அழுகையிலும் அவளின் பேச்சில்.. மற்ற இருவருக்கும் புன்னகையே எழுந்தது.
“விடுடா.. அதான் அவனை போலீஸ்ல புடுச்சு கொடுத்தாச்சே..!” என்றான் ஆறுதலாக.
“தப்பா பாத்ததுக்கே எனக்கு இப்படி இருக்கே..!
அவன்.. இதை தாண்டி ஏதோ நிறைய பண்ணியிருக்கான் தானே..? பாவமில்ல அவங்க..!
இன்னைக்கு நீங்க பார்த்து அவனை பிடிச்சதால பரவாயில்லை.
இதே நீங்க இன்னும் கவனிக்காம விட்டிருந்தா.. எத்தனை பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருப்பாங்க..?” என்றாள் மற்றவருக்காக வருந்தும் குரலில்.
சம்யுக்தாவை பற்றி எதுவும் தெரியாமலேயே.. முகுந்த் மீதான பாசத்தை வைத்து ரியானுக்கு இணையாக்க நினைத்த சந்தீப்புக்கு..
அவளின் மற்றவருக்காக இரங்கும் குணமும் ரியானிடம் காட்டும் நெருக்கமும்.. அவனின் முடிவை உறுதியாக்கி கொண்டே போனது.
அது கொடுத்த நிறைவில் சிறு புன்னகையுடன் அவர்களை பார்த்திருந்தவனின் பார்வையின் நோக்கத்தை ரியான் கண்டு கொண்டான்.. என அப்போது சந்தீப் அறிந்திருக்கவில்லை.
இப்போது தேவையில்லாமல் அதை பேசி.. நிர்மலமான மனதுடன் தன்னை நெருங்கியிருக்கும் சம்யுக்தாவின் மனதில்.. அனாவசியமான எந்த அழுத்தத்தையும் உண்டாக்க விரும்பவில்லை ரியான்.
அதனால் அதை விடுத்து, “பேபி இதுவரை நடந்ததுக்கு ஒண்ணும் செய்ய முடியாது.
இனி வரும் காலத்துல இந்த மாதிரி தப்பு.. நம்ம இருக்கற இடத்துல நடக்காம தடுக்க என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம்.. சரியா..? இப்ப சாப்பிடு.
நீ வேற.. என்னோட கம்பெனிய நெம்பர் ஒன் ஸ்தானத்துக்கு கொண்டு வர்றேன்னு சபதமெல்லாம் எடுக்க போறையே..!” என்றான் அவளை இலகுவாக்க வேண்டி.
அது நன்றாகவே அதன் வேலையை காட்ட, “ஆமா.. ஆமா.. கம்பெனி முதலாளிங்க.. இப்படி எப்ப பாத்தாலும் கூடி உக்காந்து பேசியே கூத்தடுச்சா.. அப்புறம், என்னை மாதிரி ஆளுங்க தான் தீவிரமா வேலைய பாத்து எதாவது செய்யனும்..” என கண்களை சிமிட்ட,
“அடிங்க.. எங்கள பாத்தா வெட்டியா பொழுதை ஓட்டறவங்க மாதிரியா இருக்கு..?” என அவளின் காதை வலிக்காதபடி பிடித்து திருகியவன்,
“சாப்பிட்டு.. உன் புது டிஎல்ல போய் பாத்து.. ஒழுங்கா வேலைய முடி..” என்றவன்,
அவனே எதிரிலிருந்த சாதத்தை அவளுக்கு ஊட்ட துவங்க எவ்வித மறுப்பும் இன்றி உண்ணத்துவங்கினாள்.
சம்யுக்தா சாப்பிட ஆரம்பித்ததும் சந்தீப்பும் அவனின் உணவை எடுத்து உண்ண துவங்க,
அடுத்த சில நிமிடங்கள் எந்த சத்தமும் இன்றி அமைதியில் கழிந்தது.
சம்யுக்தா அங்கிருந்து கிளம்பிய பின், “சந்தீப்.. சம்யுக்தாவபத்தி என்ன நினைக்கிறே..?” என்றான் சாதாரணமாக.
“ரொம்ப நல்ல பொண்ணுடா.. உன் மேலையும் குறிப்பா முகுந்த் மேலையும் ரொம்ப பாசமும் அக்கறையும் வச்சிருக்கா.
நீ சொன்னதை வச்சு பார்க்கும் போது.. வேலையிலையும் பெஸ்ட்.