றி தெரிந்து கொள்ள, துப்பறியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினான்..
அவர்கள், அறிக்கை தயார் என்று சொல்லவும்,அதை வாங்கி வர பாண்டியை அனுப்பினான்..பாண்டிக்கே அது என்னவென்று தெரியாது..இப்பொழுது,அதை பிரித்து பார்க்க அவன் மனம் விரும்பவில்லை .
அதில் மதுவுக்கு எதிராக கடுகு அளவு செய்தி இருந்தாலும்,அவனால் ஏற்று கொள்ள முடியும் என்று தோன்றவில்லை..
அந்த கவரை, அவன் துணிகளுக்கு அடியில் பீரோவில் போட்டவன்..
‘அவ எப்படி இருந்திருந்தாலும்,இனி என் உடைமை..அவளை சந்தேக படுறது.. என்னையே சந்தேகப்படுற மாதிரி….’
ஒரு முடிவோடு கீழே சென்றான்..
“அப்புறம் மது, எங்க அம்மா சொல்லுச்சு..பாம்பு கூட உரண்டை இழுத்து,கடி வாங்குனியாம்..
அதுக்கப்புறம், அந்த பாம்பை பார்க்க முடியலையாமே. அது உயிரோட இருக்கா??”
“ஏலே,ஆக்கம் கெட்டவனே..என்னாலே பேசுற??அந்த பிள்ளையே காய்ச்சல் வந்து,பாம்பு கொத்தி, கஷ்டப்பட்டு பொழச்சு கிடைக்கு..பேச்சை பாரு..”
“அதை தான் அத்தை விசாரிக்கிறேன்..என்னம்மா பாசமலரே, எப்படி இருக்க?? அப்படின்னு..நலம் விசாரிச்சது குத்தமா..??”
“நல்லா விசாரிச்ச நலம்..பாம்பு உயிரோட இருக்கா??பல்லி உயிரோட இருக்கான்னு..??”
“எதுக்கு அத்தை கோவப்படுற??பார்த்து இத்தனை நாள் ஆச்சு..வந்ததும்..வாடா கண்ணு,மதியம் கோழி அடிக்கவா, ஆடு அடிக்கவா..மீனா,இறாலான்னு கேட்காம..திட்டுற..”
“க்கும்.. உன்னை தான் அடிக்கனும்..மீனாம் கோழியாம், அது ஒண்ணு தான் குறைச்சல்..நொடித்துக் கொண்டு உள்ளே சென்றார்..”
“வேற என்ன குறை அத்தை..??”
சத்தமாய் கேட்டு விட்டு, சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்..
அப்பொழுது, மாடியில் இருந்து இறங்கி வந்தான் ராஜா..கீழே நின்று கொண்டிருந்த மதுவின் பார்வை, சட்டென்று உயர்ந்து அவனை விழுங்கியது..
சிந்தனையில் வந்து கொண்டிருந்த ராஜாவும், எதேர்ச்சையாக நிமிர்ந்தவன்,இவள் பார்வை வீச்சில்,கண்களை அகற்ற முடியாமல் பார்த்துக் கொண்டு வந்தான்..
தட்டில் உணவு தீர்ந்ததும்,அதை கேட்பதற்கு நிமிர்ந்த பாண்டியின் கண்களில், இந்த காட்சி பட்டது.
இடது கையால், கண்ணை கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தவன்..
“ஆண்டவா,என்ன டா நடக்குது இங்க??ஒரு பத்து நாள் ஊருல இல்ல..இப்போ வந்து பார்த்தா, காதல் காவியமே ஓட்டி இருப்பானுங்க போல..
இன்னும் பத்து மாசம் கழிச்சு வந்திருந்தா, ஒரு பிள்ளையை பெத்து, காது குத்துக்கு மாமன் சீர் செய்யுன்னு சொல்லி,பிள்ளையை மடியில உட்கார வைப்பானுங்க போல..”
சத்தமாய் அவன் புலம்பிய புலம்பலில், சுய உணர்வுக்கு வந்தனர் இருவரும்..
வேகமாய் உள்ளே பார்த்தான் ராஜா..அவன் அம்மா, பின் புறம் பேச்சியோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்..
