இந்த பள்ளியில் அழுத கண்களோடு தன் மாற்றுச் சான்றிதழை வாங்கிச் சென்ற நாட்கள் கண்முன்னே வர, அதனுடன் மறக்க நினைத்த நினைவுகளும் மனதை வந்து தட்டியது.
Advertisement
“அடியே! என்னாச்சுடி உனக்கு? டாக்டர் வரதுக்குள்ள நம்ம எல்லாம் ரெடி பண்ணி வைக்கணும்டி,” என்றாள் அருகிலிருந்தவள்.
Advertisement
“ஒண்ணுமில்லடி… ஒன்பதாவது வரை நா இங்கதான் படிச்சேன். அந்த ஞாபகம்தான்,” என்றாள்.
“ஓ… அப்ப இன்னொருத்தர் ஞாபகமும் வந்திருக்குமே!” என்ற தோழியை முறைத்தாள்.
“வாயை மூடிட்டு வாடி,” என்று சொல்லிவிட்டு இருவரும் தலைமை ஆசிரியரைச் சந்திக்கச் சென்றனர்.
“உள்ள வரலாமா சார்?” என்று வேல்விழி கேட்க,
“வாங்க சிஸ்டர்… உங்களுக்காகத்தான் காத்துட்டு இருக்கோம். டீச்சர்ஸ் எல்லாம் மாணவர்களை ரெடி பண்ணிட்டு இருக்காங்க,” என்றார் தலைமை ஆசிரியர்.
“தேங்க்யூ சார்,” என்றாள் அம்சவள்ளி.
சின்ன சிரிப்புடன் தலையசைத்தார் அவர்.
அதே நேரம், ஆங்கில ஆசிரியர்,
“மே ஐ கம் இன் சார்?” என்று கேட்க,
“வாங்க டீச்சர்,” என்ற தலைமை ஆசிரியர், செவிலியர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.
“ஹலோ சிஸ்டர்,” என்ற ஆசிரியர், வேல்விழியை நெற்றி சுருக்கிப் பார்த்தார்.
“நீங்க…” என்று நிறுத்த,
“வேல்விழி டீச்சர்…” என்றதும்,
“வேல்விழி… நீதானா!” என்று சந்தோஷத்தில் கூச்சலிட்டார்.
“ஆமாம் டீச்சர்… அன்னைக்கு நா டிசி வாங்கிட்டு அழுதப்போ, நீங்க சொன்ன வார்த்தைதான்… என்னை இந்தளவுக்கு வர உத்வேகம் கொடுத்தது,” என்றாள்.
“இவங்களை உங்களுக்கு தெரியுமா டீச்சர்?” என்றார் தலைமை ஆசிரியர்.
“தெரியும் சார். வேல்விழி நம்ம ஸ்கூல்லதான் நைந்த் வரை படிச்சா. சிலபல காரணங்களால் இந்த ஸ்கூலை விட்டுப் போக வேண்டிய நிலை. கிட்டத்தட்ட ரொம்ப வருஷம் கழிச்சு இப்பதான் பாக்குறேன்,” என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
“ஓகே… டீச்சர், நீங்களே இவங்களுக்கு என்ன தேவையோ பாத்துக்கோங்க. ஊர் தலைவரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு,” என்றார்.
“ஓகே சார்,” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.
புங்க மரத்தின் நிழல் பரந்த இடத்தில் நாலைந்து டேபிள்களைப் போட்டனர்.
வேனில் வந்த மருந்து, மாத்திரைகளை ஒரு டேபிளில் அடுக்கி வைத்தனர்.
கொஞ்ச நேரத்தில் தன் பைக்கில் டாக்டரும் வந்து சேர்ந்தார்.
சில பல பேச்சுகள் முடிந்ததும்,
ஒன்று முதல் மூன்று வரை இருந்த பிள்ளைகளை வேல்விழி பார்க்க,
நான்கு, ஐந்து வகுப்பு மாணவர்களை அம்சவள்ளி பார்த்தாள்.
அவர்கள் எழுதி கொடுத்த சீட்டை டாக்டரிடம் காட்டி, குழந்தைகள் மருந்து வாங்கிச் சென்றனர்.
மதியத்திற்கு மேல் ஆறு முதல் பத்து வரை இருந்த மாணவர்களை பார்த்தனர்.
