பிடித்தம் 24
மாலினி கிளம்பியதும் வெற்றிவேல் கைபேசியை எடுத்து அவனது குழுவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷை அழைத்தான்.
அழைப்பை எடுத்த சந்தோஷ், “குட் ஈவ்னிங் சார்”
“குட் ஈவ்னிங்.. நான் XXX ஏரியாவில் இருக்கிறேன்.. இந்த ஏரியாவில் கஜா னு ரௌடி இருக்கிறானா? இருந்தா அவனோட அட்ரெஸ் என்ன னு சொல்லு.. குவிக்.. அண்ட் ஒன் மோர் திங்.. திஸ் இஸ் பெர்சனல்”
“ஓகே சார்.. டூ மினிட்ஸ்.. அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் என் பிரெண்ட் தான்”
“ஓகே” என்று அழைப்பை துண்டித்தான்.
சொன்னது போல் இரண்டு நிமிடத்தில் அழைத்த சந்தோஷ், “சார் அவன் லோக்கல் ரௌடி தான்.. கட்டபஞ்சாயத்து பண்றவன்.. ஆனா அவனுக்கு எக்ஸ் எம்.எல்.ஏ சப்போர்ட் கொஞ்சம் இருக்கும் போல”
“ரௌடி னு இருந்தா அவனுக்கு பொலிட்டிக்கல் சப்போர்ட் இருக்கத் தான் செய்யும்”
“எஸ் சார்.. ஜஸ்ட் இன்பார்ம் பண்ணேன்”
“அட்ரெஸ்?”
சந்தோஷ் முகவரியை கூறியதும் வெற்றிவேல், “தேங்க்ஸ் சந்தோஷ்.. நான் பார்த்துக்கிறேன்”
“நோ தேங்க்ஸ் சார்”
“ஓகே” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன், சந்தோஷ் கூறிய முகவரிக்கு சென்றான்.
இவன் அங்கே சென்றதும் நுழைவாசலில் நின்றுக் கொண்டிருந்த ஒருவன், “யார் நீ? என்ன விஷயம்?”
“கஜாவை பார்க்கணும்”
அவன் நாக்கை மடக்கி, கை முஷ்டியை மூடி குத்துவது போல் பாவனை செய்து, “ஏய்! கஜா அண்ணா னு சொல்லு” என்றான்.
வெற்றிவேல் கைகளை பேண்ட்(Pant) பாக்கெட்டில் விட்டபடி, “சொல்லலைனா?” என்று வினவ,
அவன் மறுபடியும், “ஏய்…………” என்று ஆரம்பிக்க,
வீட்டினுள் இருந்து வந்த ஒருவன் உள்வாசலில் நின்றபடி, “மணி என்ன சத்தம்? யாரு?” என்று வினவினான்.
நுழைவாசலில் இருந்தவன், “கஜா அண்ணனை பார்க்கணுமாம்.. என்னனு விசாரிச்சிட்டு இருக்கிறேன்.. முதல்ல இருந்தே ராங்காவே பேசுறான் ணா”
அவன், “அண்ணா செம்ம டென்ஷனில் இருக்கிறார்.. என்ன ஏது னு கேட்டுட்டு இன்னொரு நாள் வர சொல்லி அனுப்பிடு” என்றுவிட்டு உள்ளே சென்றான்.
நுழைவாசலில் இருந்தவன், “என்ன விஷயமா பார்க்கணும்?” என்று முறைப்புடன் வினவ,
வெற்றிவேல் சிறு நக்கலுடன், “உன்னோட கஜா அண்ணா பெரிய பருப்பு னு கேள்வி பட்டேன்.. அதான் சிறு பருப்பா கடலை பருப்பா னு தெரிஞ்சிட்டு போக வந்தேன்”
‘டேய்’ என்று கத்த அவன் வாய் திறக்க, அவன் கத்தும் முன் வெற்றிவேல் விட்ட குத்தில் அவனது வாய் கிழிந்து ரத்தம் வடிந்தது.
அவனை ஒற்றை கையால் கீழே தள்ளிவிட்ட வெற்றிவேல் சிறிது மூடி இருந்த வெளிக்கதவை காலால் உதைத்து திறந்தபடி உள்ளே நுழைந்தான்.
இடது புறம் சிலர் நின்று பேசிக் கொண்டிருக்க, அதில் அந்த மூவரும் இருந்தனர்.
அந்த மூவரில் ஒருவன், “டேய்.. எங்களை அடிச்சவன் இவன் தான்.. வாங்க டா” என்று கத்த, அனைவரும் கையில் கத்தி, அருவாள், உருட்டுக் கட்டை என்று வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி வந்து வெற்றிவேலை சுற்றி வளைத்தனர்.
அவர்கள் பொருட்களை எடுத்து வருவதற்குள் வெற்றிவேல் வலது புறம் சற்று தள்ளி இருந்த சிலம்பை கையில் எடுத்து இருந்தான்.
வெற்றிவேல் அந்த மூவரில் அடி வாங்காதவனை பார்த்து, “என்னை ஆம்பளையா னு கேட்டுட்டு நீ பொட்டை மாதிரி இங்கே வந்து ஒளிஞ்சிட்டு இருக்கிற!” என்றான் நக்கலான குரலில்.
அவன், “நீயெல்லாம் நான் அடிக்கிற அளவுக்கு வொர்த்தான ஆளே இல்லை டா”
வாய் விட்டு சிரித்த வெற்றிவேல், “நீ தெறிச்சு ஓடியதிலேயே உன் வீரம் தெரிந்தது” என்றான்.
அவன், “டேய்” என்று ஆவேசமாக கத்தியபடி அடிக்க வர, மற்றவர்களும் அடிக்க பாய்ந்தனர் ஆனால் அவர்களால் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது.
அவர்கள் அடிக்க ஆரம்பிக்கும் முன் வெற்றிவேல் சிலம்பை சுழற்றி சுத்தியதில் அவர்களின் கைகளிலும் கால்களிலும் அடி பட்டிருக்க, ஒரு சிலர் ஆயுதங்களை கீழே போட்டிருந்தனர்.
