“அடிப்பாவி அப்பவே அந்த மாதிரி எண்ணத்துல தான் கூப்பிட வந்தானா இவன நம்பி வீட்டுல விட்டோமே!!”, என்றாள் மிருணா பொய்யான கோபத்துடன்.
“ஏய்!! சண்டி ராணி சொல்லவிடுடி அன்னைக்கு விட வர்ரப்ப முகிலோட நம்பர் என்கிட்ட கொடுத்தான். ஃப்ளைட் ஏற உள்ள போறப்ப என்னை கூப்பிட்டு, உன் உயிர காப்பாத்த மட்டும் அனுப்பல நீ என் உயிர், அந்த உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுனு தான் அனுப்புறேன், மிருணாவுக்கு இங்க நாங்க நிறைய பேரு இருக்கோம், நா உயிரா நினைக்கிற உன்ன நல்லா பாத்துக்கன்னு சொல்லிட்டு போயிட்டாரு, எனக்கு செம்ம ஷாக்கு, அப்பா தான் வந்து ஃப்ளைடுக்கு டைமாச்சுன்னு இழுத்து போனாங்க”, என்றாள் சிரிப்புடன்.
“அடப்பாவி இவ்ளோ!! பேசுனானா? நா அங்க தானே இருந்தேன் எப்படி பேசுனான்???”, என்றான் குழப்பமாக.
“அப்போ உங்களுக்கு போன் வந்துச்சு அண்ணா பேச போயிடீங்க அந்த கேப்ல தான்”, என்றாள் கண்ணடித்து.
“முகில்க்குள்ள இப்படி ஒரு மன்மதனா??”, என்றாள் மிருணா ஆச்சரியமாக.
“பார்க்க ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துக்கிட்டு பண்ற வேலைய பாரு”, என்றாள் அனு சிரிப்புடன்.
“ம்ம்.. அவன் வரட்டும் நல்லா வச்சு செய்யலாம்”, என்றாள் சிரிப்புடன்.
“ஏய்!!! விஷா என்ன பேசுறடி??”, என்றாள் முறைப்புடன்.
“நிஜமா தான் கேட்குறேன் சொல்லுக்கா”.
“ஏய்!! லூசு மாதிரி பேசாத விஷா எனக்கு விக்ரமுக்கு அந்த மாதிரி எண்ணமே! இல்ல”, என்றாள் பல்லை கடித்தபடி. அனு,ஸ்ரீ ,சங்கவி, அமர் நால்வரும் லேசான அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அப்ப விக்ரம் மேல உனக்கு லவ் இல்லையா??”, என்றான் தயங்கியபடி.
“நா எப்ப அண்ணா அப்படி சொன்னேன், விக்ரம் கூட என்னைய லவ் பண்றதா சொன்னதே இல்ல நீ குழப்பிக்காத”.
“மிருணா அண்ணா கோபப்பட்டதும் போய் சமாதானம் பண்ணுனியே!! அண்ணாவ யாராலயும் சமாதானம் பண்ண முடியாது உன்னால மட்டும் தான் சமாதானம் பண்ண முடியும்”.
“என்ன ஸ்ரீ நீயுமா உங்க அண்ணா கோவப்பட்டதுக்கு நா தான் காரணம் அதனால தான் சமாதானம் பண்ண போனேன்”.
“அத்தான் மேல கொஞ்சம் கூட உனக்கு எந்த ஃபீலிங்சும் இல்லையா??”, என்றாள் சங்கவி பாவமாக.
“லூசு விக்ரமே என்கிட்ட லவ்வ சொன்னது இல்ல, அப்படி பார்த்தது கூட இல்ல அப்புறம் எப்படி??”, என்றாள் சங்கடமாக.
“அப்ப உனக்கு மனசு கஷ்டமா இருந்தா எதுக்கு விக்ரம தேடுற?? பாப்பா அவன் சமாதான சொல்றப்ப எப்படி அமைதியாகுற?? அன்னைக்கு எதுக்கு போன்ல அழுத???”.
