கிருபாகரன், “ஆமா நான் தான் என் மகனை கொன்னுட்டேன்.. நான் செய்த பாவங்கள் தான் என் மகனை காவு வாங்கிருச்சு..” என்றார் கலங்கிய குரலில். அவரது கண்கள் கூட சிறிது கலங்கியது.
பதில் சொல்வதறியாது மல்லிகா அவரைப் பார்க்க, பிரசாத்தும் அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது மீண்டும் இண்டர்காம் அலறியது. இந்த முறை எடுத்து பேசிய பிரசாத், “நம்மளை விசாரிக்கணுமாம்” என்றான்.
மூவரும் வீட்டு கூடத்திற்கு சென்றனர்.
வெற்றிவேல் முதலில் மல்லிகாவிடம் விசாரணையை ஆரம்பித்தான். சந்தோஷ் கிருபாகரன் மற்றும் பிரசாத்தை கவனித்துக் கொண்டிருந்தான்.
“மிசஸ் கிருபாகரன் மனோஜ் மித்ராணி போன கார் என்னைக்கு அக்சிடென்ட் ஆச்சு னு நியாபகம் இருக்குதா? அன்னைக்கு தான் நீங்க முகூர்த்த புடவை வாங்க போனீங்க னு கதிரேசன் சொன்னார்.. எந்த கடைக்கு போனீங்க?”
பிரசாத் கஷ்டப்பட்டு பதற்றத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தான்.
“அது” என்று யோசித்த மல்லிகா தேதியையும் கடையின் பெயரையும் சொன்னதும் வெற்றிவேல் சந்தோஷைப் பார்க்க, அவன் சிறு தலை அசைப்புடன் நகர்ந்தான்.
சந்தோஷ் அர்ஜுனை அழைத்து அந்த தேதியையும் கடையின் பெயரையும் கூறி, “டிராபிக் சிக்னல் புட்டேஜ்ஜில் ஏதாவது க்ளு கிடைக்குதா னு பாரு..” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் மீண்டும் வெற்றிவேல் இருந்த இடத்திற்குச் சென்றான்.
வெற்றிவேல் மல்லிகாவிடம், “அன்னைக்கு மனோஜ் எங்கேயும் போறதா சொன்னாரா?”
மல்லிகா மறுப்பாக தலையை ஆட்டினார்.
“அன்னைக்கு அதிக டென்ஷனில் இருந்தாரா? அன்னைக்கு னு இல்லை.. வாரம் முழுவதும் எப்படி இருந்தார்?”
“கல்யாணம் நின்னதில் இருந்தே அவன் அமைதியாகிட்டான்.. என்னிடம் கூட சரியா பேசலை” என்றவர் அழ ஆரம்பிக்க,
வெற்றிவேல், “அம் சாரி.. பட் இது எங்க வேலை.. அண்ட் நீங்க சொல்ற பதில்களில் ஏதாவது க்ளு கிடைக்கலாம்.. அது உங்க மகனை கொலை செய்தவனைப் பிடிக்க உதவியா இருக்கும்” என்றான்.
பிரசாத்தின் கண்ணசைவில் வேலையாள் மல்லிகாவிற்கு குடிக்க தண்ணீர் கொடுக்க, மல்லிகா தண்ணீரை குடித்து தன்னை ஆசுவாசப்படித்திக் கொண்டார்.
வெற்றிவேல், “மித்ராணி குணம் எப்படி?”
“எப்படி னா?”
“எப்படி பழகுவாங்க? உங்களிடம் எல்லோருடனும் எப்படி பழகுவாங்க?”
“மித்ராணி பாசமா பழகுவா.. தைரியமான பொண்ணு.. தப்பை யார் செய்தாலும் தப்பு னு தைரியமா சொல்லுவா”
“மனோஜ் கல்யாணம் ஏன் நின்னது?”
“அது..” என்று சற்று திணறியவர், “மித்ராணியும் புகழ்வேந்தனும் விரும்பியதால் மனோஜுடன் கல்யாணம் நின்னுருச்சு”
“முன்னாடியே அவங்க காதல் உங்களுக்கு தெரியுமா?”
“எனக்கு தெரியாது”
“வேற யாருக்கும் தெரியுமா?”
“அதுவும் எனக்குத் தெரியாது” என்றவர், “எனக்கு மயக்கம் வர மாதி……….” என்று சொல்லும் போதே மயங்கி சரிந்தார்.
