காதல் 20:
கோயம்புத்தூர் சிட்டியை விட்டு வெளியே இருந்த அந்த கெஸ்ட்ஹவுசில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மகா பத்ராவிற்கு அப்போது தான் லேசாக மயக்கம் தெளிந்தது. பலவீனமாய் கண்களைத் திறந்தவளுக்கு தன்னைச் சுற்றிலும் இருந்த இருட்டு ஒரு அச்சத்தைக் கொடுக்க, தனக்கு முன்னால் இருந்த எதுவும் அவளின் கண்ணிற்கு தெரியவில்லை. இதயம் சுவாசத்திற்கு ஏங்க, சில வினாடிகளில் கொஞ்சம் சிரமமின்றி மூச்சு விட்டாள். தான் கடத்தப்பட்டிருப்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. அரைகுறை மயக்கத்தில் அசோக்கின் பேச்சு சத்தம் அவள் காதில் விழுந்த ஞாபகம் இன்னமும் இருக்கிறது அவளிடத்தில். மெல்ல மெல்ல அந்த அறையின் இருட்டு, அவள் கண்களுக்குப் பழக, கொஞ்சம் திடமாக அமர்ந்தாள். கட்டப் பட்டிருந்த கைகள் வலியில் வின்னென்று தெறித்துக் கொண்டிருந்தது. என்னதான் தைரியமாக இருப்பதைப் போன்று இருந்தாலும், மனம் என்னவோ ஈஸ்வரனைத் தான் தேடியது. அன்று விடிந்ததில் இருந்து நடந்த அனைத்தும் அவள் கண் முன் வந்து சென்றது.
அன்று காலை…
அன்று கிடாவெட்டிற்கு செல்வதற்காக காலையிலேயே எழுந்து குளித்து தயாராகிக் கொண்டிருந்தாள் மகா. ஆகாய வண்ணப் புடவையில், புத்தும் புது மலராய் நின்றிருந்தவளைப் பார்த்த ஈஸ்வரனுக்கு பேச்சே வரவில்லை. அவளை அப்படியே அள்ளிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை அவனால் அடக்க முடியவில்லை. ஈரத்தலையை துவட்டிக் கொண்டிருந்தவளின் அருகில் சென்றவன், அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவனின் அணைப்பில் திகைத்தவள், அப்படியே திரும்ப, அடுத்த நிமிடம் அவளின் இதழ்களை தனதாக்கியிருந்தான். உயிர் குடிக்கும் அந்த ஒற்றை முத்தத்தில், அவனின் உயிர் நேசத்தை சொல்லிவிட அவன் துடிக்க, அந்த நீண்ட நெடிய முத்தத்தில் தன்னை இழந்து, மூச்சுக் காற்றுக்கு ஏங்கி, தொய்ந்து அவன் நெஞ்சத்திலேயே வீழ்ந்தாள். அவனின் இறுகிய அணைப்பிற்குள் சிக்குண்டிருந்தவளுக்கு, அப்படியே நிமிடங்கள் நீள வேண்டுமென்று தோன்றியது. நிமிடங்கள் கரைந்ததை உணர முடியா உணர்வில் இருந்தவர்களை மீட்டது ருக்குவின் குரல்.
“மகா..! கிளம்பியாச்சா..?” என்று ருக்கு பாட்டி வெளியே இருந்து சத்தம் கொடுக்க, அந்த சத்தத்தில் மீண்டவள், அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.
“அட இருடி..” என்றான் சலிப்பாய்.
“இன்னைக்கு கோவிலுக்குப் போகணும்…” என்றாள்.
“ஆமா போகணும். அதுக்கு இப்ப என்ன..?” என்றான் சாவகாசமாய்.
“ஒண்ணுமில்ல.. கொஞ்சம் தள்ளி நின்னிங்கன்னா நல்லா இருக்கும்..” என்றாள்.
“எனக்கென்னவோ இப்படி நின்னாதான் நல்லா இருக்கு..” என்றான் ஈஸ்வரன்.
“இருக்கும் இருக்கும்..! இருக்காதா பின்ன..?” என்றாள் கிண்டலாய்.
“என்னடி திறப்பு விழா முடிஞ்சிருச்சா..? இன்னைக்கு பர்ஸ்ட் நைட்ட கொண்டாடிடுவோமா..?” என்றான் காதோரத்தில்.
“யோவ்..! நம்ம கல்யாணம் முடிஞ்சு பல ராத்திரி கடந்து போய்டுச்சு. நீ இப்ப வந்து, இன்னைக்கு தான் பர்ஸ்ட் நைட் பத்தியே பேசுற..? அதான்யா உன்னை எல்லாரும் 90S கிட்ஸ் ஈஸ்வரன்னு கிண்டல் பண்றாங்க..” என்றாள் மகா.
“அவங்களுக்கு உன்னோட மாமனைப் பத்தி சரியா தெரியலைடி. அவங்க வாயாலையே ஈஸ்வரனைப் போல உண்டான்னு சொல்ல வைக்கிறேன் பாரு..” என்றான்.
“அதுக்கு நான் முதல்ல உண்டாகணும்..” என்றாள் சிரிப்புடன்.
“கிரேட் இன்சல்ட்டுடா ஈஸ்வரா..” என்று நொந்து கொண்டான்.
“சரி சரி.. அப்படியே மசமசன்னு நிற்காம போய் கிளம்புற வழியைப் பாருங்க..” என்றாள்.
“இன்னைக்கு அவசியம் கோவிலுக்கு போய்த்தான் ஆகணுமாடி..?” என்றான்.
“கண்டிப்பா போகணும்..” என்றாள்.
