அத்தியாயம்-25
இரவு உணவை முடித்தவுடன், அவர்கள் பயணம் ஆரம்பித்தது..பாண்டி காரை ஓட்ட, ராஜா அருகில் அமர்ந்து கொண்டான்..
பின் இருக்கையில், மதியும் மீனாவும் அமர்ந்திருந்தார்கள்..
கண்ணாடியின் வழியே, மீனாவை அவ்வப்போது பார்த்துக் கொண்டே ஓட்டினான் பாண்டி..
அதை உணர்ந்து, சில பல முறைப்புகளை கொடுத்த படி இருந்தாள் மீனா..
அதை தட்டி விட்ட படி, அவளை பார்வையிட்டு கொண்டே வந்தான்..
காதல் பாடல்களை காரில் ஓட விட்ட படி, கவுண்டமணியை விட சூப்பராக ரொமான்டிக் லுக் கொடுத்த வண்ணம் இருந்தான்..
‘அடங்க மாட்டேங்குறானே..’
ராஜா, தீவிர சிந்தனையில் இருந்தான்..
அன்னையையும் ஊராரையும் எதிர் கொள்வது பற்றி..
காரின் ஜன்னல் கண்ணாடியில் சாய்ந்த வண்ணம்,தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்தாள் மதி..
மதி பிறந்த மூன்றாவது நாளில், அவள் அன்னைக்கு ஜன்னி கண்டு, சரியான மருத்துவ வசதி இல்லாமல், காப்பாற்ற முடியவில்லை..
அவள் அன்னைக்கு தூரத்து உறவான அத்தை தான், அவள் அன்னையை பார்த்துக் கொண்டார்..அவருக்கு சொந்தம் என்று யாரும் இல்லாததால், அவள் அன்னையுடன் தான் இருந்தார்..
அவள் பிறந்ததிலிருந்து, அவர் தான் இவளை வளர்த்தார்..பாசத்தை கொட்டி கொட்டி வளர்க்காவிட்டாலும்,அவருக்கு தெரிந்த வரை பொறுப்போடு வளர்த்தார்..
இவள் பத்து வயது வரை..
அதற்கு பிறகு, அவர் மேலுலகம் சென்று விட்டார்..
சிறு வயதில் இருந்தே, அவள் மீனா வீட்டின் பக்கத்துக்கு வீட்டில் தான் வளர்ந்தாள்..
அவளின் தந்தை, தன் நண்பனின் கண் பார்வையில் வளரட்டும் என்று, அங்கு தான் அவளையும், அந்த அத்தை பாட்டியையும் குடி வைத்திருந்தார்..
நடராஜனின் மனைவி மஞ்சுளா, தன் மகளை போல இவளையும் எண்ணும் பரந்த மனம் இல்லை எனினும், கொடுமை செய்யும் குணம் கிடையாது..தாமரை இலை தண்ணீர் போல பழகுவார்..
மகளின் தோழி என்னும் அளவில், அவளை பார்த்து கொள்வார்..
[the_ad id=”6605″]
அவள் அத்தை பாட்டி இருந்த வரை..
நடராஜனின் அன்னைக்கு, இவளை கண்டாலே பிடிக்காது..
ஏதாவது திட்டிக் கொண்டே இருப்பார்..
‘பொறந்ததும் அம்மாவை முழுங்கிடுச்சு’ போன்ற வசனங்களுடன்..
விவரம் புரியும் வரை, அவரை கண்டாலே பயம் கொள்வாள்..அவர் திட்டுவதற்கு அர்த்தம் புரியாமல்,அதன் பின்னால், ஒதுங்க கற்றுக் கொண்டாள்..
பத்து வயதிற்கு பிறகு, அவளை யார் பார்த்துக் கொள்வது எனும், பெரும் குழப்பம் வந்தது சேகருக்கு..
நடராஜன், தானே தன் வீட்டில் பார்த்துக் கொள்வதாய் கூறினார்..
அவர் அன்னை அதற்கு, தீவிர மறுப்பு தெரிவித்தார்..
மஞ்சுளா, மறுக்கவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை..
அவளை பள்ளி விடுதியில் விடுவது என்று முடிவு செய்து, சென்னையிலேயே, மிக பெரிய பள்ளியில் சேர்த்தார் சேகர்..
விடுமுறையில் மட்டும், நடராஜனின் இல்லத்திற்கு வந்து தங்கி செல்வாள் மதி..
