காவலனின் கைதி அவள்-17
“முகில், அந்த நாளு பேரையும் எங்க வச்சிருக்க?”, என்றான் விக்ரம்.
“அண்ணா, அவங்கள நம்ம இடத்துல தான் வச்சிருக்கேன்“, என்றான் முகில்.
“குட் டா! வேல வேலைக்கு சாப்பாடுலாம்“.
“அதெல்லாம் நல்ல கவனிப்பு தான் டா விக்கி“, என்றான் ராகவ்.
“அமர் அண்ட் சுதாவுக்கு போட்ட ஆளு என்னாச்சுடா?”.
“எல்லாத்தையும் சிவா போக வேணானு சொல்லிட்டான். இப்ப அவங்க ஃப்ரீ தான், இருந்தாலும் நம்ம ஆள ஃபாலோ பண்ண சொல்லிட்டேன்“.
“குட் டா!”.
“அண்ணா, இந்த குருவ பத்தி விசாரிச்சேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் சிவா கிட்ட சேர்ந்து இருக்கான். சிவாவ யாரோ கொல பண்ண வந்திருக்காங்க, அவன் உயிர் கொடுத்து காப்பாற்றி இருக்கான். அதுக்கு அப்புறம் தான், சிவாவுக்கு வலது கை இடது கையா குரு மாறிருக்கான்“.
“இந்த விஷயம் ஆல்ரெடி எங்களுக்கு தெரியும்டா“.
“இருந்தாலும் ராக்கி அண்ணா, அந்த குருவ வாட்ச் பண்ண ஆளுப்போடுறேன். என்ன பேச்சு பேசுறான், திமிருபுடிச்சவன்“, என்றான் கோவமாக.
விக்ரம் மற்றும் ராகவ் சிரித்துக்கொண்டே, “என்னமா கோபம் வருது டா உனக்கு“, என்றனர் கிண்டலாக.
“அண்ணா, என்னையே மிரட்டுறான்“, என்றான் சோகமாக.
“நீ அதுக்கு பயந்துட்டியா?”, என்றான் ராகவ் கிண்டலாக.
“சச்ச.. நான் யாரு? பயப்படுற மாதிரி ஆக்டிங் மட்டும் தான்“, என்றான் சிரிப்புடன்.
“அப்புறம் என்னடா? தலைய வெட்டிட்டா வாலுக்கு என்ன வேல? விடு டா“, என்றான் விக்ரம் சமாதானமாக.
“ம்ம்.. ஒரு டவுட்ணா, இந்த நாலு பேரையும் வந்த அன்னைக்கே பாக்காம, எதுக்கு பதினஞ்சு நாள் கழிச்சு பார்க்குறீங்க?”, என்றான் புரியாமல்.
“வந்தவுடனே கேட்டா அவங்க நமக்கு சாதகமா எதுவும் சொல்ல மாட்டாங்க. அதுக்கு தான். சரி வா போலாம்“, என்று விக்ரம் இருவரையும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பங்களாவிற்கு அழைத்து வந்தான். உள்ளே வரும்போதே அங்கு காவலுக்கு இருப்பவர்கள் சல்யூட் அடித்தனர். மூவரும் தலையசைத்து ஏற்றுக் கொண்டு உள்ளே சென்றனர். முத்து, கனகு, கோபி, வீரையா நான்குபேரும் சொகுசாக சோபாவில் வட்டமாக உட்கார்ந்து சீட்டு கட்டு விளையாடினர். இவர்கள் மூவரும் வருவதை பார்த்ததும் சீட்டு கட்டை அப்படியே போட்டு விட்டு எழுந்து நின்றனர்.
“உக்காருங்க! ஏன் நிக்கிறீங்க? உங்களுக்கு இந்த இடம் வசதியா இருக்கா?”, என்றான் விக்ரம் பொய்யான சிரிப்புடன்.
“இருக்கு சார்“, என்று உக்காரந்தனர். மூவரும் அங்குள்ள சேரை இழுத்து இவர்கள் பக்கத்தில் போட்டு உட்கார்ந்தனர்.
“சாப்டீங்களா?”, என்றான் ராகவ்.
“சாப்பிட்டோம்“, என்றனர்.
