அத்தியாயம்-14
அவள் கண்ணில் பயத்தை பார்த்ததும்,இவன் கண்ணில் வெற்றிக் குறி..
அவள் திகைத்து நிற்கையில், அவள் கையில் இருந்த அலைபேசியை பறித்தான்..
“ஏய்,என்ன பண்ணுற??”
அவள் அதிர்வை கண்டுகொள்ளாமல்,அவள் அலைபேசியில் இருந்து இவன் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்..
பிறகு அதை, அவள் கையில் கொடுத்து விட்டு,
“இதான் கண்ணு என் நம்பர்.. இனி, அடிக்கடி பேச வேண்டி இருக்கும்,சேமிச்சு வச்சுக்கோ..”
“இங்க பாருங்க பழனி..இதெல்லாம் நல்லா இல்ல..ராஜாக்கு தெரிஞ்சா, என்னாகும் தெரியுமா??”
“ஓ..அவன் கிட்ட சொல்லுவியா??சொல்லேன்..அப்புறம் என்ன ஆகும் தெரியுமா??அவன் குணம் எனக்கு நல்லா தெரியும்..ஒன்பதாவது படிக்கும் போது, எங்க ஸ்கூலுக்கு பின்னாடி இருக்க தோப்புல, பீடி பிடிச்சேன் நானு..முதல் தடவை அப்போ தான், ஒரு ஆர்வத்துல, யாருக்கும் தெரியாம வாங்கிட்டு வந்து, பிடிச்சிட்டு இருந்தேன்..
அதை ராஜா பார்த்துட்டான்..அடுத்து என்ன செஞ்சான் தெரியுமா??
நேரா போய், எங்க தலைமை ஆசிரியர் கிட்ட சொல்லி,அவரை கூட்டிட்டு வந்துட்டான்..
அப்புறம், என் அப்பா எல்லாம் கூப்பிட்டு, பெரிய பஞ்சாயத்தே ஆச்சு..
ஒரு பீடிக்கே இப்படினா, நீ கையில வச்சுருக்குற சோமபானத்துக்கு, என்ன பண்ணுவான்னு நினைக்குற??
அவனுக்கு, யாரு குடிச்சாலும் பிடிக்காது..அதுவும், நீ ஒரு மாது. மாதுவின் கையில் மது..
இல்ல, இல்ல, மதுவின் கையில் மது..
என்னையும் கவிஞன் ஆக்கிட்டே கண்ணு..”
கெக்கே பிக்கே என்று சிரித்தான்..
அவள் மிரட்சி அதிகம் ஆனது..
“மது மட்டுமா பிரச்சனை??கூட ஆடுறானே ஒரு பையன்,சும்மா சோக்கா இருக்கான்..
அவனை பார்த்தா, ராஜா இன்னும் கடுப்பாயிடுவன்..ஸ்கூல்ல, அவனை சுத்துன பிள்ளைங்க எல்லாரையும், தெறிக்க விட்ருக்கான்..
அன்னைக்கு, என்னமா ஆடுன தெரியுமா??வீடியோ தான் எடுக்கணுமுன்னு நெனச்சேன்..அன்னைக்கு கொஞ்சம் மப்பு ஜாஸ்தி..இந்த போட்டோ எடுத்ததே பெருசு..குட்டி சோக்கா இருக்கேன்னு,எடுத்து வைப்போம்னு, தட்டு தடுமாறி எடுத்தேன்..ஆனாலும், செம்மையா எடுத்துருக்கேன் இல்ல..
ஒளி ஓவியன் நான்..”
அவனே சிலாகித்து கொண்டான்..
“என்ன கண்ணு, இனியும் அவன் கிட்ட சொல்லுவியா??சொல்லுறதுன்னா சொல்லு..என்ன, ரெண்டு போடு போடுவான்..
பள்ளிக்கூடத்துல இருந்து வாங்கி இருக்கேன், அவன் கிட்ட.அதுக்கப்புறம், உன் கூட முகம் கொடுத்து கூட பேச மாட்டான்..
அவன் மனசுல ஒண்ணு ஆழமா பதிஞ்சா, அப்புறம் மாறவே மாட்டான்..இன்னி வரை, என்னை மதிக்கவே மாட்டான்..
