மித்ராணியும் நக்கலாக, “மனோஜ் கொலை பத்தி விசாரிக்க கூப்பிட்டீங்க னு நினைச்சேன்.. எங்க தெய்வீக காதலை பத்தி தெரிஞ்சுக்கத் தான் கூப்பிட்டீங்கனும், ACP சார் அவ்ளோ ப்ரீயா இருக்கிறீங்கனும் எனக்குத் தெரியாம போச்சே!”
“அதான் இப்போ தெரிஞ்சுக்கிட்டீங்களே! சொல்லுங்க உங்க காதல் கதையை”
புகழ்வேந்தனை மனதினுள் நினைத்ததும் அவள் கண்ணில் காதல் தெரிந்தது.
மித்ராணி கண்ணிலும் குரலிலும் காதலுடன் பேச ஆரம்பித்தாள்.
“எங்க காதல் வித்தியாசமானது.. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி போனில் நாங்க பேசியது கிடையாது.. நான் பிரெண்ட்ஸ் கூட ரெஸ்டாரென்ட் போனப்ப தான் முதல் முறையா வேந்தனை பார்த்தேன்.. அவர் அன்னைக்கு ஒரு பிஸ்னெஸ் மீட்-காக வந்திருந்தார்.. பார்த்ததும் அவரோட கம்பீரம் என்னை அறியாம என் மனசில் பதிஞ்சிருச்சு.. அவர் அன்னைக்கு என்னை பார்க்கவே இல்லை னு நான் நினைத்திருக்க அவர் என்னைப் பார்த்திருக்கார் என்றும் அவருக்கும் பார்த்ததும் என்னை பிடிச்சிருச்சுனும் பின்னாடி தான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அப்பறம் மூணு முறை வெவ்வேறு இடங்களில் பார்த்துகிட்டாலும் நாங்க பேசினது இல்லை.. ஆனா கண்ணால் மற்றவர் மனதை தீண்டினோம்.. வீட்டில் கல்யாணம் பேசினப்ப தான் எனக்கே என் மனம் புரிந்தது.. அப்பறம் நிவேதா கிட்ட சொல்லி அவ ஹஸ்பண்டு மூலமா வேந்தனை மீட் பண்ணி என் காதலை சொன்னேன்.. அவரும் அவர் காதலை சொன்னார்.. அப்பறம் நடந்தது உங்களுக்கே தெரியுமே”
“ராகுல் வீட்டில் நீங்களும் மனோஜும் காதலிக்கிறதா சொல்லி தான் முதலில் பேசிய மனோஜ் ரோஷினி கல்யாண பேச்சை நிறுத்தி இருக்காங்க.. இதுக்கும் ஒரு கதையை சொல்லிடுங்க”
மித்ராணி முறைப்புடன், “ஏன் சார்! நீங்க சொல்றபடியே வச்சிக்கிட்டாலும் என்னால் தனியா ஒரு வீட்டில் இருக்க முடியாது? வேந்தன் கூட ஏன் இருக்கிறேன்”
“வேந்தன் கூடவே இருந்து அவரை பழி வாங்க அவர் வீட்டுலேயே இருக்கிறீங்க”
“நீங்களும் உங்க கற்பனையும்!” என்று எரிச்சலுடன் கூறியவள் எரிச்சலுடனே தொடர்ந்தாள், “முதலில் மனோஜ் ரோஷினி கல்யாணம் பேசினப்ப பிரசாத்துக்கும் எனக்கும் கல்யாணம் பேசினாங்க.. அப்பறம் தான் மனோஜுக்கும் எனக்கும் கல்யாணம் பேசினாங்க.. ராகுல் வீட்டில் மனோஜ் என்னை காதலிக்கிறதா சொன்னாங்களா இல்லை நானும் மனோஜும் காதலிக்கிறதா சொன்னாங்களா னு தெளிவா கேளுங்க” என்றவள் அவனை நேர்கொண்ட பார்வையுடன் பார்த்தபடி அழுத்தமான குரலில், “நான் என் வேந்தனை தான் காதலிக்கிறேன்.. அண்ட் மனோஜை நான் கொல்லலை.. நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்.. முடிந்தால் ரெண்டுக்கும் எதிரா ஆதாரம் கொண்டு வாங்க” என்று சவாலிடும் குரலில் முடித்தாள்.
