Skip to content
Post Views: 64
அத்தியாயம்: 22
இந்தியத் திருமணங்களில் ஒரு பெண்ணின் மதிப்பு அவள் கொண்டு வரும் பொன்னால் தான் தீர்மானிக்கப்படுகிறதா? என்று கேட்டால்…
Advertisement
ஆம்…
இன்னும் பலர் பெண்ணின் மதிப்பை பொன்னோடு தான் இணைத்துப் பார்க்கிறார்கள்.
Advertisement
Advertisement
திருமணச் சந்தையில் பொண்ணும் பொன்னும் ஒரே தராசில் நிறுக்கப் படுகிறது. அதில் பொன்னிருக்கும் தட்டில் அடுக்கப்படும் நகைகளின் எடைக்கு நிகராகத்தான் அப்பெண் உயர்வு அடைகிறாள்.
விஷ்ணுவிற்கு நன்கு தெரியும் நடேசன் தன் காதலை ஏற்க மாட்டார் என்று.
Advertisement
ஆதலால் தன் அன்னையின் உதவியை நாடினான். அவரிடம் பேசிப் பார்த்ததில், அவரின் ஆதரவு கிடைக்க, முப்பது பவுன் நகையாவது வேண்டும் என்பதை தெரிந்து கொண்டான்.
“அதெப்படி டா நகையே இல்லாம வெறும் கழுத்தோட வர்றவல மருமகளா ஏத்துக்க முடியும். உங்கக்கா தங்கச்சிங்களுக்கே நான் ஐம்பது ஐம்பது பவுன் போட்டுத்தான் கட்டிக் கொடுத்தேன். எம்மருமகளுக்குன்னு பத்து பவுனு எடுத்து வச்சிருக்கேன். அப்படி இருக்குறப்ப என் வீட்டுக்கு வர்றவ தாலிக் கொடி கூட போடாம மஞ்சக்கயித்துல தாலியக் கோத்துப் போட்டுட்டு நின்னா எப்படி? உங்கூடப் பிறந்ததுங்க அவள மதிப்பாங்களா! இல்ல ஊர் சனம் சும்மா இருக்குமா! அவ்ளவு செலவு பண்ணி டாக்டருக்கு படிக்க வச்சி ஒத்த சொட்டு நகையில்லாதவளயா முடிக்கச் சொல்ற!” என்று விட்டார்.
ஆக நகை மட்டும் இருந்தால் போதும். எப்படியாவது அன்னையைக் கவிழ்த்தி விடலாம். அவரின் மூலம் தந்தையை அனுகி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்று திட்டமிட்டு சுருதிக்காக அவன் நகை சேர்க்கும் முடிவில் இறங்கினான்.
சேர்த்தும் வைத்தான். சுருதி சம்பளம் முழுவதையும் அவளின் குடும்பத்திற்கு கொடுத்து விடுவது தெரியும். ஓவர் டயம் பார்த்தும் கொடுப்பாள். குடும்பத்தின் மீது அவளுக்கு இருக்கும் பிரியமும் முக்கியத்துவமும் நன்கு விளங்கியது. அவளின் தந்தையைக் கஷ்டப்பட விடக் கூடாது என்ற அவளின் மனநிலையையும் தெரியும்.
ஆனால் அந்தக் குடும்பம் அவளுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதை மஞ்சுளாவின் திருமணத்தின் போது அறிந்து கொண்டான்.
தங்கையின் காதல் கல்யாணத்திற்கு அவளின் குடும்பம் முப்பது சவரனையும் தூக்கிக் கொடுக்கும் என்று அவன் நினைக்கவில்லை.
“அவங்களுக்கு நீயும் பொண்ணு தான. அப்ப பங்கு பிரிக்கிறப்ப உனக்குன்னு கொஞ்சமாச்சும் வச்சிருக்கணும்ல. ஏன் எல்லாத்தை அவளுக்கே குடுத்தாங்க.”
