வீட்ல யாரும் இல்லையா என்று கேட்டுக் கொண்டே ஆர்ப்பாட்டமாக தனது அத்தையின் வீட்டினுள் நுழைந்தனர் நந்தா மற்றும் சுரேஷ்.
ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சி பெட்டியை பார்த்துக் கொண்டிருந்த அவரின் மாமா வேலன், இவர்கள் வருவதை பார்த்து விட்டு வாங்க வாங்க மாப்பிள்ளைங்களா.. பெரிய மாப்பிள்ளை எங்க? என்று கேட்க,
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு திரும்பி தன் மாமனைப் பார்க்க, “என்னங்கடா.. என்ன என்னையே பாக்குறீங்க?”
அதற்குள் சமையலறையிலிருந்து வெளியே வந்த புவனா, வாங்கடா.. எங்க மத்தவங்க எல்லாம் என்று கேட்க,
திரும்பி இருவரும் ஒருவர் அடுத்தவரைப் பார்க்க, டேய் என்ன டா .. வெளியே இருக்காங்களா என்று இவர்களிடம் வினவிக் கொண்டே வெளியே செல்லப் பார்க்க, டேய் தம்பி வா நாம கிளம்பலாம் என்றான் சத்தமாக,
வேலன், “ஏன் மாப்பிளை என்ன ஆச்சு இப்போ ?”
இதைக்கேட்டு அவர்களின் பக்கம் வந்த புவனா, என்ன டா நந்தா? என்று அவரும் தன் பங்கிற்கு கேட்க,
“பின்ன என்ன நீங்க ரெண்டு பெரும்.. இவ்வளோ நாள் இல்லாம இப்போ தான் ஊருக்கு வந்திருக்கேன்.. என்னைய விசாரிக்காம, மாமா என்னனா, பெரியவன் எங்கன்னு கேக்குறாரு.. நீங்களும் மத்தவங்க எங்கன்னு கேக்குறீங்க.. அப்போ எதுக்கு நான் இங்க வரணும்.. இவனையும் நீங்க பார்க்கவே இல்லை..”
“ஆமாம் டா அண்ணா.. பேசாம நான் முதல்ல பிறந்திருக்கலாம் போல..”
“சரி சரி.. நீ ஒன்னும் பீல் பண்ணாத.. அண்ணன் இருக்கேன் உனக்கு..”
“அடேய்.. நீ எதுக்கு இவ்வளோ நாள் இல்லாம ஊருக்கு வந்திருக்கனு எனக்கு தெரியும்.. அதுனால உனக்கு இந்த வரவேற்பு போதும் என்று நந்தாவின் அருகில் சென்று புவனா சொல்ல,
“அப்போ நீ தான் டா எங்களுக்கு முதல் பையன் எப்பயும்.. கார்த்தி கூட உனக்கு அடுத்தது தான் என்று சொன்னது எல்லாம் பொய்யா.. கோபால்.. ?” என்று வெம்பிக் கேட்க,
“என்னடா பொய்..” என்று கெடுக்க கொண்டே வந்தார் கோமதி..
இவனிடம் பேசுவதை விட்டுவிட்டு, வாங்க அண்ணி, வாம்மா காவியா, வாடா ராஜா என்று வரவேற்க,
“பாத்திங்களா மாமா, என்னைய அப்படியே கண்டுக்காம, அங்க போயாச்சு.. நீங்க வாங்க மாமா.. நாம போயிட்டு டிவி பாக்கலாம். “
“இருடா மாப்பிள்ளை.. வாங்கனு நான் கூப்பிடனும்ல..”
“அத்தை வேற நீங்க வேறயா மாமா.. அங்க பாருங்க அப்படியே மகளிர் அணி எல்லாம் ஒன்னு கூடிடுச்சி.. நீங்க உங்க பெரிய மாப்பிள்ளையை தானே கேட்டீங்க.. நீங்களும் போயிட்டு அவனோட பேசுங்க.. நான் போறேன்..”
“இருடா.. சும்மா சும்மா இதையே சொல்லிக்கிட்டு..”
“வா பெரியவா.. வாம்மா தங்கச்சி.. வாடா கவியாம்மா.. ” என்று இவர் வரவேற்க,
பரஸ்பர நலம் விசாரிப்புக்கு அடுத்து, அண்ணனை இங்க சாப்பிட வர சொல்லிட்டேன் அண்ணி..