அவசரமாக எழுந்து வந்து பிரசாத் மல்லிகா மிச்சம் வைத்திருந்த தண்ணீரை அவர் முகத்தில் தெளித்தான். அவர் கண்விழிக்கவில்லை என்றதும் அவரை கைகளில் ஏந்தியபடி, “கதிர் டாக்டருக்கு போன் பண்ணுங்க.. அப்பா உங்க ரூம் கதவை திறங்க.. மங்கை ரூமுக்கு தண்ணிக் கொண்டு வாங்க” என்று ஆளுக்கொரு கட்டளையை பிறபித்தவன் வெற்றிவேலை பார்த்து, “பெட்டர் நீங்க நாளைக்கு வாங்க” என்றபடி நகர்ந்தான்.
வெற்றிவேல், “இனி என் விசாரணை உங்களிடமும் உங்க அப்பாவிடமும் தான்.. நாங்க வெயிட் பண்றோம்” என்றான்.
ஒரு நொடி நின்று திரும்பிப் பார்த்த பிரசாத் மல்லிகாவை ஏந்தியபடி கிருபாகரன் அறைக்குச் சென்றான்.
அடுத்த பத்து நிமிடத்தில் அவர்கள் குடும்ப மருத்துவர் அங்கே வந்து மல்லிகாவை பரிசோதனை செய்து, “ப்ரெஷர் ஏறியிருக்குது.. அதிக டென்ஷன் தான் காரணம்.. பார்த்துக்கோங்க.. பிரஷருக்கு மாத்திரை எழுதி இருக்கிறேன்.. கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சிருவாங்க.. முடிந்தளவு அவங்களை தனியா விடாம ஆறுதலா பேசுங்க.. சத்தானதை சாப்பிட சொல்லுங்க.. வேண்டாம்னு சொன்னாலும் விடாம சாப்பிட வைங்க” என்றுவிட்டு சென்றார்.
இதற்கிடையில் வெற்றிவேலை அழைத்த அர்ஜுன், “சார்.. டிராபிக் சிக்னல் புட்டேஜ்ஜில் அந்த அக்சிடென்ட் கவர் ஆகி இருக்குது.. எதிரில் ஒரு வண்டி பின்னால் ஒரு வண்டி னு ரெண்டு வண்டி மனோஜ் காரை டார்கெட் பண்ணி இருக்குது.. அக்சிடென்ட் பண்ணது பின்னால் வந்த வண்டி.. எதிரில் வந்த வண்டி மோதுறதுக்கு முன் மனோஜ் சுதாரித்து வண்டியை திருப்பி இருக்கார் ஆனா பின்னால் வந்த வண்டி இடிச்சிருக்கு.. ரெண்டு பேருக்கும் பெருசா அடி பட்டது போல் தெரியலை காருக்குத் தான் டேமேஜ்.. ரெண்டு வண்டியோட நம்பரும் போலியானது.. ரெண்டு வண்டியோட டிரைவரும் தெரிறாங்க.. எதிரில் வந்த வண்டியை ஓட்டிய ஆளை நானே ஒரு கேஸ் விஷயமா பிடிச்சு இருக்கிறேன்.. அவனை தேடி நான் கிளம்பினப்ப அவனே வகையா வந்து சிக்கினான்.. அடிச்சு விசாரிச்சதில் அந்த அக்சிடென்ட் பிளான் பண்ணது பிரசாத் னு சொன்னான் ஆனா பிரசாத் சும்மா பயம் காட்ட தான் சொல்லி இருக்கிறான்.. லைட்டா கார் கண்ணாடியை உடைக்க தான் சொல்லி இருக்கிறான்.. இன்னொரு விஷயம்.. பின்னாடி வந்த கார் இவன் ஆள் இல்லை னு சொல்றான்.. இடிச்சது வேற யாரோ னு சொல்றான்”
“இடித்த வண்டியோட டிரைவர் அக்யுஸ்ட் லிஸ்ட்டில் இல்லையா?”
“இல்லை சார்.. புகழ்வேந்தன் வேலையா இருக்குமா?”
“சான்ஸ் இல்லை.. காரில் மித்ராணி இருந்து இருக்கா..”
“சார் அவங்க சொல்றதை நம்பு……….”
“அவங்க கல்யாணம் விஷயத்தில் பொய் சொன்னாலும் காதல் பொய் இல்லை.. ரெண்டு பேர் கண்ணிலும் உண்மையான காதலை நான் பார்த்தேன்”
“கல்யாணத்துக்கு அப்பறம் லவ் பண்ணி இருக்கலாமே?”
