அத்தியாயம்-15
அன்று காலையிலேயே, ராஜாவும் பாண்டியும், டவுனுக்கு உரம் வாங்க,மற்றும் இன்னும் சில வேலைகளுக்காக கிளம்பினார்கள்..
அகலும், அவள் மாமியாரின் மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனை செல்வதாகவும், அன்று வரமாட்டேன் என்றும், கூறிவிட்டு சென்றிருந்தாள்..
இன்று தான் சரியான நாள் என்று முடிவெடுத்த மது,
பழனிக்கு அழைத்து, இன்று காலை வருவதாய் கூறி இருந்தாள்..
ராஜாவும் பாண்டியும் கிளம்பி சென்றதும், கீழே இறங்கி வந்தவள்,
“அத்தை, நான் அய்யனார் கோவில் வரை போய்ட்டு வர்றேன்..”
“என்ன கண்ணு திடீருன்னு..வீட்டுல வேற, யாரும் இல்லியே..”
“அது, எனக்கு உடம்பு சரி இல்லாத போது வேண்டிக்கிட்டேன்..மறந்து போச்சு..இன்னிக்கு தான் ஞாபகம் வந்துச்சு..
வேண்டுதல் பாக்கி வைக்க கூடாதில்லை.. தெய்வ குத்தம் ஆகிடும்..”
“அது சரி தான் கண்ணு,நாளைக்கு போயேன்..அகலு வந்துடுவா..”
“இங்க இருக்க கோவில் தானே அத்தை.. நானே போய்ட்டு வந்துடுவேன்..”
“சரி இரு. பேச்சியை கேட்டு பார்க்குறேன்..”
“அச்சோ, வேண்டாம் அத்தை.. நம்ம ஊருக்குள்ள என்ன பயம்??அதோட, பெரிய வீட்டு பொண்ணு நான்னு, எல்லோருக்கும் தெரியும்..என் கிட்ட யாரு, வம்பு பண்ணுவா..??”
“சரி தான் கண்ணு..எதுக்கும், ராசா வந்துருவான்..கொஞ்சம் நேரம் கழிச்சு போயேன்..”
“நான் போய்ட்டு, பத்திரமா வந்துடுவேன் அத்தை.. ப்ளீஸ்..அத்தை..”
சற்று யோசித்தவர்..
“சரி கண்ணு..விரசா வந்துரு..எனக்கு, பதக்கு பதக்குன்னு இருக்கும் அதுவரை..”
“சீக்கிரம் வந்துடுவேன் அத்தை.. கவலைப்படாதிங்க..”
“சரி கண்ணு, சாப்பிட்டு போ..”
“இல்ல அத்தை, வந்து சாப்பிடுறேன்..”
சொல்லிவிட்டு கிளம்பினாள்..
மனம், ரயில் வண்டி ஓட்டம் போல தடதடத்தது..
கோவில் அவளுக்கு தெரியும்.அதன் பின்புறம் இருக்கும் தோப்பு வீடும், சுலபமாக கண்டு பிடிக்கும் படி தான் இருந்தது..சுற்றிலும் காடுகள், வயல்கள், ஆள் அரவமே இல்லை..
வாசலிலேயே நின்று, வாயெல்லாம் பல்லாக வரவேற்றான் பழனி..
“வா, வா கண்ணு..வர மாட்டியோன்னு நெனச்சேன்..உள்ள வா..”
அவளை உள்ளே அழைத்து சென்றான்..
டவுனில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான் ராஜா..
[the_ad id=”6605″]
பாண்டியை அவன் வீட்டில் விட்டு விட்டு, பைக்கில் வந்து கொண்டிருந்தான்..
வெயில், உச்சியை நெருங்கும் நேரம்..அவன் வயலை தாண்டி வந்து கொண்டிருக்கும் போது, தூரத்தில் மது சென்று கொண்டிருந்தாள்..
‘மதி மாதிரி இருக்கு..இந்த வெயில்ல, எங்க போய்ட்டு போறா??கூட வேற, யாரும் இல்லை..தனியா அனுப்ப மாட்டாங்களே அம்மா..’
