காலேஜிற்கு செல்வதற்காக கிளம்பி வெளியே வந்து வண்டியை எடுத்துக் கொண்டே, தர்ஷி சீக்கரம் வீட்டை பூட்டிட்டு வெளியே வா என்று குரல் கொடுத்தாள். அப்பொழுது இவளின் போன் ஓசையெழுப்ப, யாரு இந்த நேரத்துல என்று சிந்தித்து கொண்டே, தன் போனை எடுத்துப் பார்க்க, அதில் அம்மா கால்லிங் என்று வர,
“என்ன இப்போ கால் பன்றாங்க?…” என்று பேசிக்கொண்டே போனை அட்டென்ட் செய்து, என்னமா இப்போ கூப்புடுறீங்க..
“என்னவா இருக்கும்.. ஸ்டே டுயூனிட் அன்டில் ஈவினிங் (stay tuned until evening )” என்று இவள் கூற,
“அதே தான்.. வா இப்போ கிளம்புவோம்..”
– – –
இங்கு பானு போனை வைத்தவுடன், மாலை வந்து பேசிக்க கூடாத பானு, “இப்போ அது என்னவா இருக்கும் யோசிச்சிட்டே இருப்பா பொண்ணு.. கிளாஸ் எடுக்கணும்ல.. என்ன பானு நீ…” என்றார் சந்திரசேகர்.
“நான் என்ன பானுன்னு உங்களுக்கு தெரியாதா?..”
“என்ன தெரியல எனக்கு?”
“நான் என்ன பானுனே உங்களுக்கு தெரியல.. இது கூட புரியாம இவ்வளவு நாள் உங்க கூட குடும்பம் நடத்திட்டு இருக்கேன்..”
“என்ன பானு சொல்ற?..”
“பாத்திங்களா.. பாத்திங்களா.. இப்போ கூட என்ன பானுன்னு தான் கேக்குறீங்க.. நான் என்ன பானுன்னு சொல்ல மாட்டுறீங்க..”
அவர் பரிதாபமாக தன் சரிபாதியை நோக்க,
“இப்படி பாத்தா என்ன அர்த்தம்.. நான் என்ன பானுன்னு சொல்லிட்டு அப்பறம், இப்படி பாருங்க என்னைய…” என்று கூறிக் கொண்டே ஹால்லிலேருந்து சமயலறைக்குச் சென்றார்.
இங்கு சேகர் “அப்படி என்ன தான் சொல்றா…” என்று ஐந்து நிமிடமாக யோசிக்க, ஒன்றும் தோன்றாமல் திரும்ப மனைவிடம் சென்று கேட்க,
பானு உடனே, “ஹா ஹா…” என்று சிரிக்க,
“என்ன ஆச்சு பானு.. ஏன் இப்போ சிரிக்கிற?”
“இவ்வளோ நேரம் இதையா யோசிச்சீங்க நீங்க?.. ஏன் உங்களுக்கு வேலை இல்லையா இப்போ?..”
“அதுலாம் இருக்கு.. நீ முதல்ல பதில் சொல்லு எனக்கு..”
“அப்போ இன்னும் நல்லா யோசிச்சி நீங்களே கண்டுபிடிங்க..”
“பானு…” என்று மறுபடியும் பாவமாகப் பார்க்க,
“இப்போ உங்க மண்டைக்குள்ள எலி ஓடுமே.. அது என்னனு தெரிஞ்சே ஆகணுமா?..”
“அப்போ நீங்க இன்னைக்கு நான் நாடகம் பாக்கும் போது இடையில நியூஸ் சேனல் மாத்த மாட்டேன்னு சொல்லுங்க..”
“அதுலாம் முடியாது..”
“அப்போ நானும் சொல்ல முடியாது..”
“அந்த சீரியலையே பாக்க முடியல.. இதுல நீ அதுல இடையில போடுற விளம்பரத்தையும் மாத்தக் கூடாது சொல்லுற.. நியாயமா பேசணும்..”
