அத்தியாயம்-36
ஆறு மாதங்கள் கடந்திருந்தது..
தன் குழந்தையை தூங்க வைத்து விட்டு, மாடியில் இருந்து இறங்கி வந்தாள் மதி..
கூடத்தில் அமர்ந்து, ஒரு புதியவனோடு பேசிக் கொண்டிருந்தான் ராஜா..
யார் என்ற கேள்வியோடு, ராஜாவின் அருகில் சென்றாள் மதி..அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்த ராஜா,அந்த புதியவனுக்கு மனைவியை அறிமுகப்படுத்தும் நோக்கோடு, அவனை பார்த்தான்..
அதற்கு முன்னமே அந்த புதியவன், மதியை பார்த்து எழுந்து நின்று விட்டான்.. அவன் கண்களில் பரவசம்..
“மது நல்லா இருக்கியா??”
வேகமாய் அவளை நெருங்கினான்..
அவன் நெருங்கிய வேகத்தில் பயந்து, ராஜாவின் முதுகுப்புறம் ஒளிந்து கொண்டு, அவன் சட்டையை இறுக பற்றிக் கொண்டாள் மதி..
“என்ன மது, என்னை பார்த்து பயப்படுற??என்னை மறந்துட்டியா??”
அவன் குரலில் உற்சாகம் வடிந்து, வருத்தம் மேலோங்கியது..
“ஏய்,வினோத் ரிலாக்ஸ்..இவ மது இல்ல..”
“இல்ல ராஜா,என் மதுவை எனக்கு தெரியாதா??இவ மது தான்..”
“அதை பத்தி பேசத்தான் கூப்பிட்டேன்..உட்காரு..இவ மதி..என் மனைவி..”
அவன் அறிமுகத்தில் அதிர்ந்து,
“மதுவை கல்யாணம் பண்ணிட்டியா நீ??”
“சொல்லுறதை பொறுமையா கேளு வினோத்..இவ மதி,மதுவோட ட்வின்..மது சென்னைல இருக்கா.. அவளை பத்தி பேச தான், உன்னை கூப்பிட்டேன்..”
அவன் கண்களில் நம்பிக்கை இல்லை.. மதியை அடிக்கடி, ஆராயும் பார்வை பார்த்தான்..
அவன் பார்வைக்கு பயந்து, ராஜாவின் கைகளை இறுக பற்றிக் கொண்டு, அவன் அருகிலேயே அமர்ந்திருந்தாள் மதி..
மதுவின் திருமணத்தில் இருந்து, தற்போதைய நிலை வரை கூறினான் ராஜா..
இதை நம்புவதா?? வேண்டாமா?? என்னும் முகபாவத்தோடு அமர்ந்திருந்தான் வினோத்..
மதியின் புறம் திரும்பி,
“இவன் வினோத்,என் பிரெண்ட்..முன்னாடி, மதுவும் இவனும் லவ் பண்ணாங்க..”
அவள் கண்கள் விரிந்தது..
வினோத் என்றதுமே, அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது..அவன் பெயரை சொல்லி தானே அன்று, ராஜா அவளிடம் அப்படி நடந்து கொண்டான்..
“ஹெல்த் பரவால்லையா உங்களுக்கு..??”
அவன் மனநல காப்பகத்தில் இருப்பதாய் அன்று, ராஜா சொன்னதை நினைவில் வைத்து கேட்டாள்..
“நான் நல்லா இருக்கேன் மது”
சங்கடமாய் ராஜாவை பார்த்தாள்..
கண்களை மூடித் திறந்து, அமைதியாய் இருக்கும்படி கூறினான் ராஜா..
அவனோடு சிறிது நேரம் பேசிவிட்டு,
“சரி வினோத்..அடுத்த வாரம் சென்னை வரோம் நாங்க..அங்க பார்ப்போம்..”
[the_ad id=”6605″]
அவன் கைகளை குலுக்கி, விடை கொடுத்தான்..
மதியை பார்த்துக் கொண்டே சென்றான் அவன்..
அவன் சென்றதும், வாயை குவித்து வேகமாய் மூச்சிழுது, வெளியே விட்ட மதி..
“வரு,இவருக்கு உண்மையிலேயே சரி ஆகிடுச்சா??”
அவளை பார்த்து புன்னகைத்தவன்..
“ரெண்டு மாசம் முன்னாடி குணம் ஆகிடுச்சு மதி..இவனும் இந்த ஊரு தான்.. இங்க குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டு வர சொல்லி,இவன் அம்மா சொல்லி, இங்க வந்துருக்கான்..இவன் மனநல காப்பகத்துல இருந்ததால,பழைய வேலை போச்சு..புது வேலையும் கிடைக்கல..அதான், மாமா கிட்ட சொல்லி, அவர் கம்பெனில வேலைக்கு ஏற்பாடு பண்ணேன்..”
