பெண்கள் அனைவரும் கிளம்பியதும், என்ன தான் ‘ஸ்விட்டி ’ என்று நாமகரணம் சூட்டிக்கொண்டாலும், அவளின் இயற்பெயர் என்ன என்று தெரிந்துக்கொள்ளாமல் விட மனசற்றவனாய் நண்பனிடம் கண்ணசைக்க, பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கு இனங்க பாலாஜி, “உங்க பெயர் தெரிஞ்சுக்கலாமா? If you don’t mind!”
வென்முகிலின் அருகில் நின்ற விதுனா, “yes I mind”ன்னு சொன்னால் என்ன செய்வான் இந்த கடோத்கஜன்” என்று அவள் காதில் முனுமுனுக்க
கடோத்கஜன் என்ற பெயரில் சட்டென சிரிப்பு வர, முயன்று முறுவலை கட்டுபடுத்தியவளால் கண்களில் தொன்றி மறைந்த சிரிப்பை மறைக்கமுடியவில்லை.
அந்த மிண்ணலை கண்ட வீரேஷின் மனது நின்று துடிக்க, வலது கையால் தலையை அழுந்த கோதியவன் முகத்தை பக்கவாட்டில் திருப்பி சத்தமின்றி ஆழ்முச்செடுத்து நிதானிக்க, கேட்க்க சொன்னாலும் அவனுக்கும் மனதினில் தோனியது அவள் நிச்சியமாக பெயரை சொல்லப்போவதில்லை என்றே.அவளோ கூலாக “மேஹா” என்று கூற, அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்துகொண்டிருந்தனுக்கு சர்வநிச்சியம் அது அவளின் உண்மையான பெயராக இருக்க வாய்ப்பேயில்லை என்று. அப்படி எல்லாம் கவனிக்காததினாலோ என்னமோ பாலாஜி அவனின் பெயரை கூறி கை நீட்ட, கைகுலுக்கியவள், விதுனாவை பார்க்க அவளோ கண்சிமிட்ட இதற்குமேல் முடியாமால் மெலிதாய் புண்ணகைத்தவள் “Thanks for taking care of it!” என்றபடி விடைபெற்றனர்.
அவனை தாண்டி கடையின் வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்ததும்விதுனா, “நான் வச்ச பெயர் தான் சரியா இருக்கு இல்லை வென்ஸ் “என்றபடி கலகலக்க..
“பேசாமல் வாடி கடையை விட்டே இன்னும் தாண்டல கேட்டுவிட போகுது!” என்றபடி வீரேஷை தாண்டி செல்ல
அதுவரை அமைதியாய் இருந்தவன் “உஃஃப்” என்று பெருமுச்சு விட்டு இரண்டு கைகையும் தலைக்குமேல் தூக்கியவன் மெதுவாய் தலைக்கும் பின் கோர்த்தவன் சிரித்தபடி கால்களால் இல்லாத பந்தை உதைப்பதாய் பாவனை செய்ய, நண்பர்கள் கூட்டம் இந்த நாடகத்தை பார்த்து, “ஹோ…” என இரைய
அவனின் முகத்தில் லேசான வெட்க்கத்தின் சாயல்…
“மச்சான், என்னடா வெட்க்கம் எல்லாம் படுற! இன்னும் எதயெல்லாம் பார்க்க வேண்டி இருக்குகோ! கஷ்டகாலம்!”
“எத்தனை பேரை ஓட ஓட விட்டுருப்ப, இப்போ உன் நிலமை இப்படி ஆகிடுச்சேடா!”
“அதுஎப்படி “I have to keep my heart safe for my sweetheart!”அய்யாராஜா sweetheart கிடைதாச்சுபோலவே!”
“டேய் நீங்க வேற, கார்ல வரும் பொழுது என் உயிரை கையில பிடிச்சுகிட்டு வந்தேன்டா! கனவு என்ன! சிரிப்பு என்ன! மொத்தமாய் உயிரோடு வந்து சேர்ந்ததே புண்ணியம்!” என்று காலையில் நடந்தை எல்லாம் படம் போல் கதை சொல்ல
“ஹேய் என்ன சொல்ற இவனை பார்த்தும்மா அடையாளம் தெரியலை இவன் முகம் தான் வாரத்திற்கு ஒருமுறை பேப்பரிலோ மாகஸின்ல்யோ வருதே!”
“எனக்கு தெரிஞ்சு அந்த பொன்னு இவனை பார்க்கவே இல்லை!”
“சுத்தம்! ரொம்ப கஷ்டம்!”
