அதிகாலை புள்ளினங்கள் கதிரவனை வரவேற்று இன்னிசை இசைக்க,இரவின் மிச்சங்கள் இன்னும் முழுதாய் முடியாத காலை. 8 மணி நேர பயணத்தை 7 மணி நேரத்தில் முடித்து சென்னையின் உள்ளே நுளைந்திருந்தான் வீரேஷ். விக்ரமிடம் சொன்ன நேரத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்க நேராக அலுவலகத்திற்கு சென்றான். ஏதேனும் அவசர நேரத்தில் உதவும் என்று ஒரு செட் மாற்றுடை அவன் அறையில் எப்பொழுதும் இருக்கும் அதனால் தைரியமாய் அலுவலகத்துக்கு வந்தவன் அப்பாவிற்கு ஒரு குறுன்செய்தி மட்டும் அனுப்பினான் தான் சென்னை வந்துவிட்டதை தெரிவித்து.
அவன் யோசிக்க வேண்டியது இருந்தது. வீட்டிற்கு போனால் ஏன் அதற்குள் வந்தான் என்று அம்மா படபடப்பாவார்கள்.
அவனுக்கு தனிமை தேவை!
எந்த விதமான தொந்தரவும் அற்ற தனிமை. அவன் எடுத்திருக்கும் முடிவை ஒரு முறை சரி பார்க்கவும் விக்ரம் வரும் முன் தான் செய்ய வேண்டிய வேலைக்கும், அவனுக்கு குழப்பம் இல்லா தனிமை வேண்டும்.
அலுவலகத்திற்கு வந்தவன், முன்னே இருந்த செக்யுரிட்டி–யிட விக்ரமை பற்றி அறிந்த்வனாக,விக்ரம் இன்னும் ஒருமணி நேரத்தில் வருவதாகவும், தான் வந்துவிட்டதை அவனிடம் தெரிவித்து மீட்டிங் அறை ‘Vostok’ ற்கு வர சொல்லுமாறு சொன்னவன் தன்னை சுத்தபடுத்திக்கொண்டவன் அவனின் அறையின் உள்ளேயே இருக்கும் குட்டி கிட்சனில் அவனுக்கு ப்ளாக் டீ போட்டுக்கொண்டவன்,அலுவலகத்தின் மேல் மாடியில் இருக்கும் தன் அறையின் ஜன்னலில் இருந்து சென்னையின் காலை நேர அமைதியை உள்வாங்கிக் கொண்டே அவனின் ப்ளாக் டீயை மிடறு மிடறாக ரசித்துக்கொண்டிருந்தான்.
ஆம்! ரசித்துக்கொண்டிருந்தான். எத்தனை தான் பதற்றம் இருந்தாலும் நொடியில் தன் உணர்வுகளை கைகொணரும் வித்தை கற்றிருந்தான். எப்படி அடுத்தவர்களால் இவனின் உணர்வுகளை படிக்க முடியாதோ, அதே மாதிரி வெளி காரணியினால் அவனின் இயல்புகள் மாறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பான்.
பின் அவனின் macbook air-ஐ திறந்து அவன் ஊருக்கும் போகும் முன் தயார் செய்த டெண்டர் மற்றும் அதனுடன் அவர்களின் விரிவான வரைவறிக்கையும் ஒரு முறை படித்தான். வரைவரிகையில் வேண்டிய மாற்றங்கள் செய்தவன் quotationஐ அப்படியே தனியே எடுத்து வைத்தவன். xxx –கம்பேனியின் மூளையாக இருக்கும் ராஜேஷ்கண்ணனின் புத்தியை பற்றி தெரிந்ததால் அவன் நிச்சியமாக அதிகம் உழைத்தோ, ஆராய்ந்தோ quotation மாற்றி இருக்க மாட்டான் என்பதில் எள்ளலவு சந்தேகம் கூட இல்லை. இன்பாக்ட், (infact) வீரேஷின் quotation- னை விட ஒரு சில லகரங்கள் இன்னும் சொல்ல போனால் ஆயிரங்களில் குறைத்து கோட் பண்ணியிருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.
இந்த மாதிரி எதாவது நடந்தாலும் தன்னால் மாற்றங்கள் செய்ய முடியனும் என்று தான் எப்பொழுதும் டெண்டர் விஷயங்களில் ஒரு வரைவுவைத்திருந்தாலும் கடைசி நாள் தான் சம்பிஸன் (subnission) மற்றும் அன்று தான் அடுத்த கட்ட ஊளியர்களுக்கும் இந்த டெண்டர் அமொண்ட் பற்றி தெரியும்.