“ஏய்!! அமர் அவருக்கு ஏதாச்சும் ஆயிடும்னு தான் அழுதேன், அந்த சிவாவ பத்தி நல்லா தெரியும், விக்ரமுக்கு ஆபத்து வர மாதிரி கனவு வந்தது அதுக்குதான் அழுதேன், இப்ப இங்க நா இருக்குறது விக்ரமும் ராகவும் எனக்கு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்காங்க, விக்ரம ஜஸ்ட் பிடிக்கும் அதுகாக காதல இல்ல”, என்றாள் முடிவாக.
ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.”ஏய்!! புள்ளைங்களா உள்ள வாங்க பனி கொட்டுது”, என்று வாணி சத்தம் போட்டுவிட்டு உள்ளே சென்றார் .
அனைவரும் எழுந்து சென்று ஹாலில் உட்கார்ந்தனர். ஸ்ரீ யோசனையுடன் அமரைப் பார்த்தாள்.”அனு எனக்கு ஒரு காபி போட்டு கொண்டு வாடா”, என்றான் ஸ்ரீயின் பார்வையை உணர்ந்து.
“நீ இரு அனு நா போறேன்”, என்று மிருணா எழுந்து சென்றாள்.
“சொல்லு ஹனி”.
“அமர் இவ என்ன இப்படி சொல்லிட்டு போறா??”, என்றாள் கவலையாக.
“நா விக்ரம் கிட்ட ஏற்கனவே!! சொல்லிட்டேன் லவ்வ சொல்ல சொல்லி, அவன் தான் இவ சொல்லாம புரிஞ்சுக்குவா அப்படி இப்படி பேசுறான்”, என்றான் சலிப்புடன்.
“மாமா என்ன லூசா?? இவளுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சாலும் புராபரா இவ கிட்ட சொல்லனும்னு நினைப்பா, அவளுக்கு தெரிஞ்சாலும் வந்து கேட்க மாட்டா, சாதரண விசயத்துக்கே இப்படித்தான் பண்ணுவா, லவ்வுக்கு அப்ப சொல்லவே!! வேணா”, என்றாள் விஷா சலிப்புடன்.
“அப்ப இப்ப அத்தான் வந்து லவ்வ சொன்னா என்னாகும்??”, என்றாள் யோசனையுடன்.
“என்ன பண்ணுவான்னு சொல்ல முடியாது இவள புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம் சங்கு”, என்றாள் அனு.
“மிருணா வரா”, என்றான் அமர். அனைவரும் அந்தப் பேச்சை விட்டு விட்டு வேறு பேச ஆரம்பித்தனர். அனைவரும் இரவு சாப்பிட்டு முடித்ததும் டைனிங் டேபிளயே!! உக்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.”விஷா என் ரூமுக்கு வா நாம சேர்ந்து தூங்கலாம்”, என்றாள் மிருணா சிரிப்புடன்.
“ம்ம்.. எப்போதும் போல தானே!!”, என்றாள் சிரித்துக்கொண்டே. அப்பொழுதுதான் மூவரும் உள்ளே வந்தனர்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த மூவரும் வேகமாக நிமிர்ந்து செல்வதைப் பார்த்தனர்.” என்னபா மூன்னு பேரும் இப்படி பாக்குறீங்க?? நம்ம வீட்ட சுத்தி ஒரு கிலோ மீட்டருக்கு செக்யூரிட்டி போட்டு இருக்கீங்க”.
“அது மாமா”, என்றனர் மூவரும்.
“வரப்ப நாங்க பார்த்துகிட்டே தான் வந்தோம்”, என்றார் சக்கரவர்த்தி.
“ஆமா அவங்க தான் மாறுவேஷத்துல இருக்காங்களே!! எப்படி கண்டுபிடிச்சீங்க??”, என்றான் முகில் யோசனையுடன்.