“இருக்கலாம் தான்.. பட் எனக்கு என்னவோ இது புகழ்வேந்தன் வேலை இல்லை னு தான் தோணுது” என்றவனின் மனதில் சட்டென்று ஒன்று நினைவிற்கு வர, “அந்த தர்மராஜை விசாரி.. அக்சிடென்ட் பத்தி உளறினது அவன் தான்.. அதை பத்திக் கேட்டப்ப தான் திணறினான்”
“எஸ் சார்.. கரெக்ட்”
“விசாரிச்சிட்டு அப்டேட் பண்ணு” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.
மருத்துவர் சென்றதும் கிருபாகரனை பார்த்து வெற்றிவேல், “உங்களை தனியா விசாரிக்கணும்” என்றான்.
இருவரும் ஒரு அறையினுள் சென்றனர்.
வெற்றிவேல், “மனோஜ் கல்யாணத்தன்னைக்கு பிரசாத்தை ஏன் கடத்தினீங்க?”
(மேற்பார்வையாளர் அன்று பிரசாத் சண்டை போட்டதை கூறி இருந்தார்)
“அது” என்று ஒரு நொடி திணறிய கிருபாகரன் பின் திடமான குரலில், “கல்யாணத்தன்னைக்கு இல்லை.. கல்யாணத்துக்கு முந்தின நாள் நைட் கடத்தினேன்.. அவனும் மித்ராணியை விரும்பினான்.. ஸோ கல்யாணத்தில் பிரச்சனை பண்ணக் கூடாது னு கடத்தினேன்.. கல்யாணம் முடிந்ததும் விடச் சொல்லிட்டேன்”
“ஸோ புகழ்வேந்தன் மேல் கேஸ் பைல் பண்ண மனோஜை கடத்தி இருக்கிறீங்க.. அந்த நேரத்தில் எப்படியோ மனோஜ் இறந்து இருக்கார்.. நீங்க பழியை புகழ்வேந்தன் மேல் போட்டுட்டீங்க”
“நேத்தே நான் சொன்னேன்.. என் மகனை நான் கடத்தலை.. கடத்தல் கேஸ்செல்லாம் ஒரு கேஸா? அவன் இதை ஒன்னுமில்லாம செய்ய மாட்டா………………”
“அப்பறம் ஏன் அவர் மேல் கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க?”
“பொய்யா கடத்தல் கேஸை ஜோடிக்க மாட்டேன் னு தான் சொன்னேன்.. நிஜமாவே என் மகனை காணும்னதும் எனக்கு அவன் மேல் தான் சந்தேகம் வந்தது.. இப்போ கூட அவன் மேல் தான் எனக்கு சந்தேகம் இருக்குது.. நீங்க வேணும் னு கேஸை திசை திருப்புறது போல் எனக்கு தோணுது” என்று கோபத்துடன் கூறினார்
“கோபமா பேசினா பொய் உண்மை ஆகிராது”.
“எப்படி பேசினாலும் உண்மை உண்மை தான்” என்று கோபத்துடன் கூறியவர், “நான் என் மனைவியை பார்க்கப் போகணும்.. உங்க விசாரணையை நாளைக்கு வச்சுக்கோங்க” என்றார்.
“சரி” என்று கூறி வெளியே வந்த வெற்றிவேல் பிரசாத் அருகே சென்று, “விசாரணைக்காக நீங்க என் கூட வாங்க”
“வாட்?” என்று பிரசாத்தும் “ஸ்டேஷன் எதுக்கு?” என்று கிருபாகரனும் ஒரே நேரத்தில் வினவினர்.
வெற்றிவேல் சந்தோஷை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே செல்ல பிரசாத் அருகே சென்ற சந்தோஷ், “நீங்களா வந்துட்டா பிரச்சனை இல்லை சார்” என்றான்.
“சும்மா நீங்க நினைச்சதும்…………..” என்று பிரசாத் எகிறிக் கொண்டிருந்த போதே சந்தோஷ், “தேவையான பேப்பர்ஸ் எல்லாம் எங்க கையில் இருக்குது.. உங்க அப்பாவை கூட்டிட்டு போகவும் பெர்மிஷன் இருக்குது.. உங்க அம்மாக்காக தான் உங்களை மட்டும் கூப்பிடுறோம்.. உங்க மேல் தப்பில்லை னா விசாரணைக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீங்க?”
“ஓகே நான் வரேன்” என்று பிரசாத் கூற, கிருபாகரன், “பிரசாத்” என்று அழைத்தார்.