அப்பொழுது, நடராஜனின் அன்னை பேசும் பேச்சுக்களை, பொறுத்துக் கொள்வாள்..
மஞ்சுளா, அவளை நன்றாகவே கவனித்துக் கொள்வார்..
அவருக்கு, அவள் மேல் வெறுப்பு ஒன்றும் இல்லை..பெண் குழந்தை, தங்களுக்கு பாரமாகி விட கூடாது என்னும் சராசரி மனநிலை மட்டுமே அவருக்கு..
சிறுவயதில் சேகர், அவளை எப்போதாவது தான் வந்து பார்ப்பார்..
அவள் அத்தை பாட்டி, உன் அப்பா வெளிநாட்டுல இருக்கார். அதான், அடிக்கடி வர முடியாது என்று கூறுவதை நம்புவாள்
அவள் தந்தை வரும் போது வாங்கி வரும் பொம்மைகளும் பொருட்களும், அவளுக்கு மகிழ்ச்சியை தரும்..அதனால், அவளுக்கு தனிமை பெரிதாக தெரிய வில்லை..நாள் ஆக ஆக, தந்தையின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்க ஆரம்பித்தாள்..
[the_ad id=”6605″]
அவள் விடுதியில் சேர்ந்த பின், அவள் பிறந்த நாளுக்கு மட்டும், வருடம் தவறாமல் வருவார் சேகர்..
அவர் வெளிநாட்டில் இல்லை, இங்கு தான் உள்ளார் என அவளுக்கு புரிய ஆரம்பித்த காலம் அது..
அவள் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது, அவள் பிறந்த நாள் சந்திப்புக்கும் தடை வந்தது பிரமிளாவாள்..
அவர் இவளை சந்திக்கும் போது, தன் அலைபேசியை அணைத்து வைத்து விடுவார்..
இவர்கள் பேச்சுக்கு இடையூறு இல்லாமல்.
அந்த வருடம் வந்தவர், அவளை அழைத்துக் கொண்டு, அவள் விரும்பிய இடத்துக்கு சென்றார்..
அப்பொழுது அவரை தேடி வந்த நடராஜன்,
“சேகர், உன்னை எங்கெல்லாம் தேடுறது..மது மயங்கி விழுந்துட்டா..உன் மனைவி, உன் போன்க்கு போட்டு போட்டு கிடைக்காம, எனக்கு போட்டு கேட்டாங்க..நான் பார்த்து சொல்லுறேன்னு சொல்லி, உன்னை, நீ போற இடம் எல்லாம் தேடிட்டு இருக்கேன்..”
“மதுவுக்கு என்ன ஆச்சு??”
“சரியாய் சாப்பிடலை போல..நீ போ..”
அன்று பாதியில் போனவர் தான், அதன் பிறகு, அடுத்த பிறந்த நாளில் இருந்து வருவதில்லை..
அன்று பிரமிளாவிற்கும் அவருக்கும் ஏற்பட்ட பெரிய வாக்குவாதத்தில், மதியை இனி பிறந்த நாளிற்கு கூட சந்திக்க செல்வதில்லை என்று, அவரிடம் வாக்கு கொடுத்த பின் தான் விட்டார் பிரமிளா..
அவர் போன சில நாட்களிலேயே, இது தெரிந்து விட்டது மதிக்கு, மீனாவின் மூலம்..வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையை கவனித்து, இவளிடம் கூறிவிட்டாள் மீனா..
பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றாள் மதி..மருத்துவம் படிக்க சில மதிப்பெண்கள் குறைவு.
சேகரிடம் சொல்லி,பணம் கட்டி சேர்த்து விட சொல்வதாய் கூறி பார்த்தார் நடராஜன்..
பிடிவாதமாய் மறுத்து விட்டாள் மதி..
மீனாவுக்கும் மருத்துவம் படிக்க ஆசை..அவளுக்கும் மதிப்பெண் குறைந்து விட்டது..
நடராஜனின் நிலைக்கு, அவரால் பணம் கட்டி இடம் வாங்க முடியாத நிலை.. தந்தையின் நிலை உணர்ந்து, செவிலியர் படிப்பில் சேர்ந்தாள் மீனா..
அவள் மருத்துவம் படிக்காத போது, நான் மட்டும் பணம் கட்டி மருத்துவம் சேர விருப்பம் இல்லை, என்று கூறி விட்டாள் மதி..
மீனாவும் அவளிடம் பேசி பார்த்து விட்டு,அவளின் பிடிவாதத்தில் கோபம் கொண்டு, செவிலியர் படிப்பிலும் சேர கூடாது என்று கூறிவிட்டாள்..
