என்னவள்_33
மாயா முதலில் தாயாரிடம் சொன்னது போல அவளுடைய வீட்டிற்கு போகமாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லி இருந்தாள். கடைசியில் இவளோடு அவர்தான் இங்கே வந்து தங்கி இருந்தார். அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்து அந்த தருணமும் வந்தது. வலிபிடிக்கவும் உடனே ஹாஸ்ப்பிடலுக்கு அழைத்து சென்றிருந்தனர். ஒரு நாள் முழுக்க இவளை கதறவிட்டு கடைசியாக ஜனித்திருந்தான் இவளது தவப்புதல்வன். வலி பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் டாக்டரிடம் சண்டைக்கே போய் இருந்தாள் மாயா…
“வலி தாங்கமுடியலை டாக்டர் பேசாமல் சிசேரியன் பண்ணிடுங்க” என்று…அவர் தான் பொறுமையாக எடுத்து சொன்னார். மாயா இன்னும் கொஞ்ச நேரம் தான் இப்படி பேசக்கூடாது என்று…ஒரு வழியாக பிறக்கவும் கண்கள் மூடி படுத்திருந்தாள்.
ஐந்தாவது நாளில் வீட்டிற்கு அழைத்து செல்வதாக முடிவு செய்திருக்க….அப்போதும் மறுபடியும் சண்டையிட ஆரம்பித்தாள் தாயாரிடம். நான் அங்கே வரமாட்டேன் என்ன என்னோட வீட்டில் விடுங்க என்று…யார் சொல்லியும் கேட்கவில்லை கடைசியாக மறுபடியும் மாயாவீட்டிற்கே வந்து தங்கி இருந்தார்.
ஒரு மாதம் முடியவும் அவனுக்கு தொட்டிலில் இட்டு பெயர் வைத்தனர். முதல் முதலாக மிகவும் தேடி தேர்வு செய்திருந்தாள் மாயா அதுவும் சுத்தமான தமிழ் பெயரை…வேந்தன்…கார்த்திக்கிடம் கேட்டு இருந்தாள் “வேந்தன் இந்த பெயர் தான் வைக்கணும் கார்த்திக். இதுதான் நம்ம பையனுக்கு பொருத்தமாக இருக்கும் என்று…அவனுக்கும் அத்தனை மகிழ்ச்சி…”
வீட்டில் கூட அடிக்கடி வந்து பார்த்து விட்டு சென்று இருந்தனர் ஒரு மாதம் முடியவும் தனது தாயாரை அனுப்பி வைத்திருந்தாள் மாயா…”அப்பாவை போய் பாருமா இங்கே தான் வேலைக்கு ஆள் இருக்கே பார்த்துக்குவாங்க என்று…”
“ஆம்…பிறந்ததில் இருந்து பாதி நேரம் குழந்தையை சமாதானம் செய்வது குழந்தைக்கு டயப்பர் போட்டு விடுவது இவளது தாயார் இல்லாத நேரத்தில் அவர்தான் செய்து கொண்டு இருந்தார்.”
இவர் அன்று புறப்பட அடுத்ததாக லட்சுமி இங்கே வந்து இருந்தார். கூடவே பிருந்தாவும்…லட்சுமியை ஏற்றுக்கொண்டவளால் பிருந்தாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது பிருந்தா ப்ளஸ்ஒன் படித்து கொண்டு இருந்தாள் அடுத்த வருடம் ப்ளஸ்டூ செல்ல இன்னும் சில மாதங்களே இருந்தது.
ஏற்கனவே நிறைய முறை மாயாவிடம் திட்டு வாங்கி இருந்ததால் அதிகமாக அவளிடம் நெருங்குவதில்லை ஆசையாக இரண்டு நிமிடம் குழந்தையை கையில் வைத்து இருந்தாள் ஏதாவது சொல்லி கையில் இருந்து வாங்கி சென்று விடுவாள். பிருந்தாவிற்குதான் அதிகமாக கஷ்டமாக இருக்கும். தன் தாயாரிடம் “குட்டி அழகாக இருக்கறான்மா அப்படியே அண்ணாவோட ஜாடை என்று அடிக்கடி கூறிக்கொண்டு இருப்பாள்.”