“மனுஷனோட கஷ்ட்டம் யாருக்குப் புரியுது..? ஈஸ்வரனுக்கு வர்றது எல்லாமே சத்திய சோதனை தான்..” என்று புலம்பிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து மகா சிரித்துக் கொண்டிருக்க,
“சிரிப்படி சிரிப்ப.. நீ சிரிக்கிற அளவுக்கு ஆய்டுச்சு என் நிலைமை..” என்றான் ஈஸ்வரன்.
அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவள் கிளம்பி முடித்திருந்தாள்.
“சீக்கிரம் வாங்க..!” என்றவள் வெளியே செல்ல,
“இவளை முதல்ல நாடு கடத்தணும். இப்படியே இருந்தா சரிப்பட்டு வராது…” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவன், தானும் கிளம்பி வெளியே வந்தான். அவன் வெளியே வரும் போது, வசுந்தரா, தலை நிறைய மல்லிகைப் பூவை மகாவிற்கு வைத்து விட்டுக் கொண்டிருக்க,
“எல்லா பூவையும் இப்பவே வச்சு வேஸ்ட் பண்றாங்களே..?” என்று நொந்து போனான் ஈஸ்வரன். அந்த பாவனை அவன் முகத்திலும் தெரிய, அதைப் பார்த்த மகாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“இவ ஒருத்தி.. நேரம் காலம் தெரியாம சிரிச்சு வைப்பா..” என்று அவளை முறைத்துக் கொண்டு நின்றவனை,
“நீங்க ரெண்டு பேரும் பைக்ல வந்துடுங்க ஈஸ்வர். நானும் பாட்டியும் மஞ்சுங்க கூடவே வந்திடுறோம்..” என்றார் வசுந்தரா.
‘ஆமா, மனுஷன் படுற பாடு தெரியாம..? இந்த லட்சணத்துல இவளை நான் பைக்ல வேற வச்சு கூட்டிட்டுப் போகனுமா..? இவங்க நான் கோவிலுக்கு போக வழி சொல்லலை..” என்று நினைத்தவன்,
“இருக்கட்டும்மா..! எல்லாரும் கார்லயே போகலாம்..” என்றான். மகா அவனை முறைக்க,
“போடி..!” என்று வாயசைவில் சொல்லிவிட்டு காரை எடுக்க சென்றான்.
“இப்ப அவன் எதுக்கு உன்னைய போடின்னு சொன்னான்..?” என்றார் ருக்கு பாட்டி.
“இந்த கிழவிக்கு காது தான் கன் மாதிரி இருக்குன்னு பார்த்தா, கண்ணும் சும்மா கின்னுன்னு இருக்கு..” என்று நினைத்த மகா,
“இதெல்லாம் தெளிவா தெரிஞ்சுடும் உங்க கண்ணுக்கு. நடங்க முதல்ல..” என்று ஒரு சிலுப்பு சிலுப்பிக் கொள்ள,
“ஆங்… ரொம்பத்தான் சிலுப்பிக்கிறா வசுந்தரா உன் மருமக..” என்றார் ருக்கு பாட்டி.
“விடுங்கத்தை.. சின்ன பொண்ணு தான அவ..” என்று வசுந்தரா பரிந்து கொண்டு வந்தார். ஒருவழியாக அவர்கள் கோவிலுக்கு கிளம்பி செல்ல, அங்கே அவர்களுக்கு முன்னால் மஞ்சுவின் குடும்பமும், பாண்டியனும் கமலாவும், சில சொந்த பந்தங்களும் வந்திருந்தனர்.
“ஹேய் காயத்ரி..? எப்ப டி வந்த..?” என்றாள் மகா.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன் மகா. எப்படி இருக்க..? எங்க மாமாவை கண்கலங்காம வச்சு காப்பாத்துறியா..?” என்றாள் காயத்ரி கிண்டலாக.
“அந்த வெங்காயத்தை வச்சுகிட்டு எனக்குதாண்டி கண்ணு கலங்குது..” என்றாள் மகா.
“எங்க மாமா உனக்கு வெங்காயமா..? இரு எங்கம்மா கிட்ட சொல்றேன்..” என்று மகா மிரட்ட,
“ஆத்தி.. ஆளை விடுடி. அதுக்கு என் புருஷனே பரவாயில்லை. உங்கம்மா பச்ச மிளகா தான். அப்படி ஒரு காரம். நமக்கு ஆகாது..” என்றாள் பயத்துடன்.
“ஆமா மாமா எங்க..?” என்றாள் காயத்ரி.
“சித்தப்பாவும், அவரும் இப்ப தான் அந்த பக்கமா போனாங்க. பூசாரியை கூப்பிட போறாங்கன்னு நினைக்கிறேன்..” என்றாள் மகா. அரைமணி நேரமாக அங்கே அமர்ந்து சில வேலைகளை செய்து கொடுத்து கொண்டிருந்தனர் இருவரும்.
“மகா.. சூச்சூ போகணும்..” என்றாள் காயத்ரி.
“அடியேய்..! இங்க எங்க போறது..?” என்றாள் மகா. மெயின் ரோட்டின் மேல் இருந்தது அந்த கோவில். ஊரின் ஒதுக்கு புறத்தில் இருக்க..
“சரி வா..! ரோட்டுக்கு அந்த பக்கம், அந்த காட்டுக்குள்ள போயிட்டு வரலாம்..”
“மகா எங்கம்மா போறீங்க..?” என்றார் வசுந்தரா.
“இதோ வந்திடுறோம் அத்தை..” என்று சொல்லி விட்டு சென்றனர்.
“அந்த பாண்டியனும் அங்க தான் இருக்கான்.. ஈஸ்வரன் இப்போ பக்கத்துல இல்லை..” என்று அசோக் வைத்த ஆள் போனில் தகவல் சொல்லிக் கொண்டிருந்தான் அஷோக்கிற்கு. அவனும் தயாராய் தான் இருந்தான்.