“நாந்தான் எனக்கு வேண்டாம்னு சொல்லி, குடுக்கச் சொன்னேன். அவ்ளோ போட்டாத்தான் மாமியார் வீட்டுல அவளுக்குன்னு ஒரு மரியாதை இருக்கும்னு அம்மா சொன்னாங்க. என்னால எதுக்கு அவளோட சந்தோஷம் கெடணும். அதான் குடுத்திட்டேன். எனக்குத் தான் நீ இருக்கியே! நீ இப்படிக் கேப்பியா என்ன?” என்றபோது சுள்ளென்று கோபம் வந்தது விஷ்ணுவிற்கு.
அவளைத் திருமணம் செய்ய, மேல் நாட்டில் படிக்கக் கிடைத்த வாய்ப்பை மறுத்திவிட்டு, சாதாரண மருத்துவனாக வேலை செய்து, நகைக்கு என்று கொடுத்துக் கொண்டிருக்கிறான். அதுவும் வீட்டிற்கே தெரியாது. இதில் கிடைத்திருக்க வேண்டியதைத் தாரை வார்த்தேன் என்றால் கோபம் வராதா என்ன?
“இப்ப எதுக்கு நீ இவ்ளோ கோபப்படுற? எனக்கு எங்க வீட்டுல எதுவும் போட மாட்டாங்கன்னா!”
“ஆமாம்… உங்தங்கச்சி வீட்டுல மரியாதை கிடைக்கணும்னு யோசிச்ச உங்கம்மாக்கு, நீ ஞாபகத்துலயே இல்லயா? உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும். அதுக்கு பவுனு தேவன்னு தெரியாதா?”
“ஏன் டாக்டர் மாப்ளக்கி நூறு பவுனோட தான் பொண்ணு வேணுமாக்கும்.” என்றவளின் குரலில் இருந்த மாறுதலைக் கவனிக்கவில்லை.
வாய்ப்பு கை நழுவிச் செல்கிறதே என்ற கடுப்பில் இருந்தவனுக்கு அவளின் பேச்சு கோபத்தைத்தான் தந்தது.
“இப்ப நான் என்ன சொல்லணும்னு எதிர்பாக்குற? கட்டுன சேவையோட வா காலம் முழுக்க காப்பாத்துறேன்னா…”
“ஏன் முடியாதா? என்னைத்தான காதலிக்கிற? இல்ல நகையையா?” என்க, கேசத்தை அழுத்திக் கோதியவன்,
“நடப்பப் பேசு சுருதி.”
“ஏன் நடக்காதுன்னு கேக்குறேன்?”
“நான் ஒன்னும் ஆகாயத்துல இருந்து குதிச்சி வரல. எனக்கு அப்பா அம்மா இருங்காங்க. கல்யாணத்துக்கு அப்றம் அவங்க கூடதான் நாம இருக்கப் போறோம். இப்படி ஒன்னுமில்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டா… அந்த வீட்டுல உன்னோட மரியாதை என்னாகும்?”
“உன்னோட மனைவியோட மரியாதை உன்னால வாங்கித்தர முடியாத அளவுக்கா இருக்க?”
“என்னால முடியும். மனைவியானதுக்கு அப்றம் தான். ஆனா நீ என்னோட மனைவியாகுறதுக்கே இங்க நகை தேவப்படுதுன்னு சொல்றேன். ஏற்கனவே அப்பாக்கு உங்குடும்பத்து மேல நல்ல அபிப்ராயம் இல்லை. இதுல ஒரு பவுன் நகையில்லாம கல்யாணத்துக்கு எப்படிக் கேக்க முடியும்?.” என்றவன்,
“வாங்குற சம்பளத்துல கொஞ்சத்தையாவது நீ சேத்து வச்சி நகை வாங்கிருக்கலாம். மொத்தத்தையும் உங்குடும்பத்துக்கே குடுத்தா ஒன்னுமில்லாம நிக்கிற.”
“என்னமோ நான் மட்டும் குடுக்குற மாதிரி பேசுற!
உன்னோட சேலரிய நீ உங்குடும்பத்துக்குத் தான குடுக்குற?” என்றவளிடம் நகைச் சீட்டு போட்டு வைத்திருப்பதைச் சொல்ல, கண்மண் தெரியாத கோபம் வந்தது சுருதிக்கு.
“இந்த விசயம் மட்டும் உங்க வீட்டுக்குத் தெரிஞ்சா என்னைத் தூக்கி வச்சி கொண்டாடுவாங்களாக்கும்?”
