அத்தியாயம் – 34
அனு பள்ளப்பட்டிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தாள், ஒட்டன் சத்திரத்தை நெருங்க நெருங்க அனுவிற்கு மிகவும் படபடப்பாக இருந்தது. ஒரு பக்கம் அவனை பார்த்து விடக்கூடாது என்று கோபத்துடன் நினைத்தால் மறுபக்கம் அவன் கண்ணில் பட்டுவிட மாட்டானா என்று ஏங்கவும் செய்தால்,
கார் மெயின்ரோட்டில் இருந்த KR ஜவுளிக்கடையை தாண்டி சென்ற பொழுது திறப்புவிழா அன்று அவளை கதிர் அழைத்துச் சென்ற விதத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள். பின் அதே கடையில் வைத்து அவளை அடித்ததை நினைத்து கவலையும் கொண்டாள்.
அனு இப்போ உணர்ச்சிகளின் கலவையாக இருந்தாள். அனு என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
“என்ன அனு பிளாஷ் பேக் ஓடிடு இருக்குதா உனக்குள்ள “என்றாள் சுஜி.அனு சென்ற காரில் சுஜி, வள்ளி, அகிலன் மட்டுமே இருந்தனர். வள்ளி முன்னால் இருந்த சிட்டில் தூங்கி கொண்டிருந்தார். அகில் வண்டி ஒட்டிக் கொண்டிருந்தான்.
“அப்படிலாம் எதுவும் இல்ல சுஜி ” என்றாள் அனு.
“அக்கா நீ இன்னும் கதிரவன் அத்தான் மேல கோவமா தான் இருக்கியா, அவரு ரொம்ப நல்லவருக்கா உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்குற, இப்போ வரைக்கும் உன்ன தேடிட்டு தான் இருக்காரு “.
“கோவம் இல்லாம எப்படி டி இருக்கும் என் கண்ணு முன்னாடியே அப்பாவ அடிச்சி தள்ளிவிட்டான் கதிர் ” என்றாள் அனு.
“உனக்கு அத்தான் அடிச்சது மட்டும் தான் தெரியும், ஆன அவரை கோவப் படுத்தி அடிக்க வச்சது கார்த்திக் அண்ணா “
“என்ன சுஜி சொல்லுற நீ “
“ஆமா அக்கா அன்னைக்கு அப்பா, அண்ணா, அகில் அத்தான் மூணு பேரும் கதிர் அத்தான் கிட்ட பேச போனாக, இவங்கள கதிர் அத்தானும் உக்கார சொல்லி நல்லாத்தான் பேசிட்டு இருந்திருக்காங்க “
“கதிர் அத்தான் கிட்ட அப்பா தான் உன்ன அவருக்குடா அனுப்பி வைக்க சொல்லிருக்காரு, அதாவது ஒரேடியா அனுப்பி வைக்க சொல்லிருக்காரு “
“கார்த்திக் அண்ணா ஒரு படி மேல போய் டிவோர்ஸ் பேப்பரை குடுத்து கையெழுத்து போடா சொல்லி கதிர் அத்தான் கிட்ட சொல்லிருக்கங்க “
“அத்தான் கையெழுத்து போட முடியாதுனு சொன்னதும், உன் கையெழுத்து இல்லாமலே எங்களால அனுவுக்கு டிவோர்ஸ் வாங்கி தரமுடியும் “
“அனுவ உன்கிட்ட இருந்து பிரிச்சி, உன் கண்ணுல படாத இடத்துக்கு அனுப்பி வச்சி,அவளுக்கு வேற கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ வைக்கப் போறேன்னு, கார்த்திக் அண்ணா சொல்லிருக்காரு “
“அண்ணா பேசுனதுல கோவப் பட்டுத்தான் அத்தான் கார்த்திக் அண்ணா சட்டைய புடிச்சிட்டாரு அதுல சின்னதா கைகலப்பு ஆகிருச்சி, அப்பா அண்ணாவ தடுத்துக்கிட்டு இருந்தப்போ தான் கதிர் அத்தான் கை தெரியாம அப்பா மேல பட்டுருச்சி, கதிர் அத்தான் வேணுனே அப்பாவை தள்ளிவிடல “
“இதுலாம் உனக்கு எப்படி சுஜி தெரியும் “என்றால் அனு
“கார்த்திக் அண்ணா தான் கீதா அண்ணி கிட்ட சொல்லிருக்காரு, அண்ணி என்கிட்ட சொன்னாங்க “
“சுஜி நீ சொல்லுறதுலாம் உண்மையா”
“நான் என் அக்கா உன்கிட்ட பொய் சொல்ல போறேன், ஒரு நாள் அப்பாவை கோவில்ல வச்சி அத்தான் பாத்துருக்காரு உடனே அப்பா கிட்ட வந்து, கடைல நடந்த தப்புக்கு என்ன மன்னிருங்கனு கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாரு “
“அப்பா தான் நீங்க மன்னிப்புக் கேட்டாப்புல என் பொண்ணு திரும்ப கிடச்சிருவாளானு சொல்லிடு வந்துட்டாரு “.