“கூட இருக்குற பொண்ணு யாரு. அவளையும் சேர்த்து தூக்கிடுவோமா..?” என்றான் அருகில் இருந்தவன்.
“இப்போ நம்ம கவனம் ஒரு விஷயத்துல தான் இருக்கணும். எது தேவையோ அதைத்தான் முதல்ல முடிக்கணும். கிளி எங்க போய்ட போகுது.. அதை அப்பறம் பார்த்துக்கலாம்..” என்றான் அசோக்.
தங்களுக்குப் பின்னால் ஏதோ நடை சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தாள் மகா. யாரையும் காணாமல் போகவே, மீண்டும் அவள் யோசனையுடன் பார்க்க, அவளை வாயோடு பொத்தினான் அசோக்.
“ஹேய்..! யாருடா நீங்க..?” என்று காயத்ரி சத்தம் போட, அவளையும் வாயோடு பிடித்துக் கொண்டான் அருகில் இருந்தவன்.
“தானா வந்து சிக்குனா என்ன தான் பண்றது. நீ சொன்னப்ப கூட நான் நம்பலை. ஆனா, பக்கத்துல பார்க்கும் போது அவளும் தளதளன்னு தான் இருக்கா. அவளையும் சேர்த்தே வண்டியில ஏத்து..” என்றான் அசோக்.
சில வினாடிகளில் நிலைமையை யூகித்துக் கொண்டாள் மகா. எதிரில் காயத்திரியை பிடித்துக் கொண்டிருந்தவனின் இடுப்பில் ஓங்கி ஒரு உதை உதைத்தாள் மகா. அவன் வலியில், பிடியைத் தளர்த்த, அவனிடமிருந்து விடுபட்ட காயத்திரியை போய் விடுமாறு கண்ணால் ஜாடை செய்தாள்.
“ஹேய் என்னடி கொழுப்பா…?” என்று அசோக் பேசிக் கொண்டிருக்கும் போதே, பயத்தில் காயத்ரி ஓடி விட்டாள், ஈஸ்வரனிடம் விஷயத்தை சொல்வதற்காக.
“டேய்..! சீக்கிரம் போய் காரை எடுக்க சொல்லு…. அவள் யார்கிட்டயாவது விஷயத்தை சொல்றதுக்கு முன்னாடி இவளை இங்க இருந்து தூக்கியாகனும்..” என்றான் அசோக்.
அடுத்த நிமிடம், மகாவை ஏற்றிக் கொண்டு அந்த கார் அங்கிருந்து விரைந்திருந்தது.
“டேய்..! விடுடா..” என்று மகா கத்திக் கொண்டிருக்க, அசோக் அவள் கைகளை கட்டிக் கொண்டிருந்தான்.
அடுத்து அவள் பேசுவதற்கு முன், மயக்க ஸ்ப்ரேவை அடிக்க, அடுத்த நிமிடம் மயங்கியிருந்தாள் மகா.
“இவளை இவ்வளவு ஈசியா தூக்கிடலாம்ன்னு நினைக்கவேயில்லை. தானா வந்து சிக்கிட்டா. நமக்கு அதிகமா வேலை வைக்கலை..” என்றான் அசோக்.
“இருந்தாலும் அந்த பொண்ணையும் தூக்கியிருந்தா நல்லா இருந்திருக்கும் அசோக்..” என்றான் அருகில் இருந்தவன்.
“பொம்பளையோட ஒரு உதைக்குத் தாங்காம அவளை விட்டது யாரு..? நீதான..? எது எப்படியோ நாம நினைச்சு வந்த காரியம் நல்லபடியா முடிஞ்சது..” என்றான் அசோக்.
மகாவின் அரைகுறை மயக்கத்தில் அவர்கள் பேசுவது லேசாக காதில் விழுந்தது.
“இவளை எங்க கொண்டு போகலாம்..?” என்றான் அருகில் இருந்தவன்.
“ கெஸ்ட்ஹவுசுக்கே வண்டியை விட சொல்லு ..” என்றான் அசோக்.
இதோ.. இப்போது தான் மகாவிற்கு மயக்கம் முழுமையாய் தெளிந்திருக்கிறது.
அங்கே மகாவைக் காணாமல் ஈஸ்வரன் தான் பித்துப் பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான். அங்கிருந்த அனைவரையும் கத்தித் தீர்த்து விட்டான். காயத்ரி அழுது கொண்டிருக்க,
“வந்தவனை நீ பார்த்தியா காயத்ரி..” என்றான் ஈஸ்வரன். அவனுக்கு நன்றாகத் தெரியும் இது அசோக்கின் வேலை தான் என்று.
“பார்த்தேன் மாமா.. நிவேதா அக்கா ஹஸ்பண்ட் மாதிரி தான் இருந்தது.” என்றாள் காயத்ரி.
“முகத்தை முழுசா பார்த்தியா..?” என்றான்.
“இல்லை, கர்சீப் கட்டியிருந்தாங்க..” என்றாள் காயத்ரி.
“அஷோக்கை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா..?” என்றான்.
“ஒரு தடவை பார்த்திருக்கேன். நிவி அக்கா கூட வரும் போது..” என்றாள்.
“எத்தனை பேரு வந்தாங்க..?” என்றான்.
“ரெண்டு பேரு.. என்னையும் கடத்தப் பார்த்தாங்க மாமா. மகா தான் அவனை ஓங்கி உதைச்சா. அவன் என்னைய விட்ட நிமிஷத்துல, போய்டுன்னு சொன்னா. நான் உங்ககிட்ட சொல்றதுக்காக ஓடி வந்துட்டேன்..” என்றாள் காயத்ரி.