படபடவென மோட்டார் வண்டி சத்தம் கேட்க, பிள்ளைகள் கூச்சலிட்டனர்.
“டேய்… அமைதியா இரு. ஊசி குத்திடப் போறேன்,” என்று அம்சவள்ளி மிரட்ட,
“நீங்க மிரட்டினா, நா தலைவர் கிட்ட சொல்லிடுவேன்,” என்றான் அந்தச் சிறுவனும்.
“ஏய் வேலு, இங்க பாருடி… இவங்க தலைவர் என்னை போலிஸ்ல புடிச்சு கொடுப்பாங்களாம்,” என்று சொல்லிச் சிரித்தாள்.
“அப்படியா… யாருடா உங்க ஊர் தலைவர்?” என்று வேல்விழி கேட்கவும்,
அதே நேரம் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையுடன் கம்பீரமாக நடந்து வந்தான்.
“ரொம்ப நன்றி டாக்டர். நா கேட்டதுக்காக நீங்க எங்க ஊருக்கு வந்ததுல எங்க ஊருக்கே ரொம்ப சந்தோஷம். அப்படியே இன்னொரு கோரிக்கையும் நீங்க செய்து தர ஆசைப்படுறேன்,” என்று நிறுத்தினான் அவன்.
“சொல்லுங்க சார். மக்களுக்கு வேலை செய்யத்தான் அரசாங்கத்துல வேலை பார்க்குறோம்,” என்றார் டாக்டர்.
“நீங்க நாளைக்கும் எங்க ஊர்ல ஒரு கேம்ப் நடத்துனா நல்லா இருக்கும். நிறைய வயசானவங்களும் குழந்தைகளும் இருக்காங்க,” என்று கோரிக்கையாக வைத்தான்.
“கண்டிப்பா சார்… எங்க சிஸ்டர்ஸ் கிட்டையும் கேட்கணும்,” என டாக்டர் சொன்னதும்,
“நானே அவங்ககிட்ட பேசுறேன் டாக்டர்,” என்றான்.
இருவரும் அந்த இடத்துக்கு வர நேரம்தான் வேல்விழி அந்தச் சிறுவனிடம் கேள்வி கேட்டது.
“நா கோவிச்சுக்குற அளவுக்கு என்ன கேட்கப் போற?” என்றான், கீழே விழுந்த டவலை எடுத்து கொடியில் போட்டபடி.
“ஒருவேளை இத்தனை வருஷத்துல, வேலுக்கு வேற யாரையாவது புடிச்சிருந்தா… நீ என்ன பண்ணுவ மாமா?” என்றாள் படபடப்பாக அவன் முகம் பார்த்து.
“நா அவ கழுத்துல தாலி கட்டும் போது அவ மைனர் பொண்ணா இருக்கலாம். ஆனா நா மைனர் இல்லையே அபி! அவள் விருப்பத்துக்கு எப்பவும் நா தடையா இருக்க மாட்டேன்,” என்றான் ஆகாயத்தைப் பார்த்து.
“அப்ப உங்க நிலைமை மாமா? காலம் முழுக்க தனியா இருக்கப்போறீங்களா?” என்றாள்.
“நா ஏன் தனியா இருக்கேன் அபி? ஒவ்வொரு விசேஷத்துக்கும் எனக்கு துணி எடுக்கும்போது, அவளுக்கும் சேர்த்துத்தான் கொண்டு வரேன்.
அந்த ஆடையில கூட என் மருதாணி முகம்தான் தெரியும்னு…” சொல்லி முடிக்கும்போது, அவன் கண்ணோரம் சிறு நீர்த்துளி வழிந்தது.
அவளுக்கும் என்ன சொல்வதென்று தெரியாத நிலையில்தான் இருந்தாள்.
“ஆமா… எதுக்காக அப்படி கேட்ட அபி?” என்றான்.
“அது…” என்று இழுத்து,
“பாட்டி…” என்றாள்.
இவர்களுக்கு
பின்னால் மறைந்திருந்த காளியம்மா, கண்ணீர் வழிய வெளியே வந்தார்.
“பாட்டிதான் மாமா… நா உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு என்னென்னவோ பேசிட்டாங்க. அவங்களுக்கு புரிய வைக்கத்தான் நான் அப்படி பேசினேன்,” என்றாள் அபிராமி.
தன் அம்மாவைத் திரும்பிக்கூட பார்க்காமல் படியேறினான்.