“அத்தான் நீ இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாரு அக்கா,அவரோட எல்லாக் கடைலையும் அவரோட ரூம்ல உன்ன மாதிரியே ஒரு சிலை செஞ்சி வச்சிருக்காராம் உன்ன பாத்துட்டே இருக்கணும்னு “
“அத்தான் கிட்ட போய் பேசு அக்கா, அவரோட சேர்ந்து வாழு பாவம் அக்கா அவரு “
அனு எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள், இரண்டு நாட்கள் வேறு எதை பத்தியும் நினைக்காமல் அவள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழித்தால்.
ஜெனியிடம் அனு கவின், கிரிஷ் போட்டோ வீடியோகளை அனுப்பு மாறுக் கூறினான் கதிரவன்.
குழந்தைகள் இருவரின் போட்டோ களை லட்சுமி வேலுசாமியிடம் காட்டி “அம்மா இந்த குழந்தைகல பாருங்க, பார்க்க ரொம்ப அழகா இருக்காங்களா” என்றான்.
“ஆமா தம்பி இரண்டு பேருமே குட்டியா அழகா இருக்காங்க, இவங்க முகத்தை பார்த்தா யாரோட முகம் மாதிரியே இருக்கு யாருனு டக்குனு நியாபகம் வர மாட்டேங்கிது ” என்றார் லட்சுமி.
“ரஞ்சனி முகம் மாதிரியே இருக்குல்ல”
“ஆமா தம்பி அப்படியே என் தங்கம் மாதிரி தான் இருங்காங்க, எப்படிடா “
“உங்க தங்கத்தோட புள்ளைங்க அவ மாதிரி இல்லாம வேற யார மாதிரி இருப்பாங்க “என்று கூறி சிரித்தான்.
“கதிரவா நீ என்னடா சொல்லுற இந்த பசங்க ரஞ்சனி ஓட பசங்களா ” என்றார் வேலுசாமி.
“ஆமா அப்பா இந்த குழந்தைங்க எனக்கும் அனுவுக்கும் பொறந்த குழந்தைங்க, உங்க பேர புள்ளைங்க பா, அனு வீட்டை விட்டு போகும் போது இரண்டு மாசம் கர்ப்பமா இருந்துருக்க பா, அதுவும் இரட்டை குழந்தைகள் ” என்றான் கதிர்.
“முருகா என் புள்ளை வாழ்க்கை இப்படியே இருந்துருமோனு நினைச்சேன், அதுக்கு ஒரு வழிய காட்டிடபா, என் மருமகளையும் என் பேரப் புள்ளைங்களையும் கண்ணுல காட்டிட பா “என்று கூறி கண்ணீர் விட்டார் வேலுசாமி.
“தம்பி எனக்கு இப்போவே ரஞ்சனியையும்,பசங்களையும் பாக்கணும் வா பா போலாம் “என்றார் லட்சுமி.
“அம்மா கொஞ்சம் பொறுங்க நான் முதல்ல அனுவ பார்த்து பேசுறேன், அப்பறமா நீங்க போய் அவங்கள பாருங்க “
“சரி பா, பசங்க பேரு என்ன தம்பி “
“மூத்தவன் கவின் , இளையவன் கிருஷ்ணா “
“நல்ல இருக்குடா தம்பி, நீ அனு கிட்ட வேகமா பேசுடா “என்றார் லட்சுமி.
