அத்தியாயம் 17:
பெங்களூரில் இருந்து வந்த சக்தி நேராக மங்கையின் முன்வந்து நின்றார். “அவரின் முகத்தில் அத்தனை கோபமும், கொலைவெறியும் ஒருங்கே இருந்தது”. அவரை பார்த்த மங்கைக்கு சிறிது பயமும் வந்தது.
சக்தி போட்ட சத்தத்தில் வீட்டில் இருந்த அனைவரும் முற்றத்தில் ஒன்று கூடிவிட்டனர்.
நேராக மங்கையிடம் வந்தவர், “அண்ணி நீங்க இன்னும் என்னென்ன பண்ணலாம்னு காத்துக்கிட்டு இருக்கீங்க?” அந்த பிள்ளை மேல இல்லாத பழியைபோட்டு வீட்டைவிட்டு வெளியே அனுப்புனது பத்தாதா உங்களுக்கு…
“நித்தியா வாழ்க்கையை முழுசா அளிக்காம ஓயவேமாட்டீங்களா?”அப்படி என்னதான் அவமேல உங்களுக்கு வெறுப்பு…
“ஏன் அத்தனை வன்மம் அண்ணி.. ..ஏன் அவள நிம்மதியா வாழவிடமாட்டேன்கிறீங்க?” இதுக்கு மேல உங்களால நித்தியாவிற்கு ஒரு பிரச்சினை வந்தா நீங்க பழைய சக்திவேலை பாக்கவேண்டிவரும்…
அது உங்களுக்கு நல்லது இல்லை.. இந்த குடும்பத்திற்கும் நல்லதில்லை.. “என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு அண்ணி… வேண்டாம் தேவையில்லாம சீண்டாதீங்க… அப்புறம் ரொம்ப பாதிக்கப்படுவீங்க அண்ணி”…
சக்திவேலின் கூற்றில் வெகுண்ட மங்கை நாதனிடம், “பாருங்க உங்க தம்பிய… நீங்க இருக்கும் போதே இப்படி பேசுறாரு”.. இதை எல்லாம் கேட்கமாட்டீங்களா… என நீலிக்கண்ணீர் வடித்தார்.
[the_ad id=”6605″]
தன் மனைவியின் கண்ணீரை தாங்காத நாதன், “என்ன பேச்சு பேசற சக்தி.. அவ உங்க அண்ணி”. அந்த மரியாதை கொஞ்சமாச்சி இருக்கா? அவ என்ன தப்பு செஞ்சா இப்படி நிக்கவச்சி கேள்விகேட்கிற என்றவரிடம்..
சக்திவேல் “அப்படி என்ன மரியாதை இல்லாமல் இவங்களை பேசிட்டேன் இப்ப?” நீங்க எதுவும் பேசாதீங்க அண்ணா… எனக்கு பயங்கர கோபம் வருது..
பின் நிதானமாக சக்தி, “நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க என்ன பேசுறீங்க அண்ணா. எதையும் யோசனை செய்து பேசுங்க அண்ணா. இப்படி அண்ணி சொன்னா சரினு பூம்பூம்மாடு மாதிரி தலையை ஆட்டாதீங்க” ..
“நீதான்டா உன் பெண்டாட்டி பேச்ச கேட்டு இப்படி வந்ததும் வராததும்மா மங்கைகிட்ட சண்டைக்குபோற?” அவதான்டா இந்த குடும்பத்தை இந்த அளவுக்கு கொண்டுவந்து வச்சி இருக்கா..
“மங்கை இல்லைனா நாம இன்னும் நிறைய இழந்து இருப்போம். அத புரிஞ்சிக்கு சக்தி” எனக்கூறி தன் மனைவியை சமாதானம் செய்தார் நாதன் (பாவம் அவருக்கு தன் மனைவியின் சுயம் தெரியவில்லை… அது தெரிந்தால்?).
நாதனின் அறியாமையை கண்ட சக்திக்கு, “தலையை எங்கையாவது முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது. அதே சமயம் அண்ணனை நினைத்தால் பாவமாகவும் இருந்தது”. சற்று மனதிற்குள் பயமாகவும் இருந்தது( மங்கை பற்றிய உண்மை தெரியும் போது எந்த அளவு உடைந்துபோவார் என நினைக்கும் போது). மங்கை தன் கணவனின் பேச்சில் நிம்மதி அடைந்தார்( பிரச்சினையின் காரணகர்த்தா இவர் அல்லவா).