இக்கட்டான நிலைமையிலும் கொஞ்சம் சமயோசிதமாக யோசித்திருக்கிறாள் என்று சந்தோஷப்படுவதா..? இப்படி அவள் சிக்கிக் கொண்டாளே என்று வருத்தப்படுவதா..? என்று நொந்து போனான் ஈஸ்வரன்.
“என்ன ஈஸ்வரா..? காயத்ரி என்னென்னமோ சொல்றா..? நிவேதா புருஷன் எதுக்கு மகாவைக் கடத்தணும்..?” என்றார் வசுந்தரா.
“அது தான்மா எனக்கும் புரியலை..” என்று மழுப்பினான் ஈஸ்வரன். கமலா அழுது கொண்டிருக்க, பாண்டியனோ உடைந்தே போய்விட்டார்.
“மகா போன் எங்க..?” என்றான் ஈஸ்வரன்.
“என்கிட்டே இருக்கு தம்பி..” என்றார் கமலா. அதை வாங்கிக் கொண்டவன், வேகமாய் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று, அவனின் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு சீறிப் பாய்ந்தான்.
சபரி தானும் வருவதாய் சொல்ல,
“நானே பார்த்துக்கிறேன் மாமா. அவன் எங்க இருக்கான்னு கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்..” என்றான் ஈஸ்வரன்.
அங்கே மகாவோ, நேரம் ஆக ஆக பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
“ஒரு வழியா மயக்கம் தெளிஞ்சுடுச்சு போல..?” என்றான் அங்கே வந்த அசோக்.
“மரியாதையா என்னை விட்ரு. இல்லைன்னா நடக்குறதே வேற..?” என்றாள் மகா.
“இனி நடக்குறதே வேற தான் மச்சினிச்சி..!” என்றான் அசோக்.
“போடா பொறுக்கி..” என்றாள்.
“பொறுக்கி தான். பொறுக்கியா இருந்தாலும் கொஞ்சம் நல்லவன்டி. அதான் உன்னைய இப்ப வரைக்கும் விட்டு வச்சிருக்கேன்..” என்றான் அசோக்.
“இதோ பார்..! அதான் எங்கப்பா உன்மேல குடுத்த கேஸை வாபஸ் வாங்கிட்டாருல்ல. அப்பறம் ஏன் என்னை தொந்தரவு பண்ற..?” என்றாள்.
“உனக்கு விஷயமே தெரியாது போல. சரி இதுவும் நல்லதுக்குத்தான்..” என்றான் அசோக்.
“உனக்கு என்ன வேணும்..?” என்றாள்.
“நீதான் வேணும்..! அன்னைக்கு உன் புருஷன் பக்கத்துல இருக்கவும் பெரிய இவ மாதிரி பேசுன..? இப்ப பேசுடி..?” என்றான்.
“எப்பவுமே அப்படித்தாண்டா பேசுவேன். உன்னால என்ன புடுங்கிட முடியும்..?” என்றாள்.
“பரவாயில்லையே..! என்னோட மச்சினிச்சிக்கு தைரியம் ஜாஸ்திதான். உங்க அக்காவுக்கும் இந்த தைரியத்துல கொஞ்சம் இருந்திருக்கலாம். வீணா செத்திருக்க மாட்டா..” என்றான்.
“அவளா செத்திருக்க மாட்டாடா..? நீதான் அவளை கொலை பண்ணியிருப்ப..”
“இந்த ஒரு விஷயத்துல நான் பொய் சொல்ல மாட்டேன். நிஜமாவே உங்க அக்கா தற்கொலை தான் பண்ணிகிட்டா..” என்றான் அசோக்.
“நீ அவளை அந்த அளவுக்கு சித்ரவதை பண்ணியிருப்படா பொறுக்கி..” என்றாள் கோபமாய்.
“பழைய கதையெல்லாம் இப்ப எதுக்கு..? இன்னைக்கு ஒரு நாள் மாமா கூட இருப்பியாம். நான் ஹச்டி தரத்துல வீடியோ எடுப்பேனாம். அதை வச்சே அந்த ஈஸ்வரன் கொட்டத்தை அடக்குறேன்டி. ஏதோ கொஞ்சம் கேர்லசா இருந்துட்டேன். என்னோட மொபைலையே உன் புருஷன் ஹேக் பண்றான். பெரிய புத்திசாலி தான். அது தான் எனக்கு ஏற்கனவே தெரியுமே. தெரிஞ்சும் அப்படி இருந்தது என்னோட தப்புத்தான். நம்மளை யாரு என்ன செய்ய முடியும்ன்ற மிதப்புல இருந்துட்டேன். அதை அவன் பயன்படுத்திகிட்டான். ஆனா பாரு இப்ப தெளிவாயிட்டேன்…இத்தனை நாள் என்னைக் கண்டு நடுங்குன, நான் கேட்டப்பலாம் பணத்தைக் குடுத்த உங்கப்பன் கூட இப்ப திமிரா பேசுறான். எல்லாம் அவன் குடுக்குற இடம் தான..? இப்பப் பேசச் சொல்லுடி..” என்றான் திமிராய்.
“என்ன உளர்ற..? எங்கப்பா எதுக்கு உனக்கு பணம் குடுக்கணும்..?” என்றாள் மகா கோபமாய்.