“ஓ.. நல்ல விஷயம் தான்..”
“ஹ்ம்ம்..இப்போ, இவனும் இவன் அம்மாவும் தனியா தான் இருக்காங்க.. இவன் அண்ணன் அண்ணியை விட்டுட்டு வந்துட்டாங்க.. .இவன் அண்ணி, இவன் இருக்குற வீட்டுல இருக்க மாட்டேன்னு, ஒரே பிரச்சனை.. அதான் இவன் அம்மா,இவனை கூட்டிட்டு வெளிய வந்துட்டாங்க..
இவனை பத்தி என் பிரெண்ட் சர்கிள்ல விசாரிச்சுட்டே இருப்பேன்..அதான், விஷயம் தெரிஞ்சு, வீடு,வேலை எல்லாம், ஏற்பாடு செஞ்சு கொடுத்தேன்..”
“என் வரு, எப்போவும் சூப்பர் தான்..”
அவன் கன்னம் கிள்ளி கொஞ்சினாள்….
கோவிலுக்கு சென்று விட்டு உள்ளே நுழைந்த மரகதம்,
“இங்க என்ன பண்ணுற??புள்ளையை விட்டுட்டு..”
“தூங்குறான் அத்தை.. தொட்டில்ல..”
“அதுக்காக, தனியா விட்டுட்டு வருவியா..போ..போ..எப்போ பாரு, புருஷன் பின்னாடியே சுத்த வேண்டியது..”
முகச் சிணுக்கத்தோடு மாடிக்கு சென்றாள்..
மரகதம் உள்ளே சென்றதும்,மாடிக்கு சென்றான் ராஜா..
உம்மென்று அமர்ந்திருந்த மதியின் மடியில் தலை சாய்த்தான்..
“என்னாச்சு??அம்மா பத்தி தெரியாதா உனக்கு??”
“நான் இங்க வந்தப்போ, அத்தை என்னை, கண்ணு கண்ணுன்னு தான் கூப்பிடுவாங்க..அப்புறம், நமக்கு கல்யாணம் ஆகி, நான் பெங்களுர் போய்ட்டு திரும்பி வந்த பிறகு, ஒரு தடவை கூட அப்படி கூப்பிடலை..”
“அப்போ நீ, அவங்க அண்ணன் பொண்ணு,இப்போ மருமக..மாமியார் கெத்தை விட முடியுமா??அதான்..”
நமட்டு புன்னகையோடு கூறினான்..
“ச்சு.. போங்க வரு..கிண்டல் பண்ணாம..”
சிறிது நேரம் பேசி, சமாதானம் செய்து விட்டு கிளம்பினான்..
ராஜாவின் மருத்துவமனையில் தான் வேலை பார்த்தாள் மீனா..
அன்று மருத்துவமனைக்கு வந்த பாண்டி, வரவேற்பு பெண்ணிடம்,
“மீனா எங்க??”
“ஒரு முக்கியமான கேஸ்ல இருக்காங்க.. நீங்க வந்தா, உட்கார வைக்க சொல்லி சொன்னாங்க..”
அவனிடம் கூறிவிட்டு, வராத போனை எடுத்து, மும்முரமாய் பேச ஆரம்பித்தாள் அந்த பெண்..
பாண்டியின் கடலை மகிமை அப்படி,அவனை பற்றி தெரிந்ததால், உஷாராய் போனில் மூழ்கினாள்..
‘எதுக்கு வர சொல்லி இருப்பா, மீனா??’
யோசனையோடு, காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்தான்..
[the_ad id=”6605″]
அவனை கடந்து சென்ற நர்ஸ் சந்திரிகா,வரவேற்பு பெண்ணிடம் ஏதோ கேட்டுக்கொண்டே, கையில் இருக்கும் வெள்ளரி பிஞ்சை கடித்தாள்..
“வெள்ளரிக்க பிஞ்சு வெள்ளரிக்க,
என்னை பார்க்காம போறாளே சந்திரிகா!!”
அவன் பாடலில், அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள் அவள்..
“நீ பார்க்குற பார்வை போதும்!!
நீ பேசுற வார்த்தை போதும்!!
நான் கேட்டபது நூறு முத்தம் தரியா??
உன் நினைப்பு மயக்குதடி.. படபடபடவென என் மனசு துடிக்குதடி..!!
கண்ணு ரெண்டும் அலையுதடி,
கடகடகடவென, கட்டி என்னை இழுக்குதடி..!!”
