அமித்தின் அத்தையும் பயந்து கொண்டு தான் இருந்தாள்..
“நேத்து நான் இங்க வரும் போது,இவ தான் மாடியில இருந்து இறங்கி வந்தா..”
அந்த வேலைக்காரியை கை காட்டினாள்..
அவள் உள்ளுக்குள் நடுங்கினாலும், முன்னவே எதிர் பார்த்த விஷயம் என்பதால்,சற்று தைரியமாகவே இருந்தாள்..
“சார்,நான் சாப்பாடு கொடுக்க வந்தேன்..மேடம்க்கு..
கொடுத்துட்டு வரும் போது தான், இவங்க வந்தாங்க..உடனே என் கிட்ட இருந்து, சாவி வாங்கிட்டு போய்ட்டாங்க.இன்னிக்கு தான் மறுபடியும் சாவி வாங்கிட்டு, சாப்பாடு கொடுக்க போனேன்.மேடம் அஹ் காணும்…”
அத்தையின் முகத்தை பார்த்தான்..
“ஆமாம் அமித்,சாவி வாங்கிட்டு வந்துட்டேன்..அப்புறம் எப்படி போனா??”
“என்னையே கேளுங்க..அவ தொலைஞ்சா கூட பரவால்ல..என்னை பத்தி ஆதாரம் எதுவும் கொண்டு போனாளா தெரியல..
அதை வச்சு, என்னை மிரட்டிட்டே இருந்ததால தான், அவளை முழு நேர போதையிலேயே வச்சுருந்தேன்..
நேத்து, பூட்டி தானே வச்சுருக்கோம்ன்னு, டோஸ் கம்மியா கொடுத்தேன்..
அதான் தப்பா போச்சு..”
சற்று நேரம் யோசித்தவன்,
“அவ ரூம்ல பூ ஜாடி உடைஞ்சு கிடக்கு.,ஒரு வேளை, அவளை யாரும் கடத்திட்டு போய்ட்டாங்களா தெரில..
என் எதிரிங்க யாராவது, பணம் எதிர்பார்த்து..??”
“அவளை கடத்தினா, எப்படி நீ பணம் கொடுப்ப??”
“அது, உங்களுக்கும் எனக்கும் தெரியும்.என் எதிரியை பொறுத்த வரை, அவ என் மனைவி.அவளை கடத்தி மிரட்டுனா, பணம் கிடைக்கும்ன்னு நினைச்சு இருப்பான்..”
“அப்போ நல்லது தான். தொலைஞ்சான்னு விடு..”
“ச்சு, எல்லாம் யூகம் தான்.. சரியாய் தெரியல..ஆனாலும், அவன் எதுலயும் பதிவு ஆகாம போய் இருக்கான்..
இவ்ளோ காவலையும் மீறி..
நாம ஜாக்கிரதையா தான் இருக்கனும்..”
“எனக்கு என்னமோ, இங்க யாரோ உதவி பண்ணி இருக்கணுமுன்னு தோணுது..”
“இங்க வேலை பார்க்குறவங்க எல்லாம், ரொம்ப வருசமா இருக்காங்க.. யாரை சந்தேக பட..பட், அப்படி யாராவது உதவி செஞ்சுருந்தா..ஐ வில் ஷோ, ஹெல் டு தெம்..”
குரூரமாய் சிரித்தான்..
வேலைக்காரி எச்சில் விழுங்கினாள்..
அப்பொழுது அவன் அலைபேசி இசைத்தது..
அதை இயக்கி பேசியவன் முகம், கடுமையாக மாறியது..
அவன் பேசி முடித்ததும்,
“என்ன ஆச்சு அமித்..??”
“மது சென்னைல இருக்கா.. அவ அப்பன் தான், இங்க யாரையோ அனுப்பி, கூட்டிட்டு போய் இருக்கான்..அவன் அப்பன் இன்னிக்கு காலையில ஏர்போர்ட் போய், அவளை பிக் பண்ணிட்டு வந்ததா, தகவல் வந்துருக்கு..கூடவே, ரெண்டு ஆளுங்க..அவனுங்க தான், இங்க வந்து அவளை கூட்டிட்டு போய் இருக்கானுங்க..”