“ஆல்ரைட்.. வெயிட் பண்ணுங்க” என்றபடி அவன் எழ,
அவள், “எவ்ளோ நேரம் வெயிட் பண்ணனும்?”
“சொல்றேன்” என்றபடி வெளியேறியவன் புகழ்வேந்தன் இருக்கும் அறைக்கு சென்றான்.
புகழ்வேந்தன், ‘என்ன?’ என்பது போல் பார்க்க,
வெற்றிவேல், “உங்க காதல் கதையை சொல்லுங்க.. உங்க மனைவியை முதலில் எங்கே பார்த்தீங்க?”
“ராணி.. என்னோட அல்லிராணி!” என்று கண்களில் காதலுடனும் மென்மையான குரலுடனும் ஆரம்பித்தவன் மித்ராணி கூறியதை அப்படியே கூறினான்.
‘உண்மையை தான் சொல்றாங்களா இல்லை வீட்டில் பிளான் பண்ணி வந்திருக்காங்களா?’ என்று மனதினுள் யோசித்த வெற்றிவேல் அடுத்து கல்யாணத்தன்னைக்கு நடந்ததாக மித்ராணியிடம் கூறியதை கூறி விளக்கம் கேட்டான். இதற்கும் மித்ராணி கூறியதையே புகழ்வேந்தன் கூறினான்.
வெற்றிவேல், “நீங்க எதையும் பிளான் பண்ணி செய்ற மிகச் சிறந்த பிஸ்னெஸ் மேன் தான்” என்று கூறிவிட்டு வெளியேறினான்.
அடுத்து வெற்றிவேல் கல்யாண் இருந்த அறைக்கு சென்றான்.
இவனை பார்த்ததும் கல்யாண் கண்ணில் சிறு பதற்றம் வந்தது.
வெற்றிவேல், “என்ன மிஸ்டர் கல்யாண்! எதுக்கு இவ்ளோ பயம்?”
“நிஜமாவே நான் எதுவும் செய்யலை சார்.. ஒரே ஒரு முறை என் ஆளை அனுப்பி அவனோட ப்ராடக்ட் கோடிங் எடுத்துட்டு வரப் பார்த்தேன்.. ஆனா என் ஆளு பிரசாத் கிட்ட மாட்டிட்டான்.. பிரசாத் அவனை அடி பின்னிட்டான்.. என் ஆளை அந்த நிலையில் பார்த்த பிறகு அவன்க பக்கமே நான் போகலை சார்.. பத்து நாளா நான் சென்னையிலேயே இல்லை சார்.. நேத்து மதியம் தான் வந்தேன்” என்று அவனாக வாக்குமூலம் கொடுத்தான்.
“எதுக்கு பயம் னு தானே கேட்டேன்”
“அது.. போலீஸ்.. விசாரணை.. அதான் சார் பயம்”
“ஒரு கம்பெனி முதலாளி இவ்ளோ பயப்படுறது நம்புற மாதிரி இல்லையே!”
“போலீஸ் னா கொஞ்சம் பயம் சார்.. அதுவும் உங்களை பார்த்து வந்த பயம் தான் சார்.. மூணு வருஷத்துக்கு முன்னாடி.. ஒரு பொண்ணு கிட்ட மிஸ்பிஹேவ் பண்ண ஒருத்தனை நீங்க அடிச்சதை பார்த்ததில் இருந்து தான் இந்த பயம் சார்”
“இவ்ளோ பயம் இருக்கிறப்ப தப்பு செய்யக் கூடாதே”
“நான் தான் சொன்னேனே சார்.. நிஜமாவே நான் எதுவும் செய்யலை.. சத்தியமா நான் எதுவும் செய்யலை சார்.. என்னை நம்புங்க சார்”
“மனோஜ் கம்பெனி கோடிங் திருட ட்ரை பண்ணது தப்பில்லையா?”
“ட்ரை தானே சார் பண்ணேன்! இனி அது கூட செய்யவே மாட்டேன்.. ப்ளீஸ் சார் என்னை விட்டுருங்க.. நான் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு இருக்கிறேன்.. நான் உண்டு என் வேலை உண்டு தான் சார் இருப்பேன்.. அந்த கோடிங் ஐடியா கூட என் பி.ஏ தந்த ஐடியா தான்”
“ஒரு வாரம் ஊரில் இல்லை னு சொன்னீங்களே! எங்கே போயிருந்தீங்க?”