“பின்ன இருக்காதா? அந்த வீட்டில் நடந்த அத்தனை பிரச்சனைக்கும் முழுபொறுப்பு மங்கை அல்லவா”…
இவங்க வேலைக்காக மாட்டாங்க என நினைத்த சக்தி, ”லட்சுமியிடம் திரும்பி, அண்ணி நீங்க தான் நித்தியாவ பெத்தீங்களா? தயவு செய்து நீங்கதான் அவ அம்மானு யார்கிட்டையும் சொல்லீடாதீங்க”… கேட்கறவங்க சிரிப்பாங்க..
[the_ad id=”6605″]
“நீங்க நல்ல அம்மாவா இதுவரை நித்தியாக்கு இருந்தது இல்லை.. அவளுக்கு தேவையான போது நீங்க அவகூட இல்ல… இதுக்கு எல்லாம் சேர்த்து ஒரு நாள் நல்லா அனுபவிப்பீங்க”. அப்ப இதே இவங்க(என மங்கையை) உங்க கூட இருக்கமாட்டாங்க. நீங்க மட்டும் தனியா நிக்கனும்….
அதற்கு லட்சுமி, “அவ கூட இருந்த தான் சக்தி நாங்க தனியா இருக்கனும். அவ ராசியாளதான நாம நிறைய இழந்தோம்”. அதுநாளதான் அக்கா அவள அந்த வீட்டில் இருக்கவச்சாங்க.
பத்துமாதம் சுமந்து பெற்ற பெண் என்றும் பாராமல் லட்சுமி நித்தியாவை, “அந்த தரித்திரம்புடிச்சவளால் தான நம்ம நஷ்டப்பட்டோம்”.
“அவ பிறந்த நேரம் சரியில்லை தம்பி அதுனால தான் இப்போது குடும்பத்தில நிறைய பிரட்சனை வருது”. இது உனக்கும், சஞ்சனாவுக்கும் தான் புரியமாட்டிக்குது என்றவரிடம்….
அண்ணி ஏன் இப்படி எடுப்பார் பேச்சகேட்டு உங்க பெண்ணை கேவலமா நடத்துரீங்க.
“உங்களுக்கு நித்தியாவை நல்லா பார்த்துக்கத்தான் மனசுவரல பரவாலை. ஏன் இப்படி அவளை அசிங்கமா பேசரீங்க. அதுதான் அண்ணி கஷ்டமா இருக்கு”.
“நித்தியா வேற குடும்பத்தில் பிறந்து இருந்தா நிம்மதியா வாழ்ந்து இருப்பா. இந்த குடும்பத்தில் பிறந்ததால் இத்தனை வேதனை அனுபவிக்கிறா”. இதுவரை நடந்ததை என்னால மாத்தமுடியாது. “ஆனா இனி இந்தமாதிரி ஏதாவது நடந்தது நான் அமைதியா இருக்கமாட்டேன்”.
“நித்தியா எதிர்காலம் என் பொறுப்பு… அவ கனவை கலைக்க நினைச்சா நான் சும்மா இருக்கமாட்டேன் பார்த்து நடந்துக்கோங்க அண்ணி”.
“சந்திரன் அண்ணா!” நீதான நித்தியா அப்பா… இல்ல எங்கேயாவது இருந்து தூக்கிவிட்டு வந்தையா? “நீங்க ஆம்பளையின் நிரூபிக்க நித்தியா வேணும் இல்ல”.
[the_ad id=”6605″]
“உனக்கு ஒரு கதை சொல்லட்டா? அது ஒரு அன்பான அப்பா பற்றிய உண்மையான நிகழ்வு சந்திரன் அண்ணா…
“ராஜஸ்தான் மாநிலத்தில் பிபிலாந்திரினு ஒரு கிராமம் இருக்கிறது. அதை தேவதைகளின் கிராமம்னு சொல்லுவாங்க”….
ஒரு நாள் நான் கேஸ் விசயமா அந்த கிராமத்திற்கு போயிருந்தப்ப “அங்க உள்ள ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்துடுச்சி. வலி வந்த கொஞ்ச நேரத்தில் குழந்தையும் குறைந்துவிட்டது”.