இந்த சத்தத்தில் முதலில் பேசியவன் வெளியே வந்து, “டேய்.. என்ன டா நடக்குது?” என்று கத்தினான்.
அந்த மூவரில் இன்னொருவன் வலித்த கையை உதறியபடி, “அண்ணா இவன் தான் எங்களை அடிச்சது” என்று கத்தியபடி மறு கையால் வெற்றிவேலை கத்தியால் குத்த தயாராக இருக்க,
நுழைவாயிலில் இருந்தவன், “வந்ததில் இருந்தே ராங்கா பேசி என்னையும் அடிச்சிட்டான் ணா” என்றான்.
“ஒருத்தனை இத்தனை பேர் இருந்தும் அடிக்க துப்பில்லை.. சீ.. கேவலமா இல்லை” என்று அவன் திட்டி முடிக்கவும் பாதியாக உடைந்திருந்த செங்கல் ஒன்று பறந்து வந்து அவனது நெற்றியில் பதம் பார்க்க ரத்தம் வழிய ஆரம்பித்தது.
நெற்றியில் கை வைத்து அழுத்தியபடி அவன், “அவனை அடிச்சு நொறுக்குங்க டா” என்று கத்தினான்.
மீண்டும் அவர்கள் வெற்றிவேலை நெருங்க முயற்சிக்க, இந்த முறை சிலம்பை சுழற்றிய வெற்றிவேலின் குறி அவர்களின் தலையாக இருக்க, அனைவரின் மண்டையும் உடைந்து ரத்தம் வடிந்தது.
அப்பொழுது வீட்டின் உள்ளே இருந்து வந்த கஜா, “ஏய்! யார் டா நீ?” என்று எரிச்சலும் கோபமுமாக கத்தினான்.
சிலம்பை நிற்க வைத்து வலது கையால் அதை பற்றியபடி இடது கையை இடுப்பில் வைத்து வலது காலை இடது காலிற்கு குறுக்காக வைத்தபடி கெத்தாக நின்ற வெற்றிவேல், “எல்லோரையும் அடி வாங்க விட்டுட்டு கடைசியா வர.. ஸோ நீ தான் கஜாவா இருக்கணும்” என்றான் அலட்சியமும் நக்கலும் கலந்த குரலில்.
ஒருவன், “டேய் அண்ணாவை மரியாதையா பேசு” என்று எகிறியபடி இரண்டடி எடுத்து வைக்க,
அவனை அடி பார்வை பார்த்த வெற்றிவேல், “வாங்கியது பத்தலையா?” என்று வினவ, அவன் அடங்கினான்.
கஜா வெற்றிவேலை முறைத்தபடி, “நான் தான் கஜா.. நீ யாரு? உனக்கு என்ன வேணும்?”
“நான் ACP வெற்றிவேல்.. நான் அபீஸியலா வரலை.. அதான் லேசா ரெண்டு தட்டு தட்டியதோட நிறுத்திட்டேன்.. எனக்கு எதுவும் வேணாம்.. உன் பசங்களிடம் சொல்லி வை.. பொண்ணுங்களிடம் பிரச்சனை பண்ண நினைத்தா தோலை உருச்சிடுவேன்.. அதுவும் இவன்க என் வைஃப் கிட்ட வாலாட்ட பார்த்தான்க” என்றவன், “ஏதாவது கேஸில் மாட்டினீங்க வெளியே வராதபடி பண்ணிடுவேன்.. ஜாக்கிரதை” என்று மிரட்டியபடி சிலம்பை எறிந்துவிட்டு வெளியேறினான்.
வெற்றிவேல் எறிந்த சிலம்பு ஒருவன் காலின் அருகே விழ அவன் சிறிது பதறியபடி இரண்டடி பின்னால் நகர்ந்தான்.
இன்னொருவன் கஜாவை பார்த்து, “என்ன ணா அவனை சும்மா விட்டுட்ட?”
“அறிவு கெட்டவனே! அவன் தான் நம்மளை சும்மா விட்டுட்டு போறான்.. ஏற்கனவே பிரச்சனையில் இருக்கிறோம்.. இதில் வேலியில் போற ஓணானை வேட்டிக்குள்ள விட சொல்ற! போலீஸ்காரனை தேவை இல்லாம சீண்டக் கூடாது.. அதுவும் இவனை பத்தி கொஞ்சம் கேள்வி பட்டிருக்கிறேன்.. ஆள் எதுக்கும் மசியாத டேரரான ஆள்.. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க” என்றவன் அந்த மூவரையும் பார்த்து, “இன்னொரு முறை பொண்ணுங்க கிட்ட பிரச்சனை பண்ணி என் பெயரை கெடுத்தீங்க அன்னைக்கு தான் உங்களுக்கு கடைசி நாள்” என்று மிரட்டினான்.
பிறகு செங்கலால் அடி வாங்கியவனை பார்த்து, “பார்த்துக்கோ” என்றுவிட்டு உள்ளே சென்றான்.
[the_ad id=”6605″]
——————————————————————————————————————————————
தோட்டத்தில் அமர்ந்திருந்த மித்ராணியை தந்தையின் நினைவு வாட்டியது. தன் தந்தை உயிருடன் இருந்திருந்தால் தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா என்று அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
எங்கெங்கோ சுற்றிய மனம் இறுதியாக புகழ்வேந்தனிடமே வந்து நின்றது. அவளது மனதினுள், ‘இவனுடன் எப்படி ஒரே ரூமில் இருப்பது?’ என்ற கேள்வி எழுந்து நின்றது.
