“ரே… ஒரு தடவ கேட்டு பாரேன்… உன்னால முடியாதது எதாவது இருக்கா சொல்லு.. சும்மா ஒரு ட்ரை.. ரே.. ரே..”
ஜென்சியின் அறைவாயிலில் நின்று ரேச்சலை தாஜா செய்துக் கொண்டிருந்தான் அக்ஷய்.
அள்ளும் பகலும் அயாராது உழைத்த அவர்களின் தற்போதைய ப்ராஜெக்ட் வெற்றிகரமாய் முடிந்து அவர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் நன்றாக ரீச்சாகிவிட எல்லோருக்கும் ஒரு ஆத்ம திருப்தி. அது தந்த உற்சாகம் அடுதடுத்த வேலைகளையும் முனைப்பாய் செய்ய வைக்க இதனிடையில் இவர்கள் குழு வெற்றியை கொண்டாட இன்று ‘நைட் க்ளப்’ செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தனர்.
இது வழக்கமாய் நடப்பது என்றாலும் இம்முறை அவர்களோடு ஜென்சியும் வரவைக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். வேலை நிமித்தம் அல்லாது யாரோடும் ஓரிரு வார்த்தைகூட உரையாட மாட்டாள் என்று தெரிந்தாலும் அவளும் இணைந்து தங்கள் ஜோதியில் ஐக்கியமாக்க வேண்டும் என்று அவர்களுக்கு தோன்ற ஜென்சியிடம் பேசகூடிய ஒரே ஜீவன் ரேச்சல் தான் என்பதால் அவளை சமாதானப்படுத்தி கொண்டிருந்தனர்.
“சொன்னா கேளு அக்ஷய்.. நீங்க கேட்டால் கூட டீசெண்ட்டா ‘வரலை ப்பா..யூ கைஸ் கேரியான்’நு சொல்லுவா.. நான் கேட்டேன்னா வண்ண வண்ணமா திட்டுவாடா.. ப்ளீஸ் ஆளை விடுங்க..”
“ஹே இதுவரை எப்பவாவது கேட்டு இருக்கோமா.. கேட்காமலே இப்படி தான் சொல்லுவாங்கன்னு நீயேன் நெகட்டிவா யோசிக்கிற.. இந்த மாதிரி எதாவது சாக்கில் பழகினால் தானே ஃப்ரெண்ட்ஸ் ஆக முடியும்.. இல்லனா எப்பவுமே அவங்க தனி தீவாவே இருப்பாங்க.. நீ கேளேன்..”
என்று ஷீபாவும் சொல்ல அவளிடம் கேட்பதை தவிர வேறு வழியில்லை என்பதனை உணர்ந்து ஜென்சியின் அனுமதி வேண்டி அவள் அறையினுள் பிரவேசித்தாள்.
வழக்கம்போல் கணினியோடு உறவாடிக் கொண்டிருந்தவளிடம்,
“ஜென்.. நான் ஒன்னு கேட்பேன்.. நீ கோப படக்கூடாது.. முக்கியமா திட்ட கூடாது..”
என்று முன் ஜாக்கிரதையோடு ஆரம்பித்தாள்.
“நான் திட்டிட்டால் அப்படியே கேட்டுகிறா மாதிரி தான்.. பில்டப் கொடுக்காம சொல்லு ரே..”
“நம்ம இந்த ஃப்ராஜெக்ட் சக்சஸ்ஃபுல்லா முடிச்சுட்டோம்ல.. அதை செலிப்ரேட் பண்ண இன்னைக்கு நைட்டு ‘ட்ரிஸ்ட்..’ போகலாம்னு ப்ளான்ல பண்ணிருக்கோம்..”
“அடடா.. அப்போ எவ்ரீ சட்டர்டே நைட் போவீங்களே அது எண்ண கணக்கு..”
“அது ஸ்ரெஸ்ட் பஸ்டர்க்கு.. ம்ச்.. இங்க பாரு சொல்ல வரும்போது குறுக்க பூராத..”
“சரி சொல்லு..”
“ஆங்.. இன்னைக்கு நீயும் வந்தா நல்லா இருக்கும்னு எல்லாரும் சொல்றாங்க ஜென்..”
“ஐம் நாட் இன்ரெஸ்டட்..”