“ம்ம்.. குட்! இவங்க என்னென்ன கேட்குறாங்களோ பண்ணிக்குடுங்க“, என்றான் விக்ரம் முகிலை பார்த்து.
“ம்ம்… சரி சார்“.
“சார் எப்ப வெளிய விடுவீங்க?”, என்றான் வீரய்யா.
“உங்கள வெளிய விடனும்னா, ஜாமீன் எடுக்க யாராச்சும் வரணும்“, என்றான் முகில்.
“எதுக்கு சார் இங்க ஏதோ ஒரு வீட்ல கண்ணைக்கட்டி கூட்டிட்டு வந்து வச்சிருக்கீங்க?”, என்றான் கனகு.
“நீங்க சிவாவோட ஆளுங்கல்ல, அதுக்கு தான்“.
“அப்படி சொல்லாத விக்கி. சிவா இவங்கள தண்டமா இருக்கானுங்க அப்படி இப்படின்னு திட்டினாரு. இவங்க பண்ணாத தப்புக்கு இவங்கள உள்ள வச்சுட்டாரு“, என்றான் பொய்யான வருத்தத்துடன்.
[the_ad id=”6605″]
“என்ன பண்ண முடியும் ராக்கி, இவங்கள பார்க்க நல்ல ஃபைட் பண்றவங்க மாதிரிதான் இருக்காங்க. அப்புறம் ஏன் இப்படி சொன்னாரு?”, என்றான் ஓரக்கண்ணால் இவர்களை பார்த்து கொண்டே.
“சார், யாரும் இவங்கள ஜாமீன் எடுக்கலைன்னா, இவங்கள கோர்ட்ல தான் சப்மிட் பண்ணி தண்டன வாங்கி தரனும்“, என்றான் முகில்.
“சார், நாங்க என்ன பண்ணினாலும் எங்கள வேணும்னு தான் அவங்க சொல்லுவாங்க“, என்றான் முத்து வேகமாக.
“ஏன்?”, என்றனர் மூவரும்.
“நாங்க நாலு பேரும் ஒரு தடவ போலீஸ்ல மாட்டிக்கிட்டோம் சார். அதிலிருந்து இப்படித்தான்“, என்றான் கோபி வருத்தமாக.
“ம்ம்…”, என்றனர்.
“சார், நாங்க பொழுதுனிக்கும் சிவா அண்ணே வீட்லதான் இருக்கோம். அடியால வந்த எங்கள காய்கறி, மளிகை சாமான் வாங்க வச்சுட்டாங்க“, என்றான் கனகு.
“அது மட்டும் இல்ல சார், நாங்க வரேன்னு சொன்னா கூட வராதன்னு சொல்லிட்டு போயிட்டுவாங்க. இப்ப வந்த பசங்க எங்கள பார்த்து நக்கலாக சிரிச்சுட்டு போறாங்க“, என்றான் வீரய்யா வருத்தமாக.
“அப்புறம் ஏன் அங்க வேல பாக்குறீங்க?”, என்றான் விக்ரம்.
“சார், கத்திய எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவு, சிவா அண்ணாவ விட்டுப் போனா கண்டிப்பா எங்கள போட்டு தள்ளிடுவாங்க“, என்றான் கோபி பயத்துடன்.
“ம்ம்… அங்கே இருந்தும் என்ன பிரயோஜனம்? அவமானம் தான் மிச்சம்“, என்றான் ராகவ்.
“ம்ம்… ஆமா சார். இருந்தாலும் என்ன பண்ண முடியும் சொல்லுங்க? உங்கள மாதிரி போலீஸ பார்த்ததே இல்ல சார். வசதியா இருக்க வீடு, வேல வேலைக்கு சாப்பாடுன்னு எங்கள விருந்தாளி மாதிரி நடத்துறீங்க நீங்க. உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு சார்“, என்றான் முத்து.
மூவரும் லேசாக சிரித்தனர். “அதுக்காக உங்கள பட்டினி போட சொல்றீங்களா? சிவா ஆளுங்கங்கறதுனாள இந்த கவனிப்பு இல்ல, நீங்க நாலு பேரும் தப்பு பண்ணல அதுக்காக தான்“, என்றான் விக்ரம் தெளிவாக.
