அஞ்சலி அறையில் அவள் அருகில் அமர்ந்திருந்தனர் குணசீலனும் காஞ்சனாவும்.
சூர்யாவின் சத்தம் கேட்கவும் காஞ்சனா எழ, “ம்மா! என்னால எல்லாம் வர முடியாது.. நான் இங்கே இல்லனு சொல்லி அனுப்புங்க அவனை!” என்று கூற,
“அறைஞ்சேன்னு வை!” என்று கோபமாய் கூறிய காஞ்சனா,
“பார்த்திங்களா! இது தான் உங்க பொண்ணு!” என உங்க என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கூறிவிட்டு வெளியில் வர, அதற்குள் மீண்டும் அழைத்திருந்தான் சூர்யா.
“ஆண்ட்டி!”
“சூர்யா! வா ப்பா.. அம்மா எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்க,
“நல்லா இருக்காங்க ஆண்ட்டி! நீங்க எப்படி இருக்கீங்க?” என்றபடி அவனே வந்து சோபாவில் அமர்ந்தான்.
“நல்லாருக்கோம் பா.. குடிக்க எதாவது எடுத்துட்டு வரவா?” கோபமாய் தான் வந்திருப்பான் என நினைத்து அவர் தயங்கி தயங்கி கேட்க,
“ம்ம் சூர்! எடுத்துட்டு வாங்களேன்” என்றான் அங்கிருந்த நியூஸ் பேப்பரை கையில் எடுத்தப்படி.
“ப்பா! நாம ஏமாந்துட்டோம் ப்பா.. இவன் நல்லவனே இல்லை ப்பா.. என்னை என்ன சொன்னான் தெரியுமா? என் காலை உடச்சிடுவேன்னு சொல்றான்.. எவ்வளவு திமிர் இருக்கும்? நான் என்ன ப்பா தப்பு பண்ணினேன்?” தந்தை தோளில் சாய்ந்து கொண்டு கேட்டாள் அஞ்சலி.
ஆறு மணி அளவில் வாசல் கதவை திறந்த காஞ்சனா கையில் பையோடு நின்றவளைப் பார்த்து நெஞ்சில் கை வைத்துவிட்டார்.
“என்ன பண்ணின? என்ன பிரச்சனை? யார் உன்னை என்ன சொன்னாங்க? சண்டை போட்டியா?” என பலவிதமாய் காஞ்சனா கேட்டுவிட்டார். வாயே திறக்கவில்லை அவள்.
“என்ன அஞ்சலி ம்மா? சூர்யா எதாவது சொன்னானா? இல்ல அந்த ஜெய் எதுவும் பிரச்சனை பண்ணினானா?” என குணசீலனும் கேட்டுப் பார்த்துவிட்டார்.
“சரி நான் பாலாக்கு போன் பண்றேன்” என்ற குணசீலன் கையிலிருந்த போனை வேகமாய் பறித்து விட்டார் காஞ்சனா.
“என்னை எதாவது சொல்ல வச்சுடாதிங்க.. யார் மேல தப்புன்னு தெரியாம இப்போ அங்க எதுக்கு போன் பண்றீங்க? முதல்ல உங்க பொண்ணை வாய் திறந்து பேச சொல்லுங்க.. நீங்களே தேவை இல்லாம பிரச்சனையை பெருசா இழுத்து விடாதீங்க..” என்று தடுத்திருந்தார் காஞ்சனா.
அப்பொழுதெல்லாம் பேசாதவள் அவன் குரல் கேட்கவும் வந்த ஆத்திரத்தில் கூற,
“சூர்யாவா? சூர்யாவா அப்படி சொன்னான்?” என்று அதிர்ந்து கேட்க,
“அவன் தான் ப்பா.. அவன் நாம நினச்ச மாதிரி நல்லவன் எல்லாம் இல்லை ப்பா” என்றாள் அழுகையோடு.