[the_ad id=”6605″]
வேந்தனுக்கு இரண்டாவது மாதம் ஆகும் போதே மறுபடியும் ஆரம்பித்து இருந்தாள் கார்த்திக்கிடம் இவளுக்கு உதவியாக வந்தது எதுவும் அவளுக்கு தெரியவில்லை. “கார்த்திக் அவங்க எப்போது வீட்டுக்கு போவாங்க எனக்கு அவங்க இங்கே இருக்கிறது பிடிக்கலை என்று…இவள் கேட்டபோது சரியாக லட்சுமியும் கேட்டு விட கூடவே பிருந்தாவும் கேட்டு இருந்தாள்.” இது எதுவுமே கார்த்திக்கின் காதில் விழவில்லை அவன் வேறு யோசனையில் வேகமாக பாத்ரூம்பிற்குள் நுழைந்து இருந்தான்.
அனால் இத்தனை நாள் பேசாமல் இருந்த பிருந்தா அவளிடம் நேரடியாக கேட்டு இருந்தாள். “ஏன் அண்ணி அம்மாவுக்கு வேலை இல்லாமலா இங்கே வந்து இருக்கறாங்க…ஏன் இப்படி பேசறிங்க…அம்மாவுக்கு கேட்கணும்ன்னு தானே இப்படி பேசுணிங்க… உங்களையும் வந்து பார்க்கறாங்கல்ல அவங்களை சொல்லணும் என்று கேட்டு இருந்தாள். அம்மா இங்கே வர்றேன்னு சொல்லும் போதே திரும்ப திரும்ப சொன்னேன் அங்கே வேண்டாம்ன்னு கேட்கலை அதுக்குதான் இப்போது வாங்கிகட்டறாங்க…”
அதற்கும் மாயா விடவில்லை.” ஓ…நீ பெரிய பொண்ணு ஆகிவிட்ட இல்லையா அதுதான் இப்படி பேசற… அதுவும் என்னயவே எதிர்த்து…இது என்னோட வீடு நீ முதல்ல வெளியே போ….புரியுதா…”
இத்தனை நேரம் இவர்கள் பேசியதை எதுவும் கார்த்திக் கேட்கவில்லை. அவன் வரவும் பெட்ரூம்பில் இருந்தது பாத்ரூம்பிற்கு குளிக்க சென்று இருந்தான் அவன் உள்ளே செல்வதை பார்த்துவிட்டு பெட்ரூம் கதவை சாத்திவிட்டு இவர்களுக்கு கேட்கும்படி பேசி இருந்தாள்.
அவன் கதவை திறக்கும் போது கேட்டது பிருந்தாவிடம் வெளியே போ என்றதைதான். “மாயா என்ன பேசற வீட்டுக்கு வந்தவங்ககிட்ட இப்படி தான் பேசுவதா உனக்கு அறிவே கிடையாதா என்று கேட்க…மொத்தமாக கத்த ஆரம்பித்து இருந்தாள். “
“என்ன கார்த்திக் தங்கச்சியை சொல்லவும் கோபம் வருதோ…வந்து இத்தனை நாள் ஆகிறது அங்கே போகலாம்ல்லன்னு கேட்டேன் இது தப்பா…கேட்டதில் என்ன தப்பு இது என்னோட வீடு தானே…”
“நீ திருந்தமாட்ட மாயா எப்பவும்…உன்னையும் நல்ல பொண்ணுன்னு தேடி பிடிச்சு கட்டி வச்சாங்கல்ல அவங்களை சொல்லணும். உனக்காக எத்தனை தூரம் அட்ஜெஸ் பண்ணி போறாங்க ஆனால் அவங்களுக்காக நீ என்ன செய்யற…கார்த்திக் கோபமாக கேட்க…”
“நான் இப்படிதான் யாருக்காகவும் என்ன மாற்றிக்கமாட்டேன். இவங்க இப்பவே இங்கே இருந்து போகட்டும் அவ்வளவு தான் கிட்டத்தட்ட பைத்தியம் போல கத்திக்கொண்டு இருந்தாள் மாயா.”