என்ன தான் கதிர் கலந்துரையாடலின் பொழுது உடன் இருந்தாலும் அவனுக்குமே இவர்களின் இந்த பழக்கத்தை பற்றி தெரிய வாய்ப்பில்லை. அவனின் இந்த வழக்கம் இம்முறை இவர்களுக்கு சாதகமாய் அமைய டெண்டருக்கு வேண்டியமாற்றங்களை செய்தவன், ‘Vostok’மீட்டிங் அறைக்கு செல்ல ஆயத்தம் ஆனான்.
சரியாய் 5:15ற்கு உள்ளே வந்த விக்ரம் நேராய் மீட்டிங் அறைக்கு செல்ல, வழியில் வீரேஷை சந்தித்தான்.
“குட்மார்னிங் சார்!!” என்று முகமன் கூறியவன் வீரேஷின் அழுத்தமான முக பாவத்தில் அவனின் எண்ணங்களை எப்பொழுதும் போல் கணிக்க இயலாமல்அவனின் முகம் பார்க்க
“மார்னிங்விக்ரம்! You can get your coffee while I set this up.”என்றான்அவனைஅறிந்தவனாய்.
வீரேஷின் இந்த அழுத்தமான நிதானம் எப்பொழுதும் ஒரு கிலியையே குடுக்கும் விக்ரமிற்கு. அவனின் முகத்தை ஆழ்ந்து பார்க்க, கணிணியில் தலையை கொடுத்து இருந்தவன், “எதாவது கேட்கனுமா, விக்ரம்?” என
“ஷால் வி கெட் திஸ் கிராக்கிங்(shall we get this cracking?!) ? என்று அவனின் எண்ண ஓட்டதிற்கு முற்று புள்ளி வைத்தவன் அடுத்த அரை மனி நேரம் தான் செய்திருக்கும் மாற்றங்களை கூறி அடுத்து அவன் செய்யவேண்டியதை அவனுக்கு கூறியவன், xxx –கம்பேனி பற்றி இது வரை நேர்மறையாகவும் , எதிர்மறையாகவும் சேகரித்திருக்கும் டேடாவை தனக்கு அனுப்புமாறு கூறினான்.
அவன் அதை அனுப்பியதும் அவனுக்கு தேவையானவற்றை தனியே பிரித்து எடுத்தவன் அடுத்து அழைத்தது ஒரு புகழ் பெற்ற பத்திரிக்கையின் cheif Editor-ஐ. அவருக்கு xxx – கம்பனி இது வரை செய்த தகிடுதத்தங்களை அடங்கிய பைலை(file ) கொடுத்துஇன்று மாலை வரும் இஸ்யுவில் வரவேண்டும் என்றவன் அவர்களின் சொஸியல் மிடியா(social media) பக்கத்தில் இது முக்கிய விஷயமாக பகிரபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். அவனின் குரலும் முகமும் அவன் ஏதொ முடிவு எடுத்துவிட்டதை கூறினாலும் வீரேஷ் இருக்கும் மன நிலையில் அது என்ன என்று கேட்கும் துனிவற்றவனாய் அவன் முகம் பார்த்திருந்தான். அழைப்பை அனைத்தவன், விக்ரமிடம் பார்வையை படித்தவனாய்,
“பிசினஸ் என்பது புலி வாலை பிடித்த கதை தான் எக்காரணம் கொண்டும் விடமுடியாது. செஸ்(chess) விளையாடுவல்ல நீ, அதில் எப்படி எதிரியின் அடுத்த மூவை நாம் அனலைஸ்(Analyse) செய்துகொண்டே இருக்கவேண்டுமோ அதே மாதிரி தான். ஒரு மூவ் தப்பானாலும் ஆட்டம் தள்ளாடிடும். “The blunders are all there on the board, waiting to be made.” அவன் ஒரு அடி எடுத்துவைக்கும் முன் நாம் நான்கு அடி முன்னால் இல்லை என்றால் அடித்து தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இருப்பாங்க! ஸொ, உன் பாவம் புண்ணியம் எல்லாம் இங்க எடுபடாது!” என்று கூறியபடியே தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவன்.
