அத்தியாயம் – 27
வேலுசாமி, லட்சுமி, கதிர், அனு நான்கு பேரும் சேர்ந்து மதுரைக்கு வேலுசாமியின் அண்ணன் மகன் கல்யாணத்திற்கு சென்றிருந்தனார். அங்கு வடிவு மட்டும் பாண்டி இருவரும் இருந்தனர்.அனுவின் முகம் வாடி இருந்ததை பார்த்ததும் வடிவுக்கு ஏதோ சரியில்லை என்பது புரிந்து விட்டது.
அங்கிருந்த பெண்கள் ஒரு சிலர் பேப்பரில் வந்ததை பற்றி லட்சுமியிடம் கேக்க அது அனைத்தும் பொய் என்று கூறினார். “அது எப்படி லட்சுமி பொய்யான விஷயத்தை எழுதுவாங்க கொஞ்சம் கூடவா உண்மை இல்லாம போகும், அப்படி என்னதான் அவசரமோ உன் புள்ளைக்கு திருட்டுத் தனமாக் கல்யாணம் பண்ணுற அளவுக்கு ” என்று கூறினார் உறவுகாரா பெண் ஒருவர்.லட்சுமி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தார்.
“இந்தாடி என் மருமகன பத்தி ஏதாவது பேசுனா உன் நாக்கை இழுத்து வச்சி அறுத்துப் புடுவேன், உன் மகன் என்ன ஒழுங்கா அவனும் ஓடி போய்த்தான கல்யாணம் பண்ணிக் கிட்டான், வந்துட்டா பெரிய இவ கணக்கா “என்றார் வடிவு.
“லட்சுமி நீ இவளுங்க பேசுறத பத்திலாம் கவலை படாத சரியா வா போவோம் “என்று கூறி லட்சுமியை தன்னுடன் அழைத்து சென்றார்.
அனு அந்த பெண்கள் பேசிய அனைத்தையும் மறைவாக இருந்து கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.
“என்ன வடிவு அந்த பொம்பளைங்க கிட்ட அப்படி பேசிட்ட “என்றார் பாண்டி.
“எல்லாம் லட்சுமிய கைக்குள்ள போட்டுக்கதாங்க,ரஞ்சனி பொண்ண அவங்க வீட்டுல இருந்து ஓதிக்கு வச்சிட்டாங்கலாம் அதுனால அந்த பொண்ணு ரொம்ப வருத்தத்துல இருக்காம் ,அப்பறம் இந்த பேப்பர்ல வந்த விஷயத்தால ரொம்ப வேதனை பட்டுட்டு இருக்குனு இப்போ தான் லட்சுமி சொன்னா “
“என்னங்க இது தான் ரஞ்சனிய விட்டைவிட்டு தொறத்த சரியான சமயம், எப்படியாவது அந்த பொண்ணு மனச கலச்சி அவளவே வீட்டை விட்டு போற மாதிரி பண்ணிரனுங்க “
“உங்க தங்கச்சி கிட்ட எதையாவது சொல்லி கொஞ்ச நாளைக்கு நாம அங்க பொய் தங்குற மாதிரி ஏற்பாடு பண்ணுங்க, மத்தத நான் பாத்துக்குறேன் “என்றாள் வடிவு.
பாண்டியும் லட்சுமியிடம் அழுது கண்ணீர் விட்டு எதை எதையோ பேசிக் கடைசியில் “அண்ணே அது உங்க வீட்டுனே நீங்க எப்போ வேணுனாலும் வாங்க எத்தனை நாளுனாலும் அங்க தாங்குங்க” என்று லட்சுமியை கூற வைத்து விட்டார் பாண்டி.
கதிர் மட்டும் ரஞ்சனி இருவரையும் அங்கிருந்த மூதாட்டி ஒருவரிடம் ஆசிர்வாதம் வாங்க செய்தார் லட்சுமி.அந்த மூதாட்டியும் இவர்கள் இருவரையும் மனதார வாழ்த்தினார். பின் லட்சுமியிடம்
“என்ன லட்சுமி உன் மகனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆச்சி, உன் மருமக நல்ல சேதி சொன்னால இல்லையா ” என்றார்.
