அத்தியாயம்-16
வானில், குளிர் நிலவு பவனி வந்து கொண்டிருந்தது..மொட்டை மாடி கை பிடி சுவரில் சாய்ந்து நின்று, அதை வெறித்துக் கொண்டிருந்தாள் மது..
மனதுக்குள் பல எண்ண அலைகள்..
பின்னால் ஆள் வரும் அரவம் கேட்டு திரும்பி பார்த்தாள்..ராஜா வந்து கொண்டிருந்தான்..
“தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க??”
“தூக்கம் வரல..அதான்..”
“ஓ..மதி, நான் கேட்குறதுக்கு சரியா பதில் சொல்லு..”
“எ.. என்ன கேட்க போறீங்க..??”
“நீ, என் கிட்ட இருந்து எதையாவது மறைக்குறியா??”
“நான், என்ன மறைக்க போறேன் வரு..??ஒண்ணும் இல்லையே..”
சற்று பதற்றத்துடன், அவசரமாய் பதில் வந்தது..
“இல்ல,எனக்கு என்னமோ தோணுது.உனக்குள்ள ஏதோ அழுத்துது. அப்போ, அப்போ, சோர்ந்து போற..கலக்கமா இருக்க..
என் கிட்ட சொல்ல மாட்டியா??
என்னை நம்பலையா நீ??”
வேகமாய் அவன் வாயில் கை வைத்து, மறுப்பாய் தலை அசைத்தவள்..
“உங்களை நம்பாம, யாரை நம்ப போறேன் வரு..”
“அப்புறம் என்ன??”
“சொல்லுறேன் வரு..நேரம் வரும், அப்போ எல்லாம் சொல்லுறேன்..முழுசா சொல்லுறேன்..உங்க கிட்ட சொல்லாம, யார் கிட்ட சொல்லப் போறேன்..”
“அப்போ, இப்போ சொல்ல மாட்ட??”
“என் மேல நம்பிக்கை வச்சு,நானா சொல்லுற வரை, என் கிட்ட எதுவும் கேட்காதீங்க.. ப்ளீஸ்..”
“ஓகே விடு..வா, வந்து தூங்கு..பனி ஜாஸ்தியா இருக்கு..”
“போலாம் வரு..கொஞ்ச நேரம் இருப்போம்..
வரு, நான் ஒன்னு கேட்கவா??”
“கேளு..”
அவன் முகம் பார்க்காமல், வேறு புறம் திரும்பிக் கொண்டு,
“ஒருவேளை, நான் உங்க கிட்ட நடிச்சேன்னு சொன்னா, என்ன சொல்லுவீங்க..??”
அவள் முகத்தை கூர்ந்தவன்…
“புரியல..”
“இல்ல, உங்களை காதலிக்குற மாதிரி நடிச்சேன்..நீங்க, என் கிட்ட முகம் திருப்பி இன்சல்ட் பண்ணீங்க.. அதுனால, உங்களை என் பின்னாடி வர வைக்க, லவ் பண்ணுற மாதிரி நடிச்சேன்..இதெல்லாம் சும்மான்னு சொன்னா..”
அவனிடம் பதில் இல்லை..
நிமிர்ந்து, அவன் முகம் பார்த்தாள்..
அவள் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
[the_ad id=”6605″]
“ப.. பதில் சொல்லுங்க வரு..”
தோள்களை குலுக்கியவன்,
“அதுக்கப்புறம், என் வாழ்க்கை அப்படிங்குற புத்தகத்துல, உன் சேப்ட்டர் அவ்ளோ தான்..”
கண்ணில் அதிர்வோடு, அவன் முகம் பார்த்தாள்..
“பின்ன, நீ லவ் பண்ணி, அந்த லவ் சேராம போனா, பீல் பண்ணலாம்..நீ தான், நடிப்புன்னு சொல்லிட்ட.. நடிச்ச உன் கிட்ட, கெஞ்சிட்டு இருப்பேன்னு நினைச்சியா??இல்ல, தாடி வளர்த்துட்டு, வாழ்வே மாயம் பாடுவேன்னு நினைச்சியா??
உன் கிட்ட, விளக்கம் கூட கேட்க மாட்டேன்..
உன் மனசுல காதல் இல்லாதப்போ, உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்குறதும்,பாழும் கிணத்துல கல்லை கட்டிட்டு குதிக்குறதும் ஒண்ணு..