‘பேசாம தனியா வேற ரூமில் இருப்போமா?’ என்று அவள் யோசிக்க,
அவளது மனசாட்சி, ‘இவ்ளோ தான் உன் திடமா? அவனைக் கண்டு பயந்து ஓடுறதா?’ என்ற கேள்விகளை எழுப்ப,
‘அதானே! அவனுக்கு பயப்படுறதா? நோ.. நான் ஏன் வேற ரூம் போகணும்? தனி ரூமில் இருந்தால் நாம போட்ட பிளானை எப்படி செயல் படுத்துறது?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள், ‘ஹ்ம்ம்.. கொஞ்ச நாள் அவன் கூடவே இருந்து அவனை படுத்துவோம்.. அப்பறம் தனியா இருக்கணும் னு நினைத்தாலும் அவனை அந்த ரூமை விட்டு துரத்தனுமே தவிர நாம வேற ரூம் போகக் கூடாது’ என்ற முடிவிற்கு வந்தவள் அடுத்து அவனிடம் பேச வேண்டிய சிலதை பற்றி யோசித்த பிறகு எழுந்து சென்றாள்.
அவள் வீட்டிற்குள் நுழைகையில் தனது நான்கு சக்கர வண்டி நிற்பதை பார்த்தவள் மனதினுள், ‘பார் டா! நாம யோசிக்காததை கூட யோசித்து செய்றான்.. ஹ்ம்ம்.. அதான் நம்பர் ஒன் ப்ளேசில் இருக்கிறான்’ என்று புகழ்வேந்தனை பாராட்டியவள், ‘ஆனா நமக்கு மட்டும் வில்லன்’ என்று நினைத்தபோது அவளுள் எரிச்சலும் கோபமும் துளிர்த்தது.
அவன் மீது இருக்கும் கோபத்தையும் மீறி எழும் அவன் மீதான ஈர்ப்பு, தன்னை மீறி தன் மனம் அவனிடம் சாய துடிப்பது, தாயிடம் கடுமையாக பேசி அனுப்பிவிட்டு இங்கே புது இடம் வந்த தனிமை உணர்வு, தந்தையின் நினைவு என்று அல்லாடிய அவளது மனம் எரிச்சலையும் கோபத்தையும் தத்தெடுத்தது.
அதே மனநிலையில் வீட்டினுள்ளே சென்றவள், எதிரே வந்த சதீஷை முறைத்தாள்.
மித்ராணியை கண்டதும் சிறு பயத்துடன் திருதிருவென்று முழித்த சதீஷ் பின், “பாஸ் உங்க லேப்டாப், கார் அண்ட் இன்னும் சில முக்கியமான திங்க்ஸ் எடுத்துட்டு வர சொன்னாங்க.. கொடுத்துட்டு போக வந்தேன்” என்றவன் விட்டால் போதுமென்று அவளது பதிலை எதிர்பார்க்காமல் நகர,
அவள் கோபத்தை அடக்கிய குரலில், “ஓய்!” என்று அழைத்தாள்.
அவளது ‘ஓய்’ என்ற அழைப்பு அவனுக்கு ‘டேய்’ என்று அழைத்தது போல் தோன்ற மனதினுள், ‘பிள்ளையாரப்பா சுனாமியில் சிக்கி சின்னாபின்னாமாகாம காப்பாத்தி விட்டிருப்பா! உனக்கு நூத்தியெட்டு தேங்காய் உடைக்கிறேன்’ என்ற அவசர வேண்டுதலுடன் அவள் முன் போய் நின்றான்.
பார்வையை சுழற்றிய மித்ராணி வேலையாட்கள் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டாலும் கலைவாணியை பார்த்து, “செர்வன்ட்ஸ் எல்லோரும் போயிட்டாங்களா?” என்று வினவினாள்.
அவர், “ரத்னா, ரத்தினம் அண்ணா, செக்குரிட்டி ஆட்கள் தவிர மத்தவங்கலாம் ஆறு மணிக்கு கிளம்பிடுவாங்க” என்றார்.
சதீஷை நோக்கியவள் அவனது இடது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
“ராணி” என்று புகழ்வேந்தனும், “மித்ரா” என்று கலைவாணியும் கண்டிக்கும் குரலில் அழைத்தனர்.
சீற்றத்துடன் புகழ்வேந்தனை நோக்கியவள், “ஏதாவது பேசின உனக்கும் இதே தான்” என்றவள், கலைவாணியை பார்த்து, “இதில் நீங்க தலையிடாதீங்க” என்றாள் கோபம் இல்லா அழுத்தமான குரலில்.
சதீஷ் மனதினுள், ‘ஆத்தி! பாஸ்சையே இப்படி மிரட்டுறாங்க! நம்ம நிலைமை இன்னைக்கு அதோகதி தான் போல! விநாயகா விநாயகர் சதூர்த்தி அன்னைக்கு என் பொண்டாட்டி உன்னை கடலில் கரைக்காம பார்த்துக்கிறேன்.. என்னை கரை சேர்த்து விட்டுரு பா’ என்று வேண்டினான்.
சதீஷின் பக்கம் திரும்பிய மித்ராணி பீதியுடன் நின்றிருந்தவன் கன்னத்தில் மீண்டும் அடித்தாள்.
புகழ்வேந்தன் இறுகிய குரலில், “சதீஷ் நீ கிளம்பு” என்றவன், “ராணிக்காக நான் சாரி கேட்கிறேன்” என்று கூற,
அதிர்ச்சியுடன், “பாஸ்” என்று அழைத்த சதீஷ், “என்ன பாஸ்! நீங்க போய் என்னிடம் சாரி கேட்டுட்டு!” என்றான்.
மித்ராணி கோபத்துடன் புகழ்வேந்தனை பார்த்து, “நீ ஏன் சாரி கேட்கிற? அவன் செய்த தப்புக்கு இந்த அடியே கம்மி” என்றாள்.
அவளை புகழ்வேந்தன் முறைக்க, அதை கண்டுக்கொள்ளதவள் சதீஷ் பக்கம் திரும்பி, “முதல் அடி நீ திருட்டுத்தனமா கல்யாணம் செய்ததுக்கு.. ரெண்டாவது அடி உன் பாஸ் என்னை கட்டாயக் கல்யாணம் செய்ய துணை போனதுக்கு” என்றாள்.