நான் தான் அவன் உதவி வேணுமுன்னு, அவனை பகைச்சுக்காம, அப்போ, அப்போ, அவன் கிட்ட பேசிட்டு சுத்துவேன்..
இல்லைனா, எங்க அப்பாரு அவனை புகழ்ந்து தள்ளி, என் காதுல புகை வர வைப்பார்..
சரி, அதெல்லாம் விடு கண்ணு..
இப்போ, ஒரு வேலையா போறேன்..
அப்புறம் கால் பண்ணுறேன்..விளாவாரியா பேசுவோம்..வரட்டுமா கண்ணு..”
அவன் போன பின்னும், திகைத்து நின்றாள்..
‘இப்பொழுது தான் ராஜா, கொஞ்சம் நன்றாக பேச ஆரம்பித்திருக்கிறார்..என் காதலை ஏற்று கொண்டிருக்கிறார்..வெண்ணை திரண்டு வரும் நேரத்தில், இந்த பக்கி, தாழியை உடைத்து விடுவான் போலவே..
இன்னொரு முறை அவர் முகம் திருப்பினால்…’
நினைவே கசந்தது..
‘இல்லை, இன்னொரு தடவை அவர் வெறுப்பை என்னால தாங்க முடியாது..அந்த போட்டோஸ் எல்லாம் மறந்துட்டு, இப்போ தான் என் கூட, ஒழுங்கா பேசுறார்..
இப்போ, திரும்பவும் இன்னொரு போட்டோவால பிரச்சனை வந்தா, அப்புறம், என் பக்கம் கூட திரும்ப மாட்டார்..
அதோட, அத்தை, அகல், யாருக்கு தெரிஞ்சாலும்,என் நிலைமை..
பக்கத்துல உட்கார கூட, அவ்ளோ பார்க்குறவர்..இந்த போட்டோ பார்த்தா..”
கண்களை, இறுக்கி மூடி திறந்தாள்..
‘மது, பார்த்துக்கலாம் விடு..இதெல்லாம் உனக்கு சாதாரணம்..எத்தனை பார்த்திருக்க, இதுக்கெல்லாம் பயப்படாத.. இவன் எல்லாம் பிள்ளைப்பூச்சி..விட்டு தள்ளு..’
வெகு நேரம் அங்கேயே நின்றவளை, அகலின் உலுக்கல் சுய நினைவுக்கு கொண்டு வந்தது..
“என்ன அண்ணி,எங்கேயோ வெறிச்சு பார்த்துட்டு நிற்குற.??.நான், கூப்பிடுறது கூட கேட்காம..”
“ஒண்ணும் இல்ல அகல்..வீட்டு ஞாபகம்..”
“ஓ..சரி, சரி. அண்ணி,வா போலாம்..நேரம் ஆச்சு..அண்ணன் கூட்டிட்டு வர சொன்னுச்சு..”
அவள் பின்னே போனவள் முகம் எங்கும், குழப்ப ரேகைகள்..
அவள் முகத்தை பார்த்த ராஜா,
“ஏன், ஒரு மாதிரி இருக்க??”
அவனிடம், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்..
“அண்ணிக்கு, வீட்டு நினைப்பாம் ண்ணா..”
“ஓ..”
‘இப்பொழுது தான், இங்கிருந்து போக விருப்பம் இல்லை என்று சொன்னாள்.. இப்பொழுது, வீட்டு நினைவா??’
அவன் நம்பவில்லை என்று, அவன் முகம் சொன்னாலும்,வேறு எந்த விளக்கமும் மது கூறவில்லை..
அன்று இரவே, பழனி அவளுக்கு கால் செய்து பேசினான்..பிள்ளைப்பூச்சியின் தொந்தரவு ஆரம்பித்தது….இவள், சரியாக பதில் சொல்லவில்லை..
ஒரு வாரம் கழிந்தது..தினமும், அவன் தொல்லை அதிகம் ஆனது..
என்ன செய்வது என்று, தீவிர சிந்தனையிலேயே இருந்தாள் மது..
“என்ன கண்ணு, ஒரு வாரமா முகமே களை இழந்து கிடக்கு..”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல அத்தை..”
“வீட்டு நினைவா??”
சிரித்து சமாளித்தாள்..
“அகலு வருவா இப்போ..ரெண்டு பேரும், கோவிலுக்கு போய்ட்டு வாங்க..வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா, ஒரு மாதிரி தான் இருக்கும்..”
