வசீகரனும், பாலாவும், வெயில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி கொண்டிருந்த அந்த காலை வேளையில், தோட்டத்தில் நிழலான இடத்தை தேடி அமர்ந்து இருந்தனர்.
உமையாள் கண்ணீரோடு “வசீ” என்று அழைத்து கிருஷ்ணாவிடம் பேச ஆரம்பித்ததுமே, அவர்களுக்கு தனிமை கொடுத்து, இருவரும் வெளியே வந்து விட்டனர்.
கிருஷ்ணாவுக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்த பிறகு தான், பாலாவின் மூளை நடந்த நிகழ்வை அலச ஆரம்பித்தது.
உமையாளின் கிருஷ்ணாவிற்கான தவிப்பு, அவனுக்கு ஆச்சர்யமாக, அதே நேரம் அதிர்ச்சியாகவும் இருந்தது.
திரும்பி தன் அருகில் அமர்ந்து இருந்த வசீகரனை பார்க்க, அவனின் முகமோ நிர்மலமாக இருக்க, பாலா என்ன யோசித்தும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் போக, வசீகரனிடமே கேட்கும் எண்ணம் கொண்டு,
“கரன்” என்று அழைத்தான், அவனின் அழைப்பில் அவனை வசீகரன் திரும்பி பார்க்க, தான் பேசுவது சரியா என்ற தயக்கத்துடனே பாலா,
“உமா கிருஷ்ணாவுக்காக கதறின, கதறல் இன்னும் எனக்கு கண் முன்னாடியே இருக்குடா, உமா, கிருஷ்ணாவை விரும்புறா போல”
என்று தயங்கி, தயங்கி சொல்ல, வசீகரனோ கொப்பளிக்கும் மகிழ்ச்சியுடன்,
“எனக்கும் அப்படி தான் தோணுது, பாப்பு மட்டும் இல்ல, கிருஷ்ணாவும் அவளை விரும்புறான் போல, இது தெரியாம நான் வேற அவங்க கல்யாணம் என்ன ஆகுமோன்னு பயந்துட்டேன்டா”
என்று உணர்ந்து சொல்ல, தான் பார்த்த காட்சிகளை வைத்து குழம்பி போன பாலாவோ, குழப்பத்தில் என்ன கேட்கிறோம் என்று யோசிக்காமல்,
“அப்போ நீயும், உமாவும் லவ் பண்ணலையா” என்று கேட்க, அவனை தீர்க்கமாக பார்த்த வசீகரன்,
[the_ad id=”6605″]
“உனக்கு நியாபகம் இருக்கா, முதல் தடவை நீ பாப்புவை பார்த்த அப்போ, அவ யாருன்னு நான் சொல்லறதுக்கு முன்னாடி, நீயே நாங்க ப்ரதர் அண்ட் சிஸ்டர்னு நினைச்சிகிட்ட, அது ஏன்னு யோசிச்சி இருக்கியா பாலா”
என்று நிறுத்தி நிதானமாக கேள்வி கேட்க, அன்றைய நாளை நினைவு கூர்ந்த பாலா, யோசித்து பார்த்துவிட்டு, தெரியவில்லை எனும் விதமாக தலையசைக்க, வசீகரன் தொடர்ந்து,
“நான், பாப்புவை பார்த்த விதம், எங்களோட பாசம், எங்களோட உடல் மொழி, ஒரு அண்ணன், தங்கையை பார்க்கிற மாதிரி உனக்கு இருந்து இருக்கும், ஆனா பின்னாடி எங்க உறவு முறை தெரிஞ்சதும், முன்னாடி பாசமா தெரிஞ்சது, காதலா தெரிஞ்சி இருக்கும்”
என்று விளக்க, அவன் சொல்லுவதை ஆழ்ந்து கேட்ட பாலாவும், தன் நினைவு அடுக்கில், வசீகரன், உமையாள் அவர்கள் இணைந்து இருந்த நிகழ்வுகளை நிதானமாக பிரட்டி பார்க்க ஆரம்பித்தான்.