சதீஷ் பரிதாபமாக புகழ்வேந்தனை பார்க்க, முன்பு அவர்கள் இதை பற்றி பேசியது நினைவிற்கு வரவும் புகழ்வேந்தன் இதழோரம் மென்னகை அரும்பியது.
மித்ராணி புகழ்வேந்தனின் மென்னகையை கண்டு அவனை முறைக்க, அவனது மென்னகை சிரிப்பாக விரிந்தது.
மித்ராணி, “இப்போ எதுக்கு டா சிரிக்கிற?” என்று எரிந்து விழுந்தாள்.
அவளது மரியாதையில்லா அழைப்பில் சிறிதும் கோபமின்றி சிரிப்புடன் நின்ற புகழ்வேந்தனை எட்டாவது அதிசயத்தை பார்ப்பது போல் சதீஷ் பார்த்தான்.
புகழ்வேந்தனோ சிரிப்புடனே, “முன்னாடி இதை பற்றி நாங்க பேசி இருக்கிறோம்.. அப்போவே இவனுக்கு உன்னிடமிருந்து அடி உறுதி னு பேசிக்கிட்டோம்”
“அப்போ இப்போ எதுக்கு சாரி கேட்ட?”
“என்ன இருந்தாலும் ஒரு ஆண் மகனான அவனை நீ அடித்………………..”
மித்ராணி கோபத்துடன், “ஒரு ஆண் தப்பு பண்ணா அதை பெண் தட்டி கேட்க கூடாதா? நான் கேட்பேன்”
கலைவாணி, “நாலு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததுக்கு இப்போ அடிக்கிறது உனக்கே கொஞ்சம் அதிகமா தெரியலை?”
“இப்போ தானே இவன் என்னிடம் சிக்கினான்” என்றவள் இப்பொழுதும் சதீஷை முறைக்க, அவன் கன்னத்தில் கைவைத்தபடி இரண்டடி பின்னால் நகர்ந்தான்.
புகழ்வேந்தன் மனதினுள், ‘எப்படி பார்வையிலேயே மிரட்டுறா! அல்லிராணி’ என்று ரசனையுடன் கூறிக் கொண்டான்.
ஆதரவிற்காக புகழ்வேந்தனை பார்த்த சதீஷ், புகழ்வேந்தனின் பார்வையை கண்டு அதிர்ச்சியுடன் மனதினுள், ‘நம்ம பாஸ்-ஆ இது! ரெமோ அவதாரத்தை எப்போ எடுத்தார்?’ என்று யோசிக்க, அவனது மனசாட்சி, ‘அவர் மேடத்திற்காக உன்னிடம் சாரி கேட்கும் போதே தெரியலையா!’ என்று கூற, அவன், ‘அது சரி.. அவங்க டா சொன்னதுக்கு கோபமில்லாம சிரித்ததை பார்த்தும் அவர் நமக்கு சப்போர்ட் பண்ணுவார் னு நினைத்தது நம்ம தப்பு தான்’ என்று கூறிக் கொண்டான்.
கலைவாணி, “புகழ் உன்னை கல்யாணம் செய்ததுக்கு சதீஷை அடிப்பது நியாயமே இல்லை”
மித்ராணி, “அவரவர் செய்ததுக்கு ஏற்ப தண்டனை கிடைக்கும்.. இவன் செய்ததுக்கு இத்துடன் நிறுத்திக்கிட்டேன்” என்றதும் தான் சதீஷ் நிம்மதியாக மூச்சு விட்டான்.
புகழ்வேந்தனை ஓரப்பார்வை பார்த்தபடி கலைவாணியிடம் கிண்டலான குரலில், “உங்க பையன் வாங்கியதை சொல்லலையா?”
அவர் அதிர்ச்சியுடன், “என்..ன?” என்று சிறு திணறலுடன் வினவ,
சதீஷோ உச்சக்கட்ட அதிர்ச்சியுடன், ‘நாம கேட்டது சரியா? நாம நினைப்பது சரி தானா?’ என்று மனதினுள் கேட்டபடி அவளையும் புகழ்வேந்தனையும் மாறி மாறி பார்த்தான்.
அவளது பார்வையோ புகழ்வேந்தனிடம் நிலைத்து இருந்தது.
அவன் கோபம் கொள்வான் என்று இவள் எதிர்பார்க்க, அவனோ இதழோர புன்னகையுடனும் குறும்பு பார்வையுடனும் இவளை பார்த்து, “அடுத்து நடந்ததையும் சொல்லு” என்றான்.
ஒரு நொடி அதிர்ந்தவள் அடுத்து நொடி அவனை கடுமையாக முறைத்தாள்.
அவனோ அவளை ஓரப்பார்வை பார்த்தபடி அன்னையிடம், “உங்க மருமக வெக்கப்படுறா மா.. நானே சொல்றேன்..”
“டேய் வேணாம்”
“எனக்கு வேணுமே” என்று சொன்னவனின் குரல் இயல்பாக இருந்தாலும் பார்வையோ அவள் இதழில் பதிந்தது.
அந்த பார்வைக்கே ஒரு நொடி அவளுள் சிலிர்ப்பு ஓடி மறைய, அந்த உணர்வை மறைத்தபடி அவனை முறைத்தாள்.
அவன் நகைப்புடன் அவளை பார்த்தபடியே, “அவ கையால் கொடுத்தாள் நான் உதட்டால் கொடுத்தேன்” என்றான்.
அருகில் இருந்த சோபாவில் இருந்த குஷனை தூக்கி அவன் மீது அவள் எரிய, அதை சரியாக பிடித்தவன் வாய்விட்டு சிரித்தான். அவனது விளையாட்டில் அவளது மனதின் எரிச்சல் காணமல் போயிருக்க, மனதில் இருந்த கோபத்தையும் மீறி அவனது சிரிப்பை ரசிக்கத் தோன்றியது.