“ரொம்ப நன்றி சார்!”, என்றனர் நால்வரும்.
“ம்ம்.. பரவால்ல“, என்றனர் மூவரும்.
“சார், இன்ன வரைக்கும் சிவா அண்ணனோட ரகசியம் எதையும் நாங்க வெளியே சொன்னதில்ல. எல்லாம் தெரிஞ்சும் வேடிக்கை தான் பார்க்கிறோம். அப்படி இருந்தும் சேர்த்துக்க மாட்டாங்க, அதான் எங்களுக்கு வருத்தம்“, என்றான் கனகு.
“நீங்க ஒன்னும் பெரிய தப்பு பண்ணாலயே. சிவா பண்ற எல்லா எங்களுக்கு தெரியும்“, என்றான் விக்ரம்.
“சார், பல விஷயம் உங்களுக்கு தெரியாது. அண்ணனோட தோப்பு வீட்டில்தான் மொத்த போதை மருந்து, கஞ்சால இருக்கு“, என்றான் வீரய்யா.
“ம்ம்…”.
“அது மட்டும் இல்ல, சிலைய கடத்தி வெளிநாட்டுக்கு விக்கிறது, இது எல்லாம் அந்த தோப்பு வீட்டுல்ல தான் எப்போதும் நடக்கும்“, என்றான் கோபி.
“அது மட்டுமா? கருப்புபணம் கூட சில நேரம் அங்க வச்சு இருப்பாங்க“, என்றான் முத்து.
“இப்ப வேற புதுசா மரம் வெட்டுற வேலைய பாக்குறாங்க. சிவா அண்ணாவோட அப்பாவும் மாமாவும், அதுவும் சந்தன மரம், செம்மரம்லாம் எங்க இருந்து கடத்திட்டு வராங்கன்னு தெரியல்ல“, என்றான் கனகு.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “பல பொண்ணுங்களோட வாழ்க்கை கேள்விக்குறியாக்கி இருக்காரு. அந்த பொண்ணுங்கள அனுபவிச்சுட்டு வெளிநாட்டுக்கு வித்துருவாங்க. இவரு அனுபாவிக்காம விட்ட அந்த பொண்ணு பேரு என்னடா?”, என்றான் வீரய்யா.
“மிருணா“, என்றான் கோபி.
“ஆ.. அந்தப் பொண்ணுதான் அண்ணாவ முதல் தடவையா எதிர்த்த பொண்ணு“, என்றான் ஆச்சரியமாக.
“ம்ம்.. நீங்க வெளிய போக ஏதாச்சு ஏற்பாடு பண்ணுறேன். உங்களுக்கு தேவையானத நாங்க பண்ணுறோம், எங்களுக்கு தேவையானத நீங்க பண்ணுங்க“, என்றான் விக்ரம்.
“நாங்க என்ன பண்ணனும் சார்?”, என்றனர் நால்வரும்.
“அத நான் அப்புறம் சொல்றேன், நாங்க வரோம்“, என்று ராகவ் மற்றும் முகிலை இழுத்து சென்றான்.
“என்ன அண்ணா! உங்க ஆள பத்தி பேசுனதும், உங்க முகத்துல லைட் எரியுது“, என்றான் முகில் கிண்டலாக காரை ஒட்டிக்கொண்டே.
“அவள பத்தி அப்புறம் பேசலாம். இனிமே மறஞ்சு இருந்து எதுவும் பண்ண வேணாம், கலத்துல்ல இறங்கிட வேண்டியது தான்“, என்றான் தீவிர யோசனையுடன்.
“கொஞ்ச நாள் ஆகட்டுமே டா“.
“ஒரு நிமிஷம் ராக்கி இரு“, என்று போன் செய்தான்.
[the_ad id=”6605″]
“சொல்லுங்க“.
“நீ இப்ப பேசுற நிலமையில இருக்கியா?”.
“கொஞ்ச நேரம் கழிச்சு பண்றேன்“, என்று வைத்துவிட்டான்.
“அண்ணா நீங்க இப்ப யாரு கிட்ட பேசுனீங்க?”, என்றான் முகில்.
“தெரிஞ்சு தான் ஆகணுமா?”.