“அம்மாவை பார்த்துக்கோங்க.. பாலாவை பார்க்க போயிருக்கேன்னு சொல்லுங்க” என்று இறுகிய குரலில் கூறி கிளம்பினான்.
வெற்றிவேல் அலுவலகத்தை நோக்கி வண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது வெற்றிவேலை அழைத்த அர்ஜுன், “சார் நீங்க சொன்னது சரி.. அந்த அக்சிடென்ட் ஏற்பாடு பண்ணது தர்மராஜ் தான்.. ஆனா கொலையை செய்யலை னு கதறுறான்”
“சரி.. மத்தவங்களை அனுப்பிடு.. நான் இப்போ வேற கேஸ் விஷயமா என்னோட இடத்துக்கு போயிட்டு இருக்கிறேன்”
“ஓகே சார்.. புகழ்வேந்தன் மித்ராணி அண்ட் கல்யாணை இப்போதைக்கு போகலாம் னு சொல்லிடுறேன்..”
“ஓகே” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
வெற்றிவேல் அலுவலகம் சென்ற போது புகழ்வேந்தன் மித்ராணி மற்றும் கல்யாண் கிளம்பி இருந்தனர்.
பிரசாத்தை விசாரணை அறைக்கு அழைத்துச் சென்ற வெற்றிவேல் அவனை அமரும்படி செய்கை செய்து தானும் அமர்ந்தான்.
பிரசாத் அமர்ந்ததும், “மனோஜை கொலை செய்ததை நீயே ஒத்துக்கிட்டா உடம்பு புன்னாகாது”
“விசாரணை னு கூட்டிட்டு வந்து அராஜகம் பண்றியா? அந்த புகழ் கிட்ட எவ்ளோ வாங்கின?” என்று பிரசாத் எகிற,
“பிரசாத் யூ ஆர் கிராஸ்சிங் யுவர் லிமிட்ஸ்” என்று வெற்றிவேல் எச்சரிக்க,
“உனகெல்லாம் எதுக்கு டா மரியாதை? ————-“ என்று பிரசாத் கெட்ட வார்த்தையில் திட்ட, வெற்றிவேல் அவன் கன்னத்தில் அறைந்த வேகத்தில் பிரசாத் இருக்கையுடன் கீழே விழுந்தான்.
“பதவிக்காகவும் சொத்துக்கவும் சொந்த அண்ணனையே கொன்ன ————– நீ என்னை சொல்றியா? தொலைச்சிருவேன் ராஸ்கல்” என்று கர்ஜித்தான்.
முறைப்புடன் எழுந்து நின்ற பிரசாத், “இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப”
“பெரிய பெரிய அரசியல்வாதிகளையே பார்த்தவன் நான்” என்றவன், “முதல்ல நீ வெளியே போறியா னு பாரு”
“எதை வச்சு என் மேல் பழி போடுற?”
“பழி இல்லை.. உண்மையை சொல்றேன்.. நீ ஏற்பாடு செய்த அக்சிடென்ட் பத்தியும் தெரியும் வீட்டில் மனோஜை அடித்து கொல்வேன் னு சொன்னதும் தெரியும்.. அக்சிடென்ட் பண்ணவன் இப்போ என் கஸ்டடியில்.. என்ன பார்க்கிற? நீ உன் அம்மாக்கு வைத்தியம் பார்க்கிறதுக்குள் நான் உன் கைக்கு விலங்கு ரெடி பண்ணிட்டேன்”
பிரசாத் அப்பொழுதும் அசராமல், “நீ சொன்ன ரெண்டுமே சரி.. ஆனா மனோஜை நான் கொல்லலை.. அவனை கொள்வதால் எனக்கு என்ன கிடைக்கப் போகுது?”
“பதவியும் சொத்தும்..” என்றவன், “மனோஜை விட நீ தான் திறமைசாலி ஆனா எல்லா இடத்திலும் நீ மனோஜுக்கு கீழ் தான் வேலை பார்த்து இருக்க.. ஸோ மனோஜ் இல்லைனா உனக்கு பதவியும் சொத்தும் கிடைக்கும்.. பழியை புகழ்வேந்தன் மேல் போட்டுட்டா எதிரியும் ஒழிஞ்சான்”
“யாருக்கு வேணும் இந்த பதவியும் சொத்தும்” என்றான் விரக்தியாக.
“இதை கோர்ட்டில் சொல்லு”
விசாரணை தொடரும்♥ ♥ ♥ ♥ ♥ ♥