“இப்போ தானமா கல்யாணம் ஆகிருக்கு “என்றார் லட்சுமி.
“இந்த காலத்துல பொண்ணுக எல்லாம் அதை இதை சொல்லி புள்ள பெத்துகிறதா தள்ளி போடுறாங்க, உன் மருமகளும் அப்படி பண்ணாம பாத்துக்கோ சரியா ” என்றார்.
விசேஷம் முடிந்து மறுநாள் அனைவரும் ஊர் திரும்பினார்.
ரேணுகாவின் வீட்டில் ரேணுகா, வெங்கட்டின் காதல் விஷயம் தெரிந்து பெரிய பிரச்சனை ஆகி ரேணுகாவிற்கு வேறு மாப்பிளை பார்த்து விட்டனர். அனு இதை பற்றி கதிரிடம் கூற கதிர் ரேணுகா, வெங்கட் இருவரின் வீட்டிலும் பேசி இருவருக்கும் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்தான்.ஒரு மாதம் கழித்து திருமணத்திற்கு நாளும் குறிக்கப் பட்டது.
கதிர் நகைக் கடையில் அமர்ந்து அன்றைய கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது போன் அடிக்கும் சத்தம் கேட்டு அதை எடுத்து ஹலோ என்றான்.
“என்ன தம்பி என்ன முடிவு பன்னிருக்குற, நானும் நாலு மாசமா கேட்டுட்டு இருக்குறேன் உன் நகைக் கடைய என் பேருல எழுதி தாணு “
“முடியாது, முடியாதுனு சொல்லிட்டே இருக்குறடா நீ, உன்ன ஆளு வச்சி அடிச்சும் பார்த்துட்டேன், பேப்பர்ல தப்பான நியூஸ் போட்டு அசிங்க படுத்தியும் பார்த்துட்டேன் எதுக்கும் மசிய மாட்டேன்கிற நீ “
“மாவட்ட செயலாளரா இருக்குற என்கிட்டயே வம்பு பண்ணுறல நீ, என் பின்னாடி ஆளும்கட்சியே இருக்குடா நான் நினைச்சா உன் கடையவே இல்லம்மா பன்னிருவேண்டா “
“நியாவே உன் கடைய என் பேருல எழுதி தருவ நான் தரவைப்பேன் ” என்றார் பெருமாள் சாமி.
“உங்கனால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க “என்று கூறி விட்டு போனை வைத்து விட்டான் கதிர் .
ஒரு வாரம் கழித்து மீண்டும் பெருமாள்சாமி கதிருக்கு போன் செய்தார்.”என்ன தம்பி சௌக்கியமா, உனக்கு உன் பொண்டாட்டினா ரொம்ப பிடிக்குமாமே , அதுனால தான் உன் சொத்து எல்லாத்தையும் உன் பொண்டாட்டி பேருல எழுதி வச்சிருக்கியாம் “
“அந்த பொண்ணு ஒரு கையெழுத்து போட்ட போதுமாமே கடைய என் பேருல மாத்துறதுக்கு “
“இனிமேல் உனக்கும் எனக்கும் பேசு கா,நான் ரஞ்சனி தங்கச்சி கிட்ட எப்படி பேசணுமோ அப்படி பேசி எழுதி வாங்கிக்கிறேன் “என்று கூறி விட்டு வைத்து விட்டார்.
இதுவரை பெருமாள்சாமி எவ்வளவோ மிரட்டியும் அசராத கதிர், ரஞ்சனியின் பேரை சொன்னதும் சற்று பயந்து விட்டான். பெருமாளின் பார்வை அனுவின் மேல் படாமல், அனுவை யாரும் நெருங்காமல் பார்த்துக் கொண்டான்.அனுவை வெளியே எங்கையும் அனுப்பாமல் வீட்டுக்குள்ளயே வைத்திருந்தான்.
கீதாவின் வளைகாப்புக்காக அகிலன் ஜெர்மனியில் இருந்து வந்திருந்தான். வரும்போது அனுவிற்காக நிறைய பொருட்களை வாங்கி வத்திருந்தான். ராஜி அகிலனிடம் எப்படி உண்மையை கூறுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.