“சரிங்க அத்தாச்சி.. அதுக்கு தான் உங்களை பேச சொன்னேன் அவர்கிட்ட..”
“சரி வாங்க.. நாம உள்ள போகலாம்.. வா காவியா..”
“போலாம் வாங்க..”
“ஆண்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே நாடு நடப்பை பேச என்று நேரம் சென்றது.
கோமதி, “அத்தாச்சி.. நீங்க சொல்றது போல அவன்ட கேக்குறீங்களா.. நான் சொன்னா ஏதாச்சும் சொல்லுவான்..”
“இவன் முதல்ல.. முடிவு சொல்லட்டும் அண்ணி..இப்போ சொன்னா, நல்ல நேரம் அப்படினு ஏதாது இழுப்பாரு.. ஒரு ரெண்டு நாளு கழிச்சி கூட சொல்லிக்கலாம்..”
புவனா, “நீ என்ன காவிய சொல்லற..” என்று அவளின் அபிப்ராயம் கேட்க,
“அவள் எனக்கு அந்த பொண்ணை பாத்ததும் பிடிச்சிட்டு ம்மா.. நீங்க என்கிட்டயும் இப்படி கேக்குறது.. ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றாள் நெகிழ்ச்சியாக.
“இந்த வீட்டின் மூத்த மருமகள் இல்லையா நீ..”
“எனக்கு அந்த பதவில்லாம் வேணாம் ம்மா.. வீட்ல நானும் அப்பாவும் மட்டும் தானே.. இப்போ இங்க இப்படி உறவுகளோடு இருக்குறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இதுல அந்த பொண்ணும் வந்து சேருறதுல எனக்கு சந்தோசம் தான்.”
“நல்ல பொண்ணு போ..”
“என்ன கூட்டணி இங்க ஆரம்பிச்சதும்.. அங்க நாங்க இருக்கிறதே மறந்துடிச்சா.. காபி, தண்ணி எதுவும் இல்லையா என்று சுரேஷ் கேட்க,
கோமதி, “தண்ணி எடுத்து போயிட்டு யாருக்கும் வேணுமான்னு கேட்டு குடு போ..”
“கேக்க வந்த என்னையே வேலை வாங்குவீங்களா..”
“நீ தானே டா கேட்ட..”
“விடுங்க அண்ணி.. எல்லாரும் சாப்பிடலாம் டா சின்னவனே.. நீ வர சொல்லு..”
கோமதி, “எங்கடா உங்க அப்பா.. இன்னும் வரலை..”
“என்ன ஒரு பாசம் புருஷன் மேல..” என்று பேசிக்கொண்டே திரும்ப,
வேலன், “வாங்க மச்சான்.. சௌக்கியமா.. என்று நலன் விசாரிக்க,
“வரேன் மாப்பிள்ளை.. நல்ல இருக்கீங்களா.. என்று அவரும் பேசிக்கொண்டே சோபாவில் அமர்ந்தார்.
புவனா ஒரு சொம்பில் தண்ணி எடுத்து வந்து, வாங்க அண்ணா என்று அழைத்துக் கொண்டே தண்ணீரை கொடுக்க,
அவரும் வாங்கி கொண்டார்.
“மாமா.. பாத்துக்கோங்க உங்க மனைவி எப்படி அவங்க அண்ணனை மட்டும் கவனிக்குறாங்கனு..” என்று நந்தா மெதுவாக பேச,
“ம்ம்.. கவனிக்கிறேன்.. “
“இப்போ பாருங்களேன்.. எங்க அப்பா என்னைய ஒரு பார்வைப் பார்ப்பார்..”
அது போல், அவரும் அவனை பார்த்து விட்டு திரும்ப,
“எப்படி மாப்பிளை சரியாய் சொல்ற,.”
“அதுவா ஓரக் கண்ணால இப்போ என்னையை பார்த்தார்.. நான் என்ன உங்ககிட்ட பேசுறேன்னு.. அது தான்..”
“நீ கொஞ்சம் அடங்கி இரு மாப்பிள்ளை.. உனக்கு உங்க அப்பாவால காரியம் நடக்கணும்..”
“அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே.. நீங்களே பாத்துக்கோங்க இதுலாம்..”
“என்னடா சொல்ற..”
“அதுதான் சொல்லிட்டனே.. உங்களால முடியும் மாமா..”