என்னை பொறுத்தவரை,அந்த பொண்ணுக்காக உருகி, கரைஞ்சு, நம்ம வாழ்க்கையோடு, நம்ம மேல அன்பு செலுத்துற அத்தனை பேரையும் கஷ்டப்படுத்துறதும் தப்பு..
அதே மாதிரி, அந்த பொண்ணு மேல ஆசிட் வீசி,அவளை வெட்டி கொன்னு, இது போல சைக்கோ வேலை செய்யுறதும் தப்பு தான்..
அந்த பொண்ணை நாம உண்மையா விரும்பி இருந்தா, நிச்சயம், இப்படி கொடூரமான வேலை எதுவும் பார்க்க முடியாது..
ஒரு ரோஜா செடியில, இல்லை கடையில இருக்கு, ரசிக்குறோம்..அது நமக்கு கிடைச்சா சந்தோசம்..ஒருவேளை, அது நமக்கு கிடைக்காம, வேற யாரு கிட்டயாச்சும் சேர்ந்துட்டா..நாம ரசிச்ச அந்த பூவை கசக்கவோ, அழிக்கவோ, மனசு வராது..
அதான், அதை ரசிச்சோம் அப்படிங்குறதுக்கு அர்த்தம்..
அதெப்படி, பிடிச்ச பொருளை அழிக்க முடியும்..
பகுத்தறிவு உள்ள மனுஷன் செய்யுற வேலை இல்ல அது..ஐந்து அறிவு கொண்ட மிருகம் கூட செய்யாது, இந்த ஈன செயலை..
அவ தப்பு செஞ்சாலும், உன் காதல் உண்மைனா, நீ அவ முன்னாடி வாழ்ந்து காட்டணுமுன்னு நினைப்பே..
விட்டுட்டு போன அந்த பொண்ணே,உன்னை மிஸ் பண்ணிட்டோமுன்னு, பீல் பண்ணுற அளவு..அதான் ஆண்மைக்கு அழகு..”
“அப்போ, நான் அப்படி சொன்னா, நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவிங்களா??”
‘அதெப்படி பண்ணிக்க முடியும்??என் காதல் உண்மையாச்சே..’
ஒரு நிமிடம் அவள் முகம் பார்த்தவன்..
“இப்போ எதுக்கு இதெல்லாம்??”
“இல்ல சொல்லுங்க..சும்மா தெரிஞ்சுக்க தான்..”
“ஹ்ம்ம்..பண்ணிக்குவேன்..நீ பண்ண துரோகத்தையே நினைச்சுட்டு இருக்க முடியுமா??அதோட, என் அம்மா என்னை அப்படியே விட்டுடுவாங்களா??வீட்டுக்கு ஒரே பையன்..வாரிசு வேண்டாமா??நீ வாரத்துக்கு முன்ன இருந்து, என்னை கல்யாணத்துக்கு நச்சரிச்சுட்டு இருக்காங்க..
இப்போ தான், கொஞ்ச நாளா அது பத்தி பேசல..
எனக்கு, எங்க அம்மா முக்கியம்..அவங்களுக்காக கல்யாணம் பண்ணிப்பேன்..”
முகம் வெளிர நின்றிருந்தாள்..
அவளை பிடித்து உலுக்கியவன்,
“என்ன ஆச்சு மதி??நீ நிஜமாவா கேட்ட, சும்மா தானே??அப்புறம் ஏன், முகம் இப்படி இருக்கு..??”
“ஒண்ணும் இல்லை வரு..தூங்க போலாம்..”
சரியென்று தலை அசைத்தவன்,அவளோடு கீழே சென்றான்..
அவள் அறைக்கு முன் சென்றவள்,உள்ளே செல்லாமல், சற்று தயங்கி,அவனை பார்த்தாள்..
“என்ன மதி..??”
அவன் முன்னே கையை நீட்டியவள்,
“எனக்கு சத்தியம் செஞ்சு கொடுங்க..என்னை தவிர, யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு..”
அவள் முகத்தையே ஒரு நொடி பார்த்தவன்..
“என்ன தான் மா ஆச்சு உனக்கு??”
“இல்ல,எனக்கு பயமா இருக்கு..ப்ளீஸ், என் மன அமைதிக்காக..”
அவள் கை மேல் கை வைத்தவன்,
“உன் காதல் உண்மையா இருந்தா, இந்த ஜென்மத்துல, நீ தான் என் மனைவி..நீ மட்டும் தான்..போதுமா??”
