மிஸ். சக்திஸ்ரீ மிஸஸ். சக்திஸ்ரீயாக மாறி நாட்கள் சில ஓடியிருந்தது.
ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு எத்தனை நாள் தான் முகம் திருப்ப முடியும்..? அதுவும் ரம்யாவுடைய குணத்திற்கு அப்படியெல்லாம் இருக்கவே முடியாது..
தங்கள் ஆசைப்படி மகன் திருமணம் நடக்கவில்லை.. சக்தி தான் மருமகள்.. நடந்த எதையும் மாற்ற முடியாது.. என்ற நிதர்சனத்தை உணர்ந்து அதை ஏற்க பழகி இருந்தார். சக்தியோடு கொஞ்சம் கொஞ்சமாய் பேசவும் தொடங்கி இருந்தார்.
அதிலும் பாதி சக்தியை ஆராயும் விதமாகவே இருந்தாலும் காயப்படுத்தும் பேச்சுகள் இருக்காது. அன்பாய் உருகியும் பேச மாட்டார். குத்தி குத்தறியும் பேச மாட்டார்.
ரம்யா போல் சட்டென்று திருவால் ஏற்க முடியவில்லை.. மகனை அறவே தவிர்த்திருக்க ஆரியனை விட சக்தியால் தான் அதனை தாங்கவே முடியவில்லை. தந்தை மீது தன்னவன் கொண்ட நேசம் அவள் அறியாததா..?
எனவே மனம் கேட்காமல் ஒரு நாள் அவரிடம் தானே சென்று பேசினாள். ஆரியன் இல்லாத சமயத்தில்..
“நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா மாமா..”
என திடீரென்று தன் எதிரே வந்து சக்தி நிற்கவும் அவருக்கு என்னவென்று என்றே புரியவில்லை.
“என்ன பேசணும்..”
“உங்களுக்கு என்ன மாமா கோபம்.. என்னை ஆரியன் கல்யாணம் பண்ணிக்கிட்டதா..? இல்லை அவசரமா இப்பவே அதை நடத்தினதா..? “
என்று அவள் கேட்கவும் இளகாத முகத்தோடு,
“எதுவா இருந்தாலும் அதை இப்போ பேசி ஒன்னும் ஆக போறது இல்லை…”
என்றார் கத்தரித்தாற்போல்..
“அதெப்படி மாமா அப்படி விட முடியும்..
அது உங்க மனசுல உறுத்துறதால தானே இன்னமும் ஆரியனிடம் நீங்க பேசுறது இல்லை.. அப்போ அதுக்கு பதில் சொல்லி தெளிவு படுத்துறது என் கடமை தான்..”
என்று பேசிதான் ஆகவேண்டும் என்பது போல் அழுத்தமாய் அவள் சொன்னதில் புருவம் உயர ஆச்சரியமாய் பார்த்தார்.
அவரின் கணிப்பில் சக்தி அதிர்ந்து பேச தெரியாத பயந்தசுபாவி..!! ஆனால் அவளின் இந்த அணுகுமுறை அப்படி அல்ல என்பதை உணர்த்த விரும்பியே அவள் பேசுவதை கேட்க தொடங்கினார்.
“இங்க பிரச்சனை நான் ஆரியனோட மனைவி ஆனது தான் என்றா.. நீங்க தான் புரிஞ்சுக்கணும் மாமா.. அவருக்கு சரியான துணை நான் மட்டும் தான்.. என்னை தவிர அந்த இடத்தில் வேற யாரையும் நிறுத்த முடியாது… அதே எனக்கும் பொருந்தும்…”
திமிராக சொல்லவில்லை. ஆனால் இது தான் உண்மை என்று சட்டமாய் ஒலித்தது.