பிரசவம் பார்த்த பெண்மணி வெளியே வந்து “பெண் குழந்தை பிறந்திருக்குனு” சொன்னவுடன் வெளியே காத்திருந்த அத்தனை உறவினர்கள், பெற்றவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
அந்த மகிழ்ச்சியேடு மகிழ்ச்சியா “அந்த கிராமத்தில் 111 மரங்கள் நடும் விழா ஆரம்பமாகிவிட்டது”. ஆச்சரியமா இருக்கறது அல்லவா அண்ணா? எனக்கும் அப்படிதான் இருந்தது…
பெண் குழந்தை பிறந்ததை இந்த ஊர்மக்கள் அத்தனை மகிழ்ச்சியா கொண்டாடுகிறார்களேனு.
அப்பதான் என் Friend சொன்னான்.. இங்க “குழந்தைபிறந்த உடனே மரம் நடுவிழா ஆரம்பமாகிவிடும்னு”. இந்த விழா 2006ல் இருந்து நடக்கிறது.
அந்த கிராமம் நம்ம ஊர் உசிலம்பட்டி போலத்தான் இருந்தது அண்ணா.
“நம்ம ஊரில் பெண் குழந்தை எனத்தெரிந்தால் கள்ளிப்பால் அல்லது விதை நெல் மாதிரி எதாவது கொடுத்துவிடுவார்கள்”. அதையும் மீறி பிறக்கும் குழந்தைகள் உடனே இறந்துவிடும்… அல்லது “சிசு கொலை செய்யப்பட்டு விடும்”.
“இதற்கு காரணம்?… வரதட்சணை, கல்யாண செலவு”… இதை தடுக்க முதல் அடியை எடுத்து வைத்தவர் அந்த “அந்த கிராமத்தின் தலைவர் ஷ்யாம் சுந்தர்”.
கிராமத்து மக்களை கூட்டி, தனது “மரம் நடும் திட்டம்” பற்றி எடுத்துக்கூறினார்.
“ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும், அந்த ஊரில் உள்ள எல்லாரும் சேர்ந்து 111 மரக்கன்றுகள் நடவேண்டும்”. இந்த மரங்கள் எல்லாம் பணம் தரும் வேம்பு, ரோஸ்வுட், மா, நெல்லி மற்றும் மூலிகை மரங்கள்.
“இந்த மரங்களை அந்த கிராமத்தில் உள்ள பெண்களால் பராமரிக்கபட்டது”. அதற்கு சம்பளம் கிராம பஞ்சாயத்து கொடுக்கும்.
அந்த குழந்தைக்கு பதினெட்டு வயது நெருங்கும்போது, அந்த “111 மரங்களும் அவ்வளவும் பணம் கொடுக்கும் மரங்களாக மாறி இருக்கும்… அப்புறம் என்ன?.. கல்யாணசெலவு பற்றி கவலைபட வேண்டியது இல்லையே!”….
அது மட்டும் அல்ல!…. “பெண்குழந்தை பிறந்தவுடன் பஞ்சாயத்தில் 21ஆயிரம் கொடுக்கிறார்கள். பெற்றவர் தரப்பில் 10ஆயிரம் கொடுத்தால் போதும். இந்த மொத்தபணத்தையும் பிறந்த குழந்தையின் பெயரில் பிக்ஸ் டெபாசிட்டில் போட்டுவிடுகிறார்கள்”.
இதுவும் அந்தக்குழந்தைக்கு 18அல்லது 20 வயதாகும்போது, “அந்த குழந்தையின் படிப்பு செலவுக்கு இந்த பணம் பயன்படுகிறது”.
“இந்த திட்டத்திதாள் மொத்தத்த ஊரும் பச்சைப்பசேல் என்று மரங்களால் நிறைந்து இருக்கிறது”.
இந்த திட்டம் கிராமத்தின் தலைவர் ஷ்யாம்சுந்தருக்கு எப்படி உதித்தது தெரியுமா? “பல ஆண்டுக்கு முன் அவருக்கு பிறந்த பெண்குழந்தையும், இறந்து போய்விட்டது. ஆம்… சிசு கொலை செய்யப்பட்டது”.
