‘பெரியாச்சியா’ என்று சற்று நடுக்கத்துடன் ப்ரியாவை பார்த்தால் சகுந்தலா தேவி.
பிரியா , என்னை உனக்கு நியாபகம் இருக்கா ?? வேதநாயகம் என்றாள் கோபம் குறையாத குரலில்.
வேதநாயகம் , ஆத்தா உன்னை எப்படிம்மா மறப்பேன் எனக்கு புள்ள இல்லாம பத்து வருஷமா தவிச்சிட்டு இருக்கும் போது என் அம்மா உடம்புல நீ இறங்கி அருள் வாக்கு சொன்னியம்மா ,அதுபடி நாங்க உன் சன்னதிக்கு வந்து உன்னை கும்பிட்டோம் அதுக்கு அப்பறம் தான எனக்கு முத்து முத்தா நாளு பிள்ளைங்க பொறந்தது ,நானும் வாழ்க்கையில முன்னுக்கு வந்த, உனக்கு சேரவேண்டியதை மாசம் மாசம் கோவிலுக்கு கொண்டு வந்து என் கையாலையே கொடுத்துட்டிருக்க என்றார் கண்ணில் நீர் வழிய.
பிரியா , அந்த நினைப்பு உன் பொண்டாட்டிக்கு இல்லையே என்றாள் சகுந்தலாவை பார்த்து.
அவ்வளவுதான் சகுந்தலா தேவிக்கு சர்வமும் அடங்கி போனது.அதன்பின் ப்ரியாவை ஒரு பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
எல்லாருக்கும் ஓரளவு விஷயம் தெரியும் என்பதால் அனைவரும் அமைதியாக ப்ரியாவை பார்த்த வண்ணமே இருந்தனர்.
வேதநாயகம் , ஆமா தாயீ அவள் ஏதோ பேரப்பிள்ளைங்க ஆசையில கொஞ்சம் தப்பா என்று அவர் முடிக்கவில்லை பிரியா ஆக்ரோஷத்துடன் கத்தினாள்
ஹேய் , ம்ம்ம் இனி ஒரு தடவை நான் கொடுத்த உயிரை அழிக்கணும்னு நினைச்சீங்க உன் குடும்பமே திசை தெரியாம போயிடுவீங்க ஹேஹேய்ய்ய்ய்ய்…… என்றவள் மயங்கி சரிந்தாள்.
எல்லாருக்குமே அதிர்ச்சிதான் என்ன நடக்கு இங்க, யாரு உயிரு ,யாரு அழிக்க நினைச்சாங்க இத்தனை வருஷமா வராத பெரியாச்சிம்மா இப்போ வந்தது எதுக்கு அதுவும் ப்ரியாவுக்கு எப்படி வந்தது.
ஆனால் அதை யோசிக்க இது நேரம் அல்ல ப்ரியாவை பார்க்கலாம் என்று எண்ணி அவளை நெருங்கினர்.
குழந்தையோ பிரியாவை தட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தாள்.
குழந்தை , அம்மா அம்மா எழுந்திரும்மா என்று ப்ரியாவின் கன்னத்தை தட்டி கொண்டிருந்தாள்.
அதை பார்த்த மித்ரன் தன் மனதில் ‘ இவள் இவ்வளவு ஆக்ரோஷமா ஆடியிருக்கா நானே கொஞ்சம் பயந்திட்ட ஆனால் குழந்தை தைரியமா அவளை எழுப்பிட்டிருக்காளே !!!!….
அதன்பின் ப்ரியாவை எழுப்பி சாமி கும்பிட்டுவிட்டு அனைவரும் வெளியில் வந்தனர்.
யாரும் யாரிடமும் பேசவில்லை. சாப்பிட்டுவிட்டு அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விட்டனர். வேதநாயகம் தான் என்ன நடந்தியிருக்கும் என்று யோசனையில் ஆழ்ந்தார்.சகுந்தலா வேறு எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று கதவை சாற்றி கொண்டது இன்னும் கலக்கத்தை தந்தது.