பாடிக் கொண்டே திரும்பினான்..உக்கிர காளி ரூபத்தில், மீனா நின்றாள்..
ஜெர்க் ஆகி, எழுந்து நின்று முழித்தான் பாண்டி..
“மீனா,உன் புருசனுக்கு என்னமோ வேணுமாம்..உன் கிட்ட கேட்க வேண்டியது எல்லாம், என் கிட்ட கேட்குறார்.. பார்த்து செய்..”
‘அது பார்த்து செய் இல்ல, வச்சு செய்..’
ஈயென அத்தனை பற்களும் காட்டியபடி அவளிடம்,
“என்னடா மீனு,ரொம்ப வேலையா?சோர்வா இருக்க?இந்த ராஜா உன்னை, அதிகம் வேலை வாங்குறானா?? சொல்லு..இப்போவே போய் கேட்குறேன்..”
“எப்படி, இப்போ சந்திரிகா கிட்ட கேட்ட மாதிரியா??”
“ச்சேசே, அவனும் இவளும் ஒண்ணா??அவன் கிட்ட போய் எப்படி, இப்படி பாட முடியும் சொல்லு..??பாடுனா, பல்லை தட்டி கொடுத்துடுவான்..”
“ஓஹோ..இல்லைன்னா, அவரை பார்த்தும் பாடுவீங்க..
எப்படி எப்படி, அவ கண்ணு உங்களை கட்டி இழுக்குதோ??”
“என் மேல எந்த தப்பும் இல்லம்மா..அதை எழுதுன கவிஞர் மேல தான் தப்பு..அவரை போய் கேள்வி கேளு..
மதுரையை அரசாளும் மீனாட்சி..
உன்னை கூட தான், மீனா பொண்ணு மீனா பொண்ணுன்னு பாடுறேன்..
நம்ம வீட்டுல மதுரை ஆட்சி தான்னு, எல்லோருக்கும் தெரியுமே..
நம்ம பேரை பார்த்தாலே தெரிஞ்சுடும்..எவ்ளோ பொருத்தம்..மீனா,பாண்டியன்..
பாண்டிய நாட்டை ஆளும் மீனா..
உன்னை விட்டு வேற பொண்ணை பார்ப்பேனா, உன் மாமன்..”
“ஆளையும் மூஞ்சியையும் பாரு..உனக்கு நானே அதிகம்,இதுல இன்னொன்னு கேட்குதோ..
நீங்க, மீனா பொண்ணுன்னு பாடுனா,நாங்க,
நாடோடி மன்னனுக்கும், ராஜராஜ சோழனுக்கும், உண்டான வீரம் உந்தன் வீரமோன்னு பாடனுமோ..!!”
“அப்டில்லாம் இல்லடா மீனு குட்டி.ஆனாலும், மாமன் வீரன்னு உனக்கு தெரியல…”
” உங்க வீரத்தை பத்தி தெரியாதோ??அக்கா,அம்மாவை பார்த்ததும் பம்முறதுலேயே தெரியும், உங்க வீரம்..இவரு பெரிய அஜித் கலர் மாதிரி.. இவுக அக்கா,நான் கலர் கம்மியாம்.. பவுடர் நெறய போட்ருக்கனாம்..
இவுக தம்பி மூஞ்சிக்கு, பொண்ணு கிடைச்சதே அதிகம்..இதுல எனக்கு, ஓராயிரம் அட்வைஸ்..என் மேல பத்தாயிரம் குறை வேற..
கருப்பு பெயிண்ட் கொட்டுன காக்கா மாதிரி தம்பியை வச்சுட்டு, உங்க அக்காக்களுக்கு எல்லாம், பாகிஸ்தான் பார்டர் வரை வாயி..”
“காக்காவே கருப்பா தானே டா இருக்கும்..அது மேல கருப்பு பெயிண்ட் வேற கொட்டுனா, எப்படி இருக்கும்??”
தன், அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்டான் பாண்டி..
“கன்றாவியா இருக்கும்..நான் பேசுன எல்லாத்துலயும், இப்போ, இது ஒன்னு தான் பிரச்சனை உங்களுக்கு??உங்களை பத்தி தெரிஞ்சும், உங்களை கல்யாணம் பண்ணேன் பாருங்க..என்னை சொல்லணும்..”
தலையில் அடித்துக் கொண்டாள்..
“அதெல்லாம் விடு டா தங்கம்..நடந்தது நடந்து போச்சு.இனி, தலையெழுத்தை மாத்தவா முடியும்..என்னை எதுக்கு வர சொன்ன,அதை சொல்லு..”