‘நம் முகம் கண்ணாடி போல,நம் மனதை காட்டுகிறது.இனி, கவனமாய் இருக்க வேண்டும்..’
சிறிது நேரத்தில் அகல்யா வந்தாள்..
குழந்தையை மரகதத்திடம் விட்டுவிட்டு, இருவரும் கோவிலுக்கு கிளம்பி சென்றார்கள்..
“அண்ணி, ஒரு ரெண்டு நிமிஷம் நில்லு. இந்த பணத்தை, அருக்காணி அக்கா கிட்ட கொடுத்துட்டு வந்துடுறேன்..”
வழியில் இருந்த, அருக்காணி வீட்டின் முன் நின்று கொண்டு கூறினாள் அகல்..
“என்ன பணம் அகல்??”
“அது,அருக்காணி அக்கா பையனுக்கு இருமல்,சளியாம் .உடம்பு முடியலை, ஆஸ்பத்திரில காட்டணும். பணம் வேணுமுன்னு சொன்னுச்சாம்..
அதான் அம்மா, கோவிலுக்கு போற வழில கொடுத்துட்டு போன்னு சொன்னுச்சு..
இரு, கொடுத்துட்டு வரேன்..”
“இரு, நானும் வரேன்..”
இருவரும் உள்ளே சென்றார்கள்..
“வாங்க தாயி..வாங்க..”
அருக்கணியின் மாமியார் வரவேற்றார்..
பாயில் குழந்தை படுத்திருந்தது..இளைத்து, குச்சி குச்சியாய் கை கால்களுடன்..
இருமி கொண்டு படுத்திருந்தது..
“அடிக்கடி நோவு வந்து படுத்துக்குது..பொறந்ததுல இருந்து, ஒன்னு மாத்தி ஒன்னு வருது..மாரியம்மனுக்கு எல்லாம் நேந்து கிட்டோம்..மருத்துவச்சி கிட்டயும், மருந்து வாங்கி கொடுத்தாச்சு..
எதுவும் சரி வரல..அதான், டவுனு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக, அம்மா கிட்ட பணம் கேட்க சொன்னேன் இவளை..”
இவர்கள் பேச்சு குரல் கேட்டு, அருக்காணி கொல்லை புறத்தில் இருந்து வந்தாள்..
“வாங்க சின்னம்மா,வாங்க பாப்பா..”
அருக்காணியின் கையில் பணத்தை கொடுத்தாள் அகல்..
குழந்தை அருகே சென்ற மது,அதன் முகத்தை திருப்பி, தன்னை பார்க்க செய்து, சிறிது நேரம்,கண் ,வாய் எல்லாம் சோதித்தாள்..
[the_ad id=”6605″]
பிறகு திரும்பி,
“அக்கா,குழந்தைக்கு எவ்ளோ நாளா இருக்கு..??இந்த இருமல்..”
“ஒரு, நாலு ஐஞ்சு மாசம் இருக்கும் பாப்பா..சரி ஆகுற மாதிரி இருக்கு..அப்புறம், திரும்ப வருது..”
“ஓ..இது, டான்சில்ஸ் மாதிரி இருக்கு க்கா..”
“அப்படின்னா பாப்பா..??”
“அது, தொண்டையில சதை வளரும்..வைரஸ் கிருமினால..சில நேரம், பாக்டீரியா கூட காரணமா இருக்கும்..
வெது வெதுப்பான தண்ணியே, எப்போவும் கொடுங்க..
உப்பு தண்ணி வச்சு, கொப்பளிக்க சொல்லுங்க அடிக்கடி..
கடினமான உணவு வேண்டாம்..
ரொம்ப, கத்தி பேச விடாதீங்க..
நல்லா ஓய்வு எடுத்து,நான் சொன்னதை பாலோவ் பண்ணாலே, ஆரம்ப நிலை டான்சில்ஸ் சரி ஆகிடும்..
அப்புறம் *****இந்த மருந்து தான் டான்சில்ஸ்க்கு..
நீங்க எதுக்கும், ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க..அங்க, என்ன ஸ்டேஜ்ஜூன்னு சொல்லுவாங்க..வளர்ச்சி ஜாஸ்தி இருந்தா, சர்ஜெரி பண்ணனும்.. எனக்கென்னமோ, ஆரம்ப நிலைன்னு தான் தோணுது..