“ஹனிமூனுக்கு குலுமனாலி போயிருந்தேன் சார்”
“எப்போ கல்யாணம் ஆச்சு?”
“எட்டு மாசம் ஆச்சு சார்”
வெற்றிவேல் பார்த்த பார்வையில் அவன், “என்னோட அம்மாக்கு உடம்பு சரி இல்லை னு அவசரமா கல்யாணம் பண்ணேன் சார்.. அப்போ அம்மா சீரியஸ்ஸா இருந்தாங்க.. கல்யாணம் ஆகி ஒரு வாரத்தில் இறந்துட்டாங்க.. அதில் மனசு சரி இல்லாம பிஸ்னெஸ் டௌன் ஆகிருச்சு.. அதை சரி பண்ணத் தான் அந்த கோடிங் ஐடியா என் பி.ஏ கொடுத்தான்..”
“இந்த ட்ரிப் எப்போ பிளான் பண்ணீங்க?”
“ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே என் வைப் தான் ஏற்பாடு பண்ணா.. என் பர்த்டேக்கு சர்ப்ரைஸ்ஸா பண்ணி இருந்தா”
“சரி வெயிட் பண்ணுங்க” என்று கூறி வெளியேறியவன் தர்மராஜ் இருக்கும் அறைக்குச் சென்றான்.
வெற்றிவேல் உள்ளே சென்று தர்மராஜ் எதிரில் அமர்ந்ததும் தெனாவெட்டாக அமர்ந்திருந்த தர்மாஜ், “தேவை இல்லாம என்னை கூப்பிட்டு என் நேரத்தை ஏன் சார் வேஸ்ட் பண்றீங்க?”
“இந்த நேரத்தில் அப்படி என்ன வெட்டி முறிக்கிறதா இருந்தீங்க?”
“அது உங்களுக்கு தேவை இல்லாதது”
“எனக்கு எது தேவை தேவை இல்லை னு நான் முடிவு பண்ணிக்கிறேன்.. மனோஜை எங்கே எப்படி கொலை செஞ்சீங்க னு சொல்லுங்க”
“நான் தான் என் நேரத்தை…………..”
மேஜை மீது ஓங்கி அடித்த வெற்றிவேல், “கேட்ட கேள்விக்கு பதில்” என்று குரலை உயர்த்திக் கூற,
ஒரு நொடி அசைவற்று இருந்த தர்மராஜில் உடலில் இவ்வளவு நேரம் இருந்த தெனாவெட்டு காணாமல் போய் சிறு தளர்வு தெரிந்தது.
தர்மராஜ் வெற்றிவேல் முகத்தை பார்த்தபடி அமைதியான குரலில், “நான் எதுவும் செய்யலை சார்.. அந்த புகழ்வேந்தன் தான் செய்திருப்பான்.. மனோஜ் கல்யாணம் செய்ய இருந்த பொண்ணை கல்யாணத்தன்னைக்கு கடைசி நேரத்தில் அந்த புகழ் கல்யாணம் செய்தான்.. கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி கூட மனோஜ் காரில் போனப்ப அக்சிடென்ட் நடந்தது.. ரிசென்ட்டா மனோஜ் பிஸ்னெஸ் எல்லாமே கொலாப்ஸ் ஆச்சு.. எல்லாமே அந்த புகழ்வேந்தன் தான்” என்று முடித்தபோது அவனது குரல் சற்று உயர்ந்து இருந்தது.
“மனோஜ் கார் அக்சிடென்ட் ஆச்சா? உங்களுக்கு எப்படித் தெரியும்?”
அரை நொடி அதிர்ந்தவன் சட்டென்று முகத்தை இயல்பாக்கி, “அப்போ.. அந்த அக்சிடென்ட் நடந்தப்ப நான் அங்கே இருந்தேன்.. ஐ மீன் நான் என் ஆபீஸ் போற வழியில் பார்த்தேன்”
“என்னைக்கு?”
“அதெல்லாம் நியாபகம் இல்லை சார்”
“சரி எப்படி கொலை செய்தீங்க னு சொல்லலையே?”
“சார்.. அந்த புகழ்……………”
“கொலையையும் பண்ணிட்டு தன்னோட இடத்திலேயே டெட் பாடியை போட அவர் என்ன லூசா?”
“உங்களை ஏமாத்த அப்…………….”