இப்போது யோசித்து பார்க்கும் போது, அவர்களுக்கிடையே ஒரு ஆழ்ந்த அன்பு மட்டுமே இருந்தது புரிந்தது பாலாவுக்கு. வசீகரனோ தொடர்ந்து,
“பாப்பு முறைப்படி என்னை “மாமா”னு கூப்பிடனும், இதுக்கே நான் அவளை விட பெரியவன், ஆனா அவ எப்போதாவது என்னை “மாமா”னு கூப்பிட்டு பார்த்து இருக்கியா”
என்று அடுத்த கேள்வி கேட்க, பாலா “இல்லை” எனும் விதமாக தலையசைக்க, வசீகரன்,
“அவ என்னை எப்பவுமே அப்படி கூப்பிட மாட்டா, அவளோட மனசுல நான் ஒரு சகோதரனா, நண்பனா தான் இருக்கேன், மனசுல “மாமா” என்ற உறவு பதியாம வெறும் வார்த்தையால் கூப்பிடறது சுத்தமா பிடிக்காது அவளுக்கு, இதுக்காகவே நான் கூட அவளை அப்போ அப்போ வம்புக்கு இழுப்பேன் “மாமா சொல்லு மாமா சொல்லுன்னு”
என்று வசீகரன் நிறுத்த, பாலாவோ அவனை தான் வியந்து பார்த்து கொண்டிருந்தான். என்ன மாதிரியான அன்பு இது, பந்தம் இது என்று புரிந்து கொள்ள முயன்ற வண்ணம்.
ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் வசீகரன் தொடர்ந்து,
“முன்னாடி எல்லாம் பாட்டி கூட சொல்லுவாங்க, “இப்படியே வாடா போடானு கூப்பிடு, நாளைக்கு அவன் பொண்டாட்டி உன் குமட்டுலையே குத்துவான்னு”, பட் பாப்பு அப்பவும் ,”கல்யாணம் ஆனா மரியாதை கொடுக்கணுமா, அது எல்லாம் முடியாது பாட்டி” அப்படினு அவங்க கிட்ட வம்பு தான் பண்ணுவா”
என்று அந்நாள் நினைவில் உதடுகளில் பூத்த புன்னகையுடன் ஒரு இரசிப்பு பாவத்துடன் சொல்ல, பாலா அவன் சொல்லுவதை தான் கேட்டு கொண்டு இருந்தான்.
வசீகரன் சொல்லுவதை இரசித்து கேட்டு கொண்டிருந்த பாலாவுக்கு, அப்போது தான் அலுவலகத்தில் தான் பார்த்த காட்சி நினைவுக்கு வர,
“டேய் அப்போ நான் அன்னைக்கு பார்க்கும் போது உமா கிட்ட, ஐ லவ் னு சொல்லி கிட்டு இருந்தியே” என்று கேட்க, வசீகரனோ லேசாக சிவந்த முகத்துடன்,
“பச் நிலா கிட்ட ப்ரோப்ஸ் பண்ணேன்டா, பிசாசு இவ சரியா அப்போ, வந்துட்டா, அன்னைக்கு புல் அஹ ஒரே ஒரு தடவை திரும்ப சொல்லு, திரும்ப சொல்லுன்னு என்ன ஒரு வழி ஆக்கிட்டா”
என்று செல்லமாக அலுத்துகொள்ள, பாலாவோ அவன் சொன்ன நிலா யாரு என்று புரியாமல்,
“அது யாருடா நிலா”, என்று கேட்க, வசீகரனின் முகம் இன்னும் சிவக்க, தன் முன் நெற்றி குழலை விரல்களால் கோதி தன்னை சமன்படுத்த முயன்றவாறே,
“அதான்டா நிலா, அழகி, நிலவழகி ” என்று சொல்ல, அவனின் வெட்கத்தில் அவனை இரசித்து பார்த்து கொண்டிருந்த பாலாவோ, அவன் சொல்லிய பெயரில் அதிர்ச்சியாகி,
“எது நம்ப அழகியா???” என்று கேட்டு வைக்க, அவனின் அதிர்ச்சிக்கான காரணம் புரியாத வசீகரன்,