“ஆனா இஷ்டமான் கஷ்டம்” என்று ஒவ்வொருவரும் மாற்றி கலாய்த்துதள்ள அனைத்தையும் ஒரு புண்ணகையுடன் ஏற்றவன்
“இவனுக்கு மேல இருக்கும் போல இருக்குடா! குரல உயர்த்தல சத்தம் போடல ஆனா சொன்னத செய்ய வச்சிடுச்சுடா! செம ஷார்ப்!” என்ற பாலாஜி கலாய்க்க
“பாலா, உண்மைடா. கஷ்டம் தான்!பெயர்கூட தெரியாது. இதில் எப்படி கண்டுபிடிக்க?!” என்று யோசனையுடன் சுருக்கிய புருவத்தை இடது கை கட்ட விரல் நகத்தால் நிரடியபடி கூறினான் வீரேஷ்.
“அதுதான் ‘மேஹா’ ந்ன்னு சொன்னாங்களேடா.”
“அது உண்மையான பெயர் இல்லை உன்னை மாதிரி யாராவது கேட்டா சொல்லுவதற்குன்னு வச்சுருக்குற பேர்” என்றவன் பக்கேன்று சிரிக்க “ஆனாலும் ஒரு நிமிஷம் கூட அசரவில்லையே! ”.
“கண்டிப்பா, காலேஜ் ஸ்டுடண்ட் அண்ட் அ ஹொஸ்டலராக(hosteler) தான் இருக்கனும்”
“மதுரையில் தடுக்கி விழுந்தா கோவில்ங்கிறது மாறி, இப்போ எங்க திரும்பினாலும் காலேஜ். இதில் எந்த ஊரிலிருந்து வந்து படிக்குகிறாங்களோ எந்த காலேஜில் படிக்கிறாங்களோ யாருக்கு தெரியும். ஆனா உனக்கு செம டஃப் (tough) கொடுப்பாங்க போல இருக்கு. என்ஜாய்!”
“ஐ ஆம் என்ஜாயிங்” கண்களில் குறும்புடனும் உதட்டில் மந்தகாச சிரிப்புடன் கூறிய வீரேஷ். “கிவ் மீ அ செகண்ட்” (give me a second) என்று அவனின் அலைபேசியில் வந்த விக்ரமின் அழைப்பை எடுத்தவன் அடுத்த நிமிடம் முற்றிலும் வேறு மனிதன் ஆகி இருந்தான்.
நோடியில் பிஸினஸ் மோடிற்கு மாறியவன், விக்ரம் செய்யவேண்டியவைகளை பட்டியளிட்டான்.அதுவரை இருந்த இலகு தண்மை மறைந்திருந்தது. தான் நாளை மதியம் கிளம்புவதாகவும், அதற்க்கும் முன் தன்னுடய பார்வைக்கு வரவேண்டிய
கோப்புகள் எதேனும் இருந்தால் மின் – அஞ்சல் செய்யுமாறு கூறியவன் விக்ரமிடம் இன்றய நிகழ்வுகளையும் நாளை மறுநாள் தன்னுடய ஸ்கெட்டியுள்(schedule) என்ன என்றும் கேட்டுக்கொண்டான்.
இரவு தான் வரவேற்பு என்பதினால் பாலாஜி, மற்றும் உள்ளுர் நண்பர்களும் அவர்களுடன் அறைக்கு செல்வதாகவே முடிவு செய்திருந்தனர். வீரேஷுடன் அதிக நேரம் வெளியே சுற்றி திறிய முடியாது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், வெளியே இருப்பதை விட, அறையில் இருக்கும் பொழுது இன்னும் எந்த வித ஒப்பனைகளும் இன்றி கல்லூரி காலத்தில் இருந்தது போலவே இருக்க முடியும் என்பதும் ஒரு முக்கிய காரணம்.
வழக்கம்போல் அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து பேசி கலாய்த்து என்று பொழுதை களிக்க, மாலை வரவேற்ப்பில் அவர்கள் நட்பில் முதன் முதலாய் திருமண பந்தத்தில் குதிக்கும் ஆளாய் இருப்பதினால் மாப்பிள்ளையை அனைவரும் ஏகத்திற்கு கலாய்க்க, புத்தம்புது மனைவியின் முன் மானத்தை வாங்குறானுங்ளே என்று மனதிற்குள் கறித்துக்கொட்டினாலும் அனைத்தையும் வேறு வழியில்லாமல் புன்னைகையுடன் ஏற்றுக்கொண்டான். நண்பர்களின் திருமணத்திற்க்கு செல்வதற்கு இரண்டே காரணம் தான், ஒன்று இதை ஒரு சந்தர்ப்பமாய் எடுத்து கூடிக்கும்மியடிக்க. மற்றது, கல்யாணம் ஆகாத நண்பர்கள் என்றால் அவனின் வாழ்க்கை இனி முன் போல் இருக்கபோவது இல்லை என்று கலாய்க்கவும், கல்யாணம் ஆன நண்பர்கள் என்றால் “வாடா மச்சான், வந்து நீயும் ஜோதியில் ஐக்கியமாகு என்று தோள் கொடுக்கவும்” தான். கல்யாணங்களில் மணப்பெண்ணையும், மணமகனையும் விட அதிக சந்தோஷத்தில் உழா வருவது இந்த நண்பர்களே.