“உனக்கு விஷயமே தெரியாதாடா செல்லக் குட்டி. உனக்கு முதல்ல இருந்து சொன்னாத்தான் புரியும், இரு..” என்றவன், அவளுக்கு அருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
அவளின் முகத்தையே பார்த்தவன், என்ன இருந்தாலும் உன்கிட்ட வார்த்தையா சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு. நீயேன் படமாவே பார்க்க கூடாது என்றவன், அந்த லேப்டாப்பில் இருந்த வீடியோவை ஓட விட… அதைப் பார்த்தவளின் கண்கள் அவமானத்தில் கூனிக் குறுக, அருவெறுப்பில் கண்களை மூடிக் கொண்டாள்.
“என்ன இதுக்கே இப்படி ஷாக் ஆகிட்ட..? இன்னும் எத்தனை படம் நீ பார்க்க வேண்டியிருக்கு..?” என்றான் அசோக்.
“உன் ஆத்தா கிட்டயும், அக்கா தங்கச்சி எவளாவது இருந்தா அவகிட்டையும் போய் போட்டு காட்டுடா..?” என்றாள் ஆக்ரோஷமாய். வெளியே ஆக்ரோஷமாய் பேசினாலும், மனதிற்குள் தான் பார்த்ததை எண்ணி குமைந்து கொண்டிருந்தாள். இத்தனை நாள் விடை தெரியாத பல கேள்விகளுக்கு அப்போது விடை தெரிந்தது அவளுக்கு. மனதிற்குள் இருந்த பல முடிச்சுகள் அவிழத் தொடங்கியது.
“இதை வச்சுத்தான் எங்கப்பாவை பிளாக்மெயில் பண்ணியா,..?” என்றாள்.
“கற்பூர புத்தி.. கப்புன்னு பிடிச்சுகிட்டியே..?” என்றான் அசோக்.
“என் அக்கா தப்பு பண்ணிட்டா. அவ சாகுறதுக்கு முன்னாடி உன்னை கொன்னுட்டு செத்திருக்கணும்…” என்றாள் கோபமாய்.
“என்ன செய்றது..? உங்கக்கா உன்னை மாதிரி இல்லையே..? இதுல ஹை லைட்டான விஷயம் என்னன்னு தெரியுமா..? இதுல நிவேதாவை கெடுத்ததே நான் தான். அதுக்கப்பறம் மார்பிங் பண்ண மூஞ்சி தான் வேற மூஞ்சி. இதைப் பார்த்து உங்கக்கா நம்பி, சாகப் போய், அப்பறம் உங்கப்பன் நம்பி.. மொத்தத்துல குடும்பமே புத்திகெட்ட குடும்பம்.. அது என்னவோ தெரியலை. எல்லாரையும் ஒரு தடவை அனுபவிச்சா அலுப்புத் தட்டிடும். உங்கக்கா மட்டும் தான், திரும்ப திரும்ப எனக்குள்ள போதையேத்திட்டே இருந்தா. அதான் வேற வழி இல்லாம கல்யாண டிராமா போட வேண்டியதாய்டுச்சு..” என்றான் பாவமாய்.
“த்தூ..! மானங்கெட்டவனே..!” என்று அவள் காரித் துப்ப,
“ஏய்..! என்னடி திமிரா..? இந்த திமிர் தாண்டி என்னை உன் பின்னாடி சுத்த வைக்குது. உன்னை வச்சுத் தாண்டி அந்த ஈஸ்வரனுக்கு முடிவு கட்ட போறேன். பெரிய இவன் மாதிரி கம்ப்ளெயின்ட் குடுத்திருக்கான்..” என்றான்.
“அவரா இருக்க போய் கம்ப்ளெயின்ட் குடுத்திருக்கார். நானா இருந்தா கண்டதுண்டமா வெட்டியிருப்பேன்டா உன்னை.!” என்றாள் மகா.
“அந்த அனிதாவும் உயிரோட இல்லையாமே..? இணை பிரியாத தோழிகள் இல்லையா. அதான்..சாவுலையும் இணை பிரியாம போய்ட்டாங்க போல.. ஆனா, ஒரு விஷயத்துக்கு நீ என்னை பாராட்டனும்..” என்று அவன் நிறுத்த,
அவளோ அவனை அற்ப ஜந்துவைப் பார்ப்பதைப் போல் பார்த்து வைத்தாள்.
“உங்கக்காவை நான் மட்டும் தான் கெடுத்தேன். ஆனா, அந்த அனிதாவை இரண்டு,மூணு பேர். நான் வீடியோ மட்டும் தான் எடுத்தேன்..” என்றான் கிண்டலாய்.
ஒரு நிமிடம் அனிதாவின் நிலைமைக்காக கண்ணீர் சிந்தியவள்,
“உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா..?” என்றாள்.
“அது சாவு வரும் போது பார்க்கலாம்டி..! அதுக்கு முன்னாடி எனக்கு நிறைய வேலை பாக்கியிருக்கு..” என்றவன் அவளை மேய்வதைப் போல் பார்க்க, அந்த பார்வையிலேயே உடல் கூசியது மகாவிற்கு.
அதுவரை இருந்த பலமெல்லாம் உடைவதைப் போல் உணர்ந்தாள்.
‘மகா, ஸ்டெடியா இரு. இப்ப தான் நீ துணிச்சலா இருக்கணும்..’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்க, அந்த வீடியோவில் பார்த்த காட்சிகள் அவள் கண் முன்னால் வந்து அவளின் பலத்தை குறைத்துக் கொண்டிருந்தது.
“அப்பா, இதுக்குத்தான் அப்படி பயந்திங்களா..? என்கிட்டே முன்னாடியே சொல்லியிருந்தா நானும் கவனமா இருந்திருப்பேனே..” என்று நினைத்து மாய்ந்தாள் மகா.