கீதாவும் வள்ளிப் பாட்டியும் அகிலனிடம் அனுவின் காதலை பற்றியும் அவளுக்கு நடந்த திருமணத்தை பற்றியும் பேப்பரில் வந்த கட்டுரையை பற்றியும் என்று முழுவதையும் கூறி முடித்தார்.
அனைத்தையும் கேட்ட அகிலன் துடித்துப்போனான் “என்ன பாட்டி சொல்லுற என் அனுக்கு கல்யாணம் ஆகிருச்சா, ஏன் இதை பத்தி என்கிட்ட முதலிலேயே சொல்லல “
“அப்போ அனு எனக்கு இல்லையா, அனு இல்லாம என்னால எப்படி பாட்டி இருக்க முடியும், அவ இல்லாம என்னால வாழ முடியாது பாட்டி “
என்று கூறி அழுதான், கீதா ராஜி எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“அகில் ராஜா, அம்மா சொல்லுறத கேளுடா சரியோ தப்போ அனுக்கு கல்யாணம் ஆகிருச்சி, இனிமேலும் அவளை நினைச்சிட்டு இருக்காம வேற பொண்ண பார்த்து கல்யாணம் பன்னிட்டு சந்தோசமா வாழ பாருடா ” என்றார்.
“அனு மேல நான் வச்ச காதல் ஒன்னும் சட்டை மாதிரி இல்லமா , அந்த சட்டை பழசா போச்சுன்னு புது சட்டை வாங்கி போட்டுகிறதுக்கு.
என் உடம்பு ஓட ஒடி இருக்குற தோல் மாதிரி மா நான் சாகுற வரைக்கும் அதை மத்த முடியாது “
“இனிமேல் அனுவ மறந்துருனு மட்டும் சொல்லாதீங்க மா ப்ளீஸ் ” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டான் அகில்.
அகில் நேராக அவனது நண்பன் கோகுலைப் பார்க்க சென்றான். அவனிடம் அனுவை பற்றி என் என்னிடம் கூறவில்லை என்று கூறி சண்டையிட்டான்.
“மச்சான் நிஜமாவ எனக்கும் அனுவை பத்தின விஷயம் ஒரு வாரத்துக்கு முன்னாடி தாண்ட தெரியும்.நான் சென்னைல இருந்தனால இங்க நடந்த எதும் எனக்கு தெரியலடா சாரி மச்சான் “
“இந்தா இந்த பேப்பர்ல அனுவை பத்தி போட்டுருக்குறத படிச்சி பாரு” என்றான் கோகுல். அகிலனும் படித்து பார்த்து விட்டு கோபத்துடன் அந்த பேப்பரை கிழித்து எரிந்தான்.
“டேய் இதுல போட்டுக்குறது எல்லாமே போய்டா என் அனுவை பத்தி எனக்கு தெரியும், அவ கல்யாணம் வேணுனா பன்னிருப்பா மத்தபடி கர்ப்பம் அந்த மாதிரிலாம் இருக்க வாய்ப்பே இல்லடா.அவன் எதையோ சொல்லி கட்டாயப் படுத்தி தாண்ட கல்யாணம் பன்னிருப்பான் “
“என் அனு கண்டிப்பா எந்த தப்பும் பண்ணிருக்க மாட்டாடா “என்றான் அகில் அழுதுக் கொண்டே.