“அப்படினு சொல்ற.. சரி விடு பாத்துக்கலாம்.. அப்போ இப்போவே பேசவா? “
“வேணாம் மாமா.. நான் வேற உங்ககிட்ட ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கேன்.. இப்போ நீங்க பேச்சை ஆரம்பிச்சீங்கனா.. அப்பறம் என் மேல சந்தேகம் வந்தாலும் வரும்.”
“ரொம்ப யோசிக்கற மாப்பிள்ளை..”
“கண்டிப்பா யோசிக்கணும் மாமா.. அதுவும் எங்க அப்பாகிட்ட..எப்போ எப்படி மாத்தி பேசுவருனு கணிக்கவே முடியாது..”
இங்கே இவர்கள் பேசக் கொண்டிருக்க, அங்கே பெரிய பையனும், அப்பாவும் இன்றைய நாளின் வயல் வேலைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
புவனா வந்து உண்ண அழைக்க, அனைவரும் உணவருந்த சென்றனர்.
அனைவரும் உண்டுவிட்டு மறுபடியும் ஹாலிற்கு வந்தமர, வீரபாண்டியன் “அப்பொழுது கலை வீட்லயும் இருந்தா நல்லா இருந்திருக்கும் என்றார் அறிவிப்பாக..”
யாரும் எதுவும் கூறாமல் அவரை பார்க்க, “விடுங்க மச்சான்.. நாளைக்கு நந்தாக்கு ஒரு நல்லது வீட்ல நடந்துச்சுனா எல்லாம் சரியாய் போகும்..”
“நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான் மாப்பிளை..”
“ஏதும் வரன் வந்துச்சா மச்சான் நந்தாக்கு” என்று பேச்சை துவங்க,
நந்தா தான் மாமனைப் பார்க்க.. அவர் இவனைப் பார்த்துவிட்டு, தான் மச்சானின் பதிலை எதிர்பார்த்து அவர பார்க்க,
வரன் எல்லாம் நெறைய வருதுங்க மாப்பிளை.. எனக்கு நல்ல இடம்னு தோன்றத எடுத்து ஜாதகம் பார்த்தா, அது இவன் ஜாதகத்தோட பொருந்த மாட்டுது. ஒரு டாக்டர் வரன் வந்துச்சி, நல்ல இடம், ஜாதகம் கூட ஓரளவுக்கு ஒத்துப் போச்சி தான்.. பேசி முடிச்சிடலாம்னு பாத்தா.. கடைசில அந்த பொண்ணுக்கு கல்லூரி படிக்கும் போதே ஒரு பையன விரும்பிச்சான்.. அந்த பையன தான் நான் கட்டிக்க போறேன்னு சொல்லிடுச்சாம்.. அவங்க வீட்ல இருந்து சொல்லி விட்டாங்க..
“ஓஹ்.. அதான் மறுபடி பேசலையா.. நான் சொன்னேன்ல அத்தாச்சி.. அது இந்த டாக்டர் பொண்ணு தான்..” என்று கூறினார்.
“வேற வரன் எதுவும் போயிட்டு ஜாதகம் பாத்திங்களா..”
“இந்த மாமா என்ன துருவிட்டே இருக்காங்க அவருகிட்ட, அவரே சும்மா இருந்தாலும் இவங்களே அவரை ஏத்திவிடுறாங்க..” என்று மனதினுள் முணுமுணுத்தான்.
“இவனுக்கு நான் டாக்டர் பொண்ணு பாக்கலாம்னா, அவன் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்னு நிக்குறான்.. அவன் அஞ்சாவது வரைக்கும் இங்க இருந்து தான பள்ளிக்கூடம் போனான்.. நீங்க தானே பாத்துக்கிட்டீங்க.. நீங்களே என்னனு கேளுங்க..”
“சரிங்க மச்சான்.. நான் கேக்குறேன் அவன்கிட்ட.. அதுக்கு முன்ன நான் உங்க கிட்ட ஒன்னு கேக்குறேன்.. பதில் சொல்லுங்க..”
“இது என்னங்க மாப்பிள்ளை இப்படி கேக்குறீங்க.. என்னனு சொல்லுங்க..”
“ஒரு வரன் வந்திருக்கு.. நந்தா ஜாதகத்துக்கு பொருந்தி வருது.. என் தங்கச்சி வீடு வழில சொந்தம் வருது.. பொண்ணு டாக்டர் இல்ல..