“அச்சோ, இப்போ என்ன பண்ணுறது அமித்??அவளை, அங்க இருந்து கடத்த சொல்லுறியா??நம்ம ஆளுங்க கிட்ட”
“தேவை இல்லை..இனி, அவ எதுக்கு எனக்கு..??ஒரு வேளை ஏதாவது ஆதாரம் எடுத்துட்டு போய் இருந்தா, அதை அவ, நமக்கு எதிரா உபயோகிக்காம பார்த்துக்கணும்..அதான், இப்போ முக்கியம்..
அவ நம்ம வீட்டு பார்ட்டில, போதை அதிகம் ஆகி, கலாட்டா பண்ண வீடியோவை, அவ அப்பனுக்கு அனுப்பி வைப்போம்.
சும்மா ட்ரைலர் மாதிரி..
நமக்கு எதிரா செயல் பட்டா, மெயின் பிக்சர் காட்டுவேன்னு சொல்லி, மிரட்டி வைக்கலாம்..இப்போதைக்கு..இனி நிரந்தரமா என்ன பண்ணன்னு யோசிப்போம்..”
தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தான் அவன்..
சென்னையில், சேகர் வீட்டின் விருந்தினர் அறையில், ராஜாவும் பாண்டியும்..
“என்ன ஆச்சு டா??மீனா அம்மாக்கு..”
“பிரெஸ்ஸர் ஏறிடுச்சு.. மயங்கி விழுந்துட்டாங்க..
நல்ல வேளை, வீடு தாழ் போடல..பால் பாக்கெட் எடுக்க கதவை திறந்தவங்க..அப்படியே மயங்கி, கதவு கிட்டேயே விழுந்துட்டாங்க..
இல்லைனா, ஏன் வீரத்தை கதவு கிட்ட காட்டி, கதவை உடைச்சு..
என் வீரதீர செயலுக்கு எல்லாம் வேலை இல்லாம போச்சு..”
“சும்மா அளக்காம, இப்போ எப்படி இருக்காங்க, சொல்லு..”
[the_ad id=”6605″]
“க்கும்.. நாங்க ஹீரோ ஆனா பிடிக்காதே உங்களுக்கு..நீங்களே ஹீரோ ஆகனும்..நாங்க காமெடியனாவே சுத்தனும்..”
“டேய்,அடி வாங்க போற நீ..”
“நல்ல வேளை, உன்னை கூட்டிட்டு போகலை..இல்லைன்னா, அந்த மீனா,அண்ணா அண்ணான்னு உன் கிட்டேயே நன்றியை பிழிஞ்சுருப்பா..”
“மீனா வந்தாளா??”
“ஆமாம் மாப்பு..”
நகத்தை கடித்து, கால் கட்டை விரலில் கோலம் வரைந்தான்..
“என்ன கன்றாவி டா, இது??”
“வெட்கம் மாப்பு..வெட்கம்..அவளுக்கு, ரெண்டு நாளா கெட்ட கனவா வந்துச்சாம்..அதுனால, அம்மாவை பார்க்க கிளம்பி வந்துருக்கா..
நானும் போன் பண்ணலையா, பிள்ளை பயந்து போச்சு..
அதுனால, இன்னிக்கு என் கிட்ட வந்து..கிட்ட வந்து..”
“கிட்ட வந்து??”
புருவம் சுருக்கி கேட்டான்..
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா..”
“அட கொடுமையை..அந்த பிள்ளை தலை எழுத்து, இப்படியா அமையனும்.??.”
“ஏலே ராஜா..”
“சரி சரி, கோவப்படாத..எப்போ, உன் அம்மா கிட்ட பேச போற??”
“என்ன மாப்பு??இப்படி கழண்டுக்குற. உன்னை நம்பி தான் மாப்பு இருக்கேன்..
என் அம்மா கிட்ட போய், நான் காதலிக்குறேன்னு சொன்னா..
விளக்குமாறு எடுத்து வெளுத்துரும் மாப்பு..
உன் அம்மா மாதிரி, ஒரு அறையோட விடாது..
உனக்கு தெரியாதா, என் அம்மா பத்தி..”