“ஆமாணா“, என்றான் காரை இவர்கள் வீட்டில் நிறுத்தியபடி.
“வேற யாருக்கும் இல்ல, அந்த சிவாவோட மாமாவுக்கு தான்“, என்றான் ராக்கி.
“என்னன்னா சொல்றீங்க, அவன் மாமா நம்ம ஆளா?”, என்றான் அதிர்ச்சியுடன் உள்ளே வந்தவன் பாதியிலேயே நின்றபடி.
விக்ரம் மற்றும் ராகவ் சிரித்தனர். “என்ன சொன்னாலும் நம்புவான் போலடா ராக்கி“, என்றான் ராகவ்க்கு ஹை-ஃபை அடித்துக் கொண்டே.
“ஆமாடா விக்கி, ஸ்மால் பாய்“, என்றான் கிண்டலாக.
“ப்ச்… அண்ணா“, என்றான் முறைத்தபடி.
விக்ரம் போன் அடித்தது, “ஹலோ! சொல்லுங்க சார்“.
“மரம் கடத்துறது பத்தி உனக்கு தெரியுமாடா? சிவா அப்பாவும் மாமாவும் பண்றாங்களாம்“, என்றான் தீவிரமாக.
“தெரியாது சார், இந்த விஷயம் புதுசா இருக்கே நமக்கு“, என்றான்.
“ஆமாடா, நான் சொல்ற மாதிரி பண்ணு“, என்று தன் திட்டத்தை சொன்னான்.
“சார், இப்ப நீங்க உங்க அடையாளத்த காட்டணுமா?”, என்றான் தயங்கியபடி.
“நம்ம அடையாளம் எப்போதுமே மாறாது டா. எனக்கு சில டீட்டைல்ஸ் வேணும், அத எப்படியாச்சும் கலெக்ட் பண்ணு“, என்று
சொன்னான்.
“மெயில் பண்ணிடுறேன்“.
“ஓகேடா! நீ அனுப்புன ஆளு எல்லாத்தையும் சொல்லிட்டாங்க டா. இன்னும் பத்து நாளுகுள்ள அவங்கள அனுப்புறேன். நம்ம ஆளா, நீ எப்போதுமே கேர்புள்ள இரு டா“, என்றான் அக்கறையாக.
“ம்ம்.. சரிணா, நான் கவனமா இருக்கேன். அப்புறம் எப்ப ஊட்டிக்கு?”, என்றான் கிண்டலாக.
“என்னடா ஓட்டுறீயா? ம்ம்.. சொல்ல மறந்துட்டேன், மும்பையிலிருந்து சங்கவி வந்திருக்கா“, என்றான் சிரிப்புடன்.
“அப்படினா வீட்டுல்ல ஒரே போர்க்களமாக இருக்குமே“, என்றான் சிரிப்புடன்.
“ஆமாடா“, என்று நடந்ததை சொன்னான்.
“அண்ணா, உங்க காட்டுல மழை தான் போங்க“,என்றான் கிண்டலாக.
“அட போடா! நீ வேற, பார்த்து இரு“, என்று வைத்தான்.
“அண்ணா, இப்ப பேசினது யாரு?”, என்றான் முகில்.
“சிவா ஆளுல ஒருத்தன் நம்மாளு டா“, என்றான் சிரிப்புடன்.
“ஓ… சரிணா“.
“விக்கி, நெக்ஸ்ட் ஆப்ரேஷன் எப்ப??”.
“கொஞ்சம் வெயிட் பண்ணு ராக்கி. நாளைக்கு முதல மரத்த கடத்துறத ஸ்டாப் பண்ணனும்“.
“ம்ம்.. சரிடா“.
“சரி அண்ணா, நான் வீட்டுக்கு கிளம்பறேன்“, என்று கிளம்பினான். மீண்டும் விக்ரம் போன் அடித்தது, “சொல்லு ஸ்ரீ“.
“அண்ணா, மிருணா உன்கிட்ட வீடியோ கால்ல பேசணும்னு சொன்னா“.
“ஓ… பாரு டா!”, என்றான் சிரிப்புடன்.
“நல்லாதான் இருந்தா அண்ணா. ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்கா, நீ பேசுறியா?”.