“உங்களை மாதிரி கடலை போடுறதுக்கோ..இல்ல, நீங்க இதுவரை போட்ட கடலை எல்லாம் அறுவடை பண்ணவோ, ஒரு ஆளு வர போகுது.. அதை சொல்ல கூப்பிட்டேன்..”
“அதாரு??”
தீவிரமாய் யோசித்தவன்,
[the_ad id=”6605″]
“அடி கள்ளி, சொல்லவே இல்லை..எப்போ தெரியும்??எனக்கு பதவி உயர்வா??எவ்வளவு சந்தோஷமான விஷயம்..இப்படியா, சிடுசிடுன்னு சொல்லுவ??”
“இன்னிக்கு தான் கன்பார்ம் பண்ணேன்..அதை சொல்ல தான், வர சொன்னேன்.உங்களை கட்டிக்கிட்டா, இப்படி தான் சொல்லணும்..”
நொடித்துக் கொண்டாள்..
“வா, வா வீட்டுக்கு போவோம்..அம்மா கேட்டா, சந்தோசப்படுவாங்க..”
அவனை முறைத்த படி, உடை மாற்ற சென்றாள்..
வெற்றி பெற்ற போர் வீரன் போல நின்றான் பாண்டி.. பின்ன இருக்காதா??அவன் மூன்று அக்காக்களின் சதியையும் மீறி சாதித்து, தந்தை ஆகப் போகும் களிப்பு..
ராஜாவும் மதியும் குழந்தையோடு சென்னைக்கு சென்றார்கள்..
“மித்ரா, வாடா வாடா..வாங்க மாப்பிள்ளை..”
மகிழ்ச்சியோடு வரவேற்றார் பிரமிளா..குழந்தையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்..
சேகரும் ராஜாவும் ஹாலில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்..
மதி, மதுவை காண, அவள் அறைக்கு சென்றாள்..
அங்கு மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மது, இவளை கண்டதும்,
“மது வா, வா..”
மகிழ்வாய் வரவேற்றாள்..
“எப்படி இருக்க??”
“யா,ஃபைன்..அப்புறம், நீ எப்படி இருக்க??உன் ஹஸ்பண்ட்,குழந்தை எல்லாம் எப்படி இருக்காங்க??”
“எல்லோரும் நல்லா இருக்கோம்..அவரும் வந்திருக்கார்..”
அதை கூறும் போது, மதியின் முகத்தில் தோன்றிய பூரிப்பில், மதுவின் முகம் கனிந்தது..
“நீ ரொம்ப லக்கி மது. காதலிச்சவனையே கணவனா அடைய, நிச்சயம் கொடுத்து வச்சுருக்கணும்..”
அவள் பேச்சில், அவளை வியந்து பார்த்தாள் மதி..
“என்ன அப்படி பார்க்குற??காதல் பத்தி எனக்கு நம்பிக்கை இல்லை.. இப்போ, இப்படி பேசுறேனே அப்படின்னா???
உன் காதலை பார்த்ததும், நம்பிக்கை வந்துடுச்சு..
நீ சொன்ன மாதிரியே, உன் புருஷன் உன்னை தேடி வந்தார்.
நீயும் நானும் வேறன்னு, என்னை பார்த்ததும் புரிஞ்சுகிட்டார்..
என்னை நீயுன்னு நெனச்சு..ஏமாத்திட்டியேனோ, இல்ல,ஏன் இப்படி பண்ண??அப்படினோ கேட்டு இருந்தா, நிச்சயம் நான் அவரை, அவமான படுத்தி இருப்பேன்..
நான், உன்னை போய் காதலிச்சனா..??அப்படி நடிச்சு ஏமாத்துனேன்..உனக்கு என்ன தகுதி இருக்கு??என்னை காதலிக்க.என் பணத்துக்காக தானே, இப்போ என் பின்ன வந்தன்னு, எனக்கு அப்போ இருந்த மனநிலைக்கு, எவ்ளோ முடியுமோ, அவ்ளோ பேசி இருப்பேன்.
ஆனா அவரு, ஒரு வார்த்தை கூட கேட்கலை..எனக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டார்..
முதல் முதலா, ஒரு ஆண் மேல நல்ல அபிப்பிராயம் வந்தது, அப்போ தான்..
நீ, என் கிட்ட விட்ட சவால்ல ஜெயிச்சுட்ட..
உன் புருஷன், உன்னை தேடி வந்துட்டார்..அதுவும், நீ இருந்த நிலையில, அவரு மட்டும் உன்னை தேடி வரலன்னா…
ஐம் சாரி..”
அவள் கைகளை பிடித்துக் கொண்டு, மன்னிப்புக் கேட்டாள் மது..
சேகர் மூலம், அவளுக்கு எல்லா விஷயமும் தெரிந்திருந்தது..