“அப்போ, நான் போய் உன் அம்மா கிட்ட, நீ காதல் பண்ணுறேன்னு சொன்னா மட்டும், விட்டுடுமா??”
“அதான் மாப்பு நானும் சொல்லுறேன்..இந்த காதல் அப்டிங்குற வார்த்தையே, தப்பி தவறி கூட எடுக்கக் கூடாது..இதை, பெற்றவர்கள் உற்றவர்கள் பார்த்த திருமணமா மாத்தனும்..
அதுக்கு, நீ தான் உதவனும் மாப்பு..
இன்னிக்கு நைட், அந்த பிளேடு வந்துடும்..”
“பிளேடு அஹ்??யாருடா அது??”
“மீனா அப்பா தான், என் மாமனார்..”
“இதை முதல்ல, மீனா கிட்ட சொல்லுறேன்..”
“என் காதலுக்கு பெட்ரோல் ஊத்தி, பத்த வச்சுடாத மாப்பு..
இன்னிக்கு, அவ அப்பா கிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்கா..
அவ அம்மா கிட்ட சொல்லிட்டா..
நானும், எங்க வீட்டுல சொல்லுறேன்னு, சொல்லிட்டு வந்துட்டேன்..
நீ தான் பேசணும் மாப்பு..
உன் பிரெண்ட் வாழ்க்கை, உன் கையில தான் இருக்கு..
நான் வாழாவெட்டி ஆகாம பார்த்துக்கோ மாப்பு..”
“ச்சீ.. சீரியல் ஹீரோயின் மாதிரி வசனம் பேசாத..சரி..
நான் மதி கிட்ட சொல்லி..உன் அம்மா கிட்ட பேச சொல்லுறேன்..
ஆனா ஒரு கண்டிஷன்..உன் கடலை சாகுபடியை நிறுத்திட்டு, ஒழுங்கா மீனாவோட வாழனும்..நாளைக்கு அந்த பிள்ளை கண்ணை கசக்கிட்டு நின்னுச்சு..தொலைச்சுப்புடுவேன்..”
“அவளா கண்ணை கசக்குவா,என் கண்ணு முழியை நோண்டி, கையில கொடுத்துடுவா.. வேற பக்கம் பார்த்தாலே..”
“தெரிஞ்சா சரி..”
அன்று முழுவதும், மதுவுக்கு உணவு கொடுக்கும் நேரம் தவிர, மற்ற நேரம் எல்லாம் மாத்திரையின் உதவியோடு உறங்கினாள்..
பிரமிளா, அவளை விட்டு அசையாது அமர்ந்திருந்தார்..
உணவு கூட, அவர் தான் ஊட்டி விட்டார்..
கண் இமைத்தால், மறைந்து விடுவாளோ என்று, அவள் முகத்தையே, கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்..
அடிக்கடி அவர் கண்கள் கலங்கியது..
மறுநாள் மதுவை, மருத்துவமனையில் சேர்க்க அழைத்து செல்ல, அவள் அறைக்கு வந்தார் சேகர்..
அவரை கண்ட பிரமிளா,
“நானும் வரேன்..”
அவரை சந்தேகமாய் பார்த்தார் சேகர்..
“எந்த பிரச்னையும் பண்ண மாட்டேன்..டாக்டர் கிட்ட பேசனும்..”
மதுவை கை தாங்கலாய் பிடித்து, காரில் ஏற்றினார்கள்..
ராஜா,பாண்டி, சேகர், பிரமிளா அனைவரும் மருத்துவமனைக்கு சென்றார்கள்..
[the_ad id=”6605″]
அங்கு உள்ள சோதனைகள் முடித்து, அவளை பெட்டில் சேர்த்து விட்டு, அவளுக்கு பாதுகாப்புக்கு, தனியார் செக்கியுரிட்டி நிறுவனத்தில் இருந்து, இரண்டு பேரை நியமித்து விட்டு, மருத்துவரை பார்க்க சென்றார்கள்..
“உட்காருங்க..உங்க பொண்ணுக்கு எடுத்த டெஸ்ட் ரிசல்ட் எல்லாம், சாயங்காலம் ரெடி ஆகிடும்..