சீக்கிரம் சரி ஆயிடும் க்கா..”
“சர்ஜெரின்னா தாயி..”
அருக்காணியின் மாமியார் கேட்டார்..
“அது ஆபரேஷன் ம்மா..”
“என்ன, ஆபரேஷனா.. ஆத்தி மாரியாத்தா,நான் என்ன பண்ணுவேன்..”
அவர், அழுவதற்கு தயார் ஆனார்..
“அம்மா,அம்மா..அந்த அளவு ஒண்ணும் இல்லை.. இப்போ, மாத்திரைல சரி பண்ணுற நிலை தான், பதறாதிங்க..”
“சரி தாயி, உன் வாய் முகூர்த்தம், என் பேரனுக்கு சரி ஆகட்டும்..”
அவர்களிடம் சொல்லி கொண்டு, வெளியே வந்தார்கள்..
“அண்ணி,நீ டாக்டருக்கா படிச்சுருக்க..??”
யோசனையோடு கேட்டாள் அகல்..
ஒரு நிமிடம் திகைத்த மது,
“இல்ல அகல்??ஏன் கேட்குற??”
“அதில்லை, பிள்ளையை பார்த்து வியாதியை சொல்லிப்புட்ட, அதான்..”
“அ.. அது..என் பிரெண்ட்க்கு இந்த நோய் வந்தது..அது வச்சு சொன்னேன்..”
“ஓ…”
அதன் பிறகு, கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்கள் இருவரும்..
பழனி பிரச்னையால் உண்டான,
தன் கலக்கத்தை, முகத்தில் காட்டாமல் சமாளித்தாள் மது..தனிமையில், என்ன என்று விசாரித்த ராஜாவிடமும், ஒன்றும் இல்லை என்று சொல்லி சமாளித்து விட்டாள்..
இரண்டு நாள் கழித்து,அருக்காணி வேலைக்கு வந்தாள்..
வேலை முடித்தவள், வீட்டு வாசலுக்கு வந்து,
“பாப்பா..பாப்பா..”
அவள் குரல் கேட்டு, ராஜா வெளியே வந்தான்..
“என்ன அருக்காணி??”
“சின்னையா, பாப்பா இல்லியா??”
“எந்த பாப்பா??”
“அதான், பட்டிணத்துல இருந்து வந்துருக்கே, அந்த பாப்பா..”
“அவ, பாப்பாவா உனக்கு??”
அசடு வழிய சிரித்தாள்..
அவன் பின்னே வந்த மரகதம்,
“என்ன லே, அருக்காணி என்ன சொல்லுறா??”
“அருக்காணிக்கு, பாப்பாவை பார்க்கணுமாம்..”
“மது கண்ணையா??இரு கூப்பிடுறேன்..”
அவர் அழைப்பில் வெளியே வந்தாள் மது.
“என்ன அத்தை??”
“அருக்காணி, உன்னை பார்க்கணுமுன்னு சொன்னா..”
“என்ன க்கா??”
[the_ad id=”6605″]
“பாப்பா,நீ சொன்ன மாதிரியே,அது என்ன, டா.. டாசில்ஸ்ஸோ என்னவோ தானாமா..இப்போ தான், ஆரம்பிச்சு இருக்காம்.. நல்ல வேளை, சீக்கிரம் கொண்டு வந்திங்க..கவனிக்காம விட்டா, ஆப்பரேசன் தான் பண்ணனுமுன்னு சொல்லி,நீ சொன்ன மருந்தை தான், எழுதிக் கொடுத்தார் டாக்டர்..அதான் பாப்பா..உன்னை பார்த்து, விஷயத்தை சொல்லி,நன்றி சொல்லலாம்னு வந்தேன்..”
“ஓ..அப்படியா அக்கா,இதுல என்ன இருக்கு கா..குழந்தையை நல்லா பார்த்துக்கோங்க..நான் சொன்ன மாதிரியே, எல்லாம் கொடுங்க..”
“அதுவும், டாக்டர் சொன்னார் பாப்பா..வரேன் பாப்பா..”
மற்றவரிடமும் சொல்லி விட்டு , கிளம்பினாள்..
அவள் சென்றதும்,
அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராஜாவிடமும் மரகதத்திடமும், அகலிடம் சொன்னது போல சொன்னாள்..
