தன் அறையில் நின்ற படி, ஜன்னலின் வழியாக வானில் தெரிந்த நிலவை பார்த்தபடி நின்றாள் மது..
அவள் கண்கள் கலங்கி இருந்தது..
ராஜாவிற்கு தன்னை பிடிக்க வில்லை என்று அவன் கேள்வியிலேயே வெளிப்படையாக தெரிந்தது..
இரவு நேர உணவு வேளை முடித்து, கை கழுவும் இடத்தில், அவன் கேள்வியை சற்றும் எதிர் பார்க்க வில்லை அவள்..
‘ஏன் இவ்வாறு கேட்டான்..??என்னை ஏன் பிடிக்க வில்லை??நான் என்ன தவறு செய்தேன்..??’
இப்படி பல ஏன்கள் அணிவகுத்து நின்றது..
அப்பொழுது அவள் மொபைல் இசைத்தது…
அதை எடுத்து பார்த்தாள். அதில் வந்த பெயரை பார்த்து எரிச்சல் வந்தது..
‘ச்செய்,தெரியாமல் இங்கு வந்து விட்டேன்..எதற்க்கெடுத்தாலும் போன்..’
அதை ஆன் செய்யாமல் பார்த்திருந்தாள்..அடித்து ஓய்ந்து,
மீண்டும் இசைத்தது..
‘விடாது கருப்பு..’
ஒரு பெரு மூச்சு விட்டு மனதை சமன் படுத்திக் கொண்டு, எரிச்சல் குரலில் தெரியாத படி மொபைலை இயக்கி,
“சொல்லு”
“…”
“ஹ்ம்ம்..”
“…”
“சரி நான் பார்த்துக்குறேன்..வைக்குறேன்..”
“….”
“இங்க பாரு..இது கிராமம்..எல்லோரும் தூங்குற நேரம்..மூச்சு விட்டா கூட, தெளிவா கேட்கும்..நாளைக்கு காலைல பேசுறேன், வை..”
எதிர்புறம் வந்த பதிலை எதிர் பார்க்காமல் வைத்தாள்..
மீண்டும் நினைவுகள் ராஜாவை சுற்றின..
அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் போது,கை கழுவ பாண்டி வந்தான்..
அவன் வருகை உணர்ந்து,இவள் வேகமாய் உள்ளே சென்றாள்..
“என்ன மாப்பு??அந்த பிள்ளையை, உத்து உத்து பார்த்து கிட்டு இருக்க??முறை பொண்ணு தான், அதுக்காக இப்படியா, மொறைச்சு மொறைச்சு பார்க்குறது..
நான் எல்லாம் என் முறை பொண்ணுங்களை எவ்ளோ டீசென்ட் அஹ் பார்ப்பேன் தெரியுமா??”
“யாரு நீ??”
“ஆமா மாப்பு..நாம அவளுகளை பார்க்குறது..அவளுகளுக்கே தெரிய கூடாது..அவ்ளோ நேக்கா பார்க்கனும்..இதுக்கெல்லாம் உனக்கு விவரம் பத்தாது.. என் கிட்ட ட்ரைனிங் எடுத்துக்கோ..
நீ பார்த்ததை பார்த்து, அந்த பிள்ளை பாரு, பயந்து தெரிச்சு ஓடுது..”
‘ஓட வைக்குறேன்..அது தான் என் முதல் வேலை..’
“என்ன மாப்பு, நான் சொல்லுறது சரி தானே..??”
“ரொம்ப சரி..ஆமா, அந்த பார்வதி கிட்ட ரெண்டு வாரம் முன்ன, என்ன வம்பு பண்ணுன?? என்னை பார்க்கும் போது,கண்டிச்சு வைங்க அண்ணா, அப்படின்னு சொல்லிட்டு போகுது..”
‘பத்த வச்சுட்டியா பரட்டை..’
[the_ad id=”6605″]அவனை பார்த்து அசடு சிரிப்பு சிரித்த பாண்டி,
“அது ஒண்ணுமில்ல மாப்பி..அன்னைக்கு நம்ம வயலுக்கு போகும் போது எதிர்ல வந்துச்சு..அவ அப்பனுக்கு சாப்பாடு கொண்டு வந்துச்சு..