அவனது சிரிப்பு சத்தத்தில் சமையலறையில் இருந்து வெளியே எட்டிப் பார்த்த ரத்னாவின் கண்கள் பணித்தது.
கலைவாணி ஆனந்த கண்ணீருடன் மித்ராணியை நெருங்கி, “தேங்க்ஸ் டா” என்று கூறி அவளது நெற்றியில் முத்தமிட்டு தன் அறைக்கு சென்றார். அவர் சென்றதும் ரத்னாவும் சமையலறையினுள் சென்றார்.
மித்ராணி புருவ முடிச்சிடுடன் புகழ்வேந்தனை பார்க்க, அவன் தோள்களை குலுக்கினான்.
அவள் முறைப்புடன் பார்வையை சுழற்ற அவர்கள் இருவர் மட்டுமே அங்கே இருந்தனர்.
அவன், “நீ என்ன அடிச்சதா சொன்னப்பவே சதீஷ் தெறிச்சு ஓடிட்டான்” என்றான்.
அவள், “உனக்கு வெவஸ்த்தையே இல்லையா?”
“உதட்டால் கொடுத்தேன்னு சொன்னேனே தவிர உதட்டில் கொடுத்தேன் னு சொல்லலையே!” என்று கண்ணில் சிரிப்புடன் கேட்டு கண்ணடிக்க,
அவள் மற்றொரு குஷனை தூக்கி எறிந்தாள்.
பின் பேச்சை மாற்ற, “உன்னை இப்படி தோள் குலுக்காத னு சொன்னேனே!” என்றாள்.
“அப்படி சொன்னதா நியாபகம் இல்லையே!”
“சரி.. இப்படி பண்ணா உனக்கு பதில் சொல்ல தெரியலை னு அர்த்தம் னு சொன்னேன்”
“பதில் சொல்ல தெரியாமல் இல்லை.. ஒன்னு எனக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை னு அர்த்தம் இல்லை என் பதிலை நீ நம்பவோ ஏற்கவோ மாட்ட னு அர்த்தம்”
“இப்போ நீ தோள் குலுக்கியதுக்கு என்ன அர்த்தம்? முதல் காரணமா இரண்டாவது காரணமா?”
“நீ தான் புத்திசாலியாச்சே”
“என்னைத் தான் நீ முட்டாள் ஆக்கிட்டியே!”
“நாம ரூமுக்கு போய் பேசலாம்” என்றவன் அவளது பதிலை எதிர் பார்க்காமல் மாடிப் படிகளில் ஏறவும்,
‘என்ன நினைச்சிட்டு இருக்கிறான் இவன்.. நான் என்ன இவன் வளர்க்கும் நாய் குட்டியா இவன் பின்னாடியே ஓடுறதுக்கு?’ என்று கோபத்துடன் நினைத்தவள் பிடிவாதத்துடன் அங்கேயே நின்றாள்.
மாடி ஏறி திரும்பி பார்த்தவன், “பதில் வேணாமா?” என்று வினவ,
இவள் வீம்புடன், “வேணாம் போ டா” என்றபடி முகத்தை திருப்பிக்கொள்ள,
[the_ad id=”6605″]
அவன் கண்களுக்கு அவள் அடம் பிடிக்கும் சிறு குழந்தையாக தான் தோன்றினாள். வேகமாக கீழே இறங்கி வந்தவன் அவள் முன் நிற்க, அவள் வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.
அவன் மென்னகையுடன் அவள் பக்கம் திரும்பி அவளது நெற்றியில் முட்டி, “ராணிமா.. நம் விஷயம் நமக்குள் தான் இருக்கணும்..” என்றான் கொஞ்சல் கலந்த அழுத்தத்துடன்.
அவனது ‘ராணிமா’ என்ற அழைப்பில் அவள் சிறு அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள். ஏனெனில் அவள் தந்தை அவளை அப்படித் தான் அழைப்பார்.
அவன் புருவம் உயர்த்தி ‘என்ன?’ என்பது போல் பார்க்கவும் சட்டென்று தன்னை மீட்டவள் கோபத்துடன், “தொட்டு பேசுறதோ கொஞ்சி பேசுற வேலையோ வச்சிக்காத” என்று கூறி அவனது பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக மாடி ஏறி அறைக்கு சென்றாள்.
அவன் மென்னகையுடன் தலையை இருபுறம் ஆட்டியபடி சமையலறைக்கு சென்று இருவருக்கும் தேவையான சிற்றூண்டியை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.
இவன் வருவதற்குள் அவள் மனம் இவனை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தது.
‘இவன் கறாரான டெரர் பீஸ்னு தானே கேள்விப்பட்டோம்! மண்டபத்தில் கூட திமிரா தெனாவெட்டா கோபமா தானே பேசினான்! இப்போ என்ன! கோபப்படவே இல்லை! அப்போ அடிச்சப்ப கூட கோபப்படாம…………..’ என்று யோசித்தவள், ‘பதிலுக்கு என்னை அடிச்சு இருந்தால் கூட பரவா இல்லை.. ஆனா.. ராஸ்கல்’ என்று திட்டியவள், ‘இப்போ புதுசா கொஞ்சி வேற பேசுறான்’ என்று நினைத்தாள்.
அவளது மனசாட்சி, ‘அவன் கூட முத்தம் கொடுத்ததோடு அதை மறந்து இருப்பான்.. நீ தான் அதை பத்தியே யோசிச்சிட்டு இருக்கிற’ என்று அவளை வார,
அவள், ‘அவனாவது மறக்கிறதாவது! இப்போ கூட அதை பத்தி தானே பேசினான்’ என்றவள், ‘நீ என்ன அவனுக்கே சப்போர்ட் பண்ற?’ என்று மனசாட்சியையும் திட்டினாள்
அதோ, ‘நான் உண்மையை சொல்றேன்’
‘ஆமா பெரிய உண்மை விளம்பி.. ஓடி போ’ என்று அதை விரட்டியவள் மீண்டும், ‘இவன் கோபப்படலைனா எப்படி இவனை டென்ஷன் பண்ணி டார்ச்சர் பண்றது?’ என்று யோசித்தவள், ‘இன்னைக்கு தானே முதல் நாள்.. பார்த்துக்கலாம்’ என்று கூறிக் கொண்டாள்.
