கதவை திறக்கவுமே வீர வசனம் பேசி தன் முன் விரல் நீட்டியவள் விரலை நொடியும் யோசிக்காது பிடித்து வளைத்து இருந்தான் சூர்யா.
“ஏன்டி! உனக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா டொமட்டோ சாஸா?” என்று பிடித்த விரலை விடாமலே கேட்க,
“வலிக்குது சூர்யா! விடு!” என்றாள் கத்தலோடு.
“உன்கிட்ட என்ன சொன்னேன்? நம்ம பிரச்சனை நம்மோட.. வீட்டுல அம்மா பெரியம்மா முன்னாடி எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா? அந்த பேசிக் சென்ஸ் கூடவா டி இல்ல? என்னவோ திறந்த வீட்டுக்குள்ள நுழைஞ்ச மாதிரி நீயா வர்ற நீயா போற.. இன்னொரு தடவை நான் எல்லார் முன்னடியும் எதாவது சொல்ற மாதிரி வச்சுக்காத.. சீரியஸ்லி அந்த சூர்யா வேற மாதிரி இருப்பான்.. என்னோட பேமிலிக்கு அப்புறம் தான் எதுவானாலும், யாரானாலும்..” என்று கூறியபடி விரலை விட, கையை உதறினாள் அஞ்சலி.
“ரொம்ப நல்லவன் மாதிரி பேசாத.. ஊருக்கு ஒரு வேஷம்.. வீட்டுக்கு ஒரு வேஷம்.. நீ நல்லவன்னு என்னை நம்ப சொல்றியா? அதான் பார்த்தேனே ஒரு பொண்ணுக்கு டாட்டா காட்டினதை..” என்று கூறவும் அவன் அவளைப் பார்த்தபடி நிற்க,
“கையில காசு இல்லாம வாங்கின எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு அசிங்கப்பட்டு வந்தேன்.. தெரியுமா உனக்கு? நான் என்ன செலவு பன்றேனே கேட்காத என் அப்பா என்கிட்ட சொல்லாமலே கார்டை பிளாக் பண்ணி இருக்காங்க.. எவ்வளவு அவமானமா போச்சு தெரியுமா? நீ சிரிச்சுட்டு நிக்குற.. எனக்கு எப்படி இருக்கும்?” என்று அவள் தரப்பினை கூற,
“அதானே பார்த்தேன்! என் பொண்டாட்டிக்கு போசேஸ்ஸிவ்நெஸ் வந்துட்டோனு கொஞ்சம் ட்ராக் மாத்தி யோசிச்சுட்டேன்.. எலி எப்படி முயல் ஆகும்..” என்றவன் பேச்சில், மீண்டும் விரல் நீட்டியவளை சட்டென அவனும் பிடிக்க போக, உடனே கைகளை மடக்கிக் கொண்டாள்.
“இன்னும் ஒரு தடவை விரல் மேல வந்துச்சு..” என்றவன் முதல் நாள் போலவே நாக்கினை மடக்கி விரலை ஆட்டி மிரட்ட,
“நீ எல்லாம் மனுஷனா? உன் அண்ணனை வேண்டாம்னதே அந்த சிடுமூஞ்சி என்னை இன்டிபெண்டண்டா இருக்க விட மாட்டான்னு தான்.. குடும்பமே அப்படி தான்னு தெரியாம உன்கிட்ட போய் மாட்டிக்கிட்டேனே!” என்று தலையில் அடித்துக் கொள்ள,
“பத்தல! இன்னும் கொஞ்சம் ஃபோர்ஸா அடிச்சுக்க..” என்றவன், ஒரு நக்கல் சிரிப்புடன்,
“ஆனா கடவுள் வச்சான் பார்த்தியா ஆப்பு! நிஜமா நீ மட்டும் ஜெய்யை கல்யாணம் பண்ணிருந்தா நீ நினைச்சதை விட ஹாப்பியா இருந்திருக்கலாமோ என்னவோ! எலிக்கு சூனியக் கயித்தை கடவுள் என்கிட்ட கொடுத்துட்டான்.. அவன் தப்பிச்சு உன்னால நான் எனக்கு நானே தண்டனை கொடுத்த மாதிரி போராடிக்கிட்டு இருக்கேன் தினம் உன்னோட!” என்று தானும் தலையில் அடித்துக் கொண்டவன்,