“கமான் யா.. எப்ப பார்த்தாலும் இப்படியே விலகாதே.. ஜாலியா இருக்கும்..உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்ல…”
என்றவளை அவள் எதுவும் சொல்லாமல் பார்க்க,
“நான் சொன்னா நீ கேட்பேன்னு எல்லாரும் ஒரு இமேஜ் க்ரியேட் பண்ணி வைச்சுட்டாங்கடி.. நீ இப்ப வரலேனா ஒரே ஷேம் ஷேம்மா போயிரும்… நான் உன் ஃப்ரெண்ட் தானே.. எனக்காக ப்ளீஸ்..”
என்று அவள் சலூகையாய் பேச பின்னது மனதை கரைத்தாலும் அவள் முதலில் சொன்ன ‘சேஞ்ச்’ என்ற வார்த்தை அவளை யோசிக்க வைத்தது.
“ஸிஸ்டமெடிக் லைஃப்..’ என்று நிஷாந்த் சொன்னது மனதில் ஏதோ ஒரு மூளையில் அரித்துக் கொண்டே இருக்க தற்போது மேற்கொண்ட சுய அலசலின் முடிவில் வேறு எதிலும் கவனம் இல்லாததால் தான் நம் மனம் ஜோவையே சுற்றி சுற்றி வந்து தன்னை தானே காயப்படுத்திக் கொள்கிறது என்று புரிந்தது. அவள் மனமே நம் வாழ்கையில் ஏதோ ஒரு மாற்றம் மேற்கொண்டால் ஒரு புத்துணர்ச்சி வரலாம் என்று எண்ணியிருக்க இன்று ரேச்சலும் சரியாய் மாற்றம் என்றதும்,
“போனால் தான் என்ன..?” என்று தோன்ற சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தவள்,
“சரி வரேன்.. ஆனால் அங்க என்னை எதுக்கும் ஃபோர்ஸ் பண்ண கூடாது..”
என்று சொல்ல, “நிஜமாவா சொல்ற..” என்று வியந்தவள் பின்,
“ஷுயர்.. ஷுயர்.. உன் இஷ்டபடி இரு.. நைட் நானே வந்து உன்னை பிக் பண்ணிகிறேன்… ரெடியா இரு..”
என்று உற்சாகமாய் கூறி அதனை மற்றவர்களிடமும் பகிர ஆர்வமாய் சென்றவளை கண்டு புன்னகைத்தாள் ஜென்சி.
அன்று அவளிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச காத்திருந்த எஸ்தருக்கு அவள் சீக்கிரமே வீடு திரும்பியதும் மிகுந்த மகிழ்ச்சி.
அவள் ரெஃப்ரெஷாகி வந்ததும் அவளுக்கு காஃபி கொடுத்தவர் அவள் அருகில் அமர்ந்து,
“உன்னுட்ட முக்கியமான விஷயம் பேசணும் ஜென்சி..”
என்று சொல்ல லிசாவும் அங்கேயே ஆஜரானாள்.
“என்ன மாம்..”
தன் ஃபோனில் ஒரு புகைப்படத்தை எடுத்து அவள் புறம் நீட்டியவர்,
“இவர் தாமஸ்.. டாக்டர்… நமக்கு ஒரு வகைல தூரத்து சொந்தம்.. இங்க தான் அந்தேரில இருக்கார்…”
என்று சொல்லவும் அவளுக்கு புரிந்துவிட,
“மாம்.. இப்ப ஏன் இதெல்லாம்..”
என்று முறைக்க,
“நமக்கு சொந்தகாரங்க எல்லாம் இருக்காங்களா..”
என்று இடைபுகுந்து தன் சந்தேகத்தை முன்வைத்தாள் லிசா.
“எல்லாம் இருக்காங்க.. நாம தான் இங்க தூரம் வந்ததும் யாரோடையும் அதிக தொடர்பு இல்ல..”
என்று அவளுக்கு பதில் கொடுத்தவர்,
“இப்ப இல்லேனா வேற எப்ப ஜென்சி..ஏற்கெனவே கேட்டதுக்கு ஒரு வருஷம் போட்டும் மாம்னு சொன்ன.. நானும் ஒரு வருஷம் கல்யாணம் பத்தி பேச்சே எடுக்கல.. நீ சொன்ன டைம் முடிஞ்சுது..”
என்று ஜென்சியிடம் கறாராய் பேச தான் இருக்கும் மனநிலையில் கல்யாணம் எல்லாம் இப்ப முடியாது என்று அவள் மனம் திணறியது.