“சரி, நீ மிச்ச்த்தை பார்த்துக்கோ, பூல் நைட் வண்டியில் வந்தது I am a bit tired , வீட்டுக்கு போய் கொஞசம் ரெஸ்ட் எடுத்துட்டு, 11 மணிக்கு வந்துடுறேன்.”
“ஓக்கே சார்! பட், நீங்க இன்னைக்கு எனிவே அவ்ட் ஒப் ஆபிஸ் தானே.. நீங்க வேனும்னா ரெஸ்ட் எடுங்க, I will take care here.”
“சரி பார்த்துக்கோ! மீடியாவில் இருந்து எதுவும் கால்ஸ் xxx company பற்றி வந்தா, டொண்ட் ஆன்ஸர் எனி கொஸ்டின்! ” என்றவன் வீட்டிற்கு கிளம்பினான்.
பெரும் தொழிலதிபர்கள், பிசினஸ் டைக்கூன்ஸ், அரசியல்வாதிகள் என எங்கு திரும்பினாலும் பெரும் தனக்காரர்கள் நிறைந்த சென்னை போட் க்லப்ல் தான்வீரேஷின் வீடும் (மாளிகைன்னு சொல்லனுமோ?).வாசலில்10 அடிக்கு உயரத்திற்கு இருக்கும் கேட்டை கடந்து உள்ளே வந்தால் பச்சை பசேலென்ற புல்வெளி ஒரு புறம், மற்றோறு புறம் வண்ண ரோஜாக்களும் , பெகொனியாக்களும்(Begonia), சம்பா மலர்களும்நடுவே இருக்கும் குட்டி மண்டபமும் அதை சுற்றி படர்ந்திருந்த மல்லிகையும் முல்லை கொடியும் என முன்பக்க தோட்டமே பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாக இருந்தது. வீரேஷின் கார் தோட்டத்தை கடந்து வண்டிகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியவன் அந்த பெரிய பொர்டிகொவின் படிகளை இரண்டு இரண்டாக தாண்டியவன் வீட்டின் அமைதியை வைத்து இன்னும் தங்கையும் தம்பியும் எழுந்திரிக்கவில்லை என்பதை அறிந்தவன் “அம்மா!!! ” என்று கத்தியபடியே அவர்கள் வீட்டின் முன்னறையை கடந்தவன் பூஜை அறையில் இருந்து வரும் மெல்லிய மணி சத்தம் கேட்டு அங்கே சென்றவன்,
“என்னம்மா, காலையிலயே விஷேச பூஜை போல இருக்கு”
“வாடா .. கண்ணா! அப்பா சொன்னங்க நீ வந்துட்டன்னு. ஒன்னும் பிரச்சனை இல்லையே?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா.. புது பிராஜகட் விஷயமாய் சின்ன டென்சன் அந்த xxx – companyயால்! எல்லாம் சரி பண்ணியாச்சு.”
“ திடீர்ன்னு அப்பா நீ வந்துட்டன்னு சொன்னதும் கொஞ்சம் பதட்டமா இருந்தது! சரி டிரிப் எப்படி இருந்தது? பிரண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க? ரிஸப்ஷன் எப்படி போச்சு?” என்று வேறு விஷயங்களை பேச ஆரம்பித்தார். இது தான் வரலக்ஷ்மியின் குணயியல்பு. எந்த ஒரு விஷயத்தையும் தூண்டி துருவமாட்டர். தனக்கு தெரியவேண்டியதாய் இருந்தால் கண்டிப்பாய் சொல்லியிருப்பான் என்ற நம்பிக்கை அவன் மேல்.
“ஒன்னு ஒன்னா கேளுங்க மா! ஹட் ஃபன். எல்லாரும் நல்லா இருக்கானுங்க.ரிஸப்ஷன் நல்லா இருந்தது. உங்களுக்கும் மருமகள் ரெடி பண்ண ஆரம்பிச்சுட்டேன்!” என போகுற
போக்குல குண்ட போட
“என்ன? என்ன சொன்ன?!” என்று தனக்கு தான் சரியாக கேட்கவில்லையோ என்று திரும்ப கேட்க்க அப்பொழுது தான் எழுந்து வந்த வேதா(தங்கை) “உங்களுக்கு விளக்கு ஏத்துறதுக்கு ஆள் ரெடி பண்ணிட்டாராம்”என விளக்கம் சொல்லியபடியே
“நிஜமான்னா? பேர் என்ன? எங்க பார்த்த? என்ன பண்றாங்க? போட்டோஇருக்கா? காட்டேன்னா! ” என படபடக்க
“ஹேய் குட்டி! கொஞ்சம் முச்சு விட்டு கேளு!