என்ன பிள்ளை, மாமனுக்கு அஞ்சாறு கஞ்சி கிஞ்சி ஊத்துறது,அப்படின்னு சொன்னேன்..
அதுக்கு அவ சொல்லுறா,வயல் வேலை பார்க்குற எனக்கு எல்லாம் ஊத்த மாட்டாளாம்..பட்டினத்துல கழுதை மேய்க்குறவனுக்கு தான் ஊத்துவாளம்..”
“என்ன, கழுதை மேய்க்கணுமா??”
“அட,பட்டணதுல பெரிய படிப்பு படிச்சு,பெரிய வேலை பார்க்கணுமாம்..அவனுக்கு தான் முன்னுரிமை அப்படின்னா”
“சரி, அதுக்கு நீ என்ன சொன்ன??”
“ஏன் அதே கழுதையை, இங்க மேய்ச்சா ஒத்துக்க மாட்டியா??நாங்களும் படிச்சு இருக்கோம்..அப்படின்னு சொன்னேன்..அவ அதுக்கு, இதெல்லாம் படிப்பா..
அப்படின்னா..
நான் சொன்னேன்,இதுவே படிப்பில்லைன்னு சொல்லுற..அப்புறம் ஒண்ணுமே படிக்காத அஷ்வினை மட்டும், அப்படி கொஞ்சி முத்தமா கொடுக்குற..இது என்ன நியாயம், அப்படின்னு தான் மாப்பிள்ளை கேட்டேன்..அதுக்கு கல்லை கொண்டு அடிக்க வரா டா..”
“அது யாரு டா அஷ்வின்..??”
“அவ அக்கா மவன் டா.. போன மாசம் தான் ஒரு வயசு ஆச்சு.. அவன் பிறந்த நாள் அன்னிக்கு கோயிலுக்கு வந்தா அவனோட..அப்போ கொஞ்சுனா..அதை தான் சொன்னேன் மாப்பு..இதுல என்ன தப்பு சொல்லு..”
“அவ அடிச்சாளா இல்லியா..??”
“நாங்கெல்லாம் யாரு..எஸ்கேப் ஆகிட்டோமில்லை..”
“ச்செய்,தப்பிச்சுட்டியா.. அந்த பிள்ளைக்கு உண்மையிலேயே, சூதானம் பத்தல..”
“மாப்பு..யூ டூ..”
“என்ன டா யூ டு..பக்கி, இது ஒரு பிளாஷ் ஃபாக்ன்னு சொல்லி, கடுப்பை கிளப்பிக்கிட்டு..”
அதன் பின், பாண்டி வீட்டிற்கு சென்று விட்டான்..இவன் ஹாலுக்கு வந்த போது, மது அங்கு இல்லை..
ஒரு வாரம் கடந்திருந்தது..ராஜாவின் கண் எதிரில் அதிகம் வருவதில்லை மது..அகல் வரும் போது மட்டும், அவளுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பாள்..
சில நேரங்கள், மரகதத்தோடு சமையல் அறைக்குள் பேசிக் கொண்டே,சமையல் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்..
ஒரு நாள் ராஜாவுக்கு பிடிக்கும் என்று மரகதம், பருப்பு உசிலி செய்து கொண்டிருந்தார்..
அவனுக்கு பிடிக்கும் என்று அறிந்ததும்,அதன் செய்முறையை கேட்டு,இவள் செய்ய ஆரம்பித்தாள்..
அன்று அவன் உணவு உண்ண வீட்டிற்கு வந்தான்..அவன் கருத்தை தெரிந்து கொள்ள, சமையல் அறைக்குள் நின்று கொண்டு கவனித்தாள்..
அவள் சமைத்ததை உண்டவன்,சிறிது யோசனையோடு,
“ம்மா, யார் செஞ்ச இது??அகல் அஹ்??”
“ஏன் லே..??”
“ருசி வித்தியாசமா இருக்கு,அதான்..”
“நல்லா இருக்கா, இல்லியா??”
“நல்லா தான் இருக்கு..”
“நம்ம மது கண்ணு தான்.. உனக்கு பிடிக்குமுன்னு சொன்னேன்..என் கிட்ட கேட்டு,கேட்டு செஞ்சுது..”
அப்பொழுது உள்ளே நுழைந்த பாண்டி,
“அத்தை, சீக்கிரம் தட்டை போடு..செம்ம பசி..”