“புரிஞ்சுக்கோங்க மாம்.. நான் இப்ப கல்யாணத்துக்கு எல்லாம் தயாரா இல்ல.. ஐ நீட் சம் டைம்..”
“உன்னை உடனே பண்ணிக்க சொல்லல ஜென்சி.. நம்ம சொந்தம் தானே.. சும்மா இந்த பையனோட பேசு.. மீட் பண்ணி பாருங்க.. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சால் மேற்கொண்டு பேசலாம்.. இல்லைன்னா கட்டாயப் படுத்த மாட்டேன்.. ஆனால் பார்க்காமலே கண்மூடிதனமா மறுக்காத..”
என்று தீர்க்கமாய் சொன்னவரை முறைத்து தான் பார்க்க முடிந்தது.அவர் பேசிய தொனியே ஒரு முடிவோடு தான் இருக்கிறார் என்பதை பறைச்சாற்ற,
“சரி அப்புறம் பார்ப்போம்..” என்று சற்று அந்த பேச்சை ஒத்தி போட்டவள் இன்று இரவு க்ளப் போக போவதை குறித்து சொல்ல எஸ்தர் அதியசயமாய் பார்க்க,
“என்ன சொல்லிட்டேன்னு இப்படி பார்க்குறீங்க..”
என்று புரியாமல் அவள் முழிக்க,
“இல்ல.. குதிரைக்கு கடிவாளம் கட்டினா மாதிரி ஆபிஸ் போவ வீட்டுக்கு வருவ.. இன்னைக்கு திடீர்னு வெளிய போறேன்னு சொன்னியா.. அதான் என் மகளானு திகைச்சு போயிட்டேன்..”
என்று எஸ்தர் சிரிக்க லேசாய் முறைத்தவள்,
“ரே ரொம்ப கேட்டா.. அதான்..”
என்று விறைப்போடே சொல்ல லிசாவோ,
“செம்ம.. செம்ம தீதி.. நான் தான் இன்னைக்கு உங்களை ரெடி பண்ணுவேன்..”
என்று தானே போக போவது போல் உற்சாகமாய் குதித்தாள்.
ஆனால் இரவு கிளம்பும்போது உதவுகிறேன் என்று ஜென்சியை பிடித்து ஒருவழியாகி விட்டாள் லிசா.
“முதல்ல இந்த கண்ணாடிய கலட்டி வை தீதி.. முகத்துல பாதி இடம் இதுவே ஆக்குபே பண்ணிக்கிது… லென்ஸ் போட்டுகலாம்..”
“எனக்கு அது கம்ஃபர்ட்டபிள்ளா இருக்காதுடி…”
“ஒரு நாள் தானே பரவாயில்லை.. அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ..”
என்றவள் ஜென்சியின் வார்ட்ரோப் முழுவதும் ஆராய்ந்ததில் மெரூன் நிறத்தில் இருந்த அழகிய மெக்ஸி அவளை கவர அதனை அணிய சொன்னாள். சற்று சுருட்டையாய் இருக்கும் அவள் கூந்தலை இன்னும் நன்றாக கர்ல் செய்து அது தோளில் சுருண்டு விழும்படி செய்தாள். ஆடைக்கு பொருத்தமான அணிகலனும் முகத்திற்கு சில பல கோட்டிங் மேக் அப்பும் போட்டு முடித்த பின்பே நிமிர்ந்தவள்,
“பாரு.. உன்னை எவ்வளவு அழகா மாதிட்டேன்னு..”
என்று சொல்ல கண்ணாடியில் தன்னை பார்த்தவள் தட் ‘கிணத்த காணும் மொமண்ட்’ போல் வேறு ஆளோ என்று சந்தேகிக்கும் படி மாற்றி இருந்தாள் லிசா.
“அப்போ முந்தி நான் அழகா இல்லேன்னு சொல்றீயா..”
என்று அலட்டிகாமல் கேட்டபடி எழுந்தவள் ரேச்சலிற்கு மேசேஜ் செய்ய,
“நான் எப்போ அப்படி சொன்னேன்.. அழகுக்கு அழகு சேர்த்திருக்கேன்..”
என்று கண்சிமிட்டினாள் தங்கை. பின்னர் ரேச்சல் வந்ததும் சொல்லிக் கொண்டு கீழே இறங்கிவர காரில் இருந்தபடியே கதவை திறந்தவிட்ட ரே தோழியை ஆச்சரியமாய் பார்த்து,
“வார்ரே வா… இந்த அழகை இத்தனை நாள் எங்கடி ஒழிச்சு வைச்சுருந்த…” என்றவள்
“நீ இதையே டெய்லீ மெய்ண்டைன் பண்ணினால் என்ன..”