பேர் — சொன்ன பேர் மேஹா! நிஜ பேர் தெரியாது!
பார்த்தது – அழகர் கோவில்ல!
என்ன பண்றா – தெரியாது!ஆனால் எதோ ஒரு காலேஜ்ல படிக்கிறா.
போட்டோவா? யாரோ யாரையோஎடுத்ததுக்கே பொங்கிட்டா! இதுல நான் அவள போட்டோ எடுத்திருந்தேன் புடிச்சு உள்ள போட்டு இருப்பா!” என சின்ன சிரிப்போடு சொன்னவன் பாலாஜியின் ரெஸ்டரேண்டில் நடந்ததை சொல்ல பார்க்காமலே ஒரு நல்அபிப்ராயம் வந்தது வரலக்ஷ்மிக்கு. தைரியமான பொண்ணா இருக்கா அதே சமயம் சமையோஜிதாமாகவும் நடந்திருக்கா!
“என்ன கண்ணா நிஜ பேர் தெரியாதுங்குற, எதுவுமே தெரியாம எப்படி எனக்கு மருமகள்னு முடிவு பண்ண?”
“தெரியலைம்மா! But somehow deep down I felt she is mine!” எனஉள்ளத்தில் உள்ளதை அப்படியே கூறி டைனிங் ஏரியாவில் இருக்கும் சைஸில் (chaise) அமர்திருந்தவன் அம்மாவின் மடி சாய்ந்துகொண்டான்.
போன வருடம் அவர்களின் சொந்ததில் மற்றும் தொழில் முறையில் இருக்கும் ஒருசில பெண்களை பற்றி சொன்னதற்க்கு கல்யாணத்தில் இப்பொதைக்கு இஷ்டம் இல்லை என்றும் அப்படியே என்றாலும் தனக்கு வரப்போகும்மனைவி நிச்சியம் இந்த பார்பி டால்களை மாதிரி மட்டும் இருக்க கூடாது என்றவன் இப்பொழுது அவனாக ஒரு பெண்ணை பார்த்ததும் மட்டும் இல்லாமல் கல்யாணம் வரை யோசித்திருப்பது வரலக்ஷ்மிக்கு ஆச்சர்யமாக இருந்தது.
ஆறு மாததிற்கு முன்னால் பெண் பார்ப்பது போல் இல்லாமல் நட்பு ரிதியாக சந்திக்க ஏற்பாடு செய்ய, போன ஐந்தே நிமிடத்தில் முக்கியமான மீட்டிங் என்று ஒடிவிட்டான். ஏன் என்று கேட்டதற்கு, வேறும் பிசினஸ் அனாலிஸிஸ் மாதிரி எல்லாம் வாழ்க்கை முழுதும் பேச முடியாதும்மா என்று சொன்னவன் அதன் பிறகு இது போல் நிகழ்வுகளில் பங்கேற்பதை எப்படியாவது தவிர்த்து விடுவான்.
மெதுவாய் அவனின் மனதை அறியும் பொருட்டு லக்ஷ்மி அவனின் தலையை கோதிக்கொண்டே, “என் கண்ணா பொண்ணு ரொம்ப அழகோ?”
“அம்மா, நான் பார்க்காத பெண்களா?எத்தனையோ அழகான பெண்களை சந்தித்திருக்கிறேன் அப்போவேல்லாம் தோனாத ஏதோ ஒன்று பார்த்ததும் தோனிச்சு!”
