அத்தியாயம் -3
அனுவின் வீட்டில் அனு ஜெனி பிட்டர் ஸ்டெல்லா கவின் கிரிஷ் மற்றும் லயா ஆகிய அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
“ஜெனி அக்கா செஞ்ச சிக்கன் பிரியாணி நாளே தனி டேஸ்ட் தான், இந்த பிஷ் பிரை சூப்பரா இருக்கு” என்று கூறிக் கொண்டே சாப்பிடால் ஸ்டெல்லா.
” ஜெனி இவ சாப்பிடுறத பார்த்த எனக்கு எதுவும் வைக்கமாட்டா போலையே “என்றான் பிட்டர்
“பிட்டர் கிண்டல் பண்ணாம சாப்பிடுங்க அப்பறம் உங்களுக்கு பிலேட்ல இருக்குறதையும் சேர்த்து சாப்பிட்டுருவேன் “என்றாள் ஸ்டெல்லா
“நீ செஞ்சாலும் செஞ்சுருவ எனக்கு பசிக்கு நான் சாப்பிட போறேன் போ” என்று கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தான் பிட்டர்.
“நீங்க தமிழ்நாட்டுக்கு போய்ட்டா இந்த மாதிரி டேஸ்ட் ஆன சாப்பாட்டை யாரு சமைச்சி தருவாங்க எனக்கு”.
“நான் உங்களையும் உங்க சமையலையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன் அக்கா “என்றாள் வருத்தத்துடன் ஸ்டெல்லா.
“அப்போ எங்களைலாம் மிஸ் பண்ண மாட்டையா “என்றாள் அனு
“மிஸ் பண்ணாம இருப்பேனா உன்ன, வாலுக்குட்டிங்க கவின் கிரிஷ் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன் “என்றாள் கண்களில் கண்ணீர் வழிய.
” ஜெனி அக்கா, அனு இங்கையே எங்க கூடவே இருந்துருங்களே ப்ளீஸ், ஒரு ரெண்டு வருஷம் மட்டும் இருங்க அதுக்குள்ள எங்களுக்கும் விசா முடிஞ்சிரும் அப்பறம் எல்லாரும் ஒண்ணா இந்தியாக்கு போகலாம் “
ஸ்டெல்லா அழுவதை பார்த்து அனு மற்றும் ஜெனிக்கு வருத்தமா இருந்தது.
“ஸ்டெல்லா முதல்ல நீ சாப்பிட்டு முடி மத்தத அப்பறம் பேசலாம், vittu பாரு பிஷ் பிரை அப்படியே இருக்கு”
என்றார் ஜெனி.
குழந்தைகள் மூவரும் சாப்பிட்டு விட்டு விளையாடி கொண்டிருந்தனர். லயா கவின் கிரிஷ் விட நான்கு மாதங்கள் இளையவள். மூவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் தான் படிக்கின்றனர்.
அனைவரும் சாப்பிடு முடித்துவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.
“அனு, ஜெனி தமிழ்நாட்டுல எங்க போக போறீங்க , அங்க போய் என்ன பண்ண போறீங்க “என்றான் பிட்டர்.
“மதுரைக்கு போறோம் அண்ணா, அங்க போய் ஒரு ஆதரவற்றோர் இல்ல ஆரம்பிக்க போறோம்” என்றாள் ஜெனி.
“ஆதரவற்றோர் இல்லமா, நல்ல விஷயம் தான்மா அதை தமிழ்நாடுல வேற எங்க வேணுனாலும் ஆரம்பிக்கலாமே”.
“பொள்ளாச்சி பக்கத்துல எங்களுக்கு சொந்தமான இடம் இருக்கு அது பெரிய தோப்பு மாதிரி இருக்கும் சுத்தி நிறைய மரங்கள் இருக்கும், அமைதியான இடம் நீங்க அங்க வேணுனா இல்லம் ஆரம்பிங்கமா “
என்றான் பிட்டர்
“இடம்ல வேண்டாம் அண்ணா என் பேருல மதுரைல நிறைய இடம் இருக்கு அண்ணா அதுல ஒரு இடத்துல தான் இல்லம் ஆரம்பிக்க போறோம் “என்றாள் ஜெனி.