பின், ‘கொஞ்சம் கூட கோபம் வராத அளவுக்கா என் மேல் காதல் இவனுக்கு!’ என்ற கேள்வி எழ அதை புறம் தள்ளினாள்.
அப்பொழுது கதவை தட்டும் ஓசை கேட்டது.
அவள், “கதவு திறந்து தான் இருக்குது” என்றதும் புகழ்வேந்தன் கையில் சிற்றூண்டிகளை ஏந்தியபடி உள்ளே வந்தான்.
அவன் அறையினுள் நுழைந்ததும் அவளுக்கு சிற்றூண்டியை கொடுத்தபடி, “இதை சாப்டுட்டு தெம்பா கேள்வி கேளு” என்றான்.
அவள் அதை வாங்காமல், “என்ன நக்கலா?”
“இல்ல விக்கல் வந்திர கூடாதே னு அக்கறை”
“என்ன?”
“பசில விக்கல் வந்திரக் கூடாதே னு சொன்னேன்”
“எனக்கு பசி இல்லை”
“இப்போ இதை சாப்பிடுறியா இல்லை நான் ஊட்டி விடவா?”
அவள் அமைதியாக இருக்க, அவன், “சாதாரணமாலாம் ஊட்டி விட மாட்டேன்.. உன்னை தொட்டு தூக்கி என் மடியில் உட்கார வைத்து.. லெப்ட் ஹென்டால் உன் இடையை அழுத்தி பிடித்தபடி……………………” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து பேசிக் கொண்டே போக, அவள் அவசரமாக அவன் கையில் இருந்த தட்டை வாங்கி இருந்தாள்.
அவன் சிரிப்பை இதழோரத்தில் மறைத்தபடி தனது சிற்றூண்டியை எடுத்துக் கொண்டு அவள் அருகே சற்று இடைவெளி விட்டு அந்த இருவர் அமரும் சோபாவில் அமர்ந்தான்.
புகழ்வேந்தனின் அறை விசாலமானது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அது ஒற்றை படுக்கை அறை கொண்ட வீடு போல் இருந்தது. அறையினுள் நுழைந்ததும் ஆங்கில எழுத்து ‘T’ தலைகீழாக எழுதியது போன்ற வடிவில் இருந்தது. இடது புறம் சிறு டிபாயும் எதிர் எதிரே இருவர் அமரக் கூடிய இரண்டு சோபாக்களும் சுவற்றில் 60 இன்ச் டிவி இருக்க, வலது புறம் குளிர்சாதன பெட்டியும் சிறு உணவு மேஜையும் அதன் மேல் ஓவனும் இருந்தது. நேரே சற்று தள்ளி நால்வர் படுத்து உருளும் அளவில் கட்டில் இருந்தது. அதைத் தாண்டி கண்ணாடி தடுப்புக்கு அந்த பக்கம் நீண்ட உப்பரிகை(பால்கனி) இருந்தது. உப்பரிகையில் சிறு டிபாயும் குஷனுடன் இரு மர இருக்கைகள் இருந்தது. கட்டிலுக்கு எதிரே அதாவது சோபா இருக்கும் இடத்திற்கு பின் புறம் பெரிய குளியலறையும் ஆடை மாற்றும் அறையும் இருந்தது. குளியலறைக்கு இரண்டு கதவுகள் இருந்தது. ஒன்று ஆடை மாற்றும் அறைக்கு செல்லவும் மற்றொன்று படுக்கை இருந்த இடத்திற்கு செல்லவும் இருந்தது.
எப்பா எவ்வளவு பெரிய விளக்கம்! இப்போ இது ரொம்ப தேவையா னு நீங்க என்னை திட்டுறது தெரியுது.. வாங்க நம்ம வேந்தனும் ராணியும் என்ன செய்றாங்க என்று பார்ப்போம்…………..
அவனது பேச்சில் தன்னுள் எழுந்த சிறு படபடப்பை மறைக்க அவள் அமைதியாக சிற்றூண்டியை உட்கொண்டாள். அவள் உண்டு முடித்ததும் தட்டை வாங்கி வைத்தவன் அவள் அருந்த தண்ணீர் கொடுத்தான். அவள் அதை அமைதியாக வாங்கி அருந்தினாள். தனக்காக பார்த்துப் பார்த்து செய்யும் அவனது கவனிப்பு அவளது மனதை வருடியது.
அவன், “நீ முட்டாள் ஆகிட கூடாது னு தான் இப்படி செயல்பட்டேன்” என்று கூற,
சட்டென்று மனதின் இதம் தடைபட, சிறு கோபத்துடனும் நக்கலுடனும், “எப்படி எப்படி! என் சொந்த தாய் மாமா குடும்பத்திடம் நான் முட்டாள் ஆகிட கூடாது னு மூன்றாம் மனிதனான நீ என்னை முட்டாள் ஆக்கி இருக்கிற!”
“நான் உனக்கு மூன்றாம் மனிதனா?”
“ஆமா”
அவளை சற்று நெருங்கி ஒற்றை விரலால் அவளது நாடியை நிமிர்த்தி தன் கண்களை நோக்கச் செய்தவன், “இப்பவும்.. அதாவது உனக்கு தாலி கட்டிய பிறகும் நான் உனக்கு மூன்றாம் மனிதன் தானா?” என்று ஆழ்ந்த பார்வையுடன் ஆழ்ந்த குரலில் வினவ,
அவனது பார்வையை விட அவனது அந்த குரல் வீம்புக்கு கூட ‘ஆமா நீ மூன்றாவது மனிதன் தான்’ என்று சொல்ல விடாமல் அவளை தடுக்க, இயலாமை தந்த கோபத்துடன் அவனது கையை தட்டிவிட்டு முகத்தை திருப்பியவள், “நீ எனக்கு முக்கியமானவனும் இல்லை” என்றாள்.