“யூ நோ வாட்ம்மா, சராசரி பெண்களை விட அதிக உயரம். அந்த கண்களை என்னால் அதிகம் குனியாமல் பார்க்க முடிந்தது அவ்வளவு உயரம். அவளோட கண்கள் தான் என்னை முதலில் கவர்ந்தது! விட்டா பெருமாள்ல கண்ணுல் கட்டி தூக்கிட்டு போய்யிருப்பா! அவளின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிற மாதிரி இருக்கும்! கண்களில் ஒரு அழுத்தம், அனாவசியமாக என்னிடம் நெருங்காதே என்று கூறும். நிமிர்ந்த நன்னடை….அனாவசிய அலட்டல்கள் இல்லாத அமைதியான அழகும்மா! ”
“அண்ணா டேய், வருண் கேட்டியா?! அமைதியான் அழகாம்!!” அது வரை பக்கத்தில் இருந்த லவ்சீட்ல் (love seat) காலைக்கட்டிக்கொண்டு கதை கேட்டுக்கொண்டிருந்தவள் அவன் சொல்லி முடித்ததும் முதல் வேலையாய் வருணிடம் ஒப்பிக்க ஓடியிருந்தாள். வேதாவிற்கும் வருணிற்கும் ஒன்றரை வருடங்கள் தான் வித்தியாசம் எம்பதினால் இருவருக்கும் சண்டையும் செமைய நடக்கும்செய்யும் அனைத்து திருட்டுத்தனங்களுக்கும் இருவருமே கூட்டு!
“போச்சு, இனி இந்த வாலு ஒவெரா பண்ணுமே!”
“அனுபவி! இதெல்லாம் இனி நீ நிறைய அனுபவிப்ப! ”
அப்பொழுது தான் தன் நடை பயிற்சி முடித்து வந்த வேதநாயகம், “என்னடா காலையில் வந்ததும் வராததுமாய் அம்மாவிடம் செல்லம் கொஞ்சிகிட்டு இருக்க! இஸ் எவெர்ய்திங் சார்டட்? (is everything sorted?!)”
“எஸ்ப்பா! அப்படியே அந்த xxx- கம்பனிக்கும் ஒரு செக் வைத்திருக்கேன். பார்க்கலாம் ! இனிமே என்னை ராங் சைடில் உரச யோசிக்கனும் அவன்.” என்று கண்களில் கணல் வீச தான் செய்திருக்கும் வேலைகளை அப்பாவிடம் கூறியவன். “சரிப்பா நான் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கம்ப்பெனிக்கு போறேன். ” என்று எழுந்து அறைக்கு சென்றான்.
“என்னங்க, இவ்வளவு நேரம் அவன் பேசிகொண்டிருந்ததை பார்த்தால் காலையில் இந்த வேலைகளை செய்துட்டு வந்தவன் மாதிரியா இருக்கு! அவன் பாட்டுக்கு வந்தான், மடியில படுத்தான் ஒன்னும் ப்ராப்ளம் இல்லைமானான், அவன் டிரிப்பை பற்றி கதை அளந்தான், ஒரு பொண்ணை பற்றி சிலாகித்தான். நீங்க வந்து கேட்டதும் அவன் கண்களில் வந்து போன கணல் மட்டும் இல்லயேன்றால் சத்தியம் பண்ணா கூட நம்பமுடியாது! என்னமோ போங்க நான் தான் இவனை பெத்தேன், ஆனால் அப்ப அப்போ இவன் மனதில் என்ன ஒடுதுன்னு அவன் சொல்லவில்லைன்னா எனக்கூட புரிய மாடேங்குது!” என்றபடி எழுந்தார்.
மாடியில் அவன் அறையில் கட்டிலில் படுத்தவனுக்கோ உடலில் அயர்ச்சி இருந்தாலும் மனது விழிப்புடன் இருப்பதினால் தூங்க முடியவில்லை! விக்ரமிற்கு அழைத்து எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று விவரம் கேட்டவன் சம்பிஸன் பண்ணியாச்சு என்றும் அவன் சொன்ன செய்திகள் சொஸியல் மிடியாவில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது என்று கேட்டவன் சரி இனி நிம்மதியாய் தூங்கலாம் என எண்ணியபடியே கண்ணயர்ந்தான்.
திரும்பவும் கம்ப்பெனிக்கு சென்றவனை வேலை உள்ளித்துகொள்ள, அவனின் கவணம் முழுதும் வேலை வேலை வேலை மட்டுமே. “காலத்தை பயிர் செய்” என்பதற்கு இனங்க, வேலை என்று வந்துவிட்டால் மற்றது எல்லாம் இரண்டாம் பச்சம் தான்.
மாலையில் சுதர்ஷனிடம் இருந்து முடியும் பொழுது அழைக்க சொல்லி குறுஞ்செய்தி வர, வீட்டிற்கு செல்லும் வழியில் அழைத்தவன் கல்லூரிக்கு இன்று செல்லவில்லை என்றும் நாளை மதியம் தான் போக போவதாக கூறி, மற்ற விஷயங்கள் அனைத்தும் பேசி முடித்ததும்
“என்ன மச்சி, அந்த பொண்ணை பற்றி எத்தூவும் தகவல் கேட்ப்பன்னு நினைத்தேன்.”
