அத்தியாயம் – 26
“தங்கம் இன்னும் எத்தனை நாளைக்குடா இப்படி சோகமாவே இருக்க போற உங்க வீட்டுல உன் கிட்ட பேசாம இருக்குறது உனக்கு கஷ்டமா தான் இருக்கும் எனக்கு புரியுது, கொஞ்ச நாள் ஆன அவங்களே உன்கிட்ட பேசுவாங்க மா”என்றார் லட்சுமி.
“நீ இப்படி இருந்தா அவன் எப்படிமா சந்தோசமா இருப்பான், அவனுக்காக வது கொஞ்சம் சந்தோசமா இருமா “.
“சாரி அத்தையம்மா இனிமேல் நான் சோகமா இருக்கமாட்டேன் “
கடந்த பத்து நாட்களாக அனு யாரிடமும் சரியாக பேசுவது இல்லை ஒழுங்காக சாப்பிடுவது இல்லை, ராமசந்திரன் கூறிய “எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாள பாப்பா “என்ற வார்த்தைகள். அனுவின் மனதில் நன்கு பதிந்து அவளை நிம்மதி இல்லாமல் இருக்க செய்தது. கதிர் எவ்வளவோ ஆறுதல் கூறி பார்த்தான் இருந்தும் அனு அதிலிருந்து வெளி வரவில்லை.
லட்சுமி கூறிய பிறகு தான் அனுவிற்கு புரிந்தது, இனிமேல் கதிரை சந்தோசமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.கதிருக்கு போன் செய்தால் “மாமு எங்கடா இருக்க, மணி ஏழு ஆச்சு இன்னும் வீட்டுக்கு வரமா அப்படி என்ன வேலைடா பாத்துட்டு இருக்குற, வேகமா வீட்டுக்கு வா டா “
“செல்லம் நீ தான் பேசுறயாடி என்னால நம்பவே முடியல, ரஞ்சு நீ என்ன மாமுனு கூப்புட்டு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா “என்றான் வருத்தத்துடன்.
“சாரி டா மாமு, இனிமேல் சோகமா இருக்க மாட்டேன், உன்ன ஒரு நாளைக்கு லட்சம் தடவை மாமு கூப்பிடுறேன் போதுமா, இப்போ கிளம்பி வீட்டுக்கு வா வேகமா ” என்றாள் அனு.
கதிரும் விரைவாக வீட்டுக்கு வந்தான்.அனு புடவை கட்டி தலை நிறைய பூ வைத்துக் கொண்டு அவனுக்காக காத்திருந்தாள். கதிர் அனுவை பார்த்ததும் அவள் அழகில் அசந்து போய் நின்று விட்டான். பின் கதிரை ஊட்டி விட சொல்லி அனு உண்டால் கதிரும் சந்தோசமாக ஊட்டி விட்டான்.உண்டு முடித்ததும் இருவரும் அறைக்கு சென்றனர். படுக்கை மொத்தமும் பூக்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது.அதை பார்த்ததும் கதிர் “செல்லம் என்னடி இதுலாம், அப்போ உனக்கு ஓகே வா ” என்றான்.”ச்சி போடா “என்று கூறி வெக்கப் பட்டு திரும்பிக் கொண்டான்.
கதிர் அனுவை அப்படியே தூங்கி படுக்கையில் படுக்க வைத்து முகம் முழுவதும் முத்தம் கொடுத்தான். பின் ஆசைத்திர இதழ் தேன் குடித்தான். தடைகள் அனைத்தையும் விளக்கினான். அவனின் கைகள் அவள் உடல் முழுவதும் ஊர்வலம் போனது. அவன் கைகள் சென்ற இடமெங்கும் இப்போது இதழ்கள் செல்ல “டேய் மாமு முடியலடா ” என்றாள், “செல்லமா நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லடி அதுக்குள்ள முடியலன்னு சொல்லுற “என்று கூறி மேலும் அவன் வேலையை தொடர்ந்தான்.