“அப்படி தான்.. சொல்லனுமா? வேணாமா?..”
“சரி சொல்லு என்னனு..”
“சி. பானுமதி தான்..”
“என்ன சி?..”
“நீங்க தான் என்ன பானு கேட்டீங்க அது தான் சொன்னேன்.. சி. பானுமதி னு.. புரியுதா இப்போ?.. உங்க கிட்ட ஒரு ஜோக் கூட அடிக்க முடியல.. சரியான தத்தி யா இருக்கீங்க.. எப்போதும் நியூஸையே பாத்துட்டு இருந்தா இப்படி தான்.. என்று அவரை வார,
“அவரை முறைத்துக் கொண்டே.. இதுக்கு தான் வாழக்கைலாம் இழுத்தியா.. நான் என்னமோ சீரியஸ் ஆஹ் இருக்கும் யோசிச்சேன்.. அவந்தி சொல்ற மாறி, வர வர நீ சீரியல் பாத்து ரொம்ப வாய்ப் பேசுற நீ…” என்றார்.
“அது கூட உங்களுக்கு தெரியல என்று வாரிவிட்டு, போய் வேலை எதுவும் இருந்தா பாருங்க.. எனக்கு வேலை நிறைய கடக்கு.. அப்பாடா இன்னைக்கு எந்த இடையூறும் இல்லாம நல்லா நாடகம் பாக்கலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டே தானே பேசுவது போல் கூறிவிட்டு சென்றார்.
சேகரிடம் ஒரு அழகான சிரிப்பு உதயமானது.. அப்படியே தன் வேலையை பார்க்கச் சென்றார்.
– – – –
அதிகாலையில் வீட்டிற்கு வந்து சேர்ந்த நந்தா, சிறிது நேரம் தூங்கிவிட்டு, இப்போது தன்னை ரெப்பிரேஷ் செய்து விட்டு, “ம்மா..ஆ பசிக்குது.. சாப்பிடுலாமா” என்று கேட்டுக்கொண்டே ஹாலில் வந்து அமர்ந்தான்.
அவன் தந்தை இவனை பார்த்துவிட்டு, ம்க்கும் என்று தொண்டையை கணைக்க, இவன் அதற்க்கு ஒன்றும் எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருக்க, உள்ளிருந்து கோமதி இவனுக்கு ஆட்டுக்கால் சூப்பை ஆவி பறக்க எடுத்து வந்து கையில் கொடுத்தார். இதைமுதல்ல குடி டா.. கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்புடலாம்.
சூப்பின் வாசனையை நுகர்ந்துக் கொண்டே, “ஹ்ம்ம்ம்..ம்ம்மா.. செமயா இருக்கு” என்று கூறி விட்டு தன் தந்தையை ஒரு பார்வை பார்த்து விட்டு, நிதானமாக பிருகத் தொடங்கினான்.
“இங்க ஒருத்தன் உக்காந்திருக்கேன், உனக்கு கண்ணு தெரியுதா.. இல்லையா..?” என்று மனைவிடம் எகிற,
“உங்களுக்கும் வேணுமாங்க?.. கொண்டு வரவா? என்று பவ்யமாக கேட்க,
“ஏத்தம் டி உனக்கு.. என்ன உம்மவன் வந்ததும் தைரியம் கூடிடிச்சா.. அவனுக்கு மட்டும் எடுத்து வந்து கொடுக்க தெரியுது.. இங்க மனுஷன் உக்காந்திருக்கறது தெரியல இல்ல..”
“அவன் சாப்பாடு கேட்டானா.. அதுனால எடுத்து வந்தேன்.. நீங்க இருக்குறத கவனிக்கலங்க அதான்.. தோ, இப்போ போயிடு உங்களுக்கும் எடுத்து வரேன்..”
“மனைவியை முறைத்துக் கொண்டே, என்னத்துக்கு துரை இவ்வளவு நாள் இல்லாம வீட்டுக்கு வந்திருக்காரு.. என்னத்த பண்ணிட்டு வந்திருக்காரு?..