சாப்பிட ஆரம்பித்தவன்,
“உசிலி சூப்பர் அத்தை..”
“இந்தா இதையும் சாப்பிடு..”
தன் தட்டில் இருந்ததையும் எடுத்து,அவனுக்கு வைத்தான் ராஜா..
“ஏன் லே..நான் அவனுக்கு வேற வைப்பேன்ல..”
“நான் சாப்பிட்டேன் ம்மா..”
கூறிவிட்டு எழுந்து சென்றான் கை கழுவ..
அவன் அன்னை கூறிய பிறகு,அதை ஒரு வாய் கூட சாப்பிடவில்லை அவன்..
இதை சரியாக கவனித்தாள் மது..
மனம் மீண்டும் சுருங்கியது..
அன்று வீட்டின் பின் புறம் இருந்து உள்ளே வந்தவளை அழைத்த மரகதம்..
“கண்ணு,இந்த காபியை மாமனுக்கு கொடுத்துடு,அதிரசத்துக்கு பாகு காச்சுரேன்..பேச்சிக்கு பதம் தெரியாது,முறுக விட்டுருவா..”
“அத்தை, நானா??”
“ஆமா கண்ணு,பட்டிணத்தில படிச்ச பிள்ளை..இதுக்கு போய் வெட்க பட்டுகிட்டு.. கொடு கண்ணு..”
கூறிவிட்டு உள்ளே போய் விட்டார்..
தயங்கிய படி ஹாலுக்கு வந்தாள்.. அங்கு ஏதோ பைல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ராஜா..
இவள் மெதுவாய் அவன் அருகில் சென்று செருமினாள்..
அதில் கவனம் கலைந்து நிமிர்ந்தவன்..இவளை பார்த்ததும்,புருவம் சுருக்கினான்…
கண்களின் கூர்மை,என்ன என கேட்டது..
தன் கையில் இருந்த டம்ளர்ரை நீட்டிய படி
“காபி…”
அடுத்த நொடி அந்த டம்ளர், வாசல் அருகே கிடந்தது..
என்ன நிகழ்ந்தது என்றே ஒரு நிமிடம், மதுவுக்கு புரியவில்லை..
சற்று யோசித்த பின்பு தான் தெரிந்தது..காபி டம்ளரை அவன் தட்டி விட்டிருக்கிறான் என்று..
[the_ad id=”6605″]முகத்தில் அதிர்வோடு,கண்களில் நீர் கோர்க்க, வாசல் அருகே சென்று, குனிந்து அந்த டம்ளரை எடுத்தாள்.
அப்பொழுது உள்ளே நுழைந்த அகல்,
“என்ன அண்ணி என்னாச்சு??காபி ஊத்திக் கிடக்கு..”
மது பதில் சொல்ல முடியாமல் நிற்கையில்,
“கண்ணு பூமி பார்த்திருந்தா, என்ன இருக்குன்னு தெரியும். ஆகாசம் பார்த்துகிட்டு இருந்தா அப்படி தான். சரியான பாதை எது?? தப்பான பாதை எதுன்னு தெரியாது..??அப்புறம், இப்படி முழிக்க வேண்டியது தான்..”
“என்ன ண்ணா சொல்லுற??”
“கீழ பார்த்து நடக்காம வந்து, கார்பெட் தடுக்கி காபியை கொட்டிட்டா..”
“ஓ..அப்படியா..சரி விடு அண்ணி.காபி தானே..இனி கவனமா இரு..”
“கொட்டுன புறவு, என்ன செய்ய முடியும்..சிந்துன பாலுக்கு அழுகவா முடியும்…அதுல என்ன ப்ரியோஜனம்..??
தப்பு செய்யும் முன்ன யோசிக்கணும்..செஞ்ச புறவு, ஒன்னு மன்னிப்பு,இன்னொன்னு தண்டனை..
இந்த ராஜவர்மன் கிட்ட எப்போவும் மன்னிப்பு கிடைக்காது, தண்டனை மட்டும் தான்..”
‘இவன் பேச்சில் ஏதோ உள் அர்த்தம் உள்ளது..’
“என்ன அண்ணா,என்ன என்னமோ பேசுற.??.”