“எங்க வீட்டுல நான் ஒரே பொண்ணு மட்டும் தான், நாங்க இருந்த ஊருல நல்ல வசதியான குடும்பம் எங்களோடது, அப்பா எனக்காக நெறைய சொத்து சேர்த்து வச்சிருக்காங்க “.
“நான் வேற ஜாதி பையன காதலிச்சு கல்யாணம் பணிகிட்டனால அப்பா அம்மா என் மேல கோவப்பட்டு பேசாம போய்ட்டாங்க நானும் மும்பை போய்ட்டேன் “.
” என் புருஷன் இறந்த விஷயம் அம்மா அப்பா க்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சி இருக்கு, என் வாழ்க்கை இப்படி பதிலையை முடிஞ்சி போச்சேன்னு அப்பாக்கு ரொம்ப மனசு வருத்தம் ஆகிருச்சு”.
“என்ன மும்பைல புள்ளா தேடி பாத்துருக்காங்க கிடைக்கல, அந்த கவலைலயே அப்பா இறந்துட்டாங்க “என்றாள் அழுகையுடன் ஜெனி.
அனு ஜெனியை ஆதரவாக அனைத்துக் கொண்டால்
“அண்ணா ஜெனிஅக்கா ஓட அப்பா இறக்குறதுக்கு முன்னாடி எல்லாச் சொத்துகளையும் ஜெனிஅக்கா பேருல எழுதி வஞ்சிட்டாங்க ” என்றாள் அனு.
“அக்காவோட அம்மாக்கு அவங்க இங்க இருக்குறது தெரிஞ்சி யாருகிட்டயோ என்னோட நம்பர் வாங்கி எனக்கு போன் பண்ணி பேசுனாங்க “என்றாள் அனு.
“அம்மா அங்க தனியா தான் அண்ணா இருகாங்க, அம்மா கிட்ட பேசுனதுல இருந்து அவங்கல பாக்கனும் அவங்க கூட இருக்கனுன்னு ஆசையா இருக்கு ” என்றாள் ஜெனி.
“நான் அம்மா கிட்ட எனக்கு சொத்து எதும் வேண்டாம் ஏதாவது அனாதை ஆசிரமத்து எழுதி குடுத்துருங்கனு சொல்லிட்டேன் அண்ணா “.
“இருக்குற சொத்துக்களை வச்சி ஆதரவற்றோர் இல்லம் ஆரம்பிக்க சொல்லி அம்மா தான் அண்ணா சொன்னாங்க, எனக்கும் அது தான் சரினு தோணுச்சு, அனுவும் சரினு சொல்லிட்டா அண்ணா “என்றாள் ஜெனி
“அப்போ எல்லாமே முடிவு பண்ணிட்டீங்க அப்படி தானா ”
“ஜெனி நீ என்ன பண்ண போறான்னு சொல்லிட, அனு எதுவுமே சொல்லலையே “என்றார் பிட்டர்
” ஜெனிஅக்கா கூட மதுரைக்கு போக போறேன், அங்க போய்த்தான் என்ன பண்ணலாம்னு யோசிக்கணும் அண்ணா “என்றாள் அனு.
” நீ எதுவும் யோசிக்க வேண்டாம், மதுரைல உள்ள சாப்ட்வேர்ட் கம்பெனி ஒன்னுல என் பிரண்ட் மேனேஜரா இருக்கான் அவன்கிட்ட பேசி உனக்கு ஜாப் வாங்கி தாரேன் சரியா, இதுக்கு மேல நீ எதும் பேசாத அனு”
“அண்ணே சொன்ன கேப்பல அனு ” என்றான் பிட்டர்.
“நீங்க சொல்லுற ஜாப்க்கு போறேன் அண்ணா “என்றாள் அனு.
“அனு நீ உன் அம்மா அப்பா வா பாக்க போறியா “என்றாள் ஸ்டெல்லா.
“நான் அம்மா அப்பாவை பார்க்க போகல மா, என்னால அவங்க பட்ட அவமானம் கஷ்டம் எல்லாம் போதும் இதுக்கு மேலயும் அவங்கள கஷ்ட படுத்த விரும்பல “என்றாள் அனு வருத்தத்துடன்.