அதனால், எம்எல்டி சேர்ந்து படித்தாள் மதி..
அவளின் கற்றுக் கொள்ளும் ஆர்வம்,அதிகம் அந்த துறையை பற்றி தெரிந்து கொள்ள வைத்தது..
படித்து முடித்து இருவரும், சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார்கள்..
அங்கு தான், சேகரை மறுபடியும் சந்தித்தாள் மதி..
ஹார்ட் அட்டாக் என்று சேர்க்க பட்டார்..அவர் பிஏ மூலம்..அதுவரை, தந்தையின் மேல் சிறு கோபத்தில் இருந்த மதி, பதறிப் போனாள்.
அவளுக்கு இருக்கும் ஒரே உறவும் இல்லையென்றானால், அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை..
அதன் பிறகு, அவரை கூடவே இருந்து கவனித்துக் கொண்டாள்..
அதிலிருந்து, அவர் அடிக்கடி அங்கு சோதனைக்கு வந்தார்..
அப்பொழுது, அங்கு யாரையோ பார்க்க வந்து மது, இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை பார்த்து விட்டு, சேகர் சென்றதும், இவளிடம் வந்து பேசினாள்..
அப்பொழுது தான் முதல் முறை, இருவரும் நேரில் சந்தித்து கொண்டார்கள்..
இவளுக்கு ஆச்சர்யம், அவள் கண்களில் ஆராய்ச்சி..
வெகு நேரம் பேசினார்கள்..இவள் சகோதர பாசத்தில் பேசினாள்.. அவள், யோசனையில் அளந்து பேசினாள்..
[the_ad id=”6605″]
பிறகு, அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டு விடை பெற்றார்கள்..
அடுத்த மாத மருத்துவ பரிசோதனைக்கு, சேகர் வரவில்லை..
மீனாவிடம் விசாரித்தாள் மதி..
“உன்னை பார்க்க சங்கடப்பட்டு கொண்டு வரவில்லை..உன்னை பார்த்தால், குற்ற உணர்வாய் இருக்காம் மாமாக்கு”
என்று கூறினாள்..
அதன் பிறகு, மீனாவிடம் அவரை நன்றாக பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு, இவள் பெங்களுரில் இருக்கும் மருத்துவமனைக்கு, வேலையை மாற்றி கொண்டாள்..
மீனாவும், தினமும் சேகரின் வீட்டுக்கு சென்று அவரை சோதித்து, அவர் ஆரோக்கியத்தை கவனித்து கொண்டாள்..
மதிக்கும் தகவல் சொன்னாள்..
இப்படி வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது தான், மதுவிடம் இருந்து அழைப்பு வந்தது..
உடனே கிளம்பி, சென்னைக்கு வர சொன்னாள்..
இவளும் பதறிக் கொண்டு வந்தாள்..
தந்தையின் உடல் நிலையில் பிரச்சனையோ என்று..
இங்கு வந்ததும் தான் தெரிந்தது,
அவளுக்கு பதில், அவள் அத்தை வீட்டுக்கு போக சொல்வதற்காக அழைத்திருந்தாள் மது….
முதலில் மறுத்தவள்,
“உன் அப்பாவோட ஹெல்த்காக தான் சொல்லுறேன். அப்புறம் உன் இஷ்டம்”
என்னும் மதுவின் பேச்சில், சம்மதித்தாள்..
அவள் திட்ட படி, சென்னைக்கு வெளியில் உள்ள ஷாப்பிங் மாலில், இருவரும் மாறினார்கள்..
அங்கு உள்ள ரெஸ்ட் ரூம்மில், அவள் உடையை இவள் மாற்றிக் கொண்டாள்.. இவள் உடையை, அவள் மாற்றிக் கொண்டு, இவள் அங்கிருந்து செல்லும் வரை காத்திருந்து, பிறகு அவள் தோழர்களுடன் கிளம்பி சென்றாள் மது..
அவர்கள் பாதுகாப்பில், சில நாட்கள் இருந்து விட்டு, விசா எல்லாம் ரெடி ஆனதும், வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டாள் அவள்,அவளின் விருப்பபடி..
இவளுக்கு ஹீல்ஸ் போட்டு பழக்கம் இல்லாததால், நடக்க முடியாமல் மென் நடையில் நடந்து தடுமாறி, ஒருவழியாய் காரை அடைந்தாள்..