புறநகர் பகுதியில் அமைந்துள்ள அந்த தனியார் தொலைக்காட்சியின் அரங்குக்குள் இருந்து வெளியே வந்தான் பிரஷாந்த். ஏற்கனவே தயாராய் இருந்த ட்ராவல் பேகை தோளில் மாட்டியவன் பைக்கில் ஏறி அமர்ந்து ரிவர்ஸ் எடுக்க, “மாஸ்டர்…!” என கத்திக்கொண்டு ஓடிவந்தான் அவனது அசிஸ்டென்ட்.
வந்த வழியே திரும்பி நடக்க எண்ணி திரும்பிய வித்தகனின் நெஞ்சுக்கூடு அதிர்ந்து போனது அங்கே அடர்ந்து நெருங்கி மண்டியிருந்த புதர்களை கண்டதும்.
அந்த வனப்பகுதிக்குள் பிரஷாந்த், பிரவேசிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே அந்த காட்டின் இருள் அவன் கண்ணுக்கு பழக, தன்னைத்தாண்டி யாரேனும் இருக்கும் அறிகுறி தெரிகிறதா என உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.
“எனக்கு இங்கிருந்து எப்படி போகணும்ன்னு சீக்கிரம் வழி சொல்லுங்க ப்ளீஸ்” அதீத படபடப்புடன் வியர்த்து வழியும் முகத்துடன் கலைந்த, கலைத்த தோற்றத்தில் எதிரே நின்ற பெண்ணை கண்டதும், தனித்து நின்று அல்லாடியவனுக்கு கடவுள் கொடுத்த துணையாக தெரிந்தாள் அவள்.
“சார், ப்ளீஸ் ஹெல்ப் மீ டு கோ அவுட்…” மீண்டுமாய் அவள் கெஞ்ச, நிதானத்திற்கு வந்திருந்தவன், “மேடம்… ரிலாக்ஸ்! நான் ஒன்னும் இங்க டூரிஸ்ட் கைடு இல்ல… எப்படி இங்கிருந்து வெளில போறதுன்னு தெரியாம தான் நானும் முழிச்சுட்டு இருக்கேன்” என்று சொல்ல,
“ஓ! உங்க இன்ஸ்டா ஐடி’யா?” என்றுவிட்டு அவள் சிரிக்க, “நீங்க ராணியாகலாம்! நாங்க ராஜாவாக கூடாதோ?” என்றான் இவன்.
கிளுக்கி சிரித்தவனோ, “ப்பூ… இவ்ளோதானா?” என்றான்.