டிங் டாங் – 6.2
“அங்க என் அண்ணனா இங்க மட்” சேர்மத்தாயை பார்த்து அவர் பக்கம் சென்றாள்.
“என்னடி பொம்பள புள்ள நீயி. இப்படியா ஒரு பெரிய மனுஷிய பேசிப்போடுவ? மாடு ஆடுன்னு” வயதான பெண்மணிக்கு பொய் கோவம் பூத்தது.
“அட மட்-டு அது மாடு இல்ல மட். உன் பேர் என்ன?”
“சேர்மத்தாய்”
“ம்ம்ம்… அதுல இருக்க சேர் இங்கிலிஷ்ல மட். அத தானே சொன்னேன். இதுக்கு எதுக்கு இம்புட்டு கோவப்படுறியாம்?”
“ஏன்யா அது ஒன்னு தப்பான வார்த்தை இல்லல?” பேரனிடம் அவர் கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்லன்றே நீ என்ன என்ன மதிக்காம வேற எங்கையோ கேக்குற?” மீண்டும் அவரிடம் சென்று வாதாடினாள், “சரி தலையை குனி நான் சத்தியம் பண்ணனும்”
“என்றா இது வம்பா போச்சு. இவளுக்கு சத்தியம் பண்ண என்ற உசுர் தானா கெடச்சது… கேட் பக்கத்தால தான் இருக்கு நீ அப்படியே உன்ர வூட்ட பாத்து போடி”
“ம்ம்ம் வைஷ்ணவிமா பிரியாணி நல்லா இருக்கு” மகாலட்சுமியும் பாராட்ட வைஷ்ணவிக்கு கால்கள் தரையில் இல்லை.
“ஐயோ அருமையா இருக்குன்னு வேற சொல்லிபுட்டாக. இப்ப நான் யார் மேலனாவது சத்தியம் பண்ணியாகணுமேங்க…” சேர்மத்தாயை கிண்டல் செய்யவே அவரை போலே கொங்கு பாஷையில் பேசினாள் “ஏனுங்க அம்முனி இப்டிக்கா கொஞ்சம் தலையை காட்டுறிங்களா சூட் அண்ட் சைட்டா அடிச்சுப்போட்டு சத்தியம் பன்னோனுா”
கார்த்திக் வாயில் ஒரு ஸ்பூன் வைத்து பிரியாணியை ஊட்டிவிட்டவள், “வேணா வைஷு எனக்கு உயிர் வாழணும்னு ஆசை இருக்கு”
உதட்டை சுளித்து முகத்தை திருப்ப சிரிப்புடன் சகோதரன் பக்கம் திரும்பிய சுபத்ரா, “அண்ணா சொல்லு எப்படி இருக்கு பிரியாணி? நல்லா இருக்குல்ல?”
வந்ததிலிருந்து கார்திக்க்கை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் தவிர்த்த வைஷ்ணவி வீட்டை வேடிக்கை பார்ப்பது போல் அவனை பார்க்க, முகத்தை எந்த உணர்ச்சியும் இல்லாமல் வைத்து, “உப்பு கொஞ்சம் கம்மி, பிரியாணி பவுடர் அதிகம் ஆகிடுச்சு, கிராம்பு தாளிக்க இவ்ளோ போட கூடாது. பிரியாணி மெயின் ஐட்டம் மல்லி, புதினா தான். இதுல புதினா போடல சோ அந்த பிலேவர் வரல” வாயை பிளக்காத குறையாக ஆசிரியதுடன் முறைத்தாள்.
“பாத்தியாடி என்ர பேரன. அவன் சொன்னா எல்லாமே சரியா தான் இருக்கும். இதுக்கு தா மருவாதயா வாய மூடிப்போட்டு கெளம்போனு”
சுய மரியாதை தலை தூக்க, “தோ பாரு மட்-டு உன் பேரன் சமையலுக்கு படிச்ச சமையல் காரருருரு… சமையல்ல எல்லாமே தெரியுது. நான் இப்ப தானே காத்துட்டு இருக்கேன். எனக்கு எப்டி தெரியும்?”