அவள் அருகே வண்டியை நிறுத்தினான்..
“மதி..எங்க போய்ட்டு போற??”
அவள்,இவன் வந்ததையோ, வண்டியை நிறுத்தியதையோ,பேசுவதையோ, எதையும் கவனிக்கவில்லை அவள்..ஏதோ, செலுத்தப்பட்டது போல போய் கொண்டிருந்தாள்..
அவள் நிற்கவில்லை என்பதை உணர்ந்து,அவள் கை பிடித்து நிறுத்தினான்..
“மதி,கேட்டுட்டே இருக்கேன்..எங்க போற??”
அனிச்சை செயல் போல, வேகமாய் கைகளை உதறியவள், சுய உணர்வுக்கு வந்து அவனை பார்த்தாள்..
அவள் முகம் கலங்கி சிவந்திருந்தது..கண்கள் கலங்கி,தலை கலைந்து, காய்ச்சல் வந்தவள் போல இருந்தாள்..
அவள் கைகளை உதறியதும் திகைத்தவன்,
“மதி…??”
அப்பொழுது தான் அவனை பார்த்தவள்,கண்ணீர் கன்னத்தில் வழிய,அவன் கை சந்துக்குள் இரு கைகளையும் சுற்றி வளைத்து, அவன் தோள் சாய்ந்து கொண்டாள்..
அவள் செய்கையில், அவள் கையை உதறியதால் உண்டான சஞ்சலம் மறைந்து,
‘என்ன ஆச்சு இவளுக்கு??’
என்னும் சிந்தனை வந்தது..
கிட்ட தட்ட, அணைத்த நிலையில் நின்றார்கள்..
தெருவில் யாரும் இல்லை..
“என்ன டா ஆச்சு..??”
“வரு, என்னை வெறுத்துட மாட்டீங்க தானே??”
“என்ன மா ஆச்சு..??”
“மாட்டேன்னு சொல்லுங்க..”
“என் மதியை போய், வெறுக்க முடியுமா??என்ன ஆச்சு??எங்க போய்ட்டு வர??”
“வீட்டுக்கு போலாம் வரு..”
பைக்கில், அவன் பின்னே ஏறிக் கொண்டாள்..
அவன் இடையில் கை போட்டு வளைத்து, முதுகில் தலை சாய்த்து கொண்டாள்..
அது கிராமம்,அவளோடு தனியே செல்வதென்றாலும், காரில் தான் இதுவரை சென்றிருக்கிறான்..
பைக்கில் என்றாலும், இவள் அமர்ந்திருக்கும் நிலையில்,சற்று யோசித்தவன்..
இந்த நிலையில், அவளை நடந்து வர சொல்வதோ,தள்ளி அமர சொல்வதோ, சரியாக படாததால்,பைக்கை கிளப்பினான்..
‘யார் பார்த்தாலும் சரி, அவளை கல்யாணம் செய்து கொள்ள போகிறவன் தானே நான்..’
எண்ணம் தோன்றிய மறுநொடி,வண்டி வேகம் எடுத்தது..
வீட்டிற்கு வந்தும்,அதே நிலையில் அமர்ந்திருந்தாள்..
[the_ad id=”6605″]
“மதி…”
அவளை அழைத்தான்..
அதற்குள் வெளியே வந்த மரகதம்,இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு,
“என்னாச்சு லே..??”
அவர் குரலில் சுய உணர்விற்கு வந்தவள்,வண்டியில் இருந்து இறங்கினாள்..
“தெரில ம்மா. வர்ற வழில, நடந்து வந்துட்டு இருந்தா. அதான், கூட்டிட்டு வந்தேன்..”
“என்ன கண்ணு,முகம் எல்லாம் இப்படி இருக்கு??என்ன ஆச்சு??”
“ஒண்ணும் இல்லை அத்தை.. சாப்பிடாம போய்ட்டேன் இல்ல, அதான், கொஞ்சம் மயக்கமா, சோர்வா இருக்கு..நான் குளிச்சுட்டு வரேன்..”