அளவுக்கு அதிகமான பயமும், ஸ்ட்ரெசும் சேர்த்து அவளின் படபடப்பைக் கூட்ட,
“டென்ஷன் ஆகாத மகா.. டென்ஷன் ஆகக் கூடாது..” என்று சொல்லிக் கொண்டாள். அளவுக்கு அதிகமான டென்சன் அவள் உடலிற்கு நல்லதில்லை என்று அவளுக்குத் தெரியும்.
“என்னடி உன் புருஷன் வரணும்ன்னு வேண்டிக்கிறியா..? அவனால கண்டு பிடிக்க முடியாது. அவனுக்குத் தான் டெக்னாலஜி தெரியும்ன்னு ஓவரா ஆடுறான். எந்த டெக்னாலஜியை வச்சும் இந்த இடத்தை கண்டு பிடிக்க முடியாது..” என்றான்.
நேரம் போக போக, அவளுக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.
“ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா..? டேய்.. எல்லாம் ரெடியா இருக்கா..?” என்றான் அருகில் இருந்தவனிடம்.
“எல்லாமே ரெடி அசோக்…” என்றான்.
“வெளிய எத்தனை பேர் இருக்கானுக..?” என்றான் அசோக்.
“நம்மாளுங்க நாலு பேர் இருக்கானுக அசோக்..” என்றான்.
“நீ தான் தைரியமான ஆளாச்சே..? அப்பறம் எதுக்குடா வெளிய நாலு பேரை நிறுத்தி வச்சிருக்க..? உயிர்மேல அவ்வளவு பயமா..?” என்றாள் மகா.
“உன் புருஷனுக்கு அந்த அளவுக்கு சீன் இங்க இல்லடி..” என்றான் கோபமாக.
“டேய்..! உனக்கெல்லாம் நானே போதும், என் புருஷன் தேவையில்ல..” என்றாள் வரவழைத்துக் கொண்ட ஆக்ரோஷத்துடன்.
“இங்க பாரு.. நான் பேசிப் பேசி டயர்டா இருக்கேன்..! இனி பேச நேரமில்லை. உன் புருஷன் கதையையும் இன்னைக்கே முடிக்க வச்சுடாத. பேசாம கோஆப்பரேட் பண்ணு..” என்றான்.
“சகலை தான் சொல்றான்ல.. பேசாம கோஆப்ரேட் பண்ணு மகா..” என்ற குரலில் அப்படி ஒரு மகிழ்ச்சியுடன் நிமிர்ந்தாள் மகா. சாட்சாத் அவளுடைய ஈஸ்வரனே தான்.
“ஏங்க..?” என்றவளுக்கு அவனைக் கண்டவுடன், அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெளியே வர,
“இவ்வளவு நேரம் தைரியமா தானடி இருந்த. இப்ப எதுக்கு இந்த அழுகை..?” என்று அவளை அதட்டிய ஈஸ்வரன், அஷோக்கிடம் திரும்ப,
“பரவாயில்லையே..? எல்லாம் முடிஞ்ச பிறகு தான் வருவன்னு நினைச்சேன். முன்னாடியே வந்துட்டயே..? பொண்டாட்டியோட லைவ் ஷோ பார்க்க அப்படி ஒரு ஆசை..” என்றான் அசோக்.
“எல்லாம் முடிஞ்சதுக்கு அப்பறம் வர, நான் என்ன சினிமா போலீசா, இல்லை உன்னை மாதிரி முட்டாளா..?” என்ற ஈஸ்வரன், அவனை ஓங்கி ஒரு உதை உதைக்க, தடுமாறி நின்றான் அசோக்.
“ஏண்டா, செய்றதை ஒழுங்கா செய்ய மாட்டியா நீ..! பேசாம இருந்திருந்தா, கம்ப்ளைன்ட் குடுத்ததோட விட்டிருப்பேன். என் பொண்டாட்டியைத் தொடனும்ன்னு நினைச்ச உன்னை என்ன பண்ணலாம்..?” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கிருந்த இன்னொருத்தன் ஈஸ்வரனை தாக்க வர,
“இருடா பேசிட்டு இருக்கேன்ல. ஒரு நேரத்துல ஒரு வேலை தான் செய்ய முடியும்..” என்றான் ஈஸ்வரன். பேசிக் கொண்டே மகாவின் கட்டை அவிழ்த்து விட,
“வெளிய இருக்க நம்ப ஆளுங்க எங்கடா..?” என்றான் அசோக்.
“அவனுக சோலியை முடிச்சு நேரமாச்சு சகலை. நீங்க ரெண்டு பேர் தான் பாக்கி..” என்றான் ஈஸ்வரன்.
“ஏங்க போலீஸ் வருவாங்களா..” என்றாள் மகா.
“இவன் முகரைக்கு நானே அதிகம். இதுல போலீஸ் வேற..?” என்ற ஈஸ்வரன், அவர்கள் இருவரையும் புரட்டி எடுத்தான்.
“மனசுக்குள்ள பெரிய சினிமா வில்லன்னு நினைப்பு. உனக்குப் பின்னாடி ஒரு பெரிய கூட்டமே இருக்குன்னு எனக்குத் தெரியும்டா. நீ ஒரு கோமாளி. உன்னை அவனுக அப்படித்தான் வச்சிருக்கானுக. ஆனா, இப்போதைக்கு என்கூட மோதுறது நீதான..?” என்ற ஈஸ்வரன், அவனைப் புரட்டி எடுக்க,
பிறர் உழைப்பில் சுகம் கண்டவனுக்கு, உழைப்பவனின் கையால் அடிவாங்கினால் தாங்க முடியுமா என்ன..?
“அந்த கயிறை எடு மகா..” என்றவன், மகாவின் உதவியுடன் அவர்கள் இருவரையும் கட்டினான். அசோக் திருப்பித் தாக்கியதில், ஈஸ்வரனுக்கும் லேசாக அடி பட்டிருக்க, அதெல்லாம் அவன் கருத்தில் படவில்லை.