“நீங்க என்ன சொல்லறீங்க மச்சான்.. உங்களுக்கு பிடிச்சா மேற்கொண்டு பேசிப் பார்க்கலாம்.”
வீரபாண்டியன் சிறிது நேரம் யோசித்துக் கொண்டே அவனை பார்க்க, அவன் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் இருக்க, “சரிங்க மாப்பிள்ளை.. நீங்க சொல்லி நான் செய்யாம விட்டேனா.. அது நல்ல இருக்காது மாப்பிள்ளை.. நீங்க நல்ல இடமாத் தான் பாத்திருப்பீங்க.. அவன் கிட்ட பேசிக்கோங்க. அவன் தான் தாம்தூம்னு குதிப்பான்.. அவன் என்ன சொல்லுறான்னு கேளுடா பெரியவனே..”
“ராஜா தான் தம்பியை பார்த்து .. அப்பா கிட்ட சொல்லுடா என்னனு..”
“ஏன் அவரே என்கிட்ட சொல்லமாட்டாராமா..”
“நந்தா.. பதில் சொல்லு.. அப்பறம் பேசிக்கலாம்..”
“பொண்ணு போட்டோ காமிக்களை, என்ன பண்ணுறாங்கனு சொல்லல.. அப்பறம் எப்படி மாமா நான் சொல்றது” என்றான் பாவமாக,
“நல்லா வருவடா மாப்பிள்ளை நீ.. என்று எண்ணிக் கொண்டு, என்னோட போன்ல இருக்கு போட்டோ.. எடுத்து வரேன்..” என்று சொல்லிவிட்டு உள்ளேச் சென்று எடுத்து வந்து அவனிடம் காமிக்க,
“முதல்ல எங்க அப்பாகிட்ட பொண்ணை காமிச்சு ஓகே வா னு கேளுங்க மாமா..”
“அடேய்.. இது உலகமகா நடிப்புடா சாமி.. எங்கே சிரித்து விடுவோமோ” என்று அவனை முறைத்துக் கொண்டே தான் மச்சானிடம் புகைப்படத்தை காட்டினார்.
“அவர் பார்த்து விட்டு.. சரிங்க மாப்பிள்ளை.. நீங்களே பொண்ணு வீட்ல பேசிட்டு என்னனு சொல்லுங்க.. மேற்கொண்டு நல்ல நேரம் பாத்துட்டு அப்பறம் பேசிக்கலாம்.. இவன் கிட்டயும் ஒரு நாலு முறை திரும்ப கேட்டுக்கோங்க..”
“சரிங்க மச்சான்.. பேசிட்டு சொல்றேன்.. பொண்ண பத்தின விவரம்..” என்று ஆரம்பிக்க,
அவருக்கு தனது போனில் அழைப்பு வர, நீங்க முதல்ல பேசுங்க மாப்பிள்ளை.. அவங்க ஒத்து வந்தா, நாம திரும்ப பொருத்தம் பார்த்துட்டு அடுத்து பேசிக்கலாம்.. என்று சொல்லி விட்டு போனை எடுக்க,
அங்கு போனில், என்ன அண்ணா எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல, என்னைய அப்படியே தண்ணி தெளிச்சு விட்டுட்டியா நீ.. என்று கலையரசி கேட்க,
“என்ன பேச்சு மா பேசுற..”
“பின்ன வேற எப்படி பேச சொல்ற என்னை.. உன் வீட்ல உள்ள எல்லாரோடும் உன் தங்கச்சி வீட்டுக்கு உறவாட போயிருக்கல்ல.. வேற எப்படி சொல்லணும்..”
“நீயும் என் தங்கச்சி தான் கலை..இப்படி லாம் பேசாதம்மா..”
“வெறும் வாய் வார்த்தைக்கு மட்டும் தான் நான் உனக்கு தங்கச்சி.. நீ உண்மையாவே தங்கச்சியா நினச்சினா, என் பொண்ணை உன் பையனுக்கு பேசிருப்ப..”
“கலை..” என்று பேச வர,
“நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. நீங்க மட்டும் நல்ல சந்தோசமா இருங்க..” என்று போனை வைத்துவிட்டார்.
அவர் பேசுவதை பார்த்த வீட்டினர்,
புவனா, “அண்ணா என்னனா.. கலை ஆஹ் பேசுனா?”