“ஆனால் இப்படி அவசரமாய் பண்ணினது பிடிக்கலைன்னா சாரி மாமா அதுக்கு காரணம் முழுக்க முழுக்க நான் தான்.. எனக்காக தான் எல்லாமே அவசரமா செஞ்சார்.. நான் அப்போ இருந்த நிலைமை அப்படி..!! வெறுமையோட பிடியில் இருந்தேன்.. முட்டாள்தனமா எதுவும் செஞ்சு இருக்க மாட்டேன்னாலும் அந்த மன அழுத்தம் என்னை நிம்மதியா விட்டு இருக்காது.. அதை நான் உணரும் முன்னாடியே அவர் உணர்ந்து என் நலனுக்காக தான் இதை செஞ்சார்.. அதை தவிர உங்களை மீறி எதுவும் செய்வோம்ன்னு அவர் கனவுலையும் நினைச்சு இருக்க மாட்டார்.. உங்க மகனை பத்தி என்னைவிட உங்களுக்கு தெரியும் தானே..!! ப்ளீஸ்.. கோபம் தீரும் மட்டும் எங்களை எவ்வளவு வேணும்னாலும் பேசி சண்டை போடுங்க.. ஆனால் அவரை தவிக்க விடாதீங்க மாமா.. இந்த அளவுக்கு அவர் வருந்த எந்த பாவமும் பண்ணல அவர்.. நீங்க யோசிங்க..”
என்று ஒரே மூச்சில் சொல்லி அவள் சென்றுவிட அசையாது அமர்ந்திருந்தவரை,
“என்னங்க இந்த பொண்ணு இவ்வளவு பேசுது.. வாயில்லாத பூச்சின்னு நினைச்சேன்..”
என்ற ரம்யாவின் குரலில் திரும்பி பார்த்தார். சக்தி பேச தொடங்கிய போதே வந்துவிட்டார். ஆனால் அவர்கள் சம்பாஷணையில் குறுக்கிடவில்லை.
தன்னை போலவே ரம்யாவும் சக்தியை அதிசயமாய் பார்ப்பதை கண்டு அவருக்கு புன்னகை தான் வந்தது.
“நாம அப்படி நினைச்சுக்கிட்டால் அதுக்கு அந்த பொண்ணு பொறுப்பாகுமா.. புது மனுஷங்களுட்ட பேசவும் பழகவும் தயங்குதே தவிர பேச பயப்படுற ஆள் மாதிரி தெரியல..”
என்று அவர் புன்னகை மாறாமல் சொல்ல திரு சொன்ன விஷயத்தை விடுத்து,
“ரொம்ப நாள் கழிச்சு உங்க முகத்துல சிரிப்பை பார்கறேன்… கோபம் இப்பயாவது குறைஞ்சுதா..”
என்க அதற்கு நேரடியாய் பதில் சொல்லாமல்,
“ஆரியன் மேல ரொம்ப பாசம் வைச்சு இருக்கு.. கேட்டீயா.. என்னை தவிர யாரையும் நிறுத்தி முடியாதன்னு என்கிட்டயே எவ்வளவு அழுத்தமா சொல்லுதுன்னு.. இனியும் எந்த இடத்திலும் அவனை விட்டுக் கொடுக்காது.. அவங்க வாழ்க்கை கண்டிப்பா நல்லா இருக்கும்ன்னு என்மனசு சொல்லுது.. இதுக்கு மேல என்ன வேணும்..”
என்றார் பாசமிகு தந்தையாய்.. அவருக்கு அவர் மருமகளை இந்த சில நிமிட பேச்சிலே பிடித்துவிட்டது. அதனாலே மற்ற எல்லாமும் சிறுவிஷயமாய் மறைந்து போனது.
மேலும் அவர்களை அதிலே தேங்க விடாமல் மேக்னாவின் கல்யாண வேலைகள் இழுத்துக் கொண்டது.
மறுநாளே ஆரியனை தானாகவே அழைத்து,
கார்த்திக் வீட்டில் மண்டபம் பதிவு செய்வது குறித்து பேசியதை எப்போதும் பேசுவது போல் கூப்பிட்டு பேச அவனுக்கு சந்தோஷத்தில் கண்களே கலங்கிவிட அதனை பார்த்திருந்த சக்திக்கும் அத்தனை நிறைவு..!!
இவ்வாறு காதலித்தவனை கரம் பற்றி இல்லற வாழ்க்கை இனிதாகவே தொடங்கி இருக்க இனி எல்லாம் வசந்தமே என சொல்ல தான் அவளுக்கும் ஆசை… ஆனால் அவள் நினைத்தபடி அவ்வளவு எளிதில் அந்த வாழ்க்கையில் அவளால் ஒன்ற முடியவில்லை.