“கொலை செய்தது மிஸ்டர் புகழ்வேந்தன் இல்லை.. அவரை விட உங்களுக்கு தான் மோடிவ் அதிகம்.. புகழ்வேந்தன் எப்பவோ நம்பர் ஒன் இடத்திற்கு வந்துட்டார்.. நம்பர் ஒன் இடத்துக்கு வந்த பிறகு அவர் கீழே இருக்கும் ஆளை கொன்னு அவருக்கு எதுவும் ஆக போறது இல்லை.. பட் உங்களுக்கு மனோஜ் மேல் தனி பகை இருக்கிறது.. அவங்க கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டில் எல்லாம் ஏதாவது பிரச்சனையை கிளப்பி இருக்கிறீங்க.. கடைசி மனோஜை கொலையே பண்ணிட்டீங்க…………….”
“சார்.. இல்லை சார்.. சத்தியமா இல்லை.. நான் கொலைலாம் பண்ணலை”
“வேற என்ன பண்ணீங்க?”
“வேற..” என்று சிறிது திணறி, “நான் எதுவுமே பண்ணலை சார்.. என்னை நம்புங்க சார்”
“ஒண்ணுமே பண்ணலைனா குரல் ஏன் திணறுது? தேய்யுது?”
“அது.. டென்ஷனில் அப்படி”
“தப்பு செய்யலைனா எதுக்கு டென்ஷன்?”
“தப்பு செய்யலை தான்.. ஆனா நீங்க நான் சொல்றதை நம்ப மாட்டிக்கிறீங்களே! அதான் கொஞ்சம் டென்ஷன்” என்றபோது அவன் குரல் இயல்பிற்கு திரும்பி இருந்தது.
“ரெண்டு நாள் முன்னாடி ஈவ்னிங் எங்க இருந்தீங்க?”
“ஆபீஸ்ஸில் தான் சார்”
“எத்தனை மணிக்கு வீட்டுக்கு கிளம்புனீங்க?”
“யூசுவலா ஏழு ஏழரைக்கு கிளம்புவேன் சார்”
“அன்னைக்கு எத்தனை மணிக்கு கிளம்பினீங்க?”
“அன்னைக்கும் அப்படி தான் சார் கிளம்பி இருப்பேன்.. எக்ஸாக்ட் டைம் நியாபகம் இல்லை”
“ஓகே வெயிட் பண்ணுங்க” என்று கூறி வெளியேறியவன் தனது அறைக்குச் சென்றான்.
வெற்றிவேல் சென்றதும் சந்தோஷும் அர்ஜுனும் அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே சென்றனர்.
அர்ஜுன், “இங்கே வரதுக்கு முன்னாடியே பேசி வச்சி புகழ்வேந்தனும் மித்ராணியும் நல்ல கதை சொல்றாங்க சார்.. எனக்கு என்னவோ மித்ராணி மேல டவுட்டா தான் இருக்குது.. மித்ராணியே போனில் திட்டியதா தான் சொன்னாங்க.. மனோஜ் மித்ராணியை போய் பார்த்து இருக்கலாம்.. அப்போ நடந்த வாக்குவாதத்தில் எப்படியோ மனோஜ் இறந்து இருக்கணும்.. மனைவியைக் காப்பாற்ற புகழ்வேந்தன் ப்ளே பண்றார்”
சந்தோஷ், “தர்மராஜ் மேலயும் டவுட் இருக்குது சார்.. அவனிடம் என்னவோ சரி இல்லை”
வெற்றிவேல், “கல்யாண்?”
“கல்யாண் பயந்த சுபாவமா தெரியுது மத்தபடி கொலை செய்திருக்க வாய்ப்பில்லை னு தான் நினைக்கிறேன் சார்” என்று சந்தோஷ் கூற,
“எனக்கும் அப்படி தான் சார் தோணுது” என்று அர்ஜுனும் கூறினான்.
வெற்றிவேல், “பயந்தது போல் நடித்து எஸ்கேப் ஆகலாமே! “ஹ்ம்ம்.. இன்னும் பிரசாத் கிருபாகரனை விசாரிக்கலை.. பார்க்கலாம்”
அர்ஜுன், “இவங்க நாலு பேருமே இல்லை னு சொல்றீங்களா சார்?”
