கைதி -10(2)
“ரெண்டு பேரும் இப்ப எங்க போறீங்க?”, என்றான் அமர் லேசான பதட்டத்துடன்.
“அனு வந்திருக்கா”, என்றாள் வேகமாக.
“வாவ்! மை ஏஞ்சல் வந்துட்டாளா? எங்க?”, என்றான் சிரிப்புடன்
“டேய்! ராக்கி அண்ணா, அவ இன்னும் உனக்கு ஓகே சொல்லல, தேவையில்லாம வாங்கிக் கட்டிக்காத”.
“இங்க பாரு டி.எம், அவகிட்ட தேவையில்லாம வம்பு பண்றீங்க, அப்புறம் அவ அடிச்சுட்டா ஃபீல் பண்ண கூடாது”, என்றாள் மிருணா கோபமாக.
“அது என்ன டி.எம்??”, என்றனர் மூவரும்.
“மிருணா, சீக்கிரம் வாடி. இந்த நாய பாரு”, என்று அனு சத்தம் போட்டாள். ஜாக்கி அவள் பக்கத்தில் வேகமாக வந்து, குரைக்க ஆரம்பித்தது.
“ஜாக்கி..”, என்றனர் ஐந்து பேரும் சத்தமாக. ஜாக்கி நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அவளை பார்த்தது.
“உன் பேரு ஜாக்கியா? நான் உன் ஃப்ரெண்ட் தான், எனக்கு ஊசினா பயம்லா இல்ல. ஆனா பதினாறு ஊசி குத்துனா என் நிலைம என்னகும்?”, என்றாள் பாவமாக.
ஆண்கள் மூவரும் சத்தமாக சிரித்தனர். பெண்கள் இருவரும் முறைத்துக்கொண்டே, “ஜாக்கி இவ எங்க ஃப்ரெண்ட்”, என்று பக்கத்தில் ஓடிவந்தனர். அனுவை முகர்ந்து பார்த்து விட்டு சென்றது.
“அப்பா… ரொம்ப பயந்துட்டேன்டி”, என்று மிருணாவை அணைத்துக் கொண்டாள்.
“அதுக்காக தான்டி கேட்கிட்டே வேகமா வந்தோம் அதுக்குள்ள மூணு எருமைங்க நடுவுல வந்துருச்சு”, என்றாள். ஆண்கள் மூவரும் முறைத்துக் கொண்டே அவளை விட்டு விலகி.
“எருமைங்களா?”, என்றனர் மூவரும் முறைத்துக்கொண்டே.
“அதுல என்ன சந்தேகம்? நீ வா அனு போலாம், எதுக்கு வெட்டிப்பேச்சு”, என்று அழைத்து சென்றாள் ஸ்ரீ.
“ரொம்ப லொள்ளு டா ரெண்டுக்கும்”, என்றான் ராகவ்.
“ம்ம்… இருக்குறது பத்தாதுன்னு, மூணாவதா ஒரு ஆள் வேற”, என்றான் விக்ரம் சலிப்போடு.
“ம்ம்… உன் தங்கச்சி கிட்ட மரியாத குடுக்க சொல்லுடா”, என்றான் அமர் சலிப்புடன்.
“டேய்! எங்க தங்கச்சி கூட பரவால்ல. உன் தங்கச்சி இருக்காளே, கொஞ்சமாச்சும் மரியாதை தராளா? கொழுந்தனாருன்னு பார்க்கல, புருஷனாக போறான்னு பார்க்கல்ல, பாரு நீக் நேம் வேற வச்சுக்கிட்டு அலையிறா”, என்றான் பொய்யான கோபத்துடன்.
“அவ எனக்கே மரியாதை தர மாட்டா, அவ அம்மா சொல்லுவாங்க கேட்க மாட்டா”, என்றான் சலிப்புடன்.
“உனக்கு மரியாத குடுத்தா என்ன? குடுக்காட்டினா எங்களுக்கு என்ன?”, என்று இருவரும் கோரஸாய் ராகம் பாடினர்.
“டேய்!”, என்று மிருணா இடுப்பில் கை வைத்துக்கொண்டு வாசலில் நின்றாள்.
“இந்த கத்தரிக்காய்க்கு திமிர பார்த்தியா டா ?”, என்றான் விக்ரம் மெதுவாக நக்கல் அடித்து.
“எங்க சத்தமா சொல்லு பார்க்கலாம்?”, என்றான் ராகவ் கிண்டலாக.
“அது…”, என்று இழுத்தான்.
“விக்கி இப்பவே இப்படியாடா?”, என்றான் அமர் கிண்டலாக.
“டேய்! இங்க ஒருத்தி கூப்பிடுறேன், அங்க என்னடா பேச்சு?”, என்றாள் கோபமாக பக்கத்தில் வந்து.
“நீ யார கூப்பிடுற பாப்பா?”, என்றான் அமர் சமாதானமாக.