தனிக்காட்டு ராணியாய் இத்தனை வருடம் இருந்து எதையும் யாரை கேட்டும் செய்து பழக்கமில்லை. அவள் முடிவுகள் எல்லாமே அவள் இஷ்டம்போல் தான்.. தன் மனதிற்கு சரியென தோன்றுவதை மட்டும் தான் செய்வாள். யாமினியே இதை செய்.. செய்யாதே என என்ன சொன்னாலும் வாக்குவாதம் செய்ய மாட்டாளே அன்றி தான் நினைப்பது தான் நடத்தி காட்டுவாள்..!!
இங்கே முற்றிலும் வேறு உலகமாய் பழக்க வழக்கங்களில் தொடங்கி அடுத்தவர் முகம் பார்த்தே ஒவ்வொன்றும் செய்வது வரை எல்லாமே புதிதாய் இருந்தது.
ஆர்வ கோளாறில் இதை செய்கிறேன்.. அதை செய்கிறேன் என வீட்டுக்கு வேலைகளை தானே இழுத்துபோட்டு கொள்ள சரி செய் என்று ரம்யா விட்டுவிட்டு நகர்ந்தாள் முடிக்க முடியாமல் திணறி நிற்பாள்.
ரம்யாவிடம் எதையும் கேட்கவும் பேசவும் அவ்வளவு தயக்கமாய் இருக்கும்.
இப்படி நினைத்துக் கொண்டால்.. அப்படி நினைத்துக் கொண்டால் என அதிகபடியாய் யோசித்து இறுதியில் பேசவே மாட்டாள். ஆரியனுக்காக பேசும் போது அத்தனை தெளிவாய் பேசியவள் மற்ற சின்ன சின்ன விஷயங்களை பேச அவ்வளவு தயங்கினாள். ஏனோ அடிமனதில் மாமியாருக்கு தன்னை பிடிக்க வேண்டும்.. என்ற எண்ணமே அவளை இயல்பாய் இருக்க விடாமல் நிறைய யோசிக்க வைத்தது.
சில சமயங்களில் தன்னுடைய சுயமே இல்லாமல் போகிறதோ என்று தோன்றினாலும் பல சமயம் குழம்பியே திரிந்தாள்.
மறுபக்கம் வீட்டின் கவலை அவளை விடவே இல்லை. எத்தனை தூரம் ஓடி சென்றாலும் மறக்க கூடிய பந்தம் அல்லவே அது..!
இவளை விட்டு கிளம்பும் போது அவர்கள் காட்டிய அக்கறையில் தன் பிரிவில் மனம் மாறி இருப்பார்களோ தங்கள் தவறை உணர்ந்து வருந்துவார்களோ என்று எல்லாம் கற்பனை செய்திருந்தாள்.
ஆனால் திருமணம் முடிந்து சென்றத்தோடு சரி அதன்பின் யாமினியிடம் எந்த தொடர்பும் இல்லை.
விஷாகன் ஒரு முறை அவளை அழைக்க அத்தனை ஆர்வமாய் பேச எடுத்தாள்.
அவரும் அவள் நலம் எல்லாம் விசாரித்த பின்னர்,
“கேஸ் கோர்ட்ல பதிவாகிடுச்சு சக்தி.. மியூச்வல் என்பதால் சீக்கிரம் முடிஞ்சுசிடும் நினைக்கிறேன்..”
என்ற தகவலை சொல்லி நம்பியிருந்த அவள் மனதை மீண்டும் உடைத்தார். மேலும் அவர் எதுவும் சொல்வதை கேட்க விரும்பாமல்,
என நக்கலாய் கூறி வைத்துவிட்டாள். இறங்கிய கோபம் மீண்டும் உச்சாணியில் ஏறி நின்றது இருவர் மீதும்..!!
இப்படி வகை வகையாக எல்லாவற்றை தான் நினைப்பதோடு நிறுத்தி விடாமல் கணவனிடமும் புலம்பி தீர்ப்பாள். என்னவோ எதையுமே ஆரியனிடம் சொல்லாமல் அவளால் இருக்க முடியாது. அது தன் வீட்டை பற்றி என்றாலும் சரி.. அவன் வீட்டை பற்றி என்றாலும் சரி!!
சில நேரங்களில் அவளின் நினைப்பை மாற்றி புரிய வைக்க முயல்வான். அது பெரும்பாலும் சண்டையில் தான் முடியும் என்பது தனி கதை..!!!