அந்த நேரத்தில் அவரால் அதை தடுக்க முடியவில்லை. ஏன் எனில் அதுதான் அந்த கிராமத்தின் பழக்கம் ஆக இருந்து .
அதற்கு பிறகுதான் “இறந்துபோன தனது மகள் நினைவாக இந்த 111 மரங்கள் திட்டத்தை பெரும் முயற்சிக்கு பின் அதில் மகத்தான வெற்றியை கண்டார் ஷ்யாம் சுந்தர்”.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என சொல்வார்கள், “ஆனால்…. ராஜஸ்தானில் அந்த கிராமத்தில் இன்று பல பெண்கள் உயிரோடு இருக்க ஷ்யாம் சுந்தர் என்ற ஆண் இருக்கிறார்”.
“அவரின் இந்த திட்டத்தின். வெற்றிக்குப் பின்னால், பிறந்தவுடன் இறந்து போன அவர் மகள். ஆம்!… ஒரு பெண்தான் இருக்கிறாள்”.
“இப்படி பட்ட அப்பா இருக்க உலகத்துல தான் நீயும் இருக்கற”… அவர் தன் குழந்தை இறந்துபோனது போல் வேறெந்த குழந்தையும் இறக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தி பல குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்து இருக்கிறார்.
ஆனா நீங்க… “பெத்த பெண்ணுக்கு நியாயமான அப்பாவா கூட நடந்துக்கமுடியாம இருக்கீங்க”. அவளோட இந்த நிலைக்கு காரணம் நீங்கதான்…. நீங்கமட்டும்தான்… “நம்ம அப்பா, அம்மா மட்டும் இல்லைனா” இப்போ நித்தியாவை புதைத்த இடத்தில் புல் முளைத்து இருக்கும்.
அப்புறம், “நீங்க கொளுப்பெடுத்து போய் தேவையில்லாத வேலைபண்ணி நஷ்டப்படுவீங்க”. அந்த பழிய எவ்வளவு எளிமையா நித்தியா பிறந்த நேரம்னு சொல்லுவீங்க இல்ல…” நாதன் அண்ணாவும், நீங்களும் பண்ணுன தப்புக்கு சிலுவைசுமப்பது நித்தியாவா?”.
“இது நல்லா இருக்குதே ”.
[the_ad id=”6605″]
அதற்கு சந்திரன், “அப்படி இல்லடா சக்தி”… நடந்ததை வைத்து பார்க்கும் போது இவங்க செஞ்சது எனக்கு சரினு பட்டுதுடா… “அதனால தான் நான் அமைதியா இருந்துவிட்டேன்” என்றவரிடம்….
சக்திவேல், “இப்படி சொல்ல உங்களுக்கு அசிங்கமா இல்ல?”..
“என்ன அப்படி இல்ல அண்ணா”… என்ன சரினு பட்டது அண்ணா?… நீங்களே நல்லா யோசனை செய்து பாருங்க…. நீங்க செய்தது அப்பதான் உங்களுக்கு புரியும்.
இதனால தான் அண்ணி, அண்ணா…. அரூபனுக்கு உங்களவிட்டு கொஞ்சம்கொஞ்சமா விலகிப்போறான். அது உங்களுக்கு புரியுதா அண்ணி.
“நீங்க அவங்கள(மங்கையை) நம்பரீங்க..அது தப்பு இல்ல. ஆனா கண்மூடித்தனமா நம்பறது ரொம்ப தப்பு அண்ணி.. இதனால இழப்புகள் உங்களுக்கு தான், அவங்களுக்கு இல்ல லட்சுமி அண்ணி”… இனியாவது புரிஞ்சு நடந்துக்குங்க எனக்கூறி அவர் அறைக்கு சென்றுவிட்டார்.
லட்சுமி அழுதுகொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டார். அவரின் மனதில் அரூபன் அவர்களைவிட்டு சென்றுவிடுவானா என்றபயம் அவரின் மனதில் ஏற்பட்டுவிட்டது.
“அப்பொழுதுகூட அவருக்கு நித்தியாவிற்கு செய்தவை தவறாக தோன்றவில்லை”. அதுபற்றி அவர்மனதில் சிறு குற்றஉணர்வுகூட ஏற்படவில்லை.
அங்கு நாதன் அவர் அறையில் மனைவியை சமாதானம் செய்து கொண்டு இருந்தார்.’ பாவம் அவருக்கு தன் மனைவியின் நாடகம்கூட தெரியாமல் சமாதானம் செய்கிறார்’.