“எப்படிங்க கண்டுபிடிச்சிங்க..?” என்றாள் மகா.
“இந்த நாய், நான் ட்ராக் பண்ணாத மாதிரி செட் பண்ணிட்டோம்ன்னு மிதப்புல இருந்திருப்பானே..?” என்றான் நக்கலாய்.
“ஆமாங்க..!” என்றாள்.
“எல்லா பொண்ணுங்களையும் கூட்டிட்டு வந்து சீரழிச்சு வீடியோ எடுக்குற இடமே, ரெகுலரா இந்த கெஸ்ட் ஹவுஸ் தான் போல..” என்றான்.
“எப்படி சொல்றிங்க..?” என்றாள்.
“எல்லா வீடியோலையும் தெளிவா இந்த போட்டோ தான் இருக்கே. ஜூம் பண்ணிப் பார்த்தா தெரியுதே..?” என்றவன் மேலே இருந்த போட்டோவைக் காட்ட, அதில் பிரபலமான அரசியல்வாதி ஒருவனின் போட்டோ இருந்தது.
“மண்டையில இருக்குற கொண்டையை மறந்த கதை மாதிரி, போட்டோவை அப்படியே விட்டுட்டியே ராசா..? இந்த ஆளுக்கு சொந்தமான ஏதோ ஒரு இடமாத்தான் இருக்கனும்ன்னு கெஸ் பண்ணேன். எல்லா இடத்துலையும் தேடிட்டு கடைசியா இங்க வரத்தான் லேட் ஆயிடுச்சு. இதுல பெரிய அறிவாளி மாதிரி பேச்சு வேற..” என்று மீண்டும் ஒரு அறை அறைந்தான் ஈஸ்வரன்.
“நீங்க சொல்றதைப் பார்த்தா இவன் அந்த அளவுக்கு வொர்த் இல்லை போல..” என்றாள் மகா.
“அது இன்னுமா உனக்கு புரியலை. ஆனா, இந்த கோமாளிப் பயலை நம்பித்தான் நிறைய பொண்ணுங்க இறந்திருக்காங்க. இவன் பார்க்கத் தான் கோமாளி, ஆனா..சாரோட டீல் எல்லாம் ரொம்ப பெரிய இடம் தான். அந்த தெனாவெட்டு தான்..” என்றவன், அங்கிருந்த லேப்டாப் முதற்கொண்டு அனைத்தையும் அடித்து நொறுக்கினான்.
“வேண்டாம் ஈஸ்வரா..?” என்று அசோக் அந்த நிலைமையிலும் கத்த,
“சவுண்டை குறைடா..!கும்பல்ல இருந்த கோமாளியா தான் நீ சிக்கியிருக்க. உனக்குப் பின்னாடி இருக்குற எல்லாத்தையும் சைபர் கிரைம் பார்த்துப்பாங்க. பக்காவா கம்ப்ளேயின்ட் பண்ணியிருக்கேன்..” என்றவன்,
போனை எடுத்து போலீஸ்க்கு அழைக்கப் போக, அவனைத் தடுத்தாள் மகா.
“என்னடி..?” என்றான்.
“என்னைய காணோம்ன்னு போலீஸ் கப்ளைன்ட் குடுத்திங்களா..?” என்றாள்.
“இவனுக்கெல்லாம் போலீஸ் எதுக்கு? நானே போதும்…” என்றான்.
“நீங்க இங்க வந்தது யாருக்காவது தெரியுமா..?” என்றாள்.
“தெரியாது..” என்றான்.
ஒருநிமிடம் கண்களை மூடியவளுக்கு, நிவேதாவும், அனிதாவும் வந்து போக, அந்த கெஸ்ட் ஹவுசை சுத்திப் பார்த்தாள்.
அங்கிருந்த கிட்சனில் ஜன்னல் கதவுகள் ஏற்கனவே அடைக்கப் பட்டிருக்க, வேகமாய் அங்கே சென்றவள், கேஸைத் திறந்துவிட்டாள்.
மீண்டும் திரும்பி ஈஸ்வரன் இருக்குமிடத்திற்கு வந்தவள், அங்கிருந்த ஒரு பழைய நியூஸ் பேப்பரையும், அசோக் சிகரெட் பற்ற வைப்பதற்காக வைத்திருந்த லைட்டரையும் எடுத்துக் கொண்டாள்.
“இந்த கட்டை அவுத்து விடு ஈஸ்வரா..” என்று அசோக் கத்திக் கொண்டிருக்க, அதை காதிலேயே வாங்காமல், ஈஸ்வரனை வெளியே இழுத்து வந்தாள் மகா. வெளியே கும்மிருட்டாய் இருந்தது.
“நீங்க வந்ததை யாரும் பார்க்கலையே..?” என்றாள் மீண்டும்.
“இல்லடி..! இப்ப என்ன செய்ய போற..?” என்றான் ஈஸ்வரன்.
“இவன்லாம் உயிரோட இருந்தா இன்னும் எத்தனை பொண்ணுங்க சாவாங்களோ..? இவனை உயிரோடவே விடக் கூடாது..” என்றாள்.
“எனக்கு மட்டும் இவனை உயிரோட விட ஆசையா..? ஆனா, இவனுக்கு பின்னாடி பல பெரிய புள்ளிங்க இருக்காங்க. இவன் உயிரோட இருந்தாத்தான் அவங்க யாருன்னு கண்டு பிடிக்க முடியும்..” என்றான் ஈஸ்வரன்.
“கண்டு பிடிச்சு என்ன செய்ய முடியும்..? அதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. கைக்கு கிடைச்சவனை கொன்னு போட்றனும். அப்பத்தான் கொஞ்சமாவது பயமிருக்கும்…” என்றாள்.