அவர் பதிலை எதிர்பாராமல்,மாடிக்கு, அவள் அறைக்கு சென்றாள்..
“குளிச்சுட்டு தானே, வேண்டுதல்ன்னு கோவிலுக்கு போனா??என்ன ஆச்சு இந்த பிள்ளைக்கு??”
மரகதத்தின் பேச்சில், இவன் முகம் யோசனைக்கு சென்றது..
மரகதத்துக்கு பின்னால் நின்றிருந்த பேச்சி,
“அம்மா,இவுகளை, காத்து, கருப்பு, அடிச்சுருக்கும் போல மா..நாளைக்கு பூசாரி கிட்ட கூட்டிட்டு போய், விபூதி போடுங்க..சரி ஆகிடும்..”
“ஏண்டி, கோட்டி மாதிரி உளர்ற.. பேசாம போடி..”
“நிசம் தான் மா..உச்சி பொழுதுல, ஐயனார் கோவில் கிட்ட தான் சுத்துமாம்,தனியா போனா, அடிச்சுப்புடுமாம்..
போன வாரம், என் பெரியாத்தா கூட பார்த்துச்சாம்.. அந்த சாந்தி தானாம் மா..”
“எந்த சாந்தி டி??”
“புருஷன் கூட கோச்சுக்கிட்டு தூக்கு போட்டுகிச்சே, அதே சாந்தி தான்.. உச்சி ஆனா சுத்துதாம்.. கறி குழம்பு கொண்டு போனா, பின்னாடியே வருமாம்..”
“போடி இவளே, உள்ள போய் வேலையை பாரு..இவ பெரியாத்தா சொன்னாளாம்.அவளுக்கு பகலுலேயே பசு மாடு தெரியாது..உச்சி பொழுதுல, பேயை பார்த்தாளாம், இவ கதை சொல்ல வந்துட்டா, வாய் பார்த்துகிட்டு..”
“நான் சொன்னா நம்ப மாட்டேங்குறிங்க..பிள்ளை முகத்தை பார்த்தீங்க தானே??வெளிரி, கலங்கி, சிவந்து கிடந்துச்சு..சொல்லுறதை சொல்லிட்டேன், பார்த்துக்கோங்க..”
சொல்லிவிட்டு உள்ளே போனாள்..
“இந்த ஊருக்கு மட்டும் அவல் கிடைச்சா போதும்,வெறும் வாயையே மெல்லுறதுக,விடுங்களா.??.ராசா, அந்த பிள்ளையை சாப்பிட கூட்டிட்டு வா..”
தலை அசைத்து விட்டு, மாடிக்கு போனான்..
மாடிக்கு சென்ற மது,உடனேயே குளியல் அறைக்குள் நுழைந்து,ஷவர் அடியில் நின்றாள்..
போட்டிருந்த உடையோடு..
தண்ணீர் உச்சியில் இறங்கி, சில நிமிடங்கள் கழித்து தான், அதன் குளிர்ச்சி இறங்கி,இவள் கொதிப்பை அடக்கியது..
வெகு நேரம் நின்றாள்..
அவள் அறை கதவை தட்டிய ராஜா,சத்தம் இல்லாததால்,உள்ளே சென்றான்..
குளியல் அறையில் சத்தம் கேட்டது.
“மதி…”
அவன் அழைப்பில்,நேரம் உணர்ந்தவள்,
“என்ன வரு??”
உள்ளிருந்தே குரல் கொடுத்தாள்..
“சாப்பிட வா.. அம்மா கூப்பிட்டாங்க..”
அப்பொழுது தான், உடை எடுத்துக் கொண்டு வரவில்லை என உணர்ந்தாள்..
“வரேன் வரு..நீங்க போங்க..”
“சீக்கிரம் வா..”
சொன்னவன், அவன் அறைக்கு சென்றான்.. கதவு சாத்தும் ஒலி கேட்டதும்,குளியல் அறையில் இருந்து வெளியே வந்த மது, உடை மாற்றிக் கொண்டு கீழே சென்றாள்..
