“யாருடா இவன்? நாமல பத்தி நியூஸ்ல இவ்ளோ தைரியமா பேசுறான்”, என்று சிவா டிவியை கோபமாக கீழே தள்ளி உடைத்தான்.
“தெரியலயேண்ணே”, என்றனர் அனைவரும்.
“குரு, இவன் யாரு என்னனு இவன பத்தி எல்லாம் தெரியணும், சீக்கிரம் கண்டுபிடி. என் வேலிக்குள்ள வந்து, என் வீட்டில் இருந்த பொருள, ஆளுங்கள தூக்கிட்டு போயிட்டான். ஆனா நம்ம ஆள பத்தி ஏன் நியூஸ்ல ஒண்ணுமே சொல்லல?”, என்று கோபமாக ஆரம்பித்து யோசனையுடன் முடித்தான்.
“அதாண்ணே எனக்கும் தெரியல”, என்றான் குரு யோசனையுடன்.
“நீங்க ஆல்ரெடி சென்னைல தானே இருக்கீங்க? நியூஸ்ல இப்பதான் வந்த மாதிரி செல்லுறாங்க”, என்றாள் குழப்பமாக.
“மிரு, நான் எடுத்திருக்க கேஸ் ரொம்ப முக்கியமானது. இதுக்கு முன்னாடி டெல்லில தான் இருந்தேன். இந்த கேஸ்காக தான் இங்க வந்திருக்கேன், இவ்ளோ நாள் மறஞ்சிருந்தேன்”.
“ஓ… சரி”.
“அனு வந்தாளா?”.
“ம்ம்.. டூ டேஸ் ஒன்ஸ் வந்துட்டு கொஞ்ச நேரத்துல போயிடுவா”.
“சரி நீ வெளில போகாத”.
“ம்ம்.. ஓகே நான் வச்சிடட்டா?”.
“சரி, நானும் வேலையா தான் இருக்கேன்”.
“ம்ம்.. எப்ப வருவீங்க?”.
“மிரு என்னடி? என்னாச்சு?”.
“அது வந்து.. ஒருமாதிரி படபடப்பா இருக்கு”.
[the_ad id=”6605″]
“பயமா இருக்கா?”.
“தெரியல”.
“ஒன்னும் இல்ல டா. அத்த மாமா கிட்ட பேசு, நீ நார்மலாகிடுவ”, என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே ஆபீஸ் போன் அடித்தது, “மிரு அப்புறம் பேசுறேன் டா”, என வைத்துவிட்டு அதை எடுத்தான்.
“சார், நான் வீரைய்யா பேசுறேன். சிலை எங்க வச்சிருக்காங்க கேட்டீங்களா “.
சிறிது நேரத்தில் மீனாட்சி மற்றும் வாணி மிருணாவிடம் வந்தனர். “மிருணா, இன்னிக்கு கோவில்ல பூஜை டா. நானும் வாணியும் போயிட்டு வந்துறோம்”, என்றார் மீனாட்சி.
“சரி அத்த”.
“மணி நாலாச்சுடா. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்ரீயும் சங்குவும் வந்துருவாங்க. நீ பத்திரமா இரு”, என்றார் வாணி.
“ம்ம்.. சரி அத்த”, என்றாள். இருவரும் கிளம்பி சென்றனர். மிருணா அவர்கள் சென்றதும் ஹாலில் உட்கார்ந்து புக் படித்துக் கொண்டிருந்தாள். வீட்டின் போன் அடித்தது, “ஹலோ”.
“மிருணா, நான் சங்கவி பேசுறேன் டி”, என்றாள் கலங்கிய குரலில்.
“ஏய்! என்னாச்சு? ஏன் அழுகுற?”.
“மிருணா, ஸ்ரீ ஹேன்ட் பேக் மட்டும் தானே எடுத்து வந்தோம். இங்க ஒருத்தன் பேக்கை திருடிட்டான் டி. மாமாக்கு கால் பண்ணா, கால் போகல. திங்ஸ் எல்லாம் வாங்கி பில் போட கொடுத்துட்டோம். பணம் இல்லாம நிக்கிறோம் டி”, என்றாள் அழுகையுடன்.
“ஏய்! இரு அழுகாத. நான் மாமாவுக்கு ட்ரை பண்றேன்”.
“சரி, பண்ணி பாரு. இல்லன்னா நீ எடுத்துட்டு வாடி”, என்றாள் அழுகையுடன்.
“நானா? என்னால வர முடியாதே, ஸ்ரீ எங்கடி?”.