அனு பள்ளப்பட்டியிலிருந்து மதுரைக்கு வந்துவிட்டாள், ஜெனிடம் “அக்கா சுஜி கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, அவளுக்கு என்ன அக்கா கிப்ட் பண்ணலாம் “
” நகை ஏதாவது வாங்கி கொடுக்கலாம் அனு “
“சரி அக்கா இப்போவே போய் நகை வாங்கிட்டு வந்துருவோமா”
“சரி அனு பசங்க தூங்கிட்டு தான இருக்காங்க அம்மா அவங்கள பாத்துக்காட்டும் நாம போய்ட்டு வந்துருவோம் “என்று கூறி இருவரும்கிளம்பி சென்றனர்.
ஜெனி டிரைவரிடம் மினி மால் போக சொன்னால், கடை வந்ததும் அனு ஜெனிடம் “அக்கா நீங்க உள்ள போய் நகை பாத்துட்டு இருங்க, நான் ATM போய்ட்டு கொஞ்சம் பணம் எடுத்துட்டு வந்துறேன் “
“நானும் கூட வரவா அனு”
“இல்ல வேண்டாம் அக்கா பக்கத்துல தான் அக்கா ATM இருக்கு போய்ட்டு உடனே வந்துறேன்” என்று கூறி விட்டு சென்றாள் அனு.
ஜெனி உள்ளே சென்றதும் மேனேஜரிடம் கதிரவன் இருக்கிறாரா என்று கேட்டாள். சார் முக்கியமான வேலைய வெளிய போயிருக்காங்க என்றார்.
“அனு வர நேரம் இவரு கடையில இல்லாம போய்டாறே” என்று புலம்பிக் கொண்டே சென்றாள் ஜெனி.
அனு பணத்தை எடுத்துக் கொண்டு மினிமாலுக்குள் நுழைந்தால், நகை கடை மூன்றாவது தளத்தில் இருந்ததால் லிப்ட் செல்ல சென்றாள். அப்பொழுது லிப்ட் குளோஸ் ஆக போக அனு கையை நீட்டினால் கதவு திறந்ததும் உள்ளே சென்றாள்,
உள்ளே ஒரு ஆண் நின்று கொண்டிருந்தார், அனு அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல் 3வது பட்டனை அலுத்தி விட்டு ஒரு ஓரம் போய் நின்றுக் கொண்டாள். அந்த ஆணும் அனுவை நிமிந்து பார்க்காமல் போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
லிப்ட் பாதியில் நின்று விட்டது. அப்பொழுது தான் அனுவும், அந்த ஆணும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தனர். பார்த்ததும் அந்த ஆண் “ரஞ்சுமா “என்று கூறி ஓடி சென்று அனுவை காட்டிக் கொண்டான். ஆம் அந்த ஆண் மகன் கதிரவன் தான்.
அனு கதிரவனை பார்த்ததும் அவளையும் மீறி கண்கள் கலங்க மாமு என்றாள், மெதுவாக.
கதிர் அனுவை காட்டி பிடித்து “என்னை விட்டு ஏண்டி போன நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா, என்கிட்ட வந்து சண்டை போற்றுருக்க வேண்டியது தான, இல்ல உன் கோவம் திற அடிச்சிருக்க வேண்டியது தான அதை விட்டு ஏண்டி போன “
“நீ இல்லாம என்னால இருக்க முடியாதுனு உனக்கு தெரியும்ல இருந்தும் ஏண்டி போன “என்று கூறிக் கொண்டே அனுவின் முகம் முழுவதும் முத்தம் குடுத்துக் கொண்டே இருந்தான், கதிரின் கண்ணிரால் அனுவை அபிஷேகம் செய்து கொண்டிருந்தான்.
“செல்லம் பேசுடி ப்ளீஸ், நான் உன்ன அடிச்சது தப்பு தான் உன் கோவம் திற என்ன அடிச்சிக்கோ செல்லம் ” என்று கூறி அனுவின் கையை எடுத்து அவன் கன்னத்தில் ஓங்கி ஓங்கி அரைந்துக் கொண்டே இருந்தான். அனு அவனிடம் இருந்து கையை இழுத்துக் கொண்டாள்.
