அத்தியாயம் -35
கதிரவன் அனு மகிழ்ச்சியாக இருந்ததை இரு கண்கள் குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருத்தனார், “என்ன ஜெயிலுக்கு அனுப்பிட்டு நீ மட்டும் உன் பொண்டாட்டி பிள்ளைங்க கூட சந்தோஷமா இருக்கியா, உன்ன பழி வாங்காம விடமாட்டேன் கதிரவா ” என்றான் பெருமாள் சாமி.
அனு அகிலன் இருவரும் சுஜி கல்யாணத்துக்கு வேண்டிய பொருட்களை வாங்க திண்டுக்கல் சென்று கொண்டிருந்தன. அப்பொழுது அகிலின் காரை மறைத்த ஒரு கும்பல் அனுவை கடத்திச் செல்ல முயன்றது. அகிலன் அவர்களை எதிர்த்து சண்டையிடவே அகிலன் மற்றும் அனு இருவர் முகத்திலும் மயக்க மருந்தினை தெளித்து கடத்திச் சென்றனர்.
பின் கதிரவனுக்கு போன் செய்து அவனிடம் இருக்கும் சொத்துக்கள் மற்றும் பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வருமாறு கூறினான் பெருமாள் சாமி.
அங்கு அனு மற்றும் அகிலன் இருவரும் கட்டி வைக்கப் பட்டிருந்தனர். ” வா கதிரவா எப்படி இருக்க, உன்கிட்ட நான் உன்னோட நகைக்கடையை மட்டும் தானே எழுதி தர சொன்னேன், அதுக்கு என் சொத்து மொத்தத்தையும் புடுங்கிட்டு என்னையும் ஜெயிலுக்கு அனுப்பிட்டல்ல நீ “என்று கூறி கதிரவனை அடித்தான்.
“ப்ளீஸ் அவரை அடிக்காதிங்க ” என்றால் அனு.
” பார்றா புருஷன் மேல எவ்ளோ பாசம்னு “
” ரஞ்சனி பாப்பா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே உன்ன கடத்தி உன் பேர்ல இருக்கிற நகைக்கடையை எழுதி வாங்கலாம்னு பார்த்தேன். உன் புருஷன் உஷார் ஆகி உன்ன வீட்டுக்குள்ளேயே வச்சிருந்து என்கிட்ட இருந்து காப்பாத்திட்டான்”
” பாவம் இப்ப பாதுகாப்பு கொடுக்க மறந்துட்டான் போல “என்று கூறி சிரித்தான் பெருமாள்.
பின் கதிரவனிடம் ஒரு பத்திரத்தை நீட்டி “இதுல உன் சொத்து மொத்தத்தையும் என் பெயரில எழுதி கொடுக்கிறதா எழுதி இருக்கேன் இதுல கையெழுத்து போட்டுட்டு உன் பொண்டாட்டிய கூட்டிடு போ ” என்றான் பெருமாள்,
கதிர் கையெழுத்து போடுவது போல் சென்று அருகில் இருந்த பெருமாளை தாக்கி அவன் கையில் இருந்த கத்தியை பரித்து அவன் கழுத்தில் வைத்தான்.
“ஒழுங்கா ரஞ்சனியையும், அகிலையும் அவிழ்த்து விட சொல்லு, இல்லனா கத்திய கழுத்துல இறக்கிருவேன் ” என்றான் கதிர்.
அங்கிருந்து அடி ஆட்கள் அவர்களை அவிழ்த்து விட்டனர். பின் அங்கிருந்து ஆள் ஒருவன் அனுவை இழுத்து அவள் கழுத்தில் கத்தியை வைத்தான் இப்போ மட்டும் நீ என் அண்ணனா விடல இவ உயிரோட இங்க இருந்து போக மாட்ட என்றான்.
கதிரும் பெருமாளை விட்டுவிட்டான். அகில் பின்னாலிருந்து அடியாளை தாக்கி அனுவை மீட்டு விட்டான். அப்பொழுது அங்கு பெரிய சண்டையே நடந்துக் கொண்டிருந்தது . ஒரு பக்கம் கதிர் மற்றொரு பக்கம் அகிலன் என்று இருவரும் சேர்ந்து அங்கிருந்தவர் களை அடி வெளுத்து விட்டனர்.