“அம்மா ரொம்ப நேரமா போறோம் போறோம்னு சொல்லிடு இருக்கீங்க எங்க போக போறோம் எப்போ போக போறோம் “என்று கேட்டான் கிரிஷ்.
“அதுதானே பார்த்தேன் என்னடா இன்னும் நீ எந்த கேள்வியும் கேக்கலயேனு “என்றாள் ஜெனி.
“ஜெனிமா கேள்வி கேட்ட பதில் சொல்லுங்க “என்றான் கவின்.
“நாம மதுரைக்கு போக போறோம் போதுமா “
“பாக்கியம் ஆச்சி ஊருக்கு போறோமா அய்யா ஜாலி, லயா நாங்க ஆச்சிய பாக்கப்போறோமே “
என்று சந்தோசமாக குதித்துக் கொண்டே கூறினான் கவின்.
“நானும் வருவேனே ஆச்சிய பாக்க உங்க கூட ” என்றாள் லயா குட்டி.
பிட்டாரும், ஸ்டெல்லாவும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டனர். பின் ஸ்டெல்லா லயா விடம் “குட்டிமா கவின் கிரிஷ் முதல்ல போவாங்கலாம் கொஞ்ச நாள் கழிச்சி நான் நீ டாடி மூணு பெரும் போவோமாம் சரியா “என்றாள்.
“நோ நோ மம்மி, நான் கவி கிரிஷ் கூட தான் போவேன் “என்று கூறி அழுக ஆரம்பித்தால்.
பிட்டாரும் ஸ்டெல்லாவும் சேர்ந்து லயாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
கவின் கிரிஷ் இருவரும் அனுவின் இருபுறமும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அனு மட்டும் பழைய நினைவுகளின் தாக்கத்தில் தூங்காமல் கண் விழித்து இருந்தால்.
தமிழ்நாட்டில் ஒட்டன் சாத்திரத்தில் இருந்த வீட்டில் தன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தான் கதிரவன் .போனில் அழைப்புமணி இசைத்தது, அவன் அதை எடுத்து
” ஹலோ சொல்லுடா வேலை முடிஞ்சதா, உயிரோட தானா இருக்குறான், எந்த ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்காங்க எம்.எல்.ஏ மகன்டா யாருக்கும் எந்த சந்தேகமும் வராதுல. எதுக்கும் நீங்க கொஞ்ச நாளைக்கு அந்த ஊருல இருக்காதிங்க சரியா “என்றான்.
கதிரவன் சுவற்றில் வரையப்பட்டு இருந்த ரஞ்சனியின் படத்தை பார்த்து “உன்ன யாராவது தப்பா பாத்தாலே கண்ண நோண்டிருவேன் விமல் என்னடானா உன்ன பத்தி அசிங்கமா பேசுறான் அவன சும்மா விடலாமா அதான் அவன் கை கால் ரெண்டையும் ஒடச்சிட்டேன் “என்று கூறி சிரித்தான்.
கதிரவன் காரை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றான். அங்கு
அறையின் வாசலில் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி அமர்த்திருந்தனர். அவர்களிடம் சென்று “சார் என்ன சார் ஆச்சு விமல் தம்பிக்கு நேத்து கூட விழாவுக்கு வந்தாரே நல்லா தானா இருந்தாங்க திடிர்னு என்ன சார் ஆச்சு “என்றான் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு.
“நீ எப்படிபா இங்க “என்றார் எம்.எல்.ஏ.
“இந்த பக்கமா ஒரு வேலையா போய்டு இருந்தேன் அப்போ தான் உங்க வண்டி டிரைவர பாத்தேன் அவருதான் விஷயத்தை சொன்னாரு.”என்றான் கதிரவன்.
“நேத்து பசங்களோட பார்க்கு போயிருக்கான் அங்க ஏதோ பிரச்சனை ஆகி கைகலப்பு ஆகிருச்சி , என் மகன் தனியா வீட்டுக்கு வந்துடு இருந்தப்போ இப்படி பன்னிட்டாங்க “.