சில சமயங்களில் அவளின் அதீத சிந்தனைகளை கண்டு,
“கடவுளே.. இந்த ஓவர்திங்கிங் ஓணான் கிட்ட இருந்து காப்பாத்து ப்பா..”
என சத்தமாய் வேண்டி மொத்து வாங்கி கொள்வான். இன்னும் சில சமயம் தன்னை தவிர எந்த சிந்தனையும் நெருங்க விடாமல் அவளில் கரைந்து தன்னில் அவளை நிறைப்பான்.
இப்படியாய் இதய துடிப்பை போல் ஏற்ற இறக்கங்களோடு சென்றது நாட்கள்..!!
மாலை வேளையில் துவைத்த துணிகளை காய வைப்பதற்காக பக்கெட்டை தூக்கி கொண்டு சக்தி மாடியேற அந்நேரம் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய ஆரியன் மனைவி தனியே செல்வதை கண்டதும் கள்ளம் புகுந்தது.
பேக்கை உள்ளே வைத்துவிட்டு அவள் அறியாமல் பின்னே வந்து நின்றவன் திடீரென பின்னிருந்து இடையில் கைகோர்த்து தூக்க அதிர்ச்சியில் கையில் இருந்த பக்கெட்டை போடவும் அது நச்சென்று அவன் காலில் உட்கார,
“ஸ்ஸ்.. ஆ.. அம்மா..”
என வலியில் காலை பிடித்துக் கொண்டான். நல்ல வேளை அது பிளாஸ்டிக் என்பதால் அடியேதும் படவில்லை.
“யோவ்.. பிசாசு.. பிசாசு மாதிரியா வந்து பயம் புடுத்துவ..”
இன்னமும் படபடப்பு குறையாமல் சக்தி கீச்சிட,
“ரொமாண்டிக்கா ஒரு என்ட்ரி கொடுக்க நினைச்சது ஒரு குத்தமாயா..”
காலை உதறிவிட்டு பரிதாபமாய் சொல்ல சிரித்துவிட்டாள்.
“ரோமான்ஸ்ஸு…” என இழுத்து
“அதான் வரலைல.. அப்புறம் ஏன்..? எதுக்கு இந்த வீரபாகு சாகசம் எல்லாம்..”
என்று கேலியாய் சொல்லிவிட்டு விழுந்த பக்கெட்டை நிமிர்த்தி வைத்துவிட்டு துணியை காயப்போட தொடங்கினாள்.
“இந்த அவமானம் உனக்கு தேவையா..” என்றான் தனக்கு தானே..!!
“ஹாஹா.. பெட்டெர் லக் நெஸ்ட் டைம்..”
குறும்பாய் சொல்லிவிட்டு,
“இன்னைக்கு அந்த ரஷ்யன் கிளைண்ட்டோட வீடியோ கான்ஃப்ரென்ஸ் மீட்டிங் சொன்னல.. என்னவாம்..”
என்று விசாரிக்க அவனும் அவளுக்கு உதவியபடி,
“ம்ம்.. தே ஆர் க்வைட் இம்ப்ரெஸ்டு.. மேற்கொண்டு என்ன முடிவு எடுக்கிறாங்க பாப்போம்..”
என்று சொல்லி,
“சரி.. நீ ஏன் இந்த நேரத்தில் துணியை துவைச்சு வைச்சு இருக்க.. வெயிலோடு செஞ்சு இருக்கலாம் தானே..”
என்று கேட்க சக்தி முகத்தில் பியூஸ் போனது.
“இன்னைக்கு நடந்த கூத்தில் துணி ஊற வைச்சதே மறந்துட்டேன்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கவனிச்சேன்.. அதான்..”
“ஏன்.. என்னாச்சு..”
என்று அவன் கேட்கவும் ‘சொன்னா கலாய்ப்பானே.. என்று..’ தயங்கினாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“அது எப்போவும் அத்தை தானே சமைப்பாங்க.. சும்மா ஹெல்ப் தானே நான் பண்ணுவேன்.. இன்னைக்கு நாமே முழுசா பண்ணுவோமேனு நினைச்சு அத்தைகிட்ட சொன்னேன்.. அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க.. மேக்னாவும் என்கூட கூட்டு சேர்ந்துக்கவும் ஆர்வமா தான் இறங்கினோம்..”