பெருமாள் மறைந்து இருந்து வந்து அனுவை கத்தியால் குத்தப் போக கதிர் நடுவில் வந்து கத்திக்குத்தை வாங்கிக் கொண்டான். கத்தி ஆழமாக கதிரின் வயிற்றில் இறங்கி நிறைய ரத்தம் வெளியேறியாது.
அகில் பெருமாள் பிடித்து அடிக்க ஆரம்பித்தான். சற்று நேரத்தில் போலீஸ் வந்து அவனை இழுத்து சென்றது. கதிர் அனுவின் மடியிலேயே மயங்கி சரிந்தான். அனு அழுதுக் கொண்டே இருந்தாள்.அகில் கதிரை தூங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
கதிரின் உடம்பிலிருந்து அதிக ரத்தம் வெளியேறி இருக்காவே, அவனுக்கு புதிதாக ரத்தம் ஏத்த வேண்டி இருந்தது. கதிரவனின் ரத்தமும், அகிலனின் ரத்தமும் ஒரே பிரிவாக இருக்க அகிலனே கதிரவனுக்கு ரத்தம் வழங்கினான். நீண்ட போராட்டத்திற்கு பிறகு கதிரவன் காப்பாற்றப் பட்டான்.
ராமசந்திரனின் குடும்பம் மொத்தமும் கதிரவனை காண மருத்துவமனைக்கு வந்திருந்தனர். ராமசந்திரன் கதிரவனிடம் இயல்பாக பேசினார். கதிர் அனுவின் முன்னால் வைத்து ராமசந்திரனிடம் மன்னிப்புக் கேட்டான். அவரும் மன்னித்து விட்டதாக கூறி சிரித்தார்.
பின் கார்த்திக் கதிரவனிடம் மன்னிப்புக் கேட்டான். பின் இருவரும் கைக்குலுக்கி சமாதானம் ஆகிவிட்டனர். கதிர் அகிலனிடம் கைக்குப்பி வணங்கி “நான் உங்கள நிறைய தடவை அசிங்க படுத்திருக்கேன், உங்க மனசு கஷ்ட படுற மாதிரி பேசியிருக்கேன் அது எல்லாத்தையும் மறந்துட்டு இன்னைக்கு என்ன காப்பாத் திருக்கிங்க உங்க உதவிய எனக்கும் நான் மறக்க மாட்டேன் ரொம்ப நன்றி”என்றான் கதிரவன்.
மூன்று நாட்கள் மருத்துவ மனையில் இருந்து விட்டு அதான் பின் கதிரவன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டான். அனுவும் கதிருடன் அவன் வீட்டுக்கு செல்ல இருந்தாள். கதிர் மறுத்து விட்டான். ஒரு நல்ல நாள் பார்த்து அழைத்து செல்வதாக கூறிவிட்டான். பெரியவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
சுஜின் திருமணத்திற்கு கதிரவனின் மொத்தக் குடும்பமும் சென்று இருந்தது.ஜெனி மட்டும் அவளது அம்மா இருவரும் முதல் நாளே சென்று விட்டனர். திருமணம் நல்ல படியாக முடிந்தது. மேடையில் ஜெனியும் அகிலனும் அருகருகில் நின்றிருந்தனார். அதை பார்த்த கதிரவன் அனுவிடம் ஜெனிக்கும் அகிலனுக்கும் திருமணம் செய்து வைத்து விடுவோமா என்றான்.
அனுவிற்கு அது சரி என்று படவே அன்றே அனு இருவரிடமும் பேசினால் முதலில் இருவரும் தயங்கினாலும் கடைசியாக அனு அவர்களை சம்மதிக்க வைத்து விட்டாள். ஜெனியின் அம்மா மற்றும் ராஜி அத்தையிடம் அனு இவர்களது திருமணத்தை பற்றி கூற அனைவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர்.