“சரிடா, நான் ரெஃபிரஷாயிட்டு வரேன். நீ போன்ன மிரு கிட்ட குடுத்துட்டு போ“.
“சரி அண்ணா“, என்று வைத்தாள்.
“ஸ்ரீ என்னடா சொன்னா?”.
“மிரு என் கிட்ட பேசணுமாம், வீடியோ கால் பண்ண சொன்னா“, என்றான் சிரிப்புடன்.
“ஆஅ.. என்ன ஒரு அதிசயம்? சரி சிக்கரம் ரெஃபிரஷாயிட்டு வந்து பேசு“, என்று அவன் ரூமிற்கு சென்றான்.
விக்ரம் கால் செய்தான். மிரு எடுத்ததும், “ஹாய் குட்டிமா“, என்றான் சிரிப்புடன்.
“ஹாய்“.
“என்ன திடீர் ஞானோதயம். நார்மல் கால்ல கூட பேச மாட்ட, வீடியோ கால் பண்ண சொல்லிருக்க?”, என்றான் சிரிப்புடன்.
“உங்கள பார்த்து பேசணும் நினைச்சேன், அதுக்கு தான்“.
“மாமாவ ரொம்ப மிஸ் பண்றியா மிருகுட்டி“, என்றான் சிரிப்புடன்.
“அப்படி எல்லாம் இல்ல. இந்த வாரம் வீட்டுக்கு வருவீங்கன்னு நினைச்சேன், வரல. அதான் கால் பண்ண சொன்னேன்“.
“என்னாச்சு மிரு? ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு? வாய்ஸ் கூட சரியில்ல“.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் கேரளா டூர் போனப்ப நீங்க வந்து இருந்தீங்க தானே?”, என்றாள் புருவம் உயர்த்தி.
“ஆமா“.
“அப்ப என் பஸ்ல, உங்க கார் ரிப்பேர்னு லிப்ட் கேட்டு வந்தீங்க ரைட்“.
“ம்ம்.. ஆமா! உனக்கு ஞாபகம் இருக்கா?”.
“ம்ம்.. நாங்க ஸ்டே பண்ணுன அதே ஹோட்டல்ல தானே நீங்க தங்கி இருத்தீங்க?”.
“ம்ம்.. ஆமா“.
“ம்ம்.. எங்க பஸ் ஆக்சிடெண்ட் ஆனது உங்களுக்கு எப்படி தெரியும்?”.
“நான் உங்க பஸ் பின்னாடி கார்ல வந்துட்டு இருந்தேன். அப்ப தான் ஆச்சு“.
“ம்ம் … நீங்களும் நானும் லவ் பண்ணுனோமா?”, என்றாள் கோபமாக.
[the_ad id=”6605″]
விக்ரம் முதலில் முழித்துவிட்டு பிறகு, “ஆமாடி! உனக்கு எல்லாம் நியாபகம் வந்திருச்சா? அன்னைக்கு நடந்த ஆக்சிடென்ட்ல தலையில்ல அடிபட்டு என்னைய மறந்துட்ட“, என்றான் வேகமாக.
“வாவ்! மிருணாக்கு எல்லாம் நியபகம் வந்துருச்சா? சூப்பர் டா“, என்று பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் ராகவ்.
“டூர் போனதுலாம் நியபகம் இருக்கு. யாருகாச்சும் ஒருவாரம் மட்டும் அம்னீசியா வருமாடா எரும?”, என்றாள் கோபமாக.
ராகவ் விக்ரமை திரும்பிப்பார்த்தான், “ஏய் மிரு! உனக்கு தான் வந்திருக்கே டி“, என்றான் வேகமாக.
“நல்ல வாய்ல வந்துரப் போகுதுடா. டூர்ல சுத்துனது, போட்டோ எடுத்தது எல்லாம் நியாபகம் இருக்கும். உன்ன லவ் பண்ணுனது மட்டும் மறந்து போயிடுமா? பொய் சொல்லுறது தான் சொல்லுற, பொருந்துர மாதிரி சொலுறீயா டா?”, என்றாள் கோவமாக.
“ஏய்! என்னடி? போதும் உன் லவ்வர போய் இப்படி திட்ற?”, என்றான் கிண்டலாக.