“ம்ச்… சுருதி நமக்கு கல்யாணம் நடக்கணும்னு தான் இதெல்லாம் செய்றேன்.”
“நமக்கு கல்யாணம் நடக்கணும்னா இப்படிக் கள்ளத்தனம் பண்ணாம, நீ முதல்ல உன் அப்பாக்கிட்ட பேசு. எப்படி பேசுவ? உனக்குத் தான் உங்கப்பான்னா பயமாச்சே!” என்று ஏளனமாகச் சொல்ல,
“சுருதி மைண்ட் யூவர் வேட்ஸ்.”
“நான் மைண்ட் பண்ணித்தான் பேசுறேன். நான் தான் பாத்தேனே… அப்பா வந்து கூப்பிடவும் எதுவுமே பேசாம பூனை மாதிரி போனவன் தான் நீ. இப்பவும் உங்கப்பாக்குப் பயந்திட்டு தான் இப்படில்லாம் பண்ற.” என்று குற்றம் சாட்ட, நெஞ்சு விடைக்க அவளின் முன் வந்து நின்றவன்,
“என்னால எங்கப்பாட்டா நம்ம காதலச் சொல்லி கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்க முடியும். உன்னால உங்கம்மாட்ட பேசி, அதிகமா வேணாம்… ஒரு கிராம் தங்கத்த வாங்கிப் பாரு பாப்போம்.” என்று சவால் விட,
“எங்கம்மா எனக்காக என்னென்னாலும் செய்வாங்க.” என்றவளை இகழ்ச்சியாகப் பார்த்து சிரித்தான்.
தனக்காக, தன் தேவைக்காக, தன் தலை நிமிர்விற்காக, தன் சுயமரியாதைக்காக, தன் மனநிறைவிற்காக என்று வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றாவது ஒரு நாள் தன் இலக்கை அடைந்து, தன்னிறைவு பெற்று, தன் ஓட்டத்தைக் குறைத்து, தன் உடல் நலனையும் மனநலனையும் கவனத்தில் கொள்வர்.
ஆனால் தன் குடும்பத்திற்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக பிறருக்காக என்று தன் உடலை வருத்தி உழைப்பைக் கொட்டும் போது அவர்கள் தரும் பணத்திற்கு மட்டும் தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்குமே தவிர அவர்கள் செய்யும் தியாகம் புலப்படவே செய்யாது. இயந்திரம் போல் வாழ்க்கை மாறி விடும்.
“அது நடக்காத காரியம் சுருதி. அவங்களுக்குத் தேவ உன்னோட சம்பாத்தியம். அதை நீ எப்படி சம்பாதிச்சுக் கொண்டு வர்றங்கிறது இல்ல. நான் சொன்னது உண்மன்னு உனக்கு ஒரு நாள் புரியும்.” என்று சுருதிக்கு புரிய வைக்க முயல,
என் குடும்பம் அப்படி அல்ல என்று வாதிட்டாள்.
மாதங்கள் கடந்து கொண்டே செல்ல, விஷ்ணுவிற்கு தான் இருப்புக் கொள்ளவில்லை. அவளைச் சமாதானம் செய்து, ‘எதுவும் வேண்டாம். வீட்டை விட்டு வா… நாம் ஓடிப் போயாவது திருமணம் செய்து கொள்வோம்.’ என்று கூட அழைத்துப் பார்த்தான்.
அப்பொழுதும், என்னுடைய குடும்பத்திற்கு நானும் என் வருமானமும் முக்கியம். அவர்களுக்குத் தலையிறக்கம் தரும் எதையும் நான் செய்ய மாட்டேன் என்றுவிட்டாள்.
‘உன்னால் உன் குடும்பத்தை விட்டு வர முடிந்தால் வா இல்லையேல் நாம் சேராமல் இருப்பது தான் சிறந்தது. திருமணம் என்பதை செய்து கொண்டு, மனக் கசப்பில் பிரிந்து போவதை விட சேராமல் இருப்பதே நல்லது.’ என்று விட்டு தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வெளிநாடு சென்று விட்டான் படிக்க.