சற்று நேரம் கழித்து அனுவிற்கு மிகவும் நெருக்கமாக மாறினான். அனு வலிக்குது என்றாள். கொஞ்ச நேரம் அப்படி தான் இருக்கும் பொறுத்துக்கோ என்று கூறி வேகத்தைக் கூடிக் கொண்டே சென்றான். கடைசியாக மூச்சுவாங்க அனுவை விட்டு விலகினான்.
அனு சோர்வுடன் படுத்திருக்க அவள் காதில் சென்று “மூணு வருச காத்திருப்புக்கு அப்பறமா ஒரு வழிய நான் கன்னிகழிஞ்சிட்டேன் ” என்றான்.அனு “ச்சி போடா எரும ” என்று கூறி கதிரின் நெஞ்சில் சாய்ந்து படுத்துக் கொண்டாள்.
கதிர் விடியும் வரை அனுவை தூங்க விடாமல் அவளுக்கு நெருக்கமாகவே இருந்தான்.காலை எட்டு மணிக்கு கண் விழித்தான் கதிர், அனு இன்னும் தூங்கிக் கொண்டிருக்கவே அவளை தொந்தரவு செய்யாமல் கதிர் குளித்து விட்டு வெளியே சென்றான்.
“அம்மா எனக்கு காபி கொண்டு வாங்க மா “என்றான்
“நீ மட்டும் தான் இருக்குற ரஞ்சனி எங்கடா தம்பி ” என்றார் லட்சுமி.
“ரஞ்சு தூங்கிட்டு இருக்குறா மா “
“தூங்குறால தூங்கட்டும் விடு நீ எழுப்பாத,தம்பி ரஞ்சனிய எங்கையாது வெளியூர் கூட்டிடு போடா இங்கையே இருந்தா ஏதாவது யோசிட்டு சோகமாவே இருக்குற “
“நானா மா கூட்டிடு போக மாட்டேன்னு சொல்லுறேன் அவதான் வர மாட்டேன்னு சொல்லுறா, இன்னைக்கே டிக்கெட் புக் பண்ணுறேன் மா ஒரு வாரம் வெளியூர் போய்ட்டு வாறோம் மா ” என்றான் கதிர்.
அன்று மாலையே டெல்லிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து காரில் மணலி அழைத்து சென்றான். அங்கிருந்த ஒரு வாரமும் இருவரும் ஈருடல் ஓர் உயிராய் இருந்தனர். கதிருக்கு அங்கிருந்து வரவே மனம் இல்லை, கடை வேலைகள் அதிகம் இருந்ததால் வேறு வழியின்றி திரும்பி வந்தனர்.
அனுவினால் ராமசந்திரனின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எப்பொழுதும் அவர் நினைவாகவே இருந்தது. அவர் கூறி வார்த்தைகள் அசரீரி போல் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. கதிரின் சந்தோசத்திற்காக அனைத்தையும் மறந்து அவனுடன் சந்தோசமாக இருந்தாள். இருந்தும் கதிர் அருகில் இல்லாத நேரங்களில் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
அனு அனைத்தையும் மறந்து சகஜமாக வாழ முயற்சித்துக் கொண்டு இருந்தாள். காலையில் கதிருடன் ஜவுளிக்கடைக்கு சென்று விடுவாள்.கதிர் அங்கு கொஞ்ச நேரம் இருந்து விட்டு மற்ற கடைகளுக்கு சென்று விடுவான். அனு மாலை வரை ஜவுளிக்கடையில் இருந்து விட்டு மாலை வீட்டுக்கு சென்று விடுவாள். இப்படியே பத்து நாட்கள் ஓடிவிட்டன.
கதிரவன் சக்கரவர்த்தி அனுரஞ்சனி இவர்களின் கல்யாணம் முடிந்து ஒரு மாதம் கழித்து நியூஸ் பேப்பர் ஒன்றில் கதிரின் காதல் கதையை கட்டுரையாக எழுதி” இளம் தொழிலதிபரின் காதல் கதை ” என்ற பெயரில் வெளியிட்டு இருந்தனர், அத்துடன் அவர்களது ரிசெப்ஷன் புகைப்படங்களையும் சேர்த்து வெளியிட்டு இருந்தனர்.