“ஒன்னும் இல்லை.. போய் காபி கொண்டு வா..நீயே போட்டு, நீயே கொண்டு வா..”
“சரி ண்ணா..”
அவள் உள்ளே சென்றதும்,அவன் பார்வை மதுவிடம் சென்றது..
கண்ணில் தேங்கிய நீரோடு,குரலில் அழுகை வெளிப்படாமல் மறைத்து,
“இது, காபிக்கு மட்டும் கொடுக்கப் பட்ட விளக்கமா??”
முதல் முறையாக அவனிடம் நேரடியாய் பேசினாள்..
அவன் உதடுகள் ஏளனமாய் வளைந்தது..தோள்களை அலட்சியமாய் குலுக்கினான்..
“இதுக்கு என்ன அர்த்தம்..??”
“உனக்கே புரியும்..”
“புரியலைன்னு தான் கேட்குறேன்..”
“புரிஞ்சவங்களுக்கு சொல்ல தேவை இல்லை..புரியாதவங்களுக்கு சொல்லியும் பிரயோஜனம் இல்லை..புரிஞ்ச பிறகும் புரியாத மாதிரி நடிக்குறவங்களுக்கு, எப்போவும் புரிய வைக்க முடியாது..”
‘இவன், விஷு சார் ஃபேன் போல..”
அந்த சூழலிலும், அவளுக்கு உதட்டில் நகை தோன்றியது..
அடுத்து பேசுவதற்குள், கொட்டிய காபியை சுத்தம் செய்ய பேச்சியும், கையில் காபி டம்ளரோடு அகலும் வந்ததால்,அந்த பேச்சு அத்தோடு நின்றது..
அதன் பிறகு, அவன் அருகில் செல்வதை முடிந்த மட்டும் தவிர்த்தாள்..
அருகில் சென்று, ஏன் வீண் காயம் அடைவானேன் என்று..
ஆனால் தூரத்தில் இருந்து,அவன் பார்க்காத போது அவனை பார்த்துக் கொண்டிருப்பதை, வழக்கம் ஆக்கி இருந்தாள்..
யாரோ தன்னை பார்ப்பது போன்ற உள் உணர்வில், அடிக்கடி திரும்பி பார்ப்பான் ராஜா..அப்படி பார்க்கையில் ஒரு நாள், இவள் தடுமாறி, பார்வையை திருப்பிக் கொள்வதை கவனித்து விட்டான்..
அவன் உதடுகள் ஏளனமாய் வளைந்தது..
‘இவளது அடுத்த இலக்கு நானா??’
அன்று அகல் இவளுக்கு பூ தொடுக்க சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்..
“அண்ணி,இப்படி வச்சு,இப்படி ஒரு சுத்து சுத்தி,இப்படி ஒரு முடிச்சு மாதிரி போடனும்.. போடு..”
சற்று தொலைவில் ராஜாவும் பாண்டியும் அமர்ந்து இருந்தார்கள்..
சுற்றிலும் கோப்புகள் வைத்துக் கொண்டு,மில் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா..
அருகில் பாண்டி, தன் மொபைலை வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தான்..
அவனை நிமிர்ந்து பார்த்த ராஜா,அருகில் இருந்த பென்சிலை தூக்கி அவன் மேல் எறிந்தான்..
“டேய்,ஏன்டா மச்சான்.??.ஏன்??”
“என்ன ஏன்??இங்க நான் கஷ்டப்பட்டு கணக்கு பார்த்துக் கிட்டு இருக்கேன். நீ அங்க யாரை கணக்கு பண்ணிக்கிட்டு இருக்க… போனை வச்சுகிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்க..”
நெஞ்சில் கை வைத்துக் கொண்டு,
“மாப்பி,யாரை பார்த்து??என்னை பார்த்து,உன் நண்பனை பார்த்து..எப்படி,இப்படி ஒரு கேள்வியை கேட்டுப்புட்ட??”
“டேய்,என்னை கடுப்பாக்காத..”
“சரி,சரி மாப்பி..லெஸ் டென்சன் மோர் ஒர்க்..மோர் ஒர்க், லெஸ் டென்சன்..”
[the_ad id=”6605″]“நீ தான் என்னை டென்சன் ஆக்குறதே..வேலை நேரத்துல என்னடா பண்ணுற..??”