“இன்றைக்கு வேணா முக்கியமானவனா இல்லாமல் இருக்கலாம் ஆனா கூடிய சீக்கிரம் நான் மட்டுமே உனக்கு எல்லாமுமா இருப்பேன்”
அவள் அலட்சியத்துடன் உதட்டை சுளிக்க, அவன் அதை ரசித்தபடி, “நீ என்னை அடிச்சேன் னு சொல்லியும் உன்னை திட்டாமல் அம்மா ஏன் உனக்கு முத்தம் கொடுத்து தேங்க்ஸ் சொன்னாங்க னு தெரிய வேணாமா?”
அவள் கடுப்பான குரலில், “ஹம்.. அவங்களால முடியாததை நான் செய்தேன் னு பாராட்டி பரிசு கொடுத்திருப்பாங்க”
“அதாவது?”
“நீ தான் அதி புத்திசாலி ஆச்சே!” என்று அவள் நக்கல் குரலில் கூற,
அவன் மென்னகையுடன், “அவங்க பரிசு கொடுத்தது சரி தான் ஆனா காரணம் தான் வேற.. அவங்க மகனின் சிரிப்பை மீட்டெடுத்த தேவதைக்கு பரிசு கொடுத்தாங்க”
அவள் யோசனையுடன் அவனை பார்க்க, அவன், “என்ன?”
“அப்பவும் இதை தான் சொன்ன.. நீ சிரிப்பை தொலைக்கிற அளவுக்கு அப்படி என்ன நடந்தது உன் வாழ்க்கையில்?”
சட்டென்று இலகுத்தன்மை நீங்கி அவனது உடலும் முகவும் இறுகவும், ஆதரவாக அவனது கையைப் பற்ற துடித்த மனதை அடக்கியபடி அமைதியாக அவன் முகத்தை நோக்கினாள்.
“இந்த நாளின் இனிமையை கெடுத்துக்க நான் விரும்பலை..” என்று சுவற்றை பார்த்து சொன்னவன் பின் அவள் முகம் பார்த்து, “ஆனா ஒன்னே ஒன்னை மட்டும் சொல்றேன்.. எந்த நிமிஷமும் நான் உனக்கு உண்மையா மட்டுமே இருப்பேன்.. அதனால் தான் இந்த விளக்கம்.. நீ நினைப்பது போல் நான் உன் மேல் கொண்ட நேசத்தால் மட்டும் இந்த கல்யாணம் நடக்கலை.. இதில் கிருபாகரனை பழிவாங்கும் செயலும் அடங்கி இருக்கிறது.. உன்னோட போட்டோவை பார்த்ததும் என்னை அறியாமல் நீ என்னுள் நுழைந்து என் மனதை ஆக்கிரமிச்சிட்ட.. ஆனா என் நேசத்தை நானே உன் கழுத்தில் தாலி கட்டிய நொடியில் இருந்து தான் உணர ஆரம்பித்தேன்.. காலையில் உன்னை காணாமல் என் இதயம் துடித்த துடிப்பில் நீ என்னுள் நீக்கமற நுழைந்ததை முழுதாக உணர்ந்தேன்” என்றான்.
அவனது விழிகளிலும் குரலிலும் வழிந்த காதலில் சில நொடிகள் கட்டுண்டு இருந்தவள் பின் தன் மனதை அடக்கும் பொருட்டு, “மாமா என்ன பண்ணார்? என்ன பிரச்சனை?” என்று வினவினாள்.
அவளது கேள்வியில் சட்டென்று மாயவலையில் இருந்து மீண்டவன் அவளது கேள்விக்கு பதில் கூறாமல் எழுந்து சென்று மேஜை மீது வைத்திருந்த பத்திரத்தை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.
அதை படித்து முடித்தவள் சிறு அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, அவன், “நீ யூகித்தது போல் சொத்து விஷயத்தில் அவன் உங்களை ஏமாத்தி தான் இருக்கிறான்.. மாமா அவனிடம் வாங்கிய பணத்தை கார்மென்ட் ஆரம்பித்த மூன்று வருடத்திலேயே கொடுத்து செட்டில் பண்ணிட்டாங்க.. பிஸ்னெஸ் பத்தி அத்தை கிட்ட பேசியது இல்லை என்பதால் இதை சொல்லாம விட்டிருக்கலாம்.. கூடவே அவனோட பணத்தாசையை பத்தி தெரிந்தும் அத்தைக்காக அவனை பத்தி அவங்களிடம் சொல்லாம விட்டிருக்கலாம்.. அதை அவன் சாதகமா பயன்படுத்திக்கிட்டான்.. மாமா மரண படுக்கையில் இருந்தப்ப கூட உங்களுக்காக யோசித்து சொத்தையெல்லாம் உன் பெயரில் எழுதிட்டாங்க.. அவன் போலியான கார்டியன் பத்திரமும் பவர் ஆஃப் அட்டார்னி பத்திரமும் தயாரித்து உங்க சொத்தையெல்லாம் இன்னைய வரை அவனே டீல் பண்ணிட்டு வரான்”
கிருபாகரன் பற்றி முன்பே சந்தேகம் இருந்ததால், அவர் மொத்தமாக ஏமாற்றிய செய்தி சிறு அதிர்ச்சியை மட்டுமே தந்தது ஆனால் தந்தையை பற்றிய பேச்சு அவளுள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவளது மனதின் தவிப்பை அவளது கண்களில் படித்தவன் அவள் அருகே அமர்ந்து அவளை தோளோடு அணைத்துக் கொண்டான். அவள் தன்னையும் அறியாமல் அவனது கையை இறுக்கமாக பற்ற, அவன் அவளது முகத்தை தனது தோளில் சாய்ந்து அவள் தலை மீது தனது கன்னத்தை பதித்துக் கொண்டான்.