இப்பொழுது சற்று தெளிந்திருந்தாள்..
“என்ன கண்ணு..தலையை ஒழுங்கா துவட்டலையா??சளி பிடிச்சுக்கும்..”
அவளை, கூடத்தில் இருந்த ஷோபாவில் அமர வைத்த மரகதம்,துண்டு கொண்டு வந்து,அவள் தலையை துவட்ட ஆரம்பித்தார்..
கண்கள் கலங்க, அவரை இடையோடு கட்டிக் கொண்டாள்..
[the_ad id=”6605″]
இதுவரை, அகல் கூட இவ்வாறு செய்ததில்லை.அதனால், கூச்சத்தில் நெளிந்தார் அவர்..
“என்ன கண்ணு,உடம்பு முடியலையா??”
“அதெல்லாம் இல்லை அத்தை.. வெயில்ல, கோவிலை சுத்தி வந்தேன். அதான், களைப்பா இருந்துச்சு..குளிச்சுட்டு வந்தேன்..”
“அப்போ நீங்க, சாந்தியை பார்க்கலையா??”
கேட்டுக் கொண்டே வந்தாள் பேச்சி..
“எந்த சாந்தி..??”
புரியாமல் கேட்டாள் மது..
“வாயை மூடு பேச்சி..”
மரகதம் கடிந்து கொண்டார்..
அப்பொழுது, சரியாய் உள்ளே நுழைந்த பாண்டி,
“அது யாரு பேச்சி, சாந்தி??உன் சொந்தமா??”
“இல்ல ஐயா, போன வாரம் தூக்கு போட்டுகிச்சே, அந்த பிள்ளை..புருஷன் கூட சண்டை போட்டுகிட்டு..அதான்..”
“என்னாது, செத்து போன பிள்ளையையா?? ஏதோ தெரிஞ்ச பிள்ளை மாதிரி, பார்க்கலையான்னு கேட்குற..??”
“இல்லை ஐயா.,அது உச்சி பொழுதுல பேயா சுத்துதாம்..”
“இப்படி எல்லாம் யாரு, புரளியை கிளப்பி விடுறது..??”
“புரளி இல்லய்யா நிசம்..என் பெரியாத்தா பார்த்துச்சாம்..நான் கூட, சில நேரம் பார்த்துருக்கேன்..”
“பேய் கூடவெல்லாம் பிரெண்ட்ஷிப் அஹ் குமுதா..??”
“அதாரு குமுதா..??”
“சரி, அதை விடு.. அது ஏன் சுத்துச்சுன்னு, பேச்சு வார்த்தை நடத்தி பார்த்தியா??”
“ஆசை நிறைவேறாம செத்தா, அப்படி தான் சுத்துவாங்களாம்..யாராவது கறி குழம்பு கொண்டு போனா, பின்னாடியே வருமாம்..அதுவும், தனியா உச்சி பொழுதுல போனா, அடிச்சுடுமாம்..”
“ஏதோ, சோத்துக்கு செத்த பேய் போல.நல்லா விசாரிச்சியா?? புருஷன் கூட சண்டை போட்டு செத்துச்சா?? இல்ல, கறி சோறு போடலைன்னு, சண்டையில செத்துச்சா?? எல்லாத்தையும் சரியாய் விசாரிக்கனும்…சரி, இதுக்கு என்ன தான் முடிவாம்.. நீயும் உன் பெரியாத்தவும், உங்க பிரெண்ட் கிட்ட கேட்டீங்களா??”
‘இவன் இருக்கானே..’
தலையில் அடித்துக் கொண்டார் மரகதம்..
“பூசாரி கிட்ட கேட்டுச்சாம் அது.அவர், கறி சோறு, சாராயம், எல்லாம் வாங்கி வச்சு படையல் போட்டா, போய்டும்..தொந்தரவு தராதுன்னு சொன்னாராம்..”
“அது சரி..ஒரு கறி சோறுக்கும்,சாராயத்துக்கும் ஆசைப்பட்டு,அந்த பூசாரி போடுற பிளான் போல இது..”