வெற்றிவேல் மென்னகையுடன், “கிருபாகரன் வீட்டுக்கு போய் விசாரிச்சிட்டு சொல்றேன்” என்றவன் அர்ஜுனை பார்த்து, “இவங்க சொன்னதை கிராஸ் செக் பண்ணு.. நீயே போகாத வேற யாரையாச்சும் அனுப்பு.. நானும் சந்தோஷும் கிருபாகரன் வீட்டுக்கு போறோம்.. தர்மராஜ் சொன்ன அக்சிடென்ட் பத்தி விசாரிச்சு சொல்றேன்.. அதை பத்தி உடனே நீ இன்பர்மேஷன் கலெக்ட் பண்றது போல் இருக்கும்” என்றபடி எழுந்தான்.
“ஓகே சார்” என்றபடி அர்ஜுன் வெளியேற, வெற்றிவேலும் சந்தோஷும் கிருபாகரன் வீட்டிற்குச் சென்றனர்.
இவர்கள் கிருபாகரன் வீட்டிற்கு சென்றபோது மனோஜிற்கான சடங்குகள் முடிந்து இறப்பிற்கு வந்தவர்கள் கிளம்பி இருந்தனர்.
பெற்றோர் அறையில் அன்னையை கையை பற்றியபடி பிரசாத் சமாதானம் செய்துக் கொண்டிருக்க அவனது சமாதானம் எதுவும் மல்லிகாவின் மூளையை எட்டவும் இல்லை கண்களில் இருந்து வடியும் கண்ணீரும் நிற்கவில்லை. கிருபாகரனும் இவர்களை பார்த்தபடி ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார்.
மேற்பார்வையாளர் கிருபாகரன் அறைக்கு இண்டர்காமில் அழைத்து வெற்றிவேல் வந்திருப்பதை கூற, அவர் தோய்ந்த குரலில், “எதிர்பார்த்தது தான்.. எப்படியும் உங்களை எல்லாம் விசாரிக்கணும் னு சொல்லுவார்.. அதுக்கு அப்பறம் நாங்க வரோம் னு சொல்லு”
“சரி சார்” என்றதும் அழைப்பைத் துண்டித்தார்.
வெற்றிவேல் மேற்பார்வையாளரை விசாரிக்க, சந்தோஷ் வேலையாட்களை தனித் தனியாக விசாரித்தான்.
அறையினுள் கிருபாகரன் பொதுவாக, “போலீஸ் வந்திருக்குது” என்றார்.
பிரசாத், “கொலைகாரனை சும்மா விடக் கூடாது.. சேது கிட்ட சொன்னீங்களா இல்லையா? எண்ணத்தை கிழிச்சிட்டு இருக்கான்க? கொலைகாரன் போலீஸ் கையில் சிக்குறதுக்கு முன்னாடி நாம கண்டு பிடிக்கணும்.. அவனுக்கு சாவு என் கையில் தான்” என்ற அடுத்த நொடி அவன் கன்னத்தில் அரை விழுந்து இருந்தது.
பிரசாத் அதிர்ச்சியுடன் அடித்த அன்னையை பார்க்க,
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மல்லிகா கோபத்துடன், “அவன் தான் என்னை விட்டு போய்ட்டான்.. நீயும் ஏன் டா?”
பிரசாத் கோபத்துடன் பேச வர, மல்லிகா கோப விழிகளுடன், “மனோஜை கொன்னவனை சும்மா விடாத ஆனா அவனை நீ கொல்லக் கூடாது.. சட்டத்தின் முன் ஆதாரத்துடன் நிறுத்து.. எனக்கு நீயாவது வேணும்” என்று கலங்கிய குரலில் முடித்தவர் பின் கையை நீட்டி தீர்க்கமான குரலில், “மனோஜை கொன்னவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன்னும் அவனை நீ எதுவும் செய்ய மாட்டனும் சத்தியம் பண்ணிக் கொடு”
“அம்மா…..”
“சத்தியம் பண்ணு”
அவர் கை மீது தன் கையை வைத்தவன், “மனோஜை கொன்னவன் உயிர் என்னால் போகாது.. கண்டிப்பா அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பேன்” என்றான்.
மல்லிகா கிருபாகரனை பார்த்து, “நீங்க ஏன் அமைதியா இருக்கிறீங்க?”
“மனோஜை கொன்னது நான் தான்”
“என்ன சொல்றீங்க?” என்று மல்லிகா அதிர்ச்சியுடன் வினவ, பிரசாத் அவரை யோசனையுடன் பார்த்தான்.