மரகதம், சரியென்று உள்ளே சென்று விட்டார்..
ராஜா அவளை கூர்ந்தான்..
“எ.. என்ன??”
“நீ, கம்ப்யூட்டர் என்ஜினீயர் தானே முடிச்ச,இப்போ, எம்பிஏ பண்ணிட்டு இருந்த??”
“ஆமாம்.. அதுகென்ன..??நீங்க அன்னைக்கு, மாட்டுக்கு டிரீட்மெண்ட்
சொன்னிங்க தானே..அது மாதிரி தான் இதுவும்..க்கும்..”
“அது, என் படிப்பில வரும்.அப்புறம் அனுபவம்…”
“இது பொது அறிவு..அதுனால, நான் தெரிஞ்சுக்கிட்டேன்..”
அவன் பார்வை மாறவில்லை..
சுற்றிலும் பார்த்தாள், யாரும் இல்லை..வேகமாய் அவனை நெருங்கி, கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, வீட்டிற்குள் ஓடி விட்டாள்..
“ஏய்…”
கன்னத்தை தேய்த்து விட்டுக் கொண்டவன்..சுற்றும் முற்றும் பார்த்தான்..
‘வாசல்ல வச்சு, என்ன பண்ணுறா பாரு..??இவளை..’
மெல்லிய புன்னகையுடன், உள்ளே சென்றான்..
அன்று இரவு, உணவு முடித்து அவள் அறைக்கு தூங்க சென்றாள்..
அவள் அலைபேசி இசைத்தது..
இவள் எடுப்பதற்குள், கட் ஆனது.. யார் என்று பார்த்தாள்..
பழனி தான் அழைத்திருந்தான்..
ஆறு, ஏழு, தவறிய அழைப்புகள் பதிவாகி இருந்தது..
‘ச்செய், இவனுக்கு ஒரு முடிவு கட்டணும்..என்ன பண்ணலாம்..??’
யோசிக்கும் போது, மறுபடி இசைத்தது..
அதை இயக்கி,
“என்ன பழனி.??.உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா??இப்போ, நேரம் என்ன தெரியுமா??கிராமத்தில, எல்லோரும் தூங்குற நேரம்..இப்போ, போன் பண்ணுறீங்க..”
“என்ன கண்ணு கோவப்படுற??ராவானாலே, உன் நினைப்பு தான் கண்ணு..தூங்கவே முடியல..அதான், பேசவாச்சும் செய்யலாம்னு கூப்பிட்டேன்..நீ எடுக்கவே இல்லை..
இனி, உடனே எடு கண்ணு.நான் பாட்டுக்கு, நீ எடுக்கலைன்னு கோவத்துல, இந்த போட்டோவை, உன் மாமன் ராஜா போனுக்கு அனுப்புனாலும் அனுப்பி புடுவேன்..”
கூறிவிட்டு, சகிக்க முடியாதபடி சிரித்தான்..
[the_ad id=”6605″]
அப்பட்டமான மிரட்டல்..
பல்லை கடித்தவள்..
“என்ன வேணும் பழனி உங்களுக்கு..??”
“இது..இது பேச்சு கண்ணு..இந்த கேள்வி, எனக்கு பிடிச்சிருக்கு..
இதை தான் எதிர்பார்த்தேன்..
நான் என்ன, புதுசாவா கேட்க போறேன் கண்ணு..
எப்போவும், ஒன்னு தானே கேட்கிறேன்..நீ தான், சரியா பதில் சொல்லாம தட்டி கழிக்குற..”
அவன் கேட்பது புரிந்து, இவள் கண்கள் சிவந்தது..
“என்ன கண்ணு, எதுவும் பேச மாட்டேங்குற??”
“பழனி, நீங்க கேட்குற விஷயம் சரி இல்லை. என்னால, நீங்க சொல்லுறதுக்கு ஒத்துக்க முடியாது..”
“பார்த்தியா கண்ணு?? பேக் அடிக்குற..உனக்கென்ன இதெல்லாம் புதுசா என்ன??ஒரு நாள் தானே கூப்பிடுறேன்..அப்புறம் உன்னை, தொந்தரவே பண்ண மாட்டேன்..
அன்னைக்கு, ஆடுனியே ஒரு பையன்..அவன் கூடவும், போய் இருப்ப தானே..??”