“உன்ன இல்ல, இந்த பி.எம்ம தான் கூப்பிட்டேன், உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்கூட வா”, என்றாள் கோபமாக.
“பி.எம்மா?”, என்றான் விக்ரம்.
“அது என்ன டி.எம், பி.எம்?”, என்றான் ராகவ்.
“பனமரம், தென்னமரம். பேரு பெருசா இருக்கு கூப்பிட முடியலல்ல, அதனாலதான் சுருக்கிட்டேன்”, என்றாள் நக்கலாக.
“அடிங்க”, என்றனர் இருவரும் வேகமாக. மிருணா இருவரையும் முறைத்துக் கொண்டே நின்றாள்.
“பாப்பா இதுல யாரு பி.எம்? டி.எம்?”, என்றான் சந்தேகமாக.
“அது உனக்கு இப்ப ரொம்ப முக்கியமா?”, என்றான் விக்ரம் முறைப்புடன்.
“இவன் பி.எம், இவன் டி.எம்”, என்று விக்ரம் மற்றும் ராகவை காட்டினாள்.
“ஓ… இந்த பெயரின் வரலாறு என்னவோ?”, என்றான் கிண்டலாக விக்ரம் மற்றும் ராகவை பார்த்து.
“வரலாறு அப்புறம் உன் கிட்ட சொல்றேன், உன்கிட்ட பேசணும் வா”, என்று பின்னால் இருக்கும் தோட்டத்துப் பக்கம் சென்றாள்.
விக்ரம் இருவரிடமும் தலையை அசைத்து விட்டு, அவள் பின்னால் சென்றான். “இவ எதுக்கு கூப்பிடுறா?”, என்றான் ராகவ் யோசனையுடன்.
“தெரியல, சரி வா உள்ளே போலாம். அனு வேற வந்து இருக்கா, அவ கிட்ட பேசணும்”.
“அச்சோ! என் டார்லிங் வந்ததையே மறந்துட்டேன் வா போலாம்”, என்று உள்ளே இழுத்து சென்றான்.
“மிரு, நீ என்கிட்ட அடி வாங்கப்போறது கன்ஃபார்ம் டி”, என்றான் முறைப்புடன்.
“நான் சொல்ல வேண்டியத நீ சொல்றியா டா??”, என்றாள் முறைப்புடன்.
“மிரு, நம்ம ரூம்ல எப்படி வேணாலும் நீ பேசலாம். வெளியில பெரியவங்க எல்லாரும் இருக்காங்க, கொஞ்சமாச்சும் மரியாதையா பேச கத்துக்க”, என்றான் கோவமாக.
“உனக்கு மரியாதை தரணுமா டா? நீ பண்ணுன வேலைக்கு”, என்றாள் கோவமாக.
“நான் அப்படி என்னடி பண்ணுனேன்?”, என்றான் கோவமாக.
“காலையில எதுக்கு டா என்கிட்ட அப்படி ஒரு பொய்யை சொன்ன”, என்றாள் கோவமாக.
“என்ன பொய் சொன்னேன்? நீ எழுந்திருக்கும்போது எங்க படுத்திருந்த? சொல்லு நான் உன்ன பிடிச்சிருந்தனா? நீதான் என்னைய பிடிச்சிருந்த, மரியாதை கால்கிலோ என்னன்னு கேப்ப போல, எல்லா நேரமும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் மிரு”, என்றான் கோவமாக.
“அத நீ சொல்லவே வேணாம். உன்ன பார்த்தாலே தெரியுது, ஒரே மாதிரி இருக்க மாட்டேன்னு. நைட்டு நான் பயத்துல உன்ன கட்டி பிடிச்சா, நான் தூங்குனதும் உன் ரூமுக்கு போக வேண்டியதுதானே? எதுக்கு அங்கயே இருந்த? என்கிட்ட ஓவரா உரிமை எடுத்துக்குற, இதெல்லாம் நல்லதுக்கே இல்ல”, என்றாள் கோவமாக.
விக்ரம் உச்சகட்ட கோபத்தில் திட்டப் போகும் போது ஸ்ரீ வந்தாள். “அண்ணா.. மிருணு.. சாரி பேசும் போது நடுல்ல வந்துட்டேன். அண்ணா சங்கவி வந்திருக்கா, உன்னத் தேடிட்டு இருக்கா”.
“மிருணா, நீ ரொம்ப ஓவரா பேசிட்ட. உன் கிட்ட விளக்கம் சொல்லனும்னு அவசியம் எனக்கு இல்ல, எனக்கு பேசவும் நேரமில்ல, சங்குவ பார்த்து ரொம்ப நாளாச்சு நான் போறேன்”, என்று முறைத்துக்கொண்டே சென்றான்.
“ஸ்ரீ யாருடி சங்கவி?”, என்றாள்.
சங்கவி யாரு? விக்ரம் மிருணா இடையில் வந்த பனிப்போர் பனியாக கரையுமா? அல்லது பனிக்கட்டியாக மாறுமா? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்………………
கைதியின் சிறை தொடரும்…………………..