ஓரளவு நிம்மதியான மன நிலையோடு தலை அசைத்தவள்,அறைக்கு உள்ளே சென்றாள்..
படுக்கையில் படுத்தவள் நினைவுகள், பின்னோக்கி சென்றது..
காலையில், பழனியின் தோப்பு வீட்டுக்கு,பதற்றமான மனநிலையுடன் சென்றாள்..
“வா கண்ணு,உள்ள வா..”
[the_ad id=”6605″]
அந்த வீட்டை கண்களால் அளந்தாள்..
ஒரு ஓரத்தில் சாக்கு மூட்டைகள், தேங்காய்கள்,கடப்பாரை, மம்மட்டி போன்ற உபகரணங்கள் எல்லாம் இருந்தது..
இன்னொரு மூலையில், கட்டில் மெத்தை, போர்வை,தலையணைகள் எல்லாம் இருந்தது..அங்கு, இரவு காவலுக்கு இருப்பவர்களுக்கு போல..
அதை பார்த்து விட்டு, முக சுளிப்போடு திரும்பினாள்..
அவளையே, ஒரு விதமான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த பழனி, அவள் முக சுளிப்பை பார்த்து சிரித்தான்..
வேறு புறம் முகம் திருப்பிக் கொண்டாள்..
“உட்காரு கண்ணு, எப்படி வேர்த்து இருக்கு பாரு..”
அவள் முகத்தில் துளிர்த்த வியர்வையை துடைக்க, கை கொண்டு வந்தான்..
வேகமாய் விலகியவள்,
“வெயில் ஜாஸ்தி அதான்..”
” அந்த கட்டில்ல உட்காரு..”
“இருக்கட்டும்..”
அங்கு இருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தாள்..
“என்ன பழனி,வெயில்ல நடந்து வந்தது, களைப்பா இருக்கு..வந்தவளுக்கு, ஒரு வாய் தண்ணி கூட தர மாட்டேங்குறிங்க..”
“இந்த தண்ணி என்ன, வேற தண்ணியே இருக்கு கண்ணு..தரவா??உனக்கு பிடிக்குமே..”
ஈ என்று ஒரு விதமான புன்னகையோடு கேட்டான்..
“ச்சு…எனக்கு அதெல்லாம் வேண்டாம்..இளநி இருந்தா கொடுங்க..”
“இரு கண்ணு..”
மூலையில் இருந்த இளநீரில் ஒன்று எடுத்து,பக்கத்தில் இருந்த அரிவாளால் சீவிக் கொடுத்தான்..
“என்ன பழனி, இதை எப்படி குடிக்கிறது??ஒரு ஸ்ட்ராவ், இல்ல, டம்ளர் ஏதாவது தாங்க..”
“நாங்க, இப்படியே தூக்கி குடிச்சுடுவோம்..அந்த நினைப்புல கொடுத்துட்டேன்..இரு வரேன்..”
அருகில் இருந்த அறைக்கு சென்றான்.. சில நிமிட தேடலுக்கு பின், ஒரு பிளாஸ்டிக் டம்ளர் கிடைத்தது..
அதை கொண்டு வந்தான்..
“ஒன்னு தான் கொண்டு வந்திங்களா??இன்னொன்னு கொண்டு வாங்க..”
“எதுக்கு கண்ணு??”
“உங்களுக்கு..??”
“எனக்கு வேண்டாம் கண்ணு..நீ குடி..”
“அப்போ, நீங்க குடிச்சுட்டு தாங்க, அந்த டம்ளர்லேயே நான் குடிக்குறேன்..”
ஒரு மார்க்கமாய் புன்னகைத்து சொன்னாள்..
“கொடு கண்ணு,உன் கையால விஷம் கொடுத்தா கூட குடிப்பேன்..”
வாயெல்லாம் பல்லாக கூறினான்..
‘விஷம் தானே தரேன்…’
முழு இளநிரையும், அந்த டம்ளரில் ஊற்றியவள், அவனிடம் நீட்டினாள்..
அதை வாங்கி, அவளை பார்த்துக் கொண்டே குடித்தான்..
பாதி குடித்து விட்டு, மீதியை கொடுத்தான்..
அதை வாங்கி, அருகில் இருந்த மேஜை மேல் வைத்தவள்,
“உங்க போன் கொடுங்க பழனி..”
“ஏன் கண்ணு குடிக்கலையா??”