அவன் எவ்விதம் விட்டுச் சென்றானோ அவ்விடத்திலேயே நின்று விட்டாள் பெண். அவளுக்குக் குண்டு மணி தங்கத்தைக் கூட வாங்கித் தரும் யோசனை கூட இல்லை மனோகரிக்கு. கூடவே அவளின் சம்பாத்தியத்தை வைத்து அவளை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஆழமான அடி தான்.
அவன் கூறிய உண்மையின் வலியை ஏற்க முடியவில்லை. அவனிடம் தோற்ற ஓர் உணர்வு. அனைத்தையும் யாரிடமாவது சொல்லி ஓவென அழ வேண்டும் போல் இருந்தது.
அழுதாள்…
விஷ்ணு பேசிய பின், ரிதன்யாவின் வீடு வந்தவள், மடியில் சாய்ந்து தன் ஒட்டு மொத்தக் கண்ணீரையும் கொட்டி, முழு மூச்சாய் நடந்தவைகளைச் சொல்லி அழுதாள்.
அவளின் தோல்வியை ரிதன்யா வெற்றியாக்கினாள். இதோ தங்கத்தில் மின்னியது தாலி. கூடவே காதிலும் கையிலும் இருந்த ஆபரணங்கள் அனைத்தும் தங்கம் தான்.
தாலியே பத்து பவுன் இருக்கும். காலையில் அதை விஷ்ணு அவளின் கழுத்தில் அணிவித்த போது உடைந்து அழவேண்டும் போல் இருந்தது. அத்தனை நடுக்கம் அவளுள்.
விஷ்ணு சுருதிக்கு என்று தந்த எந்த நகையையும் ரிதன்யா தொட்டுக் கூட பார்க்க மறுத்து விட்டாள். ‘அதையெல்லாம் உன் மனைவியான பின் உரிமையோடு போட்டு விடு.’ என்றவள், சுருதியின் நகைக்கானப் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டாள்.
“இதெல்லாம் உன்னோட பொண்ணுக்குன்னு வச்சிருப்ப. எதுக்கு எனக்கு குடுக்குற ரிது? வேண்டாம்.” என்றவளிடம்,
“அவ வளருறப்ப பாத்துக்கலாம். இது உங்கக்கா குடுக்குற சீரு. அதுவும் உனக்கு இல்லை. உன்னோட சந்ததிக்கு. இது வளருமே தவிர, குறையக் கூடாது. பிடி… அது உன்னோட பொறுப்பு.” என்று கட்டளையிட்டு அணிவித்து விட்டாள்.
கூடவே திருமணம் என்பது வாழ்நாளில் திரும்பக் கிடைக்காத பொன் நாள். அதை அனுபவி. கண்டதையும் நினைத்து புலம்பாதே என்று எடுத்துச் சொல்ல, அனைத்தையும் மறந்து தன்னை திருமணக் கனவில் புகுத்திக் கொண்டாள்.
திருமணம் முடிந்து வரவேற்புக்கான வேலைகள் ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
திருமண வேலைகளில் பத்ரியும் ரிதன்யாவும் பம்பரமாய் சுழன்றனர்.
பார்ப்பவர்கள் கண் காது மூக்கு வைத்து பேசுவார்களோ என்ற சங்கடத்தில் பத்ரியின் முன் உதவி என்று நிற்காது இருந்தாள். ஆனால் அவளால் சமாளிக்க முடியவில்லை. மண்டபம் பிடிப்பது தொடங்கி, அலங்காரம், சாப்பாடு என்று இணையத்தில் பார்த்து, ஃபோன் செய்து ஒன்றை பெண்ணாய் தான் மட்டுமே பேசுவதால், அவர்களின் பேச்சில் உண்டாகும் மாற்றம் அவளுக்கு அச்சத்தைத் தந்தது.
ஆதலால், “எனக்கு சென்னை புதுசு. அதுனால உதவி பண்ண முடியுமா?” என்று ரிதன்யாவே வாய்த்திறந்து கேட்க, அதிதியும் ஆதரவுக்கு வர, செய்யாமல் இருப்பானா என்ன?