பார்த்துட்டு, அதுக்கு தகுந்த படி ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுடலாம்..
அப்புறம் தினமும், ஈவினிங் டு ஹவர்ஸ் விசிட்டிங் ஹவர்ஸ்..அப்போ, நீங்க பார்க்க வரலாம்..எங்க சஜ்ஜெஸ்ஸன் இல்லாம,எதுவும் சாப்பிட கொடுக்காதீங்க..
அவங்க எது கேட்டாலும், எங்க கிட்ட கேட்டுட்டு கொடுங்க..”
“ஓகே டாக்டர்..”
“டாக்டர்,இதுனால அவ உடல் நிலைக்கு பாதிப்பு வருமா??”
“இது ஸ்டார்டிங் ஸ்டேஜ் தான்.. பொதுவா, உலகத்திலேயே மிக ஆபத்தான போதை பொருட்கள்ன்னு பத்து சொல்லலாம்..
மரிஜுவானா,எம்டிஎம்ஏ,கேட்டமைன்,
கிரிஸ்டல் மெத்,கோகைன், ஆல்கஹால்,புகையிலை,எல்எஸ்டி,ஹெராயின், ஸ்பீட்பால்.
இதுல, மரிஜுவானா அதிகம் கிடைக்குறதில்லை..இது, அதிகம் பதற்றம்,மனஅழுத்தம் ஏற்படுத்தும்.அதுனால, இருக்குற பத்துல இது கடைசி இடம்..
அப்புறம் எம்டிஎம்ஏ, இது அதிகம் உடலை பாதிக்காது. ஆனாலும், தொடர்ந்து எடுத்துகிட்டா, நரம்பு மண்டலத்தை பாதிக்கும்..
கேட்டமைன், இது சித்த பிரம்மை ஏற்படுத்தும்..
கிரிஸ்டல் மெத்,இது மூளையை அதிக அளவுல பாதிக்கும்.இதுவும், சித்த பிரம்மையை தூண்டி விட கூடியது தான்.. ஞாபகமறதியை ஏற்படுத்தும்.. இதை எடுத்துக்குறதை நிறுத்தினாலும், இதன் தாக்கம் கடுமையவே இருக்கும்..
கோகைன்,இது டோபோமைன்னு மூளை ஏற்படுத்தும் நல்ல உணர்வை வெளியேற்றும்..
இதையும், நிறுத்தினா கூட, மனரீதியாவும் உடல் ரீதியாவும் பாதிப்பு இருக்கும்..
அல்கஹோல், இது எல்லோருக்குமே தெரிஞ்ச போதை பொருள்.
புகையிலை,இது தான் அதிக அளவில் மரணத்தை ஏற்படுத்த கூடிய போதை பொருள், உலகத்திலேயே..
எல்எஸ்டி,லை செர்ஜிக் ஆசிட் டைதிலமைத். இதோட சுருக்கம் எல்எஸ்டி. இதோட போதை, பன்னிரெண்டு மணி நேரம் நீடிக்கும்..
இதுவும், சித்த பிரம்மை தான் ஏற்படுத்தும்..
ஹெராயின்,இதை போதை பொருட்களின் ராணின்னு சொல்லுவாங்க..
இதை உடனே நிறுத்தினா, அதிக தாக்கம் ஏற்படுத்தும்.. அதை கம்மி பண்ண,மீதம்ஃபீடமைன் போன்ற மிதமான போதை பொருளை பயன்படுத்தி தான் குறைக்க முடியும்..
ஸ்பீட்பால்,ஹெராயின் மற்றும் கோகைன் சேர்ந்தது தான், இந்த போதை பொருள்..
இது ஹெராயின விட, அதிக போதை தரும்..
இது தான் இருக்குறதுலயே, ஆபத்தான போதை பொருள்..
எல்லா போதை பொருளும் முடிவுல, மரணத்தை தான் விளைவிக்கும்..
அதிக நாள் பயன்படுத்தினா..”
அனைவரும், என்ன சொல்லுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தார்கள்..
“இதில்லாம, அபின்,கஞ்சா,பான் மசாலா,போதை தரும் இன்ஹேலர் இப்படி நிறைய இருக்கு..