“அகில் விடுடா இன்னும் அதை பத்தி பேசி என்ன ஆக போகுது விட்டு தள்ளி,இனிமேல் உன்ன பத்தி உன் வாழ்க்கையை பத்தி மட்டும் யோசிடா”
“அவ தான்டா என் வாழ்க்கையே, நான் அவளை பத்தி யோசிக்காம எப்படிடா இருக்க முடியும், சரி இப்போ நீ கல்யாணம் பன்னிருகியே அந்த பொண்ணு யாருடா “
“நீ காதலிச்ச பொண்னோட புருஷன் சேத்துப்போய் கை குழந்தையை வச்சிட்டு அந்த பொண்ணு கஷ்டப்படுறத பார்த்து, நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணி அந்த குழந்தைய உன் குழந்தையாவே வளர்த்துட்டு வரல “
“நீ சொல்லுறது சரி தான்டா அவ புருஷன் அக்சிட்டென்ட்ல இறந்துட்டாங்க, அவ தனியா கஷ்ட பட்டுடு இருந்த நான் வாழ்கை குடுத்தேன், அனு அவ புருஷன் கூட சந்தோசமா தானா இருக்குற, அவளை பத்தி யோசிக்கிறத விட்டுடா “
“முடியாதுடா எப்படியாவது என் அனுவ அந்த கதிரவன் கிட்ட இருந்து பிரிச்சி நான் அவளை கல்யாணம் பண்ணிப்பேன் டா,என் அனுவை என்கிட்ட இருந்து யாராலையும் பிரிக்க முடியாது, நான் அனுவை பார்த்து எப்படியாவது அவகிட்ட பேசணும் டா ” என்றான்
இவர்கள் இருவரும் நின்று பேசிக் கொண்டிருந்த டீ கடையில் இவர்கள் அருகிலேயே நின்று இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தான் துரைப் பாண்டி.அவர் அங்கு ஒரு வேலை விஷயமாக போயிருந்தார். யதார்த்தமாக இவர்கள் பேசுவதை கேக்க முடிந்தது.
“ரேணுகாக்கு நாளை மறுநாள் கல்யாணம்டா அனு கண்டிப்பா அதுக்கு வருவா அப்போ போய் அவகிட்ட பேசுடா “என்றான் கோகுல்.
அகிலனை பற்றியும் அவன் பேசியதை பற்றியும் பாண்டி வடிவிடம் கூற “என்னங்க அந்த பையன வச்சு தாங்க நாம அனு கதிர் இரண்டு பேரையும் பிரிக்கணும் உடனே கிளம்புங்க உங்க தங்கச்சி வீட்டுக்கு “
“அந்த அனுவை அங்க இருந்து வெளிய அனுப்பி விட்டுட்டு தான் நாம இங்க திரும்பி வாறோம் “என்று உறுதி எடுத்துக் கொண்டு மறுநாளே கிளம்பி கதிரின் வீட்டுக்கு வந்து விட்டனர்.
அவர்கள் வந்தது அனுவிற்கு பயத்தை அளித்தது. அவர்கள் வந்தா பின் அனு அறையை விட்டு வெளியே வருவதே இல்லை அறைக்குள்ளே அடைந்து கிடந்தால்.
மறுநாள் காலையில் அனு கதிர் இருவரும் கிளம்பி ரேணுகாவின் திருமணத்திற்கு சென்றனர். அனு நண்பர்களின் கல்யாணம் என்பதால் மிகவும் சந்தோசமாக கிளம்பி சென்றாள். கதிரின் கேட்டரிங் தான் கல்யாணத்தில் சமையல் வேலைகளை செய்துக் கொண்டிருந்தது. கல்யாணம் முடிந்ததும் கதிர் அனுவை தனியா விட்டுவிட்டு பந்தியை பார்க்க சென்று விட்டான். அனு தனியாக அமர்ந்து இருந்தாள்.
அப்பொழுது அந்த ஊரை சேர்ந்த இரண்டு பெண்கள் அனுவின் பின்னால் அமர்ந்து அனுவின் காதில் விழுமாறு “இந்த பொண்ணு எப்படிக்க கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இங்க வந்து உக்காந்து இருக்கா “
“அவ ஏண்டி வெக்கப்பட போற படிக்குற வயசுலயே காதல், திருட்டு கல்யாணம், கர்ப்பம், கர்ப்பத்தை களைக்குறதுனு ஒன்னு விடாம எல்லா தப்பையும் பண்ணிட்டு எப்படி ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி சுத்திட்டு இருந்துருக்கா “
“இந்த ரேணுகாவும் தான் காதல் கல்யாணம் பண்ணுற அவ ஒழுங்கா படிச்சி முடிச்சி வீட்டுல அம்மா அப்பா சம்மதத்தோட கல்யாணம் பண்ணுற, இது தாண்டி உண்மையா காதல் “
“சில ஜென்மங்களும் பண்ணிச்சிங்களே அதுலாம் காதலா, படிக்குற வயசுலயே சுகத்துக்கு ஆள் தேடிட்டு தெரியுதுங்க, வீட்டுல பெத்தவங்க படிக்குறதுக்கு காலேஜ்க்கு அனுப்புனா, இவ கண்டவன் கூட சீச்சீ சொல்லவே வாய் கூசுது “
“ஆன ஒன்னு அக்கா இந்த அனு ரொம்ப கெட்டிகாரி தான் புடிச்சாலும் புடிச்சா நல்ல புளியங்கொம்ப தான் புடிச்சிருக்குற, நகை கடை என்ன, துணி கடைசி என்ன, அதன் போட்டுட்டு மினுக்குற “
“சாந்தி அக்காவ இருக்க போய் இவள விட்டு வச்சிருக்கு நானா இருந்தேன் சொத்துல வேஷத்தை வச்சி கொன்னுருப்பேன் “என்று கூறி இரு பெண்கள் பேசி கொண்டு இருந்தனர்.