ராமசந்திரன் அன்றே நல்ல நாளாக இருப்பதால் அன்று மாலையே நிச்சயதார்த்தம் செய்து விடலாம் என்று கூறினார். அவர் கூறியது போல் அன்று மாலையே அனைத்து சொந்தப்பந்தங்கள் முன்னிலையிலும் ஜெனி மட்டும் அகிலன் நிச்சயம் நல்லப் படியாக நடந்து முடிந்தது.
திருமணத்தை ஒரு மாதம் கழித்து, KR திருமண மண்டபத்தின் திறப்புவிழா அன்றே இவர்களது திருமணத்தையும் வைக்குமாறு கதிரவன் ராமசந்திரன் வேண்டு கோள் வைத்தான். எனது மண்டபத்தில் நடக்கும் முதல் திருமணம் இவர்களுடையதாக இருக்க வேண்டும் என்று கதிரவன் கூறினான்.
கதிரவனின் ஆசை படியே அனைத்தும் நடந்துக் கொண்டிருந்தது. ஒரு நல்ல நாளில் அனுவையும் குழந்தை களையும் கதிரவனின் வீட்டிற்கு அழைத்து சென்று மிகவும் சந்தோசத்துடன் அவர்களை விட்டுவிட்டு வந்தனர் ராமசந்திரனின் குடும்பத்தார்.
அன்று இரவு குழந்தைகள் இருவரும் அவர்களது தாத்தா பாட்டியுடன் உறங்க சென்று விட்டனர். அனு அவர்களை அனுப்பிவிட்டு கதிரின் அறைக்கு சென்றாள் அங்கு படுக்கை மொத்தமும் மலர்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது. “டேய் மம்மு என்னடா இதுலாம், இன்னும் சின்ன பசங்க மாதிரி பண்ணிட்டு இருக்குற இப்போ நம்மளுக்கு நாலு வயசுல ரெண்டு பசங்க இருக்காங்க மறந்துராதடா “என்றாள் அனு.
“இரண்டு பசங்க இல்ல இன்னும் இருபது பசங்க பொறந்தாலும் நான் இப்படி தான் இருப்பேன், அஞ்சு வருசமா என்ன தனியா படுக்க விட்டுடல, இரு இனிமேல் உன்ன தூங்கவே விடாம இருக்கப் போறேன்” என்று கூறி அனுவின் இதழ்களை அவன் இதழ்களால் மூடினான். விடியும் வரை அனுவை தூங்க விடாமல் இம்சை செய்தான்.
காலை எட்டு மணி ஆகியும் அனு எழுந்திரிக்க வில்லை, கதிர் முதலில் எழுந்து போய் பசங்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான், வேலுசாமி பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். லட்சுமி குழந்தை களுக்கு பால் ஆற்றிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது பாண்டி அழுதுக் கொண்டே வந்து கதிரவனின் காலில் விழுந்து மன்னித்து விடுமாறு கூறினார்.” நீங்க என்ன தப்புப் பண்ணீங்க எதுக்காக நான் உங்கள மன்னிக்கணும் “என்றான் கதிர்.
பாண்டி முதல் நாள் கடையில் வைத்து அனுவை பற்றி தப்பாக பேசியதில் இருந்து, கதிர் அனுவை பிரிக்க நினைத்து இவருக்கும் லெட்டர் மட்டும் போட்டோஸ் அனுப்பியது வரை, மேலும் அனுவின் தந்தையை தள்ளிவிட்டது வரை கூறி முடித்தான். பாண்டி கூறியதை அனுவும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.
கதிர் பாண்டியின் சட்டையை பிடித்து அடிக்க கை ஓங்கி விட்டான். அனு அவனை தடுத்து வேண்டாம் என்று தலை அசைத்தால்.”ஏன்டா உன்ன நம்பி உள்ள விட்டதுக்கு என் புள்ளைங்க வாழ்க்கையே கெடுக்க பாத்துருக்குற நீ “என்று கூறி வேலுசாமி அவரை நன்கு அடித்து விட்டார்.
“இப்போ மட்டும் எப்படி திடிர்னு வந்து எல்லா உண்மையும் சொல்லுறீங்க” என்றான் கதிர்.