“கார்த்திக் புறப்படறோம் கார்த்திக் அவகிட்ட சண்டை போடாதே…பையனை பத்திரமா பார்த்துக்கோ…ஏதாவதுன்னா ஃபோன் பண்ணு…இங்கே நடந்ததை அப்பாகிட்ட உளரிடாதே என்றபடி பிருந்தா வா போகலாம் இனி நல்லதோ கெட்டவோ அவளே பார்த்துக்கட்டும் என்றபடி இவளை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். “
“அம்மா நான் கொண்டு போய் விடறேன்” என்றபடி புறப்பட்ட கார்த்திக்கிடம் “வேண்டாம் கார்த்திக் ஆட்டோவில் போய்க்குவேன் என்று கண்கலங்கியபடி புறப்பட்டார்”. ஒரு விஷயம்தெளிவாக தெரிந்தது இனி தன்னுடைய மகன் எப்போதும் தங்களுக்கு இல்லை என்று…
அமைதியாக புறப்பட்டு இருந்தார். இதோ இன்றோடு இரண்டு மாதம் முடிந்து இருந்தது. கார்த்திக் அதற்கு பிறகும் வழக்கம்போல் தாயை பார்க்க வந்து கொண்டு தான் இருந்தான். சில நேரம் மாயாதான் அதற்கும் சண்டையிட்டுக்கொண்டு இருந்தாள். “ஒரு ஃபோன் கூட பண்ணறது இல்லை நீ மட்டும் போகணுமா என்று…”
“மாயா உன்னோட பைத்தியக்காரதனத்தை நீயே வச்சிக்கோ…என்ன போககூடாது சொல்லற உரிமை உனக்கு எப்பவும் கிடையாது என உறுதியாக பேசி இருந்தான்.” இடையில் பதினைந்து நாள் கேரளா வரைக்கும் வேலை விஷயமாக சென்று தங்கிவிட்டு வந்து இருந்தான். வாழ்க்கை கொஞ்சம் அல்ல நிறைய சலிப்பாக இருந்தது அதுவும் மாயாவை நினைக்கும் போது…
முதல் முறையாக தன்னை நினைத்தே கோபம் வந்தது கார்த்திக்கிற்கு…தன்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து தாய்தந்தை,அங்கிள் என்ன யோசித்து திருமணத்திற்கு சம்மதம் சொன்னது தவறு என்று…எல்லாமே காலம்கடந்த பிறகு வருவது எந்த பிரயோஜனமும் கிடையாது என்பது தெரிந்தும்…இப்போதைக்கு பிருந்தாவை மட்டும் நல்ல முறையில் பார்த்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு எப்போதோ வந்து இருந்தான். தனியாக நகர்ந்து இருந்தாலும் அருகில் இருப்பது போல ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தான் பிருந்தாவிடத்தில் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை ஃபோன் செய்வதை வழக்கத்தில் வைத்து இருந்தான்.
தினமும் என்ன செய்கிறாள் என்ன படிக்கிறாள் எல்லாமுமே கேட்டு தெரிந்து கொண்டு இருந்தான். மறுபடியும் ஒரு வாரம் கேரளா செல்ல வேண்டியது இருக்க…இம்முறை சண்டையிட ஆரம்பித்து இருந்தாள்.