“இங்க பாரு! நீ சாப்பிடு இல்ல சாப்பிடாம இரு.. ஆனா தினமும் காலையில, மதியம், நைட்டுன்னு மூணு நேரமும் டைனிங் டேபிள்ல ஆஜர் ஆகுற.. இன்னும் ஒரு தடவை மல்லி ம்மாகிட்ட இருந்து ஒரு வார்த்தை அஞ்சலி பாவம் பிஞ்ச எலி பாவம் சாப்பிடலைனு கம்பளைண்ட் வர வச்ச…” என்றவன் முறைத்ததில் இவளும் முறைத்துப் பார்க்க,
“எங்க போக! இனி போய் நான் தண்டவாளத்துல தலையை தான் வைக்கணும்.. அப்பா வீட்டுக்கும் போக கூடாது, ஷாப்பிங் கூட போக முடியாது…” என்று அடுக்கியவள் முடிக்கும் முன்பே,
“அது உன் இஷ்டம்!” என்கவும் ஆ என்று அவள் பார்க்க,
“லோக்கல் ட்ரெயினா இல்லாம நல்லா எக்ஸ்பிரஸ் ட்ரைனா பார்த்துக்கோ!” என்று சொல்லி வெளியேற சென்றவன்,
“உன் அப்பா உனக்கு செஞ்ச வர போதும்.. வெளில போறதுன்னா சொல்லிட்டு போனின்னா அதுக்கேத்த மாதிரி உன் அக்கௌன்ட்க்கு காசு வரும்.. காலையில கொஞ்சம் கரைச்சல் குடுக்காம சொல்லிட்டு கிளம்பி இருந்தின்னா நானே பாவம் பார்த்து போட்டு விட்ருப்பேன்.. திமிரா போகவும் தான் வேணும்னு சொல்லல.. இது தான் உனக்கு லாஸ்ட் லெசன்.. புரிஞ்சிருக்கும் நினைக்குறேன்” என்றவன்,
“உன் அப்பா மாதிரி கணக்கில்லாம அள்ளி கொட்ட முடியாது.. எது வாங்கினாலும் பில் அனுப்பு.. அதுக்கான கேஷ் தான் தர முடியும்” என்று கூறி வெறுப்பேற்றியவன்,
“பத்து நிமிஷம் தான் டைம்! அதுக்குள்ள சாப்பிட கீழ வர்ற!” என்று கூறி சென்றுவிட, கத்தி அழ வேண்டும் போல் வந்த அழுகையை கூட அவன் அனுமதி இல்லாமல் விட முடியவில்லை அவளால்.
“கொஞ்சம் சந்தோசமா வர முடியுதா… எதாவது ஏழரையை இழுத்து வச்சுடுறா” என்று புலம்பியபடி அன்னையை பார்க்க வர, அங்கே டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார் பால நாதன்.
“எத்தனை கேட்’டு!”நினைத்துக் கொண்டவன், ஜனனியிடம் பேசியதை அனைவரிடமும் கூற அத்தனை ஆவலாய் இருந்தான்.
“எப்ப டா வந்த?” என்று பாலா கேட்க,
“இப்ப தான் பெரியப்பா! பத்து நிமிஷம் இருக்கும்” என்றான் அடக்கமாய் அவரிடம்.
“அஞ்சலி எங்க? பார்க்கவே முடியல?” என்று அவர் கேட்கவும்,
“இவரு அந்த ரூமை விட்டு வெளில வந்தா தானே பார்க்க முடியும்?” என்று மல்லிகா சமையலறைக்குள் முணுமுணுத்து கோபத்தைக் காட்ட,
“அவளும் தான க்கா? கொஞ்சமும் வீட்டோட சேர மாட்டுக்குறா.. சூர்யாவை நினச்சா அதுவே பயமா இருக்கு” என்றார் பிரேமாவும் உள்ளிருந்து தங்களுக்குள்ளே.