தற்செயலாக மாடியில் உள்ள அந்த அறையை பார்த்தார் அவர் மனதில் ‘ ஒரு வேலை இதற்கும் பெரியாச்சியம்மா சொன்னதுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமோ??? அப்படி இருக்க வாய்ப்பு இருக்கா ??? ஆத்தா என்னம்மா இது தெளீவா இருந்த மாதிரி இருந்தது ஆனால் ஏதோ குழப்பம் இருக்குற மாதிரியும் தெரியுதே அது என்ன என்று சிந்திக்கலானார்.
அவரின் சிந்தனையை கலைக்கும் விதமாய் பிரியா தொண்டையை செருமிக்கொண்டு வந்தாள்.அவளது கையில் சுகர் மாத்திரையும் தண்ணீரும் இருந்தது.அதனை டேபிள் மேல் வைத்துவிட்டு எதுவும் பேசாமல் திரும்பி சென்றாள்.அதனை பார்த்த
வேதநாயகம் , அம்மாடி பிரியா என்ற குரலில் திரும்பிப்பார்த்தால் பிரியா.
[the_ad id=”6605″]
வேதநாயகம் , இன்னும் எத்தனை நாளைக்கும்மா இப்படி யாருக்கூடையும் பேசாம இருப்ப ?? என்றார் சிறு வேதனையுடன்.
பிரியா , உண்மை தெரியிர வரைக்கும் என்றாள் கோவத்துடன்.
இதற்குமேல் அவர் என்ன பேசுவார் இந்த நிலைமைக்கு அவரும் ஒரு காரணம் அல்லவா அதனால மௌனமாக நின்றார்.
ப்ரியாவும் அவரின் பதிலை எதிர் பாராமல் தன் அறைக்கு சென்று கார் சாவியையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றாள்.
????????????????????????????????????????????????????????????????
நேரம் காலை 10 மணி
கமிஷனர் ஆபீஸ்கமிஷனர் Mr. விஜய ராகவன் முன் மித்ரனும் அரவிந்தும் அமர்ந்திருந்தனர். ஏதோ சீரியஸான விஷயம் போலும் மூவர் முகமும் தீவிர சிந்தனையில் இருந்தது. கமிஷனரே முதலில் பேசினார்.
கமிஷனர் , இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க ரெண்டு பேரும்.
மித்ரன் , ஒருவேளை நம்மளை divert பண்ணக்கூட இப்படி செஞ்சிருக்கலாமே sir.
அரவிந்த் , maybe இருக்கலாம் sir but கொஞ்சம் carefulla இருக்குறது better sir.
மித்ரன் , I think he is right sir…..
கமிஷனர் , ஓகே கைஸ் ஒன்னு பண்ணலாம் இதுல வர டைம் அன்ட் லொகேஷன் வித் கிரைம் செக் பண்ணுங்க எதுவுமே நடக்கலான ஜஸ்ட் லீவ் இட் பட் வெரி careful கைஸ் ……. என்று எச்சரித்தார்.
( என்னடா நடக்கு தலையும் புரியல வாலும் புரியல….வாங்க கொஞ்சம் நம்ம காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றி பாப்போம் என்ன நடந்ததுன்னு….. டொய்…… டொய்…… டொடொய்…..)
நேரம் காலை 9.15
கமிஷனர் ஆபீஸ்ஏதோ தீவிர ஆலோசனையில் இருந்தனர் மித்ரன் மற்றும் அரவிந்த். அப்போது
மித்ரன் , என்ன அரவிந்த் சாந்தி நகர் கேஸ்ல ஒரு சின்ன தடையும் கூட கிடைக்கல.
அரவிந்த் , அதைதான் நானும் யோசிச்சிட்டிருக்க போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் வந்ததும் ஏதாவது கிடைக்குதான்னு பார்ப்போம்.
மித்ரன் , எனக்கு அவனோட மனைவி மேல தான் டவுட்…பார்க்கலாம்..
அப்போது ஒரு கான்ஸ்டபிள் அனுமதி கேட்டு உள்ளே வந்தார்.அவர்கள் இருவரையும் கமிஷனர் அழைப்பதாக கூறினார்.பின் இருவரும் கமிஷனர் அறைக்கு சென்றனர்.இருவரும் சலூட் அடித்து அமர்ந்தனர்.
அவர்கள் முன் இருந்த டேபிள் மீது ஒரு வட்டமான கருவி இருந்தது.அதனை சுட்டி காட்டிய கமிஷனர் , இது என்ன கருவினு கெஸ் பண்ணமுடியுதா கைஸ்.