அதுவும் அவனின் பட்டர் பன் அவனுடன் ஆரோக்கியமான பேச்சு வார்த்தையில் இருக்கும் இந்நிலையில் மீண்டும் அவளுடன் முறுக்கிக் கொள்ள அவன் என்ன பைத்தியமா?
நட்சத்திர விடுதியில் பார்ட்டி ஹாலை புக் செய்திருந்தான். தங்கத் திரைச் சீலைகள், வாசமில்லா வண்ண மலர்களால் ஆன தோரணங்களால் தொங்கவிடப்பட்ட, அரங்கையே வெளிச்ச கீற்றுகளால் நிறைக்கும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட, மேடையில் மணமக்கள் இருவர் பெயர் மட்டுமல்ல, இருவருமே அழகுப் பதுமையாய் ஜொலித்தனர்.
அனைத்தையும் ரிதன்யா யோசனையாகச் சொல்ல, நிறைவேற்றியது பத்ரி தான்.
யாரும் இப்படி ஒரு கொண்டாட்டத்தைக் கண்டது இல்லை என்பது போல், திரண்டு வந்திருந்த இளைஞர் கூட்டம், ஆட்டம் போட்டு அமர்க்களப்படுத்தியது அரங்கை. இருவரின் உடன் பயின்றவர்கள், படித்தவர்கள் எல்லாம் வந்து நிற்க, சபை போதவில்லை என்றிருந்தது.
‘ஒன்றுமில்லாதவள், இவளின் சார்பாக யார் வந்து நிற்கப் போகிறார்?’ என்று ஏளனமாய் நினைத்த நடேசனைக் கூட வியக்க வைத்திருந்தனர் சுருதிக்காக என்று வந்திருந்த விருந்தினர்.
அவளின் பணியின் நிமித்தமாகவும், அவளின் நல்ல குணத்தின் காரணமாகவும் மருத்துவர், செவிலியர்கள் மற்றும் நோயாளியாக வந்து நலன்பெற்று திரும்பியவர்கள் எனப் பலர் வந்து நீட்டிய பரிசுகளைப் பார்த்து,
‘பரவாயில்ல. காசு பணம் இல்லன்னாலும், நிறைய மக்க மனுஷங்கள சம்பாதிச்சு வச்சிருக்கு இந்தப் பொண்ணு. எல்லாம் பெரிய பெரிய ஆளுங்களா இருப்பாங்க போல.” என்று மருமகளின் மீது தனி மரியாதை வந்தது.
மருமகள் கழுத்தில் கிடக்கும் நகைப் பார்த்தது, விஷ்ணுவின் அன்னைக்கும் பெருந்த திருப்தி. முகம் வாடாது மகனின் வரவேற்பில் நின்றார். விஷ்ணுவின் உடன் பிறப்புகள் வந்தார்கள் சென்றார்கள். அவ்வளவே…
அனைத்தையும் ஓரமாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த மனோகரி எம்மாதிரி உணர்கிறார் என்று அவருக்குத் தான் தெரியும். மகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு மனம் பூரிக்கவா! அல்லது இனி தன் செலவீனங்களைச் சுருக்கிக் கொண்டு வாழப் போகும் நிலைக்கு அழவா! மகனின் படிப்புக்கும் வேலைக்கும் என் செய்வது? என்று தெரியாது பலவித குழப்பங்களோடு தான் அமர்ந்திருந்தார்.
மனோகரி வந்திருந்தாரா?
ஆம் வந்திருந்தார்…
வந்தது அவர் மட்டுமல்ல ரிதன்யாவின் குடும்பமும் தான்.
சுருதியின் தம்பியைத் தொடர்பு கொண்டு, ‘இது தான் உன் அக்காளின் மேல் நீ வைத்த பாசமா? அவள் உன் குடும்பத்திற்காக அத்தனை செய்திருக்கிறாள். முதல் முறை அவளுக்காக செய்ய நினைப்பது இத் திருமணத்தைத் தான். அதில் கூட பங்கு பெற முடியாத அளவிற்கு இறுகிய மனமா உனக்கு?’ என்று கேட்டு திட்டியிருந்தாள் ரிதன்யா. அவன் தன்னுடன் தன் அன்னையையும் அழைத்து வருவான் என்று ரிதன்யா எதிர்பார்க்கவில்லை.