“அது மாப்பி, டிக்டாக் பார்க்குறேன்..”
அவனை முறைத்தான் ராஜா..
“கோவப்படாத மாப்பி..இதுல ஒரு பிள்ளை..இன்னேர் வியர் தெரிஞ்சா என்ன?? பொசுங்கியா செத்துடுவேன்..நடிகை போட்டா பார்குறிங்க..அப்படின்னு கேட்டு, ஒரே நாளுல பாப்புலர் ஆகிடுச்சு..தெரியுமா உனக்கு..??
இதை பார்க்கையில எனக்கு, நடிகர் அர்ஜுன் படம் ஒண்ணுல ,ஒரு பொண்ணு டெல்லில இருந்து வரும்.இப்படி தான், ஆம்பளைங்க தொட்டா என்ன ஆயிடும்.. இதுல என்ன இருக்குன்னு கேட்டு, ஜோவியல் அஹ் தொட்டு பழகும்..
அப்புறம் நாலஞ்சு பசங்க அதுகிட்ட, தப்பா நடக்க முயற்சி பண்ணும் போது, ஹீரோ காப்பத்தி ..
இதே மாதிரி கேட்பார்..இப்போ புரியுதா,இதுல என்ன இருக்குன்னு கேட்டியே, அப்படின்னு..
அது தான் எனக்கு, இப்போ ஞாபகம் வருது..
இப்படி எல்லாம் செஞ்சுட்டு,அப்புறம் பாலியல் வன்கொடுமைக்கு, ஆண்களை மட்டும் காரணம் சொன்னா, அது என்ன நியாயம் சொல்லு..??
நாங்க இழுத்து போர்திட்டு போனா கூட பார்க்குறங்க,குழந்தைங்களை கூட விட்டு வைக்கல,அதுங்க ட்ரெசிங் காரணமா?? அப்போ யார் தப்பு?? அப்படின்னு கேட்குறாங்க..
அப்போ தப்பு ஆண்கள் மேல தான். நான் இல்லைனு சொல்ல..அப்படி செய்யிறவனை,குற்றம் நிரூபனம் ஆனா, ஸுட்டிங் ஆர்டர் கொடுக்கணும்..இம்மெடியட் ஷுட்டிங் ஆர்டர் கொடுக்கணும்,ஹாங் பண்ணனும்.இப்படி உடனடி ஆக்சன் எடுக்கணும்..அதுல எனக்கு எந்த மாறுதல் கருத்தும் இல்லை..
ஒழுங்கா வளர்க்க வேண்டியது ஆண், பெண், இரண்டு குழந்தைகளையும் தான்..
அதை விட்டுட்டு, நான் எப்படி வேணா இருப்பேன்..மத்தவங்க சரியாய் இருக்கனும் அப்படின்னு சொன்னா,
தப்பு அவங்க மேலைன்னு கூட சொல்லலாம்..
நாம சரியாய் இருந்துட்டு, அடுத்தவங்களை தப்பு சொல்லணும்..
நீ ஒரு விரல் நீட்டி அடுத்தவங்களை குறை கூறும் போது,மற்ற மூன்று விரலும், உன்னை சுட்டுமுன்னு, பெரியவங்க சொல்லி இருக்காங்க..
அதுனால, நாம ஒழுங்கா இருந்து பசங்க பார்த்தா, அது அவனுங்க தப்பு..
நான் இப்படி தான் இருப்பேன், ஆனா நீ பார்க்க கூடாது..அப்படின்னு சொல்லுறது, எந்த ஊர் நியாயம் தெரியல..
இங்கயும், விஷு சார் பட வசனம் ஞாபகம் வருது..
அந்த படத்துல, மனோரமா ஆச்சி சொல்லுவாங்க..
என் பாவாடை அவுந்தது தப்பில்லை..பக்கத்து வீட்டு பையன் சிரிச்சது தான் தப்புன்னு சொல்லுற..
நீ பாவாடையை ஒழுங்கா கட்டிக்கணுமில்ல, அப்படிம்பாங்க
செம்ம வசனம் மச்சி..
எவேர்க்ரீன்…”
கைகளை பலமாய் தட்டினாள் அகல்..
“மாமா உனக்குள்ள, இவ்ளோ பெரிய தத்துவ ஞானியா..??”