“ஆத்தி, அப்படி சொல்லாதீங்க ஐயா. தெய்வ குத்தம் ஆகி போகும்..கன்னத்துல போட்டுக்குங்க..”
“அந்த பூசாரி கன்னத்துல தான் போடணும்..விட்டா, இவனுக்கும் இவன் குடும்பத்துக்கும் வேணுங்குற துணிமணி முதற்கொண்டு, சாந்தி பேரை சொல்லி கேட்பான் போல..”
“போங்க ஐயா, யாருமே நான் சொல்லுறதை நம்ப மாட்டேங்குறீங்க.. வீட்டுக்கு வரும் போது, பிள்ளை முகமே சரி இல்லை.. அதான், காரணம் சொன்னேன்..”
“ச்சு.. ச்சு.. பேச்சி, உனக்கு இருக்குற அறிவுக்கு, நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல..ஆக்ஸ்போர்ட் யூனிவெர்சிட்டில படிக்க வேண்டிய பிள்ளை..இந்த பட்டிக்காட்டுல பிறந்து, கஷ்டப்படுற..”
“அது எங்க ஐயா இருக்கு..??”
“இங்க தான், சென்னைக்கு பக்கத்துல..”
“ஓ..எங்க அப்பத்தா கூட சொல்லும்..என் அறிவுக்கு,எனக்கு சீமைல இருந்து தான், மாப்பிள்ளை வருமுன்னு..”
“பாவம் அவன்..”
“என்ன ஐயா சொன்னிங்க..??”
“உன் அறிவுக்கு மாப்பிள்ளை தேடனுமே, இந்த ஜில்லால கிடைக்குமா??பாவம், உன் வீட்டுல உள்ளவங்க, அப்படின்னு சொன்னேன்..”
“போங்க ஐயா..”
கூச்சப்பட்டு கொண்டு, முகம் சிவக்க உள்ளே ஓடி விட்டாள் பேச்சி..
“ஹ்ம்ம்..இதெல்லாம் என்ன டிசைன்னோ,எவன் கட்டி மேய்க்க போறானோ..??”
“என்ன லே புலம்புற..”
கேட்டுக் கொண்டே, மாடியில் இருந்து இறங்கி வந்தான் ராஜா..
“ஒண்ணும் இல்ல மாப்பு.பேய் கூட, ச்செய், பேச்சி கூட பேசிக்கிட்டு இருந்தேன்..”
[the_ad id=”6605″]
“என்ன பேசுன??”
“யாரோ என்னை மாதிரி, நாக்கு நீண்ட பேய் சுத்துதாம். பேச்சிக்கு பிரெண்டாம்..அதான், கறி சோறு படையல் போடுறேன்னு சொன்னுச்சு..என்னைக்குன்னு கேட்டு வச்சேன்..”
“ஏன், சாப்பிட போக போறியா??”
“பின்ன, கறி சோறு மாப்பு..கறி, என்ன விலை விக்குது தெரியுமா??ஓசில கிடைச்சா, விட முடியுமா??
சாப்பாடு அதானே எல்லாம்..”
“உன்னையெல்லாம்..”
“சரி விடு மாப்பு..பசிக்குது சாப்பிடலாமா??”
“ஆமா லே, எல்லோரும் வாங்க..மதுவும் காலையில சாப்பிடலை..”
“இதோ வந்துட்டேன் அத்தை..”
ராஜாவை திரும்பி பார்த்தவன்,
அவன் எழுந்து கொள்ளாமல் இருப்பதை பார்த்து,
“வா மாப்பு..நம்ம வீடு தான். கூச்சப்படாம சாப்பிடு..”
அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்..
சாப்பாட்டு மேஜையில், மதுவின் முகத்தை ஆராய்ந்து கொண்டே சாப்பிட்டான் ராஜா..அவள், அவன் முகத்தை நிமிர்ந்தே பார்க்கவில்லை..