“ஸ்ரீ பில் போடுற இடத்துல இருக்கா. அவ போன் அவ பேக்ல தான் இருந்தது. என் போன்ன கையில்ல வச்சிருந்தேன். உள்ள சிக்னல் இல்லன்னு வெளிய வந்து பேசுறேன். ஒரே அசிங்கமா இருக்குடி. ஒரு மாதிரி பாக்குறாங்க”, என்றாள் அழுகையுடன்.
“எந்த பிளேஸ் சொல்லு? நான் வரேன்”, என்று இடத்தை கேட்டு விட்டு போனை வைத்தாள். சக்கரவர்த்திக்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள். போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாகவே வந்தது. பணம் மற்றும் போனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.
ஜாக்கி அவளை வழிமறித்தது. “ஜாக்கி, நான் ஒரு முக்கியமான வேலையா போறேன்”, என்று நடந்தாள். ஜாக்கி குறைத்துக் கொண்டே வந்து, தடுக்க முயற்சி செய்தது.
“ஜாக்கி, நான் இப்ப போனா தான் ஸ்ரீயும் சங்கும் வரமுடியும்”, என்று தலையில் தடவி விட்டு, “அங்கிள் கார எடுங்க. சங்கவியும் ஸ்ரீயும் மார்க்கெட்டுல பேக்க மிஸ் பண்ணிட்டாங்க, சீக்கிரமா போகணும்”, என்றாள் அவசரமாக.
ஜாக்கி அவள் சாலை பிடித்து இழுத்தது. “ஜாக்கி, கோ அவே!”, என்று சத்தம் போட்டு விட்டு காரில் ஏறினாள். மார்க்கெட் வந்ததும், சங்கவிக்கு கால் செய்து கொண்டே கடை உள்ளே சென்றாள்.
இவளைப் பார்த்ததும் இருவரும் பக்கத்தில் ஓடிவந்தனர். “அறிவு இருக்கா? நீ எதுக்கு வந்த? அம்மாவ அனுப்பிருக்கலாம்ல”, என்றாள் கோவமாக
“அத்த கோவிலுக்கு போயிட்டாங்க ஸ்ரீ, அதான் நான் வந்தேன்”, என்றாள் வேகமாக.
“முதல்ல பில் பே பண்ணலாம்”, என்று பணத்தை வாங்கி கொண்டு சென்றாள் சங்கவி.
“முதல்ல முகத்த மூடு. அண்ணா இல்லாத நேரத்துல தான் இப்படி நடக்கனுமா? என்ன நடக்கப் போகுதோ?”, என்று பயத்துடன் புலம்பினாள்.
சங்கவி எல்லாத்தையும் வாங்கி கொண்டு பக்கத்தில் வந்து, ” சும்மா புலம்பாத, வா! வீட்டுக்கு போலாம். ஒன்னுமில்லாத விஷயத்துக்கு இவ்ளோ அலப்பறையா?”, என்று சலிப்புடன் வெளியே நடந்தாள். இருவரும் அவளுடன் வெளியே வந்தனர்.
நான்கு ரவுடிகள் இவர்கள் பக்கத்தில் வந்தனர். “மிருணா வா”, என்று ஸ்ரீ இழுத்துக் கொண்டு ஓடினாள். சங்கவியும் இவர்களுடன் ஓடினாள். நான்கு பேரும் துரத்தினர். சிறிது தூரம் ஓடியதும், இவர்கள் முன்னால் ஓர் கார் வந்து நின்றது. அதிலிருந்து உச்சகட்ட கோபத்தில் விக்ரம் இறங்கினான். மறுபக்கம் ராகவ் இறங்கினான்.
“அண்ணா இவங்க..”, என்றாள் ஸ்ரீ அழுகையுடன்.
விக்ரம் இருந்த கோபத்தில் நான்கு பேரையும் புரட்டி எடுத்தான். “விக்கி விடு டா, கைஸ்..”, என்று ராகவ் அழைத்தான். இவர்கள் ஆட்கள் வந்து நால்வரையும் அழைத்து சென்றனர்.
[the_ad id=”6605″]
விக்ரம் அவர்களில் ஒருவனிடம் தனியாக கூட்டி சென்று, சில விஷயங்கள் சொல்லி விட்டு திரும்பினான். பெண்கள் மூவரும் விக்ரம் முகத்தைப் பார்க்கவே பயந்தனர்.
விக்ரம் கோவமாக மிருணாவின் கையை பிடித்து இழுத்து, காரின் முன் கதவை திறந்து தள்ளிவிட்டு, கதவை வேகமாக அடித்து சாத்தினான். மூவருக்கும் உடல் பயத்தில் நடுங்கியது. “ராகவ்”, என்று கத்தினான்.