“பழனி..மைண்ட் யுவர் வோர்ட்ஸ்..”
கோபத்தில் சத்தமாய் கத்தியவள்.
இடம் உணர்ந்து, ஒரு கையால் வாயை மூடிக் கொண்டு,கண்களை மூடி திறந்து, மனதை சமன் செய்தாள்..
“சரி, சரி, கண்ணு கோவப்படாத..உன்னை பத்தி, எனக்கு எதுக்கு??என்னைக்கு வர, அதை சொல்லு..என்னால, ரொம்ப நாள் காத்திருக்க முடியாது..என் மனசு வேற, மாறிட்டே இருக்கும்..பொசுக்குன்னு கோவம் வந்து, அப்புறம் போட்டோவை அனுப்பி விட்டுருவேன்..”
“….”
“பதில் சொல்லு கண்ணு..என்னைக்கு வச்சுக்கலாம்னு, நம்ம கச்சேரியை..”
“லுக் பழனி,என்னால, எங்கேயும் தனியா வரமுடியாது..அத்தை அனுப்ப மாட்டாங்க. இங்க வந்ததுல இருந்து, எங்கேயும் தனியா போனதில்லை..புரியுதா??”
“பட்டணத்துல, நடுசாமத்துல, பப்புல இருந்த பிள்ளைக்கு, இது சாதாரணம் கண்ணு..
நீ, என் ஊரு வரை எல்லாம் வர வேண்டாம்..உன் மாமன் வயலுக்கு போற வழில, ஒரு அய்யனார் கோவில் இருக்கு பாரு,அதுக்கு பின்னாடி இருக்குற, தோப்பு வீட்டுக்கு வந்துடு..
விரசா அனுப்பிச்சுடுறேன்..”
‘ராஸ்கல்…’
‘…..’
“என்ன கண்ணு வரியா??கோவிலுக்குன்னு சொல்லிட்டு வா.. அந்த அகலை மட்டும், கூட்டிட்டு வந்துடாத..அதுக்கு, ஊரளவு வாய்..
அண்ணன் மாதிரியே, கை நீட்டிப்புடும்..புரியுதா??நீ தனியா வந்தா, உனக்கு பிரச்சனை இல்லை..
துணைக்கு கூட்டிட்டு வந்தா, உன் ரகசியத்தை, அம்பலம் ஆக்கிடுவேன்..அப்புறம், உன் விருப்பம் கண்ணு..”
“…..”
“என்ன கண்ணு?? நானே பேசிட்டு இருக்கேன்..பதில் சொல்ல மாட்டேங்குற..”
“இதான் உன் முடிவா??”
“ஆமா கண்ணு..”
“இதுல, மாற்றம் எதுவும் இருக்கா??”
“நான் உயிரோட இருக்குற வரை, கிடையாது கண்ணு..”
“அப்போ சரி..”
“என்ன கண்ணு??”
“வரேன்..நீ சொன்ன மாதிரி,சொன்ன இடத்துக்கு..நேரம் மட்டும், நான் சொல்லுற நேரம் தான்..”
“நிஜமா தான் சொல்லுறியா கண்ணு..??இரு, கிள்ளி பார்த்துக்குறேன்..
நீ, வரேன்னு சொன்னதே சந்தோசம் கண்ணு..நீ சொன்ன நேரத்துக்கே வா.. ரொம்ப நாள் ஆக்காத கண்ணு..
மாமன் பாவம்..”
‘பரதேசி..இவன் மாமனா..??’
“வரேன். கூடிய சீக்கிரம்..எனக்கும் சீக்கிரம் வர தான் ஆசை..வரேன்..முடிவோட..”
“என்ன கண்ணு??”
“நேரத்தை, சீக்கிரம் முடிவெடுத்துட்டு வரேன்னு சொன்னேன்..”
“சரி கண்ணு. முடிவு பண்ணிட்டு, போன் பண்ணு.. மாமன் காத்திருப்பேன்..”
“சரி வைக்குறேன்..”
அழைப்பை துண்டித்தவள் மனம், பயம்,பதற்றம்,கோபம்,குழப்பம் போன்ற கலவை உணர்வில் தவித்து,வெகு நேரம் சிந்தித்து, கடைசியில் ஒரு முடிவோடு, உறங்க சென்றாள்..