கோமதி,” என்னங்க..”
மற்றவர்கள் எல்லாரும் அவரை பார்க்க, சரி.. நான் ஓரெட்டு கலை வீட்டுக்கு போயிட்டு வந்திருறேன்.. நீங்க எல்லாம் வீட்டுக்கு கிளம்புங்க.. நான் வரேன் என்று மற்றவர்களுக்கு பேச இடம் கொடுக்காமல் அவசரமாக சென்று விட்டார்.
நந்தா ஒன்றும் கூறாமல் கோவமாக சென்று இருக்கையில் அமர,
எதோ இப்போ தான் கொஞ்சம் இறங்கி வந்தாரு.. அதுக்குள்ள இப்படியா ஆகணும்.. என்னமோ போங்க அத்தாச்சி.. என்று கோமதி புலம்ப,
அதுலாம் ஒன்னும் இல்லை அண்ணி.. வாங்க நாம உள்ள போலாம்.. என்று அழைத்து சென்றார்.
சிறிது நேரம் அமைதியாக கழிய,
ராஜா,” கிளம்பலாமா டா நந்தா..”
நந்தா, “நான் இங்கயே இன்னைக்கு தங்க போறேன்.. நீங்க கிளம்புங்க..”
“ஹ்ம்.. சரி .. சுரேஷ் போயிட்டு அம்மாவையும், காவியாவையும் போயிட்டு கூட்டிட்டு வா..”
அவர்கள் அனைவரையும் வழியனுப்பி விட்டு, இவர்கள் மூவரும் வீட்டிற்குள் வந்தனர்.
நந்தாவின் முகம் இறுக்கமாகவே இருக்க, புவனா.. தன் கணவரிடம் கண்ணைக் காட்ட,
அவரும் தலையை ஆட்டிவிட்டு அவனின் தோலில் கை வைக்க, ஒன்னும் இல்ல மாமா.. விடுங்க..
“இந்த அத்தை என்னத்த இழுத்து வைக்க போகுதுனு தெரியல.. அது தான் யோசிச்சேன்..”
“பாத்துக்கலாம் நந்தா..” புவனா.
“எப்படி அத்தை.. உனக்கு இப்படி ஒரு தங்கச்சி .. என் வாழ்க்கைல இவங்களால இன்னும் என்ன இடைஞ்சல் வரப்போதுனு தெரியல..”
“விடு டா மாப்பிள்ளை.. உன் காதல் கதை சொல்லு.. அப்போ தான் நான் பொண்ணு வீட்டுல பேசுவேன்..”
“உடனே இவன் முகத்தில் ஒரு சிரிப்பு.. யாரு சொன்னா நான் காதலிக்குறேன்னு ..”
“அடேய்.. நீ தானடா.. இந்த அட்ரஸ் குடுத்து பொண்ணு வீடு பாருங்கன்னு சொன்ன.. இப்ப இப்படி சொல்ற..”
“அப்படி தான் சொன்னேன்.. அதுக்கென்ன மாமா..”
“ஆனா ஒன்னுடா மாப்பிள்ளை.. உனக்கும் கொஞ்சம் அதிஷ்டம் இருக்கு போல டா..”
“எப்படி சொல்றிங்க..”
“பின்ன அந்த பொண்ணு வீட்டை விசாரிச்சப்போ, எப்படியோ ஒரு வகைல என் தங்கச்சிக்கு சொந்ததுல வந்திருக்கு.. அவங்களும் மாப்பிள்ளை பாக்குறாங்க..அதுனால நீ தப்பிச்ச மாப்பிள்ளை..”
“சரி அதுலாம் விடு.. அந்த பொண்ணை எப்படி தெரியும்னு சொல்லு முதல்ல..”
“அதுலாம் அவகிட்ட தான் சொல்லுவேன்.. உங்களுக்குலாம் நோ..”
“சரி அவங்க வீட்டுல என்ன சொன்னாங்க..அத்தை முதல்ல சொல்லுங்க..”
“அது தான் உனக்கு போன்லயே சொன்னானே.. அப்பறம் என்ன டா..”
“திரும்ப சொல்லுங்க..பரவால்லை..”