“நீ வூடு கட்ட தான படிச்ச அப்ப வூடு கட்டூவியா?” விடாமல் சேர்மத்தாய் வைஷ்ணவியுடன் வாயாட அவர்களை கண்டுகொள்ளாமல் அன்னையிடம் கண் அசைவில் கூறி மாடிப்படி ஏறினான் பெரிய ஆலோசனையோடு.
வந்த நாள் முதல் வைஷ்ணவியை சந்திக்கும் பொழுதெல்லாம் கவனித்து தான் இருக்கிறான். அவள் குணமே இது தான். எவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் சேட்டைகள் செய்வது, துரு துரு என கால்கள் செல்லும் திசையில் எல்லாம் செல்பவள் எவருக்கும் அஞ்சுவதில்லை என்பது நேற்று தன்னிடம் பேசிய பொழுதே தெரிந்தது.
அப்படி இருக்கும் பொழுது அந்த ஆணை ஒரு பெண்ணாய் அவள் கல்லூரி காலத்தில் பார்த்ததில் எந்த தவறும் இல்லை தானே? தான் கல்லூரி படிக்கும் பொழுது இதெல்லாம் செய்யாமலா இருந்தோம்? வயதின் செயல் அது. அவனும் அன்னதானம் நடக்கும் இடத்தில் தான் நண்பனிடம் கூறி விட பெற சென்றான். அப்பொழுது தானே யாரையோ பார்த்து அவள் வந்த வேகத்தில் திரும்பி சென்றது…
அப்படி அவளுக்கு இப்பொழுதும் அவன் மேல் விருப்பம் இருந்தால் நிச்சயம் அவளே சென்று பேசியிருப்பாள், நிச்சயம் அவளை யாராலும் தடுத்திருக்க முடியாது. அதுப்படி பார்க்க இப்பொழுது தவறு சிறிதும் வைஷ்ணவி மேல் இல்லையே, அந்த ஆண் மீதல்லவா உள்ளது? நேற்று இரவு அவ்வளவு கடுமையாக பேசியிருக்க கூடாதோ? அறையில் சென்று கட்டிலில் சரிந்தவனுக்கு இதே சிந்தனை மட்டுமே மாலை வரை ஆட்கொண்டது. தூக்கமும் வராமல் போக எழுந்து மாடியில் குற்றால காற்றை சுவாசித்து கொண்டிருந்தவனுக்கு அந்த மெல்லிய குற்றால சாரல் இதமாய் மனதை வருடி சென்றது.
நேரம் சென்றதே தெரியாமல் தரையில் அமர்த்திருந்தவனுக்கு வெளிச்சம் மெல்ல மெல்ல குறைந்த பிறகும் எழவே மனம் இல்லை. மஹாலக்ஷ்மி மாலை சிற்றுண்டியை அருந்த அழைத்தும் பிறகு பார்த்துக்கொள்வதாக கூறியவன் மொட்டை மாடியிலே தஞ்சம் கிடந்தான்.
“போனா போகுதுன்னு உனக்கு சாப்பாடு குடுத்தா என்னமோ ராஜாக்கு சமைச்சு போட்டவ மாதிரி இந்த குறை சொல்றவ? நேர்ல இல்லற தைரியமோ… ரெண்டு எட்டு தான்டி வந்து வாயில நாலு போடுவேன் பாத்துக்க” நிசப்தமான இரவின் அமைதியை கிழித்து ஒலித்தது பெண்ணின் காந்த குரல்.
“நான் எதுக்குடி அவனுக்காக பிரியாணி சமைக்கணும்? ரெண்டு கடலைமிட்டாய் கொண்டு போய் நீட்டுனா போச்சு. அவனுக்காகலாம் நான் சமைக்கால எனக்கு தோணுச்சு செஞ்சேன்”
சத்தம் வராமல் சிரித்தான் கடலைமிட்டாயில். தன்னை பற்றி தான் பேச்சுகள் ஓடுகின்றது என்பதை அறிந்து காதுகளை கூர்மையாக்கினான். அந்த பக்கம் ஷெர்லின் ஏதோ கூற,
“ஆமா புலம்ப தான் செய்வேன், வாழ்க்கைல ஒரு புள்ள முதல் தடவ சமயல்கட்டுக்குள்ள போய் பிரியாணி செஞ்சிருக்கேன் அதுக்கு கிராம்பு அதிகம், ஏலக்கா பத்தலை, முந்திரி வேகலன்னு குறை சொல்லிட்டு இருந்தா என்ன இது?