“இங்க இவன் கூட நான் போராடனும் ஆனால் நீ இஷ்டப்படி ஊர் சுற்றுவாயா என்று…”
“மாயா கதவு,ஜன்னலுக்கு அங்கே இருந்து தான் மரம் வாங்கணும் போனால் தான் ஆகும். போகாட்டி நல்ல மரமா அனுப்பி மாட்டாங்க…பக்கத்தில் இருந்து செக் செய்து வாங்க ஆள் போகணும் என்று சொல்லி புறப்பட்டு சென்று இருந்தான். கூடவே தனியா எல்லாம் அல்லாட வேண்டாம் உன்னோட அம்மாவை இங்கே வரங்சொல்லிக்கோ என்று கூற…”
“அது எனக்கு தெரியும். நீ சொல்ல தேவை இல்லை என்று முடித்து கொண்டாள். சொன்னதோடு சரி…அவளது தாயாரை அழைக்க எல்லாம் இல்லை…பிடிவாதமாக தனியாக இருந்தாள். வேலை செய்யும் பெண்மணி தான் இவளது குணம் தெரிந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் இவளது வீட்டில் இருந்து விட்டு புறப்பட்டுக்கொண்டு இருந்தாள்.”
ஒரு வாரம் முடிந்து அன்றுதான் வீட்டிற்கு வந்து இருந்தான். வந்ததே இரவு ஒன்பது மணி ஆகி இருக்க உள்ளே வந்து அமர்ந்த சில நிமிடத்திலேயே அழைத்து இருந்தாள் பிருந்தா…”அண்ணா அப்பாவுக்கு என்னன்னு தெரியவில்லை மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க…எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியவில்லை நீ எங்க அண்ணா இருக்கற… இங்கே உடனே வா என்று அழுகையோடு அழைத்து இருந்தாள். “
“இப்போது தான் வீட்டுக்கு வந்தேன் நீ அழாதே இன்னும் பத்து நிமிடங்கள் அங்கே இருப்பேன் என்று வேகமாக புறப்பட…இதை கேட்டுக்கொண்டு இருந்தது மாயாவிற்கு வழக்கம்போல கோபம் வந்து இருந்தது. “
“என்ன வந்ததும் கூப்பிட்டாச்சா…அண்ணா வேணும் அண்ணன் பொண்டாட்டி வேண்டாம் அப்படித்தானே…”
[the_ad id=”6605″]
“மாயா பைத்தியம் மாதிரி உளராதே அப்பாவுக்கு முடியலைன்னு அழுதிட்டு இருக்கறா போய் என்னன்னு பார்த்துவிட்டு வந்திடறேன். வேணும்னா நீயும் வா…இல்லையா உன்னோட வாயை வச்சிக்கிட்டு பேசாமல் இரு…என்றபடி வேகமாக புறப்பட்டான்.”
“ஏன் கார்த்திக் பேசாமல் இருக்கணும் இங்கே வீட்டுக்கு வந்து முழுதாக பத்து நிமிடம் கூட ஆகலை…பையனையும் பார்க்கலை ஃபோன் வந்ததும் நீ புறப்பட்டு போவியா…அப்போ எனக்கு என்ன மரியாதை இந்த வீட்டில்… அதை சொல்லிட்டு போ கார்த்திக். “
“மாயா அப்பாவுக்கு முடியவில்லைன்னு கூப்பிட்டு இருக்கறா இது சண்டை போடறதுக்கு நேரம் இல்லை. ப்ளீஸ்…”
“முடியாது நான் உன்னை இந்த நேரத்தில் விடமாட்டேன். போக கூடாது அவ்வளவு தான் என்றபடி வழியை மறித்துக் கொண்டு நின்றாள் மாயா…”
இவளிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே மாயாவின் தந்தைக்கு அழைப்பு விடுத்தவர் அங்கிள் அப்பாவுக்கு உடம்பு முடியலைன்னு பிருந்தா ஃபோன் பண்ணினா கொஞ்சம் வீடு வரைக்கும் வாங்க நானும் புறப்பட்டுட்டேன் என்றபடி இவளை நகர்த்தி விட்டு சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு புறப்பட்டான்.
“கார்த்திக் சொல்லற நான் என்ன பைத்தியக்காரியா…நீ போக கூடாது நீ இப்போது மட்டும் போன என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது…நீ போக கூடாது…ஹஸ்டிரியா பேசன்ட் போல அதுதே சொல்லி கத்திக்கொண்டு இருந்தாள். போகாதே என்று வழியை மறிக்க எப்போதும் செய்யாததை அப்போது செய்தான் கார்த்திக் பளார் என்று மாயாவின் கன்னத்தில் அடித்திருந்தான்.”