‘நல்ல வேளை’ என நினைத்தவன்..
“என்ன டா உளரிக்கிட்டு இருக்க??”
“அப்படி தான் இருக்கும் மாப்பு..
இப்போ, அப்படி தான் இருக்கும்..
காதல் கண்ணை மறைக்கலடா,
கபாலத்தையே மறைச்சிடுச்சு..
அதான், தோழனை பார்த்து இப்படி கேட்குற..”
“டேய் பக்கி..எதையாவது பேசாத டா..”
“ஏம்மா பாச மலரே,அவன் தான் பிகரை பார்த்ததும், பிரெண்ட்ஷிப் அஹ் கடல்ல கவுத்துட்டான்..நீயாவது,
அண்ணா,அண்ணா, இப்படி, இப்படி, காதல் கடல்ல தொபுக்கடீருன்னு விழுந்துட்டேன்..அப்படின்னு சொன்னியா..??”
“என்ன அண்ணா, விவரம் இல்லாம பேசுறீங்க..யாராவது, அண்ணா கிட்ட சொல்லிட்டு காதலிப்பாங்களா??வளருங்க ண்ணா..”
கூறிவிட்டு, நமட்டு புன்னகையுடன் உள்ளே சென்றாள்..
“ரைட்டு…இவ்ளோ நாள் பேசா மடந்தையா இருந்த புள்ள..இன்னிக்கு, வெளுத்து வாங்குது..உன் ட்ரைனிங் அஹ் மாப்பு..??”
“டேய், பேசாம சாப்பிடு டா..”
“எனக்கு, ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லு மாப்பு..சாமியார் மாதிரி இருந்துகிட்டு, எப்படி டா மதுவை உஷார் பண்ண??அந்த ரகசியத்தை மட்டும் சொல்லு மாப்பு..நமக்கு, பொடிக்கு புகையிலை கூட சிக்க மாட்டேங்குது..”
“ஒழுங்கா சாப்பிட்டு, சீக்கிரம் மில்லுக்கு கிளம்பு..வேலை நிறையா இருக்கு..ஏதாவது, கற்பனை பண்ணி பேசிக்கிட்டு இருக்காத..”
பாண்டியின் பேச்சில்,
சற்று முகம் சிவக்க கூறினான் ராஜா..
“ஏது, நான் கற்பனை பண்ணுறேனா..??உன் மூஞ்சியை பார்த்தாலே தெரியுதே..டன், டன் அஹ், வெட்கம் வலியுது..பொண்ணுங்க முகம் தான் சிவக்குமுன்னு கேள்வி பட்டுருக்கேன்.. இன்னிக்கு தான் ,ஒரு ஆணோட முக சிவப்பை நேரா பார்க்குறேன்..”
“உதை வாங்க போற டா நீ??”
“என்னமோ மாப்பி..இப்போ எல்லாம், சாமியாருகளுக்கு தான் சூப்பர் பொண்ணுங்க எல்லாம் உஷார் ஆகுது..கலிகாலம்..”
“நீ பேசிட்டே இரு..நான் மில்லுக்கு கிளம்புறேன்..”
“டேய் சாப்பிட்டு போடா..”
அவனை சந்தேகமாய் பார்த்தான் ராஜா..
“என்ன டா, என் மேல இவ்ளோ அக்கறை..??”
“இல்ல மாப்பி,நீ சாப்பிடாம போய்ட்டினா.. அத்தை.. என் பிள்ளையே சாப்பிடலை, உனக்கு என்ன கேடுன்னு கேட்டு..சாப்பாடு போடாம போய்ட்டா.அதான். நான் சாப்பிடுற வரை நில்லு..அப்புறம் வேணா, ஒண்ணா போலாம்..”
தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்தான்..
மது இருவருக்கும், உணவு எடுத்து வந்தாள்..
“வாம்மா.. வா.. அண்ணனுக்கு வை..”
“இருங்க அண்ணா..அவருக்கு வச்சுட்டு, மிச்சம் இருந்தா வைக்கிறேன்..”
‘நீயா பேசியது..’