“இரு! நான் கேட்குறேன் அவனை!” என அவர் எழ,
“ம்ம்ஹ்ம்ம் வேண்டாம்.. போகாதீங்க.. என்னை விட்டு எங்கேயும் போகாதீங்க.. அவன் என்னை இங்க அனுப்ப மாட்டேன்னு சொன்னான்.. திரும்ப கூட்டிட்டு போக தான் வந்திருப்பான்.. நான் போக மாட்டேன்” என அவர் கைகளைப் பிடித்துக் கொள்ள,
“அஞ்சலி! என்ன இது சின்ன பிள்ள மாதிரி.. அவனுக்கு நீ பயப்படுறியா? இரு இப்பவே அந்த பாலாக்கு போனப் போடுறேன்” என்று கூற,
“அதெல்லாம் வேண்டாம்.. எதுனாலும் இப்ப நீங்க என் கூட தான் இருக்கனும்” என்று அவள் அவர் கைகளை விடவே இல்லை.
“ப்ச்! இவனெல்லாம் ஒரு ஆளுன்னு பயந்துட்டு இருக்க.. நீ வா என்னோட!” என்று கீழே அழைத்து வந்தார் குண சீலன் அஞ்சலியை.
காபியை ருசித்துப் பருகிக் கொண்டிருந்தான் சூர்யா. அவன் கோபமாய் வந்து கேட்டிருந்தால் கூட பரவாயில்லையோ எனும் அளவுக்கு காஞ்சனாவிற்கு பிபி ஏறி இருந்தது அவன் சாவதானமாய் அமர்ந்து காபி அருந்தும் விதம்.
அதை விட கொடுமை உள்ளே இருந்து எழுந்து வராத அஞ்சலி மேலும் கணவன் மேலும் அவ்வளவு கோபம்.
“தேங்க்ஸ் ஆண்ட்டி! நைஸ் காபி!” என்றவன் “அப்போ நான் கிளம்பவா?” என்று கேட்க,
“சூர்யா!” என்று கையை பிசைந்தவர் முகத்தில் அத்தனை பரிதவிப்பு.
“வெளில கொஞ்சம் வேலை இருக்கு.. ஒரு மூணு மணிக்கு வந்து கூட்டிட்டு போறேன்..” என்று சூர்யா அவர் முகம் பார்த்து கூற, மகிழ்ச்சிக்கு பதில் கண்ணீர் தான் வந்தது அவருக்கு.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சூர்யா.. அதனால தான் நேத்து அவளை அங்க இருந்து கூட்டிட்டு வந்துடனும் நினச்சேன்” என்று அழ,
“சரி தான் ஆண்ட்டி! கூட்டிட்டு வந்து மட்டும் பூட்டியா வைக்க முடியும்?” என்றான் புன்னகையோடு.
என்ன சொல்ல என காஞ்சனா கண்ணீரோடு நிற்கவும் கீழே வந்திருந்தனர் இருவரும்.
“சூர்யா! என் பொண்ணை என்ன பண்ணின?” என கோபமாய் குணசீலன் படிகளில் வரும் பொழுதே கேட்க, அவருக்கு பின் நின்று சூர்யாவை முறைத்தாள் அஞ்சலி.
“நான் என்ன பண்ணினேன்? அஞ்சலி நான் எதாவது பண்ணினேன்?” என்று அவளிடமே கேட்க,
“உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை.. இப்போ மட்டும் சூர்யாவை ஒரு வார்த்தை பேசுனீங்க.. நான் இந்த வீட்டுலயே இருக்க மாட்டேன்” காஞ்சனா கணவனிடம் கூற,
“ஆண்ட்டி வெயிட்!” என்றவன்,
“அஞ்சலி என் வைஃப் தானே?” என்று குணசீலனை பார்த்து கேட்க,
“அவ என் பொண்ணு!” என்றார் சத்தமாய்.
“அது நேத்து வரை.. இப்ப எனக்கு அப்புறம் தான் எல்லாரும்” என்றவன்,
“நான் வெட்டி கதை பேச எல்லாம் வர்ல.. நான் திரும்பி வரும் போது அவ என் கூட வரணும்!” சூர்யா கட்டளையாய் கூற,
“சூர்யா!” என சத்தமிட்டார் குணசீலன்.