வந்தவரை மணமக்களுக்கு ஆசி கொடுக்கச் சொல்லி மேடை ஏற்ற, சுருதி தாயின் காலில் விழுந்து ஆசி வாங்கினாள். மகளுக்கு கண்ணீருடன் தன் ஆசியை வழங்கியவரிடம், கேசவனின் படிப்பும் வேலையும் தன் பொறுப்பு என்று விஷ்ணு வாக்கு கொடுத்ததும் தான் மனோகரியின் முகம் விகசிக்கவே செய்தது.
எப்படியோ சந்தோஷமாக வாழ்ந்தால் சரி என்று இடத்தைக் காலி செய்தார்.
சரியாக விழா முடியும் தருணத்தில் தான் வந்து சேர்ந்தனர் அண்ணாமலை குடும்பத்தினர்.
காவல் நிலையம், மருத்துவமனை என்று அழைத்து திரிந்ததில், அவரின் தோற்றம் ஓய்ந்து போயிருந்தது. எல்லாம் அந்த விக்ரமால் தான். எத்தனை முறை மன்னிப்பு கேட்டிருப்பார் அவனிடம்.
உங்கள் மகள் எங்கே இருக்கிறாள் என்று சொல்லுங்கள் இல்லையேல் தூக்கு மாட்டிக் கொள்வேன் என்று தினம் தினமும் அவரைத் தொடர்பு கொண்டு பயமுறுத்தி பயமுறுத்தியே அவருக்கு நெஞ்சு வலியை உண்டாக்கியருந்தான் விக்ரம்.
பஞ்சாயத்தைக் கூட்டி, அனைவர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்தி, காலில் விழ வைத்து, இறுதியாக காவல் நிலையத்திற்கு தூக்கிச் சென்றதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.
அதில் அவருக்கு ஹாட் அட்டாக் வரவில்லை என்றால் தான் ஆச்சரியம்.
தந்தையின் நிலை தெரிந்ததும் மதுரைக்குச் சென்று அவரைப் பார்த்து வந்தாள் ரிதன்யா.
மிகவும் கம்பீரமாக பார்த்த மனிதரை, சுழற்றி சாய வைத்திருந்தது காலம்.
“என்னை மன்னிச்சிடு பாப்பா… அப்பா உனக்கு சரியான ஆள தேர்தெடுக்கல, என்ன மன்னிச்சிடுமா! நீ நல்லா இருப்பன்னு நினைச்சுத் தாம்மா கல்யாணம் பண்ணி வச்சேன். ஆனா அது இப்படியாகும்னு நினைக்கல. அப்பாவ மன்னிச்சிடு பாப்பா.” என்று மருத்துவமனையில் இருக்கும் போதே மன்னிப்பை வேண்டினார் அவர்.
தந்தையின் தோற்றம் கண்டு ரிதன்யாவிற்கு கண்கள் குளமாகிப் போனது.
என்னதான் பார்த்து பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் இப்படித்தான் ஆகும் என்று என்றோ பிரம்மன் எழுதி வைத்ததை மாற்ற முடியுமா?
இதில் பெற்றவர்களைக் குறை சொல்லி மட்டும் என்னாகப்போகிறது. எல்லாம் விதி.
விக்ரமுடன் பிரச்சினை என்ற போது பிறந்த வீட்டில் தனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பது தான் ரிதன்யாவின் கோபமே தவிர, திருமணம் செய்து வைத்ததில் இல்லை.
யாரும் யாருடனும் வாழ்ந்து பார்த்து திருமணம் செய்யலாம் என்ற மேற்கத்திய கலாச்சாரம் இன்னும் நம் நாட்டில் ஊடுறுவவில்லை. அப்படியே வாழ்ந்து பார்த்தாலும் ஒருவரின் குணம் எப்பொழுது மாறும் என்று யாராலும் கணிக்க முடியாதே.
அண்ணாமலையார் மட்டுமல்ல தனபாலும் இளைந்திருந்தான்.