“என்னடா நீ ஏன் ஷாக் ஆகுற” என்று கேட்க, அவனை ஒரு மார்க்கமாக பார்த்த பாலா,
“அது எப்படிடா நீயும், கிருஷ்ணாவும், கரெக்ட் அஹ தான் தங்கச்சிங்கன்னு தத்து எடுத்த பொண்ணுங்களை லவ் பண்ணி இருக்கீங்க” என்று கேட்க, வசீகரன் இப்போது பாலாவை ஒரு மாதிரி பார்த்து கொண்டே,
“ஆமா இது எப்போல இருந்து” என்று கேட்க, பாலா,
“அது வந்து ஆரம்பத்துல இருந்தே எனக்கு அழகிய பிடிக்கும், ஒரு தனி பாசம் இருக்கும் அழகி மேல, ஆனா அது என்ன வைகையான உணர்வுனு தான் தெரியாம இருந்தது, ஆனா உமா கிட்ட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான், அது ஒரு ப்ரதர் பீல்னு புரிஞ்சது”
என்று நீண்ட விளக்கம் கொடுக்க, பாலாவை பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்த வசீகரனும் தலையசைத்து கேட்டு கொண்டான்.
பாலாவை பொறுத்தவரை அழகான பெண்களை ரசிப்பான், பேச கூட முயற்சி செய்வான், ஆனால் அதை தாண்டி அவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டான்.
பாலாவின் உலகில் இருக்கும் ஒரே பெண் அவனின் அம்மா மட்டும் தான். அதனால் தான் சகோதர பாசத்தை கூட பிரித்து இனம் கண்டறிய முடியவில்லையோ என்னவோ….
[the_ad id=”6605″]
சிறிது நேரம் ஏதோ சிந்தனைகளில் நண்பர்கள் இருவரும் மூழ்கி இருக்க, பாலா தான் தன் மௌனம் உடைத்து,
“ஆனா ஒன்னுடா, ரெமோன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச நான் இன்னும் சிங்கிள் அஹ சிங்கில் டீக்கு சிங்கி அடிச்சிக்கிட்டு இருக்கேன், நீங்க ரெண்டு பேரும் அமைதியா எவ்ளோ வேலை பார்த்து இருக்கீங்க, உங்க கூடவே தானடா இருந்தேன், இது எல்லாம் எந்த கேப்ல தான்டா நடத்துனிங்க, இது எதுமே தெரியாம எப்படி ஒரு கிரீன் சாண்ட் அஹ இருந்து இருக்கேன் பாரு நான்”
என்று அங்கலாய்த்து கொள்ள, வசீகரனின் முகத்திலோ ஒரு வசீகர புன்னகை.
நண்பனின் காதலை ஆதி முதல் அந்தம் வரை அறியும் ஆவல் கொண்ட பாலா, வசீகரனிடம்,
“ஆமா எப்போ அழகியை லவ் பண்றத ரியலைஸ் பண்ண நீ” என்று கேட்க, வசீகரனோ அந்நாள் நினைவில், கலவையான உணர்வுகள் முகத்தில் பிரதிபளிக்க,
“எனக்கு எப்பவுமே நிலாவை பிடிக்கும்டா, அவ கிட்ட இது தான் பிடிக்கும்னு குறிப்பிட்டு சொல்ல தெரில, ஆனா கண்ணுக்கு தெரியாத எதுவோ ஒன்னு, என்னை அவளை நோக்கி ஈர்த்துகிட்டே இருக்கும், அது ஒரு மாதிரி பீல்டா, எனக்கு சொல்ல தெரில, ஆனா அந்த பீல் அஹ ரசிச்சிக்கிட்டு மட்டும் தான் இருந்தேன், அதுக்கு என்ன அர்த்தம்னு யோசிக்கவே இல்லை நான்”
என்று சொல்லி ஒரு அசட்டு சிரிப்பை உதிர்க்க, பாலாவோ தன் நண்பனின் முகம் காட்டும் பாவனைகளை ரசித்து கொண்டு இருந்தான்.