“சரி..” என்றான் கதை கேட்கும் தொனியில்..
“ஆனால் அதுக்கு அப்புறம் அத்தை சொன்ன மெனுவை கெட்டதும் எனக்கு தலையே சுத்தி போச்சு.. எனக்கு தெரிஞ்சதே ரெண்டு குழம்பு… சில காய்கறி கூட்டு தான்.. அத்தை என்னானா என்னை செஃப் தாமு ரேஞ்சுக்கு நினைச்சு நான் வெஜ் டிஷ்ஷா அடுக்குறாங்க.. ஏற்கெனவே எல்லாம் வாங்கி வைச்சு இருப்பாங்கன்னு தெரிஞ்சு இருந்தால் வாய் விட்டு இருக்க மாட்டேன்..”
அவனுக்கு என்ன நடந்து இருக்கும் என்று புரிந்துவிட கைகட்டி அவள் சொல்லி முடிக்க காத்திருந்தான்.
“இப்ப பின் வாங்கவும் முடியாதுல.. சரி மேக்னா தான் இருக்காளே அவகிட்ட கேட்டுகலாம்னு நினைச்சு ஆரம்பிச்சோம்.. அத்தையும் எங்களை நம்பி விட்டுட்டு பக்கத்து வீட்டு பாட்டி ரொம்ப முடியாம இருக்காங்கல்ல அவங்களை பார்க்க போய்டாங்க.. நான் அவளை நம்பியிருக்க.. அவ என்னை நம்பியிருக்க.. ஆக மொத்தம் ரெண்டு பேருக்கும் ஒன்னும் தெரியல..
யூடியூப்ல ஒவ்வொரு பேஜ்ல ஒவ்வொரு விதமா சொல்லி குழப்பிவிட பெரிய சொதப்பல் ஆகிடுச்சு.. வந்து பார்த்ததும் செம்ம டென்ஷன் ஆகிட்டாங்க.. அப்ப திட்ட ஆரம்பிச்சவங்க தான்.. சமைச்சு முடிச்சு சாப்பிட்டு தூங்க போறவரை தெரியாம எதுக்கு செய்யிறேன்னு சொல்லி பொருள் எல்லாத்தையும் வீணாகணும்ன்னு ஒரே வசவு மழைதான்..”
பாவமாய் அவள் சொல்லி முடிக்க அவ்வளவு தான் விழுந்து விழுந்து சிரித்தான்.
“டேய்.. சிரிக்காத.. கொன்றுவேன் உன்னைய..”
அவளின் மிரட்டலோடு அடியோ எதுவும் அவனை நிறுத்தவில்லை.
“அரியர் வைச்ச பசங்களை கூட நான் இவ்வளவு திட்டினது இல்லை.. என்னை காய்ச்சி எடுத்திட்டாங்க.. இப்படி சிரிக்கிற.. உன் பொண்டாட்டி பாவம் தானே..”
என உதட்டை பிதுக்கி அவள் சொல்லவே இழுத்து தன் கைவளைவில் வைத்துக் கொண்டு,
“முதல்லயே தெரியாதன்னு சொல்லி இருந்தால்.. ஏன் இவ்வளவு பஞ்சாயத்து வர போகுது..”
என்றான்..
“ம்ம்ம் தெரியும்ன்னு பெருமையா சொல்லலாம்.. தெரியாதுனு எப்படி சொல்றது.. என்ன நினைப்பாங்க..”
“நாமே சமைக்கலாம்ன்னு நினைப்பாங்க.. உங்களுக்கும் சொல்லி தரணும்னு நினைப்பாங்க..”
ம்ச்.. போ ஆர்யா.. ஏற்கெனவே எனக்கு ஒரு வேலை செய்யவும் உடம்பு வளைய மாட்டுது.. நான் வேற ஆரியனுக்கு என்னை தவிர யாரையும் நிறுத்த முடியாது ஜம்பமா சொல்லி வைச்சேன்..