அந்நேரம் வீரெஷின் அலைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வர,விக்ரம்ற்கு அழைத்தவன்,
“வாட் இஸ் ஹாப்பனிங் தேர்?”என்று கிட்டதட்ட உறும
“சார்!”
“எப்படி நடந்தது? அந்த பிராஜக்ட் நம் ஒரு சிலர் தவிர வேறு யாருக்கும் தெரியாது! அப்படி இருக்கும் பொழுது இது எப்படி சாத்தியமானது? ”
“சார், நான்.. ” என்று அவன் தடுமாற
“நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கிருந்து கிளம்பிடுவேன். கால் மீ இன் அன்அவர்.(call mein an hour!) அதற்குள் எனக்கு எப்படி இது நடந்தது என்கிற டீடைல் வந்தாகனும்.” என்று அடிக்குரலில் சீறியவன், நண்பர்களிடம் சில இஸ்யுஸ் தான் உடனடியாக கிளம்பவேண்டும் என்றும், நாளை கல்லூரிக்கு தன்னால் வர இயலாது என கூறி அடுத்த நிமிடம் தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
விக்ரம், வீரேஷின் PA. வீரேஷின் தந்தை ஆரம்பித்த அறக்கட்டளையின் மூலம் படித்தவன். முதலில் இண்டேர்னாக சேர்ந்தவன், தன்னுடைய திறமையினானலும், நேர்மையினாலும் மட்டுமே கடந்த இரண்டு வருடங்களில் ‘பவர்புல்’(powerful) வீரேஷின் பி.ஏ வாக உயர்ந்திருக்கிறான்.இப்பொழுதுமே வீரேஷின், சந்தேகம் விக்ரமின் நேர்மையிலோ அவனின் செயல்த்திறனிலோ அல்ல, அவர்களை மீறி ஒரு விஷயம் வெளியே சென்றிக்கிறது என்றால் அதன் மூல காரணம் தெரிந்தாகவேண்டியது இருந்தது.
விக்ரம் இது வரை அவன் தந்தை நடத்திய தொழில்கள் விரிவு படுத்தியது தவிர, புதிதாக தானியங்கி மோட்டார் வாகனத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ப்ரொஜெடை ஆரம்பிக்கவிருக்கிறான். இதை ஜெர்மனியிடம் இருந்து எடுத்து செய்வதற்க்கான முதல் இரண்டு கட்ட பேச்சு வார்தைகள் முடித்து இப்பொழுது quotation கொடுக்கும் நிலையில் இருக்கிறது. அந்த ப்ராஜக்டை ஜெர்மனியிடம் இருந்து கைபற்றுவற்காக அவர்களின் போட்டி கம்பனிகளும் முயன்று கொண்டிருந்தது. இவன் அதற்குள் அனைத்து வேலைகளும் முடிந்து இன்னும்இரு நாட்களில் அப்பிலிக்கேஷனை (application) சம்ர்பிக்க கடைசி நாள் என்ற நிலையில், அவர்களின் போட்டி கம்பனியில் இவனின் டெண்டர் quotation கசிந்துவிட்டதாகவும், அவனின் மதிப்பை விட குரைத்து quotation அனுப்பியிருப்பதாகவும் வந்திருந்தது.
இந்த ப்ராஜக்ட் சம்பந்தமான எல்லா வேலையும் வீரேஷ்ன் நேரடியாக ஈடுபட, அவனை தவிர விக்ரம் மற்றும் கதிருக்கு மட்டுமே அதன் ஒவ்வொரு விஷயமும் தெரியும். இப்பொழுது இந்த கொடேஷன் வெளி ஆட்களுக்கு கசிந்திருக்கிறது அவனின் மொத்த கனவையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
வண்டியில் எரியதும் தான்தங்கிருந்த ஹோட்டலுக்கு அழைத்தவன் தான் இப்பொழுதே ரூமை காலிசெய்வதாகவும், அதற்கு தேவையான சம்பிரதாயங்களை முடித்துவைக்கும்படி கூறியவன் அடுத்த அரை மனி நேரத்தில் தன் உடைமைகளை எடுத்துகொண்டு எல்லா பார்மாலிட்டீசையும் முடித்து சென்னைக்கு கிளம்பியிருந்தான்.