“ஒன்னும் இல்லைங்கலே.. நான் தான் பாக்கணும் போல இருக்குனு வரச் சொன்னேன்..”
“நம்பாமல் மனைவியை பார்க்க, வேணும்னா அவன்கிட்ட பேசிக்கோங்க.. நான் உங்களுக்கு சூப் கொண்டாறேன்..”
மனைவி செல்வதை பார்த்து, இவளை என்று பல்லை கடித்துக் கொண்டே, மறுபடியும் ம்க்கும்.. ம்க்கும்.. என்று கணைக்க,
“ம்மா.. வரும் போது தண்ணியும் சேர்த்து கொண்டாங்க, உங்க புருஷனுக்கு.. ரொம்ப நேரமா இருமிக்கிட்டு இருக்காரு..”
“ஏன் தெரியாம.. எனக்கு நீங்க வச்ச பேரு உங்களுக்கு ஞாபகம் வருதான்னு நான் பாத்துட்டு இருந்தேன்.. பேர் சொல்லி கூப்பிட்டா தான் என்னனு கேக்கணும் எங்க டீச்சர் சொல்லிருக்காங்க…” என்றான் கூலாக,
அவனை முறைத்துக் கொண்டே, “உனக்கு இருக்குற… “என்று ஆரம்பிக்க
“வாடா நந்தா…நான் வயலுக்கு கிளம்பும் போது தூங்கிட்டு இருந்த.. அதான் வந்து பேசிக்கலாம்னு கிளம்பிட்டேன்.. எப்படி டா இருக்க” என்று கேட்டுக்கொண்டே ராஜா உள்ளே வர,
” வாங்க.. வாங்க.. அப்பா பெத்த ரத்தினமே.. நான் இருக்குறது இருக்கட்டும்.. உங்க அப்பா என்னைய முறைச்சிட்டே இருக்கார்.. நானே இப்போதான் ஊரு பக்கம் தலையை காட்டிருக்கேன்.. அதை முதல்ல என்னனு கேளு..”
“என்னப்பா..”
“பெரியவனே.. இவன்” என்று மறுபடியும் ஆரம்பிக்க,
அதற்குள் “இப்படி தான் கேப்பியா டா.. அதிருக்கட்டும்.. நீ இப்போ காலைலயே எங்க போயிடு வர?..”
“என்னடா புதுசா கேக்குற.. காலைல ஒரு தடவை வயல்ல சுத்தி பாத்திட்டு.. ஏதாது வேலை இருந்துச்சுன்னா, அதை என்னனு சொல்லிட்டு வருவேன் ஆளுங்களுக்கு” என்றான்.
“இவ்வளோ விளக்கம் தேவையில்லை.. காலைல வாக்கிங் மாறி வயலுக்கு போயிட்டு வர.. சரியா?..”
வீரபாண்டியன், “எதுக்கு இவன் இப்படி கேக்குறான்” என்று முறைப்புடன் பார்க்க,
“ஆமாம்டா.. ஏன் இப்படி கேக்குற?..”
“உங்க அப்பாவையும் கூட்டிட்டு போ நாளைலலிருந்து, கொழுப்பு நிறைய இருக்குனு சொல்லறார்.. உடம்புக்கும் ரொம்ப நல்லது…” என்று சீரியஸ் ஆக பேச,
“அப்படியாடா.. என்கிட்டே ஒன்னும் சொல்லலடா இதைப் பத்தி…”
“.என்னப்பா..என்கூட வாங்க நாளையிலிருந்து” என்று இவன் வேறு அவன் பங்கிற்கு பேச,
“அப்படினா.. நீயே ஒரு செக் அப் பண்ணிடேன் டா.. நீ என்னென்னமோ சொல்ற..”