நாம குடிக்குற காபில கூட, காஃபின்ன்னு ஒரு போதை பொருள் இருக்கு..
அதுனால தான் இத்தாலில, அதுக்கு காபின்னு பேர் வந்துச்சு..
டீல இருக்குற பொருளை, தேயீன்,குவாரான் செடியில கிடைக்குறது, குவாரைன்..
கோக்கைன் என்பது, கோகோ தாவரத்துல இருந்து கிடைக்குது..இது அல்கலாய்ட்..
எத்தனால் இது, மது பானத்துல கலந்திருக்குறது..
நிக்கோட்டின், இது எல்லோருக்கும் தெரியும்..சிகரட்ல இருக்கும்,புகையிலைல இருக்கும்..
ரெம்ப லைட் அஹ் நாம உபயோகிக்கும் காய்கறிகள் வகையான தக்காளி,உருளை கிழங்கு,கத்தரிக்காய்,பச்சை மிளகு போன்றவற்றில் கூட இருக்கும்..
இந்த, புகையிலை சிகரெட் பழக்கம் நிறுத்துறது கஷ்டமான விஷயமா இருக்க, இந்த போதை பொருள் தான் காரணம்..
இது ரத்த குழாயில படிஞ்சு, நுரையீரல்,தொண்டை,வாய் எல்லாம் பாதிக்கும்..கடைசில, புற்று நோயை உண்டாக்கும்..
சிகெரெட் பிடிக்குறதால, அவங்களுக்கு மட்டும் இல்ல,சுத்தி உள்ளவங்களுக்கும் பாதிப்பு அதிகம்..
இது மட்டும் தான், எடுத்துக்குறவங்கள விட, பக்கத்துல இருக்குறவங்கள அதிகம் பாதிக்கும்..
அபின், அபினி செடியில இருந்து கிடைக்குது..இது பெயின் கில்லேர் அஹ் உபயோகிக்கப்படுது..குறிப்பிட்ட அளவு பயன்படுத்தினால்..
சொ, இதோட உற்பத்தியை சட்ட விரோதம் ஆக்கல,உற்பத்தி அளவை லிமிட் பண்ணி, கண்காணிக்கிறாங்க..
உங்க பொண்ணு, ஹெராயின் தான் பயன்படுத்துறாங்கன்னு நெனைக்குறேன்..டெஸ்ட் ரிசல்ட் வந்ததும், கன்போர்ம் பண்ணி சிகிச்சை ஆரம்பிச்சுடுவோம்..
அதிக நாள் பழக்கம் தான் ஆபத்து.,இது ஆரம்ப நிலை தான், அதனால, சீக்கிரம் ரெக்கவர் பண்ணிடுவோம்..
உடல் ரீதியான பாதிப்பு, அதிகம் இருக்காது..மன அழுத்தம், போன்ற பிரச்சனை ஏற்படும்,இப்படி நிறுத்தும் போது.அதுக்கு தான், கவுன்சிலிங் கொடுக்குறது..
நீங்க கவலை படாதீங்க..நாங்க பார்த்துக்குறோம்..”
பாரமான மனதோடு, அனைவரும் வெளியே வந்தார்கள்..
அன்று இரவு, அவனும் பாண்டியும் ஊருக்கு கிளம்பினார்கள்..
“மாமா,என்ன உதவி வேணுமுன்னாலும்,எப்போ வேணாலும் கூப்பிடுங்க..”
அவரின் கையை பிடித்து சொல்லிவிட்டு,பிரமிளாவிடமும் விடை பெற்று கொண்டு கிளம்பினார்கள்..
மறுநாள், தன் வீட்டிற்குள் நுழைந்த ராஜாவை பார்த்துவிட்டு, வேகமாய் அவனை நோக்கி சென்றாள் மதி..
“இந்தா, மெதுவா போ..அதான், அவன் வந்துட்டான்ல..வவுத்துல பிள்ளை இருக்குன்னு, கொஞ்சம் கூட நினைப்பில்லை..”
மாமியாரின் கண்டிப்பில், நடையின் வேகத்தை குறைத்தாள்..