“நம்ம எஸ்டேட்ல வேல பாக்குற ஆளுங்க யாரு புது ஆளுங்க யாருன்னு எங்களால கண்டுபிடிக்க முடியாதா என்ன??”, என்றார் சோமு சிரிப்புடன்.
“ச்சச்ச…. இல்ல அண்ணி சில பேருக்கு தான் என்னைய பார்த்தா அப்படி தோணும்”, என்றாள் முகிலை பார்த்து.
“ஓய்!! எல்லாரும் என்ன முகில கிண்டல் பண்ற மாதிரி இருக்கு என்ன மேட்டரு??”, என்றான் ராகவ் சோபாவில் உட்கார்ந்து.
“ஏதோ!! நமக்கு தெரியாத ரகசியம் போல டா “, என்றான் விக்ரம் அவன் பக்கத்தில் உட்கார்ந்தபடி.
“விஷா எல்லார்கிட்டயும் காட்டிட்டியா?? நவ் ஹாப்பி “, என்று முறைத்துக் கொண்டே அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
“எஸ்.. எஸ்.. வெரி ஹாப்பி”, என்றாள் சிரிப்புடன்.
“என்ன விஷயம்??”, என்றனர் இருவரும்.
அமர் நடந்த அனைத்தையும் சொன்னான். இருவரும் முகிலை பார்த்து சத்தமாக சிரிக்க ஆரம்பித்தனர்.”ரொம்ப சிரிக்காதீங்க போதும் போதும் விஷா என்னடி பண்ணி வச்சிருக்க?? என் மானமே!! போகுது “, என்றான் தலையில் அடித்த படி.
“அக்கா அப்படி பாக்காத இப்ப இப்படி பேசலனா அறிவுரை சொல்றேன்குற பேர்ல என் காதுல ரத்தம் வர வைச்சுடுவான் உன் ஃப்ரெண்ட்”, என்று எழுந்து ஓடினாள்.
“உன்ன…”, என்று துரத்தினான். அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
விக்ரம் மிருணாவை காதலோடு பார்த்துக்கொண்டு இருந்தான். மிருணாவை தவிர மற்ற அனைவரும் அதனை கவனித்தனர். “மாமா போதும்.. போதும்..”, என்றாள் விஷா கிண்டலாக பக்கத்தில் வந்து. மிருணா குழப்பமாக பார்த்தாள்.
“அண்ணா எல்லாரும் பார்த்தோம் பார்க்க வேண்டிய ஆளைத் தவிர”, என்றான் முகில் கிண்டலாக.
“உங்க ரெண்டு பேருக்கும் என்ன நட்டு லூசாகிருச்சா?? விக்ரமுக்கும் சரி எனக்கும் சரி அந்த மாதிரி எண்ணம் இருந்ததில்ல, முன்னாடி இப்படித்தான் லவ்வ பத்தி பேசுனீங்க, இப்ப கல்யாணமா??”, என்று கோவமாக ரூமை விட்டு வெளியே சென்று ஹாலின் ஓரத்தில் இருந்த பால்கனியில் நின்று தோட்டத்தை வெறித்தாள்.
ஆண்கள் நால்வரும் மேலே வந்தனர். மிருணா பால்கனியில் நிற்பதை பார்த்ததும் அமர் சொல்ல போனான். “நீங்க எல்லாரும் போங்க நா பேசிகிறேன்”, என்றான் விக்ரம்.
“ம்ம்.. சரி”, என்று அவரவர் அறைக்கு சென்றனர்.
விக்ரம் மிருணாவை பின்னாலிருந்து அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.”மனு விடு என்னைய”, என்றாள் கோபமாக.
“ஏன் மிரு என்னாச்சு??? ஏன் இங்க நிக்கிற???”, என்றான் அவள் காதில் உதட்டால் உரசியபடி.