அங்க நான் என்ன சமையல் போட்டிகா போனேன். புடிச்ச நல்லா இருக்குன்னு சொல்லணும், புடிக்கலனாலும் நல்லா இருக்குனு சொல்லணும். அது தான காலம் காலமா நம்ம ஊர் வழக்கம். புதுசா இந்தியாவை மாத்த வந்த பிரைம் மினிஸ்டர் மாதிரி கரெக்ஷன் சொல்லிட்டு என்ன பழக்கம் இது… அய்யனார்”
இறுதியாக அவன் பெயரையும் அவனுக்கு காட்டிவிட்டாள். ‘யார் சாமி இவ’ இந்த வாக்கியம் தான் கார்த்திக் காதில் ஒழித்து சிரிப்பை தந்தது.
“ஏண்டி இந்த வாய் பேசுறவ நேத்து எதுக்கு ராத்திரி முழுக்க நீயும் தூங்காம என்னையும் தூங்க விடாம அவன் திட்டுனதுக்கு பொலம்பிட்டு இருந்த? இப்ப கேட்ருக்க வேண்டியது தான? ஊர்ல இல்லாததா நான் பண்ணிட்டேன்னு… சைட் அடிக்கிறது ஒரு குத்தமா?”
“ம்ம்ம் மூஞ்சிய சண்டைக்கு போற காட்ஜில்லா மாதிரி வச்சிருந்தா எவன் பேசுவான்? அந்த ஐயனார் அங்க இருக்கது தெரிஞ்சிருந்தா நான் போயிருக்கவே மாட்டேன்… ஹ்ம்ம்” நிச்சயம் உதட்டை சுழித்திருப்பாள் என்று பார்க்காமலே கார்த்திக் புரிந்து சிரித்தான்.
“என்னடி என் அண்ணனை ரொம்ப தான் பேசுற? திருடன்னு சொல்லிட்டு இருக்க, அதுவும் அவன் ஊர் வம்பு புடிச்சவன். இந்நேரம் வாத்தி பையன் திருடன் திருடன்-னு ஊர் முழுக்க சொல்லிருப்பான். நாளைக்கே சுபிக்கு கல்யாணம் பேசுனா ஊர்ல விசாரிக்கிறப இந்த பேச்சும் அடி படுச்சுனா என்ன பண்றது… மனுஷன் அதையும் யோசிச்சு தான திட்டுருப்பாரு”
“ம்ம்ம் கிழிச்சான் உங்க அண்ணன். அவனுக்கு அவன் தங்கச்சி கல்யாணம் எல்லாம் தெரியல… அவன் கல்யாணத்த பத்தி தான் கவலை.. என்கிட்டையே சொன்னான்னா பாரேன்”
“நீ என்ன வேணா சொல்லிக்கோ வைஷு, நீ பரப்பிவிட்ட வதந்தியோட ரியாக்ஷன் நிச்சயம் இது இல்ல. அந்த மனுசனா பாத்தா பலி வாங்குற ஆள் மாதிரி தெரியல, நீ சமைச்ச சாப்பாடுக்கு எப்பயும் கமெண்ட் சொல்ற மாதிரி சொல்லிருப்பாரு. உன்ன மாதிரி அவர் இல்ல, பொறுப்பானவர்”
“என்னடி நான் உன் பிரண்ட்டா இல்ல அந்த பேரிக்கா தலையன் உன் பிரண்ட்டா? பொறுப்பானவனாம்-ல பொறுப்பானவன்…” திரும்பி கார்த்திக்கின் அறையை பார்த்துக்கொண்டே, “பொறுப்பானவன் தான் மணி ஆறு தாண்டுனத்தையும் தெரியாம இன்னும் தூங்கிட்டு இருப்பானா… சரியான தத்தி பண்டாரம்”
இதற்கும் மேல் இந்த பெண்ணை பேசவிட்டால் நிமிடத்திற்கு ஒரு பெயர் வைத்துவிடுவாள் என்று கீழிருந்து எழுந்து சுவரில் கை வைத்து வைஷ்ணவியை பார்த்து நின்றவன் புருவங்கள் ஏறி இறங்கியது.