“வரணும்! இல்லைனா நோ ப்ரோப்லேம்.. இங்கேயே வச்சுக்கோங்க.. ஆனா வேற சாய்ஸ் இல்ல!” என்று கூறவும் அவர் புரியாமல் பார்க்க,
“ஒன்னு அவ..” என்று யோசித்தவன்,
“சாரி ஆண்ட்டி!” என காஞ்சனாவிடம் கூறிவிட்டு,
“ஒன்னு அவ என் கூட வரணும்.. இல்ல காலத்துக்கும்.. நோட் பண்ணிக்கோங்க! காலத்துக்கும் வாழா வெட்…” என்று முடிக்காமல்,
“அந்த பேரோட இந்த வீட்டுல இருக்கனும்.. பட் ஐம் சூர்! இந்த ரெண்டே சாய்ஸ் தான்.. இந்த சூர்யா வேணும்னு கல்யாணம் பண்ணினவ இதே சூர்யா வேணாம்னு டைவர்ஸ் கேட்டாலும் நான் குடுக்க மாட்டேன்.. சட்டம் படிச்சவன்கிட்ட வச்சுக்காதீங்க.. எலிய விட ஓட்டை அதிகமா தெரியும் எனக்கு” என்று கூற, அஞ்சலிக்கு சூர்யாவைப் பார்த்து அப்படி ஒரு பயம் வந்தத்தோடு தன் வாழ்க்கை மீதே பயம் வந்தது.
“நான் அவன் கூட போக மாட்டேன்!” அஞ்சலி சட்டென கூற,
“நான் இந்த வீட்டுல உன்னை வச்சுக்க மாட்டேன்!” என்றார் காஞ்சனா.
“ம்மா!” என்று கண்களை விரித்த அஞ்சலி,
“பாருங்க ப்பா! அம்மா என்ன சொல்றாங்கன்னு!” என்று கூற, குணசீலனே ஆடி போயிருந்தார் சூர்யாவின் இந்த அழுத்தமான பதிலில்.
“நான் தான் நேத்தே சொன்னேனே உன்கிட்ட.. இனி அது தான் உன் வீடு.. இது இல்லன்னு.. அப்புறம் என்ன தைரியத்துல நீ இங்கே வந்த? அதுவும் என்கிட்ட சொல்லலைனாலும் பரவால்ல.. என் அம்மா, மல்லி ம்மான்னு நீ வந்தது யார்க்குமே தெரியல.. உனக்கு என்ன அவ்வளவு அகம்பாவம்?”
பெற்றவர்கள் கண் முன்னேயே சூர்யா அஞ்சலியைக் கேட்க, கஷ்டம் தான் என்ற போதிலும் மனதை இரும்பாக்கி நின்றார் காஞ்சனா.
அவளுக்கு ஏதோ ஒரு அதிர்ஷ்டம்.. அது தான் சூர்யா கிடைத்திருக்கிறானோ? என்று அடி மனதில் ஒரு எண்ணமும் ஓட தான் செய்தது.
“சூர்யா! அவ்வளவு தான் உன் லிமிட்.. என் முன்னாடியே என் பொண்ணை…” என்று குணசீலன் பேச வர,
“இப்ப நான் இப்படி பேசி இருக்க கூடாதுன்னா.. அவ வந்த உடனே நீங்க உள்ள விட்ருக்க கூடாது.. இல்ல எனக்கு கூப்பிட்டு கேட்ருக்கணும்.. என்ன பண்ணீங்க?” என்று நேராய் கேட்க, சிறுவன் தன்னை கேள்வி கேட்பதைப் போல அவமானமா மை உணர்ந்தார் குணசீலன்.
“உங்க வழக்கப்படி இந்நேரம் என் பெரியப்பாக்கு விஷயம் போயிருக்கணுமே? ஆச்சா?” என்று கேட்க,
“இல்ல சூர்யா போகல.. நான் போக விடல!” என்றார் காஞ்சனா வேகமாய்.