“விடு மனு நா ரொம்ப கோவமா இருக்கேன்”.
“நீ எப்ப தான் கோவமா இல்லாம இருந்திருக்க”, என்றான் அவளை திருப்பி கன்னத்தில் இதழ் பதித்து.
மிருணாவின் கண்கள் கலங்கியது. “என்னாச்சு மிரு?? ஏன் அழுகுற???”, என்றான் பதரி அவள் கண்ணீரை துடைத்து.
“நீ என்கிட்ட ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்குற மனு என்னால உன் தொடுகைய தடுக்க முடியல”, என்றாள் கலங்கிய குரலில்.
“அட லூசு மிரு இதுக்கெல்லாமா போய் அழுகுறது சரி இப்ப நா உன்ன தொடக்கூடாது அவ்ளோ!! தானே!!”, என்று விலகி நின்றான்.
“ம்ம்… சிவா எப்ப வரான்”, என்றாள் கூர்மையாக அவன் கண்களைப் பார்த்து.
“அப்படின்னு யார் சொன்னா??”, என்றான் புருவம் உயர்த்தி.
“கேட்க மாட்டேன் நீ சொல்லியே!! ஆகணும்”, என்றாள் பிடிவாதமாக.
விக்ரம் அந்த பக்கம் இந்த பக்கம் திரும்பி பார்த்தான். “என்ன சொல்ல போறியா?? சரி சீக்கிரம் சொல்லு”, என்றாள் ஆர்வமாக.
விக்ரம் அவள் இடுப்பில் கை வைத்து பக்கத்தில் இழுத்தான்.மிருணா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.”சொல்லட்டா??”, என்றான் கண்ணடித்து.
“ஒன்னும் வேணாம் விடு “,என்று விலக போனாள்.
அவளை விலக விடாமல் இதழை சிறை செய்தான். முதலில் தடுத்தவள் அவனுடனே கரைய ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் விடுவித்தான் மிருணாவின் முகம் செவ்வானமாக சிவந்திருந்தது கண்களை திறந்து அவனை பார்த்தாள். விக்ரம் கண்களில் காதல் மின்னியது சிரிப்புடன் கண்ணடித்தான். வெட்கத்துடன் அவன் மார்பில் புதைந்தாள். விக்ரம் சிரிப்புடன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“அடப்பாவிகளா”, என்றான் ராகவ் சத்தமாக. அனு பேயரைந்தது போல் அப்படியே! நின்றாள். இருவரும் வேகமாக விலகினர்.
“என் ஆளு கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு ஹாலுக்கு வர சொல்லி வந்தா இங்க என்னடானா என் ஆளுக்கு வேப்பில அடிக்க வச்சுருவீங்க போல ஆஜி”, என்று தோளில் கை வைத்தான்.
“ஐயோ!! நா பாக்கல”, என்று கைகளால் கண்களை வேகமாக மூடிக்கொண்டாள்.
“ஏய்!! கண்ணத் திற டி நீ வேற”, என்றான் சலிப்புடன். மிருணா விக்ரமை பொய்யான கோபத்துடன் முறைத்து விட்டு வேகமாக ரூமிற்கு ஓடிவிட்டாள்.
“அதான் பண்ணிட்டீங்களே!! அவளும் ஓடிட்டா, ரெண்டு பேரும் விடிய விடிய ரொமான்ஸ் பண்ணுங்க, அப்புறம் அனு இத வச்சு அவள கிண்டல் பண்ணாத அவ இன்னும் என் லவ்வ உணருல”, என்று சொல்லி விட்டு அவன் அறைக்கு சென்றான்.
“அஜி பாத்தியாடி எல்லாரும் எவ்ளோ!! பாஸ்ட்டா இருக்காங்க நீ மட்டும் ஏன் இவ்ளோ!! ஸ்லோவா இருக்க டி, ஒரு ஐ லவ் யூ சொல்ல அலையவிடுற”, என்றான் சலிப்புடன்.