“வா லே உட்காரு..பேச்சி, காபி கொண்டு வா..”
உள்ளே பார்த்து குரல் கொடுத்து விட்டு,
“அப்புறம், எப்படி இருக்கு அந்த பிள்ளை.??.”
நடந்த விஷயங்களை கூறினான்.பொறுமையாய் கேட்டு கொண்டிருந்தார்கள் இருவரும்..
[the_ad id=”6605″]
“படுபாவி, இப்படியா செய்வான் பிள்ளையை.ஏதோ, நேரம் சரி இல்ல..இனியாச்சும், உடம்பு கொணமாகட்டும், அந்த பிள்ளைக்கு..
நீ போய் ஓய்வெடு..”
அவன் எழுந்ததும், கூடவே எழுந்த மதியை பார்த்து,
“நீ எங்க போற??உட்காரு..அகலை வர சொல்லி இருக்கேன்..நடந்துட்டு வந்து, சத்துமா கஞ்சி வைக்க சொல்லி இருக்கேன், அதை குடி..
இப்போ ஒன்னும் போக வேண்டாம் மாடிக்கு..”
அவரின் உத்தரவில், முகம் சுருங்க அமர்ந்தாள்..
“உன்ற பொண்டாட்டி, நீ போனதுல இருந்து, உம்முன்னு உட்கார்ந்து உட்கார்ந்து, பிரஷரு ஏகத்துக்கும் ஏறி கிடக்காம்..
நேத்து தான் டவுன் ஆஸ்பத்திரிக்கு, அகலு கூட அனுப்பி வச்சேன், உன்ற பொண்டாட்டியை..
அந்த டாக்டர்,என்னம்மா?? இன்னும் ரெண்டு மாசத்துல பிரசவத்தை வச்சுக்கிட்டு, இப்படி இருந்தா நல்லதில்லையேன்னு, அம்புட்டு நேரம் அறிவுரை சொல்லி அனுப்பி இருக்கு..”
“ஏன், திடீருன்னு ஏறுச்சு.??.”
சற்று பதற்றமாய் கேட்டான்..
“அவ கிட்டேயே கேளு..எதையாவது நினைச்சு குழம்புனா, இப்படி தான்..
ரெண்டு நாளா ஒரு மாதிரி இருந்தா.
கேட்டதுக்கு, மயக்கமா இருக்கு அடிக்கடின்னு சொன்னா..
சரின்னு, அகலு கூட ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சேன்..
நீ சென்னைக்கு வந்துட்டேன்னு சொன்னா ஆச்சும், நிம்மதியா இருப்பான்னு பார்த்தா, அப்போவும் இப்படியே இருந்தா, என்ன பண்ணுறது..
என்ன பிள்ளையோ..”
கடிந்து கொண்டு சென்றார்..
அவளை பார்த்தவன்,
“என்ன மதி இது??நான் அவ்ளோ தூரம் சொல்லியும், இப்படி இருந்துருக்க..”
தலையை குனிந்து கொண்டு நின்றாள்..
“சரி, இங்கயே இரு..ரெபிரேஷ் பண்ணிட்டு வரேன்..”
அதன் பிறகு, காலை உணவு முடித்து தான், இருவருக்கும் பேசும் நேரம் வாய்த்தது..
“மதுவை நெனச்சா, கஷ்டமா இருக்கு..”
“ஹ்ம்ம்..நீயும் மதுவும் ட்வின்ஸ் அஹ்??”
“ஆமாம்..”
“எதையுமே சொல்லாத..சரி, சரி, உடனே பியூஸ் போய்டும்..
இது, எப்போ தெரியும் உனக்கு??”
“அப்பா,என் பிறந்த நாளுக்கு வந்துட்டு, மதுவுக்கு உடம்பு சரி இல்லைன்னு போய்ட்டாங்க..
அப்புறம் வரவே இல்லை..
அந்த கோபத்துல இருந்த என் கிட்ட, நடராஜ் மாமா தான், எல்லாம் சொன்னாங்க..
அதுக்கு அப்புறமும் கோபம் முழுசா போகலை..அப்பாக்கு உடம்பு சரி இல்லாம போனப்போ தான், பயம் வந்து, கோபத்தை விட்டேன்..