“அதுக்கு தான் அவளை கொஞ்சம் அனுசரிச்சு போகலாம்னு சொல்றேன் பிரேமா!” என்றார் மல்லிகா.
“இதை மட்டும் சூர்யா கேட்டான்.. நீங்க தொலைஞ்சிங்க.. அனுசரிக்கலாம் தப்பில்ல தான் க்கா.. ஆனா அதுக்கும் ஒரு அளவு இருக்கு.. அஞ்சலி பண்ணினது என்ன சின்ன விஷயமா தூக்கி போட்டுட்டு போக” என பிரேமா கூற, பதில் பேசவில்லை மல்லிகா.
எப்போதடா பெரியப்பா அந்த இடத்தை விட்டு கிளம்புவார் என சூர்யா பார்த்துக் கொண்டிருக்க, நிறுத்தி நிதானமா மை டீயைப் பருகிக் கொண்டிருந்தார் அவர்.
“உன் அண்ணன் என்ன சொல்றான்?” என்று சூர்யாவைப் பாராமலே அவர் கேட்க,
“எதைப் பத்தி பெரியப்பா?” என்றான் சூர்யா.
“எதைனா? எல்லாத்தையும் தான்.. வீட்டுல சரியாவே இருக்குறது இல்ல.. முன்னாடி மாதிரி பேசுறது இல்ல.. இப்படி சுத்தினா என்ன அர்த்தம்? நடந்தது நடந்து முடிஞ்சிட்டுன்னு அடுத்ததை பார்த்து போக வேண்டாமா?” என்று அவர் கேட்க, சூர்யாவிற்கு மட்டும் இன்றி மல்லிகா, பிரேமாவிற்குமே ஆச்சர்யம் அதிர்ச்சி தான்.
‘இந்த அளவிற்கு வீட்டையும் அவனையும் கவனித்திருக்கிறாரா?’ என்று தான் தோன்றியது அனைவருக்குமே.
“என்ன டா கேட்டுட்டு இருக்கேன் பதிலே காணும்?” என மீண்டும் கேட்க,
“இல்ல பெரியப்பா! எப்படினாலும் கொஞ்சம் ஸ்டாபிள் பண்ணனும்ல? கிளினிக்ல போற வர்றவன் எல்லாம் யாரோ பண்ணின தப்புக்கு அண்ணனை நேருக்கு நேரா கேட்கும் போது கஷ்டமா தானே இருக்கும்?” என்றவன் மேலிருந்து இறங்கி வந்த அஞ்சலியை குறி வைத்து தான் கூறி இருந்தான்.
“அது சரி தான்!” என்று டீ கப்பை கீழே வைத்தவர், “வா ம்மா!” என்று கூறவும் மெல்லிய புன்னகை அவள் சிந்த அதை கவனிக்கவும் செய்தான் சூர்யா.
“சாப்பிட்டியா அஞ்சலி? வீடு எல்லாம் உனக்கு ஓகே தானே? நல்லா பேசுறாங்களா எல்லாரும்?” என அஞ்சலியிடம் விசாரிக்க,
“நல்லா இல்லைனா என்ன பண்ணுவாராம்?” என்ற மல்லிகா கேள்வியில் சிரித்தார் பிரேம்.
அவளும் நல்ல விதமாகவே பதில் கூறி இருக்க, சூர்யா அதை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“வேற பொண்ணு வேணா பார்த்து உடனே கல்யாணத்தை முடிச்சி வச்சிடுவோமா அவனுக்கு?” திடிரென்று பாலா சூர்யா பக்கம் திரும்பி இப்படி கேட்க,
“இந்த மனுஷனை!” என்று வேகமாய் வெளியே வர இருந்த மல்லிகாவைப் பிடித்துக் கொண்டார் பிரேமா.