“அப்படிங்கிற..?” என்றான்.
“அப்படித்தான்..” என்றாள்.
“உனக்கு என்ன தோணுதோ பண்ணுடி..” என்றான்.
“நீங்க எதுல வந்திங்க..?” என்றாள்.
“கார்ல தாண்டி.. கொளுத்தனும்ன்னா சீக்கிரம் கொளுத்துடி..” என்றவன், அவளை வெளியே நிறுத்தி விட்டு,வெளியே மயங்கிக் கிடந்த அடியாட்களை வீட்டிற்குள் இழுத்துப் போட்டான். கதவை உள் பக்கம் கூடி பூட்டியவன், மாடியிலிருந்த பால்கனியின் பைப் வழியாக கீழே இறங்கி வந்து விட்டான்.
“ஏங்க உள்ள போய் கதவைப் பூட்டுனிங்க..?” என்றாள்.
“எதை செய்றதா இருந்தாலும், தெளிவா செய்யணும்..” என்றவன்,
“இப்ப கொளுத்திப் போடு.. கேஸ் புல்லா லீக் ஆகியிருக்கும்..” என்றான்.
நியூஸ் பேப்பரை குச்சி போல் தடிமனாய் சுருட்டியவள், அதில் தீயைப் பிடித்து, லேசாக திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே எறிந்து விட்டு, நொடிப் பொழுதில் தள்ளி வந்துவிட்டாள். சிலிண்டர் வெடித்த அடுத்த நிமிடம், மனைவியை ஏற்றிக் கொண்டு காரைக் கிளப்பியிருந்தான் ஈஸ்வரன். வேகமேன்றால் வேகம் அப்படி ஒரு வேகம். அந்த ஏரியாவை விட்டே விலகி, நெடுஞ்சாலையில் இறங்கிய பிறகு தான் வேகத்தைக் குறைத்தான்.
“அவனுக உயிரோட இந்நேரம் எறிஞ்சு செத்திருப்பானுக..” என்றவளுக்கு கண்களில் அப்படி ஒரு சிவப்பு.
“ம்ம்..! ஆமா மகா..” என்றான் ஈஸ்வரன்.
“எப்படிங்க ஒரு ஆளா அத்தனை பேரையும் சமாளிச்சிங்க..?” என்றாள் அப்போதும் நம்ப முடியாமல்.
“எல்லாம் ட்ரிக்கு தான். உன்னை அங்க தான் வச்சிருக்கான்னு தெரிஞ்ச உடனே போலீஸ்க்கு போகலாம்ன்னு தான் நினைச்சேன். அப்பறம் ஒரு மனசு வேண்டாம்ன்னு சொல்லுச்சு. அங்க பக்கத்துல இருந்து வாட்ச் பண்ணேன். அவனுக நாலு பேரையும் அடிக்கிறது கஷ்ட்டம். அதான் ஈசியா மயக்க ஸ்ப்ரேவை அடிச்சுட்டேன். ஸ்ப்ரே கூட அங்க இருந்தது தான். கடைசி வரைக்கும் அவனுக மயக்கத்துல தான் இருந்தானுக..” என்றான்.
“நான் கூட சண்டை போட்டு, அடிச்சு துவம்சம் பண்ணிட்டிங்கன்னு நினைச்சேன்..” என்றாள்.
“எப்பவுமே எனக்கு புத்தியை யூஸ் பண்ணித்தான் பழக்கம். பிராக்டிகலா யோசிச்சு பாரு, இதெல்லாம் நடக்குற காரியமா..?” என்றான்.
அவன் சொல்வதும் சரியென்று தான் அவளுக்குப் பட்டது.
“உங்களை கொலைகாரன்னு சொல்லி சொல்லியே, கடைசியில நான் கொலைகாரி ஆகிட்டேன்..” என்றவள், அவ்வளவு நேரம் விட்டுவிட்டு அப்போது அழத் தொடங்கினாள்.
“இதெல்லாம் கொலையில சேராது..” என்றான் ஈஸ்வரன்.
“இவனுக்கு பயந்தா நிவி உயிரை விட்டா.. என்னால அதைத்தாங்க தாங்கவே முடியலை..” என்றாள்.
“இவனுங்க பார்க்க தான் வீரன் மாதிரி பேசுவானுக. ஆனா, உண்மையாவே மத்தவங்க பலத்துக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கிற கோழைங்க. உண்மையான வீரன் என்னைக்குமே, நேருக்கு நேரா தான் மோதுவான்..” என்றான் ஈஸ்வரன்.
“நீங்க கூட என்கிட்டே சொல்லலை பாருங்க..” என்றாள் அழுகையுடன்.
“இப்படி நீ கஷ்ட்டப் படக் கூடாதுன்னு தான்டி சொல்லலை..!” என்றான்.
“எனக்கு உங்களைக் கட்டிப் பிடிக்கணும் போல இருக்கு..” என்றாள் அழுது கொண்டே.
“இதெல்லாம் கேட்டுகிட்டு இருக்கக் கூடாதுடி..” என்று ஒரு கையால் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“ஏங்க..?” என்று அவள் ஆரம்பிக்க,
“கொஞ்ச நேரம் பேசாம இருடி… வீட்டுக்கு போய்ட்டு பேசிக்கலாம்..” என்றவன், சபரிக்கு அழைத்து தகவலையும் சொல்லிவிட்டான்.
அங்கே கேஸ் வெடித்த கெஸ்ட் ஹவுஸ் ஜெக ஜோதியாய் எறிந்து கொண்டிருந்தது. பல பெண்களின் மனமும், குடும்பமும் எறிந்ததைப் போல.