என்னும் பார்வை பார்த்தான் பாண்டி..
வந்த புன்னகையை அடக்கி, சாப்பிட ஆரம்பித்தான் ராஜா..
பாண்டிக்கும் வைத்தவள்,
“சாப்பிடுங்க அண்ணா..”
“க்கும்..”
நொடித்துக் கொண்டு, சாப்பிட ஆரம்பித்தான்..
சாப்பிட்டு விட்டு எழ போன ராஜாவிடம்,
“இன்னொரு இட்லி வச்சுக்கோங்க மாமா..”
அவள் அழைப்பில், பொறை ஏறியது ராஜாவுக்கு..
அவன் தலையில் தட்டி, தண்ணீரை எடுத்து அவன் வாயில் வைத்து, அருந்த கொடுத்தாள் மது..
“என்ன டா நடக்குது இங்க..??ஒரு பச்சை பிள்ளை முன்னால..இந்த கொஞ்சு கொஞ்சுரீங்க..நல்லா இல்ல சொல்லிட்டேன்..என் பிஞ்சு நெஞ்சு தாங்காது..”
அவன் சொன்ன கடைசி வரிகளை மட்டும் கேட்ட கொண்டு வந்த மரகதம்..
“என்ன லே நல்லா இல்ல..”
கேட்டுக்கொண்டே, அங்கு வந்தார் மரகதம்..
“இட்லியா இது ??கருங்கல்லுக்கு, வெள்ளை பெயிண்ட் அடிச்சு வச்ச மாதிரி இருக்கு..”
அவரை முறைத்துக் கொண்டே கூறினான்..
‘ரெண்டும் ரொமான்ஸ் பண்ணும் போது எல்லாம் வெளிய நின்னுட்டு, என்னை கேள்வி கேட்க மட்டும், லாரி பிடிச்சு வந்துற வேண்டியது..’
“இப்போ தானே லே..மல்லிகை பூவு மாதிரி இருக்குன்னு சொன்ன..”
“அது அந்த இட்லி..இது இந்த இட்லி..”
அவன் பதிலில்,
‘நல்லா தானே இருந்துச்சு, பயபுள்ள..??’
என்னும் பார்வை பார்த்தவர்..
“ஒவ்வொரு இட்லியும், ஒவ்வொரு மாதிரி இருக்குமா லே..??”
“இருக்குதே..இங்க இருக்குத்தே..நான் போனப்போ, சிங்கள் தோசையா இருந்தது எல்லாம்..இப்போ, செட் தோசையா சுத்துது..
உன் குத்தமா?? என் குத்தமா?? யாரை நானும் குத்தம் சொல்ல..”
“கோட்டி பய மாதிரி உளராம, சாப்பிடு லே..”
கூறிவிட்டு உள்ளே சென்றார்..
அவர்கள் பேசுவதை புன்னகையோடு கேட்டிருந்த இருவரும், அவர் சென்றதும்,சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தார்கள்..
“சிரிங்க லே சிரிங்க..இந்த முரட்டு சிங்கள் பாவம், உங்களை சும்மா விடாது..”
ஒருவழியாய் சாப்பிட்டு, மில்லுக்கு கிளம்பினார்கள்..
இரண்டு நாட்கள் கடந்திருந்தது..
அன்று கூடத்தில் அமர்ந்து,ஏதோ எழுதி கொண்டிருந்தான் ராஜா..
மாடியில் இருந்து இறங்கி வந்த மது,அவனை பார்த்துக் கொண்டே வந்து, அருகில் அமர்ந்தாள்..
அசுவாரஸ்யமாய் திரும்பியவன், இவள் அருகில் அமர்ந்திருப்பதை கண்டு பதறி,திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தான்..
யாரும் இல்லை..
“என்ன மதி இது??எழுந்திரு??உள்ள போ..இல்ல, தள்ளி வேற இடத்தில உட்காரு..”
“சும்மா, ரொம்ப பண்ணாதீங்க..நான் இங்க உட்கார்ந்தா, குறைஞ்சு போய்டுவீங்களா??இல்ல, கரைஞ்சு போய்டுவீங்களா??”