சந்திரன், தன் பெற்றோர்களின் படத்திற்கு முன்நின்று மானசீகமாக மன்னிப்புபடலம் நடத்திக்கொண்டு இருந்தார்.
இத்தனை பிரச்சினையிலும் சஞ்சனா தன் அறையைவிட்டு வெளியே வரவில்லை.
அவர் வந்தால் சண்டை திசைதிரும்பும். அத்தனை பிரச்சனையும் அவரின் தலையில் தான் விழும்.
[the_ad id=”6605″]
“மங்கை, சாமர்த்தியமாக சஞ்சனாவை பிரச்சனையின் மூலாதாரமாக மாற்றிவிடுவார்” என்பதை அறிந்து அவர்வெளியேவரவில்லை.
“தன் அறைக்கு வந்த சக்தி சஞ்சனாவின் இருகிய அணைப்பில் இருந்தார்”.
சஞ்சனா அழுகையுடனே, “என்னால தாங்க முடியல சக்தி… இவங்க ஏன் தான் இப்படி கேவலமா நடந்துக்கிறாங்க”…. எனக்கூறியவரை சமாதானப்படுத்தி படுக்கவைத்தார்.
சக்தியின் மனதில், “நித்தியாவின் எதிர்காலத்தில் இந்தமாதிரி நிறைய பிரட்சனை குடும்பத்தில் உள்ளவர்களால் வரும்”… அதை சரி செய்ய நல்ல வாழ்க்கைத் துணையாக வரப்போறவன், இவங்களை எல்லாம் சமாளித்து “நல்லபடியா நித்தியாவின் வாழ்கைதுணையாக இருந்து, அவள் லட்சியப்பாதையின் வழிகாட்டியாக இருப்பவனாகவும், தோல்வியில் துவளும்போது தோழ்கொடுப்பவனாகவும் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டு அப்படியே தூங்கிவிட்டார்”.
வேலை முடிந்து வெளியே வந்து உடன் நித்தியா, அம்பை, தேவகி மற்றும் ருத்ரன் என அனைவரும் சேர்ந்து” Shopping “ முடித்துக்கொண்டு அவர்அவர் இல்லத்திற்கு சென்றனர்.
இரவு உணவை முடித்து விட்டு “நித்தியா முகத்திற்கு ஆவி பிடித்துக்கொண்டு இருந்தால்”. நாளைய Function ல்( வாரத்திற்கு ஒரு முறை தவறாமல்செய்வாள்) எண்ணைவடியாமல் இருக்க இந்த வழிமுறை.
ஆவி பிடிப்பதால், “முகப்பருக்கள் குறையும். முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயில், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துறைகளில் சேரும் அழுக்கு மற்றும் டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள் துணியால் துடைக்கும் போது போய்விடும்”.
கரும்புள்ளிகள் விரைவில் நீங்கிவிடும். அதற்கு “5 முதல் 10 நிமிடங்கள் ஆவி பிடித்து, துணியால் தேய்த்தால் கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும்”.
முகத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு இருக்கிறது. “ஆவி பிடிப்பதால் அழுக்கு நீங்கி முகம் பளிச்சென்று இளமைத்தோற்றம் பெறுகிறது”.
“பருக்கள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடங்கள் ரிலாக்ஸ் ஆக இருந்து, ஐஸ் கட்டியால் முகத்தில் தேய்த்தால் பிம்பிள் உடைந்துவிடும்”.
ஆவி பிடிப்பதால் “முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இருக்கும். துளைகள் நன்றாக சுவாசிக்கும். அதனால் சருமம் பொலிவோடு இருக்கும்”.
முகத்திற்கு ஆவி பிடித்து முடிந்தபின் நித்தியா சிறிது ரெஸ்ட் எடுத்துவிட்டு, “நாளை மாலை Function க்கு போட்டுக்கொள்ள தேவையான துணிகள் மற்றும் நகைகள் எடுத்துவைத்து விட்டு, நாய்க்கு உணவினை வைத்தவள், பாத்திரங்களை சுத்தம் செய்து design draw செய்ய ஆழ்ந்துவிட்டாள்”.
பந்தம் தொடரும்……