அந்த நேரத்துல தான், மதுவை பார்த்தேன்..
எனக்கு ஒரே சந்தோஷம்..என் உடன் பிறந்தவளை பார்த்துட்டேன்னு..
ஆனா,
அவ சரியாவே பேசல..ஏதோ, சிபிஐ ஆபிசர் மாதிரி,கேள்வி மேல கேள்வி கேட்டா..
நீயும் நானும் ட்வின்ஸ்ன்னு சொன்னா, சந்தோஷப்படுவான்னு பார்த்தா..
அவ உர்ருன்னு ஆயிட்டா..
சரி, முதல் அதிர்ச்சி.சரி ஆகிடுவான்னு விட்டுட்டேன்..”
“ஹ்ம்ம்..அப்புறம், உன் பிரெண்ட் மீனாவுக்கும் நம்ம பாண்டிக்கும் கல்யாணம் பேசணும்..”
“ஆமாம். நானே சொல்லணுமுன்னு நெனச்சேன்..எப்போ, பாண்டி அண்ணாவோட அம்மாவை பார்க்க போலாம்??மீனா, என் கிட்ட எல்லாம் சொன்னா.. எனக்கு ஒரே சந்தோஷம்..
அவளும் இங்கயே வர போறா..”
“சொல்லிட்டாளா..?? ஆனா ஒரு விஷயம்.இதை, நாம பேசுற கல்யாணம் மாதிரி முடிக்கனும்..கோகிலா அத்தைக்கு,அதான், பாண்டியோட அம்மாக்கு, காதல் எல்லாம் பிடிக்காது..”
“ஒ..சரி.எப்போ போவோம்..”
“இன்னைக்கே, சாயங்காலம் போவோம்..”
அவனின் துணியை துவைக்க எடுக்கும் போது, அந்த பென்ட்ரைவ்,மதியிடம் கிடைத்தது..
“என்ன வரு இது??”
“இது மதுவோடது, அங்க இருந்து வரும் போது கொண்டு வந்தா.. நான் கொடுக்க மறந்துட்டேன்..அடுத்த தடவை கொடுப்போம்..கொடு.என் கப்போர்டுல வைக்குறேன்..”
அதை பத்திரப் படுத்தினான்..
அன்று மாலையில் சென்றவர்களை, அன்புடன் வரவேற்ற கோகிலவாணி,மருது தம்பதியர்,அவர்கள் கல்யாண விஷயம் பேசியதும்,
“உன் தோழின்னு சொல்லுற..அப்போ, நல்ல பிள்ளையா தான் இருக்கும்..இந்த பயலுக்கும், உள்ளுர்ல ஒரு பய பொண்ணு தர மாட்டேங்குறான்..
அந்த பொண்ணையே முடிப்போம்.. அப்போவாச்சும், வாய் அடக்கி, ஒழுங்கா இருக்கானான்னு பார்ப்போம்..”
‘இந்த வாணி, என்னை டேமேஜ் பண்ணாம தூங்காது..’
பாண்டியின் காதில் புகை வந்தது..
“அதெல்லாம், அந்த பொண்ணு பியூஸ்ஸே பிடிங்கிடும் அத்தை. நீங்க கவலை படாதீங்க..”
‘நண்பனாடா நீ ??’
விரோத பார்வை பார்த்தான் பாண்டி..
வேலைகள் விரைவாய் நடந்து, பத்து நாட்களில் சென்னை சென்று, மீனாவுக்கு பூ வைத்து, ஒப்பு தாம்பூலம் மாற்றிக் கொண்டு வந்து விட்டார்கள்..
ராஜாவின் நண்பன் என்பதால், நடராஜ் மற்றும் மஞ்சுளாவுக்கு, பரம திருப்தி..
“பொண்ணு, நல்ல லட்சணமா இருக்கு..இவனை, பிடிக்குதோ?? இல்லியோ?? அதுக்கு.அம்மா,அப்பாக்காக சம்மதம் சொல்லி இருக்கும் போல…”
கோகிலாவின் அங்கலாய்ப்பில், பாண்டி அவரை அன்பாய் பார்த்தான்..