“சொன்னா கேளு மதி..இது, நடுக்கூடம்.
யாரு வேணாலும் வருவாங்க..அம்மா,அகல், பாண்டி, யார் வந்தாலும் பிரச்சனை..
அகலுக்கு ஏதோ சந்தேகம் இருக்கு..பாண்டி, நிச்சயமே பண்ணிட்டான்.. அம்மாக்கு தெரிஞ்சா, தப்பா நினைப்பாங்க..தள்ளி உட்காரு..”
“க்கும்.. உங்க கற்புக்கு நான் கியாரண்டி..நீங்க, உங்க வேலையை பாருங்க..நான், என் வேலையை பார்க்குறேன்..”
கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, அவனை பார்க்க ஆரம்பித்தாள்..
“சொன்னா கேட்க மாட்டியா??”
அவன் கோபத்தில்,
“சரி, சரி, அங்க உக்காருறேன்..ரொம்ப தான்..”
அவனுக்கு
அழகு காட்டி விட்டு, வேறு இருக்கையில் அமர்ந்தாள்..
அவன், தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.. இவள், இவளுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தாள்..
அவனை பார்க்கிறது தான்..
சிறிது நேரத்தில், அவன் அலைபேசி இசைத்தது..
வீடியோ கால்..ராஜசேகரிடம் இருந்து,
அதை எடுத்துப் பார்த்தவன்,
“உன் அப்பா தான்..”
அவளிடம் கூறியவன்.
அதை இயக்கி,
“சொல்லுங்க மாமா..”
“எப்படி இருக்க ராஜா??வீட்டுல எல்லோருக்கும் சௌவுக்கியமா??”
“எல்லோரும் நல்லா இருக்கோம் மாமா..மது கிட்ட பேசிட்டு இருங்க..அம்மாவை கூப்பிடுறேன்..”
போனை, அவளிடம் கொடுத்து விட்டு சென்றான்..
தந்தையின் முகம் பார்த்தவளின் கண்கள் கலங்கியது,
“எப்படி இருக்குற மது..??”
தலை அசைத்தாள்..
அவளின் கலங்கிய கண்களை பார்த்து,அவருக்கும் கண்கள் கலங்கியது..
“ரொம்ப மிஸ் பண்ணுறியா??எங்களை..”
ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்.
“அந்த கரிகாலனுக்கு எதிராய், எதோ பெரிய ஆதாரம் சிக்கி இருக்காம்..நம்ம ஐஜி அங்கிள் சொன்னார்..சீக்கிரம், ரெண்டு மூணு கேசுல தூக்கி உள்ள போட்டுடுவார்.. நீ சென்னை வந்துடலாம்..”
அவர் பேச்சில் துணுக்குற்றவள்..
“நான், இங்க கொஞ்ச நாள் இருக்கேன் ப்பா.. இங்க பிடிச்சிருக்கு..எனக்கு..”
“நீ, இப்படி பேசுறதை கேட்க, சந்தோசமா இருக்கு டா..”
அவள் பேசிக் கொண்டிருக்கும் போது, மரகதம் வந்தார்..
அவளின், கலங்கிய முகத்தை பார்த்துக் கொண்டே வந்த ராஜா,ஒரு புருவம் உயர்த்தி, என்னவென கேட்டான்..
தலையசைத்து, ஒன்றும் இல்லை என கூறியவள்..அலைபேசியை அத்தையிடம் கொடுத்து விட்டு, உள்ளே சென்று விட்டாள்..
புருவம் சுருங்க அவளை பார்த்தவன்..இங்கு, இவர்கள் பேச்சில் கவனம் ஆனான்..
இவனும் அவரோடு பேசி விட்டு அழைப்பை துண்டித்தவன்..யோசனையில் ஆழ்ந்தான்..
அடுத்த இரண்டு நாட்களுக்கு, அவளை தனிமையில் சந்திக்க முடியவில்லை..அவள் அறைக்கு அடிக்கடி செல்வது நன்றாக இருக்காது என, அமைதி காத்தான்..
அன்று, அவனை தேடி அவளே, அவன் மில்லுக்கு வந்தாள்..
