இரவு தங்களுக்கான அறையில் ஜன்னல் வழி தெரிந்த நிலவை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தார் தேவகி.
இரவு நேர குளியலை முடித்துக்கொண்டு வந்த ரிச்சர்ட், மனைவியின் கோலம் கண்டு, பின்னோடு சென்று அவரை தோளோடு அணைத்துக்கொண்டார். கணவனின் ஸ்பரிசத்தில் களைந்தவர், “எதாவது வேணுமா ரிக்கி?” என்று வினவ, ‘எஸ்’ என தலையசைத்தவர், கன்னத்தை காட்டினார்.
கணவனின் குறும்பை கண்டு எழுந்த வெட்கசிரிப்பை மறைத்த தேவகி, அவர் காட்டிய கன்னத்தில் வலிக்காமல் ஒருமுறை அடிக்க, “ஹே…” என அவர் கரத்தை பற்றி இழுத்தார் அவர்.
“ஷ்ஷ்… ரிக்கி…! இது நம்ம ரூம் இல்ல” தேவகி நியாபகப்படுத்த, “ப்ச்!” என்ற போலி சலிப்போடு, கண்ணாடி முன்னே நின்று சிகைக்கு மசாஜ் ஆயில் வைத்து லேசாக கோதிக்கொள்ள ஆரம்பித்தார் ரிச்சர்ட்.
“பப்பூ எங்க?” அவர் கேட்க, “வருவான்! ஏதோ வேலை இருக்குன்னு லேப்டாப்’ வச்சு சுத்திட்டு இருந்தான்” என்றார் தேவகி.
“அவன் விஷயத்துல நம்ம சைலென்ட்’டா இப்படி இருக்கிறது ரொம்ப தப்பு டேவ்…! பட், எனக்கு என்னவோ எதுவும் ராங்கா போகாதுன்னு ஒரு இன்ட்யூஷன்! அதான் சைலெண்டா இருக்கேன்!” என்றார் ரிச்சர்ட்.
“ம்ம்ம்!” என்று மட்டும் சொன்ன தேவகிக்கு நினைவெல்லாம் தன் அன்னையை பற்றி தான்!
“ஏன் டேவ், என்ன திங்கிங்?”
கணவனை நிமிர்ந்துப்பார்த்து, “அம்மா ரொம்ப பாவம் ரிக்கி… நான் அவங்கக்கிட்ட பேசிருக்கணும்… தப்பு பண்ணிட்டேன்! இப்போ என்னை பார்த்த பிறகு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா அவங்களுக்கு? பத்து வருஷம் முன்ன எங்க மாடு கன்னு போட்ட கதையெல்லாம் இப்போ சொல்றாங்க என்கிட்ட…!” என்றவர், “என்னை ரொம்ப மிஸ் பண்ணிருக்காங்க! ஆனா, நான் இது எதுவும் தெரியாம அங்க நிம்மதியா இருந்துருக்கேன்!” என்று புலம்ப,
“நீ எங்க நிம்மதியா இருந்த?” என்றார் ரிச்சர்ட்.
“நானும் நிம்மதியா இல்ல, இவங்களையும் நிம்மதியா இருக்க விடல!”
“என்னை மேரேஜ் பண்ணதுக்காக வருத்தப்படுறியா?” ரிச்சர்ட் கேட்டதும், “ச்ச..ச்ச” என்று பதறிக்கொண்டு மறுத்தார் தேவகி.
“என்ன பேசுறீங்க ரிக்கி? நீங்க என் லைஃப்’ல இல்லன்னா எனக்கு எதுவுமே இல்ல” என்றவர் அவர் நெஞ்சோடு சாய்ந்துக்கொள்ள,
தேவகி விலக, “இன்னும் ஒண்ணுமே ஆரம்பிக்கலையே பப்பூ” என்று ரிச்சர்ட் சொல்ல, அவரை மோசமாக முறைத்த தேவகி,
ஜேகோப் உள்ளே வரவும், “என்னடா செஞ்ச இவ்ளோ நேரம்?” என்றார்.
லேப்டாப்பை பைக்குள் வைத்துக்கொண்டவன், “தட்ஸ் மை பர்சனல் மாம்!” என்றான். அதற்குமேல் ‘என்ன செய்தாய்?’ என கேட்க முடியாது. கேட்டாலும் பதில் வராது.
இவர்கள் இங்கேயே தங்குவது என முடிவானதுமே, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஆட்களை அனுப்பி, அங்கிருந்தவரிடம் தேவகியை பேச வைத்து, அவர்கள் உடைமைகளை எல்லாம் மாலைக்குள் இங்கே எடுத்து வர செய்திருந்தார் பரமேஸ்வரன்.
“அவங்க அம்மாட்ட பேசாம இருந்துட்டோம்ன்னு ஃபீல் பண்றா!” ரிச்சர்ட் சொல்ல, “அதுக்கு இப்போ ஃபீல் செஞ்சு என்ன யூஸ் டேட்?” என்றான் அவன் அசட்டையாய்.