கால்களை மடக்கி, சம்மணம் இட்டு அமர்ந்து கன்னத்தை கைகளில் தாங்கி, வசதியாக அமர்ந்து கதை கேட்கும் பாவனையில் அவனை பார்த்து கொண்டிருக்க, வசீகரனோ,
“நம்ப ஆபிஸ்கு கிளைன்ட் விசிட்க்கு வந்தாங்க இல்ல, அப்போ மார்னிங் நிலா கால் பண்ணி, லீவ் வேணும்னு கேட்கவும், எனக்கு முதல ஒன்னும் புரியலை, அவ ஒர்க்ல எவ்ளோ சின்சியர்னு தான் உனக்கே தெரியுமே, அப்படிப்பட்டவ இவ்ளோ முக்கியமான நாளில் லீவ் கேட்கவும் என்ன பிரச்சனையோனு தான் எனக்கு தோணுச்சு”
என்று நிறுத்த, இவ்வளவு நேரம் அவனின் முகத்தில் இருந்த மலர்ச்சி விடைப்பெற, முகம் இறுக ஆரம்பிக்கவும், பாலா அவனை கவலையாக பார்க்க, வசீகரனோ அதை உணராமல்,
“என்ன ஆச்சுன்னு கேட்டா, அவளை பெண் பார்க்க வராங்களாம், அவங்க அப்பா அவங்களுக்கு வாக்கு கொடுத்துட்டாராம், அன்னைக்கு வர சொல்லி, அவங்க அப்பாவை அசிங்க படுத்த முடியாதாம், அதனால் தான் அன்னைக்கு லீவ் கேட்டாங்க மேடம்”
என்று சொல்லி நிறுத்தியவன், பாலாவின் முகத்தை பார்த்து, கண்களில் கொஞ்சம் கோவம், நிறைய காதலுடன்,
“எனக்கு ஏன்னு தெரில அவ்ளோ கோவம், பாப்பு கூட நான் அந்த விசிட் இருக்கும் போது அவ லீவ் போட்டதுனால கோவம்னு நினைச்சிகிட்டா போல, ஆனா என் மனசு முழுக்க, அவ எப்படி இன்னொருத்தர் முன்னாடி போய் நிற்கலாம் அப்படினு தான் யோசிச்சி கிட்டு இருந்தது”
மீண்டும் ஒரு சிறு இடைவெளி, தொண்டையை செருமி கொண்டவன்,
“இது உள்ள ஒரு பக்கம் ஓடிக்கிட்டே இருக்க, எனக்கு ஏன் கோவம்னு யோசிக்கவே நேரம் கிடைக்கல, அன்னைக்கு நயிட் பொறுமையா யோசிக்கும் போது தான், நிலாவை இன்னொருத்தர் பக்கத்துல என்னால யோசிச்சி கூட பார்க்க முடிலனு புரிஞ்சது, அவ என்னோட நிலா, என்னால அவளை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாதுனும் தெரிஞ்சிகிட்டேன்”
என்று நீண்ட விளக்கம் கொடுக்க, காதல் என்றால் இப்படி தான் இருக்குமா, என்று வியந்து பார்த்து கொண்டிருந்த பாலா,
“சரி அப்புறம் அந்த பொண்ணு பார்க்கிற விஷயம் என்ன தான் ஆச்சு” என்று கேட்க, வசீகரன்,
“வரதட்சணை அதிகமா எதிர்பார்த்து இருப்பாங்க போல, சோ நிலா அப்பா, வேண்டாம்ணு சொல்லிட்டாரு”
என்று சொல்ல, அப்போது தான் அன்றைக்கு அழகி பயந்து, பதட்டத்துடன் திக்கி, திணறி பேசியது நினைவு வர, ஒரு சிரிப்பு சொல்லாமல் கொள்ளாமல் உதட்டில் வந்து ஒட்டிக்கொள்ள, வசீகரனை பார்த்து,
“சரி அதான் வில்லன் போயிட்டான் இல்ல, அப்புறம் என்ன மச்சான் பிரச்சனை உனக்கு, அன்னைக்கு உன்னோட லவ் அஹ சொன்னதுக்கு அழகி என்ன சொன்னா” என்று அடுத்த கேள்வியை வீசினான்.