அதில் அனு கொடைக்கானல் செல்வதாக கூறி விட்டு சென்னை சென்று ரெஜிஸ்டர் மேரேஜ் செய்தது முதல் காலேஜ் ஹாஸ்டலில் இருந்து தினமும் போன் பேசியது வரை தெளிவாக எழுதப் பட்டு இருந்தது. அனு படித்த கல்லூரி பெயர்கள் கூட அதில் எழுதப் பட்டு இருந்தது.
மேலும் கட்டுரையின் சுவாரசியம் கூட்டுவதற்காக அனு கர்ப்பமாக இருந்ததாகவும் அதனால் தான் மூன்று வருடங்களுக்கு முன்பே திருட்டு தனமாக கல்யாணம் செய்து கொண்டதாகவும், பின் கர்ப்பத்தை கலைத்து விட்டதாகவும் பொய்யாக எழுதப் பட்டு இருந்தது.
இந்த கட்டுரையைப் படித்த பள்ளப்பட்டி ஊர் மக்கள் ராமசந்திரனிடம் இது குறித்துக் கேட்க அவமானம் தாங்க முடியாமல் குனிக்குறுகி போனார்.
அன்று மாலை அனு லட்சுமியுடன் கோவிலுக்கு சென்றிருக்க அங்கு அவளது கல்லூரி பேராசிரியரை சந்தித்தால். அவரிடம் சென்று அனு பேச அவர் கோவத்தில் கத்த ஆரம்பிதார்.
“மேடம் இப்போ எதுக்கு மேடம் இவளோ கோவப் படுறிங்க நீங்க கோவப்படுற அளவுக்கு நான் அப்படி என்ன தப்பு பண்ணேன் “என்றாள்.
“என்ன தப்பு பண்ணயா, காலேஜ் படிக்கும் போதே காதல், கல்யாணம், கர்ப்பம் சொல்லவே வாய் கூசுது. உன்ன ரொம்ப நல்ல பொண்ணுன்னு நெனச்சேன் நீ இப்படி ஒரு வேலைய செஞ்சி வச்சிருக்குற”
“கொடைக்கானல் போறேன்னு போய் சொல்லிட்டு சென்னை போய் திருட்டு தனமா கல்யாணம் பன்னிருக்குற “
“நான் உன்கிட்ட எதுக்கு டுர் வரலன்னு கேட்டதுக்கு வாய் கூசாமா உடம்பு சரிஇல்லனு பொய் சொன்னால நீ, அப்படி என்ன டி படிக்குற வயசுல காதல் வேண்டி கிட்டக்கு உனக்கு, உன்கிட்ட பேசுறத நெனச்சாலே அசிங்கமா இருக்கு கேவலமா இருக்கு முதல்ல போ இங்க இருந்து “என்றார் கோவமாக அனு அழுதுக் கொண்டே சென்று. வெளியில் அமர்ந்திருந்த லட்சுமியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
லட்சுமி எதுக்கு அழகுறன்னு கேட்டதுக்கு அப்பா நியாபகமா இருக்கு என்று கூறி விட்டாள். வீட்டிற்கு சென்ற பின் அறையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். அனுவின் போன் இசைக்கு ஓசை கேட்டது. அதில் ரேணுகாவின் பெயர் தெரிய உடனே அதை எடுத்து ஹலோ என்று சொல்ல
“அனு என்னடி பண்ணி வச்சிருக்க நீ, ஏண்டி என்கிட்ட கூட சொல்லவே இல்லை, என்ன உன் பிரண்ட்டா நீ நினைக்கவே இல்லல, அப்படி நினைச்சி இருந்தா என்கிட்ட இவளோ பெரிய உண்மைய மறச்சிருப்பியா ” என்றாள் ரேணுகா கோவமாக .
“ரேணு நீ எதை பத்தி பேசுறானே எனக்கு தெரியலடி கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுடி ப்ளீஸ் “
“மூணு வருசத்துக்கு முன்னாடியே உனக்கும் கதிரவன் அண்ணாக்கும் கல்யாணம் ஆகிருச்சா, உண்மையா சொல்லு அனு “
“உனக்கு எப்படி ரேணுகா தெரியும் ” என்றாள் அதிர்ச்சியுடன்.