என்று யோசனை சொல்ல காரில் ஏறியமர்ந்த ஜென்சி,
“ம்ம்ம்ம்… வேஷம் எல்லாம் என்னைக்காவது தான் போட முடியும்..”
என்றாள்.
“வேஷமா..??”
“ஆமா.. .என் ஃபேஸ் ஸ்கீன் கலர்ல இருந்து கண்ணு முழி வரைக்கும் எதுவுமே என்னோட ஒரிஜினல் இல்ல.. அப்போ வேஷம் தானே..”
“அது சரி… உன்னை எல்லாம் திருத்த முடியாது..”
என்ற முணுமுணுபோடு காரை கிளப்பினாள் ரேச்சல். இவர்கள் வரும்போது அங்கே மற்றவர்கள் ஏற்கெனவே வந்திருந்தனர். எப்பொழுதும் அலுவலக உடையிலே பார்த்து பழகி இருந்தவர்களுக்கு ஜென்சியின் இந்த தோற்றம் அனைவரையும் வியக்க வைத்தது என்னவோ உண்மை தான்..!! அதிலும் சகஜமாய் மற்றவர்களிடம் பேசி அவர்கள் கேலி கிண்டல்களையும் சிரிப்போடு கேட்டு இரசிக்கும் பாங்கு வியப்பிலும் வியப்பு தான். நண்பர்களோடான இந்த சூழலிற்கு தன்னை பழகி கொள்ள முயன்றாள் என்பது தான் உண்மை..!!
கொஞ்சம் நேரம் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தவர்கள் பின் எழுந்து டேன்ஸ் ஃபுலோரில் இறங்கிவிட ஜென்சி அவர்களோடு வர மறுத்துவிட்டு கையில் இருந்த ஜூஸை மெதுவாக சிப்பியபடி அவ்விடத்தை பார்வையிட்டாள்.
இருட்டான அவ்விடத்தில் அடர்ந்த பிங்க் மற்றும் ஊதா நிற ஷேட்டில் வண்ண விளக்குகள் மாறி மாறி ஒளிவீசி அங்கே ஓடும் இசையின் ரிதததிற்கு மாறுவதுபோல் தோற்றம் கொடுத்தது.
ஆண்- பெண் பேதம் இல்லாமல் கவலைகள் மறந்து ஏன் தன்னையே மறந்து ஆடிக் கொண்டிருந்த கூட்டம், கைகாலை உதறி போதையில் தல்லாடும் கூட்டம், நடனம் என்னும் பெயரில் இங்கேயே குடும்பம் நடத்தும் ஜோடிகள்,அதனை வெறித்துக் கொண்டு சிலர், என் வேலை குடிப்பது மட்டுமே என்று பத்து பதினைந்து ஷாட்களை தொடர்ச்சியாய் உள்ளே தள்ளும் சிலர், பார் கவுண்டரில் அசால்டாய் பாட்டிலை தூக்கிபோட்டு பிடித்து பார்டெண்டிங் செய்துக் கொண்டிருந்த ஒருவன், கவுண்டருக்கு மறுபுறம் ஒரு பெண்ணோடு சிரித்து பேசிக் கொண்டிருந்த ஜோசஃப்- வெய்ட் வாட்..????
ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டே வந்தவள் பார்வை அங்கே ஜோசஃபை ஒரு பெண்ணோடு கண்டதும் அங்கேயே சடென் ப்ரேக் போட்டு நிற்க புருவம் சுருக்கினாள்.
யோசனையோடு அவர்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தவள் மனம்,
“என்னானு யோசிக்கிற நேரத்துக்கு அங்கேயே போய் கேட்டிடலாம்..”
என்று சொல்ல எழுந்து அவன் அருகில் வந்தாள்.
அதேசமயம், “கால் மீ..எனி டைம் பேபி..”