வசீகரன் ஒரு பெருமூச்சுடன், “சொன்னா சுரைக்காய்க்கு உப்பு இல்லைனு, ஏன்டா நீ வேற, நான் ரொம்ப பெரிய இடமாம், அதனால் இது எல்லாம் சரி வராதாம், அப்பாவும் பொண்ணும் ஒரே மாதிரி பேசி கடுப்படிக்கிறாங்கடா”
என்று சலிப்பாக சொல்ல, அவன் சொல்லிய செய்தியில் இருக்கையை விட்டு எழுந்த பாலா,
“எது அவங்க அப்பா சொன்னாரா, அவர் கிட்ட எப்போடா பேசுன பாவி” அதிர்ச்சியுடன் கேட்க, அதை எல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்காத வசீகரன்,
“பச் நிலா லவ் எல்லாம் செட் ஆகாதுன்னு சொல்லவும், சரி லவ் மேரேஜ் அஹ, அரேஞ் மேரேஜ் அஹ மாத்தலாம்னு, அவ அப்பாவை போய் பார்த்து பேசினேன், அப்போ தான் அவரு சொன்னாரு, அன்னைக்கு வந்த மாப்பிள்ளை வீட்டுகாரங்க, வசதில உங்க பக்கத்துல கூட வர முடியாது, ஆனா அவங்களே அவ்ளோ எதிர்பார்க்குறாங்க, அப்போ உங்க வீட்டிலையும் அப்படி தான் எதிர் பார்ப்பாங்க, இந்த லவ் எல்லாம் பேச தான் நல்லா இருக்கும், வாழ்க்கைக்கு சரிப்படாதுனு சொல்லி அனுப்பிட்டாரு”
என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட, வசீகரனின் தோளை ஆதரவாக தட்டி கொடுத்த பாலா,
“ஏதாவது பண்ணுவோம்டா, கவலைப்படாத மச்சான்” என்று ஆறுதல் அளிக்க, வசீகரன்,
“அங்கிள்கு உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல் அஹ அட்மிட் பண்ண அன்னைக்கு தான், நிலா அப்பாவை போய் பார்த்துட்டு வந்தேன், இவ்ளோ நாளா பேசி பேசி இப்போ தான் மனுஷன் உங்க வீட்டுல இருந்து வந்து பேச சொல்லுங்க பார்ப்போம்னு சொல்லி இருக்காரு”
என்றவனின் குரலில் ஆயாசம் அப்பட்டமாய் தெரிய தொடர்ந்து,
“என்னோட அப்பாவை பத்தி தான் உனக்கு தெரியுமே, கதகளி, குச்சிப்பிடி எல்லாம் ஆடுவாறு, அவரை வேற சமாளிக்கணும், நிலாவது என் பக்கம் நின்னா கொஞ்சம் எனக்கு சப்போர்ட் அஹ இருக்கும், அவ என்னடானா சைலண்ட் அஹ இருக்கா, பச் இப்போவே கண்ணை கட்டுது மச்சான்”
என்று சோர்வாக சொல்ல, அவனை தேற்றும் விதமாக பாலா,
“டேய் நான் இருக்கேன், கிருஷ்ணா இருக்கான், உன்னை என்ன அப்படியேவா விட்டுடுவோம், உங்க அப்பா வரட்டும், நாங்க எல்லாம் சேர்ந்து பேசி, உனக்கு உன்னோட நிலாவை கட்டி வைக்கிறோம் சரியா”
என்று சொல்ல வசீகரனும், தன் மனகலக்கங்களை சற்றே தள்ளி வைத்தவன், பாலாவிடம் சீண்டலாக,
“அப்புறம் மச்சான், கிருஷ்ணா கல்யாணமே பண்ணிட்டான், நான் லவ் பண்ணிக்கிட்டு இருக்கேன், நீ இன்னும் எவ்ளோ நாள் இப்படியே சுத்த போற”