“அப்போ நியூஸ் பேப்பர்ல வந்தா நியூஸ் எல்லாமே உண்மை தானா, ஏண்டி என்கிட்ட கூட சொல்லவே இல்ல அப்படி என்னடி அவசரம் உனக்கு சென்னைக்கு போய் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு”
“என்ன ரேணு சொல்லுற நியூஸ் பேப்பர்ல வந்தாத, எந்த பேப்பர்ல டி அதுல என்னடி போட்டுருந்தது சொல்லுடி ப்ளீஸ் “
“பேப்பர்ல நீ பண்ண திருட்டுத்தனம் எல்லாத்தையும் விழாவரியா எழுந்திருக்காங்க, சென்னைல போய் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணாது
கர்ப்பத்தை கலச்சதுனு எல்லாத்தை பத்தியும் தெளிவா எழுந்திருக்கு, ஏண்டி என்கிட்ட எதுமே சொல்லல “
“நல்ல தானா டி இருந்த எப்போ டி இவளோ கேவலமா மாறின, கர்ப்பம்ல என்னால நெனச்சி கூட பாக்க முடியல அனு,நீ இப்படிலாம் பண்ணுவனு “
“ரேணுகா ப்ளீஸ் என்ன நம்பு டி, வீட்டுல எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணுறாங்க எங்க என்னையும் கதிரையும் பிரிச்சிருவங்களோனு பயந்து தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் மத்த படி நான் எந்த தப்பும் பண்ணல டி ப்ளீஸ் என்ன நம்பு “
“இதை நீ என்கிட்ட முன்னாடியே சொல்லிருந்தா நான் நம்பிருப்பேன், 2 வருசமா நீயும் நானும் ஹாஸ்டல்ல ஒண்ணா தானாடி இருந்தோம், அப்போ என்கிட்ட சொல்லிருக் கலாம்ல, ஏண்டி என்கிட்ட சொல்லல அப்போ உன்மேல ஏதோ தப்பு இருக்குனு தானா என்கிட்ட சொல்லல “
“நிஜமாவே நான் எந்த தப்பும் பண்ணல டி நம்பு டி “
“நீ சொல்லுற எதையும் நான் நம்ப மாட்டேன் டி போடி “என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டாள்.
அனு வெளியே சென்று ஹாலில் இருந்த பேப்பரை எடுத்து பார்த்தாள். அதில் எழுத பட்டிருந்த கட்டுரை படித்து விட்டு அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்து விட்டாள்.
அனு இருந்த நிலையை பார்த்து லட்சுமி உடனே கதிருக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு கூறினார்.
கதிர் வீட்டிற்கு வந்ததும், அனுவிடம் “என்னமா ஆச்சி என் இப்படி இருக்குற “என்றான். நியூஸ் பேப்பரை கதிரின் கையில் குடுத்து விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.
கதிர் அதை படித்ததும் கோவத்தின் உச்சிக்கு சென்றான். உடனே பத்திரிகை அலுவலகத்திற்கு போன் செய்து எதற்காக இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டிர்கள் என்றான். மேலும் என்னை பற்றி தவறான தகவலை பரப்பியதற்கு கேஸ் போடா போவதாக கூறினான்.
“சார் சாரி சார் நாளைக்கே நாங்க மன்னிப்புக் கேட்டு கட்டுரை போட்டுறோம்” என்றார் நிருபர்.
“ரஞ்சுமா நான் அந்த நிருபர் கிட்ட பேசிட்டேன், நாளைக்கே அவரு எழுதுன எல்லாம் தவறுன்னு போட்டுருவாங்க “என்றான்.
அனு ஏதுவும் பேசாமல் அழுதுக் கொண்டே இருந்தாள்.”ரஞ்சு ப்ளீஸ் அழாதடி “
“எல்லாரும் என்ன தப்பா பேசுறாங்க டா என்னால தாங்க முடியலடா ரொம்ப அவமானமா இருக்குடா ” என்று கூறி அழுதாள்.கதிர் அனுவை சமாதானம் செய்து தூங்க வைத்தான்.