திருமணம், மூன்று மாதங்களில் என்று முடிவானது..
மூணு மாசமா?? என்று ஜெர்க் ஆனான் பாண்டி..
“மதியோட பிரசவம் முடிஞ்சு வச்சுக்கலாமுன்னு, மீனா விருப்பப்படுறா..”
“அதுவும் சரி தான்..”
எல்லோரும் ஏக மனதாக முடிவெடுத்தார்கள்..பாண்டியின் கடுப்பு புரியாமல்..
அடுத்த பத்து நாளில்,
ராஜா கட்டிய மருத்துவமனை திறப்பு விழா, சிறப்பாய் நடை பெற்றது..
அரசாங்கத்தில் வேலை பார்த்து, ஓய்வு பெற்ற மருத்துவர்களில் இரண்டு பேர்,அனுபசாலிகள் நான்கு பேர்,இரண்டு புது மருத்துவர்கள், மூன்று செவிலியர்கள், இன்னும் பிற பணியாளர்கள் என்று, செயல் பட தொடங்கியது மருத்துவமனை..
மதி, குத்து விளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தாள்..
அதன் அடிக்கல் நாட்டும் அன்று நடந்தது,அவள் மனதில் வந்து சென்றது,அதே நினைவோடு, ராஜாவை பார்த்தாள்.. அவனும், அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
மாதங்கள் விரைந்து, மதியின் பிரசவ நாள் நெருங்கியது..
தினமும் இரவில், குழந்தையோடு பேசுவது இருவரின் வழக்கம்..பேச்சு முடிந்ததும், குழந்தைக்கு முத்தமிட்டு விட்டு உறங்குவான் ராஜா..
அவள் நச்சரித்தால், அவள் நெற்றியிலும் முத்தம் இடுவான்..
அன்று அவ்வாறு பேசி விட்டு, உறங்க செல்லும் முன்,
“வரு, நீங்க வர வர, உங்க பிள்ளையை மட்டும் தான் கேர் பண்ணுறீங்க..
என் மேல பாசமே இல்ல..”
“இப்போ என்ன வேணும் உனக்கு??எதுக்கு அடி போடுற??”
“உங்க பிள்ளைக்கு மட்டும், கேட்காமயே கிஸ் பண்ணுறீங்க..எனக்கு மட்டும், போனா போகுதுன்னு, கெஞ்சி கேட்ட பிறகு, ஒரு கிஸ், அதுவும் நெத்தியில, இது சரி இல்ல, பார்த்துக்கோங்க..”
“அதுவே தர கூடாது உனக்கு..நீ பண்ண வேலைக்கு..”
“இதையே, எத்தனை நாளைக்கு சொல்லுவீங்க..??”
“எப்போ எல்லாம் தோணுதோ, அப்போ எல்லாம்..உன் மேல கோபம் போகாது.. மன்னிக்க முடியாதுன்னு சொன்னேன் தானே..”
“நீங்க மன்னிக்க எல்லாம் வேண்டாம்.. கிஸ் மட்டும் கொடுங்க போதும்..”
மென்னகையோடு கேட்டாள்..
அவளை முறைத்தவன்,
“முடியாது..”
“அப்புறம், நீங்க தான் பீல் பண்ணுவீங்க..”
“நான் ஏன், பீல் பண்ணனும்??”
“அவ கிஸ் கேட்டப்போவே கொடுத்து இருக்கலாம்.இப்போ, கொடுக்க முடியலையேன்னு தான்..”
அவளை புரியாமல் பார்த்தான்..
“ஒரு வேளை என் அம்மா மாதிரி, எனக்கும் பிரசவத்துல ஏதாவது ஆச்சுன்னா,அவ கடைசி ஆசையாவது நிறைவேத்தி இருக்கலாமுன்னு, அப்புறம் பீல் பண்ணி, யூஸ் இல்ல..”
சிரித்தபடி, விளையாட்டாய் கூறினாள்..
“ஏய்..”
ஆத்திரத்தோடு கத்திய படி, கை ஓங்கினான் ராஜா..
அதிர்ந்து போய் பார்த்தாள் மதி..