மித்ரன் , நோ ஐடியா சார்.
அரவிந்த் , ஏதோ அறை எண் 305 ல் கடவுள் படத்தில வர device மாதிரி இருக்கு sir.
கமிஷனர் , அரவிந்த் be சீரியஸ்.
அரவிந்த் , Ok sir…..
மித்ரன் , சார் அரவிந்த் சொல்றதும் கரெக்ட் தான அதே மாதிரிதா இருக்கு.
கமிஷனர் , என்ன மித்ரன் தம்பிக்கு சப்போர்ட்டா ??……
மித்ரன் , அப்படி இல்ல சார்.
அரவிந்த் , அப்போ நீங்களே சொல்லுங்க
கமிஷனர் , ஹ்ம்ம் கொஞ்சம் கொழுப்பு அதிகமான மாதிரிதான் தெரியுது.
அரவிந்த் , ஆமா சார் டெய்லி வாக்கிங் போங்க குறைச்சிரும் சார்..
கமிஷனர் & மித்ரன் , அரவிந்த் ….
அரவிந்த் , சாரி சார் (minds voice : ரெண்டு பேரும் சேர்ந்து முறைக்குறாங்களே நான் என்ன பண்ணுவ …..ஐயோ ஐயோ….?????).
கமிஷனர் , நீ எல்லா எப்படிய்யா IPS பாஸ் பண்ண ??
அரவிந்த் , எல்லா படிச்சி தான் என்று கூற மித்ரன் அவனை நன்றாக முறைப்பது தெரிந்தது.
( Aravinth mind voice : ஆத்தி இவன் வேற முறைக்கானே தெரியாமல வாய விட்டுட்டோம் தனியா ரூம் போட்டு அட்வைஸ் பண்ணுவானே ….. சாமீ என்ன காப்பாத்துப்பா உனக்கு 100 தேங்காய் உடைக்கிறேன்…)
மித்ரன் , நீங்க சொல்லுங்க சார்.
கமிஷனர் , மொத்தத்துல தம்பிய விட்டு தரமாட்ட…..anyway விசயத்துக்கு வருவோம் இது என்ன device னு எனக்குமே தெரியல
(aravinth mind voice : adapaaviiiiiii)
கமிஷனர் , காலையில என்னோட சன் யாரோ ஒரு தாத்தா கொடுத்ததா சொல்லி என்கிட்ட தந்தான்.அத வாங்கி பார்த்த எனக்கு பெரிய ஷாக்.
[the_ad id=”6605″]
(Aravinth mind voice : அச்சோ electricity பாஸ் ஆச்சா ??? எவ்ளோ வோல்ட்?????ஹாஸ்பிடல் போகலையா ????….??)
கமிஷனர் , அந்த device டைம்னு display ஆகுது அதுல நான் சும்மா ஒரு நேரம் type பண்ண எனக்கு மூணு விஷயம் display ஆச்சு.
மித்ரன் , வாட் display ????
அரவிந்த் , என்ன படம் சார்.
கமிஷனர் அவனை முறைத்துவிட்டு தொடர்ந்தார் , First , time கேட்டுச்சு அப்பறம் லொகேஷன் கேட்டுச்சு odaney andha area la நடந்த incidents display ஆகுது. I was really scared guys என்று முடித்தார்.
மித்ரன் , This is unbelievable sir
அரவிந்த் , என்ன incident sir..
கமிஷனர் , என் பையன் என்கிட்ட இந்த device கொடுத்த time , லொகேஷன் என்னோட வீடு கொடுத்தேன் அப்படியே டிஸ்பிலே ஆச்சு எனக்கு ஒன்னும் புரியல….இதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ????
( இதுதாங்க நடந்துச்சு……இது என்ன device,priya ஏன் யார்கிட்டயும் பேசமாட்டேன்றாங்க , பெரியாச்சி சொன்ன உயிர் யாரு , அந்த அறை யாரோடது , அரவிந்த் மனைவி யாரு , சகுந்தலா தேவி ஏன் பெரியாச்சி சொன்னதை கேட்டு பயந்தாங்க இன்னும் இன்னும் நெறைய மர்மங்களை பத்தி அடுத்தடுத்த அப்டேட்ல சொல்ற அதுவரைக்கும் பை பை……?????????……..)
தொடரும்…….