“லவ்வரா? டேய்! ஊர் பக்கம் வந்துறாத, ராகவ் நீங்க உண்மையாகவே போலீஸ் தானா? இல்ல சிரிப்பு போலீஸா?”, என்றாள் கோபமாக.
“ஏன்மா, நான் என்ன பண்ணுனேன்?”.
“அவன் கத சொல்றத அப்படியே நம்புகிறீங்க எல்லாரும், யோசிக்க மாட்டீங்களா?”.
“மிரு குட்டி, எதுக்குடி இப்படி கத்திகிட்டு இருக்க? இந்த விஷயத்தை யார் சொன்னா டி?”, என்றான் சமாதானமாக.
“எதுக்கு பொய் சொன்ன? அத சொல்லு“, என்றாள் கோவமாக.
“நான் பொய் சொல்லல, சுதா கிட்ட வேணும்னாலும் கேளு டி“.
மிருணா யோசனையுடன் அவனை பார்த்தாள். விக்ரம் கண்கள் இவளை குறும்பாக பார்ப்பது தெரிந்தது, “டேய்! உன்ன.. மறுபடியும் பொய்! பொய்! கொல்ல போறேன் பாரு, எதுக்கு இப்படி பொய் சொல்லுற?”, என்றாள் கோபமாக.
“இல்ல வீட்டுக்கு வர மருமகள்னா, உன்ன இன்னும் நல்லா பாத்துப்பாங்கல. அதுக்கு தான்“.
“அடப்பாவி! அத்த மாமாவ சந்தேகப்பட்டு இப்படி பொய் சொன்னியா?”, என்று போனை திருப்பினாள். மொத்த குடும்பமும் முறைத்துக் கொண்டு உக்கார்ந்திருந்தனர்.
“அடிப்பாவி! இப்படி மாட்டிவிட்டுடியே! அம்மா அப்பா சும்மா“, என்றான் முழித்துக்கொண்டே.
“எங்கள எப்படி நீ இப்படி சந்தேகப்படலாம்?”, என்றார் மீனாட்சி முறைப்புடன்.
“அம்மா, சும்மா சொன்னேன். அவள சமாதானம் பண்ண தான் அப்படி சொன்னேன். உங்கள பத்தி எனக்கு தெரியாதா?”, என்றான் வேகமாக.
“நீ சொன்ன பொய்ய மொத்த குடும்பமும் நம்பி, நீ பண்ணுன சேட்டைகள் எல்லாம் கண்டுக்காம விட்டோம் பாரு எங்கள சொல்லனும்“, என்றார் சக்கரவர்த்தி.
“அச்சோ! அப்பா இதெல்லாம் இனிமேலும் கண்டுக்காதீங்க. ஆமா இந்த நல்ல காரியத்த பண்ணுனது யாருமா?”.
“நான்தான் அத்தான். உன் லவ்வருக்கு உன்ன நியாபகம் இல்லானா, நீ ரொம்ப கஷ்டப் படுவால்ல. அதனால தான் சொன்னேன்“, என்றாள் சங்கவி பாவமாக.
“ரொம்ப நல்ல வேல பார்த்து இருக்கமா, உன் சேவையை தொடரு“, என்றான் சோகமாக.
“அண்ணா, நீ சரியான ஆளு. இப்படி வண்டி வண்டியா பொய் சொல்லி இருக்க. மிருணா மட்டும் உனக்கு கால் பண்ணி பேசாம இருந்துருந்தா, உண்மை தெரிஞ்சுருகாது. சரியான ஏமாளியா இருந்திருக்கோம்“, என்றாள் கோவமாக.
“சரி சரி, விடு டா செல்லகுட்டி“, என்று கொஞ்சினான்.
ராகவ் விக்ரமின் முதுகில் அடிக்க ஆரம்பித்தான். “ஏன்டா! நீ சொல்றத நம்புன எங்கள இப்படி ஏமாத்திட்டியே“, என்று அடித்தான்.
“எங்களுக்காகவும் சேர்த்து அடிடா“, என்றனர் அனைவரும்.