“இன்னும் இருக்கு கேளு அகலு..
பசங்க மட்டும் இன்னர் வியர் தெரிய போடுறாங்க..அவங்கள கண்டிச்சு யாரும் எதுவும் சொல்லல..பார்க்கும் போது அசிங்கமா இருக்கு..
இந்த பொண்ணுக்கு மட்டும் போர்க்கொடி தூக்குறீங்கன்னு.. ஒரு ஆதரவு கூட்டம் கேட்குறாங்க..
அந்த பசங்க செய்யுறதும் தப்பு தான்..
தப்பு யார் செஞ்சாலும், தப்பு தான்..
பன்னி குட்டி சாக்கடைல புரழுது.. அதுனால, கன்னுக்குட்டியும் புரண்டா என்ன தப்பு?? அப்படின்னு கேட்குற மாதிரி இருக்கு டா அகலு..
கற்பு நிலையை, ரெண்டு பேருக்கும் பொதுவில் வைப்போமுன்னு, பாரதியார் சொல்லி இருக்கார்..
மகளிரை போல, எவன் ஒருவன் கற்பு நிலையில் நிற்கிறானோ, அவனே பெருமைக்குரியவன்னு, திருவள்ளுவர் சொல்லி இருக்கார்..”
“மாமா, இன்னிக்கு பின்னுற போ..இரு அம்மா கிட்ட சொல்லி..உனக்கு ஸ்பெஷல் பலகாரம் கொண்டு வாரேன்..”
வேகமாய் உள்ளே சென்றாள் அகல்..
இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த ராஜா,மதுவை பார்த்த படி,
“சினிமா பாட்டுலேயே சொல்லி இருக்காங்களே மச்சி..நீ ஏன் அவ்ளோ தூரம் போற..??
பழமை வேறு, பழசு வேறு
வேறுபாட்டை அறிஞ்சுக்கணும்.
கற்பு என்பது பிற்போக்கு இல்ல
கவசம் என்றே தெரிஞ்சுக்கணும்..
புரட்சி எங்கே, மலர்ச்சி எங்கே
புரிஞ்சு நீயும் நடந்துக்கணும்..!!
இப்போ எல்லாம் ஓல்ட் ஃபாஷன்னு, உடுக்குற உடை மாதிரி, பண்பாட்டையும் தூக்கி போட்டுடுறாங்க..”
‘இவர் யாரை சொல்லுறார்..என்னை பார்த்துக்கிட்டே சொல்லுறார்.நான் இங்க வந்ததுல இருந்து சுடிதார் தானே போடுறேன்..’
குழப்பத்துடன் அவனை பார்த்தாள் மது..
“விலைமதிப்பில்லாதது எல்லாம், மறைஞ்சு தான் இருக்கும் மாப்பு..மறைச்சு வைக்க பட்டிருக்கும்..தங்கம், வைரம்,தொல்பொருள் எல்லாம்..
இழுத்து போர்த்திக்கோங்க அப்படின்னு சொல்லல..
மாடர்ன் அஹ் போடுங்க..அதே நேரம் டீசென்ட் அஹ் போடுங்க..டோன்ட் எஸ்போஸ் யூவர்செல்ப்..
அம்புட்டு தான்..
அதுக்கும் மேல உங்களை பார்கிறவங்களை..திருத்தவே முடியாது..
போட்டு வெளுக்காலம்..
என்ன மாப்பி..நான் சொல்லுறது சரி தானே..??”
“அப்போ முதல் அடி உனக்கு தான் மச்சி..”
“மாப்பு, சேம் சைடு கோல் போடுற பார்த்தியா..??”
உள்ளிருந்து வெளியே வந்த மரகதம்,
“என்ன டா, ரெண்டும் எலியும் பூனையுமா இருக்குங்க..இன்னிக்கு, இவனுக்கு பலகாரம் கேட்குறா அகலு..”
“அது ஒன்னும் இல்லை அத்தை.. இன்னிக்கு கொஞ்சம் தத்துவம் பொழிஞ்சேன்..அதான், அகலு ஹாப்பி அண்ணாச்சி..”
“என்னவோ, இப்படியே இருந்தா சரி தான்..”
கூறிவிட்டு சென்றார் மரகதம்..