“எப்படி ஆண்ட்டி இவங்க கூட இத்தனை நாள்..?” என்று தலைவிதி என்பதைப் போல அவன் நெற்றியில் கோடிழுத்துக் காட்டி,
“தெய்வம் நீங்க!” என்றான் காஞ்சனாவை.
“கொஞ்சமே கொஞ்சம் உன் அம்மாகிட்ட இருந்தும் கத்துக்கோ.. வாழ்க்கைக்கு நிறைய உதவும்” என்று அஞ்சலியைக் கூறி வெளியேற போனவன்,
“நான் சொன்னதுல எந்த மாற்றமும் இல்ல..” என்று மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி விட்டு,
“பை ஆண்ட்டி!” என அவரிடம் மட்டும் கூறிவிட்டு செல்ல, அவன் சென்றதும் ஆடத் தொடங்கி விட்டாள் அஞ்சலி.
“அவன் என்ன சொன்னாலும் நான் போக மாட்டேன்” அஞ்சலி முடிவாய் கூற,
“இவ இருக்குற இந்த வீட்டுல நான் இருக்க மாட்டேன்! அது மட்டும் இல்ல.. இன்னைக்கு போறவ இந்த வீட்டுக்கு இனி அவ வரணும்னா புருசனோட வந்தா வரட்டும்.. இல்ல எங்கேயோ போகட்டும்!” என்றார் அவளுக்கு மேல் கோபமாய் காஞ்சனா.
“இங்க பாருங்க! மருந்து கசக்க தான் செய்யும்.. ஆனா உடம்பை குணப்படுத்தும்.. இப்போ புரிஞ்சி நடந்திங்கன்னா உங்க பொண்ணு வாழ்க்கைக்கு நல்லது.. இல்லைனா உங்களுக்கு பொண்டாட்டின்னு நான் இனி இல்ல.. இந்த ஒரு முறையாவது சொல்றதை கேளுங்க.. இல்லைனா அப்பாவும் பொண்ணும் எக்கேடோ கெட்டு போங்க!” என்று விட்டு வேகமாய் அங்கிருந்து சென்று விட்டார்.
கணவன் மேலும் மகள் மேலும் அத்தனை கோபம்.. என்ன வளர்த்தோம் என்று தன் மேலும் கோபம். நிறைய அன்னைகள் செய்யாத தவறு தான் என்றாலும் தந்தைகளால் பட்டுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.
“அப்பா!” அன்னை தீர்க்கமாய் சொல்லி செல்லவும் அஞ்சலி தந்தையைப் பார்க்க,
“நீ சூர்யா கூட போ அஞ்சலி! கொஞ்ச நாள் பாரு.. நானும் சூர்யாகிட்ட சொல்லி வைக்குறேன்.. எல்லாம் சரி ஆகிடும்.. நீ என் பொண்ணு இல்ல.. பயந்து ஓடலாமா?” என்று மண்டையை கழுவிய குணசீலனுக்கு பயம் வந்திருந்தது என்பது உண்மை தான்.
அதற்கு மேல் தன்னைக் காப்பாற்ற, எங்கேயும் செல்ல என யாரும் இல்லை என்பதை தெளிவாய் உணர்ந்தாள் அஞ்சலி.
மாலை ஹார்ன் சத்தம் வெளியே கேட்கவும் பெட்டியோடு காஞ்சனா வந்தவர்,
“நான் வரலைனு நீங்க நினைக்காத வரை சந்தோசம் ஆண்ட்டி!” என்றான் சூர்யா.
பொம்மையாய் நடந்து வந்தவள் காரில் ஏறி அமர, காஞ்சனாவும் குணசீலனும் பார்த்தபடி நிற்க, கார் கிளம்பி இருந்தது.
“நான் தான் சொன்னேனே டெவில்.. என் வீட்டை தாண்டி நீ எங்கேயும் போக முடியாதுன்னு.. பிளான் இல்லாம இந்த சூர்யா எதையும் பண்ண மாட்டான்” என்று கூறியவன் நேராய் வீட்டில் அழைத்து வந்து விட்டான் அஞ்சலியை.