“ப்ளீஸ் பேசுமா, இன்னும் உன் கோவம் குறையலைனா இந்தா இந்த கத்திய வச்சி என் கழுத்தை அறுத்துக் கொன்னுடு. நீ இல்லாம வாழுறதுக்கு உன் கையாள சாகுறதே மேல் “என்று கூறி அனுவின் கையில் கதிர் தற்காப்புகாக வைத்திருக்கும் கத்தியை கொடுத்தான்.
அனு கத்தியை எரிந்து விட்டு, கதிரை வெறி பிடித்தவள் போல் அடிக்க ஆரம்பித்தால், கதிரும் அனுவை தடுக்காமல் அவள் குடுத்த அடிகளை வாங்கிக் கொண்டான். அனு சோர்ந்து போய் உக்காந்து அழ ஆரம்பித்தால்.
“செல்லம் நான் பண்ணாது தப்பு தான் என்ன மன்னிச்சிருடி, நான் உன்ன அடிச்சிருக்க கூடாது, திட்டிருக்க கூடாது, உன்ன நான் வீட்டுக்குள்ளயே அடைத்து வச்சிருக்க கூடாது எல்லாம் என் தப்பு தான் “என்று கூறி அனுவின் காலில் விழுந்துவிட்டான்.
அனு அவனை எழுப்பி அவன் சட்டையை பிடித்து” ஏன்டா என்ன சந்தேகப்பட்ட, நான் எங்க போறேன் யாரை பாக்குறேன்னு பாக்குறது என் பின்னாடி ஆள் அனுப்புனா, எனக்கும் அகிலன் அத்தானுக்கும் நடுவுல உள்ள உறவை பத்தி உனக்கு தெரியாத, தெரிஞ்சும் என்டா அப்படி பண்ண ” என்றாள்.
” நீ அடிச்சதுக்கோ, இல்ல திட்டுனதுக் கோ நான் வீட்டை விட்டு போகலடா, எனக்கு தெரியும் என்ன அடிக்குறதையும் அடிச்சிட்டு நீ உக்காந்து அழுதுட்டு இருப்பன்னு”
“அனு மா நான் ஏன்டா உன்ன சந்தேகப் பட போறேன், நீ என் உயிர்டா உன்ன போய் நான் எப்படி டா சந்தேகப்படுவேன்,உன் மேல சத்தியமா நான் யாரையும் அனுப்பலாமா “
“அப்போ எனக்கு வந்தா லெட்டர் போட்டோஸ் எல்லாம் யாருடா அனுப்புனாங்க “என்றாள் அனு.
“எனக்கும் அதே மாதிரி போட்டோஸ் லெட்டர்லாம் வந்தது நீயும் நானும் ரெஜிஸ்டர் ஆபீஸ் போய்ட்டு வந்தோம்ல அன்னைக்கு , எனக்கு தான் உன்ன பத்தி தெரியுமே டி என் செல்லம் எப்பவும் எந்த தப்பும் பண்ண மாட்டா,நான் அந்த லெட்டர் எல்லாத்தையும் அப்போவே கிழிச்சி போட்டுட்டேன் ” என்றான் கதிர்.
“அனு நான் என் உன் பேருல உள்ள சொத்து எல்லாத்தையும் என் பேருல எழுதி வாங்குனேனு தெரியுமாடா ” என்றான் கதிர்.
“அதான் அன்னைக்கே சொன்னயே பாதுகாப்புக்குனு, என் மேல நம்பிக்கை இல்லாம தான எழுதி வாங்குன “
“அனு இன்னோரு தடவை உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லனு சொன்ன, உன் வாயில பல்லு இருக்காது பாத்துக்கோ என்றான் கோவமாக “
“எப்போ பாத்தாலும் இப்படி கோவாப் படுறது, என்ன அடிக்குறது இத தான நீ பண்ணிட்டே இருக்குற “என்றாள் அழுதுக் கொண்டே.
“அனு அழாதமா சாரி இனிமேல் நான் உன் மேல கோவா படமாட்டேன் நீயும் இந்த மாதிரி பேசாத, நான் பாதுகாப்புக்குனு சொன்னது என் பாதுகாப்பு இல்லடி, உன்னோட பாதுகாப்புக்கு “.