அதில் தேவகியின் முகம் வாடிப்போக, என்னதான் அன்னையின் மீது கோவம் இருந்தாலும் அவர் வருந்துவது தாங்குமா?
“மாம்மி… நீங்க என்ன வேணுன்னா செஞ்சீங்க? அவங்களும் கோபமா இருப்பாங்கன்னு நினைச்சு தானே நீங்க பேசல! உங்களுக்கு எப்படி தெரியும், பாட்டி உங்களை மிஸ் பண்ணாங்கன்னு?” என்று கேட்டவன், “இந்த தேவி ஆன்ட்டியாவது உங்கக்கிட்ட சொல்லிருக்கலாம் பாட்டிய பத்தி!” என்று சொல்ல,
“அவ்ளோ ஆசை இருந்தா உங்ககிட்ட பேச பாட்டி முயற்சி செஞ்சுருக்கணும்… இல்லையா… உங்களுக்காக பாட்டிக்கிட்ட கொஞ்ச கொஞ்சமா பேசி, அவங்களை உங்களோட பேச வைக்க தேவி ஆன்ட்டி ட்ரை பண்ணிருக்கணும்! இதுல தப்பு அவங்க ரெண்டு பேர் மேல தான்! உங்கமேல ஒரு தப்பும் இல்ல! சோ டோன்ட் ஃபீல் கில்ட்டி” என்று நிறுத்த,
“வா தேவி, ஏன் அங்கேயே நிக்குற?” என்றார் தேவகி வாசலில் நின்றவரை பார்த்து.
தேவியை பார்த்ததும் லேசாக ஜர்க்கானது அவனுக்கு. தேவியும் அவனை ஒருமாதிரி பார்த்துக்கொண்டே தான் உள்ளே வந்தார்.
“என்ன தேவி?”
“எல்லாம் வசதியா இருக்கான்னு பார்த்துட்டு போவ வந்தேன்!” என்றவர், ஜேகோபை முறைத்தபடியே, “சொந்தபந்தம் எல்லாம் இங்கேயே தங்குறதால தனி ரூம் குடுக்க முடியல… கோச்சுக்காதீங்க!” என்றார் சங்கடமாய்.
“இதுல என்ன இருக்கு தேவி… எங்களுக்கு இதுவே சர்வ சௌகரியம்!” என்று தேவகி சொன்னதும் தேவி கிளம்ப, போகையில் அவனை ஒருமுறை நன்றாகவே முறைத்துவிட்டு சென்றார்.
அவர் போனதும், “எதுக்குடா அவ உன்னை இப்படி முறைக்குறா?” தேவகி குழப்பத்துடன் கேட்க, “அதுவா…!? முன்ன ஒருக்க, தேவகிக்கிட்ட நான் பேசுறேன்னு சொல்லாம விட்டதால தான் பாட்டிக்கு இவ்ளோ உடம்பு முடியாம போச்சோன்னு ஃபீல் செஞ்சு அழுதாங்களா…!? அதுக்கு நான், இதுல உங்க தப்பு என்ன இருக்கு, அவங்க ரெண்டு பேரும் தான் பேசிக்க ட்ரை பண்ணிருக்கணும், இதுல உங்க தப்பும் ஒன்னும் இல்லன்னு சொன்னேனா…!!!?” அவன் இழுக்க,
“அடப்பாவி!” என வாயை பொத்திக்கொண்டார் தேவகி.
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் மம்மி!” என்றவன், “நேரமாச்சு தூங்குங்க” என்று சொல்ல,
தேவகிக்கும் ரிச்சர்டுக்கும் உறக்கம் கண்களுக்குள் சுழன்றது. அவர்கள் கட்டிலில் படுத்துக்கொள்ள, அருகே தரையில் போட்டிருந்த பெட்டில் படுத்துக்கொண்டான் ஜேகோப்.
மணி எட்டு தான் ஆனது. ஆனாலும், ஜெட்லாக்’கில் பெரியவர்கள் உறங்கிப்போக, மணி பத்தை நெருங்கும் வரை அமைதியாக படுத்திருந்த ஜேகோப், பின் மெல்ல பூனை நடையிட்டு அறையை விட்டு வெளியே வந்தான். அவன் நினைத்ததை போல நடமாட்டம் அடங்கியிருந்தது.
எதிரே ரோஷிணி இருந்த அறைக்கு அவன் போக, கதவு தாழிடப்படாமல் இருக்க, இன்னும் வசதியாய் போனது அவனுக்கு. வேகமாய் கதவை திறந்தான்.