“குடிக்கிறேன்.முதல்ல, உங்க போன் கொடுங்க..என் போட்டோவை டெலிட் பண்ணிட்டு குடிக்குறேன்..”
“என் மேல நம்பிக்கை இல்லியா கண்ணு..??”
‘நீ ஒரு கிரிமினல், பொறுக்கி ராஸ்கல், உன் மேல நம்பிக்கை வேற..’
“நான், ஒரு பக்கா பிஸ்னெஸ் மேன் பொண்ணு பழனி..முதல்ல, வேலையில குறியா இருப்பேன்..”
“சரி தான் கண்ணு.ஒரு வேளை அழிச்சுப்புட்டு, என்னை ஏமாத்திட்டு போய்ட்டினா..??”
“என்ன பழனி?? நான் ஒரு பொண்ணு.தனியா வந்துருக்கேன்..இந்த ஆள் இல்லாத இடத்துக்கு..இவ்ளோ பெரிய, மீசை வைச்ச ஆள் நீங்க..உங்களை மீறி, ஏமாத்திட்டு போக முடியுமா??இல்ல விட்டுடுவீங்களா??
உங்க மேலேயே நம்பிக்கை இல்லியா??”
ஏளனமாய் உதடு பிதுக்கினாள்..
அவன் ஆண் கர்வம் எழ,
அவன் அலைபேசியை கொண்டு வந்து கொடுத்தான்..
கடவு சொல்லும், அவளையே போட சொன்னான்..
அதில் உள்ள அவள் புகைப்படத்தை அழித்தாள்.. இவளை போல இன்னும் சில பெண்களின் புகைப்படங்கள்,சில வீடியோக்கள்.. பார்க்காமலேயே, அது எப்படி பட்ட வீடியோவாக இருக்கும் என்று தெரிந்தது..
நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள், சற்று அசௌகர்யம் தெரிந்தது..
“என்ன ஆச்சு பழனி..??”
“ஒரு நிமிஷம் இரு..வந்துடுறேன்..”
வேகமாய், குளியல் அறை நோக்கி சென்றான்..
ஒரு நமட்டு புன்னகையுடன்,நின்றாள்..அவன் சென்றதும்,அந்த போனில் உள்ள அனைத்து டேட்டா, மெமரி கார்டில் உள்ள டேட்டா, மொத்தமாய் அழித்தாள்..
‘இதை வச்சு,இன்னும் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை அழிப்பானோ??’
போன் மொத்தமாய் கிளியர் ஆனதும், ரீஸ்டார்ட் செய்து, மீண்டும் ஒரு முறை சோதித்தாள்..அதுவரை பழனி திரும்பவில்லை..
அந்த அலைபேசியை மேஜையில் போட்டு விட்டு,திரும்பினாள்..பழனி வந்தான்..
குளித்திருப்பான் போல, ஈரம் சரியாக துடைக்காமல் வந்திருந்தான்..
“பழனி, இதுக்கு பேக் அப் இருக்கா??”
“என்ன??அப்படின்னா??”
“ஹ்ம்ம்..வேற ஏதாவது போன்ல, இல்ல டிவைஸ்ல, என் போட்டோ இருக்கா??”
“இதுல தானே எடுத்தேன்,யாருக்கும் அனுப்பல,அப்புறம் எப்படி இருக்கும்..??”
‘நல்ல வேளை. உன் டெக்கனாலஜி அறிவு, இந்த மட்டோடு நின்றதே. நன்றி கடவுளே..’
மறுபடியும், அவன் கை கால்களை சொறிய ஆரம்பித்தான்..
“என்ன ஆச்சு பழனி..??”
“இரு வரேன்..”
மறுபடியும், குளியல் அறை நோக்கி விரைந்தான்..
‘ஏதோ , அரிப்பு பூச்சி தொட்டுட்டனோ??இல்ல, செடி கொடில உரசிட்டனோ??இப்படி அரிக்கிது..’
குளியல் அறையில் தண்ணீர் கொண்டு, கை, கால், எல்லாம் கழுவிக் கொண்டு யோசித்தான் பழனி..
மறுபடியும் வெளியே வந்தான்..
“என்ன பழனி?? நேரம் ஆச்சு..அத்தை தேடுவாங்க..”
“நீ போ..”
“நிஜமாவா??போகவா??”
“போ..இன்னொரு நாள் பார்க்கலாம்..”
“சூயூர்??”
“ஆமா,சீக்கிரம் போ..”