“ஆமாம் டா! நீயும் பாலாவும் தான் அங்க இருக்கீங்க, எனக்கு தெரிந்து அவனின் கடைக்கு ரெகுலராக வரும் பசங்க யாரேனும் ரெக்கமண்ட் பண்ணி தான் வந்துருப்பாங்க. உனக்கு அவங்க பேசும் பொழுது ஏதாவது காலேஜ் பேர் சொன்ன மாதிரி ஞாபகம் இருக்கா?!” என்று சரியாக கணித்து சொல்ல
ஆனா நம்ம மகளிர் அணி எங்கே காலேஜ் பற்றியெல்லாம் பேசுனாங்க?
“அதேல்லாம் தெரியலை வீர். ஆனால் நீ சொன்னது கரக்ட் தான் ! பசங்க ரெகம்ண்டேஷனா தான் இருக்கனும். ஆனா வீர்… மச்சி சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத! அந்த பொண்ணுக்கு வேற எதேனும் ரீலேஷன்ஷிப் இருக்கலாம்ல்ல…. உன் வேகத்தை பார்த்தால் எனக்கு கொஞ்சம் பயம்ம இருக்கு.I don’t want you to get hurt !” என்றான் நண்பனை அறிந்த தோழனாய்.
ஒரு நிமிடம் அவன் சொன்னது முகத்தில் அரைய, அப்படி இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது இல்லையா? இப்பொதேல்லாம் காதலில் இல்லாதவர்களை பார்ப்பது தான் அபுர்வமாக இருக்கிறது. அதுவும் இவளை போல் ஒரு பெண்ணை இவ்வளவு காலம் விட்டுவச்சு இருப்பாங்களா என்பது கேள்வி குறியே!
அவன் அமைதியாய் இருந்த சில் நொடிகள் சுதர்ஷனுக்கு அவனை கஷ்டப்படுத்திட்டோமோ என்று தோன்றினாலும்.. அவனுக்கு சொன்னது தப்பாய் தோனவே இல்லை. வீரேஷ் மாதிரி ஒரு ஆண், இதுவரை மனதளவில் கூட கண்ணியம் காத்துவரும் ஒருத்தன், காதலில் விழுந்தால் அது அவன் ஊண் வரை இறங்கும் விஷய்ம் என்பது புரிந்ததினால் மட்டுமே வீரேஷிற்கு உணர்த்துவற்காக அவ்வாறு கூறினான்.
“விடு மச்சி, சீக்கிரம் கண்டுபிடிப்போம், ஆனால் என்ன பெயர் கூட தெரியாது! இந்த மதுரைக்குள் தானே, எப்படியும் கண்டுபிடிச்சுடலாம் யூ டொண்ட்வோரி.”
“மேஹா! அவளோட பெய்ரோடு தொடர்புடையதாக தான் இருக்கும். யாரலையும் அப்படி சட்டுன்னு ஒன்றும் சம்பந்தம் இல்லாத பெயரை சொல்லமுடியது.”
“சொ மேக்னா, மேஹலா? இந்ந்த மாதிரியா ?”
“மேபீ! ஆன இந்த பேர் எல்லாம் அவளோட பொருத்த முடியலை டா. சம்திங் டிஃபரண்ட். ”
“ஹேய் விக்ரம் கூப்பிடுறான், ஈ வில் கால் யூ லேடர்.” என்று கட்செய்தவன், விக்ரமிடம் அலுவல் ரீதியாக பேசிமுடித்தவன் வீடு வந்திருக்க அனைவரிடமும் சிரிது நேரம் பேசிவிட்டு அவனின் ஆஸ்தான் இடமான அவன் அரையின் அருகே இருக்கும் பால்கணியில் கையை கட்டிக்கொண்டு வானதில் இருக்கும் வென்மேகங்கள் நிலவை மறைத்து விளையாடு விளையாட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்பொழுது சட்டென “யாஹூ! முகில்! முகிலாய் இருக்கலாம். அவள் பெயர். ” என சந்தோஷமானவன். உடனே சுதர்ஹ்சனுக்கும் இதை குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.