என்று கேட்க, சிலிர்த்து கொண்ட பாலாவோ,
“எனக்கும் ஆள் இருக்கு மச்சான்” என்று கெத்தாக சொல்ல, அவனை ஆச்சர்யமாக பார்த்த வசீகரன்,
“இந்த துயர சம்பவம் எப்போடா நடந்தது” என்று ஏகத்துக்கும் அவனை கலாய்க்க, கடுப்பான பாலா,
“வாயை கழுவுடா பரதேசி, இவங்க பண்ணா தெய்வீக காதலாம், நாங்க பண்ணா மட்டும், துயர சம்பவமாம், நல்லா வந்துடும் வாயில சொல்லிட்டேன்”
என்று அநியாயத்திற்கு கொந்தளிக்க, வசீகரனோ அடங்காமல், “டேய் முதலில் அந்த அப்பாவி யாருன்னு சொல்லு” என்று கேட்க, அசடு வழிந்த பாலாவோ,
[the_ad id=”6605″]
“அதை உமா தாண்டா சொல்லணும்” என்று சொல்ல, அவன் சொல்ல வருவது புரியாத வசீகரன்,
“எதை உமா சொல்லணும்” என்று கேட்க, பாலாவோ அசராமல்,
“அந்த பொண்ணு யாருன்னு தான்டா” என்று சொல்ல, மண்டையை பிய்த்து கொள்ளாத குறையாக அவனை பார்த்த வசீகரன்,
“டேய் உன்னை கொல்ல போறேன் பாரு, ஒழுங்கா தெளிவா சொல்லு” என்று ஒரு அதட்டல் போட,
“பச் உமா தான்டா சொல்லுச்சி, ஒரு பொண்ணு என்ன சின்சியரா லவ் பண்ணுதாம், நம்ப ஜூனியர் ஆம் டா”
என்று விளக்க, அவனின் விளக்கிய விதத்திலே பாலாவுக்கு, இன்னும் அந்த பெண் யாரென்று தெரியவில்லை என்பது புரிய, நெற்றி சுருக்கி யோசித்த வசீகரன், விடை கண்டுபிடித்த பாவத்துடன்,
“ஆமாண்டா நம்ப பி.டெக் பைனல் இயர் படிக்கும் போது, அந்த பொண்ணு பஸ்ட் இயர்னு நினைக்கிறேன், அங்க அங்க நின்னு உன்னை பார்க்கும், நான் உனக்கும் தெரியும்னு நினைச்சேன்டா, நீ மாஸ்டர்ஸம் அங்க தானே பண்ண, அப்போ மூணு வருஷமாவாட அந்த பொண்ணு உன்னை பார்த்து இருக்கு, அது கூட தெரியமா இருந்து இருக்க தத்தி தத்தி”
என திட்டி தீர்க்க, அதை எல்லாம் காற்றில் பறக்க விட்ட பாலாவோ, அவனிடம் ஆதங்கத்துடன்,
“அடப்பாவி மச்சான் அப்போ உனக்கு அந்த பெண்ணை தெரியுமா, கிராதகா, அப்பவே சொல்லி இருந்தா இந்நேரம் நானும் உங்களை மாதிரி, என்னோட ஜிங்கிலிய கரெக்ட் பண்ணி மிங்கில்ஸ் அஹ ப்ரோமோட் ஆகி இருப்பேனாடா, இப்படி பண்ணிட்டியேடா எருமை, எருமை” என பாசமாக பேசினான் பாலா.
வசீகரன் பாலாவுக்கு ஏதோ பதில் சொல்ல வர, தூரத்தில் முகம் முழுக்க புன்னகையோடு, தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த உமையாளை பார்த்த வசீகரன், தான் பேச வந்ததை மறந்து, அவளையே தான், இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
காதல் கொள்வோம்……….