“அப்படி தெரியலை சார்! அந்த xxx company அவர்கள் தான் இந்த ப்ராஜக்டிற்கு போட்டியிடுகிறார்கள். அங்கே அவனின் நண்பனும் வேலை செய்கிறான். அவர்களுக்கும் நம்மை பற்றின எக்சாக்ட் டிடைல்ஸ்(exact details) தெரியலை ஆனால் சம்ஹொவ்(somehow) they’ve predicted very close to our quote!” என்று தன்மையாய் தான் இதுவரை சேகரித்த விஷயத்தை எந்த ஒரு செயற்கையான பூச்சும் இன்றி உள்ளதை உள்ளபடி எடுத்துவைக்க.
“அது தான் எப்படி? Unless and until he has spilled the beans knowingly or unknowingly! நாலையிலைருந்து அவன் நண்பனுடனே போய் வேலை செய்ய சொல்லு! ஈ டொண்ட் வாண்டு சீ ஹிம்”.என்று சீறினான். ஆம், இதுதான் வீரேஷ்! நிர்தாட்ஷண்யம்! தவறு என்று தெரிந்தால் மன்னிப்பே கிடையாது! அதுவும் இந்த பிராஜெக்ட் எவ்வளவு முக்கியமனது என்று தெரிந்தும் கதிர் செய்தது மன்னிக்க முடியாதகவே தோன்றியது.
“சார்! !” என அதிர்ந்தவன். என்ன தான் இந்த இரண்டு வருடங்களாய் வீரேஷின் கூடவே இருந்தாலும் அவனின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு தெரிந்திருந்தாலும் அவனின் நிர்தாட்சன்யம் அவனுக்கு எப்பொழுதுமே ஒரு வித தவிப்பையே தரும். சிறிது நிக்குபோக்காக நடந்துகொள்ளலாம் என்பதே அவன் கருத்து. இத்தனைக்கும் அவன் ஒன்றும் மனதில் இறக்கம் அற்றவன் அல்ல அதற்க்கு அவனும் அவன் குடும்பமும் செய்யும் எத்தனையோ நற்காரியங்கள் கட்டியம் கூறினாலும், தொழில் முறையில் அவனின் முகம் சிம்ம முகமே!
“நாளை காலை 6 மனிக்கு நம் ஆபிசில் பார்க்கலாம்” என்று அவன் அதிர்ந்ததை பொருட்படுத்தாமல் கூறியவன்.ஹாண்ட்ஸ்–ப்ரியை அனைத்து விட்டு காரை ஓரம் கட்டி நிறுத்தியவன். ஆழ்மூச்சுக்கள் எடுத்து தன்னை நிதானபடுத்த முயன்றான். தன் தலை முடியை வலது கையால்கோதியவன், கார் பானட்டில் சாய்ந்தவாறு கைகளை கட்டிக்கொண்டு கண்மூடி யோசித்தான். சில நிமிடங்களில் எதொ முடிவெடுத்தவனாககாரில் இருந்து தன் கைபேசியை எடுத்தவன், விக்ரமிற்கு குறுன்செய்தி அனுப்பிவிட்டு காரில் எறினான். ஒரு முடிடு எடுத்ததும் அதுவும் அது நிச்சியமாக சரியாய் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் மனது லேசாக, கைகள் அனிச்சை செயாலாய் மனதுக்கு இதம் தரும் பாடல்களை தேர்வு செய்து ஒலிக்கவிட சென்னையை நோக்கி பயனமானன்.
வானத்தில் ஏறியே
மின்னல் பிடிக்கிறவன் பூக்களை
பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்
என்ற வரிகளை கேட்டதும் “ஹாஹா ஹாஹா சொ ட்ரு ஸ்வீட்டி, சொ ட்ரு…” உன் பேர் கூட தெரியாது ஆனால் எதொ என்னை உன்னிடம் கட்டி இழுக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் இத்தனை நிதானம் காண்பிக்காதவன் உன் வாயில் இருந்து எதிர்மறையாய் எதுவும் வந்துவிடக்கூடாது என்ற ஒரே காரண்த்திற்கிகாக எனக்கு வராத் நிதனத்தை பிடித்து கொண்டு தொங்குகிறேன். ஆனால், இந்த பீல்(feel) கூட ஒரு விதமாய் நல்லா தான் இருக்கிறது என்று எண்ணியபடி சென்னையை நோக்கி பயனப்பட்டுக்கொண்டிருந்தான்.
ஒருவேளை நண்பர்களுடன் அவர்களின் கல்லூரிக்கு சென்றிருந்தால் அவன் மனதில் இருக்கும் நேசம் அவளை அவன் கண்களில் காட்டிருக்ககூடும். ஆனால் விதி வலியது! எப்போ எது நடக்க வேண்டும் என்பது காலத்தின் கையில் இருக்கும் பொழுது ஒரு சில விஷயங்கள் நாம் எதிர்பார்ப்பது போல் சுலபமாக நடந்துவிடுவது இல்லை.