“ஒரு நிமிஷம் இருடி என்று கூறி அனுவின் பெயரில் இருக்கும் பேங்க் பேலன்ஸை கட்டினான். அதில் சில பல கோடிகள் இருந்தன. இது ஒரு பேங்க்ல இருக்குற பேலன்ஸ் தான். உன் பேருல நம்பிக்கை இல்லாம தான் உன் அக்கௌன்ட்ல இவளோ பணம் போட்டு வச்சிருக்கேனா “
“அப்பறம் ஏன்டா எழுதி வாங்குன சொல்லுடா “
“எல்லாம் அந்த பெருமாள் சாமிக்கு பயந்து தான் இப்படிலாம் பண்ணினே ” என்று கூறினான்.
பின்னர் பெருமாள் சாமி பற்றியும், அவன் கடையை கேட்டதுப் பற்றியும்,
கதிரை கொல்ல முயற்சி செய்தது பற்றியும்,சொத்து அனு பேரில் இருப்பதால் அவளை கடத்த நினைத்து,கடைசியாக அவனை ஜெயிலுக்கு அனுப்பியது வரை அனைத்தையும் கூறி முடித்தான்.
“இதெல்லாம் ஏன்டா என்கிட்ட முதல்லயே சொல்லல நீ “.
“சொல்லியிருந்தா பயந்துருவேன்னு நினைச்சி தான் டி சொல்லாமா விட்டுட்டேன் “
“நீ சொல்லிருந்தா இந்த மாதிரி எல்லாம் நடந்து இருக்குமாடா, நானும் உன்ன விட்டு போய் கஷ்ட பட்டுருக்க மாட்டேன்ல டா “என்று கூறி அழுதாள்.
“நீ இந்த அளவுக்கு கஷ்ட படுவானு நான் நினைக்கலடி சாரி டி என்ன மன்னிச்சிருடி “என்று அனுவின் கையை பிடித்துக் கொண்டு அழுதான். கதிரின் கண்ணிரால் அனுவின் கைகளை கழுவி பாவமன்னிப்பு வேண்டினான்.
“மாமு அழாதடா, நீ அழுறத பார்க்க கஷ்டமா இருக்குடா “என்றாள் அனு.
“செல்லம் உன் வாயில இருந்து இந்த வார்த்தையை கேட்டு எத்தனை வருஷம் ஆகிருச்சி டி “
“ரஞ்சு என்ன விட்டு எங்கையும் போயிராத டி நீ இல்லாம என்னால சத்தியமா இருக்க முடியல டி, நமக்குள்ள இன்னொரு பிரிவு வந்தா கண்டிப்பா நான் சேத்தே போயிருவேன் டி இது உன்மேல சத்தியம் “
“இப்படிலாம் பேசாதடா மாமு ” என்றாள் அனு.
கதிர் அனுவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான் “டேய் எரும போதும் டா எவளோ நேரம் தான் இப்படி முத்தம் குடுத்துட்டே இருப்ப, லிப்ட் குள்ள இருக்குறது மூச்சு முட்டுதுடா யாருக்காவது போன் பண்ணி லிப்ட் அஹ சரி பண்ண சொல்லுடா “.
“செல்லம் இரு லிப்ட் இப்போ திறந்துரும்,நாம லிப்ட் குள்ள மாட்டி ஒரு மணி ஆக போகுது ஒரு மணி நேரம் ஆனதும் லிப்ட் அதுவாவே திறந்துறும் “
“உனக்கு எப்படி டா அது தெரியும் “
“ரஞ்சு நம்ம கடை லிப்ட் பத்தி எனக்கு தெரியாத, லிப்ட் ஒரு வேலை பதில ஸ்டாப் ஆன ஒரு மணி நேரத்துல ஆட்டோமேட்டிக்கா ஓபன் ஆகுற மாதிரி செட் பண்ணி வச்சிருக்குறேன்”
“எனது இது உன் கடையா “
“இல்லடி நம்ம கடை ” என்றான் கதிர் அனுவின் தலையில் செல்லமாக முட்டி.
கதிர் கூறியது போல் சற்று நேரத்தில் லிப்ட் ஓபன் ஆனது கதிர் அனுவை அவனது அறைக்கு அழைத்து சென்றான். அங்கு அனு போல் இருந்த சிலையை பார்த்து அவள் அப்படியே நின்று விட்டாள்.