“பண்ணாது யாருனு கண்டு பிடிச்சிட்டிங்களா சார், தம்பிய இப்படி பண்ணவாங்களை சும்மா விடக்கூடாது சார் “என்றான் கதிரவன்.
“எல்லாம் எதிர்க்கட்சி காரங்க வேலைதான் என்கிட்ட மாட்டமலா போயிருவாங்க அன்னைக்கு இருக்கு அவங்களுக்கு “என்றார் எம்.எல்.ஏ.
கதிரவன் அறையின் கண்ணாடி வழியாக விமலை பார்த்து மகிழ்ந்து விட்டு,எம்.எல்.ஏ விடம் விடைப் பெற்றுச் சென்றான்.
கதிரவன் ஹரிக்கு கால் செய்தான். ஹரி கதிரவனின் நண்பன் இவர் டிடேக்டிவ் ஏஜென்சி வைத்துள்ளார்.
“ஹலோ ஹரி எப்படி இருக்குற, ரஞ்சினி பத்தி ஏதாவது தெரிஞ்சுதா, ஒரு வருசமா தேடிடு இருக்குற அவளை பத்தி ஒரு தகவலும் இல்ல. ப்ளீஸ்டா அவளை எப்படியாது கண்டுபிடிச்சிதாடா “என்றான் கதிரவன்.
“டேய் மச்சான் நானும் தேடிடு தான்டா இருக்குறேன். நீ ரஞ்சனி வீட்டை விட்டு போன உடனே சொல்லிருந்தா கூட கண்டு பிடிச்சிருக்கலாம், நீ என்னடானா நாலு வருஷம் கழிச்சு சொல்லுற “
“இப்போ கூட ரஞ்சனி விஷயமா தான் மும்பைக்கு வந்துருக்கேன் “.
“இங்க ஆதரவற்றோர் இல்லம் ஒன்னுல நாம ஊரு பொண்ணு தாங்கி இருந்ததா சொன்னாங்க. அந்த பொண்ணு அவங்க கூட எட்டு மாசம் டிராவல் பண்ணலாம் வேற வேற ஊருக்கு கடைசில மும்பைல உள்ள இல்லம்ல இருந்தலாம்” என்றான் ஹரி.
” கதிரவா நல்லா யோசிச்சி சொல்லு ரஞ்சனி வீட்டை விட்டு போகும் போது மாசமா இருந்தாங்களா “
“இல்ல ஹரி, ரஞ்சனி மாசமா இல்ல அப்போ “என்றான் கதிரவன்.
“இங்க இருந்த பொண்ணு மாசமா இருந்ததா சொல்லுறாங்க அதான் கேட்டேன் “என்றான் ஹரி.
“ரஞ்சனி வீட்டை விட்டு போய் நாலு வருசமா அவங்கள தேடமா என்னடா பண்ண ” என்றான் ஹரி
“வீட்டை விட்டு ரஞ்சனி போகும் போது, நான் அவளை தேடி போன தற்கொலை பணிப்பேன்னு லெட்டர் எழுதி வச்சிடு போய்ட்டா ஹரி”,
“நான் அவளை தேடி போன அவ ஏதாவது பண்ணிப்பாலோன்னு பயந்து தேடாமளே இருந்துட்டேன், அவ எங்க இருந்தாலும் நல்ல இருக்கட்டும்னு நெனச்சென் “என்று அழுதுக் கொண்டே சொன்னான் கதிரவன்.
“ரஞ்சனி என்ன விட்டு போய் நாலு வருஷம் கழிச்சு, ஒரு நாள் கோவில்ல வச்சி அவளோட அம்மாவா பாத்தேன், அவங்க என்கிட்ட வந்து என் பொண்ணு எங்கடா இருக்கானு கேட்டாங்க “
“நான் தெரியலனு சொன்னே, உடனே என் கன்னத்துல பளார்னு ஒரு அறை விட்டாங்க எனக்கு ஒரு நிமிஷம் என்ன நடந்ததுனு புரியல “என்றான் கதிரவன்.