அகலையும் அழைத்துக் கொண்டு.
“அண்ணி, மில்லை பார்க்கணுமுன்னு சொன்னுச்சு..”
“பாருங்க..”
ஒவ்வொரு இடமாய் சுற்றிக் கட்டினான் ராஜா..
அத்தனையும், ஆர்வமாய் பார்த்தாள் மது..எதை எப்படி செய்கிறார்கள்??என்ன செய்கிறார்கள்??என, கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டாள்..
அவளின் மகிழ்ச்சியை, ஓர பார்வையில் ரசித்துக் கொண்டே வந்தான் ராஜா..
அவர்கள் இருவரையும், அவன் அறையில் அமர வைத்து விட்டு,அவர்களுக்கு ஜூஸ் வர வைத்து கொடுத்து விட்டு, பொருட்கள் தயாரிக்கும் இடத்துக்கு சென்றான் ராஜா..
சற்று நேரத்தில், இவளும் அகலிடம் காரணம் கூறிவிட்டு,அவன் போன இடத்துக்கு சென்றாள்..
தொழிலாளர்களுடன் பேசி விட்டு, சற்று, ஆட்கள் இல்லாத தனி பகுதிக்கு இவன் செல்வதை பார்த்துக் கொண்டே, பின்னோடு சென்றாள்..
அது, ஸ்டாக்குகள் வைக்கும் அறை, அந்த நேரத்துக்கு, ஆட்கள் இருக்க மாட்டார்கள்..
அங்கு நின்று இருந்தவன் அருகே சென்றவள்,பின்னிருந்து அவனை அணைத்துக் கொண்டாள்..
ஒரு நொடி திகைத்தவன்,அவள் தான் என உணர்ந்ததும்,
“என்ன மதி இது??யாராச்சும் வருவாங்க…வேலை செய்யுறவங்க..”
“வீட்டுலயும் காரணம் சொல்லுங்க..இங்கயும் சொல்லுங்க..ஆள் இல்லாத தீவுக்கு போய்டுவோம் வாங்க..நாம ரெண்டு பேர் மட்டும்..”
கடுப்பாய் கூறினாள்..
புன்னகையோடு அவள் புறம் திரும்பியவன்,
“ஹ்ம்ம்..போவோம்..சீக்கிரம்..கல்யாணம் பண்ணிக்கிட்டு..”
கண்ணடித்து கூறினான்..
“சரியான ரூல்ஸ் ராமானுஜம் நீங்க..இங்க வராத, அங்க உட்காராத, அப்படி இப்படின்னு..அப்போ, எப்போ தான் நான் பேசுறது?? உங்க கூட..தனியா பேசவே முடியல..நானே, கஷ்டப்பட்டு அகலை சரி கட்டி வந்தா, இங்கயும் காரணம் சொல்லுங்க..”
“சரி, சரி..மாமா வரட்டும்..நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன்..”
“அப்போ அது வரை, தனியா பேச வர மாட்டீங்க..இப்படியே காரணம் சொல்லுவிங்களா??”
அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்..கண்ணில் தோன்றிய புன்னகையுடன், அவளை பார்த்தான்..
“உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது..
அது, என் கண்ணை வந்து வந்து கிள்ளுது..!!”
அவள் பாடலில் விரிந்த புன்னகையுடன்,
“அஹான்..”
சிரித்தவன்..
“சரி,அன்னைக்கு மாமா கூட பேசுனப்போ,ஏன் ஒரு மாதிரி ஆன??முகம் எல்லாம் கலங்கி இருந்துச்சு..”
இப்பொழுதும் முகம் மாறியவள், அவன் கைகளை பிடித்துக் கொண்டு,
“அவரு, என்னை அங்க சீக்கிரம் வந்துடலாம்னு சொன்னார்..அதான்.. இங்க இருந்து, எனக்கு போகவே பிடிக்கல..”
“இவ்ளோ தானா??மாமா வரட்டும்..என் பொண்டாட்டி, என்னை விட்டு வர மாட்டான்னு சொல்லிடுறேன்..சரியா??”
“என்ன சொன்னிங்க..??பொண்டாட்டியா??”