“இவங்கள நான் அழைச்சுட்டு வரேன் டா”, என்றான். விக்ரம் காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான். மிருணா அவன் கார் ஓட்டும் வேகத்தில், அவன் கோபத்தினை உணர்ந்து கொண்டாள். “டிரைவர் அங்கிள், இன்னொரு வண்டியில வாங்க”, என்று ராகவ் சொல்லிவிட்டு மற்ற இருவரையும் அழைத்து சென்றான். மிருணாவின் உடல் நடுங்கியது. பயத்தில் வெர்க்க ஆரம்பித்தது. விக்ரம் வண்டியை வேகமாக வீட்டினுள்ளே நிறுத்தினான்.
“நான்..”, என்றாள் பயத்துடன்.
“முதல்ல வண்டியிலிருந்து இறங்கு”, என்று கர்ஜித்தான்.
“அது வந்து..”.
“இறங்குடி”, என்று கத்தினான். மிருணா பயத்துடன் இறங்கினாள். விக்ரம் காரை திருப்பிக்கொண்டு வெளியே சென்றான். ராகவ் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு டிரைவரை அழைத்துக் கொண்டு சென்றான். பெண்கள் மூவரும் பயத்துடன் உள்ளே சென்றனர்.
“மிருணா எங்க போன? நாங்க கோவிலுக்கு போயிட்டு வந்தா, நீ வெளிய போயிட்டேன்னு வாட்ச்மேன் சொன்னாரு”, என்றார் மீனாட்சி பதறியபடி. ஸ்ரீயும் சங்கவியும் நடந்த அனைத்தையும் சொன்னார்கள்.
“அச்சோ! என்னமா இப்படி பண்ணி வச்சிருக்க? எத்தனை தடவ சொல்லிட்டு போனானுங்க, கேட்டியா?”, என்றார் வாணி வருத்தமாக.
சக்கரவர்த்தி மற்றும் சோமு அப்பொழுதுதான் வீட்டிற்கு வந்தனர். அம்மாக்கள் நடந்த அனைத்தையும் சொன்னார்கள். “உங்களுக்கு அறிவு இல்ல? மொபைல்ல லைன் கிடைகலானா, லேண்ட்லைன்ல பண்ணிருக்க வேண்டியது தானே?”, என்றார் சக்கரவர்த்தி கோவமாக.
“மாமா, லேண்ட்லைன் நம்பர் எனக்கு தெரியாது”, என்றாள் அழுகையுடன்.
“மாமா, இப்படி நடக்கும்னு எனக்கு தெரியாது”, என்றாள் அழுகையுடன்.
“மாமா, சங்கவிய ஏன் திட்டுறீங்க? எல்லாம் என் தப்புதான். இந்த மாதிரி நேரத்துல இவ யோசிக்க மாட்டா, நான் யோசிச்சு இருக்கணும்னு. டிரைவர் அங்கிள் கிட்டயாச்சும் பணத்த கொடுத்து அனுப்பி இருக்கணும். நான் தான் அவசரப்பட்டுட்டேன்”, என்றாள் கலங்கிய குறளில்.
“இப்ப என்ன பண்றது? இவனுங்க வரத சொல்லவே இல்ல”, என்றார்.
“மீனா, பசங்க வந்தா தான் தெரியும். என் கிட்ட வரத சொல்லல”.
“சரி விடுங்க, போய் வேற வேலைய பாருங்க. பசங்க வரட்டும் அதுக்கப்புறம் பேசிக்கலாம்”, என்றார் சோமு. அனைவருக்கும் அதுவே சரியென பட்டதால் வேலையை பார்க்க சென்றனர். சிறுவர்கள் மூவரும் விக்ரமை நினைத்து பயத்துடன் ஹாலிலே உட்கார்ந்திருந்தனர்.
எட்டு மணி போல் விக்ரம் மற்றும் ராகவ் வந்தனர். மிருணா வேகமாக எழுந்து விக்ரமிடம் சென்றாள். விக்ரம் கோவமாக மிருணாவை அறைந்தான். அதில் கீழே விழுந்தாள். “எத்தன தடவ உன்கிட்ட சொல்லிட்டு போனேன், வெளியே போகாத போகாதன்னு கேட்டியா டி?”, என்று அவள் மேல் கையை பிடித்து எழுப்பினான்.
“ஸ்ரீ!”, என்று கத்தினான். ஸ்ரீ வேகமாக பக்கத்தில் வந்து, நடந்த அனைத்தையும் அழுகையுடன் ஒப்பித்தாள். “உங்க ரெண்டு பேருக்கும் அறிவே இல்லையா? அப்பா பேர சொல்லிருந்தா, அவங்க வீட்டுக்கு வந்து பணம் வாங்கி இருப்பாங்கல்ல? அத விட்டுட்டு இவள வர வச்சிட்டீங்க?”, என்றான் கோபமாக ஸ்ரீ மற்றும் சங்கவி பார்த்து.