“உங்க அப்பாக்கு நான் செக் பண்ணா ஓகேவான்னு கேட்டு சொல்லு..” என்றான் நக்கலாக,
“பெரியவனே.. அவன்தான் என்னமோ சொல்றானா.. நீயும் என்னடா அவன்ட கேட்டுட்டு இருக்க.. அதுலாம் எனக்கு ஒன்னும் இல்லடா.. அவன் வேணும்னே சொல்லறான்.. நீயும் நம்பிட்டு, அவன் பேச்சை கேட்டுட்டு இருக்க…” என்றார் ஆற்றாமையாக,
“ப்பா.. ஒரு தடவை செக் பண்ணிக்குறது நல்லது தான..அப்பறம் என்னப்பா..”
நந்தாவை முறைத்த படியே, “என்னப்பா நான் சொல்றத நீ நம்பலையா ப்பா ..”
“அவன்கிட்ட மட்டும் வார்த்தைக்கு வார்த்தை.. என்னப்பா, சரிப்பா னு பேசுறீங்க.. என்னைய மட்டும் கணைக்குறிங்க.. என்னடா அண்ணா இதுல்லாம், உன்னைய மட்டும் பெத்துட்டு என்னையெல்லாம் தவிட்டுக்கு வாங்கிவந்துட்டாரா.. கேட்டு சொல்லுடா..”
“ஏய்.. என்ன டா ரொம்ப துள்ளுற.. என் பேச்ச, என்னைக்காவது மதிச்சிருக்கியா நீ.. அவன் நான் சொல்லறதை எல்லாம் கேப்பான் டா…” என்று அவர் இவனிடம் எகிற,
“மதிக்குற மாறி பேசணும்” என்று முணுமுணுத்துவிட்டு, பின்பு “பெரியவனே பாத்துகோடா எவ்வளோ கோவப்படுறாரு .. இதை தான் நான் சொன்னேன்.. பாத்தியா சொன்னதுக்கு என்கிட்ட எகிறிட்டு வராரு..”
இவன்கிட்ட பேசிக்க சொன்ன தன் மனைவியை மனதிற்குள் வசைப்பாடிக்கொண்டே மகனை முறைத்தார். ” அப்போ நீயும் நான் சொல்றதை கேக்க மாட்டியா ராஜா..”
ஒரு நிமிடம் அமைதியாகி, “அப்பா நீங்க எங்களுக்கு ரொம்ப முக்கியம்.. ஒரு முறை செக் பணிக்கலாம்” என்றான் பொறுமையாக.
“அப்படியா ப்பா சொல்ற.. சரிப்பா..”
“எப்பா.. என்ன ஒரு காட்சி” என்று இருவரையும் பார்க்க,
“டேய்.. நீ அப்போ நாளைக்கு அவங்களை கூட்டிட்டு போயிட்டு இங்கவே செக் பண்ணிடு டா..”
“சரி டா.. அப்பா ரெடியா இருங்க.. நாளைக்கு போலாம்” என்று அவரைப் பார்த்து கண்ணடித்தான்.
“உன்னைய…” என்று திரும்ப ஆரம்பிக்க,
ஆனாலும் டா பெரியவனே, “நீ என்னை புல்லரிக்க வச்சிட்ட போ.. எப்படி டா இப்படி இருக்க” என்று பேச,
எல்லாரும் வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட்டுக் கொண்டே ஹாலிற்கு வந்தார் கோமதி.
“அதுவா.. மணியாகிடுச்சி அதனால உங்களுக்கு சாப்பாடு சாப்பிட சொல்லிடலாம்னு எடுத்து வரலைங்க..”
“சரி சரி.. வாங்க சாப்பிடலாம்..பசிக்குது.. ம்மா.. அப்பாக்கு இனிமே இனிப்பு, உப்புலாம் சாப்பாட்டுல நிறைய போட்டு குடுக்காதிங்க…” என்று சொல்லிக் கொண்டே எழுந்து சென்றான் நந்தா.
“ப்பா.. போங்க.. நான் கை, கால் கழுவிட்டு வரேன்..” ராஜா.