“டேய் மாமு அப்படியே என்ன மாதிரியே இருக்குடா”என்றாள் அனு
“ஆமா செல்லம் உன் போட்டோவ காட்டி இதே மாதிரி வரணுன்னு கூடவே இருந்து செய்ய வச்சி வாங்கிட்டு வந்தேன் “
“அனுமா ரொம்ப வருஷம் ஆச்சுடி தேன் குடிச்சி ப்ளீஸ் அசையாம அப்படியே இரு. கொஞ்சமா தேன் குடிச்சிக்கிறேன் “
“எரும மாடே கடையில இருக்கும் போது என்ன பேச்சுடா பேசுற ” என்றாள் சிறு வெக்கத்துடன்.
“இந்த ரூம்குள்ள என்ன தவிர யாரும் வர மாட்டாங்க டி “என்று கூறிக் கொண்டே அனுவை நெருங்கினான்
“கதிர் வேண்டாம் டா விட்டுரு”என்று கூறிக்கொண்டே பின்னால் நகர்ந்துந்தால்.
கதிர் அவளை அருகில் இழுத்து அவள் உதடுகளின் அருகில் செல்லும் போது சரியா அனுவின் போன் இசைத்தது. “ரொம்ப வருஷம் கழிச்சி இப்போ தாண்டா என் பொண்டாட்டி பக்கத்துல போறேன் அது பொறுக்களையாட உங்களுக்கு, எவன்டா அது சிவ பூஜைல கரடி மாதிரி “என்று கூறி புலம்பி கொண்டிருந்தான்.
அனு போனை எடுத்து “ஹலோ அக்கா “என்றாள்.
“அனு எங்க இருக்க நீ, ATM போய்ட்டு வர இவளோ நேரமா,ஏதாவது பிரச்சனையா மா அதான் வர நேரம் ஆகுதா சொல்லு “என்றாள் ஜெனி கொஞ்சம் டென்ஷன் ஆக.
“அக்கா பிரச்சனைலாம் எதுவும் இல்லை நீங்க டென்ஷன் ஆகாதீங்க”
“இப்போ எங்க இருக்க அனு நீ “
“அக்கா நான் அவருக்குடா இருக்கேன் “என்றாள் வெக்கத்துடன்.
“அவரா அந்த அவரு யாரு மா “
“அக்கா நான் கதிர் கூட தான் இருக்கேன், அவருகிட்ட பேசிட்டு இருந்தேன் இவளோ நேரம் “
“கதிர் கூடயா ரொம்ப சந்தோசம் அனு,இரண்டு பேரும் பேசி சமாதானம் ஆகிட்டிங்களா “
“கொஞ்சம் தான் சமாதானம் ஆகிருக்கேன், முழுசா ஆகல, அக்கா நீங்க நகை வாங்கிட்டிங்களா நீங்க பில் போடுங்க நான் இப்போ வந்துறேன் “என்றாள் அனு.
“சரி அனு மெதுவாவே வா நான் வெயிட் பண்ணுறேன் “
“செல்லம் என்னடா இப்படி சொல்லிட நீ அப்போ என்மேல இருந்த கோவம் உனக்கு முழுசா போகலையா ” என்றான் கதிர்.
“போகலடா ஒழுங்கா என் அப்பா கிட்ட வந்து அன்னைக்கு கடைல நடந்த தப்புக்கு மன்னிப்புக் கேக்கக்குற, அப்போ தான் என் கோவம் மொத்தமா போகும் ” என்றாள் அனு.
கதிரும் அதற்கு சம்மதித்தான், “அனுமா எப்போடா நம்ம வீட்டுக்கு வர போற “
“கல்யாணம் ஆகி வரும் போது தான் நான் அப்பா அம்மா மனசை எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்திட்டு உன் கூட வந்தேன், இவளோ வருஷம் கழிச்சி நாம புதுசா லைப் ஸ்டார்ட் பண்ணப் போறோம் இப்போவது அவங்க முழு மனசோட சந்தோசமா என்ன உன்கூட அனுப்பி வைக்கணும் கதிர் “.
“அது நடக்குமா அனு, அவங்க என்ன மன்னிப்பாங்களா “
“நடக்கும் கதிர், அடுத்த வாரம் சுஜி கல்யாணம் அது முடிஞ்சதும் நீ வந்து பேசு அவங்க கிட்ட கண்டிப்பா உன்ன மன்னிச்சி எத்துப்பாங்க “என்று கூறி விட்டு அனு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டாள்.