இப்ப பெருசா சமைக்கவும் தெரியாதுனு தெரிஞ்சால் வெத்து பீஸ்ன்னு நினைக்க மாட்டாங்க… ம்ச்.. நானெல்லாம் நல்ல குடும்ப பெண் கேட்டகரில வர மாட்டேன் போல.. “
“சரி அதுக்கு என்ன பண்ணலாம்.. பக்கத்து ஊர்ல அந்த ஸோ கால்ட் குடும்ப பெண் ஆவது எப்படினு கோர்ஸ் நடத்துறாங்கலாம் சேர்த்துவிடவா..?”
என்று நக்கலாய் கேட்டவனை முறைத்த முறைப்பில்,
“நீ பேசுறது அப்படி தான் இருக்கு.. இதென்ன சினிமாவா.. ஒரே பாட்டில் ஓஹோன்னு வர.. எவ்ரிதிங் டேக்ஸ் டைம்.. அப்படியும் வரலைனா கூட என்ன இப்ப.. இங்க என்ன அவார்ட்டா கொடுக்கிறாங்க… இல்லைல.. அப்புறம் ஏன் நீயே குழம்பி எல்லாரையும் குழப்புற.. இதை யோசிக்கிற நேரம் உருப்படியா ஏதாவது செய்யலாம்ல..”
அவனும் கண்டிப்புடனே கூறினான். அவனுக்கு அவளின் இந்த தேவையற்ற கருத்தை எல்லாம் மாற்ற வேண்டும்..!!
முகம் சுருங்க,
“என்ன செய்றது.. இங்க வரும் முன்னாடி என் காலேஜூம் பேண்ட்டும் தான் உலகம்ன்னு இருந்தேன்.. இப்ப தான்.. இரண்டுமே இல்லை.. வாரா வாரம் என்னை விட்டுவிட்டு வீடியோ போடும் போது உள்ள பொசபொசன்னு வருது தெரியுமா..”
“ஆனால் மேக்னா மேரேஜ் முடிஞ்சதும் பண்ணு.. ஒருவேளை இப்போவே கிடைத்து விட்டால் அப்புறம் ஜாயின் பண்ணின உடனே நிறைய லீவ் எடுக்கிறா மாதிரி இருக்கும்..”
என்று சொல்ல அவளுக்கும் அதுவே சரியென பட்டது.
“மியூசிக்கும் கூட ஏன் இங்கிருந்தே நீ ஜாயின் பண்ண கூடாது சக்தி.. எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து தான் பண்ணனும்னு இல்லையே.. நீங்க டிஸ்கஸ் பண்ணி எதாவது வழியை கண்டு பிடிங்க.. இங்க இருந்தேக் கூட நீ ரெகார்ட் பண்ணி அனுப்பலாம் இல்லையா..”
என்று அவள் ஆசை உணர்ந்து யோசனை கூற அவன் சொன்ன விஷயம் அவளுக்கும் பிடித்தது.
“ஆமால.. கரெக்ட் தான் ஆர்யா.. நான் இன்னைக்கே இதை பேசுறேன்..”
என்று சந்தோசமாய் சொல்ல அதை இரசித்து பார்த்தவனாய்,
“இப்ப எல்லாத்துக்கும் ஆமா போட்டுட்டு.. பின்னாடி அம்மா அப்படி நினைப்பாங்கன்னு நான் இப்படி செஞ்சேன்.. அப்படி செஞ்சேன்ன்னு தூக்கிட்டு வந்த..”
என்று மிரட்டலாய் நிறுத்தி,
“இங்க பார் சக்தி.. நம்ம வீடு.. நம்ம குடும்பம்.. இங்க மட்டும் தான் எந்த முகமூடியும் இல்லாமல் நம்மை நமக்காக நேசிப்பாங்க.. அதனால எந்த வெளிப்பூச்சும் போட நினைக்காம நீயாவே இரு..”
என்று அறிவுரை சொல்ல அது அவளுள் பதிந்தாலும் வேண்டுமென்றே,
“எனக்கு என்னமோ அந்த கோர்ஸ்ல நீ தான் ரெண்டு செஷன் அட்டன் பண்ணியிருப்பியோ தோணுது.. ஒரே ததத்துவ மழையா பொழியிறியே..!! உண்மைய சொல்லு..”
என்று கிண்டலாய் சொல்ல,
“திமிருடி உனக்கு..” என்று அவள் கன்னத்தை கடித்து வைக்க அதில்,