“ஏய்.. எங்கடி சின்னவன்.. ஐயா இன்னும் உறக்கத்துல இருந்து எழும்பலையா?..” மகனிடம் காட்ட முடியதாக கடுப்பை மனைவியிடம் காட்ட,
“இல்லைங்க.. நைட் படிச்சிட்டு லேட் ஆஹ் தான் படுத்தான். அதான் காலைல எழுப்பல…” என்றார் சமாளிப்பாக,
“இதை ஒன்னு சொல்லிடு எப்போக் கேட்டாலும்.. கார்த்தியை பாரு..வேலைக்கு போறான்.. அவன் வயசு தான இவனுக்கும்.. இவன் என்னமோ நான் கவர்மெண்ட் வேலைக்கு தான் போவேன்னு சொல்லிட்டு, படிக்குறேன்னு சொல்லி நல்லா கூத்தடிக்குறான்.. ஒருநாள் இருக்கு அவனுக்கு…” என்று திட்டிக்கொண்டே சாப்பாட்டறைக்கு சென்றார்.
இவர் சென்றவுடன், நந்தாவிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்த காவியா.. சாப்பிட உக்காருங்க தம்பி என்று கூறிவிட்டு சென்றாள்.
அனைவருக்கும் கோமதி பரிமாற, காவியா உதவிச் செய்ய, “அண்ணி வாங்க, எங்க கூட ஜாயின் பண்ணிக்கோங்க…”
இது என்ன பழக்கம் என்பது போல் மகனைப் பார்க்க, அவன் இவரை திரும்பியும் பார்க்காமல் “என்ன அண்ணி, கொழுந்தனார் கேக்குறேன்.. எனக்கு பதில் சொல்லாம உங்க மாமனாரை பாக்குறீங்க” என்று வேறு கேட்க,
“நான் அத்தை கூட அப்பறம் சாப்ட்டுக்குறேன்.. நீங்க சாப்பிடுங்க என்றாள்.
“கோமதி.. என்ன இது…” என்று பேச வர,
என்ன ம்மா.. அப்பாக்கு உப்புலாம் நிறைய குடுக்க கூடாது.. இப்போ தானே சொன்னேன்.. அப்பாவே கேக்குறாங்க பாருங்க..போயிட்டு வேற எடுத்து வாங்க என்றான்.
இவன் நம்மள நிம்மதியா சாப்பிடக்கூட விடமாட்டான் போல என்று எண்ணிக் கொண்டே, அவனை முறைத்து விட்டு தட்டில் இருந்ததில் கவனம் வைத்தார்.
“யாருகிட்ட.. ஒன்னும் பேசிட கூடாது, உடனே மூக்கை நுழைக்கணும்” என்று மனதில் நினைத்துக் கொண்டே, உண்ண ஆரம்பித்தான்.
“ம்மா..ஆஆ காபி” என்று கத்திகொண்டே சுரேஷ் வர,
“வாரான் பாரு..இதான் காபி குடிக்குற நேரமா டா..” என்று கடுகடுக்க,
“அய்யயோ விருமாண்டி.. சிக்கிட்டடா சுரேஷு… ஜோலி முடிஞ்சது” என்று திருத்திரு வென முழிக்க,
“என்னடா.. காபி வேணும்னு கேட்டுட்டு அங்கேயே நிக்குற.. உனக்கு கையில எடுத்து வந்து குடுக்கணுமோ.. போடா, கிட்சேன் போயிட்டு நீயே போட்டுக்கோ.. சாப்புடுற நேரத்துக்கு காபி கேக்குற.. என்னப்பா, நான் சொல்றது சரிதானே என்று வேறு கேட்டு வைக்க,
“அதான் நீயே சொல்லிட்டியே..” என்று பொரும்ம,
“அப்பறம் என்னடா, அதான் அப்பாவே சொல்லிட்டாரே, இன்னும் என்ன பராக்க பாக்குற.. போடா.”
“தெய்வமே.. தெய்வமே.. நன்றி சொல்வேன்.. தெய்வமே.. என்று மெதுவாக பாடிக் கொண்டே, கிட்சேன் சென்றான்.