கண்ணில் மகிழ்வோடு கேட்டாள்..
“ஆமாம்.. என் பொண்டாட்டி தானே நீ..??”
“ஆமாம்..”
அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..
அப்பொழுது, அவன் அலைபேசி இசைத்தது..
அதை எடுத்து இயக்கி காதில் வைத்தவன்,
“இருங்க வரேன்..”
அலைபேசி அழைப்பை துண்டித்தவன்..
“மேனேஜர் பேசனுமுன்னு கூப்பிடுறார்..என் அறைக்கு வந்திருக்கார் போல..வா போலாம்…”
“நீங்க போங்க..நான் இப்படியே, சுத்தி பார்த்துட்டு வரேன்..”
“சரி, இங்க நெறைய, மரம், செடி, கொடி, புதர்ன்னு, இருக்கும்..பார்த்து போ..”
தலை அசைத்து விட்டு சென்றாள்..
மில்லை சுற்றியவள்,பின் பக்க கேட்டுக்கு வந்தாள்.. அதை திறந்து கொண்டு, வெளியே சென்றாள்..
வெளியிலும், சுற்றிலும் மரம், செடி, கொடிகள் தான். எங்கும் பசுமை..
சாலையில், ஆட்கள் யாரும் இல்லை..
கொஞ்ச நேரம் இயற்கையை ரசித்தவள்
திரும்ப நினைக்கையில், சற்று தூரத்தில் ஒரு பைக்கின் ஒலி கேட்டது.
அந்த பக்கம் பார்த்தாள்..
பைக்கில், பழனிச்சாமி வந்து கொண்டிருந்தான்..
இவனா?? என்னும் உதட்டு சுளிப்போடு, கதவு பக்கம் திரும்பினாள்..
“இந்தா கண்ணு, ஒரு நிமிஷம்…”
வேகமாய், இவள் அருகில் வந்து வண்டியை நிறுத்தியவன்,
“நில்லு கண்ணு..உன்னை பார்த்துட்டு தான், விரசா வரேன்..”
‘கண் ஆஹ்..’அவனை முறைத்தாள்..
“உன்னை அன்னைக்கு, ராஜா வீட்டுல பார்க்கும் போதே,எங்கயோ பார்த்த நினைப்பு..அழகான புள்ளைங்களை, அவ்ளோ சீக்கிரம் மறக்க மாட்டேன் நான்..அப்போ ஞாபகம் வரல..
அப்புறம் தான், என் போனை சும்மா நோண்டும் போது, சட்டுனு ஞாபகம் வந்துருச்சு..
அதுக்கப்புறம் உன்னை பார்ப்போம்னு பார்த்தா, நீ வீட்டை விட்டு தனியா எங்கேயும் வர மாட்டேங்குற..வீட்டுக்கு வந்தா, ராஜாவுக்கு பிடிக்காது..அதோட, உன்னை தனியாவும் பார்க்க முடியாது வீட்டுல….இன்னிக்கு தான், தனியா பார்க்குறேன்..”
‘என்ன உளறுறான் இவன்..??’
கேள்வியோடு பார்த்தாள் அவனை..
“என்ன கண்ணு முழிக்குற??.உன்னை அன்னைக்கு, அந்த *******பப்புல பார்த்தேன்..ஒரு, நாலு ஐஞ்சு மாசம் இருக்கும்..பார்த்த உடனே, பச்சக்குன்னு ஒட்டிக்கிட்ட மனசுல..அதான், போனுலயும் படம் எடுத்து வச்சேன்..”
அவள் முன்னே, தன் மொபைலை எடுத்து சிறிது தேடி, அவள் புகைப்படத்தை எடுத்து காண்பித்தான்..
அருகில் ஒரு இளைஞனோடு,நெருங்கி நின்று ஆடி கொண்டிருந்தாள் மது..கையில் மதுக் கோப்பையுடன்..
பார்ட்டி வியர் ஆடை.ஸ்லீவ் இன்றி… பளபளவென, முட்டி தொட முயன்று தோற்றது..
கண்ணில் பயத்தோடு நிமிர்ந்து, அவனை பார்த்தாள் மது..