“ஐயோ! மொத்த குடும்பமும் சேர்ந்து என்னைய கொத்து புரோட்டா பண்ண பார்க்குதே“, என்று பொய்யாக அலறினான். அனைவரும் லேசாக சிரித்தனர். விக்ரம் இப்படி பேசி பேசியே, அனைவரையும் சிறிது நேரத்திலேயே சமாதானம் செய்து போனை வைத்தான்.
இப்படியே ஒரு வாரம் சென்றது. இடையில் சிவா ஆளுங்களை தன் ஆளாக மாற்றி அவன் வீட்டிற்கு அனுப்பினான். “அண்ணா.. அண்ணா..”, என்று கத்திக்கொண்டே குரு வந்தான்.
“என்னடா குரு?”.
“அண்ணா, கேரளால நம்ம லாரிய புடிச்சு வச்சுருக்காங்க. அதுல செம்மரம் இருக்கு, எப்படிணே?”, என்றான் குழப்பமாக.
“அது அப்பாவும் மாமாவும் பண்ணுன வேல டா, எனக்கே இப்ப தான் தெரியும். இப்ப என்னடா பண்றது?”, என்றான் குழப்பமாக.
“அண்ணா, நியூஸ்ல வரப்போகுதுன்னு நம்மாளு சொன்னான்“.
“என்னடா குரு? எதுவுமே சரியா நடக்க மாட்டேங்குது. சரி நான் சில விஷயம் சொல்றேன், அத மாத்து“, என்று தன் திட்டத்தை சொன்னான்.
“சரி அண்ணே, பண்ணிடுறேன்“, என்று சென்றான்.
மறுநாள் மதியம் மூன்று மணி போல், விக்ரம் சிவாவின் தோப்பு வீட்டிற்கு தனக்கு கீழே இருக்கும் பத்து பேருடன் சென்று, போதை மருந்து, கஞ்சா ,கருப்பு பணம் எல்லாம் கண்டுபிடித்தான். பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க ஆரம்பித்தனர்.
“சார், இந்த திடீர் சோதனை என்ன காரணம்?”, என்றார் பத்திரிகையாளர்.
“திடீர் சோதனை எல்லாம் இல்லை, நிறைய நாள் வாட்ச் பண்ணி தான் இத பண்ணி இருக்கோம்“, என்றான் விக்ரம்.
“சார், இந்த வீட்டுக்கு ஓனர் யாரு?”.
“கந்தசாமி வீட்டோட ஓனர். அவரு சிங்கப்பூர்ல செட்டிலாகி பல வருஷமாச்சு“.
“அப்ப, இத பண்ணது யாருன்னு தெரியுமா சார்?”.
“கூடிய சீக்கிரம் ஆதாரத்தோட சட்டத்துக்கு முன்னாடி நிறுத்துவோம்“.
“விக்ரம் சார், இவ்ளோ நாளா நீங்க டெல்லில இருந்ததா கேள்விப்பட்டோம். எப்ப சென்னை வந்தீங்க?”.
விக்ரம் சிரிப்புடன், “தேங்க்யூ“, என்று விலகி சென்றான்.
“சார்! சார்!”, என்று பின்னாலேயே வந்தனர். இவனுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் அவர்களை தடுத்தனர்.
“சிபிஐ ஹரி விக்ரமன் திடீரென்று சென்னைக்கு வருகை. பல கோடி கணக்கான போதை மருந்து, கஞ்சா, பல லட்சக்கணக்கான கருப்பு பணம் கண்டுபிடித்தார். இந்த வீட்டுக்கு சொந்தமானவர் சிங்கப்பூரில் செட்டில் ஆகி பல வருடங்கள் ஆகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் நபரை கூடிய விரைவில் கண்டுபிடித்ததாக சிபிஐ ஹரி விக்ரமன் பேட்டி குடுத்துள்ளார்“, என்று செய்தியில் வந்தது.
இந்த பிரச்சினையால் சிவா விக்ரமுக்கும் ஏதாச்சும் பிரச்சனை தருவானா? சிவா குருவிடம் சொன்ன வேலை என்ன? சிவாவின் ஆள் நால்வரிடமும் விக்ரம் என்ன சொல்லி அனுப்பினான்? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…
கைதியின் சிறை தொடரும்………………