“உங்க தங்கச்சி தான் இவன் கூட வாழ மாட்டேன்னு வீட்டு விட்டே போய்ட்டால. அப்றம் யார வாழ வைக்க அவன் கால்ல விழுந்தீங்க? ஒழுங்கா ஓரமா நின்று வேடிக்க பாருங்க. விழுறதா இருந்தா உங்கப்பா விழட்டும். மகளுக்கு இவன கட்டிவச்ச பாவத்துக்கு.
நீங்க யார் காலயும் பிடிக்க கூடாது. அவ்ளோ தன் சொல்லிட்டேன். என்னை மீறி அவன்ட்ட போனிங்க, இனி நான் உங்க கூட இருக்க மாட்டேன். எங்கம்மா வீட்டுக்குப் போய்டுவேன்.” என்று தேன்மொழி சண்டையிட்டு நான்கு மாதங்கள் தாய் வீட்டிற்கு பிள்ளையோடு சென்று விட்டாள். அதிலிருந்து தனபாலன் விக்ரம் விடயத்தில் தலையிடவில்லை. ஆனாலும் விக்ரம் லேசுப்பட்டவனா என்ன? வியாபாரம் முதல் அனைத்தும் அடி வாங்கியது அவன் செய்கையால்.
“இப்படிப்பட்டவன் கூடத்தான் பத்து வர்ஷா குடும்ப நடத்துச்சி உந்தங்கச்சி. எவ்ளோ சொல்லுச்சி. ஒருக்கையாவது அதுக்கு ஆதரவா இருந்தீங்களா?” என்றான் மாரி.
அப்பொழுதும் அவன் ரிதன்யா விக்ரமுடன் வாழ்ந்திருந்தாள் இது போன்ற அவமானங்களைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை என்று வாதிட,
“உங்க கௌரவத்துக்காக அந்தப் பிள்ளை செத்திருந்தா சந்தோஷப்பட்டிருப்ப. உயிரோட நடமாடுதுல அதான் இம்புட்டு பேச்சு பேசுற. கூட வளந்த எனக்கே அந்தப் பிள்ளை நல்லா இருக்கணும் தான் நினைக்கத் தோணுது. ஒரு தாய் வயித்துல பிறந்திட்டு எப்படி டா இப்படி அந்த இருக்க?” என்று மாரி சண்டையிட, தனபாலனுக்குச் சுருக்கென்றிருந்தது.
மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும், “எப்படி இருக்க? சரிகாவ என்ன பண்றா?” என்பது போன்ற அக்கறையானக் கேள்விகளை அண்ணாமலையைப் பார்க்க மருத்துவமனையில் வைத்தே கேட்டான்.
ஏற்கனவே கலைத்து ஓய்ந்திருந்தவனை, குத்திக் கிழிக்காது, அவளும் நல்ல முறையிலேயே பதில் பேசினாள்.
இப்பொழுது திருமண மண்டபத்திற்கு வந்திருந்தவனுக்கு, தங்கையிடம் பொதுவான நலவிசாரிப்புகள் விசாரித்தப் பின், என்ன பேசுவது என்று தெரியாது போயிற்று.
ரிதன்யாவின் முகம் பார்த்து நிற்க, “சாப்டியாண்ணா?” என்று சாதாரணமாகக் கேட்டு தன் பேச்சில் நுழைத்தாள்.
மேடை ஏற்றி அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுக்க, சுருதி அண்ணாமலையாரிடம் பெயர் தெரியாத அந்தக் கடிதத்தைத் தந்தது தான் என்று மன்னிப்பு கேட்க, மனிதர் உடைந்து அழுதார்.
காண்போர் பலரும் ஜோடி ஜோடியாக தங்கள் இணையுடன் இருக்க, தங்கள் மகளை ஒரு நாளும் கணவனுடன் பார்த்தது இல்லையே என்று மனம் வாடியுற்று.
தன்னால் தான், தன் மகள் பட்டுப் போய் நிற்கிறாளே என்ற குற்றவுணர்வு அவரைக் குத்தியது. அவரை மட்டுமல்ல சுருதியையும் தான்…
அதுவும் ரிதன்யா விக்ரமை விவாகரத்து செய்ததன் காரணத்தைக் கேட்டறிந்த பின், ரிதன்யாவின் முகம் பார்க்க முடியாது உள்ளுக்குள் அரித்தது.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!