அவன் மெல்லிய குரலில், “மாமா எங்கேயும் போகலை.. மாமா எப்போதும் உன்னோடவே தான் இருக்கிறாங்க” என்றான்.
அவள் தெளிவது போல் தெரியவில்லை என்றதும் அவளது முகத்தை இரு கரங்களிலும் ஏந்தியவன், “என்ன டா?” என்று கனிவான குரலில் வினவினான்.
அப்பொழுது தான் அவனிடம் ஆதரவை நாடியதை உணர்ந்தவள் சட்டென்று அவனிடமிருந்து விலகி எழுந்து நின்றாள்.
தனது செயலில் தன் மீதே அவள் கோபம் கொண்டாள்.
அவன் ஏதோ பேச வர, கையை உயர்த்தி அவனை தடுத்தவள் அவன் முகம் பார்க்காமல், “என்னை தனியா விடு” என்றாள்.
அவளை தன் நெஞ்சின் மீது சாய்த்து, ‘நான் இருக்கிறேன் ராணிமா’ என்று கூறி அவளை இறுக்கமாக அணைக்க துடித்த மனதை அடக்கியபடி அவன் அமைதியாக அங்கேயே நிற்க,
அவள் அவனை பார்த்து, “ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்ற? என் கண் முன்னாடி நிக்காத.. கொஞ்சம் நேரம் என்னை தனியா நிம்மதியா இருக்க விடு” என்று கத்தினாள்.
[the_ad id=”6605″]
ஒரே ஒரு நொடி கண்ணில் சிறு வலியுடன் அவளை நோக்கியவன் பின் உணர்ச்சிகளை துடைத்த பார்வையுடன், “உன்னோட பாஸ்போர்ட், ஆதார் கார்ட், பேங்க் பாஸ் புக்ஸ், செக் புக்ஸ், லேப்டாப், மொபைல் சார்ஜர், இயர் போன், நீ டிஸைன் பண்ண பேப்பர்ஸ், இன்னும் சில ஆபீசியல் பைல்ஸ் எல்லாம் அந்த சூட்கேஸில் இருக்குது” என்று உணர்ச்சியற்ற குரலில் கூறிவிட்டு வெளியேறினான்.
ஒரே ஒரு நொடி மட்டுமே அவன் கண்ணில் தெரிந்த அந்த வலி அவளைத் தாக்க அவள் பொத்தென்று சோபாவில் அமர்ந்தாள்.
‘ப்ச்.. ஏன் என் மனம் இப்படி தவிக்குது? அவன் கண்ணில் தெரிந்த வலியை கண்டு எனக்கும் வலிக்குதே! ஒரே நாளில் இது எப்படி? ஒரு நாள் கூட முழுசா முடியலை! இவனது அக்கறையும் அன்பும் அப்பாவை நினைவுபடுத்துவதால் இந்த தாக்கமா? இவன் அப்பாவை போல் கூப்பிட்டதாலும், அப்பாவின் நினைவுகள் தந்த தாக்கத்தில் அப்பாவுடன் இவனை ஒப்பிட்டு………….’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளது மனம், ‘இல்லையே அதற்கு முன்பே அவன் குரலில் தெரிந்த நேசம் என்னை அசைத்து விட்டதே!’ என்று குழம்பினாள்.
அவனது கவனிப்பிலும் அன்பிலும் அவள் மனதினுள் தந்தையின் நினைவு எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவள் கேட்காமலேயே சொல்ல போனால் அவளே மறந்தவற்றை கூட அவன் அவளுக்காக யோசித்து செயல் படுகிற விதத்தில் அவளது தந்தையை நினைவு படுத்தினான்.
சிறு வயதில் இருந்தே தனக்கு வேண்டியதை வாய் திறந்து அவள் கேளாத போதும் அவளது எண்ணம் புரிந்து தேவை உணர்ந்து அவளுக்கு வேண்டியதை அவளது தந்தை செய்வார். கமலாவிற்கு மகள் மீது பாசம் அதிகம் தான் என்றாலும் மித்ராணியின் மௌனத்திற்கு கூட சரியாய் அர்த்தம் உணர்பவர் அவளது தந்தையே. அதனாலேயே தந்தையின் மறைவு அவளை வெகுவாக வாட்டியது. அவளது தேவையை அவள் யோசிக்கும் முன்பே அதை அவளது தந்தை நிறைவேற்றி இருப்பார். தந்தை இருந்தவரை தனக்கு என்ன தேவை என்று யோசித்துக் கூட பார்த்திறாதவளின் நிலை அவரது மறைவிற்கு பின் மாறியது. தன்னைத் தானே கவனித்துக்கொள்ள தொடங்கியவள் அமைதியையும் இறுக்கத்தையும் கேடயமாக பயன் படுத்தினாள்.
‘பிஸ்னெஸ் சர்க்கிளில் சிம்ம சொப்பனமாக இருப்பவன் என் கோபத்தையும் சுடு சொற்களையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அன்பை பொழிந்து ஒரே நாளில் என் மனதில் என்னை மீறி தடம் பதித்து விட்டானா?’ என்று தன்னை தானே கேட்டுக் கொண்டவளுக்கு தெரியவில்லை அவன் அவளது மனதில் தடம் மட்டும் பதிக்கவில்லை அவளது ஆழ்மனதினுள் நுழைந்து சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டான் என்று.
‘ப்ச்.. என் மனம் ஏன் இப்படி ஒரே நாளில் ஒருநிலையில் இல்லாமல் தவிக்குது?’ என்று யோசித்தவளின் மனம் ‘ஏன் டா நீ நல்ல விதமாக எனக்கு அறிமுகம் ஆகலை?’ என்று அரற்றியது.
பின், “எனக்கு மட்டும் ஏன் டா வில்லனா அறிமுகமான?” என்று வாய்விட்டே முணுமுணுத்தாள்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