கழுத்தை பிடித்து தள்ளாத குறையாய், வெளியே அனுப்பியவன்..மறுபடியும் குளியல் அறையில் தஞ்சம் அடைந்தான்..
வெற்றி புன்னகையுடன் வெளியே வந்தாள்.
சாலையில் செல்லும் போது,பக்கத்து வயலில் ஒரு தாத்தா, தன் அலைபேசியை கயிற்று கட்டிலில் போட்டு விட்டு, கிணற்றுக்கு குளிக்க சென்றார்..
அவள் மனதில் எரிந்த நெருப்பை அணைக்க, ஒரு வழி தோன்றியது.
அந்த மொபைலை எடுத்தவள்,
பழனி எண்ணுக்கு அழைத்தாள்..
வெகு நேரம் ரிங் சென்றது.பிறகு எடுத்தவன்,அவசர கதியில்,
“ஹலோ யாரு..??”
“என்ன பழனி எப்படி இருக்க??”
குரலில் யாரென அறிய முயன்றான்..
[the_ad id=”6605″]
“என்ன பா??யாருன்னு யோசிக்கிறியா??ஜாஸ்தி யோசிக்காத.. நான் மது..ராஜசேகர் பொண்ணு..என்னை பத்தி தெரியாம விளையாடி பார்த்துட்டே..
நீ போட்டோ எடுத்தேன்னு சொன்னியே, அந்த பப்ல போய் விசாரிச்சு பாரு என்னை பத்தி,உன்னை விட, பெரிய பெரிய கேடி எல்லாம் பார்த்துருக்கேன்..என் கிட்டேயேவா.. உன் கிரிமினல் வேலை எல்லாம் காட்டுற..
இந்த மதுவுக்கு, யார் கிட்ட, எந்த நேரத்துல, பணிஞ்சு போகணும்,யாரை, எப்போ பணிய வைக்கணுமுன்னு தெரியும்..
அதே மாதிரி, யார் கிட்ட பொறுத்து போணும், யாரை பொறி கலங்க அடிக்கணுமுன்னும் தெரியும்..
என் கிட்ட பேசவே, ஒரு ஸ்டேட்டஸ் வேணும்..நீ,
என்னையே இவ்ளோ நாள் மிரட்டிட்டு இருந்துருக்க ??
நான் பயந்துட்டேன்னு நினைச்சியா??
நெருப்புன்னு தெரியாம விளையாடி பார்த்துட்டே.. அதுக்கு பலன் தெரிஞ்சுக்க வேண்டாம் நீ..??
நீ பண்ண வேலைக்கு பெயர் என்ன தெரியுமா??சைபர் கிரைம்.. இதுக்கு தனி டிப்பார்ட்மெண்ட்டே இருக்கு..அங்க போனா, என்ன ஆகும் தெரியுமா??என் அப்பாக்கு இருக்குற செல்வாக்குக்கு..
நீ எல்லாம் கொசு..உன்னை அடிக்க, பெரிய ,பெரிய, கட்டை கம்பு எல்லாம் எதுக்கு..ரெண்டு கை போதாது..
உன்னை மாதிரி, பொண்ணுங்க பேசுனது,அவங்க போட்டோ, வீடியோ வச்சு மிரட்டுறவன் எல்லாம், கொரோனாவை விட மோசமான கிருமி..
முகம் தெரியவா போகுது, அப்டிங்குற நம்பிக்கையில், அவ கிட்ட தப்பா பேசுறது..உள்பெட்டி போய் தொந்தரவு கொடுக்குறது..ராங் கால் போட்டு மோசமா பேசுறது, மிரட்டுறது..இப்படி கேடி வேலை பார்க்குற அத்தனை பேரையும்,அந்நியன் படத்துல வர மாதிரி, மிளகாய் தூள் பூசி, கொதிக்கிற எண்ணெய் சட்டிக்குள்ள போடணும்..
உங்களையெல்லாம், வேரோடு அழிக்கணும்..”
அவள் பேச்சில் திகைத்து, பதில் பேச முடியாமல் நின்றான் பழனி..
“நீதானே சொன்ன,உனக்கு உயிர் இருக்குற வரை, உன் முடிவு மாறாதுன்னு..அதான், நீ உயிரோட இருந்து என்ன செய்ய போறேன்னு, உனக்கு விஷம் கொடுத்தேன்..ஏன்னா, நீ விஷ கிருமி இல்ல, அதான்..