‘அட சண்டாளா இவ்ளோ நேரம் பேசுனது எல்லாம் ஒட்டு கேட்டுருக்கியா? உனக்கு போய் ஒருத்தி உத்தமன் ரேஞ்-கு பேசுனாலேடா… அத்தனையும் கேட்டு விட்டானா? சும்மாவே சாமியாடுவான்… இப்ப நானே டிஸ்கோ லைட், குத்து சாங் எல்லாம் போட்டுவிட்டேனே… ரைட்டு அப்டியே பேசாமலே கோவமா போயிடுவோம்’
“நான் வைக்கிறேன்” ஷெர்லினிடம் பதில் கூறி கார்த்திகை பார்த்து உதட்டை சுளித்தாள். அசராமல் அப்படியே நின்றவனின் உறுதி வைஷ்ணவியை பதம் பார்க்க திரும்பி அறைக்குள் செல்ல இருந்த பெண்ணை, “ராக்கெட்” ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது வைஷ்ணவியை அவன் பக்கம் திருப்ப.
‘என்ன’ என்பதாய் அவனை பார்த்து புருவம் உயர்த்தியவளை பார்த்து, “வேலை பாக்க தெரியுமா?” நக்கலாய் வந்தது அவன் கேள்வி.
“ஏன் தெரியும்னு சொன்னா, ரயில்வேல வேலை வாங்கி தந்துடுவீங்களோ?” துடுக்காக அவள் எழுப்பிய கேள்வி அவனுக்கு சிரிப்பை தான் தந்தது.
“அசிஸ்டன்ட் சிவில் என்ஜினீயர் பொசிஷன். குற்றாலம் லொகேஷன்ல மந்த்லி மினிமம் பதினைஞ்சாயிரம் ரூபா சாளரி, மூணு வேகன்சி. பதினஞ்சு நாள்ல முடிவை சொல்லலாம்”
மென் சிரிப்புடன் கூறியவன் அகன்று விரிந்திருந்த அவள் விழிகளை பார்த்தவாறே செல்லவிருந்தவனை, “என்ன இந்த திடீர் அக்கறை? திருடன் பட்டத்தை பலி வாங்குறதுக்கு எங்கையாவது கூட்டிட்டு போய் தள்ளி விடலாம்னு இருக்கீகளா?” சிறு புன்னகையுடன் கீழே இறங்கி படி நோக்கி சென்றவன் ஒரு நிமிடம் நின்று தன்னையே முறைத்து முறைத்து விழிகள் வெளியில் விழும் அளவிற்கு கண்களை உருட்டிய வைஷ்ணவியிடம்,
“பிரியாணி நல்லா இருந்துச்சு” சிரிப்புடன் விடைபெற்றவனை பார்த்து முறைத்து நின்ற அவள் விழிகள் உடனே மென்மையானது.
நேற்று அவன் பேசியதற்கு இன்று இவன் பேசியதற்கு எத்தனை மாற்றங்கள்? தான் அவனை கண்டபடி பேசியதை கேட்டும் எப்படி இவன் இவ்வளவு பொறுமையாய் அதுவும் தன்னுடைய நிலையை அறிந்து தனக்கு ஒரு வேலையை வாங்கி கொடுக்கும் அளவு இவன் நல்லவனா? தினம் ஆசிரியத்தில் வைஷ்ணவியை ஆழ்த்துவதை தவறவிடுவதே இல்லை இந்த மனிதன்.
Hi makkale… epdi iruku?
Comments, please…