என்று உடலை நெளித்து குரலை குழைந்து அந்த பெண் சொல்லி எழுந்து செல்ல, “ஆளையும் பேச்சையும் பாரு..” என்றெண்ணி முகம் சுளித்தவள்,
“ஹே ஜோ..” என்று சாதாரணமாய் கூப்பிட்டு அவன் எதிரே அமர அவளை கண்டவன் கண்கள் அதிர்ந்து அழுத்தமாய் பதிந்து பின்,
“ஜென்சி..” என்று இழுக்க, “யெஸ்.. ஜென்சியே தான் ஏன் அடையாளம் தெரியலையா.. எனக்கு கூட கண்ணாடில பார்த்தப்ப அப்படி தான் இருந்தது…”
என்றவள்,
“ஆமா.. இந்நேரம் அனீயோட இல்லாம இங்கே என்ன பண்ற.. உன் ஃப்ரெண்ட்ஸ் கூட யாரையும் காணுமே..”
என்றாள் பளீச்சென்று.. அவனிடம் கொண்ட நட்பு அவனை உரிமையாய் கேள்வி கேட்க தூண்டியது.
அவனிடம் பதில் இல்லை. ஆனால் அவன் பார்வையில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள். அவளையே வைத்த கண்வாங்காமல் அவன் பார்க்க,
“என்ன அப்படி பார்க்கிற..”
என்று கேட்டதற்கு விடை இல்லை. அன்று நேரில் சந்திக்கும் போது காரணம் சொல்கிறேன் என்று சொன்னோம் அதனால் பதில் வேண்டி பார்க்கிறானோ என்று தோன்ற,
“இந்த விஷயத்தை விடவே மாட்டியா ஜோ..”
என்றாள் அலுப்பாய்..
லேசாய் சுருங்கிய புருவம் பின் தெளிவாகி
“அதெப்படி விட முடியும்..”
என்று அவன் சொல்ல,
“சரி சொல்றேன்.. பட் நீ சரியா புரிஞ்சிக்கணும்.. குறுக்க எதுவும் பேச கூடாது சரியா..”
என்று கேட்டு அவன் தலையசைத்ததும் பேசினாள். இதயம் ஏனோ தாறுமாறாய் அடித்துக் கொள்ள, ‘மனசுலே வைச்சு புளுங்கினா தானே பிரச்சனை.. சொல்லி இதுக்கு ஒரு முடிவு கட்டிடலாம்..” என்ற நினைப்போடு,
“நான் உன்னை காதலிச்சேன்.. வெய்ட் நீ எனக்கு எந்த ஹோப்பும் கொடுக்கல தான்.. நீ அனீய விரும்பின விஷயம் எனக்கு தெரியாது.. பட் நீ என் லைஃப் பார்ட்னரா வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு.. என்னை அறியாமல் உன்மேல ஃப்லீங்க்ஸ் வளர்த்துக்கிட்டேன் ஜோ.. யூ க்னோ…? ரொம்ப நாளாவே..!!! ஆனால் திடீர்னு நீ அனீய லவ் பண்றேன்னு சொன்னபோது என்னால அக்ஷப்ட் பண்ணிக்க முடியல.. ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டேன்.. அந்த நேரத்தில் என்னால உன்னை ஃபேஸ் பண்ண முடியல ஜோ.. உண்மையை ஏத்துக் கொள்ள எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டது.. அதுக்கு உன்னிடம் இருந்து அரவே ஒதுங்கி இருக்கணும்னு தான் அப்படி செஞ்சேன்.. இப்போ.. இப்போ ஐம் ஓகே..”
அவள் பேச பேச அருகில் இருந்த டேபிளில் கையூன்றி கன்னத்தை தாங்கி கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் முடித்ததும்,
“ம்ஹூம்… நீயேன் காதலிச்சேன்னு பாஸ்ட் டென்சில் சொல்ற ஜென்சி.. காதலிக்கிறேன்னு ப்ரெஸண்ட் டென்ஸ்ல சொல்லேன்.. நான் ரெடியா இருக்கேன்..”
கண்சிமிட்டி குறும்பு நிறைந்த குரலில் அவன் சொல்ல அதிர்ந்துவிட்டாள் அவள்.ஜோசப் இப்படி பேச கூடியவன் இல்லையே..!! நம்பமுடியாமல் கோபமும் எரிச்சலும் போட்டியிட,
“ஆர் யூ மேட்..???”
என்று கத்த அதற்கும் சிரித்து,
“வெய்ட்.. லெட் மீ இன்ரோடியூஸ் மைசெல்ஃப்…” என்று நேராய் அமர்ந்து கை நீட்டியவன்,
“ஐம் ஜோஷ்வா… ஜோஷ்வா மேத்தியூ…”
மிடுக்கோடு சொல்லவும் அவள் கண்கள் சாஸ்ஸராய் விரிய வாய் லேசாய் பிளக்க திகைத்து விட்டாள்.