“உன் குடும்பத்தை பிரிச்ச பாவத்துக்கு என் பொண்ணு கூட வேலை பாக்குற ஒருத்தன இழுத்துட்டு ஓடி போய்ட்டா, அதை கேள்விப்பட்டு அதிர்ச்சில வடிவுக்கு பக்கவாதம் வந்து ஒரு கை கால் இழுத்துச்சிப் பா, இப்போ நடக்க முடியாம பேச முடியாம படுத்த படுக்கையா இருக்கபா “என்றார் பாண்டி அழுதுக் கொண்டு. பின் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு சென்று விட்டார்.
ஜெனி, அகிலனின் திருமண நாளும் வந்தது.கதிர் ஜெனி மட்டும் அகிலை ரிப்பன் வெட்டி மண்டபத்தை திறந்து வைக்குமாறு கூறினான்.ஜெனி சற்று தயங்கவே ” ஜெனி நீங்களும், அகிலனும் இல்லனா நானும் அனுவும் இப்படி உயிரோட இருந்திருக்க முடியாது, அதுனால நீங்க தான் மண்டபத்தை திறந்து வச்சி எங்கள வாழ்த்தணும் ” என்றான்.
கதிரின் ஆசை படியே அனைத்தும் நடந்தது. ஜெனி அகிலின் திருமணத்திற்கு லண்டனில் இருந்து பீட்டர், ஸ்டெல்லா மற்றும் லயா வந்திருந்தனார்.
கதிர் மற்றும் ராமசந்திரனின் குடும்பத்தார் பீட்டர், ஸ்டெல்லா விடம் நன்றி தெரிவித்தனர்.
முகூர்த்த நேரத்தில் அகில் ஜெனியின் கழுத்தில் தாலியை காட்டி அவளை முழு மனதுடம் மனைவியாக என்றுக் கொண்டான்.
நாட்கள் கடந்தன கதிர் மருத்துவ மனையில் மிகவும் டென்ஷனாக அமர்ந்து இருந்தான். அவன் அருகில் லட்சுமி, வேலுசாமி மட்டும் ராமசந்திரனின் குடும்பத்தார் அமர்ந்து இருந்தனர். அறைக்கு உள்ளிருந்து அனு காத்தும் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. சற்று நேரத்தில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. நர்ஸ் வெளியே வந்து கதிரிடம் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக கூறினார்.
அனுவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. முதல் பிரசவத்தின் போது செய்ய முடியாத அனைத்தையும், இந்த முறை செய்து அவர்களது ஆசையா தீர்த்துக் கொண்டனர். கதிர் மற்றும் அனு குடும்பத்தார்.
குழந்தையை கதிரின் கையில் குடுத்தார் நர்ஸ், குட்டியாக ரோஜாப் பூ குவியலை இருந்தாள் அந்த குட்டி தேவதை. குழந்தையை லட்சுமியிடம் கொடுத்துவிட்டு அனுவை பார்க்க சென்றான் கதிர். அனு மிகவும் சோர்ந்து போய் படுத்து இருந்தாள். அவள் நெற்றில் முத்தமிட்டு i love u செல்லம் என்றான். அனுவும் love u மாமு என்றாள்.
ஒரு மாதம் கழித்து குழந்தைக்கு பெயர் சுட்டு விழா நடத்தப் பட்டது. அதற்கு ஜெனி நடக்க முடியாமல் நடந்து வந்தாள் ஆம் ஜெனி இப்பொழுது எட்டு மாதங்கள் கர்ப்பமாக இருந்தாள். அவள் ஆசை பட்டது போலவே ஒரு ஆதரவற்றோர் இல்லத்தை ஆரம்பித்து அகிலனும் ஜெனியும் சேர்ந்து நிர்வாகித்து வருகின்றனர்.
கதிரவன் சக்கரவர்த்தி, அனுரஞ்சனி இவர்களது செல்ல மகளுக்கு காவிய வர்ஷினி என்று பெயர் சுட்டினர். இனி கதிரவன் அனுவின் வாழ்க்கையில் இன்பம் மட்டுமே நிறைந்து இருக்கும்.
வாசகர் தெய்வங்களே
“செல்லமடி நீ எனக்கு ” நான் எழுதும் முதல் கதை, என் கதையை படித்து எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த வாசகர் தெய்வங்களுக்கு என் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.