“மது,சாப்பிட்ட பிறகு, சில கம்ப்யூட்டர் மாடல் போட்டோஸ் கொண்டு வந்துருக்கேன்..எந்த கம்பெனி, எந்த மாடல், நல்லா இருக்கும்ன்னு சொல்லு..
அப்புறம் அக்கௌன்ட்ஸ் பார்க்க, எந்த சாப்ட்வேர் நல்லா இருக்கும்..கடையில அவன், டாலி, எஸ்ஸல், அது இதுன்னு, ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு சொல்லுறானுங்க..
எது சரி வரும் சொல்லு..இவ்ளோ நாள், பழைய மாதிரி பைல் போட்டு வச்சாச்சு..அதான், மாப்பை நச்சரிச்சு, கம்ப்யூட்டர் கொட்டேஷன் வாங்க சொன்னேன்..
நீ வந்து, எது சரி வருமுன்னு சொல்லு..”
“எனக்கு தெரியாது அண்ணா,நீங்களே நாலு கடையில கேட்டு பார்த்து வாங்குங்க..”
சொல்லிக் கொண்டே வந்தவள், சட்டென நிமிர்ந்து, ராஜாவின் முகம் பார்த்தாள்..
அவன் பார்வை இவளை துளைத்தது..
“என்ன மது??உனக்கு தெரியாதுன்னு சொல்லுற..அதானே படிச்ச நீ..??நீயும் என்னை மாதிரி தானா??ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு,நானெல்லாம் பரீட்சை எழுதி முடிச்ச உடனேயே மறந்துடுவேன்..
நீயும் அப்படி தானா??
என் இனம் டா நீ..
பார்த்தியா மாப்பு?? என் பாசமலரும் என்னைய மாதிரியே இருக்கு..”
“நீங்க, கம்ப்யூட்டர் பத்தி கேட்டீங்களா அண்ணா??”
“ஹ்ம்ம்..இல்ல, கத்திரிக்காய் பத்தி கேட்டேன்..என்ன ஆச்சு உனக்கு??பேச்சிக்கு மாதிரி, உனக்கும் பேய் கூட பிரெண்ட் ஷிப் ஆகிடுச்சா??
இம்புட்டு நேரம் விளக்கம் சொல்லுறேன்..
விடிய விடிய விஜய் படம் பார்த்துட்டு,விடிஞ்ச பிறகு அஜித்து என்னாமா ஷோக்கா நடிச்சிருந்தாருன்னு சொல்லுற..”
அருகில் நின்றிருந்த மரகதத்திடம்,
“அத்தை, அந்த நெய் கிண்ணத்தை இங்குட்டு தள்ளு..என் சத்து எல்லாம் போச்சு..இந்த பிள்ளைக்கு விளக்கம் கொடுத்து..சாப்பிட்டு, உடம்பை தேத்துறேன்..”
“ஏலே,அது சரியா கேட்டுகலைன்னு தானே கேட்குது..ரொம்ப அலுத்துக்குற..சாப்பிட்டு சொல்லும்..என்ன கண்ணு..??”
“ஆமாம் அத்தை, சொல்லுறேன் ண்ணா..”
அதன் பிறகு சாப்பிட்டு முடித்ததும்,தன் அலைபேசியோடு வந்தவள்,அதில் தேடி, கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் அவன் கேட்கும் எல்லாவற்றிற்கும் பதில் சொன்னாள்..
“என்ன மது??எல்லாத்துக்கும் அதையே லொட்டு லொட்டுன்னு தட்டுற..??”
“அது, நான் படிச்சு ஒரு வருஷம் ஆச்சு தானே ண்ணா?? அதான், கொஞ்சம் மறந்து போச்சு..”
“அது சரி. இதெல்லாம், உன்னை நம்பி தான் வாங்க சொல்லி இருக்கேன்..நீ, கத்து கொடுப்பேன்னு பார்த்தேன்..இப்போ, இதுக்கு ஒரு ஆள் வேலைக்கு போடணும் போல..”
“வாங்குற இடத்திலேயே, இன்ஸ்டால் பண்ணி கொடுப்பான் ண்ணா..
அவனே, விளக்கமும் கொடுப்பான்..