அனு சிரிப்புடன் அவன் தோளில் சாய்ந்தாள். ராகவ் அணைத்துக்கொண்டான்.” ராகவ் உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் டா ஆரம்பத்திலிருந்தே!!”, என்றாள் அவன் முகத்தை பார்த்து.
“பிடிக்குமா இல்ல லவ்வா??”.
“ஃபர்ஸ்ட் பிடிச்சது அப்புறம் என்னைய ட்ராப் பண்ணுனல்ல அன்னையிலிருந்து லவ் வந்துச்சு, லவ் யூ ராகவ்”, என்று வெட்கத்துடன் அவன் மார்பில் புதைந்தாள்.
“லவ் யூ டூ டார்லிங்”, என்று அவள் நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்தான்.
ஒரு வாரம் யாரும் வெளியே செல்லாமல் வீட்டில் அரட்டை அடிப்பது அம்மாக்களுக்கு உதவி செய்கின்றேன் என்ற பெயரில் உபத்திரம் செய்து கொண்டிருந்தனர். ராமை பார்க்க விக்ரம் , ராகவ் முகிலை அழைத்துக்கொண்டு சென்றான்.
“அண்ணா இவன் எங்க இங்க?? இவன் சிவாவோட “, என்று ஆரம்பிக்கும்போதே,
“இவன் தான் ராம்”, என்றனர் இருவரும்.
ராம் விக்ரமை பார்த்ததும் ஓடி வந்து அணைத்தான்,”அண்ணா இப்ப எப்படி இருக்க?? அன்னைக்கு ரொம்ப பயந்துட்டேன்”, என்றான் வருத்தமாக.
“குட்டா ஒன்னும் பிரச்சின இல்ல டா”, என்று விளக்கினான்.
“முகில் அப்புறம் சொல்றேன் டா, ராம் என் ஜூனியர் அண்ட் இன்னொரு தம்பி “,என்றான் விக்ரம் பெருமையாக.
“இவன் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கான், அப்பா, அம்மா ,மாமா, அத்த எல்லாருக்குமே!! இவன நல்லா தெரியும், நாங்க மூணு பேரும் தான் எப்போதுமே!! ஒன்னா ப்ளான் போட்டு எல்லாத்தையும் பண்ணுவோம்”, என்றான் ராகவ் ராமை பார்த்து சிரித்தபடி.
“ஓ… அப்படியா??”, என்றான்.
“அண்ணா என் ஹிஸ்ட்ரி அப்புறம் பேசலாம், என்ன பிளான் அண்ணா??”.
விக்ரம் மற்றும் ராகவ் திட்டத்தை சொன்னார்கள்.”அண்ணா ரிஸ்க் எடுக்குற மாதிரி இருக்கு, அண்ணி பயந்துருவாங்க”, என்றான் ராம் வேகமாக.
“ஆமாணா ராம் அண்ணா சொல்றது கரெக்ட் தான், மிருணா டென்ஷன் ஆயிடுவா”.
“முகில் , ராம் மிரு என் சிறையில இருந்து யாராலையும் மீட்க முடியாது, அவ என் காதல் கைதி டா”, என்றான் விக்ரம் கர்வத்துடன்.
ராகவின் போன் அடித்தது,” ஹலோ”.
………
“என்ன???”.
……
“சரி உடனே வரோம் “, என்று பதறியபடி வைத்தான்.
“என்னாச்சுடா?? “, என்றான் விக்ரம். மற்ற இருவரும் குழப்பமாக பார்த்தனர்.
“மிருணாவ காணோம் டா, அம்மா கால் பண்ணுனாங்க”, என்றான் பதறியபடி.
இவன் சிவாவின் யார்??? மிருணா எங்கு சென்றாள்??? சிவாவிடம் மாட்டிக்கொண்டாளா??? ராம்கும் சங்கவிக்கும் உள்ள உறவு என்ன??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…………………..