“சாரி”, என்றனர் அழுகையுடன்.
“உங்கள எல்லாம் எதுவும் சொல்ல கூடாது. இதோ இங்க நிக்கிறாளே இவள சொல்லணும். மத்தவங்கள விடு, உனக்கு தெரியாதா உன்ன சுத்தி இருக்கற ஆபத்து?”, என்றான் அவள் இரு தோள்களிலும் கை வைத்து அழுத்தி.
“ஸ்…ஆ…”, என்றாள் வலியுடன். விக்ரம் கோவமாக அவளிடம் இருந்து பிரிந்து, மாடிக்கு சென்று அவன் அறைக்கதவை கோவமாக மூடினான். அந்த சத்தத்தில் அனைவரும் ஒர் நிமிடம் அதிர்ந்தனர்.
“அண்ணா புரியுது, இப்ப நாங்க என்ன பண்ணனும் சொல்லு?”, என்றாள் அழுகையுடன்.
“ஆமா அத்தான், நாங்க என்ன பண்ணுறது? விக்கி அத்தான பார்த்தாலே உடம்பு நடுங்குது”, என்றாள் அழுகையுடன்.
ஓர் பெருமூச்சு விட்டு, “எனக்கும் தெரியல. யார் போனாலும் அவன் கடிச்சு கொதறிடுவான். நாங்க ஊருக்குள்ள வரப்ப தான், மிருணா வெளிய கிளம்புன இன்பர்மேஷன் வந்தது. அதான் நேரா அங்க வந்துட்டோம்”.
“சரிடா, நீ வந்து உக்காரு காபி தரேன். விக்கி இப்போதைக்கு வர மாட்டான்”, என்றார் மீனாட்சி சமாதானமாக.
“அவனா சமாதானமாகி வந்த தான்மா. என் ரூமுக்கு காபி அனுப்புங்க. விக்கி ரூம கிளீன் பண்ண ரெடியா இருங்க. இன்னைக்கு நிறைய பொருள் உடைஞ்சுருக்கும்”, என்று படியில் ஏறினான்.
“நானே போயி அவர சமாதான பண்றேன்”, என்றாள் மிருணா.
“மிருணா, அர் யூ மேட்? அவனுக்கு கோபம் வந்தா யாரும் முன்னாடி நிக்க முடியாது. இரண்டு கன்னத்துலையும் விரல் பதிஞ்சுருக்கு, அது பத்தாதா? மொத்த கோபமும் உன் மேல தான், இப்ப போகாத”.
“இல்ல ராகவ், நான் சாரி சொல்லனும். நானே சமாதானம் பண்றேன்”, என்று அவனை கடந்து மாடிக்கு சென்றாள்
“அம்மா, பஸ்ட் எய்ட் பாக்ஸ் ரெடியா வச்சுக்கோங்க. போன வேகத்துல திரும்பி வந்துருவா”, என்று சலிப்புடன் சொல்லிவிட்டு மேலே ஏறினான்.
மற்றவர்கள் கவலையாக பார்த்தனர். விக்ரம் ரூம் கதவு தாழ்ப்பாள் போடாமல் மூடி மட்டும் இருந்தது. மிருணா உள்ளே நுழையும்போதே இரு பக்கம் இருக்கும் ஜாடியும் கீழே விழுந்திருந்தது. மிருணா கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு உள்ளே நடந்தாள். எல்லா பொருளும் அங்கங்கு உடைந்து கிடந்தது விக்ரம் பால்கனியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.
[the_ad id=”6605″]
மிருணா பயத்துடன் பக்கத்தில் சென்று, “நான் வந்து”, என்றாள் கலங்கிய குரலில். விக்ரம் கோபமாக ரூமுக்குள் சென்றான்.
மிருணாவும் உள்ளே வந்து பால்கனி கதவை மூடிவிட்டு, ரிமோட்டை எடுத்து லைட்டை போட்டுவிட்டு டேபிளில் வைத்தாள். விக்ரம் கோவமாக அதனை எடுத்து நிறுத்தினான்.
“நான் உங்ககிட்ட பேசணும்”, என்று ரிமோட்டை எடுத்து லைட்டைப் போட்டு, ரிமோட்டை பெட்டில் தூக்கி போட்டாள்.
“என்ன பேசணும்? முதல்ல வெளிய போ டி, எனக்கு இருக்க கோவத்துல உன்ன என்ன பண்ணுவேன்னு தெரியாது”, என்று ஜாடியை எடுத்து உடைத்து வேறு பக்கம் திரும்பினான்.