நான், என் டவுட்டு எல்லாம் கேட்டுட்டு சொல்லி தரேன்..
அதுக்குன்னு, ஒரு ஆளு போடுறது பெட்டர்..
என்ன அத்தை..??”
மரகதத்தை துணைக்கு அழைத்தாள்..
[the_ad id=”6605″]
“ஆமா, மதுக் கண்ணு சொல்லுறதும் சரி தான்.அதை ஏன்டா வேலை வாங்குற..??
நீ, தின்னு தின்னுட்டு சும்மா தானே இருக்க..
நீ பாரு..”
“அத்தை, இது எனக்கு உச்ச பட்ச அவமானம்..என் நண்பனுக்காக, இங்க இன்னும் உட்கார்ந்துட்டு இருக்கேன்..”
“இல்லைன்னா, என்ன லே செய்வ??கிளம்பிடுவியா??”
” எதுக்கு கிளம்பணும்.., சாப்பிட்ட சோத்துக்கு கண்ணை சுத்துது.இன்னும் ஏன்டா முழிச்சுக்கிட்டு இருக்கன்னு..இந்நேரம் தூங்கிடுவேன்..நல்லா காத்து வேற வருது..”
“உன்னை எல்லாம், உன்ற வீட்டுல எப்படி மேய்க்குதோ உன்ற அம்மா”
“க்கும்…அதை பத்தி பேசாத அத்தை.. ஒரே மகன்னு பாசம் இல்லாம,என் அக்கா புருசனுக்கு கறி சோறு போட்டுட்டு, எனக்கு, குழம்பும், எலும்பும் வச்சுருக்கு..”
வராத கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டான்..
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, பரபரப்புடன் உள்ளே நுழைந்தாள் அகல்.
“அம்மா விஷயம் தெரியுமா??”
“என்ன, நீ டென்த்ல பெயில் ஆயிட்டியா??”
“இந்த லூஸும், இங்க தான் இருக்கா??”
“ஆமா, நாங்க லூசு. இவுக டைட்.. விஷயத்தையே சொல்லாம,ஹால்ப் பாயில் கணக்கா கேட்டுப்புட்டு..
பேசுறாங்க..
விட்டா, அடிச்சு கூட கேட்பாங்க, சொல்லிடாதிங்கன்னு சொல்லும் போல..”
“நீ, பேச விட்டா தானே பேச முடியும்??”
“என்னடி அகலு..அவன் கூட மல்லுகட்டாம, சேதிய சொல்லு..”
“இருடா கருவாயா, உன்னை அப்புறம் பேசிக்குறேன்..
அந்த பழனி எருமை இருக்குல்ல..??”
“இருக்கானா?? இல்லியா??”
“வாயை மூடுடா..நீ சொல்லுடி, அவனுக்கு என்ன??”
“இன்னிக்கு, என் மாமியாரை கூட்டிட்டு ஆஸ்பத்திரி போனேன்ல,அங்க பார்த்தேன்.. அவசர பிரிவில, அவனை சேர்த்துருக்காங்க..”
“என்ன ஆச்சு டி அவனுக்கு..??”
“தெரியல ,ஸ்ட்ரெசெர்ல வச்சு, வேகமா தள்ளிட்டு போனாங்க..நான் கூட கவனிக்கல..என் மாமியார் தான், பார்த்துட்டு சொன்னாங்க..”
“என்ன ஆகி இருக்கும்??நேத்து கூட, நல்லா தானே இருந்தான்..”
“ஒரு வேளை, கொரோனா தாக்கி இருக்குமோ..”
“ஏலே பாண்டி..”
“இல்ல அத்தை, நீ ரொம்ப யோசுச்சு சிரம பட வேண்டாமுன்னு சொன்னேன்..அதெல்லாம், அவனை தாக்காது. அவன், அதை விட மோசமான ஜந்து…”
‘சரி தான். அதை விட மோசமான கிருமி அவன்..’
பற்களை கடித்து கொண்டு, கண்கள் சிவக்க அமர்ந்திருந்தாள் மது..