இப்போ, உடம்பெல்லாம் அரிக்குதா??இன்னும் கொஞ்ச நேரத்துல, அங்க, அங்க, சிவக்கும், தடிப்பு வரும்,மயக்கம் வரும்…அப்புறம், நேரா மேலோகத்துக்கு ஸ்ட்ரைட் ரூட் தான்.. வழில, ஸ்டாப் கூட இல்ல..”
“ஏய்,என்ன சொல்லுற..??என்ன கொடுத்த??”
“உனக்கு தமிழ் புரியாதா??முடிஞ்சா சீக்கிரம் போய், ஹாஸ்பிட்டல்ல சேரு.. பொழச்சு வந்தினா, திரும்ப என் கண்ணுல பட்டுடாத. அப்புறம், அதான் உனக்கு கடைசி நாளு..
ஹ்ம்ம்..அப்புறம், ஒன்னு சொல்ல மறந்துட்டனே..நான், உனக்கு என்ன குடுத்தேன்னு கண்டு பிடிக்கவே, ரெண்டு நாள் ஆகும்..ஏகப்பட்ட டெஸ்ட் எடுக்கணும்..
ஆல் தி பெஸ்ட்..
பை..”
போனை கட் செய்த பிறகும், அவள் கொதிப்பு அடங்கவில்லை..
‘பொறுக்கி ராஸ்கல்..யார் கிட்ட வால் ஆட்டுறான்..’
கண்கள் சிவக்க, முகம் எல்லாம் கோப ரேகைகளோடு, அந்த மொபைலில், அவன் எண்ணை அழித்தவள்.. அதை வைத்து விட்டு,புயல் போல நடந்து சென்றாள்..சிந்தை முழுதும், பல யோசனைகளோடு..
காற்றில் முடி பறக்க,கண், முகம் எல்லாம் சிவந்து, காளி தேவி போல சென்று கொண்டிருந்தாள்..
அப்பொழுது தான் ராஜா, அவளை பார்த்து விட்டு, வீட்டிற்கு அழைத்து வந்தான்..
ராஜாவை பார்த்ததும்,
‘எவ்வளவு பெரிய விஷயம் செய்து விட்டு வந்திருக்கிறோம்.. இது ராஜாவுக்கு தெரிந்தால்??’,
என்னும் நினைவு, அவள் கண்ணில் நீரை வர வைத்தது..
[the_ad id=”6605″]
இப்பொழுது நினைத்தாலும், கோபம் பொங்கியது அவளுக்கு..அவனுக்கு, விஷம் எல்லாம் கொடுக்கவில்லை அவள்..அது, போதை மருந்து, குடி, போன்ற பழக்கத்தில் இருந்து மீளுவதற்கு, அவர்களுக்கே தெரியாமல் உணவில் கலந்து கொடுக்கபடும் மருந்து..
அதை உண்டால், அதன் பின் போதை மருந்து அவர்களுக்கு, வாந்தி ஒவ்வாமை போன்ற உணர்வை ஏற்படுத்தும்..
முற்றிலும் மீண்டு வர வழி செய்யும்..
அளவு சரியாக கொடுத்தால்..
அளவு சரி இல்லை என்றால்,அலர்ஜி அரிப்பு,தடிப்பு,மயக்கம் போன்ற பக்க விளைவை ஏற்படுத்தும்..
அதை, அதிக அளவு அவனுக்கு கொடுத்தாள் மது..
அதை கண்டு பிடித்து, மருத்துவம் ஆரம்பித்து, முற்றிலும் சரி செய்ய, ஒரு மாதம் ஆகும்…
‘உனக்கெல்லாம் விஷ ஊசி தான் போட்டுருக்கணும்..பொழச்சு போன்னு, இதோட விட்டேன்..இதான், உனக்கான குறைந்த பட்ச தண்டனை..’
உள்ள கொதிப்பு அடங்க, தண்ணிரை தொண்டையில் சரித்தாள்..
அதன் பிறகு கோபம் போய், அந்த இடத்தை கவலை பிடித்துக் கொண்டது..ராஜாவின் பேச்சினால் உண்டான கவலை..
‘என்னை தவிர, யாரும் உங்க வாழ்க்கையில வர விடமாட்டேன்..இதுக்கு, சீக்கிரம் ஒரு வழி பண்ணுறேன்..’
உறுதி எடுத்தவள்,அதன் பின்பு தான் உறங்கப் போனாள்..