“பேசாம இருங்க க்கா! பார்த்துக்கலாம்..” என்று அவர் சமாதானப்படுத்த,
“இல்ல பெரியப்பா! ஏற்கனவே அண்ணனுக்கு கேட்காம எல்லாம் பண்ணி தான் அவன் ஹர்ட் ஆகி இருக்கான்.. இப்ப மறுபடியும் உடனே அதை பேசணுமா? நான் வேணா முதல்ல பேசி பாக்குறேனே..” என்று சூர்யா தயங்காமல் தனக்கு தோன்றியதை கூறி விட,
“நான் சொல்றதை மறுத்து பேசுற அளவுக்கு நீ கூட வளந்துட்ட.. ம்ம்!” என்றவர் எழுந்து செல்ல, கவலையாய் போனது சூர்யாவிற்கு.
“ப்ச்!” என்று டேபிளில் குத்தியவனை கண்களை சுருக்கிப் பார்த்தாள் அஞ்சலி.
“பட்டது போதாதாமா இந்த மனுஷனுக்கு.. உன் அண்ணன் இவரை பேசுறதுல தப்பே இல்ல டா” என பாலா சென்றதும் வந்து மல்லிகா கூற,
“நினச்சா நினைச்சுட்டு போகட்டும்னு விடு.. புத்தி போகுது பாரு.. என் பையன் மனசு வெறுத்து போய் சுத்துற அளவுக்கு கொண்டு வந்துட்டு மறுபடியும் பொண்ணு பாக்க போறாராம்” என்று புலம்பி தள்ள, அவர்கள் பேச்சு அனைத்துக்கும் காரணமானவள் எதுவும் பேச முடியாமல் அமர்ந்திருந்தாள்.
மிக தாமதமாகவே அவளை கண்ட மல்லிகாவும் சூர்யா, அஞ்சலி, பிரேமா என மாறி மாறி பார்க்க, பிரேமாவும் சூர்யாவும் சிரித்துவிட்டனர் அவர் பார்வையில்.
“சும்மா இரு டா!” என சூர்யாவை மல்லிகாவே அதட்டி,
“அஞ்சலி! நீ எப்ப வந்த? என்ன சாப்புடுற? நான் அவரு மேல இருந்த கோபத்துல பேசினதை நீ பெருசா எடுத்துக்காத மா” என்று கூற, அவர் பேசியதே புரியவில்லை எனும் பொழுது மன்னிப்பு கேட்பது ஏன் என அஞ்சலிக்கு புரியவா போகிறது?.
“எல்லாம் இந்த ஆளால!” என மீண்டும் கணவனை பேச தொடங்க,
“ப்ச்! மல்லி ம்மா! ஏன் இவ்ளோ டென்ஷன்?” என்றதும்,
“எப்படி தான் சலிக்காம இந்த வார்த்தையை சொல்றயோ டா” என சலித்துக் கொண்டார் பிரேமா.
அதற்குள் மிதமான சூட்டில் கேசரியை கொண்டு வந்து அஞ்சலி அருகே மல்லிகா வைக்க,
“ஸ்வீட் செய்ய சொன்னது நானு!” என்றான் சூர்யா.
“இருக்கட்டும் டா.. உனக்கும் எடுத்துட்டு வர்றேன்.. அஞ்சலி மதியமே சாப்பிட்ட மாதிரி தெரியல.. அவ சாப்பிடட்டும்” என்று உள்ளே செல்ல, நொடி நேரம் என்றாலும் அஞ்சலியை முறைத்து திரும்பி இருந்தான் சூர்யா.
“இது தான் என் அன்னை!” என்ற அவன் கண் பாஷை மட்டும் அவளுக்கு புரியுமா?. ஆனாலும் ஏதோ செய்தது தான் அஞ்சலிக்கு உள்ளுக்குள்.
வெளியே வரவே இல்லை.. யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை. பிரேமாவை விட மல்லிகா அவளை கவனித்த, இப்பொழுது கவனிக்கும் விதம் என அவளுக்குள் எதுவோ செய்தாலும் அதை எல்லாம் மூளைக்கு எடுத்துக் கொள்ளவில்லை அவள்.
“சரி சொல்லு! ஸ்வீட் சாப்பிடற அளவுக்கு என்ன. குட் நியூஸ்?” என பிரேமா கேட்க, மல்லிகாவும் வந்துவிட்டார் அவன் பதிலை கேட்க வேண்டி.