“இதுக்கு தான் அவகிட்ட படிச்சி படிச்சி சொன்னேன் உன்ன நம்பாத நம்பாதனு கேட்டாளா அவ,இப்போ எங்க இருக்காலோ,எப்படி கஷ்ட படுறாளோ, உயிரோட என் பொண்ணு இருக்காளா இல்லையானு கூட தெரியலையே”
“கடவுளே என் பொண்ண உயிரோட என்கிட்ட கொண்டு வந்து செத்துருப்பா “என்று கூறி அழுதார் ரஞ்சனியின் அம்மா சாந்தி.
“அத்தை இப்படிலாம் பேசாதீங்க ரஞ்சனிக்கு எதும் ஆயிருக்காது அவ எங்க இருந்தாலும் நல்லா தான் இருப்பா “.
“நான் ஒரு விஷயம் கேக்குறேன் பதில் சொல்லு என் பொண்ணு உன் வீட்டுல இருந்து போகும் போது எவளோ பணம் கொண்டு போன, எத்தனை டிரஸ் எடுத்துட்டு போன சொல்லுடா “
கதிரவன் அமைதியா இருந்தான் “சொல்லுடா என்று கத்திக் கேட்டார் சாந்தி “
“அவ என் வீட்டுல இருந்து போகும் போது எதுமே எடுத்துட்டு போகல என்றான் கதிரவன் மெதுவாக “
“சாந்தி தலையில் அடித்து கொண்டு அழுக ஆரம்பிதார்”.
“கையில பத்து ரூவா கூட இல்லாம என் புள்ளைய தொரத்தி விட்டுட்டையேடா”
“ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் சொல்லுவாங்க, உன் மோகம் தீர்த்ததும் என் பொண்ணு தூரத்தி வீட்டையேடா “
“என் புள்ள பசித்தாங்க மாட்டாளேடா, கைல காசு இல்லாம என் பொண்ணு எப்படி கஷ்ட படுறாளோ, பசினு சொல்லி யாருகிட்டயும் யாசகம் கூட வாங்கியிருக்க மாட்டாளே, ஒரு வேளை பட்டினி கிடந்தே என் புள்ள செத்து போயிருக்குமோ ஐயோ என் புள்ள போச்சே போச்சே “என்று கூறி அழுதார் சாந்தி.
“கதிரவனின் தலை சுற்ற ஆரம்பித்தது அப்படியே தரையில் அமர்ந்து விட்டான், சாந்தி கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவனின் இதயத்தை ரணம் ஆக்கியது, ஒரு வேளை ரஞ்சுக்கு ஏதாவது ஆகி இருந்தா ” அவனின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது
“ஒரு மனம் அவளுக்கு எதும் ஆகி இருக்காது என்று சொல்ல, மற்றொரு மனம் சாந்தி சொன்னது போல் அவளுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்று எண்ணி அஞ்ச தொடங்கியது “.
கதிரவன் சாந்தியிடம் “அத்தை அவளுக்கு எதும் ஆகி இருக்காது எங்க இருந்தாலும் அவ நல்ல தான் இருப்பா, என்னால எவளோ சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கரம் அவளை கண்டு பிடிச்சி உங்க கிட்ட கூட்டிடு வரேன் “என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
ரஞ்சனி அம்மா கிட்ட பேசுனா அப்பறம் தான்டா எனக்கு பல விஷயம் புரிய ஆரம்பிச்சது, பணம் இல்லாம அவ எப்படி சாப்டுருப்பா, எங்க தூங்கிருப்பா, ஒரு பொண்ணு தனியா எங்க எப்படி இருக்காலோனு யோசிக்க யோசிக்க பயமா இருந்துச்சிடா, அப்பறமா தான் உன்கிட்ட ஹெல்ப் கேட்டேன்.
“ஹரி ப்ளீஸ் எப்படியாது அவளை கண்டு பிடிச்சி குடுத்துருடா 🙏🙏🙏”என்றான் கதிரவன்.
கதிரவனின் பலம் பலவீனம் இரண்டு மே ரஞ்சனி தான். கதிரவன் ரஞ்சனியை கண்டு பிடிப்பனா காலம் தான் பதில் சொல்ல வேண்டும் 🙏🙏🙏🙏.