அவள் இருக்கும் நிலையில் கை கொடுக்க மாட்டாள் என்று உணர்ந்து தானே பற்றி குலுக்க அவன் தொடுகையில் சுயம் பெற்று,
“ட்வின்ஸ்… நீங்க ட்வின்ஸா..”
என்றாள் இன்னமும் அதிர்ச்சி விலகாமல்.. இது இத்தனை வருடங்களாய் தனக்கு தெரியவே இல்லையே…???
“ஏன் உனக்கு தெரியாது..? ஆமா நீ தான் என்னை பார்த்தது இல்லையே… பட் உன் ஃப்ரெண்ட் சொல்லியிருக்கணுமே…” என்று கேள்வி கேட்டு தானே பதிலும் சொன்னவன்,
“அப்போ… அந்த நியூஸ் உண்மை தானா.. ம்ஹூம்.. நான் கூட சின்ன வயசுல இருந்து நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே.. இப்படி பொய்யா காசிப் கிளப்பி விடுறானுங்களேன்னு நினைச்சேன்..”
என்று அவன் கூறியதும் அவளுக்கு சுவரில் எங்கயாவது முட்டிக் கொள்ள வேண்டும்போல் தோன்றியது.
அவள் யாரிடமும் இம்மியளவு கூட பகீராத விஷயம்.. பகிர விரும்பாத விஷயம்…!!! அதை இவனிடம் போய் சொல்லி.. அச்சோ.. அவளுக்கு அப்படியே எழுந்து ஓடிவிட்டால் என்ன என்று தோன்றியது.
“நீ ஜோ இல்லைனு சொல்ல வேண்டியது தானே..”
பல்லை கடித்து அவள் பேச அவனோ அலட்சியமாய் தோள் குலுக்கி,
“நான் தான் ஜோசஃப்னு கூட தான் சொல்லல.. நீயா அப்படி நினைச்சுகிட்டால் அதுக்கு நான் பொறுப்பா…”
என்று சொல்ல கண்களை உருட்டி முறைத்தாள்.
‘அடேய்… கூட பிறந்தவன்.. கூட பிறந்தவன்னு சொல்லுவியே.. உன் கூடவே பிறந்தான்னு ஒரு வாட்டியாவது சொல்லி இருக்கியா..’
மனம் ஜோசஃபை சாட, தன் அந்தரங்க விசயம் யாரோ ஒருவனிடம் வெளியிட்டதில் ஏற்பட்ட சங்கடம் கோபமாய் குமிழிட்டது.
ஆனால் அவனோ,
“ஆக.. அவன் உன்னை லவ் பண்ண வைச்சு.. கடைசியா வேற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டான்.. ஃப்ராடு பைய..”
என்று சொல்ல, “ஜோ பத்தி நீ பேசாத.. எனக்கு கெட்ட கோபம் வரும்..”
அவள் வார்த்தையை கடித்து துப்பினாள்.
“இங்க பாருடா… அவன் என் உடன்பிறப்பு.. நான் என்ன வேணாலும் சொல்லுவேன்.. உனக்கென்ன..?? ஓ காதலன் மேல பாசமோ..”
அவன் குரலில் நக்கல்வழிய அவனை அழுத்தமாய் பார்த்தவள்,
“அப்பா காசை ஏமாத்தி புடுங்கி.. அதுல ஊர் மேய்ற நீயெல்லாம் அவனை பத்தி பேச கூடாது தான்..”
என்று வார்த்தையை தோட்டாவாய் அவனிடம் வீச அது அவன் நெஞ்சை துளைத்து காயப்படுத்தும் என்று எதிர்பார்த்தால் அவனோ அதனை பட்டென்று வாயில் காச் பிடித்து மென்று துப்பிவிட்டதுபோல்,
“உன் கண்ணு ரொம்ப அழகு ஜென்சி.. அப்படியே உள்ள இழுக்குது..”
என்று சொல்ல, “என்ன மனுஷன் டா இவன்..”
என்பது போல் பார்த்தவள், “ச்சே..” என சட்டென்று எழுந்து அங்கிருந்து செல்ல பின்னால் அவன் பார்வை அவளை துளைப்பதை அவளால் உணர முடிந்தது.