பின் ஜெனியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றாள். அனு வீட்டுக்குள் சென்றதும் குழந்தைகள் இருவரும் “எங்களை வீட்டுல விட்டுட்டு நீங்க மட்டும் வெளிய போய்ட்டு வரீங்க, எங்க போய்ட்டு வரீங்க “என்றான் கவின்.
“உங்க அப்பாவ பாக்க போய்ட்டு வாறோம் கவின் குட்டி “என்றாள் ஜெனி
“எங்க அப்பாவ, அவரு எங்க இருக்காரு, என் இவளோ நாளா எங்கள பாக்க வரல, எப்போ எங்கள பாக்க வருவாரு “என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான் கிரிஷ்.
“உங்க அப்பா, இந்த ஊருல தான் இருக்காரு, அவருக்கு வேலை அதிகமா இருந்தனால உங்க பாக்க வர முடியல, இன்னைக்கு ஈவினிங் கண்டிப்பா உங்கள பாக்க வருவாரு சரியா “என்றாள் ஜெனி.
“அப்பா வரப் போறாங்க ஐயா ஜாலி” என்று கூறி மகிழ்ச்சியுடன் கத்தினர் இரு குழந்தைகளும்.
அன்று மாலையே கதிரவன், லட்சுமி, வேலுசாமி மூவரும் அனு மட்டும் குழந்தைகளை பார்க்க வந்துவிட்டனர்.
லட்சுமி அனுவை கட்டிக் கொண்டு அழுதார். குழந்தைகள் இருவரும் கதிரவனை பார்த்ததும் அப்பா என்று ஓடி சென்று அவனை கட்டிக் கொண்டனர். கதிரவனும் கண்கள் கலங்க குழந்தைகளை தூங்கிக் கொஞ்சினான்.
லட்சுமி, வேலுசாமி இருவரும் குழந்தைகளுக்காக நேரா பொருள்களை வாங்கி சென்றிருந்தனார்.குழந்தைகள் பாட்டி தாத்தா என்று கூறி இருவரையும் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தனர். அவர்களும் மகிழ்ச்சியுடன் குழந்தைகளை தூக்கி கொஞ்சினார்.
அன்று இரவு வரை அவர்கள் மூவரும் குழந்தைகளுடன் தான் விளையாடிக் கொண்டிருந்தனார். பின் அவர்கள் அங்கிருந்து கிளம்பும் போது “அப்பா எங்க போறீங்க எங்க கூடவே இருக்க அப்பா ப்ளீஸ் ” என்றான் கிரிஷ்.
“கிரிஷ் குட்டி அப்பாக்கு கொஞ்சம் வேலை இருக்குடா, இப்போ போய்ட்டு அப்பா மார்னிங் வந்துருவேன், வந்து உங்கள வெளிய கூட்டிட்டு போறேன் சரியா ” என்றான் கதிர்.
“ஓகே அப்பா மார்னிங் சீக்கிரமா வந்துரனும் “என்றான் கவின்.
லட்சுமி, வேலுசாமி, கதிர் மூவரும் அவர்களிடம் விடைப் பெற்று சென்றனர். அனு கதிரவன் இருவரும் சேர்ந்ததை பற்றி அன்று இரவே அனு ராமசந்திரனிடம் கூறினாள்.அவர் சுஜி திருமணம் முடிந்த பின் இதை பற்றி பேசிக் கொல்லலாம் என்றார். மேலும் அனு கதிர் இருவரும் சேர்ந்தது அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
மறுநாள் காலை கதிர் சென்று அனு மட்டும் குழந்தைகளை வெளியே அழைத்து சென்றான் நால்வரும் ஒரே குடும்பமாக மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
கதிரவன் பெருமாள் பற்றி முதலிலேயே அனுவிடம் கூறி இருந்தாள். இவ்வளவு பெரிய பிரச்சனையே ஆகியிருக்காது. கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசினாலே நிறைய பிரச்சனை முடிந்து விடும். அவர்கள் பேசாமல் இருப்பதே அவர்களது பிரிவிற்கு காரணமாக அமைந்து விடுகிறது. கதிர் அனு இருவருமே மனம் விட்டு பேசாமல் இருந்ததே அவர்களின் இத்தனை வருட பிரிவிற்கு காரணமாக மாறிவிட்டது.
“