அண்ணி.. அண்ணா இன்னும் வரலை.. என்ன பண்ணுறான்னு பாருங்க.. சாப்பிட கூப்பிட்டு வாங்க என்று அனுப்பினான்.
“உங்கிட்ட மனுஷன் பேசுவானா.. நான் கடைக்கு கிளம்புறேன்” என்று சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றார்.
ரூமிற்குள் என்னங்க என்று அழைத்துக் கொண்டே உள்ளே நுழைய, என்னடி அதிசயமா இருக்கு.. ரூமுக்கு வந்திருக்க.. உங்க அத்தை முந்தானையை விட்டுட்டு இங்க வந்திருக்க..என்ன சங்கதி என்று பின்னாலிருந்து அணைத்துக் கொண்டே கேட்க,
“ம்க்கும்.. ஒரு சங்கதியும் இல்ல.. விடுங்க என்னை.. உங்களை சாப்பிட கூப்பிட வந்தேன்.. நந்தா தம்பி வர சொன்னாங்க..”
“அதானப் பாத்தேன்.. சரி வந்ததுக்கு கொஞ்சம் அறுவடை பண்ணிக்குறேன்” என்று அவளின் இதழை நோக்கி குனிய,
“பண்ணையாருக்கு எப்பப் பாரு இதே நினைப்பு.. ஒழுங்கா வாங்க” என்று அவனிடம் பழிப்பு காட்டிவிட்டு வெளியே செல்ல,
“ஒய்.. நீ எந்த அர்த்தத்துல சொல்லுற.. சொல்லிட்டு போடி.. என்று அவளை நெருங்க,
“நீங்க எப்படி எடுத்துக்கறிங்களோ அப்படி..” என்று பேசிக்கொண்டே திரும்ப,
“அப்படியே அவளின் வாயை அடைத்தான் தன் இதழால்.. சிறிது நேரம் கழித்து அவளை பிரிந்து, பண்ணையார் டி.. எப்படியும் அறுவடை பண்ணிடுவேன்..”
அவள் முகம் சிவக்க, “பேச்சை பாரு” என்று முணுமுணுத்து, “வாங்க சீக்கரம்” என்று அவளை சரிசெய்துக் கொண்டே கிளம்பினாள்.
“என்னண்ணி அண்ணா வரல?…”
“தோ.. தோ.. வராங்க” என்று சமாளித்துக் கொண்டே கிட்சேன் சென்றாள்.
அங்கே, ம்மா.. போதும்.. ப்ளீஸ்.. எனக்கு காபியே வேணாம்.. காபினு கேட்டுட்டு வந்தது ஒரு குத்தமா.. வச்சி செய்யுறீங்க என்னை.. இந்த அண்ணா இதுக்கு என்னை காப்பாத்தி விடாமயே இருந்திருக்கலாம். இதுக்கு விருமாண்டியே பரவால்ல.. பேசிட்டு விற்றுப்பாரு.. நீங்க எனக்கு கால் மணி நேரமா சொல்லித்தறிங்க.. இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்ல.. என்று புலம்ப,
“என்னத்தை.. பாவம் சுரேஷ் விடுங்க..போதும்”
“இவனை என்னத்த சொல்றது.. இவன் இன்னைக்கு மாட்டிருந்த, நானும் சேர்ந்து வாங்கிருக்கணும் இவங்க அப்பாட்ட.. எதோ தப்பிச்சிட்டான் நந்தா பேசுனதால.. அதான் நான் இவனை இப்படி பண்றேன்” என்று பேச,
இங்கு கடைக்கு கிளம்பி வீரபாண்டி வெளியே வர, நந்தா டைன்னிங் ஹாலில் இருப்பதை பார்த்து விட்டு, இவனிருக்க காபி கூட கேக்க முடியாது என்று நினைத்து பெருமூச்சினை வெளியேற்றி கிளம்பிவிட்டார்.