கதிர் தூங்கும் வரை அமைதியாக இருந்தாள். பின் எழுந்து விட்டாள் இரவு முழுவதும் தூங்காமல் அழுதுக் கொண்டே இருந்தாள்.
ராமசந்திரன் ஊர்மக்கள் பேசியதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார். திடிரென்று நெஞ்சு வலிப்பதாக கூற அவரை ஒட்டன் சத்திரத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருப்பதாக கூறினார். சாந்தி வள்ளியம்மாள் இருவரும் அழுதுக் கொண்டே இருந்தனர்.
ரேணுகா அனுவிற்கு போன் செய்து ராமசந்திரன் உடல் நிலை சரி யில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பதாக கூறினாள்.
அனு அவள் அப்பாவை பார்க்க உடனே மருத்துவ மனைக்கு கிளம்பி சென்றாள். அனுவை பார்த்ததும் சாந்தி மட்டும் வள்ளியம்மாள் திட்ட ஆரம்பித்தனார். “அம்மா நீ என்ன எவளோ வேணுனாலும் திட்டு அடி நான் வேணான்னு சொல்லல, ப்ளீஸ் மா ஒரே ஒரு தடவை அப்பாவ பாக்க விடுமா “
“நீ என்னடி பாக்க போற என் புள்ளை உயிரோட இருக்கானா இல்லையான, போடி இங்க இருந்து உன்னால தாண்டி அவனுக்கு நெஞ்சு வலியே வந்துச்சி “
“நீ பொறந்த கொஞ்ச நாள்லையே என் புருஷனை கொன்னுட்டா, இப்போ என் புள்ளையும் கொல்ல வந்துடைய போடி இங்க இருந்து என்று கூறி அனுவை அடித்து அங்கிருந்து அடித்து துரத்தி விட்டார் “
அனு அழுதுக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.
ஹாஸ்பிடலில் நடந்த அனைத்தையும் அங்கு வேலை செய்யும் பெண் ஒருவர் கதிருக்கு போன் செய்து கூறி விட்டார்.
கதிர் கோவத்துடன் வீட்டிக்கு வந்தான். அனுவிடம் “இவளோ நேரம் எங்கடி போய்ட்டு வர “என்றான்.
“அப்பாக்கு உடம்பு சரி இல்ல அதான் பாக்க போனே” என்றாள்.
“யாரை கேட்டுடி போன அங்க, அங்க போய் அவமானம் பட்டு வந்ததுக்கு போகாமலே இருந்துருக்கலாம்ல “
“என் அப்பாக்கு உடம்பு சரி இல்லடா நான் போய் பாக்கமா இருந்தா எப்படி” என்றாள்.
“ரஞ்சு கொஞ்ச நாளைக்கு அமைதியா இருடி,தேவை இல்லாம அங்க போய் அவங்க கோவத்தை அதிக படுத்தாத “என்றான் கதிர்.
கதிர் கூறுவதும் சரி தான் இனிமேல் அவர்களை சென்று பார்க்க கூடாது என்று நினைத்தால். ராமசந்திரன் உடல்நலம் தேறி வீட்டிற்கு சென்று விட்டார்.
கதிர் ரேணுகா நர்மதா இருவரிடமும் மூன்று வருடங்களுக்கு முன் நடந்ததை பற்றியும் அதில் அனுவின் மேல் எந்த தப்பும் இல்லை என்று கூறி அனுவிடம் பேசுமாறு வேண்டி கேட்டுக் கொண்டான். அதன் பின் ரேணுகா அடிக்கடி அனுவிடம் போனில் பேச ஆரம்பித்தான். நர்மதா நேரில் சென்று பார்த்து பேசிவிட்டு வருவாள்.
தோழிகள் இருவரின் நட்பும், கதிரின் அனுப்பும் அனுவை மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு கொண்டு வந்தது அவளை. வழக்கம் போல் கடைக்கு சென்று வந்து கொண்டிருந்தாள்.