அனு அங்கே இருக்க முடியாமல் கதிரிடம் சென்று “கதிர் எனக்கு ரொம்ப தலை வலிக்கு நான் ஊருக்கு போறேன் “
“கொஞ்ச நேரம் இருமா பந்தி முடிஞ்சதும் நானும் வாரேன் இரண்டு பேரும் போலாம் “
“இல்ல கதிர் நீங்க இருந்து மதியம் சமையல் வேலைகள் முடிஞ்சது பார்த்துட்டு வாங்க,நாம இரண்டு பேருமே போய்ட்டா ரேணுகா வருதா படுவா “
“சரி ரஞ்சு பார்த்துப் போ, நீ வீட்டுக்கு போய்ட்டு காரை அனுப்பி வை, டிரைவர் கார்ல தான் இருகாங்க பார்த்து போ “என்றான்
அனு அங்கிருந்து வெளியே வரும் போது சாந்தி அவளிடம் ” இதுக்கு தானா பாப்பா நீ ஆசை பட்ட அவங்க பேசுனது எல்லாம் நானும் கேட்டேன் பெத்த வயிறு பத்தி எரியுதுடி”
“வீணாப்போன அந்த பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ என்னத்தடி கண்ட இப்படி நீயும் அசிங்கப் பட்டு எங்களையும் அசிங்க படுத்திட்டீயே டி “
“அவன கல்யாணம் பண்ணாம என் புள்ளைய என் வீட்டுல இருந்திருந்தா இந்த பேசலாம் நீ கேக்கவேண்டி வந்துருக்குமா பாப்பா “என்று கூறி தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
அம்மா அழுவதை பார்க்க முடியாமல் அனு அங்கிருந்து ஓடி விட்டால். டிரைவரிடம் சென்று “நான் பஸ்ல ஊருக்கு போய்கிறேன் அண்ணா நீங்க அவரு கிட்ட சொல்லிருங்க” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.அனு கூறியதை டிரைவர் கவனிக்காமல் ஹெட்போனில் பாட்டுக் கேட்டு கொண்டிருந்தார்.
அனு வேதனை தாங்க முடியாமல் பஸ் ஸ்டாண்ட் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அதை பார்த்த அகிலனின் அவள் அருகில் சென்று “குட்டிமா “என்று அழைத்து தலையில் பாசமாக வருடி கொடுத்தான்.
அகிலனை பார்த்ததும் அனு அத்தான் என்று அழைத்து அவரை கட்டி பிடித்து அழ ஆரம்பித்தாள். அவனும் அவளை கட்டி பிடித்து தலையை வருடி குடுத்து சமாதானம் செய்தான். இவர்கள் கட்டி பிடித்துக் கொண்டு நின்றதை வடிவின் தங்கை மகன் சுரேஷ் போட்டோ எடுத்துவிட்டான்.
அகில் அனு இருவரையும் கண்காணிப் பாதற்காகவே ஊரில் இருந்து சுரேஸை வர வைத்தார் வடிவு.
“குட்டிமா ப்ளீஸ் அழாதடா உனக்கு என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லுடா, நான் இருக்கேன்டா உனக்கு துணையா”
“பேப்பர்ல வந்த எதையும் நான் நம்பளடா என் அனுவை பத்தி எனக்கு தெரியும்டா, நான் இருக்கேன்டா உனக்கு ப்ளீஸ் அழாத “என்றான் அகிலன் கண்கள் கலங்க.