அவனை முறைத்து விட்டு, ” உன் போட்டோ, ஜாதகம் எல்லாம் குடுத்தாச்சி, உங்க மாமாவோட தங்கச்சி மூலமா..அவ அவங்க சொந்தம் யார்கிட்டயோ சொல்லி பேசிருக்கா.. அவங்க பொண்ணு கிட்ட பேசிட்டு சொல்லுறேன் சொல்லிருக்காங்க.. பேசி ரெண்டு நாள் தான் ஆகிருக்கு.. அதுனால நீ கொஞ்சம் அமைதியா இரு.. அவங்க சொல்லட்டும்..”
“சரி பொண்ணு போட்டோ எனக்கு காமிங்க..”
“அடிங்க.. உனக்கு அனுப்புனேன்ல.. அப்பறம் என்ன டா திரும்ப..”
“ஒரு மாதிரியா தான் மாப்பிள்ளை இருக்க, கொஞ்ச நாள் காத்திரு, சீக்கரம் கல்யாணம் பண்ணிக்கலாம்..”
“என்ன மாமா இப்படி சொல்லுறீங்க.. இந்நேரம் கல்யாணம் பேசி முடிக்காம காத்திருக்க சொல்லுறீங்க.. பையனுக்கு வயசாகுதுனு யோசிக்க வேணாம்.. ஒன்னும் தெரியல உங்களுக்கு..”
“பேசுடா மாப்பிள்ளை நீ பேசு..”
“பேசுறேன் பேசுறேன்.. பேசத் தான் போறேன்..”
“யாரு கிட்ட மாப்புள..”
“என் மாமனார் கிட்ட தான் பேசலாம்னு இருக்கேன்..”
“கொஞ்சம் பொறுமை மாப்பிள்ளை.. அவங்க சொல்லட்டும்..”
“அடப்போங்க மாமா.. ரெண்டு நாளாச்சு.. இன்னும் நமக்கு பேசலையே..”
“ரெண்டு நாள் தான் ஆகிருக்கு டா மாப்பிளை.. அவங்க பொருத்தம் பாத்துட்டு பேச வேணாம்.. நீ ரொம்ப அவரப்படுற..”
“உங்களுக்கு தான் மாமா புரியல என் நிலைமை.. அவளை எப்படி கண்டுபிடிக்குறதுனு தெரியாம, நாலு வருஷம் தேடிருக்கேன்.. எங்க இருக்கானு தெரியாம, அவளுக்கு வேறுயாரையும் பிடிச்சிருக்குமா, இந்நேரம் கல்யாணம் முடிஞ்சிருக்குமோ அப்படினு தினமும் யோசிச்சி.. அப்படி ஏதாது இருந்தா என் வாழ்க்கைல அடுத்து என்னனு தெரியாம இப்படி பல இரவுகள் கடந்திருக்கு மாமா.. இப்போ கடவுளே மனசு வந்து, அவளை என் கண்ணுல காட்டிருக்காரு.. அதனால நான் இந்த முறை அவளை மிஸ் பண்ண மாட்டேன்..”
அவர் இவனையே பார்க்க..
“என்ன மாமா..”
புவனா, “என்னடா நந்தா இப்படி பேசுற.. எப்படி டா தெரியும் அந்த பொண்ணை..”
இவன் பதில் பேசாது அவர்களை பார்க்க,
“சொல்லுடா கேக்குறாள..”
“அதுலாம் கேக்காதீங்க.. அவளை எனக்கு பிடிக்கும்.. அவளை மட்டும் தான் பிடிக்கும்.. அவளோட ஞாபகமா என்கிட்ட இருந்தது அவளோட இந்த போட்டோ மட்டும் தான்.. அவளைத் தேடும் போது இது மட்டும் தான் கிடைச்சுது.. அவனின் போனின் உள்ள அவளது புகைப்படத்தைக் காட்டினான்..”
அவர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து விட்டு.. “என்னடா சின்ன புள்ளையா இருக்கா இதுல..”, புவனா.
“அத்தை…ஐ, அது அவ காலேஜ் படிக்கும் போது.. சரி போதும் போதும்.. ரெண்டு பேரும் எழுந்திரிங்க .. நாளைக்கு என் மாமனார்கிட்ட பேசணும்.. வாங்க வாங்க.. எல்லாம் போயிட்டு படுங்க..”
“நீ ஒரு முடிவோட தான் இருக்க.. ஹ்ம்ம்.. நல்லதே நடக்கும்.. வா புவனா நாம படுக்கும்..”