“நகர்ந்து போ மாயா இதுதான் உனக்கு கடைசி என்ன கொலைகாரன் ஆக்கிடாதே என்றபடி வேகமாக அவளை நகர்த்தி விட்டு புறப்பட்டு இருந்தான்.”
அங்கே வீட்டுக்கு சென்றபோதே மாயாவின் தகப்பனாரும் வந்து இருந்தார். கார்த்திக்கின் தந்தை இன்னும் மயக்கத்தில் இருக்க… ஆம்புலன்ஸ்சிற்கு அழைப்பு விடுத்திருந்தனர் அதுவும் வந்து இருந்தது. லட்சுமி ஒரு பக்கம் பிருந்தா ஒரு பக்கம் அழுதுகொண்டு இருந்தனர். அவர்களையும் அழைத்து கொண்டு ஹாஸ்ப்பிடல் நோக்கி புறப்பட்டான் கார்த்திக்.
அங்கே சென்ற போது தான் தெரிந்தது கார்த்திக்கின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் என்று உடனே ஐசியூ அட்மிட் செய்து இருந்தனர். நேரம் இரண்டு மணியை நெருங்கி கொண்டு இருந்தது. பயப்பட எதுவும்இல்லை லேசான அட்டாக் என்று சொல்லி இருக்க… அங்கேயே ஆளுக்கு ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தனர்.
கார்த்திக் அருகில் அமர்ந்த மாயாவின் தந்தை” பயப்படாதே கார்த்திக் எதுவும் ஆகாது மாயா குழந்தை எப்படி இருக்கறாங்க என்று சொன்னபோது தான் மாயாவின் ஞாபகமே வந்தது கூடவே அவளை அடித்ததும்…இதுவரையில் நிறைய விஷயங்களை இவரிடம் மறைத்தது இல்லை. ஸாரி அங்கிள் இங்கே வரக்கூடாதுன்னு ஒரே சண்டை. கோபத்தில் இன்றைக்கு அடிச்சிட்டேன் ஃபோன் பண்ணி பாருங்க அங்கிள்…கொஞ்சம் வருத்தமாக சொல்ல.. “
[the_ad id=”6605″]
“இதுக்கெல்லாம் வந்து தான் ஆகணும். மாயாவை அடிக்காதே கார்த்திக் அவளுக்கு உன் பேல் பாசம் அதிகம். எப்பவும் தன்னோடத யாருக்கும் கொடுக்க மாட்டா…இப்போது உன்னோட விஷயத்தில் அப்படி தான் நடந்துக்கறா…”
“அங்கிள் உயிர் இல்லாத பொருளா இருந்தா சரி…உயிர் உள்ளதுன்னா…கஷ்டம் அங்கிள் என்றபடி ஃபோனை ஆன் செய்ய…ஜட்ஸ் பத்து நிமிடத்திற்கு முன்பாக வாட்ஸ்சப்பிஸ் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தாள். சொன்ன பேச்சை கேட்காமல் போனல்ல கார்த்திக்…நான் என்ன பண்ணறேன்னு பாரு? என்று முடித்திருந்தாள். “
“பாருங்கள் இப்ப கூட அவளுக்கு புரியவில்லை என்ன ஆச்சு எப்படி இருக்கறாங்கன்னு ஒரு கேள்வி அவளுக்கு அவள் பிரச்சினை மட்டும் தான். செல்பிஸ் அங்கிள் அவ…அவள் எப்பவும் மாறப்போறது இல்லை. வழக்கம்போல காலையில் கதவை திறக்கமாட்டேன்னு வம்பு பண்ணி போறா..”.என்பவருக்கு அப்போது தெரியவில்லை அவள் அதைவிடவும் பெரிதாக செய்து வைத்திருக்கும் காரியம் .. மொத்தமாக இவனது வாழ்க்கை தலைகீழாக மாறப்போவது அப்போது அவனுக்கு தெரியவில்லை.
தொடரும்.