உள்ளே அவன் ரோஷினியை எதிர்ப்பார்த்து போக, அங்கோ தேவி தன் சொந்தக்கார பெண்களுடன் உறங்குவதற்கு தயாராகிக்கொண்டிருந்தார். திடுமென அறையை திறந்துக்கொண்டு அவன் வந்ததும், “என்ன வேணும் பப்பூ?” என்று அவர் வர,
லேசாக தடுமாறியவன், “சார்ஜர்… போனுக்கு… சார்ஜ் இல்ல” என்று சொல்ல, “ரோஷியை தான் கேட்கணும்… அவ சங்கவி கூட அந்த வீட்டுல இருக்காளே!” என்றார்.
“ஓ… சரி ஆன்ட்டி!” என அவன் திரும்ப, அவன் கையை பிடித்தவர், “கோவம் போச்சா?” என்றார் அவன் முகத்தை பார்த்து. சட்டென அவர் கேட்பதே அவனுக்கு புரியவில்லை. பின்பு, “ஹான்… போச்சு போச்சு!” என்று அவசரமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து கீழே இறங்கி சென்றான்.
கூடத்தில் ஆங்காங்கே ஆட்கள் உருண்டுக்கிடந்தனர். யார் கைகாலையும் மிதித்து விடுவோமோ என அஞ்சிக்கொண்டே அவன் கவனமாய் வாசல் நோக்கி நகர, “ஏய், எங்க போற இந்நேரத்துல?” என்று குறுக்கே வந்தான் திரவியன்.
‘ஹையோ…ஓஓ! முடி…யல!’ என்ற ரியாக்ஷன் தான் ஜேகோப்’புக்கு.
குறுக்கே நிற்பவனை தாண்டிக்கொண்டு ஜேகோப் போக, “நில்லுங்குறேன்’ல?” என்று குரல் உயர்த்தினான் திரவியன். இவன் கத்தி ஊரையே எழுப்பிவிட்டால் விசாரணை அதிகாரிகள் எண்ணிக்கை அதிகரித்துவிடுமே என்று அப்படியே நின்றான் ஜேகோப்.
“எங்க போற?” அவன் மீண்டும் கேட்க, கடுப்பான ஜேகோப், “என் ஆளுக்கு அவசரமா ஒரு கிஸ் வேணுமாம்! குடுக்கப்போறேன்” என்றான்.
திரவியனின் முகம் பேயறைந்ததை போல மாறியது.
பல்லைக்கடித்துக்கொண்டு, “பொய் சொல்லாத” என்று அவன் சொல்ல, “ஐ நெவர்! அவ தான் எனக்கு கால் பண்ணி வர சொன்னா, நம்பலைன்ன யூ கேன் செக் மை மொபைல்” என்றவன் அவனிடம் ஃபோனை நீட்ட, அதை திகிலோடு பார்த்துக்கொண்டிருந்தான் திரவியன்.
திரவியனின் முகத்தில் வந்து போகும் உணர்ச்சிகளை கண்ட ஜேகோப்புக்கு, ‘இவன் எதுக்கு நான்-சின்க்’கா பர்பாஃம் பண்ணிட்டு இருக்கான்’ என்று தான் தோன்றியது. திரவியன் அங்கேயே அப்படியே நின்றுக்கொண்டிருக்க, ஜேகோப் மெதுவாய் அங்கிருந்து நழுவிக்கொண்டான்.
வீட்டின் பின்பக்க வாசல் திறந்திருந்தது. இன்னமும் எல்லாரும் படுக்கைக்கு சென்றுவிடவில்லை போலும். கூடத்தில் இரவு நேர விளக்கு மட்டும் ஒளிர்ந்துக்கொண்டிருக்க, அங்கே நெருக்கமாய் பலர் படுத்துக்கொண்டு கதை பேச, மெல்ல யாருமறியாமல் மாடி ஏறினான். அவன் அதிர்ஷ்டமோ என்னவோ குறுக்கே யாரும் தென்படவில்லை. அந்த வீட்டின் எல்லா இடமும் அத்துப்படி என்பதால், நேரே சங்கவியின் அறைக்கு அவன் போக, கதவு திறந்திருந்தது.
ரோஷிணி மட்டுமென்றால் அப்படியே போகலாம். உள்ளே சங்கவியும் இருப்பாள் அல்லவா? உடன் வேறு யாரேனும் இருந்தாலும் இருக்கலாம் என்று தோன்ற, கதவை தட்டிவிட்டு ஓரமாய் இருளில் ஒதுங்கி நின்றான்.
ஒருக்களித்திருந்த கதவு திறக்கப்பட, வெளியே எட்டிப்பார்த்தாள் ரோஷிணி. அவள் வந்ததுமே அவள் கையை பிடித்து இழுத்தவன், மாடி வளைவின் கீழே இழுத்துப்போக, முதலில் அதிர்ந்தவள், பின்னே அது ஜேகோப் என்று புரிய, அமைதியானாள். ஆனாலும், அவளுக்கு கோவம் வந்தது.